Jump to content

சீனாவில் பயங்கர நில நடுக்கம்: 5,000க்கும் மேற்பட்டோர் பலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் பயங்கர பூகம்பம்-நூற்றுக்கணக்கானோர் பலி?

திங்கள்கிழமை, மே 12, 2008

பெய்ஜிங்: சீனாவின் தென் மேற்கு மத்திய பகுதியில் இன்று பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 7.8 புள்ளிகளாகப் பதிவானது. இதில் பள்ளிக் கூடங்கள் உள்பட பல கட்டடங்கள் இடிந்துள்ளன. பள்ளிக் கட்டடத்தில் 900க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிக்கியுள்ளனர்.

இதுவரை 5 மாணவர்கள் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளனது.

இன்று பகல் 2.28 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வு தாய்லாந்து, வியட்நாம் வரை உணரப்பட்டது.

சீனாவின் தென் மேற்கு-மத்தியப் பகுதியான செங்க்டூ-சாங்கிங் பகுதிகளில் இந்த பூகம்பம் மையம் கொண்டிருந்தது.

இதையடுத்து மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். சுமார் 100 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பூகம்பத்தின் தாக்கம் இருந்தது. பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதால் பலியானோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.

சாங்கிங் பகுதியில் 2 பள்ளிக் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் உள்பட 5 பேர் பலியாயினர். 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர். 900 மாணவர்கள் இடிபாடுகளில் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மியான்யாங் பகுதியில் உயர்நிலை தண்ணீர் தொட்டி விழுந்து ஒருவர் பலியானார்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் சீன ராணுவம் இறக்கி விடப்பட்டுள்ளது.

டுஜியாங்ஜியான் நகரில் வீடுகள் வரிசையாக இடிந்து தரைமட்டமாகியுள்ளன. தொடர்ந்து தென் மேற்கு சீனாவில் நில அதிர்வுகள் உணரப்படுட்டு வருகின்றன. இதனால் பதற்றமும் பீதியும் நிலவுகிறது.

பூகம்பம் மையம் கொண்ட பகுதியில் இருந்து 1,528 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெய்ஜிங்கிலும் அதிர்வு உணரப்பட்டது. அங்கும் கட்டடங்கள் பலமாக ஆட்டம் கண்டுள்ளன.

சீனாவில் வரும் ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் நடக்க உள்ள நிலையில் இந்த பூகம்ப தாக்குதல் அந்நாட்டுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் ஒலிம்பிக் நடக்கும் பகுதி எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

கடந்த 1976ம் ஆண்டு வடக்கு சீனாவில் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 2.55 லட்சம் பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2008/05...tles-china.html

Link to comment
Share on other sites

பீஜிங்: சீனாவின் தென்மேற்கு பகுதியில், நேற்று பிற்பகல் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம், பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், 5,000 பேர் இறந்தனர். நில நடுக்கத்தின் தாக்கம் பல ஆயிரம் கி.மீ., தூரத்தில் உள்ள நகரங்களிலும் காணப்பட்டது.சீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ளது சிசூவான் மாகாணம். இதன் தலைநகரான செங்டூவில் இருந்து 146 கி.மீ., தொலைவில் உள்ளது வெங்சூவான் பகுதி. இந்திய நேரப்படி காலை 11.58 மணிக்கு , இப்பகுதியில், மிகவும் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம், ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது.

கட்டடங்களில் விரிசல்கள் : பல லட்சம் பேர் வசிக்கும் செங்டூ நகரிலும், 5,000 கி.மீ., தொலைவில் உள்ள பீஜிங், வர்த்தக நகரம் ஷாங்காய், ஹாங்காங், தாய்லாந்து தலைநகர் பாங்காக், வியட்நாமில் உள்ள ஹனோய் ஆகிய நகரங்களிலும் உணரப்பட்டது. உயரமான கட்டடங்களில் வசித்தவர்கள் உடனடியாக தெருக்களுக்கு ஓடி வந்து விட்டனர். செங்டூ நகரில், பல கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டன. எனினும், இந்த நகரில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இங்கிருந்து சில நூறு கி.மீ., தொலைவில் உள்ள, பிரமாண்டமான திரி ஜார்ஜியஸ் அணைக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம்: ஆனால், சிசூவான் மாகாணத்தை ஒட்டி உள்ள, சோங்குயிங் பகுதியில் உள்ள இரண்டு ஆரம்ப பள்ளி கட்டடங்கள் இடிந்து விழுந்தன. பள்ளியில் இருந்த 900 மாணவர்கள் இடிபாடுகளில் புதைந்து விட்டனர். இதுவரை 107 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இறந்தவர்கள் எண்ணிக்கை, 5,000த்தை தாண்டியுள்ளது. இது தவிர, பல ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.மீட்பு பணியில், ராணுவ வீரர்களை ஈடுபடுத்தி, சீன அரசு உடனடி நடவடிக்கை எடுத்தது. பிரதமர் வெங் ஜியாபாவோ, பாதிக்கப்பட்ட பகுதிக்கு விரைந்துள்ளனர்.

இது தவிர, ஹெலிகாப்டர்களும், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.சிசூவான் மாகாணத்தில், 30 ஆண்டுகளுக்கு பிறகு, சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்படுவது இதுவே முதல் முறை. இந்த பகுதி, திபெத் கண்ட திட்டை ஒட்டி அமைந்துள்ளது. நேற்று பிற்பகல், சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்ட பிறகு, அடுத்தடுத்து 40க்கும் மேற்பட்ட சிறு அளவிலான, நில அதிர்வுகளும் ஏற்பட்டன. இதனால், சீனாவில் பெரும் பதட்டம் காணப்பட்டது.

வீடியோ பார்க்க.........................

http://isooryavidz.blogspot.com/2008/05/on...uake-scene.html

வீடியோ பார்க்க.........................

http://isooryavidz.blogspot.com/2008/05/po...ikes-china.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோகமான செய்தி மட்டுமல்லாமல், உணவுப் பொருள் தட்டுப்பாட்டால் உலகம் தொடர்ந்து பாதிக்கும் சூழ்நிலைக்கு விழு;நத மற்றுமொரு அடி. பொருள்களோ, எரிபோருளோ குறைவதற்கான வாய்ப்புக்கள் எதுவும் தென்படவில்லை. கடவுளின் துகள்களைக் கண்டுபிடித்தவர்கள் தான் எம்மைக் காப்பாற்ற வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமீப காலத்தில் ஆசியக் கண்டத்தை உலுக்கும் இரண்டாவது மனிதப் பேரழிவு. இன்றைய பூகம்பத்தில் இதுவரை மதிப்பிட்ட படி 8,500 பேர் உயிரிழந்து பல ஆயிரம் பேர் காயமடைந்து.. உடமைகள் இழந்து தவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் விரைந்து நிவாரணம் பெற அனைத்துலகம் ஒத்துழைக்க வேண்டும்.

சோகமான செய்தி மட்டுமல்லாமல், உணவுப் பொருள் தட்டுப்பாட்டால் உலகம் தொடர்ந்து பாதிக்கும் சூழ்நிலைக்கு விழு;நத மற்றுமொரு அடி. பொருள்களோ, எரிபோருளோ குறைவதற்கான வாய்ப்புக்கள் எதுவும் தென்படவில்லை. கடவுளின் துகள்களைக் கண்டுபிடித்தவர்கள் தான் எம்மைக் காப்பாற்ற வேண்டும்.

கடவுளின் துகளைக் கண்டுபிடிக்கல்ல.. எனித்தான் கண்டறியிற பரிசோதனையை ஆரம்பிக்கப் போயினம். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமிதான் நினைவுவருகின்றது................... எமது மண்ணில் என்பதால் நாம் எவ்வளவு துடித்தோம்...

அவ்வாறுதானே அங்கேயும் இன்று பல மனங்கள் துடித்துகொண்டிருக்கும்.

இதெல்லாம் ஏதோ செயற்கையின்பால் நடப்பதுபோல் எனக்கு படகின்றது!

Link to comment
Share on other sites

எனக்கும் உண்மையிலேயே இது கவலையாக தெரியவில்லை... எமது மக்களின் அழிவுக்கு உவர்களும் காரணம் என்பதாலையோ என்னவோ.. எனது மனிதாபிமான உணர்வு கூட வேலை செய்யுது இல்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிசுவான் மாகாணத்தை நேற்று திங்கட்கிழமை தாக்கிய 7.8 ரிச்டர் பூமியதிர்ச்சி காரணமாக சிறுவர்கள் உட்பட 5,000 பேர் பலியானதுடன் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

மேற்படி பூமியதிர்ச்சி காரணமாக இரு பாடசாலைக் கட்டிடங்கள் இடிந்து விழுந்தமை காரணமாக அங்கிருந்த சுமார் 900 சிறுவர்கள் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

இப்பூமியதிர்ச்சியையடுத்து சீனாவின் அதியுயர்ந்த கட்டிடமான ஜின்மாவோ கோபுரத்திலிருந்தும் ஏனைய உயர்ந்த கட்டிடங்களிலிருந்தும் மக்களை வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது.

சீனாவில் இடம்பெற்ற இப்பூமியதிர்ச்சி, தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக், வியட்நாமின் ஹனொய் நகர் ஆகிய இடங்களிலும் உணரப்பட்டது.

சிசுவான் மாகாண தலைநகரான செங்துவிலிருந்து 57 கிலோமீற்றர் தொலைவில் நேற்று அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 2.28 மணிக்கு தாக்கிய பூமியதிர்ச்சியால் செங்து நகரிலோ அல்லது அதற்கு அருகாமையிலுள்ள திறீ ஜோர்ஜெஸ் அணையிலோ பிரதான சேதமெதுவும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரச தொலைக்காட்சி அறி க்கையிட்டுள்ளது.

எனினும் மேற்படி நகரக் கட்டிடங்களிலிருந்து மக்கள் பாதுகாப்புக் கருதி வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் செங்துவிலிருந்து 930 மைல்கள் தொலைவிலுள்ள சீனத் தலைநகர் பீஜிங்கிலுள்ள பல கட்டிடங்கள், இப்பூமியதிர்ச்சியின் போது சுமார் இரு நிமிடங்களுக்கு நடுக்கம் கண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து மக்கள் கட்டிடங்களை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர்.

பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இறந்தவர்களின் தொகை மேன்மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வீரகேசரி நாளேடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் உண்மையிலேயே இது கவலையாக தெரியவில்லை... எமது மக்களின் அழிவுக்கு உவர்களும் காரணம் என்பதாலையோ என்னவோ.. எனது மனிதாபிமான உணர்வு கூட வேலை செய்யுது இல்லை...

அப்பாவி சீன மக்களுக்கு தமது ஆட்சியாளர்களின் வெளிவிவகாரக் கொள்கை பற்றித் தெரியாது. தெரிந்தாலும் அதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லை.

அப்படி இருக்க மனிதாபிமானத்தை முன்னுறித்திப் பார்க்க வேண்டிய இவ்விடயத்தில் சீனாவின் வெளிவிவகாரக் கொள்கை அணுகுமுறைகளைப் புகுத்துவது சிறந்ததல்ல..! :rolleyes:

Link to comment
Share on other sites

அப்பாவி சீன மக்களுக்கு தமது ஆட்சியாளர்களின் வெளிவிவகாரக் கொள்கை பற்றித் தெரியாது. தெரிந்தாலும் அதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லை.

அப்படி இருக்க மனிதாபிமானத்தை முன்னுறித்திப் பார்க்க வேண்டிய இவ்விடயத்தில் சீனாவின் வெளிவிவகாரக் கொள்கை அணுகுமுறைகளைப் புகுத்துவது சிறந்ததல்ல..! :rolleyes:

பர்மாவில் மக்கள் அவலம் எனும் போது இருந்த மனபதை பதைப்பு... சீனாவில் பூகம்பம் ஏனும் போது வருகுது இல்லை... ஆ... அப்படியா எண்டு தான் முதலில் கேட்டேன்..

எனது அறிவுக்கு தெரிகிறது அதுதவறு எண்று.. உள்ளுண்ணர்வு வேறமாதிரி இருக்கிறது...

எனது உணர்வின் உண்மையை சொன்னேன்...

Link to comment
Share on other sites

சீன பூகம்பத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,000 ஆக உயர்வு (2nd Lead)

சீனாவின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,000 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் கட்டிடங்களுக்கிடையில் புதையுண்டோ அல்லது காயமடைந்தோ இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

திங்கட்கிழமை பிற்பகல் 2.28 மணிக்கு ஏற்பட்ட இந்தப் பூகம்பம் ரிச்டர் அளவு கோலில் 7.9 என பதிவாகியுள்ளது

இந்த பூகம்பத்தின் பாதிப்பு வெகு தொலைவிலுள்ள பீஜிங் மற்றும் ஷாங்ஹாய் நகரிலும், அருகிலுள்ள தாய்லாந்து மற்றும் தாய்வானில் இருக்கும் உயர்ந்த கட்டிடங்களும் ஆட்டம் காணும்படியாக இருந்ததாக சீன செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 30 ஆண்டுகளில் அந்தப் பகுதியை தாக்கிய மிகக் கடுமையான பூகம்பம் இதுவாகும். சீசுவான் பகுதி அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருக்கும் சீன செய்தி நிறுவனமான சின்ஹவா மேலும் பல ஆயிரக்கணக்கானவர்கள் பூகம்பத்தின் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

பாடசாலை ஒன்று இடிந்து விழுந்ததில் 900 சிறார்கள் புதையுண்டு போயிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. மேலும் சில பகுதிகளில் 80 சதவீத அளவுக்கு வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவித்துள்ளன.

பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முழு அளவிலான மீட்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு சீன அதிபர் கூ ஜின்டாவோ கூறியுள்ளார். அந்தப் பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டுள்ளது. நாட்டின் பிரதமர் வென் ஜியா போவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றுள்ளார்.

சீனாவில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் இந்த பூகம்பம் அந்நாட்டுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் ஒலிம்பிக் நடக்கும் பகுதியில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 1976ம் ஆண்டு வடக்கு சீனாவில் 7.5 ரிச்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தில் இரண்டரை லட்சம் பேர் பலியானது குறிப்பிடத்தக்கது

http://isoorya.blogspot.com/

space.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் பலியானோரின் எண்ணிக்கை 11200 ஐ தாண்டுகிறது!

வீரகேசரி இணையம் 5/13/2008 4:48:13 PM - சீனாவின் தென் மேற்கு மத்திய பகுதியில் நேற்று பிற்பகலில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் 11200 க்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கபடும் அதேவேளை,பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் எனவும் அச்சம் வெளியிடபட்டுள்ளது,அத்துடன் இந்த பூகம்ப அதிர்வுகள் ரிச்டர் அளவில் 7.9 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.இதில் அந்த பகுதியின் கட்டிடங்கள் பல நாசமாகியுள்ள அதேவேளை பூகம்ப மையம் சுமார்,100 கீ.மீ. சுற்றளவுக்குள் காணபட்டதாகவும்,தெரிவிக்கபடு

Link to comment
Share on other sites

அப்பாவி சீன மக்களுக்கு தமது ஆட்சியாளர்களின் வெளிவிவகாரக் கொள்கை பற்றித் தெரியாது. தெரிந்தாலும் அதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லை.

அப்படி இருக்க மனிதாபிமானத்தை முன்னுறித்திப் பார்க்க வேண்டிய இவ்விடயத்தில் சீனாவின் வெளிவிவகாரக் கொள்கை அணுகுமுறைகளைப் புகுத்துவது சிறந்ததல்ல..! :lol:

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலைலாமா அவர்கள் தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முன்னுக்குப்பின் முரணாக உளறுகிறார். அது பயங்கர வாத அமைப்பென்றால் ஏன் காட்டிக்கொடுக்கும்வரை அந்த அமைப்பில் இருந்தார்? அதில் அங்கம் வகித்த இவரும் பயங்கரவாதியே. இவரது பயங்கரவாதம் இன்னும் தொடர்கிறதே, அப்படியெனில் புலிகள் இயக்கம் விடுதலைக்காக போராடியது, இது போன்றதுகள் பயங்கரவாதியாக அங்கு இயங்கியிருக்கின்றன அதனாலேயே தண்டனைக்கு பயந்து ஓடி இலங்கை பயங்கரவாதத்தோடு இணைந்து தமது பயங்கரவாதத்தை முன்னெடுக்கின்றன. ஒரு பயங்கரவாத அமைப்பிலிருந்து எப்படி இவரால் விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்திருக்க முடியுமென்பதையும் இவர்தான் விளக்க வேண்டும். 
    • வழக்கமான முட்டுக்கொடுத்தல் இங்கு செல்லாது வழக்கம்போல் கருத்தை எதிர்மறையாக காட்டுவது உங்கள் இயல்பு இது மீராவுக்கு  புரியும் கோசனின் மெயில் ஐடியில் போர்ட்கிள்றது உண்மைகளை சொன்னால் பயந்து ஓடுவது பின் நேரம் கிடைக்கும்போது தலையில் குத்துவது  இது உங்கள் வளமை நான்  எதுக்கும் பயல்வது இல்லை .வெயிட்டிங் ....... உங்கள் ஐடியில்  வந்து ஜெயவாவோ கோசம் போடக்கூடாது இந்த யாழில் அவ்வளவுதான் நான் வருவேன் .
    • ஒரு இனக் குழுமத்திற்கு அரசியக் கட்சியினதோ அல்லது அரசியல்த் தலைமையினதோ தேவையென்ன? அரசியத் தலைமையின்றி அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியாதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், தமிழரசுக்கட்சி இராமனாதனின் கல்லூரியைப் பாதுகாக்கவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறிமா கட்டுவதை எதிர்த்தார்கள் என்று பொய்யான தகவலை இங்கு பரப்புவதால். சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகம் 1974 இல் கட்டப்பட்ட ஆரம்பித்தபோது சுமார் 26 வருடகால இனரீதியிலான அடக்குமுறையினைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆகவே, தமது நலன்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசு செய்யும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியை தமிழர்கள் எதிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தூண்டுதல் தேவையானதா? தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தூண்டியிருக்காவிட்டால் தமிழர்களுக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி தெரிந்திருக்காது என்கிறீர்களா?  தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆளும் சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை கைவிட்டு விட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடுவார்கள், இது தமிழர்களின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்காது போய்விடும் என்பதனாலேயே சிறிமா தமிழர்கள் கேட்ட பல்கலைக்கழகம் ஒன்றை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ஆனால், தமிழர்கள் கேட்டுக்கொண்ட திருகோணமலை பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில்த்தான் கட்டுவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருந்தது. வடக்குத் தமிழரையும் கிழக்குத்தமிழரையும் பிரித்தாளுவதற்காகவே, திருகோணமலையில் கட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் கட்டுவதற்கு அவர் திட்டமிட்டார். அத்துடன், திருகோணமலையினைச் சிங்களவர்கள் முற்றாக ஆக்கிரமிக்கும் திட்டமும் நடைபெற்றுவந்ததனால், அங்கு தமிழர் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதை சிறிமா விரும்பவில்லை.  இராமநாதனின் கல்லூரியின் மாண்பு குறைந்துவிடும் என்பதற்காகவே தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரே மக்களைத் தூண்டிவிட்டு இதனைத் தடுத்தார்கள் என்று கூறுபவர் அதற்கான ஆதாரத்தை இங்கே முன்வைக்கவேண்டும். வெறுமனே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சிறிமாவை வரவேற்ற பழைய ஒளிப்படங்களை வைத்துப் படங்காட்டுவது செல்லாது.  ஏனென்றால், இனவழிப்புச் செய்த மகிந்தவுக்கே திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்ற யாழ்ப்பாணத் தமிழர்களையும் பார்த்திருக்கிறோம். தமிழரசுக் கட்சியினர் மீது வெறுப்பா, செல்வா மீது வெறுப்பா, அல்லது அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல்த் தலைமை மீது வெறுப்பா என்று தெரியவில்லை. இப்போது யாழ்ப்பல்கலைக் கழகம்   தமிழரசுக் கட்சியின் சுயநலத்தால் எதிர்க்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இனி, செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பன குறித்தும் விமர்சனங்கள் வரும். அவையும் தேவையற்றவை, தந்தை செல்வாவின் சுயநலத்தாலும், தமிழரசுக் கட்சியினரின் அரசியலுக்காகவும் செய்யப்பட்டவை என்று கூறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. இதன் முடிவு இப்படித்தான் அமையும். தமிழர்களுக்கென்று போராடுவதற்கான தேவை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறு அமைப்புக்களோ தமது நலன்களுக்காகவே தமிழர்களை உசுப்பேற்றிவிட்டு போராட அனுப்பினார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கென்று, அவர்கள் தாமாகவே உணரத்தக்க பிரச்சினைகள் என்று எதுவுமே சிங்களவர்களால் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை. சிறிமாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் தமிழர்களுக்கென்று பல நல்ல திட்டங்களை அவ்வபோது கொடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு அதனை கேட்டு வாங்கத் தேவையில்லை. இவ்வளவு காலமும் காலத்தை வீணடித்திருக்கிறார்கள். இனிமேலாவது சிங்களவர்களுடன் இணைந்து, எம்மை முன்னேற்றி, இலங்கையர்களாக எம்மை இன‌ங்கண்டு, தனிமனிதர்களாக தக்கவைத்துக்கொள்வோம். இப்படி அறிவுரை கூறும் பரமாத்மாவிற்கு, ஒரு சீடரும் கிடைத்திருக்கிறார். நடக்கட்டும். இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம்.    வரலாற்றைத் தவறாகத் திரிபுபடுத்தும் ஒருவரின் பின்னால் ஓடுகிறீர்கள். இவரது சூட்சுமம் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் கூறுவதுதான் உங்களது கருத்துமா? என்னவோ செய்துவிட்டுப் போங்கள். எல்லாரையும் திருத்த முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. 
    • பெரும்ஸ் @பெருமாள் கடைசியாக சொல்கிறேன். (முன்பும் பல தடவை சொல்லியுள்ளேன்). உண்மையில் ஒரு சகோதரன் போலவே இதை சொல்கிறேன். கருத்துக்களம், திண்ணை இவையிரண்டை தவிர நான் உங்களோடு வேறு எங்கும் தொடர்பு கொண்டதேயில்லை. யாரோ நான் என சொல்லி உங்களை சுற்றுகிறார்கள். அதை அப்படியே விட்டு விடுங்கள். இப்படி செய்பவர்களுக்கு - தயவு செய்து இந்த கறுமத்தை செய்யாதீர்கள்.  இது உண்மையிலேயே ஒரு வகை cyber bullying. உங்களுக்கு இது விளையாட்டாக இருக்கலாம். அவருக்கு அப்படி இல்லை. ————— பெருமாள் - அனைவரினதும் நன்மைக்காக உங்களை கொஞ்ச காலம் எனது இக்னோர் லிஸ்டில் சேர்க்கப்போகிறேன்.  மிகுந்த மன வருத்தத்துடன் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இது தற்காலிகமானது என நம்புகிறேன். உங்களை சீண்டி விளையாடுவது நான் இல்லை என்பதை விளங்கப்படுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் உங்களோடு கருத்தே பரிமாறாமல் இருக்க, தொடர்ந்தும் உங்களை யாராவது நான் என சொல்லி சீண்டினால் - அது நானாக இருக்க வாய்ப்பில்லை என புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.