Jump to content

ஷார்ள் போதலயர் - பிரஞ்சு எழுத்தாளர். (வாசுதேவன்)


Recommended Posts

Voracious in my appetite for the uncertain and unknown, I do not whine for paradise as Ovid did,

expelled from Rome .-Baudelaire.

சபிக்கப்பட்ட கவிஞன் ஷார்;ஸ் போதலயர்.

'புல்லின் இதழ்கள்' (Leaves of grace) என்ற தலையங்கம் எவ்வாறு வோல்ட் விற்மனை உடனடியாக நினைவுக்குக் கொண்டுவருகிறதோ , அவ்வாறே 'துன்பத்தின் பூக்கள்' (Fleurs du mal) என்று கூறியவுடன் ஷார்ல் போதலயர் என்ற நாமம் ஞாபகத்தின் மேற்பரப்பில் மிதக்கவாரம்பிக்கிறது.

ஏழு வயதில் தந்தையை இழந்து, தாயே தன் பிரபஞ்சமென்று அடங்காத பாசங்கொண்டு வாழ்ந்த சிறுவன் ஷார்ல் அவளின் இரண்டாந்தாரத் திருமணத்தின் போது தான் இரண்டாந்தரம் அனாதையாக்கப்பட்டதாக உணர்கிறான். தனக்கும் தாய்க்குமான பிரத்தியேகப் பாச உறவில் வேறொரு உறவு புகுந்து தன்னை வெளியேற்றிவிட்டதாக உணர்ந்து வேதனைப்படுகிறான். இருப்பினும், இளவயதிலேயே தந்தையை இழந்த தாயின் புதியவாழ்க்கையிலான மகிழ்ச்சி அவனுக்குத் திருப்தியை அளிக்கிறது. தனது புதிய தந்தையுடன் ஓரளவான சுமூக உறவையும்பேணிக்கொள்கிறான்.

ஏதாவது ஒரு நாட்டின் தூதுவராலய ராஜதந்திரியாக வருவதற்கு நீ கல்வி கற்க வேண்டும் என்று தாய் கூறினாள். அவளின் கணவனான இராணுவ அதிகாரி இராணுவத்தில் சேர்ந்து கொண்டு பெரிய பதவியை அடையவேண்டும் என வற்புறுத்தினார். ஆனால் ஷரர்ல் போதலயர் தான் ஒரு எழுத்தாளனாக வரவேண்டும் எனத் திடமாக உறுதி பூண்டிருந்தான். எல்லோரினதும் தொல்லை தாங்காது இறுதியில் சட்டப் படிப்பைத் தொடர்வதற்குச் சம்மதம் தெரிவித்தபோதும் கவித்துவப் பூரணத்தைக் கண்டடைவதையே அவன் மனம் இலக்காக் கொண்டிருந்தது.

விக்டர் ஹிகோவின் நாடகமொன்றைப் பார்த்த புளகாங்கிதத்தில், அவருக்குத் திறந்த மடையாக சிறிய வயதில் போதலயர் எழுதிய கடிதமே அவனின் துணிவையும், இலக்கியத் திறனையும் வெளிப்படுத்தப் போதுமானது.

அழகற்ற யூதச் சிறுமி ஒருத்தியுடன் விபச்சார உறவில் (முதலுடலுறபனுபவம்) ஈடுபட்டு நோயையும் உள்வாங்கிய இளைஞன் ஷார்ல் தன்னை அந்நோயிலிருந்து கடினமாகவே விடுவித்துக்கொள்கிறான்.

இளவயதிலேயே உலகத்தால் வெறுப்படைந்த போதலயர் அபத்த உலகை மறப்பதற்காய் தன்னை வாசிப்புப் பழக்கத்தில் ஈடுபடுத்திக்கொண்டான். "இவ்வுலகின் வஞ்சகங்களையும், அழுக்குகளையும் மறப்பதற்காய் வீர்ஜலை வாசிக்கப்போகிறேன்" என்று கடிதமொன்றில் தன் சகோதரனுக்குக் குறிப்பிட்டிருக்கிறான்.

இளைஞனான காலத்தில், ஹொஸ்டலில் சேர்க்கப்பட்ட போதலயருக்குக் கூடாத கூட்டுகளும் கட்டற்ற வாழ்வும் கடன்தொல்லைகளை உருவாக்குகின்றன. சகோதரனின் உதவி ஓரளவு கிடைத்தபோதும் நிலை மிகவும் சங்கடத்திற்குள்ளானது.

"உனது கூட்டாளிகள் உன்னைப் பெண்களிடத்தில் கூட்டிச் சென்றார்கள். நீ ஒழுக்கமற்ற வாழ்வை மேற்கொண்டாய். அப்பெண்களுக்கு உணவும் உடையும் தேவையானவையும் வழங்குவதற்காய் உன் பணத்தைக் கண்டபடியெல்லாம் செலவளித்துக் கொண்டாய். கடனாளியானாய். எதிர்பார்ப்புகளை வழங்கிய குழந்தையாகவிருந்த உன்னை நீயே ஒரு கட்டற்ற ஆடவனாக்கினாய். சமூக விதிகளை உடைத்தெறிந்து, அதனுடடான கட்டுக்களை அவிழ்த்தெறிந்து, வாழ்க்கை பற்றிய பார்வையை வித்தியாசமாகக் கொண்டிருந்த வயதில் அதிகமானோரையும் மதிக்காது, ஒருநாள் வாழ்வை உண்மையென நம்பி, மறுநாட்களை மறந்து வாழ்ந்தாய்... " எனச் சகோதரன் போதலயருக்கு எழுதிய கடித வரிகள் நிலைமையைத் தெளிவுற விபரிக்கின்றன.

செய்தியைக் கேள்வியுற்ற வளர்ப்புத் தந்தை "வழுக்கல் நிறைந்த பாரிஸின் வீதிகளை" விட்டுத் தன் வளர்ப்பு மகனைக் காப்பாற்று முகமாக எங்காவது நீண்ட பயணமொன்றிற்கு போதலயரை அனுப்பி வைக்கத்திட்டமிட, ஒரு வருடம் நீடிக்கக்கூடிய இந்தியப் பயணமொன்றிற்கு போதலயர் அரைமனத்துடன் கப்பலேறினான். கப்பல் வாழ்கைமுறைகளுக்கு அடங்கி நடக்காதபோதும், தன்கடமையைச் சரிவரச் செய்யவேண்டுமென்ற நோக்கில் கப்ரன் இவ்விளைஞனை அக்கறையுடன் பராமரித்த போதும் , றெயூனியோன் தீவில் பயணத்தை இடைநிறுத்தி தான் மீண்டும் பிரான்ஸிற்குப் போகும் இன்னொரு கப்பலில் ஏறுகிறான் இருபது வயதான இளைஞன் போதலயர். கல்கத்தா வரையும் செல்ல வேண்டிய பயணம் அரைவழியில் முடிந்துவிடுகின்றது.

தந்தைவழியால் உரித்தான தனது பங்குச் சொத்தைப் பெற்றுக்கொண்டு, குடும்பத்திடமிருந்து பிரிந்து தனியான வாழ்வை ஆரம்பிக்கும் போதலயரின் செலவுகள் கட்டுக்கடங்காது, காணிகளையும் விற்று அனைத்தையும் தொலைத்துவிட்டு மீண்டும் பரதேசியாகும் நிலைக்கு போதலயர் தள்ளப்படுகிறான். தாய், வளர்ப்புத் தந்தை, சகோதரன் எல்லோருமாக வழங்கிய ஆலோசனைகள் ஏதும் பலனற்றுப் போய் குடும்பத்துடனான முறிவு உருவாகுகின்றது. சட்ட ரீதியாக இவரின் பணநலன்களைக் கவனிக்கும் முறையில் இவரது குடும்பத்தினால் இவருக்குச் சட்டக் கட்டுப்பாடுடடான பரிபாலனம் உருவாக்கப்படுகின்றது. இவரின் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் மேற்பார்வைக்குள்ளாக்கப்படு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.