Jump to content

தினசரி தூறல்கள்...


Recommended Posts

அனி அன்புக்கு நன்றி...

ஆனால் உண்மையா உங்க கருத்தை பார்த்தவுடன்..

வாய் சொன்னது

கிளம்பிட்டாங்கைய்யா...கிளம்ப

Link to comment
Share on other sites

  • Replies 513
  • Created
  • Last Reply

தூறல் நாள் 62

சிவப்பு மழைக்குளிக்கும்

ஈழ மண்ணே..உன்

இயற்கை மணம்

மீண்டும் வருவதெப்போ...

அழகான ஆல மரமே

உன் வேரைக்கூட

அறுத்துப்போட்ட செல்லடியை

மனம் மறந்து..உன்மடி சாய்வதெப்போ

பள்ளி மைதானமே

துள்ளிய வயது தொலைந்தாலும்

உன்னை பாரத்தாவது

என் நினைவுகளை மீட்டுவதெப்போ..

குளிக்க மறுக்காத

கோயில்குளமே...

பயத்திலேயே பாசி கொண்டாயோ..

நீ புதிதாய் வருவதெப்போ..

வண்ண விளக்குகளால்

இரவெல்லாம் பகலாய்

எண்ண இனிக்கும்..

பாவடைத்தாவணிகளும்..

பழகக்கேட்கும் பருவமும்..

தரைதொடாப் பாதங்கொண்டு

வீதி சுற்றும் கோயில் திருவிழாவே..

மீண்டும் கோலாகலம் கொள்வதெப்போ...

அலைகளால் பாதம் தடவும்

அன்னைக் கடலே...

உன் கரையோரம் தவழ

என் கிழவுடலே ஏங்கும்

ஆசைகள் தீர்வதெப்போ...

நிலாமுற்றமும்..

அன்னைக்கை குழையல் சோறும்..

அப்பா செல்லமும்..

அனுபவிக்கும் போதே..

அழிந்துபோன வாழ்க்கை கோலமே..

சிதறிப்போன சித்திரமே...

கலைந்து போன நிஜங்களே..

கதறி மனம் கேட்கிறது...

காலங்கள் சேர்வதெப்போ..

கதறிமனம் அழுகிறது...

அற்புதத்தின் அற்புதம்..

அம்மா அருகில் இல்லை

ஆசான்களின் ஆசான்

அப்பா அருகில் இல்லை

அன்பான அண்ணாவும்..

ஆசைத் தங்கையும்..

யாரும் அருகில் இல்லை

தொலைந்த சுற்றம்..

இழந்த நண்பர்கள்..

காணமுடியாத சொந்தங்கள்..

ஏக்கத்தோடே முடியும் என் வாழ்வு

மீண்டும் வேண்டும்..

என் மண்ணில்..இறைவா

அன்றாவது எம் ஈழமண்

சுதந்திரதேசமாய் இருக்கட்டும்..இனி

ஒருமுறை இழப்பதென்றால்..

பிறப்பே தேவையில்லை!.

Link to comment
Share on other sites

ஆஹா ..... கவித்தூறல் எல்லாம் அருமையாயிருக்கே......! பாராட்டுக்கள்...

விகடகவி அண்ணா....தல அண்ணா சொன்னது போல் ஒரு புத்தகமாக வெளியிடலாம் போலருக்கே ........ :wub:

:D விகடகவியின் தூறல்களை புத்தகமாக்குவதெனில் .................... எவ்வளவு பெரிய புத்தகமாகும்? எவ்வளவு தூறல்? நினைச்சுப்பார்க்கவே.................. :)

தொடருங்கள் உங்கள் தூறல் மனதுக்கு மென்மையாகவே தூறாட்டும் தொடர்ந்து.

Link to comment
Share on other sites

காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடிச்சே

மெல்ல மெல்ல என்னைக் கொல்ல துணிஞ்சிடிச்சே

எடுத்ததெற்கெல்லாம் காதலை குறை சொல்லாதீங்கோ...காதல் ரொம்ப பாவம்....

அது சரி வெண்ணிலா காதல் கொண்ட நீள...(ல)வானம் யாரோ... :lol:

Link to comment
Share on other sites

எடுத்ததெற்கெல்லாம் காதலை குறை சொல்லாதீங்கோ...காதல் ரொம்ப பாவம்....

அது சரி வெண்ணிலா காதல் கொண்ட நீள...(ல)வானம் யாரோ... :lol:

:lol::lol: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை

கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை :)

நீள..(ல) வானம் இல்ல்லீங்கோ. செவ்வானம் ஆக்கும் :(:(:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூறல் நாள் 61

அத்தனையும் தந்தாய்..

பித்தனாயானேனே...

செத்துவிடத்தோணுதடி-உன்

மெத்தைமடி மோனத்திலே...

...

கட்டிலறை மக்கானேன்<<<

எல்லோரும் அப்படித்தான் போல :lol:

ஆயிரம் காலம் போதுமடி

பாயினில் ஆசைகள் கூடுதடி

தூயவளே வந்து ஆடடி-என்

நோய் விரகமென்றால் விட்டு ஓடுமடி!!

<<<<

காதலின் உச்சம்!!! கவிதைகளில் மிச்சம் வைக்காமல் வழிகிறது தம்பி!! போற போக்கைப் பார்த்தால்!! :D

தூறல் நாள் 62

சிவப்பு மழைக்குளிக்கும்

ஈழ மண்ணே..உன்

இயற்கை மணம்

மீண்டும் வருவதெப்போ...

ஊரின் நினைவலைகளை மீண்டும் அலையடிக்க வைத்துவிட்டீர்களே மனசுள்

பள்ளி மைதானமே

துள்ளிய வயது தொலைந்தாலும்

உன்னை பாரத்தாவது

**பார்த்தாவது**

வண்ண விளக்குகளால்

இரவெல்லாம் பகலாய்

எண்ண இனிக்கும்..

பாவடை<<

**பாவாடை** இப்படி எழுதவே எழுத்துப் பிழைக்குது :lol:

அலைகளால் பாதம் தடவும்

அன்னைக் கடலே...

உன் கரையோரம் தவழ

என் கிழவுடலே ஏங்கும்

ஆசைகள் தீர்வதெப்போ<<<

உங்களைத் தம்பி என்று நினைச்சன்...என்ன நீங்க இப்படிச் சொல்லுறியள் :lol:

...

நிலாமுற்றமும்..

அன்னைக்கை குழையல் சோறும்..

அப்பா செல்லமும்..

அனுபவிக்கும் போதே..

அழிந்துபோன வாழ்க்கை கோலமே..

சிதறிப்போன சித்திரமே...

கலைந்து போன நிஜங்களே..

கதறி மனம் கேட்கிறது...

காலங்கள் சேர்வதெப்போ..***

உணர்வலைகளை சுண்டி இழுக்கும் வரிகள்

என் மண்ணில்..இறைவா

அன்றாவது எம் ஈழமண்

சுதந்திரதேசமாய் இருக்கட்டும்..இனி

ஒருமுறை இழப்பதென்றால்..

பிறப்பே தேவையில்லை!.

இந்த ஏக்கம் தான் எல்லோர் மனதிலும் தம்பி.....சொல்ல வார்த்தைகள் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போற போக்கைப் பார்த்தால்!! :unsure:

நாங்கள் எழுதுவதை எல்லாம் கவிதை என்று சொல்லுறதை மூட்டை கட்டி வைக்க வேணும் என்று நினைக்கிறன் :lol:!

Link to comment
Share on other sites

தூறல் நாள் 63

மேடையில் பேசும்போது

பரந்த மனது..

விரிந்த கடல்...

திறந்த ஆகாயம்... என்று

தாராளமாகவே பேசுகிறேன்..

வீட்டுக்குள் நுழைந்தால்

கடுகின் அளவாய்..

கொலுவில் பொம்மையாய்...

பேசா மடந்தையாய் போகிறேன்..

புரட்சியாளன் ஆனாலென்ன..

பேச்சாளன் ஆனாலென்ன..-இல்

அவளின் ஆட்சிக்குள்..

அடிமை ஆண்தான் போல!..

சுட்டெரிக்கிறாயே சூரியனே..

என்று திட்டிவிட்டு..நிழலுக்காய்

மரத்துக்கு நன்றி சொல்லும்

மானிடா...அந்த..

நிழலுக்கு மூலம்..

மரமா...சூரியனா?...

பதினெட்டு வயது

நவரசம் நீயாக இருக்கலாம்..

ஆனால் காதல்ரசம்

மட்டும் உன்னிடம்..

கம்மியாக இருக்கிறது..

உனக்கு தேவையான

அளவு தந்து உதவ

தயாராக இருக்கிறேன்..

பெற்றுக்கொள்வாயா?...

நூறு மடங்கு

ஆசையை அடக்கமுடியாத

ஆண் மாட்டிக்கொள்வதும்..

ஆயிரம் மடங்கு

ஆசைகொண்ட பெண்

அடக்கிக்கொள்வதும்..

அகப்படாமலேயே..

தப்பிச்செல்வதும்..

பேராச்சரியங்கள்!.

சிரிப்பு மட்டும்

இல்லையென்றால்..

மனிதன் அருகில்

மனிதன் கூட

மரம்தான்..

சிரிப்பை..செயலாக்கிய

சித்தன் யார்?..

பாட்டுக் கேட்;கமாட்டாள்...

சினிமா பார்க்கமாட்டாள்..

நகைச்சுவைக்கும் சிரிக்கமாட்டாள்..

நல்ல சமையல் கூட ருசிக்கமாட்டாள்..

என் பாட்டி..அவளை

ஏன் பாட்டி என்றேன்..

தாத்தாவோடு அனுப்பி வைத்து

விட்டாளாம்.. அனைத்து

இன்பங்களையும்....

தொலைந்த வாழ்க்கை யெண்ணி

துயருறும் என் மூதாட்டி..

உன் தொலையாத காதல்..

என்னை அசர வைக்கிறது..

காதலில் ஆசையும் வைக்கிறது!.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டெரிக்கிறாயே சூரியனே..

என்று திட்டிவிட்டு..நிழலுக்காய்

மரத்துக்கு நன்றி சொல்லும்

மானிடா...அந்த..

நிழலுக்கு மூலம்..

மரமா...சூரியனா?...

அழகான வரிகள்.

இப்படித்தான் பலசந்தர்ப்பங்களில் மனித வாழ்வில் மூலத்தை மறந்து விடுகிறோம்

Link to comment
Share on other sites

அழகான வரிகள்.

இப்படித்தான் பலசந்தர்ப்பங்களில் மனித வாழ்வில் மூலத்தை மறந்து விடுகிறோம்

ம்ம்... :rolleyes:

Link to comment
Share on other sites

ம்ம்... :D

அட..மாமாவின் கண்ணில் இருந்து கண்ணீர் துளி :D ..(அவரின் கண்ணீர் துளியும்)..சிந்தும் ஒரு கவி தூறல்..அது தான் அந்த துளியை ஏந்த ஓடி வந்தனான் பாருங்கோ.. :o

"என் மேல் விழுந்த

மழை துளியே

இத்தனை நாளா

எங்கிருந்தாய்" :o

எண்டு பாடுமளவிற்கு இருக்கிறது எங்கண்ட மாமவின்ட தூறள்கள் :o ..தொடரட்டும் தூறள்கள் மாமோய் அப்பப்ப வாரேன் என்ன.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

தூறல் நாள் 64

அம்மா

என்னைப் படைத்த

பெண் பிரம்மாவே..

உன் அன்புக்கு

ஈடில்லாத உலகிலே

அலைக்கழிக்கப்பட்டுக்

கொண்டிருக்கும் ஜீவனே..

சேவகம் செய்யவேண்டிய

உன் மகன் சித்தத்தில்

தினசரி குற்றவுணர்வு

குத்திக்கிழித்துக்கொண்டிரு

Link to comment
Share on other sites

தூறல் நாள் 65

நள்ளிரவின் அமைதிக்குள்

யார் விசும்பும் சத்தம்..

நாயகனே..யாரும்

அறியாத கண்ணீரோ அட்டா

ஆறாய் ஓடுகிறதே..

அவளையன்றி வேறொரு

பெண்ணை ஏற்றிடாத மனமோ..

அவளைத் தொட்ட பின்னர்

தொடர்ந்த வினையால்

விளைந்ததிந்த ரணமோ

அவளிடம் நீ பேச பல வழிகள் உண்டு

அவளிடம் நீ பேச பல மொழிகள் உண்டு

அவளிடம் நீ பேச உனக்கு உரிமையும் உண்டு

அவளுக்குமுன் மீது ஆசை உண்டு

அவளுக்கு உயிரில் கரைய பாசமுண்டு

அவளுக்கு உறவில் நனைய மோகம் உண்டு

இது என்ன லீலை காதலர்கள்

தம்மைத் தாமே தடுக்கவில்லை

தாகங்கொண்ட கொக்கு இரண்டும்

ஏனோ நாடவில்லை..

பிரிப்பதென்ன விதியோ..சதியோ..

மதிக்கூர்மை கொண்ட குழுக்களின்

செயலோ..சீற்றங்களோ..

அவள் அங்கே...

நீ இங்கே...

அழுவதை...துயர்

எழுவதை...காண்பதே

பெரு வதை..

பேசாதவனே... காதல் மூடா..

உன் ஆண்மைதான் குருடா..

பின்னிக்கொண்ட விரல்களை வெறுக்கிறாய்..

முத்தமிட்ட உதடுகளை சபிக்கிறாய்..

குலவிக்கொண்ட கோதையையும்..

கலவிகொண்ட இரவையும் தேடுகிறாய்..

அவள் நினைவோடு வாழகிறாய்..

உன் சுயத்தை தொலைத்துவிட்டாய்..

இல்லாத மறுஜென்மக் கனவுகள் கொண்டு

இப்போது முடியாததை எப்போது கேட்கிறாய்..

இருமனம் சேர்ந்தபின் திருமணம்தானே..

இடையில் இருப்பவர் தடைக்கல் மூடா..

வீரன்தானே விலக்கிப் போடா..

முட்டத்தெரியாத காளை-காதலில்

வெல்லமுடியாத கோழை

உன்னை நினைப்பவள்

உருகி வடிகிறாள்..

கூண்டில் கிளியென

குறுகிக்கிடக்கிறாள்...

கிளியை மீட்டு வாடா...

உன் வீரம் காட்டு தோழா!!

Link to comment
Share on other sites

தூறல் நாள் 66

நீயில்லாத

வாழ்க்கையை

நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை

என்று அவன் சொன்னான்..

அவள் சொன்னாள்..

எனக்கும்தான்...

நீயுள்ள

வாழ்க்கையை நினைத்துக்கூட

பார்க்கமுடியவில்லை என்று

ஒரு துறவியிடம்..

மனிதன் வசைக்கு உள்ளாவது எப்போதென்றால்...

கற்றதை தொழிலாக்காதவன்..

கட்டியவளை தாயாக்காதவன்..

பெற்றபிள்ளையை முறையாக வளர்க்காதவன்..

வாழ்வுமுறைப் பாதை விலகியவன்..

பஞ்சமகா பாதகங்களை புரிபவன்..

யாராயிருந்தாலும் ஊர் வையுமென்றார்..

சாமி தங்களைப்பற்றி என்றவுடன்

நானா வசைக்கு பயந்து துறவியான பிறவி என்றார்

நீ

நீல வானத்தை நிறைக்கிறாய்

நீண்ட சாலையை நிறைக்கிறாய்

வீட்டுக்கூரையை நிறைக்கிறாய்

வெற்று சுவரை நிறைக்கிறாய்

மலர்ந்த இமைக் காட்சியை நிறைக்கிறாய்..

மூடிய இமை முழுவதையும் நிறைக்கிறாய்

இப்போது பெண்ணே

நீ மட்டும் தெரியும் குருடனாக்கிவிட்டாய்!

அவள் மேனி காகிதமாம்..

அவன் விரைல்கள் எழுத்தாயுதமாம்..

அவள் சொல்கிறாள்..

"என்ன வேண்டும் எழுது-வரிகள்

எண்ணவேண்டும் எழுது"என

அவன் செயல்வீரன்..

எழுதஆரம்பித்துவிட்டான் எப்போதோ..

நிலவாய்

என் கனவுகளில் தினம் எழும்

என் கனவு தேவதையே..

இரவில் வருவது

நீ மட்டுமல்ல

பல சினிமா நடிகைகள் கூடத்தான்

பகலில் வா..

உன்னை மட்டும்

நிரந்தரமாக்குகிறேன்

உறவுக்கு பகை கடனாம்..

யார் சொன்னது..

ஊருக்கே பகை

காதலாக இருக்கும்போது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விகடகவி .................

தினசரி தூறல் நன்றாக உள்ளது .சோகம் சிலவும் தாகம் பலவும் மழையாக பொழிகிறது .

.தினமும் நனைய மிக்க ஆவலுடன் உள்ளோம்

நன்றி வணக்கமுடன்

நிலாமதி

Link to comment
Share on other sites

தூறல் நாள் 67

பெருமை பேசிக்கொண்டிருக்கும்

தமிழ்த் தாத்தா

உன் பேரன் தமிழ் மறந்ததேன் தாத்தா

என்றால்...

மகனை மேலே படிப்பானென்னு அனுப்பிவைத்தேன்..

அவன் தமிழை விற்பானென்பதை அறிந்திருக்கேன்..

என்றார்...

தாத்தா "ஐயையோ"என்கிறார்..

தந்தை"என்ன செய்வது"என்கிறார்..

தனயன்"அம்மி"என்கிறான்

கலப்பு மணங்களுக்குள்

கரைந்து போக

கலாச்சாரத்தைப் பற்றி

கவலையெதற்கு அம்மா

உன் பைந்தமிழே

பாதித் தமிழாய்

தேய்ந்துகொண்டிருக்கும் போது

வெள்ளைக்கார நாட்டில்

வேட்டி சட்டை

அவமானமா..பரவாயில்லை..

தமிழ்நாட்டில் தமிழ்

பேசுவதையே அவமானம்

என்கிறார்கள்..

பொங்கு தமிழ்

பானையில்..ஆங்காங்கே

ஏராளமான ஓட்டைகள்

அடைக்க ஆளில்லை

தமிழ்த்தாய் நெருப்பை..

பிள்ளையின்

அலட்சியப்போக்குகள்..

கசியும் நீராய்

அணைத்துக்கொண்டிருக்கிறது..

தமிழின் சுவை

அருமை அருமை

தமிழின் தொல்மை

பெருமை பெருமை

தமிழின் நிலமை

வறுமை வறுமை

தமிழை இரசிக்கும்

என் தமிழா....

நம் மொழியை கரையான்கள் போல

நம் அகதி நிலமை

அரித்துக்கொண்டிருக்கிறது

நம் அலைச்சல் நிலமை

அரித்துக்கொண்டிருக்கிறது

நம் அந்நிய தேவைகள்

அரித்துக்கொண்டிருக்கிறது

நம் அலட்சியப்போக்குகள்

அரித்துக்கொண்டிருக்கிறது

நம் மேலைத்தேய மோகங்கள்

அரித்துக்கொண்டிருக்கிறது

காப்பாற்றுங்கள்..நம் தாயின்

அடையாளத்தை ...

நம் தேசியத்தின்..

சின்னத்தை...

நம் பிறப்பின் பெருமையை

காப்பாற்றுங்கள்..

எப்படி...?

எப்படியாவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலப்பு மணங்களுக்குள்

கரைந்து போக

கலாச்சாரத்தைப் பற்றி

கவலையெதற்கு அம்மா

உன் பைந்தமிழே

பாதித் தமிழாய்

தேய்ந்துகொண்டிருக்கும் போது

தினசரி தூரல்கள்

தினம் தினம்

சிந்தனைகளை

தூண்டுகிறது.

தூரல் கள் அழகு விகட கவி

Link to comment
Share on other sites

தினசரி தூரல்கள்

தினம் தினம்

சிந்தனைகளை

தூண்டுகிறது.

தூரல் கள் அழகு விகட கவி

நன்றி கபி

Link to comment
Share on other sites

தினசரி தூறல்களில் நனைய கொடுத்துவைக்கவில்லை என்று கவலை இன்றுடன் கலைந்தது. இன்று தெப்பமாக நனைந்துவிட்டேன்.

எனக்கு ஒரு சந்தேசகம் நீங்கள் விகடகவியா அல்லது கவிச்சுரங்கமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி உங்கள் தூறல்கள் மிகவும் அருமை. தொடர்ந்தும் நனையக் காத்திருக்கிறேன்.பாராட்டுக்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.