Jump to content

குளித்தபடியே செல்போன் பேசலாம்


Recommended Posts

இன்னும் சிறிது காலம் காத்திருந்தால் போதும். மழையிலோ, பாத்ரூம் ஷவரிலோ நனைந்தபடி செல்போனில் பேசலாம். நீர் புகாத நவீன தொழில்நுட்பத்தால் செல்போன்கள் நீரில் நனைந்தாலும் பாதிப்படையாமல் இயங்கும் வசதி விரைவில் வருகிறது.

இதற்கான தொழில்நுட்பத்தை லண்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளதாக டெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ரசாயன தாக்குதல்களில் இருந்து வீரர்களைக் காக்க ராணுவம் நவீன தொழில்நுட்பத்தைக் கையாள்வதுபோல செல்போனை நீரில் இருந்து பாதுகாக்க தொழில்நுட்பம் ஏற்படுத்தப்படும்.

அதற்காக போனின் மேல் பகுதியில் கண்ணுக்குத் தெரியாத நீர் தடுப்பு பூச்சு ஏற்படுத்தப்படும். அதன்மீது நீர் பட்டாலும் ஒட்டாமலும், உள்ளே புகாமலும் வழிந்தோடி விடும். அதன்மூலம், செல்போனுக்குள் நீர் புகுந்து சர்க்யூட்களை சேதப்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட்டு விடும். நீர் தடுப்பு பூச்சு பூசப்பட்ட செல்போன், மழை, பனி, தவறுதலாக நீரில் விழுதல், வியர்வை ஆகியவற்றால் பாதிக்கப்படாது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வசதியாப் போச்சு! இனி போனுக்கும் சோப் போட்டுக் குளிக்கலாம்!!! :D:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இனி குளிக்கும் போது ஏதாவது சந்தேகம் வந்தால் அது தான் சோப் எப்படிப்போடுவது போல ஏதாவது

உடனே போன் பண்னிக்கேக்கலாம் என்று சொல்லுறியள் :unsure:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சோனி எரிக்சன் புதிய போன்கள் அறிமுகம்

செல்போன் தயாரிப்புத் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் சோனி எரிக்சன், 4 புதிய ரக செல்போன்களை இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. டெல்லியில் இன்று நடந்த அறிமுக விழாவில் டி-270, டி-280 ஆகிய ஸ்லிம் கிளாசிக் (slim classic phone) ரக போன்களும், எப்.எம் ரோடியோ வசதியை உள்ளடக்கிய ஆர்-306 மற்றும் ஆர்-300 ரக செல்போன்களை பாலிவுட் நடிகையும், மாடல் அழகியுமான யானா குப்தா அறிமுகப்படுத்தினார்.

இதில் டி-280 ரக செல்போனில் 1.3 மெகாபிக்சல் (megapixel) கேமராவுடன், எப்.எம். ரேடியோ வசதியும் உள்ளது. இதே போல் ஆர்-306 ரக போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளதால், ரேடியோ நிகழ்ச்சிகளை துல்லியமாக கேட்க முடியும் என சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஆர்-300 ரக போனில் அதிசக்தி வாய்ந்த ஸ்பீக்கர்கள் உள்ளதால், ஹெட்போன் இணைப்பு இல்லாமலே ரேடியோ நிகழ்ச்சிகளை கேட்க முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பு அம்சமாகும்.

சோனி இன்று அறிமுகப்படுத்தி உள்ள 4 புதிய செல்போன்களிலும் புளூடூத் தொழில்நுட்ப (Bluetooth technology) வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

"msn"

Link to comment
Share on other sites

உதென்ன பெரிய விசயம். நான் குளிக்காமலேயே செல்போன் பேசுவேன். :o:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில ஆக்கள் செல்போன் இல்லாமலே றோட்டிலை கதைச்சுக்கொண்டு போயினம் :mellow: அப்ப அவைக்கென்ன விசரே :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதென்ன பெரிய விசயம். நான் குளிக்காமலேயே செல்போன் பேசுவேன். :D:(

நீங்க குளிச்சிட்டு பேசினா இன்னா குளிக்காம பேசினா இன்னா பேசுறாவாளுக்கு தெரியவா போகுது :mellow:

Link to comment
Share on other sites

நீங்க குளிச்சிட்டு பேசினா இன்னா குளிக்காம பேசினா இன்னா பேசுறாவாளுக்கு தெரியவா போகுது :lol:

இதுக்கோ கறுப்பி அக்கா அரைவாசி பேர் செல்லில கதைக்கிறவை இப்ப தான் விளங்கிச்சு நேக்கு... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

உதென்ன பெரிய விடயம் ப்ளூரூத் போட்டுக்கொட்டு பாத்ஹாப் போட்டுட்டே குளிக்கலாம் பல்லு தீட்டலாம். அதில் ஒரு மகிழ்ச்சி. ஹீஹீ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.