Jump to content

பழைய பயங்கரச் சம்பவத்தின் நினைவு மீளமீள தொல்லைப்படுத்துகிறதா?


Recommended Posts

பழைய பயங்கரச் சம்பவத்தின் நினைவு மீளமீள தொல்லைப்படுத்துகிறதா?

baddreamsca7.png

உங்கள் வாழ்வில் எப்பொழுதாவது மிகப் பயங்கரமானதும், உங்கள் மனத்தில் ஆழமாக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதுமான சம்பவம் எதையாவது எதிர் காண்டிருக்கிறீர்களா? நிச்சம் இருக்கும்! ஈழத் தமிழர்களது வாழ்வு சென்ற இருபது வருடங்களாக தினம் தினம் இடர்பாடுகளுக்கு ஊடாகத் தான் நகர்கிறது. குண்டு வெடிப்பு, விமானத் தாக்குதல், எறிகணைவீச்சு, அந்நிய இராணுவத்தினது அடாவடித்தனம், உடல் ரீதியான தாக்குதல், சிறையில் அடைபடல், பாலியல் பலாத்காரம் போன்ற ஏதாவது வன்முறை ஒன்றினால் எங்களில் எவராவது ஒருவருக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருந்திருக்குமேயானால் அது அதிசயம்தான். உடல் ரீதியான பாதிப்பு ஏற்படாவிட்டால் கூட உளரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய சம்பவங்களை எதிர் கொண்டிருப்பீர்கள். இவற்றில் சிலவாவது மரண பீதியை ஏற்படுத்தக் கூடிய பாரிய சம்பவங்களாக உங்களை உலுப்பியிருக்கும். அத்தகைய சம்பவங்களில் ஏதாவது ஒன்றாவது ஒன்று உங்கள் மனத்தில் ஆழமாகப் பதிந்து, அழுத்தமான வடுவை ஏற்படுத்தி உங்கள் தினசரி வாழ்க்கையையும், குடும்பத்தினருடனும்

சமூகத்தினதும் ஆன உறவாடலில் சிக்கலை ஏற்படுத்துகிறது எனில் நீங்கள் Post traumatic stress Disorder (PTSD) என்று சொல்லப்படும் நெருக்கீட்டுக்குப் பிற்பட்ட மனவடு நோயால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும்.

இது ஏதோ கேள்விப்படாத புதினமான நோய் என்று எண்ணிகிறீர்களா?. பெயர் புதிதாக இருக்கலாம், ஆனால் உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் திரும்பிப் பார்த்தால் எத்தனை பேர் இந்நோயால் பீடிக்கப்பட்டிருக்கக் கூடம் என்பதை இக்கட்டுரையை வாசித்து முடிந்த பின் நீங்கள் உணர்வீர்கள்.

எந்த ஒரு சமூகத்தையும் எடுத்துக் கொண்டாலும் அதில் 10 சதவிகிதத்தினர் இந்நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வுகள் கூறுகின்றன. போர் வறுமை முதலியன அதிகம் பாதிக்காத அமெரிக்காவில் கூட வருடாவருடம் 5.2 மில்லியன் மக்கள் இந்நோயால் பாதிக்கப்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் அடக்குமுறையால் வெடித்த உள்நாட்டுப் போர் காரணமாக இழப்புகளும், துன்பங்களும், நெருக்கீடுகளும் மலிந்த ஈழத் தமிழ் மக்களிடையே இந்நோயின் தாக்கம் எவ்வளவு அதிகமாக இருக்கும்!

இந்நோய் உங்களுக்கோ நீங்கள் அறிந்த ஒருவருக்கோ இருக்கக் கூடும் எனக் கண்டுபிடிப்பது எப்படி? அதாவது இந்த நோயின் அறிகுறிகள் என்ன?

குறிப்பிட்ட அந்தப் பயங்கரச் சம்பவம் மீண்டும் முழுமையாக, நிஜமாகவே நடப்பது போன்ற உணர்வு எழுகின்றதா? அதுவும் எந்தவித முன்னறிவித்தலும் இன்றி அவ்வுணர்வு திடீரென ஏற்படுகின்றதா? எந் நேரமும் ஆபத்து சூழ்ந்து வரக்கூடும் என்ற பயமும் பாதுகாப்பற்ற உணர்வும் எழக் கூடும். இதனால் வெளிப்படையான தூண்டுதல் எதுவுமின்றியே எரிச்சல், கோபம், பதற்றம் போன்றவை தோன்றி உங்களைப் பாதிப்பதுடன் மற்றவர்கள் மனத்தையும் நோகச் செய்யலாம். முன்பு நடந்த அந்தச் சம்பவம் தொடர்பான பயங்கரக் கனவுகள் உங்களைத் தொல்லைப்படுத்துகிறதா? அல்லது அந்தத் திகிலூட்டும் நிகழ்வு பற்றிய நினைவுகள் அடிக்கடி வந்து அல்லல்படுத்துகிறா? இதனால் அண்மையில் நடந்த சம்பவங்களை நினைவு படுத்த முடியாத ஞாபக மறதி ஏற்படக் கூடும். எந்த விடயத்திலும் முழுமையான அக்கறை எடுக்கவோ மனத்தை ஒருமுகப்படுத்தவோ முடியாதிருக்கும். நடந்த அந்தப் பயங்கரச் சம்பவம் பற்றி மீண்டும் மீண்டும் சிந்திக்கத் தோன்றுகிறதா. நீங்களாக வலிந்து யோசிக்காவிட்டால் கூட உங்களை மீறி அவ்வெண்ணம் பீறிட்டு எழுகிறதா? அந்தச் சம்பவம் தொடர்பான நினைவுகளைக் கிளறுகிற இடங்களுக்குச் செல்வதையும், அது சம்பந்தமான உரையாடல்களையும் நீங்கள் தவிர்க்க முனைகிறீர்களா? எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஏதாவது சம்பவம் திடீரென நடந்தால் கூட நீங்கள் பதற்றம் அடைந்து நிலை தடுமாறி விடுகிறீர்களா? உதாரணமாக கதவு அடிபடுகின்ற சத்தமோ, ஆகாய விமான அல்லது கார்ச் சத்தமோ உங்களைப் பதற்றப்படச் செய்கிறதா? சிறுசிறு சம்பவங்கள் கூட உங்களை உணர்ச்சி வசப்படுத்தி தன்நிலை இழக்கவைக்கிறதா?

மற்றவர்கள் மரணித்துவிட்டபோது நீங்கள் மாத்திரம் உயிர் தப்பிவிட்டோமே என்ற குற்றவுணர்வுக்கு ஆளாகின்றீர்களா?

மற்றவர்களில் நம்பிக்கை கொள்ளவோ, அவர்களிடத்தில் அக்கறை காட்டவோ, அவர்களுடன் உணர்வு பூர்வமாக நெருங்கிப்பழகவோ முடியாதிருக்கிறதா? சமுதாயத்திலிருந்து ஒதுங்கவும் தனிமையை நாடவும் முனைகிறீர்களா? உங்களுக்கு நித்திரைக் குழப்பம் ஏதாவது இருக்கிறதா? தூக்கம் கண்களைத் தழுவ நீண்ட நேரம் எடுக்கிறதா, அல்லது அடிக்கடி குழம்புகிறதா அல்லது வேளை கெட்ட நேரத்தில் கண்விழித்து மீண்டும் தூக்கம் வராமல் தொல்லைப்படுகிறீர்களா? வாழ்வில் ஆர்வமும், அக்கறையும் குறைந்து செல்கிறதா? எதையும் அப்புறமாகச் செய்யலாம் எனத் தள்ளி வைக்கத் தோன்றுகிறதா?

இவற்றில் ஒரு சில அறிகுறிகளாவது உங்களுக்கு இருந்தால் நீங்கள் நெருக்கிட்டுக்குப் பிற்பட்ட மனவடு நோயால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என எண்ணலாம். நீங்களாக முடிவு எடுக்க வேண்டாம். உங்கள் வைத்தியருடன் கலந்தாலோசிப்பது முக்கியமானது.

மாறாக இவை எல்லாம் வெறும் மனப்பிரமைதானே? இவற்றை நோய் என்று எடுக்க வேண்டுமா என நீங்கள் எண்ணினால் மிகப் பெரிய தவறு செய்தவர் ஆகின்றீர்கள். உண்மையில் மனத்தில் ஏற்படுகின்ற அசெளகரியங்கள் உடல் நோய்களை விடப் பாரதூரமானவை. அவை நோயுற்றவரை மாத்திரமின்றி அவரது குடும்பத்தினரையும் சூழ இருப்பவர்களையும் கூடப் பாதிக்கிறது. தற்கொலை போன்ற ஆபத்தான முயற்சிகளுக்குக் கூட இட்டுச் செல்லக் கூடியவை.

இருந்தபோதும் இந்நோயைக் குணமாக்க மருந்துகளும் உளவளத் துணை உள்ளிட்ட சிகிச்சை முறைகளும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி பூரண குணமடையலாம்.

மாறாகச் சிலர் இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக மதுவையோ, போதைப் பொருட்களையோ நாடி அவற்றிக்கு அடிமையாகும் துர்ப்பாக்கிய நிலையும் ஏற்படுகிறது. வேறு சிலர் சுயவைத்தியத்தல் இறங்கி ஆபத்தான மருந்துகளை தாமே உட்கொண்டு அழிந்து போவதுண்டு.

நெருக்கீட்டுக்குப் பிற்பட்ட மனவடு நோய் முதன் முதலில்; வியட்நாமில் போரிட்டு பயங்கர அனுபவங்களைப் பெற்ற அமெரிக்க போர் வீரர்களில்தான் இனங் காணப்பட்டது. இன்றும் கூட போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ளவர்களையே அதிகம் பாதிக்கின்றது.

ஆனால் இது முழுமையாக போர் தொடர்பான நோய் அல்ல. வேறு பல நெருக்கீடுகளும் பயங்கர அனுபவங்களும் கூட இந்நோயைக் கொண்டு வரலாம். ஒருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருந்தால் அல்லது பாலியல் ரீதியான வன்முறைக்கு ஆழாக்கப்பட்டிருந்தால் குடும்பத்தில் உள்ள ஒருவரினால் அடித்தோ துன்பப்படுத்தப்பட்டோ இருந்தால் கொலை, கொள்ளை, தீவைப்பு போன்ற ஏதாவது கொடூரமான குற்றச் செயலுக்கு ஆட்பட்டிருந்தால்

விமான விபத்து அல்லது வீதி வாகன விபத்துக்கு ஆளாகியிருந்தால் சூறாவளி, புயல், பயங்கரத் தீ விபத்து போன்ற ஏதாவது ஒன்றில் மாட்டுப்பட்டிருந்தால் நான் கொல்லப்படக் கூடும் இதிலிருந்து உயிர் தப்ப முடியாது என்பது போன்ற ஏதாவது ஒரு சம்பவத்தில் அகப்பட்டிருந்தால் நீங்கள் நேரடியாகப் பாதிக்கப்படாவிட்டாலும் அத்தகைய சம்பவம் நடக்கும்போது அவ்விடத்தில் இருந்திருந்தாலும் கூட இந் நோய் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இந்நோய் எப்பொழுது வரும், யாருக்கு வரும்? எவருக்கும் வரலாம். எந்த வயதிலும் வரலாம், குழந்தைகளுக்குக் கூட வரலாம். ஆனால் ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. சம்பவம் நடந்த பின் உடனடியாக ஆரம்பிக்கும் என்றில்லை. பெரும்பாலும் மூன்று மாதங்களுக்குள் ஆரம்பிக்கலாம். ஆனால் சிலருக்கு நீண்ட காலத்திற்குப் பின்னரே வருவதுண்டு. நோய் வந்தால்கூட பெரும்பாலும் ஆறுமாத காலத்திற்குள் குணமாகிவிடும் என்பது நம்பிக்கை ஊட்டும் விடயமாகும். ஒரு சிலரில் சிகிச்சையை நீண்ட காலத்திற்குத் தொடர வேண்டியிருப்பதுண்டு.

இந்நோய்க்கான சிகிச்சையைப் பொறுத்தவரையில் இந்நோய் பற்றிய பயங்கள் நீங்கித் தெளிவு ஏற்பட்டாலே பெருமளவு குணமாகிவிடும். பாதிப்பை ஏற்படுத்திய சம்பவமே இதற்குக் காரணம் எனத் தெளிவுறுவதும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் பெருமளவில் இருப்பதை அறிவதும், அவர்கள் காலகதியில் குணமாகி மற்றவர்கள் போல சந்தோசமாக வாழ்வதை உணர்வதும் நோயாளியின் மனத்தில் நம்பிக்கையை ஊட்டி விரைவில் குணமாக்க உதவும்.

இதைத் தவிர எமது சமூகத்தில் காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் சமய, கலாசார ரீதியான பழக்கங்களும், நடைமுறைகளும் இந்நோயிலிருந்து விடுபடப் பெருமளவில் உதவி வருகின்றன. பகுத்தறிவு வாதம் பேசி அவற்றைக் கண்டிக்கவோ, பெறத் தயங்கவோ வேண்டியதில்லை. கோயில் செல்வதும், நேர்த்திக் கடன் வைப்பதும், மந்திரித்து நூல் கட்டுவதும், அபிஷேகம் செய்வதும் கூட நல்ல

பலனை அளிக்கக் கூடும். காய் வெட்டுதல், கழிப்புக் கழித்தல், பார்வை பார்த்தல், மருந்து விழுத்தல் போன்ற முறைகளை எமது பாரம்பரிய வைத்தியர்கள் மிகவும் சிறப்பான முறையில் பயன்படுத்தி பலரைக் குணமாக்குகிறார்கள் என்பதையும் குறிப்பட்டே ஆக வேண்டும். ஒவ்வொருவரும் தத்தமது மதரீதியான, தமக்கு நம்பிக்கையுள்ள பாரம்பரிய முறைகளை பெறுவதே இதிலிருந்து விடுபட சிறந்த வழியாகும்.

இதைத் தவிர தனது குடும்பத்தில் அல்லது சமூகத்தில் உள்ள, அனுபவசாலியான முதியவரை அணுகி அவருடன் தனது பயங்கர அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் தனக்றே;பட்ட மனப் பாதிப்பைக் குறைத்துக் கொள்ள முடியும்.

வைத்திய முறையைப் பொறுத்தவரையில் மருந்துகளுக்கு மேலாக உளவளத் துணையாளருடன் மனம் விட்டுப் பேசுவது முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. இது உள ஆலோசனையல்ல, உளவளத் துணையாளருடன் கலந்துரையாடுவதன் மூலம் தனக்கு ஏற்ற முறையைத் தானே சுயகண்டுபிடிப்புச் செய்யும் நம்பிக்கையான வழிமுறையாகும்.

மனத்தையும் உடலையும் தளரச் செய்யும் பயிற்சிகள் மூலம் மனஇறுக்கத்திலிருந்து விடுபடுவதும் கூட ஒரு வகைச் மருத்துவச் சிகிச்சை முறைதான். சுவாசப் பயிற்சி, சாந்தியாசனம், தியானம், மந்திரம் ஜெபித்தல் போன்ற வழிமுறைகள் நல்ல பலன் அளிக்கும்.

இத்தகைய எளிய வழிமுறைகள் மட்டுமே பெரும்பாலானவர்களைக் குணமாக்கப் போதுமானது. நித்திரையின்மை, கடுமையான மனச்சோர்வு, பயங்கரக் கனவுகள் போன்றவை ஒருவரைத் துன்பப்படுத்துமேயானால் சில மாத்திரைகளையும் சில காலத்திற்கு உபயோகிக்க நேரலாம்.

அடக்குமுறையால் வெடித்த உள்நாட்டுப் போர் காரணமாக இழப்புகளும், துன்பங்களும், நெருக்கீடுகளும் எமது மக்களை வதைக்கிறது. உயர் பண்பாடும், கலாசார மேன்மையும், கல்விச் சிறப்பும், அமைதியான வாழ்க்கை முறையும் கொண்ட எமது சமுதாயத்தின் கட்டுக்கோப்பு உடைந்து சிதிலமடைந்து வருகிறது. இடப்பெயர்வு தினசரிக் கடமைபோலாகியிருந்தது. இவற்றால் மேற் கூறிய நெருக்கீட்டுக்குப் பிற்பட்ட மனவடு நோய் மாத்திரமின்றி மனப் பதகளிப்பு (Anxiety), மனச்சோர்வு (Depression) பீதிநோய் (Phobia) போன்ற வேறுபல உளம் சார்ந்த நோய்களுக்கும் எமது மக்கள் ஆளாகித் தவிக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

http://www.geotamil.com/pathivukal.htm

Link to comment
Share on other sites

போரால் எங்களுக்கு எத்தனை பாதிப்பிகள்...

Link to comment
Share on other sites

சொல்லணா துயரங்களை அனுபவிக்கும் எமது தாயக மக்களின் தியாகங்களை எழுத்தில் வடிக்க முடியாது.

Link to comment
Share on other sites

சொல்லணா துயரங்களை அனுபவிக்கும் எமது தாயக மக்களின் தியாகங்களை எழுத்தில் வடிக்க முடியாது.

நினைத்தாலே நெஞ்சு எரியும்..

Link to comment
Share on other sites

அச்சோ..அச்சோ..உதில நுணா அண்ணா சொன்ன சில அறிகுறிகள் எனக்கு இருக்கிற மாதிரி தெரியுது என்ன கொடுமை இது.. :lol: (ஏன் எண்டா நம்மளிற்கும் உந்த நித்தா வருதில்ல இரவில)..ஆனா அப்படி ஒரு பயங்கர சம்பவும் நமக்கு ஏற்பட்ட மாதிரி தெரியல பாருங்கோ.. :wub:

எனக்கு நித்திரையில அடிகடி பாவனா அக்கா வந்து தொல்லை கொடுக்கிறா அதுக்கு என்ன செய்யலாம் எண்டும் ஒருக்கா சொன்னியள் எண்டா நன்னா இருக்கும் :lol: ..மற்றது என்னவெண்டால் நானும் கஜனி படத்தில வாற சூரியா அண்ணா மாதிரி பழச எல்லாம் மறந்து போட்டன்.. :wub: (யாருக்கு அதுகள பத்தி தெரிந்தா சொல்லுங்கோ என்ன)... :wub:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா உன் மனம் தெளிவா இருந்தா எதுவுமே உன்னை தொல்லை பண்ணாது" :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அச்சோ..அச்சோ..உதில நுணா அண்ணா சொன்ன சில அறிகுறிகள் எனக்கு இருக்கிற மாதிரி தெரியுது என்ன கொடுமை இது.. :( (ஏன் எண்டா நம்மளிற்கும் உந்த நித்தா வருதில்ல இரவில)..ஆனா அப்படி ஒரு பயங்கர சம்பவும் நமக்கு ஏற்பட்ட மாதிரி தெரியல பாருங்கோ.. :)

எனக்கு நித்திரையில அடிகடி பாவனா அக்கா வந்து தொல்லை கொடுக்கிறா அதுக்கு என்ன செய்யலாம் எண்டும் ஒருக்கா சொன்னியள் எண்டா நன்னா இருக்கும் :) ..மற்றது என்னவெண்டால் நானும் கஜனி படத்தில வாற சூரியா அண்ணா மாதிரி பழச எல்லாம் மறந்து போட்டன்.. :icon_idea: (யாருக்கு அதுகள பத்தி தெரிந்தா சொல்லுங்கோ என்ன)... :wub:

இதைத் தவிர எமது சமூகத்தில் காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் சமய, கலாசார ரீதியான பழக்கங்களும், நடைமுறைகளும் இந்நோயிலிருந்து விடுபடப் பெருமளவில் உதவி வருகின்றன. பகுத்தறிவு வாதம் பேசி அவற்றைக் கண்டிக்கவோ, பெறத் தயங்கவோ வேண்டியதில்லை. கோயில் செல்வதும், நேர்த்திக் கடன் வைப்பதும், மந்திரித்து நூல் கட்டுவதும், அபிஷேகம் செய்வதும் கூட நல்ல

பலனை அளிக்கக் கூடும். காய் வெட்டுதல், கழிப்புக் கழித்தல், பார்வை பார்த்தல், மருந்து விழுத்தல் போன்ற முறைகளை எமது பாரம்பரிய வைத்தியர்கள் மிகவும் சிறப்பான முறையில் பயன்படுத்தி பலரைக் குணமாக்குகிறார்கள் என்பதையும் குறிப்பட்டே ஆக வேண்டும். ஒவ்வொருவரும் தத்தமது மதரீதியான, தமக்கு நம்பிக்கையுள்ள பாரம்பரிய முறைகளை பெறுவதே இதிலிருந்து விடுபட சிறந்த வழியாகும். இல்லாட்டி செய்வினைதான் செய்யோணும் :(

Link to comment
Share on other sites

இதைத் தவிர எமது சமூகத்தில் காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் சமய, கலாசார ரீதியான பழக்கங்களும், நடைமுறைகளும் இந்நோயிலிருந்து விடுபடப் பெருமளவில் உதவி வருகின்றன. பகுத்தறிவு வாதம் பேசி அவற்றைக் கண்டிக்கவோ, பெறத் தயங்கவோ வேண்டியதில்லை. கோயில் செல்வதும், நேர்த்திக் கடன் வைப்பதும், மந்திரித்து நூல் கட்டுவதும், அபிஷேகம் செய்வதும் கூட நல்ல

பலனை அளிக்கக் கூடும். காய் வெட்டுதல், கழிப்புக் கழித்தல், பார்வை பார்த்தல், மருந்து விழுத்தல் போன்ற முறைகளை எமது பாரம்பரிய வைத்தியர்கள் மிகவும் சிறப்பான முறையில் பயன்படுத்தி பலரைக் குணமாக்குகிறார்கள் என்பதையும் குறிப்பட்டே ஆக வேண்டும். ஒவ்வொருவரும் தத்தமது மதரீதியான, தமக்கு நம்பிக்கையுள்ள பாரம்பரிய முறைகளை பெறுவதே இதிலிருந்து விடுபட சிறந்த வழியாகும். இல்லாட்டி செய்வினைதான் செய்யோணும் :unsure:

கு..சா தாத்தா அது என்ன செய்வினை எண்டா நான் தமிழில தான் செய்வினை,செயற்பாட்டு வினை எண்டு படித்தனான் உது என்ன புதுசா இருக்கு..?? :rolleyes: ..உதை செய்தா எல்லா பிரச்சினையும் போய் பாவனா அக்கா எனக்கு கிடைத்திடுவாவோ தாத்தா.. :o

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

கு..சா தாத்தா அது என்ன செய்வினை எண்டா நான் தமிழில தான் செய்வினை,செயற்பாட்டு வினை எண்டு படித்தனான் உது என்ன புதுசா இருக்கு..?? :rolleyes: ..உதை செய்தா எல்லா பிரச்சினையும் போய் பாவனா அக்கா எனக்கு கிடைத்திடுவாவோ தாத்தா.. :o

அப்ப நான் வரட்டா!!

:unsure: இருக்கிற அக்கா காணாது ஆக்கும்

இதுக்கை புதுசா வ்ஏறை பாவனா அக்கா தேவைபப்டுதாக்கும்

ஆமா பாவனா எப்ப இருந்து அக்கா ஆகினவா :lol:

Link to comment
Share on other sites

:lol: இருக்கிற அக்கா காணாது ஆக்கும்

இதுக்கை புதுசா வ்ஏறை பாவனா அக்கா தேவைபப்டுதாக்கும்

ஆமா பாவனா எப்ப இருந்து அக்கா ஆகினவா :lol:

கண்ணணுக்கு எல்லாருமே அக்கா தான் உது தெரியாதோ.. :unsure: (இதுவும் ஒரு வகை பாதுகாப்பு தான்)..பிறகு உதுக்காக என்னோட கோவிக்கிறதில்ல..நான் பகிடிக்கு..ஓ பாவனாவோ எப்ப புளிக்கும் எண்டு தெரிந்திச்சோ அப்ப இருந்தாக்கும் பாருங்கோ.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.