Jump to content

நாகப்பட்டினத்தில் சுனாமி நினைவு தினத்தில், கடல் உள்வாங்கியதால் பரபரப்பு


hirusy

Recommended Posts

(தினத்தந்தி)

தஞ்சாவூர்,

நாகையில் கடல் உள்வாங்கியதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

கடல் உள்வாங்கியது

2004 டிசம்பர் 26 அன்று நாகையையே நாசப்படுத்திய சுனாமி பேரலைகளின் 3-வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன.

இந்த சூழ்நிலையில், பருவ மழை நேரத்தில் பெரும் சீற்றத்துடனே காணப்பட்ட நாகை கடல், கடந்த சில நாட்களாக அமைதியாக காணப்பட்டது. நேற்று கடல் உள்வாங்கியதாக தகவல் வெளியானது.

இதனால், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, நம்பியார்நகர், சாமந்தம்பேட்டை, ஆரியநாட்டுத் தெரு, பொய்கைநல்லூர், செருதூர் போன்ற கடலோர கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

மீனவர் கருத்து

இது குறித்து தமிழ்நாடு மீனவர் பேரவை துணைத் தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:-

"கடந்த ஒரு காலமாக பெரும் சீற்றத்துடன் காணப்பட்ட கடல் இன்று சீற்றமின்றி மிகவும் அமைதியாக, அதுவும் குளம்போல் காணப்படுகிறது. ஆண்டுதோறும் இதுபோன்ற சம்பவம் நடைபெறும்.

அதாவது தை-மாசி மாதங்களில் கடல் தண்ணீர் உள்வாங்கும். இதை நாங்கள், "கொச்சம் கொடுக்கிறது, அதாவது கடல் நடுத்தரம் கொடுக்கிறது'' என்று சொல்வோம். ஆனால் ஒரு மாதத்திற்கு முன்னாலே கொச்சம் கொடுத்து இருக்கிறது.

கொந்தளிப்பு ஏற்படும்

எங்களது அனுபவத்தை வைத்து சொல்கிறேன். இந்த மாதிரி கொச்சம்(கடல் உள்வாங்குதல்) கொடுத்தால் 10 நாட்களில் கடல் கொந்தளிப்பு அல்லது கடும் மழை பெய்யவும், புயல் வீசவும் வாய்ப்பு உள்ளது. மற்றபடி 24-12-2004-ல் ஏற்பட்டது போல், சுனாமியின் அறிகுறி எல்லாம் கிடையாது. மேலும் பவுர்ணமி நாட்கள் முடிந்து 3-வது நாளிலும் இதுபோன்ற அறிகுறி ஏற்படுவது உண்டு.

கடல் உள்வாங்குவதற்கு எத்தனை மணிநேரம் ஆனதோ அதேபோல் கொஞ்சம், கொஞ்சமாக மீண்டும் கடல் சகஜநிலைக்கு வந்து விடும்.''

இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர் தகவல்

நாகை கலெக்டர் தென்காசி ஜவகர் கூறியதாவது:-

"நாகை கடல் நேற்று உள்வாங்கியதாக வந்த தகவலால், பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடையத் தேவையில்லை. துறைமுக அலுவலகம், மீன்துறை அலுவலர்கள் மற்றும் கடலோர மீனவர்களிடம் தீர விசாரித்ததில் கடல் உள்வாங்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. சுனாமி குறித்த எச்சரிக்கை ஏதும் இருந்தால் மாவட்ட நிர்வாகம் மூலம் முறையாக அறிவிக்கப்படும்."

இவ்வாறு அவர் கூறினார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.