Jump to content

நினைவழியா நாட்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நினைவழியா நாட்கள்

அந்த விடிகாலைப் பொழுதின் அமைதியைக் குலைத்தபடி விமானச் சத்தங்கள் காதைப் பிளந்தன. அதிகாலைப் பொழுதில் ஏற்பட்ட இந்த நிலையால் அரைத் தூக்கத்தில் எழுந்த எமக்கு என்ன செய்வது? எதை எடுப்பது? ஓடுவதா? அல்லது பங்கருக்குள் ஒளிவதா? எதையும் சிந்தித்துச் செயலாற்ற சந்தர்ப்பம் இதுவல்ல. கையிலகப்பட்ட ஒன்றிரண்டு உணவுப் பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு வீதிக்கு விரைந்தோம். வீதியெங்கும் மக்கள் தம் உயிரைக் காக்க ஓடிக் கொண்டிருந்தனர். இடைக்கிடை குத்திட்ட விமானங்களிலிருந்து குண்டுமழை பொழியும் போது குப்புறப் படுத்து விழுந்து எழும்பி ஓடிக்கொண்டிருந்தோம். எப்படியோ பக்கத்துக் கிராமத்திலிருந்த ஓர் ஆலயத்தை அண்மித்து அதற்குள் அடைக்கலமாகிக் கொண்டோம். அன்றுமுதல் ஆலயம் அகதிமுகாமாகியது. ஆலயத்துக்குள் அடைபட்டோம் பட்டிகளாய்.

ஆலய வளவெங்கும் மனித வெள்ளம். அடுத்து என்ன செய்வது? என்னத்தை உண்பது? பசியால் அழும் குழந்தைகளுக்கு எப்படி உணவளிப்பது? காலைக் கடன்களை எப்படி முடிப்பது? இப்படி எத்தனையோ விடைகாண முடியாத கேள்விகள் முகத்தில் தொக்கி நிற்க ஓர் மூலையைப் பிடித்து உட்கார்ந்தோம். போர் விமானங்கள் அங்குமிங்குமாக வட்டமிட்டு வான வெளியில்தமது சாகசங்களை காட்டிக் கொண்டிருந்தன. குண்டுச் சத்தங்கள் காதைப் பிளந்தன. செல் வீச்சுக்கள் விண்கூவிக்கொண்டு பறந்தன. எங்கும் மாதாவே முருகா பிள்ளையாரே யேசுவே என்று அவரவர் தெய்வங்களை துணைக்கழைக்கும் கூக்குரல்.

;

நண்பகல்வரை போர்ச் சூழலில் புதையுண்டு பசி தாகம் மறந்து சாதி சமய வேறுபாடுகள் களைந்து சமரசம் உலாவும் இடமாக ஆலயமும் அதன் சுற்றாடலும் காட்சியளித்தது. எம் மக்களின் மனங்களைப் புரட்டிப் போட இப்படியான நிகழ்வுகளும் அவசியந்தானோ? திடீரென்று குத்திட்ட விமானத்தின் குண்டுவீச்சு ஆலயத்தின் ஒரு பகுதியில் விழுந்து வெடித்துச் சிதறியது. ஏங்கும் அவல ஓலங்கள். இனிமேலும் ஆலயத்துள் இருப்பது பாதுகாப்பில்லை என்ற முடிவில் வெளியேற விரும்பினோம். ஆனால் காயப்பட்டவர்களின் கூக்குரலும் உறவினர்களின் ஓலங்களும் அங்கு ஒரு பிரளயமே உருவாகிவிட்ட பிரமை. இனியும் எம் உயிர் பிழைக்குமா?

இனிமேலும் இங்கிருப்பது பாதுகாப்பில்லை. எங்காவது அடுத்த கிராமத்திலுள்ள வீடுகளில் ஒதுங்கினால் கஞ்சி குடிக்கவாவது வழி கிடைக்கும் என்ற தீர்மானத்துடன் எமது பெற்றோர் சகோதரர்கள் சில உறவினர்கள் தத்தமது குடும்பங்களுடன் ஆலயத்தை விட்டுப் புறப்பட்டோம். நடந்து நடந்து காலும் வலித்தது. எல்லோர் முகங்களும் பசியினால் சோர்ந்து பயத்தினால் மிரண்டுபோய் இருந்தது. கையிலிருக்கும் சிறிது தேயிலையும் சீனியும் எம் வயிற்றுக்கு ஒரு தேனீராவது குடிக்க வைக்க உதவும் என்ற நம்பிக்கை. அதற்கும் சுடு நீர் தேவை. ஒரு வீட்டின் படலையைத் தட்டினோம். ஆங்கு ஒரு குடும்பம் பயத்தில் முடங்கி இருந்தனர். அவர்களிடம் சம்மதம் பெற்று ஒரு பானையும் கரண்டியும் வாங்கி தேனீர் தயாரிக்க தண்ணீரைக் கொதிக்க வைத்தோம். நீர் கொதிக்கும்வரை எமது வயிறும் கொதித்துக் கொண்டிருந்தது. ஒருவழியாக கையிலிருந்த சீனியை மருந்து போல் பாவித்து தேனீரைக் குடித்து முடித்தோம். சிறிது களைப்பு நீங்க மீண்டும் எம் நடைப்பயணம் ஆரம்பமாகியது.

இரவுமகள் தன் இருளாடையை அணியத் தொடங்கினாள். வீதியெங்கும் ஒரே மனித வெள்ளம். ஓர் அம்மன் கோவிலும் அதன் முன் ஓர் அரச மரமும் சுற்றி சீமேந்து வாங்கும் கண்ணில்பட சற்று இளைப்பாற எண்ணி வாங்கில் அமர்ந்தோம். முக்கள் எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் அங்கிருந்து இங்கும் இங்கிருந்து அங்குமாக போய்க் கொண்டும் வந்துகொண்டும் இருந்தனர். சிலரின் தலையில் மூட்டை முடிச்சுக்கள். சிலரது ஈருருளிகளில் கட்டப்பட்ட பொதிகள். சிலர் மாட்டு வண்டிகளிலும் போய்க் கொண்டிருந்தனர். சிலரது கையில் கயிற்றுடன் ஆடு சங்கிலியுடன் நாய் இப்படி பலதரப்பட்ட மக்கள் வெள்ளம். ஏங்கும் இருள் சூழ்ந்தது. தூரத்தில் சூட்டுச் சத்தங்களும் உலங்கு வானூர்திகளின் இரைச்சல்களும் இடையிடையே எமக்குப் பயமூட்டிக்கொண்டிருந்தன.

குழந்தைகள் பசியால் துவண்டுபோய் களைப்புடன் காணப்பட்டனர். தூரத்தில் “மினுக் மினுக்” என்ற ஓர் வெளிச்சம் எமக்கு உயிரூட்டியது. ஓளிவந்த திசை நோக்கி எமது பயணம் தொடர்ந்தது. வெளிச்சம் நெருங்க நெருங்க அது ஒரு பெரிய வீடு என்று அனுமானிக்க முடிந்தது. மெதுவாக வீட்டின் கேற்றைத்தட்டி ஒவி எழுப்பினோம். ஏம்மை நோக்கி ஒரு முதியவர் கையில் ஏந்திய அரிக்கன் விளக்குடன் வந்தார். வுந்தவர் விளக்கைத் தூக்கிப் பிடித்து எம்மை ஆராய்ந்தார். நாம் மிகவும் கனிவான குரலில் “நாங்கள் நல்லாக் களைத்துப் போயிற்றம். இன்றிரவு தங்க கொஞ்சம் இடம்தருவீங்களோ” என்று மனதுருகும் குரலில் கேட்டோம். அவரோ “இண்டைக்கு எங்கட வீடு நிறைய சொந்தக்காரர் இடம் பெயர்ந்து வந்த சனம் எண்டு 35-40 பேருக்கு மேல இருக்கினம். வேளியில புகையிலைக் கொட்டிலும் ஒரு இறக்கமும் இருக்கு விருப்பமெண்டால் அதில தங்கலாம்.” ஏன்று பெரிய மனதுடன் சொன்னார். ஏமக்கிருந்த பசியும் களைப்பும் எங்காவது ஒதுங்கினால் போதும் என்றிருந்தது. அந்தப் பெரியவரோ எமக்கு மிகவம் கருணையுடன் ஒரு பெரிய படங்குச் சாக்கும் ஒரு கைவிளக்கும் தந்து உதவினார்.

அன்றிரவு முழுவதும் ஒரே குண்டுச்சத்தங்களும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் காதைப் பிளந்தன. ஊடல் அசதியினால் அனைவரும் படங்குச் சாக்கினுள் முடங்கிக் கிடந்தோம். பொழுது புலரத் தொடங்கியது. எமது வயிறும் புகையத் தொடங்கியது. இனியும் பசி பொறுக்க முடியாது. வயிறு கெஞ்சியது. திடீரென்று பக்கத்தில் “பொத்” என்ற சத்தம். பனைமரம் எம் பசியறிந்து தன் பழத்தை உதிர்த்திருந்தது. குழந்தைகள் ஓடிச் சென்று பனம்பழத்தை உரித்து பசியாறத் தொடங்கினர். அடுத்ததாக நாம் பசியாற ஏதாவது உணவ தேடவேண்டும். நேற்று முதல் காய்ந்த வயிறு முதலில் தன்னைக் கவனிக்கும்படி அழைப்பு விடுத்தது. எனது தாயார் வீட்டுக்காரபிடம் விசாரித்து சிறிது தொலைவிலுள்ள வீட்டிலிருக்கும் பெட்டிக்கடை நோக்கி நடக்கத் தொடங்கினார். நிச்சயம் இன்று கடை திறந்திருக்க மாட்டார்கள். இருந்தும் வீட்டில் உள்ளவர்களிடம் எமது நிலையைச் சொல்லி ஏதாவது கேட்கலாம் என்ற நப்பாசைதான்.

சிறிது நேரத்தில் திரும்பிய அம்மாவின் கையில் சில பொருட்கள் இருந்தன. வீட்டுக்காரரிடம் ஒரு பானையும் கரண்டியும் இரவலாகப் பெற்றுக்கொண்டோம். மூன்று கல்லை வைத்து பனைஓலை மட்டை பன்னாடை முதலியவற்றைச் சேகரித்து கஞ்சி தயாரிக்கத்; தொடங்கினோம். ஆதற்கும் வந்தது இடைஞ்சல். அடுப்பிலிருந்து எழுந்த புகையைப் கண்டதும் உலங்கு வானூர்தி ஒன்று வட்டமிடத் தொடங்கியது. வானூர்தி வட்டமிடும் நேரங்களில் பலமுறை அடுப்பு அணைத்து அணைத்து அனல் மூட்டப்பட்டது. ஊவ்வொருமுறை அடுப்பு அணைக்கப்படும் பொழுதும் எம் வயிற்றில் அல்லவா அனல் எழும்பியது. ஒருபடியாக கஞ்சி தயாராகி விட்டது.

வெடிச்சத்தங்களும் அண்மித்துக் கொண்டிருந்தது. என்ன நடந்தாலும் முதலில் எமக்குத் தீரவேண்டியது பசி. பசி வந்திடப் பத்தும் பறந்திடும் என்பார்கள். பயம்கூடப் பறந்து விட்டது. ஆவசரஅவசரமாக கஞ்சியைக் குடித்து முடித்தோம். இப்பொழுது வயிற்றுப்பசி தீர்ந்த களிப்பு. களிப்பு கணப்பொழுதுகூட நீடிக்கவில்லை. ஆயுதங்கள் ஏந்திய வண்ணம் பல இளைஞர்கள் நாம் தங்கி இருந்த வீம்மு வளவிற்குள் ஓடி வருவதைக் கண்டோம். அவர்கள் மிகவும் களைத்துப் போய் இருந்தார்கள். அதிகமானோர் மிக இளவயதினர். ஏமக்கு எதுவும் செய்யத் தோன்றவில்லை. திகைப்பு அடங்குமுன் வான் வெளியில் இரைச்சலுடன் வானூர்திகள் வட்டமிடத் தொடங்கின. இளைஞர்கள் தம்மை ஒவ்வொரு பனை மரத்தின்பின் மறைத்துக் கொண்டபடி வானூர்திகளை நோக்கிச் சுடத் தொடங்கினர்.

எமக்குத் தெரிந்துவிட்டது நிச்சயம் நாம் தங்கி இருக்கும் வீடு தாக்கப்படப்போகிறது. ஏல்லோரும் வீட்டு வளவை விட்டு பின்புற வேலியூடாக வயல் வெளியில் ஓடத் தொடங்கினோம். வானிலே வானூர்தி எம்மை வட்டமிட்டபடி அவதானித்தது. வயலின் நடுவே பெரிய ஆலமரம் எமக்குப் புகலிடமளித்தது. வெறும் கால்களில் கல்லும் முள்ளும் கத்திய வலி. ஆலமர வேரின் வளைவுகளில் ;எம்மை மறைத்துக் கொண்டோம். எந்த நிமிடமும் மரணம் வரலாம். இனி என்ன? கடவுள்தான் துணை என்ற முடிவுடன் கண்மூடிப் பிராத்தித்தோம். மேல்ல மெல்ல இளைஞர்களும் அவ்விடத்தை விட்டு நகர்ந்து நகர்ந்து தாக்குதலைத் தொடர வானூர்திகளும் நாம் இருந்த சூழலில் இருந்து விலகிச் செல்வதை அவதானித்தோம்.

மெல்ல மெல்ல வயல் வெளியை விட்டு வீதி ஓரத்திற்கு வரத் தொடங்கினோம். வீதி வெறிச்சோடிப்போய்க் கிடந்தது. நேரம் செல்லச் செல்லப் புற்றுக்குள் இருந்து ஈசல் புறப்படுவதுபோல ஒவ்வொருவராக தமது மறைவிடங்களை விட்டு வெளிவரத் தொடங்கினர். சிலமணிநேரங்களின் பின் எமது ஊருக்குள் சென்று பார்த்துவிட்டு வந்த சிலர் சொன்ன கதைகள் எம்மை மிகவும் கலவரப்படுத்தின. வீடுகளெல்லாம் சூறையாடப்பட்டு பலர் சூட்டுக்காயங்களுடனும் வெட்டுக்காயங்களுடனும் வீதியோரங்களில் பிணங்களாகவும் வீசப்பட்டிருந்தனர். பல இளைஞர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கைகள் கட்டப்பட்ட நிலையில் சுடப்பட்டிருந்தனர். பல இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அலங்கோலமாக வீசப்பட்டிருந்தனர். எங்கும் பிணவாடை. ஊரே பூகம்பம் ஏற்பட்ட ஒரு பிரதேசம்போலக் காட்சியளிப்பதாக கதைகதையாகச் சொன்னார்கள். இதையெல்லாம் கேட்ட எமக்கு கொஞ்சமிருந்த தெம்பும் உடலை விட்டு விலகிவிட்டது. இந்நிலையில் ஊருக்குள் செல்லத் துணிவின்றி பக்கத்துக் கிராமத்திலேயே தங்கிவிட்டோம்.

ஒருமாதம் உருண்டோடியது. இராணுவமும் ;மண்டைதீவிலேயே முகாமிட்டு இருந்தது. இந்த ஒரு மாதமும் நாம் பட்ட பாடுகள் கொஞ்சமல்ல. அரை வயிற்றுக்கு உணவு கிடைப்பதே அரிதாக இருந்தது. அணிந்திருந்த உடைகள் கழுவிக் கழுவி நிறம் மாறிப் போய் இருந்தன. குழந்தைகளழன் காற்சட்டைகள் தேய்ந்து வெடித்து மாற்றுடைகூட இல்லாத அவல நிலை. இந்த நிலையில் எர்பொழுது மண்டைதீவில் நிலைகொண்டிருக்கும் இராணுவம் திரும்பி வருமோ? அப்படி வரும் பட்சத்தில் மீண்டும் என்னென்ன அனர்த்தங்கள் நடைபெறுமோ? ஏன்ற ஏக்கத்துடனேயே நாட்களை எண்ணிக்கொண்டிருந்தோம். திடீரென்று ஒருநாள் மீண்டும் வல்லூறுகள் வானில் வட்டமிட்டன. குண்டுவீச்சு விமானங்கள் கட்டியம் கூற இராணுவம் மீண்டும் எம் ஊருக்குள் புகுந்து கொண்டன. மீண்டும் மக்கள் ஆலயங்களிலும் மர நிழல்களிலும் அடைக்கலமாகினர்.

ஆலயத்துக்குள் நாம் பட்ட அனுபவங்கள் மறக்க முடியாதவை. இனிமேலும் இந்நிலை நீடிப்பதை எம்மால் தாக்குப்பிடிக்க முடியாமல் எப்படியாலது கெழும்புக்குப் போய் அங்கு சிறிது காலம் தங்கலாம் என்று முடிவெடுத்தோம். ஏல்லாம் சரி. கொழும்புக்குச் செல்வதானால் பாஸ் எடுக்கவேண்டுமே.? பாஸ் எடுக்கத் தினமும் அலைந்ததுதான் மிச்சம். பாஸ் மட்டும் கிடைக்கவே இல்லை. இறுதியில் நாம் யாழ்ப்பாணம் போய் அங்கு மேலிடத்தில் கேட்டுப்பார்க்கலாம் என்று முடிவாகியது.; பட்டணம் செல்லப் புறப்பட்டு விட்டோம். கட்டிக்கொள்ள ஒரு சேலைகூடக் கிடையாது. எப்படியோ ஆளுக்காள் இரவல் வாங்கி எம்மை உடுத்திக் கொண்டோம். முன்பெல்லாம் கொழும்பு போவதென்றால் சூட்கேஸ் பலகாரம் மாம்பழம் ஒடியல் இப்படி எத்தனை ஆரவாரங்கள். இப்பொழுதோ கையில் சொப்பிங் பேக்குடன் எம் பயணம் தொடங்கியது.

வாடகைச் சைக்கிளில் அராலித் துறையை அடைந்தோம். ஆராலித்துறை அமானுசமான அமைதியில் மூழ்கி இருந்தது. இரவில் மட்டும்தான் அங்கு படகுச்சேவை நடைபெறுவதால் நேரம் செல்லச் செல்ல துறைமுகம் கலகலப்பாகியது. படகுகளில் வரிசைக் கிரமமாக விட்டு ஏற்றப்பட்டோம். எங்கும் கும்மிருட்டு. யாழ் கோட்டையிலிருந்து விடப்பட்ட வெளிச்சக் குண்டுகள் எம்முன் எமதூதர்கள்போல் காட்சியளித்தன. வள்ளம் தள்ளப்பட்டது. புயங்கரமான இரவுநேரப்பயணம். அந்த ஒரு மணி நேரமும் உயிரைக் கையில் பிடித்தபடி இருந்தோம். ஆராலியின் அந்தப் பக்கத் துறை கண்ணுக்கெட்டியது. பெற்றோல்மக்ஸ் விளக்குகளின் ஒளியில் அக்கரையிலிருந்து இக்கரை வருவோரும் இக்கரையிலிருந்து அக்கரை செல்வோருமாக அராலித்துறை அமளிதுமளிப் பட்டுக்கொண்டிருந்தது. எப்படியோ அக்கரையை எட்டி விட்டோம். மீண்டும் சைக்கிள் சவாரி. வீதி எங்கும் வெறிச்சோடிப்போய்க் கிடந்தது. நள்ளிரவில் எமது உறவினர் வீட்டில் அடைக்கலமானோம். ஒரு கிழமையாக அதே பாஸ் பிரச்சனை.

பாஸ் மட்டும் கிடைக்கவேயில்லை.மூன்று நாட்களின் பின் ஒரு நாள் பாஸ் கொடுக்கும் இடத்தில் எம் ஊரவர் அனைவரும் ஒன்றுகூடினோம். ஆங்கிருந்த அநேகம்பேர் உயிரிழப்புகளுக்கும் உடமையிழப்புகளுக்கும் ஆளானவர்கள். சில இளம் விதவைகளும் உடன் இருந்தனர். எமது வேண்டுகோளைக் கேட்ட மேலிடத்தினர் எம் ஊர்மக்களுக்கு மட்டும் சலுகை வழங்குவதாக உறுதி கூறினர். லொறி ஒன்றினுள் நாம் அனைவரும் ஏற்றப்பட்டோம். இரவுப்பொழுது எமது பயணம் ஆரம்பமாகியது. ஆடர்ந்த காடுகளினூடே லொறி ஓடிக்கொண்டிருந்தது. சிறிது வழிதப்பினாலும் நாம் போய்ச் சேருமிடம் இராணவமுகாமாகவும் இருக்கலாம். சில இடங்களில் புதை மணலில் சிக்கி லொறி இழுத்து எடுக்கப் பட்டது. புல தடவைகள் அனைவரும் இறங்கி புதைமணலில் நடந்து மிகவும் சிரமப்பட்டோம். இம் மயிர்க்கூச்செறியும் பயணத்தில் வழிகாட்டிகள் சிலரின் வழிகாட்டலின்படி வாகனம் ஓடிக்கொண்டிருந்தது. லொறியின் குலுக்கலில் எம் எலும்புகள் யாவும் நொருங்கி விடுவது போன்ற வலி.

பொழுது புலரும் வேளையில் ஓமந்தையில் இறக்கப்பட்டோம். அங்கிருந்த ஓரு கடையில் தேநீர் அருந்திவிட்டு மீண்டும் எம் பயணம் வவுனியாவை நோக்கி ஆரம்பித்தது. தாண்டிக்குளம் என்று அழைக்கப்படும் புதர்க் காடுகளினூடாக எமது பயணம் தொடர்ந்தது. எந்த இராணுவத்தைக் கண்டு பயந்து ஊரையும் உடைமைகளையும் விட்டுவிட்டு ஓடி வந்தோமோ இதோ இப்பொழுது நாமாகவே போய் இராணுவத்தினரிடம் சரணடையும் நேரம். இராணுவத்தினரின் சோதனைச் சாவடியை அண்மித்தோம். சொப்பிங் பேக்குடன் பயணம் செய்யும் எம்மிடம் சோதனை செய்ய என்ன உள்ளது? ஆனாலும் நாங்கள் தமிழர்கள். சோபதனையின் முடிவில் அரிசி ஆலைக்குள் அடைக்கலமானோம். ஆங்கு ஏற்கெனவே ஆயிரக்கணக்கான மக்கள் இடைக்கப்பட்டிருந்தனர். சுகாதாரத்திற்கு இடமில்லாதபடி துர்நாற்றமும் ஈக்களின் தொல்லையுமாக எப்படியோ பகல் பொழுது கழிந்தது. மாலையாகியது . இராணுவத்தினரின் பஸ்களில் அனைவரும் பட்டிகளாய் அடைக்கப்பட்டோம். மீண்டும் காமினி மகாவித்தியாலய வளவுக்குள் இறக்கப்பட்டோம். அது ஓரு பெரிய அகதி முகாமாக செயற்பட்டது. இரவாகியது . காமினிமகாவித்தியாலய வளவுக்குள் வானமே கூரையாக மர நிழல்களின் கீழ் வெறும் தரையில் படுத்துக்கொண்டோம். இரவு எம்முடன் பயணம் செய்த வாலிபர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். எமக்கு என்ன செய்வதென்றோ யாரிடம் போய் முறையிடுவதென்றோ எதுவுமே தெரியவில்லை. அனைவரும் விடிய விடிய தூக்கமின்றி வேதனையுடன் கழித்தோம். ஏப்படியோ தெய்வாதீனமாக அவ் வாலிபர்கள் விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டனர். ஒரு கண்டம் தப்பியது.

அதிகாலை மீண்டும் பயணத்துக்கு ஆயத்தமானோம். திரும்பவும் பஸ்சில் ஏற்றப்பட்டு புகையிரத நிலையத்தில் குவிக்கப்பட்டோம். புகையிரத நிலையம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. எல்லோர் முகங்களிலும் ஏதேதோ ஏக்கங்கள். எதிர்பார்ப்புகள். இழப்பின் வடுக்கள். நாமும் வரிசையில் நின்று புனையிரத மேடைக்குள் தள்ளப்பட்டோம். தூரத்தில் புகையிரகம் வரும் ஒலி கேட்டது.

அந்த வேளையில் எம்மை எங்கோ புதிய உலகத்திற்கு அழைத்துச்செல்லும் புஸ்பக விமானமாக புகையிரதம் காட்சியளித்தது. எம் இனிய தமிழீழத்தை இன்றுடன் பிரியப்போகிறோம் என்று தெரியாமலே எமது பயணத்தை ஆரம்பித்தோம்.

Link to comment
Share on other sites

கண்மணி அக்கா, கதை சூப்பர். அப்படியே ஊரில் முன்பு நடந்ததை படம் பிடிச்சு காட்டி இருக்கிறீங்கள். சினிமாபடம் பாத்தமாதிரி இருந்திச்சிது. தொடர்ந்து எழுதுங்கோ. நன்றி!

Link to comment
Share on other sites

காவலூர் கண்மணி அவரகளே,

தங்களின் அனுபவ விபரிப்பு அச்சத்தையும் துன்பியலையும் சமாந்தரமாக அழைத்துச் செல்கிறது. 1983 ம் ஆண்டு யூலைக்கலவரத்தின்போது கொழும்பில் அகதிமுகாமொன்றில் பட்ட அனுபவங்களை எனக்கு நினைபடுத்துகிறது உங்கள் எழுத்துகள். ஆனால் உங்கள் அனுபவத்தில் உயிரச்சத்தின் அதீதமாக உள்ளன.

எப்போதுதான் இவையெல்லாம் முடிவுறும் என ஒரு பெருமூச்சை உதிர்ப்பதைத் தவிர என்னம்மா செய்யமுடியும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாசுதேவன்

நீண்ட நாட்களாக தமிழர் வாழ்வில் தொடரும் துன்பியல் அனுபவங்கள் தொடர்கதையாகவே இருக்கிறது.

இதற்கு முடிவுரை எழுதும் நாள் எப்போ? சில வேளைகளில் வாழ்வின் அனுபவங்கள் எம் அனைவருக்கும்

நல்ல பாடங்களாக அமைந்து விடுவதோடு எம்மை படைப்பாளிகளாகவும் மாற்றி விடுகின்றது.

பாராட்டிற்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.