Jump to content

மௌனங்கள் கலைகின்றன.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மௌனங்கள் கலைகின்றன.

கடந்துவந்த வாழ்வியலை மீட்டிப் பார்க்கும் ஒரு தொடர்பதிவு இந்த மௌனங்கள் கலைகின்றன. எனக்குள் புதையுண்டு கிடக்கும் அனைத்தையும் வரிகளாக்கி இந்த பதிவை படைக்க உள்ளேன்.

முகட்டு ஓடு

பத்து வயது தாண்டினாலே பெண்பிள்ளைகளை வீடுகளில் அடக்க ஒடுக்கமாக இரு என்று பெரியவர்கள் முணுமுணுக்க ஆரம்பித்து விடுவார்கள் என்பது தாயகத்தில் வளர்ந்த அனைவருக்கும் விளங்கும். எங்கள் வீட்டிலும் அப்படித்தான். ஆனால் ஆண்சகோதரர்களுடன் பிறந்து வளர்ந்ததாலோ... அல்லது ஆண்பிள்ளைகள் போன்றே அரைக்காற்சட்டை சேர்ட்டையே அதிகம் அணிவித்து வளக்கப்பட்டதாலோ என்னவோ இந்தப் பெண்பிள்ளையின் அடக்க ஒடுக்கம் என்பது எனக்கு என் சுதந்திரத்தை முடக்குவதாக இருந்தது. இருந்தாலும் வீட்டில் நான் கடைக்குட்டியானதாலும், ஒரே பெண்பிள்ளையானதாலும் நான் செல்லப் பிள்ளையாகியிருந்தேன். அதுவே பெண் என்ற விம்பத்திற்கு திணிக்கப்படும் ஒடுக்கங்களை எனக்கு இல்லாமல் ஆக்கியது. சமூகம் எதிர்பார்க்கும் அடக்க ஒடுக்கங்கள் என்னிடம் இல்லாததால் அயலவர்கள் ஆண்சிங்கி என்ற பட்டத்தையும் எனக்கு வழங்கியிருந்தார்கள். இதை ஏன் எழுதுகிறேன் என்றால் என் 'முகட்டு ஓடு" நினைவுகளை உங்களுடன் பகிரும் போது சில யதார்த்தங்கள் அதனை வாசிக்கும் உங்களைத் துணுக்குறச் செய்யும்.

வாடைக்காற்று வீசும் காலம், நானும் என் இளைய அண்ணனும் நாளில் முக்காலவாசி நேரம் குடியிருப்பது வீட்டின் முகட்டு ஓட்டில்தான். பன்னிரண்டு பதிமூன்று வயதில் நான் மட்டுந்தான் என்வீட்டு முகட்டு ஓட்டின் அரசி. அண்ணன்மார் வெளியே உலாவப் போய்விடுவார்கள். எனக்கு விளையாட வழியில்லை அதனால் முகட்டு ஓடு எனக்கு பிரியமான தோழியாக மாறியது.

கிணற்றடி மூலை மதிலில் பாய்ந்து ஏறி கப்பித்தூணில் காலூன்றி தண்ணீர் தாங்கியில் ஏறி மினசார வயர்களின் கீழாக புகுந்து பிளாட்டிற்குத் தாவினால் வீட்டு ஓட்டிற்கு ஏறிவிடலாம்.

முகட்டு ஓட்டில் நின்று சூழ உள்ளவற்றை பார்த்து ரசிப்பது ஒரு சுகமான அனுபவம்.

வீட்டைச் சுற்றிலும் தென்னை மரங்களும் அதன் ஓலைகளில் நர்த்தனமிடும் காற்றும், மாமரத்தில் இருந்து துணைகளைத் தேடிக் கூவும் குயில்களும், பட்டதென்னம் பொந்தில் குடியிருக்கும் கிள்ளைக் குடும்பங்களும், ஒரு திசையில் நிறைந்த வாழைகளும், பிரிதொரு பக்கம் கண்சிமிட்டும் மலர்ச்சோலையும் அதில் தேனெடுக்கும் சிட்டுக்களும், பிளாட்டில் படந்த மல்லிகைகொடியின் மலர்களில் மயங்கிய வண்டுகளும், இன்னொரு திசையில் வான் முட்டும் கடலும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத காட்சிகள். கோயிற்கோபுரம், வாசிகசாலை, வீதிவெளி என்று ஓரிடத்தில் நின்றே ரசிக்க வரந்தந்ததுதான் இந்த முகட்டு ஓடு, அதிலும் வாடைக்காற்றுக் காலமென்றால் வெளவால் ஏற்றுவது எனக்குப் பிரியமானது. அம்மாவின் தையல் இயந்திரத்தில் கொழுவியிருக்கும் இருக்கும் நூல் காற்றில் பறக்கும் வெளவாலுக்கும் எனக்குமான உறவுக் கொடியாக மாறியிருக்கும். வாடைக்காற்று அற்ற காலத்தில் முகட்டு ஓடு கடலையும், வானையும், முகிலின் ஓவியங்களையும் நான் இருந்து ரசிக்கும் சிம்மாசனமாக இருந்தது.

இவையெல்லாம் என் பதின்ம வயதின் ஆரம்ப நாட்கள். ஒரு நாள் அதிர்ந்த பெருவெடியின் ஓசை கேட்டு அகதிகளாக ஓடிவிட்டோம். இருவாரங்களாக எங்கள் வீட்டை வந்து பார்க்கமுடியா நிலை.... எங்கள் அயலில் உள்ள வீடுகளை இராணுவம் எரித்துவிட்டதாகத் தகவல்கள் காதிற்கு எட்ட எட்ட அம்மா அரற்றத் தொடங்கி விட்டார். அம்மாவை ஆசுவாசப்படுத்த எங்களுடைய வீட்டுக்கு ஒன்றும் நடக்கவில்லையாம் என்று அப்பாவும் , அண்ணன்மாரும் பொய் புனைந்தார்கள் தற்காலிகப் பொய் எத்தனை நாளைக்கு?

வீட்டிற்கு வந்தோம்....

வீட்டைப்பார்த்ததும் அம்மா கதறி அழுதார்.

அப்பாவும் , அண்ணன்மாரும் கண்கள் கலங்கக் கலங்கத் துடைத்தபடி நிற்க, நான் மட்டும் உறைத்துப் போனேன். பிளாட்டில் படர்ந்த மல்லிகைக் கொடி கருகிக் கிடந்தது. என் வீட்டின் மலர்சோலையும் கரிய புகைபடிந்து பச்சையத்தைத் தொலைத்திருந்தது. தென்னோலைகள் தீயால் எழுந்த வெம்மையில் பொசுங்கி இருந்தன.

என்னுடைய சிம்மாசனம்.....

எரிந்த வீட்டின் சாம்பலுக்குள் தன் செம்மையை இழந்து கரிக்கட்டிகளாகச் நொறுங்கிக் கிடந்தது...

எரிந்த வீட்டில் மெல்லக் கால் வைத்து நடந்தபோது காற்பதிவுகளில் வெம்மை தன்னை உணர்த்தியது. நொறுங்கிய என் சிம்மாசனத்தைத் தொட்டுத் தடவி கைகளில் தூக்கிய போது அதன் அடியில் எனது பாடசாலைப் புத்தகங்களும், வெள்ளைச் சீருடையும் பாதி எரிந்தும், கருகியும் தீக்காயங்களுடன் என்னைப் பரிதாபமாகப் பார்த்தன. உறைத்துப் போன எனக்கு அவற்றின் பரிதாபப்பார்வை புரியவில்லை.

என் முகட்டு ஓட்டுச் சிம்மாசனம் தகர்ந்ததோடே என் பள்ளிவாழ்வும் என்னிடமிருந்து பறிக்கப்பட்டுப் போனது. அன்று இராணுவத்தால் எரியூட்டித் தகர்க்கப்பட்டது என்முகட்டு ஓட்டுச் சிம்மாசனம் மட்டுமல்ல, என் கல்விக் கண்ணின் கனவுகளுந்தான்.

Link to comment
Share on other sites

ஈழத்தமிழர்கள் அனைவர் மனதிலும் மாறா ரணங்களாய் யுத்தத்தின் வடுக்கள்...

முற்றமெல்லாம் சுற்றித் திரிந்து புழுதி அழைந்து கூடித் திரிந்த இளமைக் காலத்தின் வசந்தம் எங்கள் குழந்தைகளுக்கும் இல்லாமல் போய்விட்டது.

காலாற நடந்து கோயில் கும்பிட்டு கதை பேசும் பாக்கியம் எங்களைப் பெற்றவர்களுக்கும் இல்லாமல் போய் விட்டது.

அளவான உழைப்பு. அமைதியான வாழ்க்கை என்பதும் எங்களுக்கு இல்லாமல் போய் விட்டது.

இவை எல்லாம் மாறும் நாள் எப்போது?????

Link to comment
Share on other sites

நல்லதொரு அனுபவப்பகிர்வு சகீரா. நானும் அங்க இருந்தகாலத்தில பொழுதுபோகாட்டிக்கு வீட்டுக்குமேலதான் வாசம் செய்யுறது. மேல இருந்து பார்த்தால் உலகமே வித்தியாசமா அழகா இருக்கும். நான் இரவில மேல ஏறி வானத்தை பார்த்துக்கொண்டு இருப்பன். அழகிய காட்சிகள்... ஆனால் எங்க போனாலும் நுளம்புத்தொல்லை. இஞ்ச அது இல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணிவாசகன் எமக்கென ஒரு நாடு அங்கீகரிக்கப்படும் வரைக்கும் துன்பங்கள் தொடர்கதைதான்.

முரளி நீங்களும் வீட்டுக்கு மேல் ஏறியிருந்தபேர்வழியா? என்ன ஒற்றுமை..... மன்னிக்கவும் நீங்கள் இரவில் ஏறியிருந்து விண்மீன்களையும் வெண்ணிலாவையும் ரசித்திருக்கிறீர்கள். நான் பகலில் கடலையும் , நீலவானையும், மேகச்சுருள்களையும் ரசித்திருக்கிறேன்.

மணிவாசகன் முரளி இருவருக்கும் எனது நட்புக்கலந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மௌனம் கலைத்த என் அன்புத்தோழியே உன் எரிந்த வீட்டின் சாம்பலுக்குள் தம் செம்மையை இழந்து நொறுங்கிக் கிடந்தது உன் வீட்டு முகட்டு ஓடு மட்டுமல்ல உன் இனமைக் கோலங்களும் என்பது இறுதிவரிகளில் ஏக்கமுடன் வெளிப்படுகிறது. தொடர்ந்தும் கலையட்டும் உன் மௌனங்கள் பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அந்த அனுபவத்தில் சிட்னியில் கூரையில் ஏறினா ,பக்கத்துவீட்டுக்காரன் பொலிஸுக்கு சொல்லிபொட்டான். காரணம் அவனின்" பிரைவசி"(privacy)இல்லையாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தான் பாக்கிறன்.. கதைகளுக்கு தலைப்பு வைக்கிறது என்றால்.. மெளனம் பேசியது.. மெளனம் கலைகிறது.. ஒரு மெளன கீதம்.. இப்படி.. அடுக்கிட்டே போறேளே.. எப்பதான் முடிக்கப் போறேள்...! :wub::wub:

Link to comment
Share on other sites

:wub: மனசு பாரமாகிவிட்டது..
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

காவலூர் கண்மணி என்னைப்பற்றி அதிகம் அறிந்தவரான உங்கள் அங்கீகரிப்புக்கு நன்றி உரைத்தேன்.

புத்தன் நீங்களுமா? பார்க்கப்போனால் எங்களில் அதிகமானவர்கள் முகட்டு ஓட்டில் ராச்சியம் நடாத்தியவர்கள் போல் உள்ளது. நன்றி புத்தன்.

தூயா நிகழ்வு பாரமானதுதான் ஆனால் நினைவுச்சுழியில் இந்த முகட்டு ஓடு இன்னும் முறுவலிக்கிறது.

நெடுக்காலபோவான் மௌனம் கலைக்கிறபோது அதற்கு மௌனங்கள் கலைகின்றன என்று பெயரிடாமல் சத்தங்கள் வளர்கின்றன என்றா பெயர் வைக்க முடியும்?

Link to comment
Share on other sites

நான் இரவில மேல ஏறி வானத்தை பார்த்துக்கொண்டு இருப்பன்.

முரளி.. :unsure:

அப்பவே இப்பிடியா..? :unsure:

Link to comment
Share on other sites

எந்த ஊரு என்றாலும் நம்ம ஊருபோலாகுமா? எங்கு புலம்பெயர்ந்து எவ்வளவூ வசதியா வாழ்ந்தாலும் தாயகவாழ்வின் சுகம்.......... அது ஒரு கனாக்காலம்தான்............ ஒவ்வொரு நினைவலையில் நனையூம்போதும் துவண்டுபோகாமல் மீண்டும் எழுவோம்............ எம் வாழ்வை நாமே தீர்மானிப்போம் என்ற புத்துணர்வூ பெறுவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அம்பலத்தார்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

வாழ்ககையில் வற்றாத நினைவுகள் என்றும் எம் மனக்கண்களில் சித்திரங்களாக மலரும்....! எந்தத் தோல்வியும் நெஞ்சு பொறுக்காத வேதனையும் தம்மோடு அதற்குச் சமமான அல்லது அதைவிடப் பெரிய வெற்றியை சுமந்தே வருகின்றன...! கதையடல் பிரமிக்க வைக்கிறது....!

Link to comment
Share on other sites

  • 3 years later...
  • கருத்துக்கள உறவுகள்

வல்வையின், எழுத்தில்... ஒரு வீச்சு இருக்கும்.

உங்கள் மௌனங்களை தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேளை! நாங்கள் செய்த புண்ணியம் போலும்! நீங்கள் தப்பிப் பிழைத்தது!

நாங்களும் முகடு ஏறின காலம் பார்த்து, மூத்திரக் குழவியளுக்கும் அந்த ஆசை வந்திருக்க வேண்டும்!

பிறகென்ன, முகட்டுக்குப் போன எங்களை அவை கலைக்க, ஓடு பார்த்து இறங்க வேண்டிய தேவையே எங்களுக்கு இருக்கவில்லை!

மிகுதி, உங்கள் கற்பனைக்கு!!!

நீதியில்லாதது என்று நீங்கள் நம்புவதை, எதிர்க்கும், ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் வாழ்கின்றீர்கள், சகோதரி!

இது எங்கள் மாவீரர்களுக்கும் பொருந்தும்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்வையின், எழுத்தில்... ஒரு வீச்சு இருக்கும்.

உங்கள் மௌனங்களை தொடருங்கள்.

நன்றி தமிழ்சிறீ....எழுத்தில் வீச்சு என்று நீங்கள் குறிப்பிடுவது எந்தவகைக்குள் அடக்கக்கூடியதாக அடையாளம் காணுகிறீர்கள் தமிழ்சிறீ... ஏன் கேட்கின்றேன் என்றால் எழுதுபவரைக்காட்டிலும் வாசிக்கும் வாசிப்பாளனே எழுத்தின் வகையை சரியாக இனங்காணமுடியும்..

உண்மை தான், தொடங்கள் சகாரா!

நன்றி அலைமகள்..திண்ணையில் உங்களிடம் இன்று மனந்திறந்து பேசினேன்.ஆறுதலாக இருந்தது அதற்காகவும் நன்றி உரைக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேளை! நாங்கள் செய்த புண்ணியம் போலும்! நீங்கள் தப்பிப் பிழைத்தது!

நாங்களும் முகடு ஏறின காலம் பார்த்து, மூத்திரக் குழவியளுக்கும் அந்த ஆசை வந்திருக்க வேண்டும்!

பிறகென்ன, முகட்டுக்குப் போன எங்களை அவை கலைக்க, ஓடு பார்த்து இறங்க வேண்டிய தேவையே எங்களுக்கு இருக்கவில்லை!

மிகுதி, உங்கள் கற்பனைக்கு!!!

நீதியில்லாதது என்று நீங்கள் நம்புவதை, எதிர்க்கும், ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் வாழ்கின்றீர்கள், சகோதரி!

இது எங்கள் மாவீரர்களுக்கும் பொருந்தும்!!!

நன்றி புங்கையூரான்.

இப்படியா யாழில் நீங்களாகவே வாக்குமூலம் கொடுப்பது?....... இனி இந்த யாழ்க்களக்கண்மணிகளுக்கு அல்வா கிடைத்தமாதிரித்தான் உங்கள் நிலையை கற்பனையில் எண்ணிப்பார்த்து நான் சிரிக்க வீட்டில் என்னை விசித்திரமாகப்பார்க்கிறார்கள்.... பார்த்துக்கொண்டே இருங்கள் இனி நீங்கள் படப்போகும் பாட்டை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ்சிறீ....எழுத்தில் வீச்சு என்று நீங்கள் குறிப்பிடுவது எந்தவகைக்குள் அடக்கக்கூடியதாக அடையாளம் காணுகிறீர்கள் தமிழ்சிறீ... ஏன் கேட்கின்றேன் என்றால் எழுதுபவரைக்காட்டிலும் வாசிக்கும் வாசிப்பாளனே எழுத்தின் வகையை சரியாக இனங்காணமுடியும்..

ஒரு வரியில் சொன்னால்....

உங்களது, மனம் திறந்த.. வஞ்சகம் இல்லாத ஆவேச(கோப) எழுத்துக்கள் பிடிக்கும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அக்கா தொடரை எழுதாமல் விட்டு,விட்டீர்கள் ?தொடர்ந்து எழுதுங்கள் வாசிக்க ஆவலாக உள்ளது

Link to comment
Share on other sites

தங்களின் முகட்டோடு பதிவினை வாசிக்கும் போது.... எனக்கு ஞாபகத்துக்கு வந்தது எங்கள் ஊரின் "பட்ட சீசன்" தான். வீட்டு ஓட்டில் ஏறி நின்று பட்டம் விட..... அம்மா கீழிருந்து புறுபுறுக்க... :D அப்பா தூரத்தில் வருவது கண்ணில் பட ... :o அப்படியே பட்டத்தைப் போட்டுவிட்டு சட்டென்று குதித்து நல்ல பிள்ளை மாதிரி ............ :lol::rolleyes::lol:

அக்கா....... தொடர்ந்து பதியுங்கள்! எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மௌனங்கள் கலைகின்றன.

கடந்துவந்த வாழ்வியலை மீட்டிப் பார்க்கும் ஒரு தொடர்பதிவு இந்த மௌனங்கள் கலைகின்றன. எனக்குள் புதையுண்டு கிடக்கும் அனைத்தையும் வரிகளாக்கி இந்த பதிவை படைக்க உள்ளேன்.

முகட்டு ஓடு

பத்து வயது தாண்டினாலே பெண்பிள்ளைகளை வீடுகளில் அடக்க ஒடுக்கமாக இரு என்று பெரியவர்கள் முணுமுணுக்க ஆரம்பித்து விடுவார்கள் என்பது தாயகத்தில் வளர்ந்த அனைவருக்கும் விளங்கும். எங்கள் வீட்டிலும் அப்படித்தான். ஆனால் ஆண்சகோதரர்களுடன் பிறந்து வளர்ந்ததாலோ... அல்லது ஆண்பிள்ளைகள் போன்றே அரைக்காற்சட்டை சேர்ட்டையே அதிகம் அணிவித்து வளக்கப்பட்டதாலோ என்னவோ இந்தப் பெண்பிள்ளையின் அடக்க ஒடுக்கம் என்பது எனக்கு என் சுதந்திரத்தை முடக்குவதாக இருந்தது. இருந்தாலும் வீட்டில் நான் கடைக்குட்டியானதாலும், ஒரே பெண்பிள்ளையானதாலும் நான் செல்லப் பிள்ளையாகியிருந்தேன். அதுவே பெண் என்ற விம்பத்திற்கு திணிக்கப்படும் ஒடுக்கங்களை எனக்கு இல்லாமல் ஆக்கியது. சமூகம் எதிர்பார்க்கும் அடக்க ஒடுக்கங்கள் என்னிடம் இல்லாததால் அயலவர்கள் ஆண்சிங்கி என்ற பட்டத்தையும் எனக்கு வழங்கியிருந்தார்கள். இதை ஏன் எழுதுகிறேன் என்றால் என் 'முகட்டு ஓடு" நினைவுகளை உங்களுடன் பகிரும் போது சில யதார்த்தங்கள் அதனை வாசிக்கும் உங்களைத் துணுக்குறச் செய்யும்.

வாடைக்காற்று வீசும் காலம், நானும் என் இளைய அண்ணனும் நாளில் முக்காலவாசி நேரம் குடியிருப்பது வீட்டின் முகட்டு ஓட்டில்தான். பன்னிரண்டு பதிமூன்று வயதில் நான் மட்டுந்தான் என்வீட்டு முகட்டு ஓட்டின் அரசி. அண்ணன்மார் வெளியே உலாவப் போய்விடுவார்கள். எனக்கு விளையாட வழியில்லை அதனால் முகட்டு ஓடு எனக்கு பிரியமான தோழியாக மாறியது.

கிணற்றடி மூலை மதிலில் பாய்ந்து ஏறி கப்பித்தூணில் காலூன்றி தண்ணீர் தாங்கியில் ஏறி மினசார வயர்களின் கீழாக புகுந்து பிளாட்டிற்குத் தாவினால் வீட்டு ஓட்டிற்கு ஏறிவிடலாம்.

முகட்டு ஓட்டில் நின்று சூழ உள்ளவற்றை பார்த்து ரசிப்பது ஒரு சுகமான அனுபவம்.

வீட்டைச் சுற்றிலும் தென்னை மரங்களும் அதன் ஓலைகளில் நர்த்தனமிடும் காற்றும், மாமரத்தில் இருந்து துணைகளைத் தேடிக் கூவும் குயில்களும், பட்டதென்னம் பொந்தில் குடியிருக்கும் கிள்ளைக் குடும்பங்களும், ஒரு திசையில் நிறைந்த வாழைகளும், பிரிதொரு பக்கம் கண்சிமிட்டும் மலர்ச்சோலையும் அதில் தேனெடுக்கும் சிட்டுக்களும், பிளாட்டில் படந்த மல்லிகைகொடியின் மலர்களில் மயங்கிய வண்டுகளும், இன்னொரு திசையில் வான் முட்டும் கடலும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத காட்சிகள். கோயிற்கோபுரம், வாசிகசாலை, வீதிவெளி என்று ஓரிடத்தில் நின்றே ரசிக்க வரந்தந்ததுதான் இந்த முகட்டு ஓடு, அதிலும் வாடைக்காற்றுக் காலமென்றால் வெளவால் ஏற்றுவது எனக்குப் பிரியமானது. அம்மாவின் தையல் இயந்திரத்தில் கொழுவியிருக்கும் இருக்கும் நூல் காற்றில் பறக்கும் வெளவாலுக்கும் எனக்குமான உறவுக் கொடியாக மாறியிருக்கும். வாடைக்காற்று அற்ற காலத்தில் முகட்டு ஓடு கடலையும், வானையும், முகிலின் ஓவியங்களையும் நான் இருந்து ரசிக்கும் சிம்மாசனமாக இருந்தது.

இவையெல்லாம் என் பதின்ம வயதின் ஆரம்ப நாட்கள். ஒரு நாள் அதிர்ந்த பெருவெடியின் ஓசை கேட்டு அகதிகளாக ஓடிவிட்டோம். இருவாரங்களாக எங்கள் வீட்டை வந்து பார்க்கமுடியா நிலை.... எங்கள் அயலில் உள்ள வீடுகளை இராணுவம் எரித்துவிட்டதாகத் தகவல்கள் காதிற்கு எட்ட எட்ட அம்மா அரற்றத் தொடங்கி விட்டார். அம்மாவை ஆசுவாசப்படுத்த எங்களுடைய வீட்டுக்கு ஒன்றும் நடக்கவில்லையாம் என்று அப்பாவும் , அண்ணன்மாரும் பொய் புனைந்தார்கள் தற்காலிகப் பொய் எத்தனை நாளைக்கு?

வீட்டிற்கு வந்தோம்....

வீட்டைப்பார்த்ததும் அம்மா கதறி அழுதார்.

அப்பாவும் , அண்ணன்மாரும் கண்கள் கலங்கக் கலங்கத் துடைத்தபடி நிற்க, நான் மட்டும் உறைத்துப் போனேன். பிளாட்டில் படர்ந்த மல்லிகைக் கொடி கருகிக் கிடந்தது. என் வீட்டின் மலர்சோலையும் கரிய புகைபடிந்து பச்சையத்தைத் தொலைத்திருந்தது. தென்னோலைகள் தீயால் எழுந்த வெம்மையில் பொசுங்கி இருந்தன.

என்னுடைய சிம்மாசனம்.....

எரிந்த வீட்டின் சாம்பலுக்குள் தன் செம்மையை இழந்து கரிக்கட்டிகளாகச் நொறுங்கிக் கிடந்தது...

எரிந்த வீட்டில் மெல்லக் கால் வைத்து நடந்தபோது காற்பதிவுகளில் வெம்மை தன்னை உணர்த்தியது. நொறுங்கிய என் சிம்மாசனத்தைத் தொட்டுத் தடவி கைகளில் தூக்கிய போது அதன் அடியில் எனது பாடசாலைப் புத்தகங்களும், வெள்ளைச் சீருடையும் பாதி எரிந்தும், கருகியும் தீக்காயங்களுடன் என்னைப் பரிதாபமாகப் பார்த்தன. உறைத்துப் போன எனக்கு அவற்றின் பரிதாபப்பார்வை புரியவில்லை.

என் முகட்டு ஓட்டுச் சிம்மாசனம் தகர்ந்ததோடே என் பள்ளிவாழ்வும் என்னிடமிருந்து பறிக்கப்பட்டுப் போனது. அன்று இராணுவத்தால் எரியூட்டித் தகர்க்கப்பட்டது என்முகட்டு ஓட்டுச் சிம்மாசனம் மட்டுமல்ல, என் கல்விக் கண்ணின் கனவுகளுந்தான்.

இங்கே எல்லாம் குறைந்த பட்ச வீடு கட்டவே .. 2 1/2 லட்ச ரூபாய் கொட்டவேண்டியுள்ளது.. ரொம்ப கொடுமை சகோதரி :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகாரா அக்கா உங்கள் எழுத்தால் அழ வைத்துவிட்டீங்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • 6 years later...
  • கருத்துக்கள உறவுகள்
On 11/22/2011 at 3:06 PM, aswini2005 said:

சகாரா அக்கா உங்கள் எழுத்தால் அழ வைத்துவிட்டீங்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி அஸ்வினி2005

On 11/25/2011 at 8:40 AM, புலிக்குரல் said:

அப்பாடி இப்பாவாது மௌனம் கலைந்ததே....................................

நன்றி புலிக்குரல்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.