Jump to content

கார் விபத்துகளை தடுக்க புதிய தொழில்நுட்பம்.


Recommended Posts

கார் விபத்துகளை தடுக்க புதிய தொழில்நுட்பம்.

கார் விபத்துகளை தடுக்க எச்சரிக்கை விடுக்கும் கேஸ் பெடல் ஒன்றை சில கார்களில் நிஸ்ஸான் அறிமுகப்படுத்தவுள்ளது.

அதாவது ஏதோ ஒன்றுடன் கார் மோதும் நிலை ஏற்படும்போது இந்த கேஸ் பெடல் சற்றே தன்னை தூக்கிக் கொள்ளும். இந்த எச்சரிக்கையை உணர்ந்து ஓட்டுனர்கள் ஆக்சிலேட்டரிலிருந்து காலை எடுத்து விட்டால் கார் தானாகவே நின்று விடும்.

ராடார் உணர் கொம்புகள் (Sensors) மற்றும் கணினி இணைந்த இந்த தொழில்நுட்பம் காரின் வேகம் மற்றும் முன்னால் செல்லும் அல்லது வரும் வாகனத்தின் தூரம் ஆகியவற்றை கணித்து விடும் என்று நிஸ்ஸான் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் கொண்ட கார்கள் இந்த ஆண்டு முதல் ஜப்பானிலும் அடுத்த ஆண்டில் அமெரிக்காவிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று அந்த நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது.

நம் பழக்கும் ஒரு விலங்கு போல் சாலையின் ஆபத்துகளை இது முன் கூட்டியே நமக்கு அறிவித்து விடும். மனிதனும் எந்திரமும் சேர்ந்து பணியாற்றி அபாயத்தை தடுத்துக் கொள்ளலாம் என்று நிஸ்ஸானின் மூத்த மேலாளர் யூசுகே அகட்சு தெரிவித்துள்ளார்.

அதாவது ஒருவர் குதிரையில் பயணம் செய்வது போல்தான் இது... குதிரையின் கட்டுப்பாடு நம் கையில் இருப்பதுபோல் இதில் எந்திரத்தின் கட்டுப்பாட்டில் நாம்... என்று அவர் மேலும் இதனை விரிவுபடுத்தினார்.

கேஸ் பெடலிலிருந்து ஓட்டுனர்கள் காலை எடுத்தவுடன் பிரேக்குகள் தானாகவே வேலை செய்து காரை நிறுத்தி விடும். ஆனால் எச்சரிக்கையை உணராமல் காலை ஆக்சிலேட்டரிலேயே வைத்திருந்தால் கார் போய்க்கொண்டுதான் இருக்கும்.

மது அருந்தி விட்டு வண்டி ஓட்டுகிறீர்களா... இதோ வருகிறது எச்சரிக்கை!

காரில் உள்ள கியரில் பொருத்தப்பட்டுள்ள உணர்கொம்புகள் ஓட்டுனரின் வியர்வையிலிருந்து அவர் குடித்திருக்கும் மதுவின் அளவை கணக்கிட்டு விடும் அதிசய தொழில்நுட்பம் ஒன்றையும் பரிசோதனை முயற்சியாக நிஸ்ஸான் செய்துள்ளது.

அதாவது குறிப்பிட்ட அளவிற்கு மேல் மது அருந்தியிருந்தீர்கள் என்றால் காரின் எஞ்சின் நிற்காது அவ்வளவுதான். மற்றபடி மின் குரல் ஒன்று வந்து உங்களை எச்சரிக்கை செய்து கொண்டிருக்கும்.

ஏனெனில் நம் நாட்டில் மட்டுமல்ல ஜப்பானிலும் குடித்து விட்டு வண்டி ஓட்டுவது என்பது தினசரி நடவடிக்கையாக மாறியுள்ளது. இதனால் ஜப்பானில் கடந்த ஆண்டு சுமார் 611 விபத்துகள் நடந்துள்ளதாக நிஸ்ஸான் கூறுகிறது.

மேலும் ஓட்டுனர் வண்டியை தடம் மாற்றி தட்டுத் தடுமாறி ஓட்டுகிறாரா, ஓட்டுனர் குடித்திருக்கிறாரா அல்லது போதையில் ஓட்டுகிறாரா என்பதை கணினி மயமாக்கப்பட்ட காமிரா ஒளி மூலமாக காட்டி விடும்.

இது போன்ற கண்காணிப்புகள் நிறைந்த தொழில்நுட்பம் கொண்ட ஒரு காரை மக்கள் பொதுவாக விரும்ப மாட்டார்கள்தான்... எனினும் டெலிவரி டிரக்குகள், டாக்சி கேப்கள் ஆகியவற்றை நிர்வகிக்க இத்தகைய தொழில்நுட்பங்கள் அத்தியாவசியம் என்பதை உணர்ந்திருக்கின்றனர் என்று நிஸ்ஸான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில் முக்கியமான அதிக பாதுகாப்பான ஒரு விஷயம் என்னவென்றால், பெரும்பாலான விபத்துகள் தடம் மாறுவதால் ஏற்படுவதே. ஆனால் இது புதிய தொழில்நுட்ப வாகனங்கள் தடம் மாறினாலும் மீண்டும் நேரான தடத்திற்கு தானாகவே வந்து விடும். இந்த தட தொழில்நுட்பம் அமெரிக்காவில் இன்ஃபினிடி எக்ஸ் லக்சுரி மாடல் கார்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதே போல் நடந்து செல்பவர்களின் மேல் கார் இடித்து விடும் பட்சத்தில் பம்பரில் பொருத்தப்பட்டுள்ள உணர்கொம்புகள் எஞ்சின் மூடியை லேசாக தூக்கி அவருக்கு தீவிரமாக அடிபடாமல் காக்கிறது.

ஸ்போர்ட்ஸ் மாடல் கார்களில் எஞ்சின் மூடிக்கும் எஞ்ஜினுக்குமான இடைவெளி மிகக்குறைவாக இருக்கும். இம்மாதிரி கார்களில் அடிபடும்போது காயங்கள் தீவிரமாக ஏற்படுகிறது. எனவே மூடி லேசாக தூக்குவதன் மூலம் எச்சரிக்கை விடுத்து அடிபடுபவர் பெருமளவு காயம் ஏற்படாமல் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது.

இதுபோன்ற வசதி தற்போது ஃபோர்டின் ஜாகுவார் மற்றும் ஹோன்டா கார்களில் உள்ளது. ஜப்பானில் இது இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று நிஸ்ஸான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏனெனில் நம் நாட்டில் மட்டுமல்ல ஜப்பானிலும் குடித்து விட்டு வண்டி ஓட்டுவது என்பது தினசரி நடவடிக்கையாக மாறியுள்ளது. இதனால் ஜப்பானில் கடந்த ஆண்டு சுமார் 611 விபத்துகள் நடந்துள்ளதாக நிஸ்ஸான் கூறுகிறது.

மேலும் ஓட்டுனர் வண்டியை தடம் மாற்றி தட்டுத் தடுமாறி ஓட்டுகிறாரா, ஓட்டுனர் குடித்திருக்கிறாரா அல்லது போதையில் ஓட்டுகிறாரா என்பதை கணினி மயமாக்கப்பட்ட காமிரா ஒளி மூலமாக காட்டி விடும்.

இது போன்ற கண்காணிப்புகள் நிறைந்த தொழில்நுட்பம் கொண்ட ஒரு காரை மக்கள் பொதுவாக விரும்ப மாட்டார்கள்தான்... எனினும் டெலிவரி டிரக்குகள், டாக்சி கேப்கள் ஆகியவற்றை நிர்வகிக்க இத்தகைய தொழில்நுட்பங்கள் அத்தியாவசியம் என்பதை உணர்ந்திருக்கின்றனர் என்று நிஸ்ஸான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில் முக்கியமான அதிக பாதுகாப்பான ஒரு விஷயம் என்னவென்றால், பெரும்பாலான விபத்துகள் தடம் மாறுவதால் ஏற்படுவதே. ஆனால் இது புதிய தொழில்நுட்ப வாகனங்கள் தடம் மாறினாலும் மீண்டும் நேரான தடத்திற்கு தானாகவே வந்து விடும். இந்த தட தொழில்நுட்பம் அமெரிக்காவில் இன்ஃபினிடி எக்ஸ் லக்சுரி மாடல் கார்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதே போல் நடந்து செல்பவர்களின் மேல் கார் இடித்து விடும் பட்சத்தில் பம்பரில் பொருத்தப்பட்டுள்ள உணர்கொம்புகள் எஞ்சின் மூடியை லேசாக தூக்கி அவருக்கு தீவிரமாக அடிபடாமல் காக்கிறது.

ஸ்போர்ட்ஸ் மாடல் கார்களில் எஞ்சின் மூடிக்கும் எஞ்ஜினுக்குமான இடைவெளி மிகக்குறைவாக இருக்கும். இம்மாதிரி கார்களில் அடிபடும்போது காயங்கள் தீவிரமாக ஏற்படுகிறது. எனவே மூடி லேசாக தூக்குவதன் மூலம் எச்சரிக்கை விடுத்து அடிபடுபவர் பெருமளவு காயம் ஏற்படாமல் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது.

இதுபோன்ற வசதி தற்போது ஃபோர்டின் ஜாகுவார் மற்றும் ஹோன்டா கார்களில் உள்ளது. ஜப்பானில் இது இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று நிஸ்ஸான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

http://www.tamilflame.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.