Jump to content

ஊருக்குப் போனேன் - 3 - வாசுதேவன்.


Recommended Posts

ஊருக்குப் போனேன்- பாகம் 3.

வாளியில் முகர்ந்திருந்த தண்ணீரில் முகத்தைக் கழுவவும் , இருளில் நின்ற பசுவில் எல்லை கெட்ட நேரத்தில் கறந்து காய்ச்சிய பால் கைக்கெட்டியது. அம்மாவின் கையால் சமைத்ததினால் அறுசுவைபெற்ற உணவை உண்டதும் ஆறுதல் உண்டாகியது.

தூய இருளில் நட்சத்திரங்கள் கவிந்த வானம் முன்னைய நாட்களை முன் நிறுத்தி மாய வித்தை காட்டியது. மணிக்கணக்கில் சலிப்பின்றிப் பார்த்தவாறே நட்சத்திரங்களை விசாரம் செய்யும் இளமைக்காலப் பொழுதுகள் ஐரோப்பிய வெளிச்சம் நிறைந்த நகர இரவுகளில் காணக்கிடைப்பதில்லை. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செய்த பயணமல்ல இது, ஒரு பிரபஞ்சத்திலிருந்து இன்னொரு பிரபஞ்சத்திற்கு நடத்திய பாய்ச்சல் என உள்மனம் கூறியது.

ஒரு லாம்பின் உருண்ட கண்ணாடிச் சுவரின் மத்தியில் மண்ணெண்ணை உயிரூட்ட மயங்கி மிளிர்ந்த சுவாலையொன்று முகங்களை ஒளியூட்டும் முயற்சியில் வெற்றிபெற, சுற்றிவர இருந்த உறவுகள் கேள்விக் கணைதொடுக்க, நான் ஒரு சாய்மனையில் சரிந்தவாறே கதை சொல்லியானேன். பதினெட்டு வருடமாகப் பார்த்த படக் கதை. கனவுகளில் வாழ்ந்த கதைகளைப் புனைவுகளாய் எண்ணிப் புகன்றவாறே பொழுது போவதை மறந்தபோது தூக்கம் அழைத்தது.

நிசப்த வெண்மையில் வீழும் துல்லியமான கருங்கோடுகளாக கதை சொல்லியானது என் குரல். இப்போது மீண்டும் நான் ஊஞ்சல் ஆட ஆரம்பித்தேன். என் கதையை எனக்கே கூறி அங்கும் இங்கும் என ஆடும் கலை. அற்புதமான ஊஞ்சற் கலை. பிரபஞ்சம் முழுவதிலுமே என் குரல் மட்டும்தான் ஒலித்துக்கொண்டிருக்கிறதோ எனப் பிரமைகொள்வதைத் தடுக்கு முகமாய் அவ்வப்போ நாய்கள் குரைத்தன. 'நான்' எனும் புiனைவை நான் கதைப்பொருளாக்கிப் புளகாங்கிதம் கொண்டேன். கதை சொல்வதில் கதை சொல்லியைத் தவிர அதிகம் இன்புறுபவர்கள் வேறு யாருமிலை.

நிசப்தமான காரிருளிற் புதைந்து கிடந்த கிராமத்தின் இரவுக்காவலர்களான நாய்களின் இடையிடையேயான குரைப்புகள் ஐரோப்பாவின் மிகச் சிறந்த இசைவாணனின் மிகச் சிறந்த இரவிசைத் தொகுப்பிலும் இனியதாயிருந்தது.

துருதுருவென இருந்த உள்ளத்தையும் மீறி உடல் அமைதி வேண்டியது. தூக்கம் இமைகளைச் சாத்தியது. இதமான கட்டிலுக்குப் பழக்கப்பட்டுவிட்ட உடல் கடின நிலத்தில் விரிக்கப்பட்ட பாயுடன் சற்று முரண்பட்ட போதும் களைப்பு மிகுதி தூக்கத்தை இலகுவில் அழைத்து வந்தது.

நுளம்பின் ரீங்காரத்தையும், இரவாயினும் உயர்ந்த வெப்பநிலையையும் மீறி உறக்கம் கொண்ட போதும், அதிகாலை நான்கு மணியளவில் வெடிச்சத்தங்கள் விழிப்பைக் கொண்டு வந்தன. வடக்கு வெளியில் இடையிடையே இராணுவதினர் அதிகாலைப் பயிற்சி எடுக்கிறார்கள் என அம்மா விடயம் கூறினார். போர்க்கால வாழ்வின் சுமை, போர்ச் சூழலின், யுத்த பிரதேசத்தின் அனுபவம் முதன்முதலாக அண்மித்துக் கிடந்தது.

சிறிது நேரத்தில் சேவல்கள் கூவி ஆதவனை அழைத்தன. அதிகாலை இளங்கதிர்கள் தென்னைகளையும், பனைகளையும், பூவரசுகளையும் மற்றும் அனைத்துப் பசுமைகளையும் மிளிரவைத்தன. வாயிற்படியில் குந்தியிருந்து ரம்மியமான இக்காட்சியைக் கண்ணுற்றபோது பல்லாண்டுகால ஏக்கங்கள் என்னில் தணிந்து போவது தெரிந்தது. மரவெள்ளி மரங்களுக்கிடையே கிடந்த குப்பைகளைக் கிளறிக் கோழிகள் அதிகாலையிலே புழுப்பூச்சி வேட்டையை ஆரம்பித்திருந்தன.

கிணற்றின் தண்ணீர் மட்டம் இன்னமும் மேலேதான் நின்றது. வாளியைத் தூக்கியெறிந்து லாவகமாகத் தண்ணீரை மொண்டு தலையில் கொட்டியபோது உடல் ஒரு கணம் உலுப்பப்பட்டது. ஆடையுடன் குளிப்பது அந்நியமாகவும், விசித்திரமாகவும், கடினமாகவும் பட்டது.

உறவுகளும், அயலவர்களும் ஒன்றுகூடிக் குசலம் விசாரித்தார்கள். "வயது போனது பெரிதாகத் தெரியவில்லை.", "பெடி இருந்தது போலதான் இருக்குது." "எவ்வளவுகாலம் நிப்பியள் ?", "ஏன் குடும்பத்துடன் வரவில்லை ?" , "ப்ரான்ஸில இனவாதமிருக்காமே!", "எங்கட ஆக்களெல்லாம் அங்க நல்லாயிருக்கினமோ ?" , எனவெல்லாம் பல கேள்விகள் தொடர்ந்து வந்தவண்ணமாகவேயிருந்தன. முடிந்தளவு பதில்களைக் கூறிவிட்டுத் துறையூருக்கு மீன் வாங்கப் புறப்பட்டு விட்டேன்.

இன்னமும் ஒடக்கூடிய நிலையிலிருந்த, இரவலாகப் பெற்ற ஒரு துவிச்சக்கர வண்டி என் துணைவனானதும் என் பயணம் ஆரம்பமாகியது. வங்களாவடிச் சந்தி, பஸ்கொம்பனியடி எல்லாவற்றையும தாண்டி துவிச்சக்கரம் என்னை தூக்கிச் சென்று தவறணையைத் தாண்டி மீன் வாங்கும் இடத்திற்குக் கொண்டு வந்து விட்டது. ரூபாவில் மீன் மிக மிக மலிவாக இருந்தது.

மதிய உணவை அருந்திவிட்டு, சுட்டெரிக்கும் வெய்யிலில் என் துவிச்சக்கரத்துடன் புறப்பட்டேன். முன்னரிருந்திராத புதிய பாதைக@டாகப் பயணம் செய்து இடங்களை அடையாளப்படுத்தி நுண்விபரங்களுக்குப் பரிச்சயப்படுவது இலகுவாக இருக்கவில்லை. பண்படுத்தப்பட்ட முன்னைநாட் தெருக்கள் பல சுவடிழந்து வெறும் பாதைகளாக இருந்தன. மத்திய பாடசாலையிலிருந்து மயிலப்புலம் வரையும் செல்லும் தெரு கோலமிழந்து கிடந்தது.

சீருடையின்றித் திரியும் இராணுவத்தினரின் தோள்களிலும் துப்பாக்கி தொங்கியது. தேசம் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கிறதென்பதை இடையறாது உணர்த்தியது இராணுவப் போக்கு வரத்துகள். சிங்களச் சிப்பாய்கள் எம் நிலத்தைத் தம் நிலமெனக் கருதி அங்கு வாழ்வதுபோல் பட்டது. கிராமத்தின் ஒரேயொரு பேக்கரியும் அவர்கள் வசமேயிருந்தது. நட்டநடுத் தெருவில் கூட சிலவேளைகளில் அவர்கள் பயிற்சி பெற்றவண்ணமிருந்தார்கள். கோவில் வீதிகளில் பெருத்த கோசத்துடன் உடலை முறித்துக்கொண்டிருந்தார்கள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

;இடைவிடாது தொடர்ந்து எழுதினால் தொடர்ச்சியாக வாசிக்க உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்...

Link to comment
Share on other sites

இன்னமும் ஒரு இறுதிப் பகுதி மாத்திரமேயுள்ளது. விரைவில் பதிவு செய்வேன். கருத்திற்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

;இடைவிடாது தொடர்ந்து எழுதினால் தொடர்ச்சியாக வாசிக்க உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்...

அது ஒண்டுமில்லை தமிழ் தொடர் நாடகங்கள் பார்த்த பழக்க தோசமாய் இருக்கும். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பழக்கப்பட்ட விசயங்கள்ளயிருந்து விடுபடுற எண்ணடா என்ன இலகுவான காரியமே சாத்திரி ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.   கை காட்டலும் தொடரும்🤣
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.