Jump to content

தமிழில் நாம் விடும் தவறுகள்


Recommended Posts

கடந்த இரு வாரங்களாக வேறு சில அலுவல்கள் வந்து விட்டதால் எழுத முடியவில்லை.

"பறவை பறக்கும்" என்பதன் பன்மை பற்றி பல இடங்களில் விசாரித்துப் பார்த்தேன். எனக்குத் தெரிந்த பேராசிரியர்களையும் கேட்டேன்.

பலருடைய கருத்து "பறவைகள் பறக்கும்" என்பதாகத்தான் இருக்கிறது.

அந்த வகையில் நான் முன்வைத்த "பறவைகள் பறப்பன" என்பது சரி அல்ல என்று படுகிறது. இது சரியா என்பதில் எனக்கு உள்ள சந்தேகத்தையும் நான் ஏற்கனவே வெளியிட்டிருந்தேன்.

ஒருமை பன்மை இரண்டிற்குமே "பறக்கும்" என்றுதான் வரும் என்பது பல தமிழாசிரியர்களின் கருத்து. இங்கே களத்திலும் பல உறவுகளும் அப்படித்தான் சொல்லியிருந்தார்கள். பல இடங்களில் விசாரித்ததன் பிறகு அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆகவே

"பறவைகள் பறக்கும்" என்பதுதான் சரி

ஒருமையில் எடுத்தால்

பறவை பறந்தது

பறவை பறக்கின்றது

பறவை பறக்கும்

பன்மையில் நோக்கினால்

பறவைகள் பறந்தன

பறவைகள் பறக்கின்றன

பறவைகள் பறக்கும் :D:D

எங்கேயோ இடிக்குதே.

சரி சபேசன் நீங்கள் நிறைய பண்டிதர்களிடம் கேட்டு இங்கு பதிஞ்சமைக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோ கெட்டதோ ஒருசில ஆக்களுக்கு மாடு சொன்னால் கேட்க மாட்டினம்.மணி கட்டின மாடு சொன்னாத்தான் கேட்பினமாக்கும்.

இவ்வளவு பண்டிதர்களும், தமிழறிஞர்களும் தங்களுக்கு அருகில் இருக்கும் போது எதற்கு யாழ் உறவுகளிடம் தெரியாத மாதிரி கேள்விகளை முன்வைத்தீர்கள்?

அல்லது இங்கே தமிழ்ப்பாடம் நடத்துகின்றீர்களா?

Link to comment
Share on other sites

ஏன் சடலம் என்ற சொல்லுக்கு பதிலாக உடலம் என்ற சொல்லை பாவிக்கிறார்கள்? ஊடகங்களில் கேள்விப்பட்டுள்ளேன்.

பெளதிகம் படிக்கும் மாணவர் சடப்பொருளை எப்படி மாற்றி கூறவேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலா சொல்வது போல எங்கோ இடிக்கின்றது. சபேசன் உண்மையாகவே தமிழறிஞர்களிடம் கேட்டுத் தான் பதிகின்றீர்களா?

இன்று தமிழில் உள்ள பிரச்சனை என்னவென்றால் ஒழுங்கான தமிழ் அகராதி இல்லாதது தான். இதனால் எத்தனை தமிழ் சொற்கள் உள்ளன. என்ன மாதிரி எழுத வேண்டும் என்று யாருக்குமே தெரியாமல் உள்ளது. மேலும் தமிழ் சொற்கள் புணர்ச்சி செய்து அதில் மாற்றங்களைக் காட்டும் என்பதால், சொற்கள் பற்றிய ஒழுங்கான தெளிவு நம்மிடம் இல்லை.

முதலில் சொற்களைத் தொகுக்குகின்ற வேலையைச் செய்வது நல்லது எனத் தோன்றுகின்றது. தூயதமிழ் இருந்தால் அச்சொற்களையும், அதில்லாவிட்டால் மாற்றீடான சொற்களையும் பாவிப்போம். உதாரணத்திற்கு இலத்திரன், நியுத்திரன் என்று நாம் பாவிக்கும் விஞ்ஞானப்பெயர்களுக்கு நிகராகத் தமிழ்பெயர்கள் இல்லை. எனவே அவற்றைத் தமிழ்வடிவத்தில் உள்வாங்குவோம். இன்றைக்கு ஆங்கிலம் எல்லாமொழிச் சொற்களையும் உள்வாங்கியதால் தான் அது முன்ணனியில் நிற்கின்றது.

முதலாவதாக பிறிதொரு தலைப்பில் "அ" என்று ஆரம்பிக்கும் சொற்களை எழுதுவோம். அதற்கான அர்த்தங்களையும் தருவது நல்லது.

எடுத்துக்காட்டு:

அன்பு= பாசம், பற்று, இன்னுமொரு உயிர் மீது காட்டும் பரிவு, காதல்

போன்று எல்லாச் சொற்களையும் திரட்டுவோம்.

நீங்கள் ஒத்துழைப்புத் தருவதாகச் சொன்னால் மட்டுமே புதுத் தலைப்பை ஆரம்பிக்கலாம்.

Link to comment
Share on other sites

வெண்ணிலா தந்த அதே உதாரணங்களை தந்துதான் என்னுடைய கேள்வியை எழுப்பியிருந்தேன்.

இப்பொழுது வேறு ஒரு கேள்வி உங்களைக் கேட்க விரும்புகிறேன். காலம் பற்றிய ஒரு கேள்வி

பறவை பறந்தது - இது இறந்தகாலம்

பறவை பறக்கிறது - இது நிகழ்காலம்

பறவை பறக்கும் - இது எதிர்காலம்

அதே போன்று

பறவைகள் பறந்தன - இது இறந்தகாலம்

பறவைகள் பறக்கின்றன - இது நிகழ்காலம்

இப்பொழுது இதனுடைய எதிர்காலம் என்ன?

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்!

என்னுடைய கருத்தாக "பறவைகள் பறப்பன" என்பதையும் முன்வைத்தேன். ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு தமிழ் இலக்கணத்தில் ஈடுபாடு உள்ள ஒருவர் எனக்கு சொன்ன பதில் இது. எனக்கும் அது சரி போன்றுதான் பட்டது.

ஆயினும் "பறப்பன" என்பது ஒரு முற்றெச்சம். அந்த வகையில் ஒரு சந்தேகமும் எனக்குள் இருந்தது.

அத்துடன் "பறவைகள் பறக்கும்" என்பதுதான் சரி என்று இங்கே களத்திலும் பலர் சொன்னார்கள்.

இதையடுத்து எனக்கு தெரிந்த தமிழறிஞர்களிடமும் நான் விசாரித்துப் பார்த்தேன்.

அவர்களும் "பறவைகள் பறக்கும்" என்பதுதான் சரி என்று சொன்னார்கள். ஆனால் அவர்களால் ஒரு தெளிவான விளக்கத்தை தரமுடியவில்லை. அஃறிணை எழுவாயாக உள்ள எதிர்கால வசனத்தில் பயனிலை ஒருமையிலும் பன்மையிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் இப்படி ஒரு விதி இருக்கிறதா என்பது பற்றி அவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை.

என்னாலும் வேறு பதில்களை தரக்கூடிய இலக்கிய உதாரணங்களையும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. (தேடுவதற்கு நேரம் கிடைக்கவில்லை)

இதில் ஒரு மயக்கம் இருப்பது உண்மைதான்.

தமிழ் இலக்கியங்களில் இது போன்ற உதாரணங்கள் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இதில் ஒரு மயக்கம் இருப்பது உண்மைதான்.

ரொம்ப மயக்குதுங்கோ அதிரடித் தொடர். ஹீஹீ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.