Jump to content

தினசரி தூறல்கள்...


Recommended Posts

விகடகவி உங்கள் சிறு சிறு தூறல்கள் இப்போது பெரும் வெள்ளமாக கரைபுரண்டு ஓடுகிறது களத்தில். வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 513
  • Created
  • Last Reply

எல்லோருடைய வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும்.. பின்னூட்டல்களுக்கும்.. நன்றிகள்

தூறல் நாள் -12

கட்டிக்கொண்டு கிடந்து

கதைகள் பேசுவாள்..இதழ்

முத்தங்கள் பேசும்போது

விழிமூடிக்கிடப்பாள்..

பிரியும்போது அழுது நடிப்பாள்..

அவள் போலிக்காதலியென்றாள்..

"அண்ணா"என்றும் அபத்தமாய் அழைப்பாள்

கெட்டவனுக்கு வாய்ப்புகள் அதிகம்..

மௌனிகளுக்கு வாய்ப்புகள் நிரந்தரம்

நல்லவனுக்கு வாய்ப்புகள் குறைவு

மிகவும் நல்லவனென்றால்.. வாய்ப்புகளே இல்லை..

என்ன வாய்ப்பு என்று கேட்கிறீர்களா..

உயிர் வாழத்ததான்..

என் மௌனம் குமைந்து கொண்டிருக்கிறது..

உள்நின்று கனன்றுகொண்டிருக்கிறது..

ஆத்திரமாய்க் குமுறிக்கொண்டிருக்கிறது

இது எரிமலையாய் வெடித்தால்... நான்..

வாழ்வின் எல்லைவரை ஓடஓட விரட்டப்படுவேன்..

ஏனென்றால்..இது வீதிப்பையன்களின் அட்டகாசஉலகம்.

அம்மா..

ஒரு விடயத்தை

உன்னிடம் மறைத்துவிட்டேன்..

சொல்லநினைத்தேன்..

உன் மனம் உடைந்து விடுமோ

என்ற அச்சத்தில் தவிக்கிறேன்..

அம்மா..

உனக்குப் பிடிக்காத உன் தம்பியின்..

மகளை எனக்குப் பிடித்தது..

ஏனம்மா..

Link to comment
Share on other sites

தூறல் நாள் -13

உன்பார்வைக்கும்

என் பார்வைக்கும்..

விழுந்த முடிச்சு...

திருமண முடிச்சாகமாறும்..

என கனாக்கண்டேன்..

இப்போது உன் நினைவு முடிச்சுகள்..

என் கழுத்தை நெரிக்கிறது...

என் இரத்தத்தின் சத்தங்கள்..

அவளுக்கு கேட்கிறதாம்...

"ஆகா என்ன கேட்கிறது?"

என்று கேட்டேன்..

நிறைய பெண்களின்.. பெயர்

காதில் விழுந்ததாம்..

அட.. நான் என்ன செய்வேன்..

என் சுயரூபத்தை நாக்கைத்தவிர

எல்லாம் காட்டிக்கொடுத்துவிடுகிறது.

சந்தோசம் நாளைக்கு மாறலாம்..

நிம்மதி நாளைக்குப் போகலாம்..

வாலிபம் நாளைக்குத்தொலையலாம்..

இப்படி நாளையைப்பற்றிப்பேசி..

இந்த நாழிகையை வீணடிப்பானேன்..

நான் தமிழ் பேசும் நிலவைப் பார்த்திருக்கிறேன்..

நான் தமிழ் பேசும் தென்றலைப் பார்த்திருக்கிறேன்..

நான் தமிழ் பேசும் தேவதையைப் பார்த்திருக்கிறேன்..

ஆனால் அந்த அழகிக்கு எல்லா மொழிகளிலும்

கெட்ட வார்த்தை தெரியும் என்பதை நான்

காதலை அவளிடம் சொன்னபோது பார்த்தேன்..

Link to comment
Share on other sites

சந்தோசம் நாளைக்கு மாறலாம்..

நிம்மதி நாளைக்குப் போகலாம்..

வாலிபம் நாளைக்குத்தொலையலாம்..

இப்படி நாளையைப்பற்றிப்பேசி..

இந்த நாழிகையை வீணடிப்பானேன்..

நான் தமிழ் பேசும் நிலவைப் பார்த்திருக்கிறேன்..

நான் தமிழ் பேசும் தென்றலைப் பார்த்திருக்கிறேன்..

நான் தமிழ் பேசும் தேவதையைப் பார்த்திருக்கிறேன்..

ஆனால் அந்த அழகிக்கு எல்லா மொழிகளிலும்

கெட்ட வார்த்தை தெரியும் என்பதை நான்

காதலை அவளிடம் சொன்னபோது பார்த்தேன்

உங்கள் கவிதைகளின் ரசிகை நான்,இடஹியும் ரசித்தேன்!!

வாழ்த்துக்கள் விகடகவி

Link to comment
Share on other sites

தூறல் நாள் -14

வரவுக்கு மீறிய செலவாய்..

ஒரு முத்தத்திற்கு பதிலாக

ஒன்பது முத்தம் தந்தேன்..

செலவாளி என்று தப்பர்த்தம்

செய்து கொள்ளாதே.. செல்லமே..

திருமணத்திற்கு பிறகு வருமானம்..

அதிகரிக்கும் என்றே நம்புகிறேன்..

மெதுமெதுவென்றிருந்தாலும்..

அந்தப் பிஞ்சுவிரல்கள் ஐந்தும்..

என் விரலை இறுக்கமாய்..

பற்றிக்கொண்டபோது..

குளிர்ச்சியான நீர்வீழ்ச்சியொன்று

இதயச்சாரலின் ஓரமாய்.. அடடா..

குழந்தை உலகின் முதல் அதிசயம்!!.

சந்தித்தவேளை வயதை

சிந்திக்கவே இல்லை

தந்துவிட்டேன் என்னை

பேசியவேளை

யோசிக்கவேயில்லை

வாசித்துவிட்டேன் உன்னை

மன்னித்துவிடு (சின்னப்) பெண்ணே..

எல்லாவற்றிற்கும் விலையுண்டு..

என்று நினைத்தவன் நான்..

பணத்துக்கு பாசமும் அடிமை

என்றிருந்தவன் நான்..

ஆனால் அன்பே உன் குணத்தால்..

இன்முகத்தால்..புன்சிரிப்பால்

..

உன்பால் என்னை சுழலவிட்டாயே..

நீ என்னை செல்லநாய்க்குட்டிபோல்

செய்தனையே.. பணம் பாதாளம் பாயுமாம்

பெண்.. பாதாளத்தில் பல்லாங்குழி ஆடுவாள்..

நீ காதலிக்காமல் போனதும் கவலையில்லை

நீ என்னைத்திட்டியதும் கவலையில்லை

நீ என்னை மறந்ததும் கவலையில்லை

இன்னும் நீயென்னை தவறாகத்தான்

புரிந்து கொண்டிருக்கிறாயே என்ற

நினேவேதான் என் நெஞ்சில் நெருஞ்சி முள்.

முதல்நாள்

தொட்டுக்கொண்டோம்

இரண்டாம் நாள்..

ஒட்டிக்கொண்டோம்..

மூன்றாம் நாள்

கட்டிக்கொண்டோம்..

நான்காம் நாள்..

அவள் கொடுத்த

எச் ஐ விக்கு நான்..

கூலி கொடுத்தேன்..

வேலை விடுமுறையில்..

வாழ்க்கை விடுமுறையும்

வந்து சேர்ந்ததே..

Link to comment
Share on other sites

தூறல் நாள் -15

மின்னிக்கொண்டிருக்கும்

மூக்குத்திப்பூவில்தான்

உன் அழகு ஒளிந்துகொண்டிருக்கிறது..

ஏனென்று கேட்கிறாயா..

ஏதாவது ஒன்று தகுதி குறைவான

ஒன்றோடு ஒப்பிடப்படும்போதுதானே..

மெய்யான தரம் தெரிகிறது..

உன் கண்கள் அந்த வைரக்க்லை

விட அழகாக ஜொலித்துக்கொண்டிருக்கின்றன..

இதே சாலையோரத்தில்

அம்மா..அப்பா விரல்பிடித்து

நடை பழகினானாம்

இதே சாலையோரத்தில்

பள்ளிப்பையோடு இவன்

துள்ளி ஓடி வருவானாம்..

இதே சாலையோரத்தில்

அவனைக்காண இவன்

காத்துக்கிடப்பானாம்..

இதே சாலையோரத்தில்

அவளோடு சேர்ந்து

நெருங்கி நடந்தானாம்..

இதே சாலையோரத்தில்

அவர்கள் திருமண

ஊர்வலம் நடந்ததாம்..

இதே சாலையோரத்தில்

கர்ப்பிணியான அவன் மனைவி..

குண்டில் சிதறுண்டு மடிந்தாளாம்..

இதோ இப்போது

இதே சாலையோரத்தில்

இவன் உருக்குழைந்து..

உடைகிழிந்து..

பைத்தியமாய்..

அழுதுகொண்டிருக்கிறானாம்..

இதே சாலையோரத்தில் இன்னும்..?

நெஞ்சு பொறுக்குதில்லையே..

எல்லோரையும்.. அழகாய்க் காட்டும்.

இந்தக் கண்ணாடி என்னை மட்டும்.

இவ்வளவு.......

அம்மா குளியலறையில்க்

கத்திக்கொண்டிருந்தார்.

"இந்தக் கண்ணாடி எப்ப உடைந்தது?"

நல்லவேளை இன்னும் யாரும்..

எப்படி உடைந்தது என்று

கேட்கவில்லை..

கண்ணுக்குள் தூசு விழுந்தது..

வலித்தது

கலங்கினேன்..

குணமாகிவிட்டது.

கண்ணுக்குள் நீ விழுந்தாய்..

இனித்தது..

சிரித்தேன்...

குணமாகவில்லை!!..

Link to comment
Share on other sites

தூறல் நாள் -16

நான் தூங்கிய பிறகு விழித்து...

நான் விழிக்கமுன்.. தூங்குவாள்..

என் மனைவியல்ல..அவள்

என் கனாப்பெண் அவள்..

என் பாடலை நான்..

கேட்கமுடியாது...

அப்பாடலை பிறர்

சகிக்கமுடியாது..

அந்த ஞானசூனியம்

என் குறட்டைதானாம்..

நினைவுகளாய்.. என்னை

நிரப்பிவிட்டு நீ

எட்டியிருக்கிறாய்.-என்னை

மறந்து இருக்கிறாய்..

என்னுடன் பேச விரும்பாமல்..

இருக்கிறாய்..-எதுவம்

புரியவில்லை பெண்ணே..

என் தவிப்பை எதற்காக

தாராளமாக்குகிறாய் என்பது

அவள் விழிகள்

நீர் சிந்தினால்

என்னுள்ளம் உடைந்துவிடுகிறது..

அவள் நீலக்கடலில் குளித்து

நிலவில் ஒளி வாங்கி

பூக்களின் வாசம் கொண்டு

பூவிதழ் நெளிந்து.

புன்னகை தந்து

காதல் வளர்த்தவள்..

அவள் மனமுடைந்தால் என்

இதயம் நொருங்கிப்போகாதா என்ன?..

சாதனை செய்வதற்காக..

பேனாவைத் தூக்கினேன்..

சோதனை செய்கிறேன்.. புரிகிறது..

என் எழுத்துகளைப் படிக்கும்..

அன்பர்கள் பொறுமையை..

இதுவும் சாதனை என்று எண்ணினாலும்..

மன்னிக்க வேண்டுகிறேன்..

உனக்கு வேண்டுமானால்

நீ போய் போட்டு சாப்பிடு

என்றாள் மனைவி....

முதலில் சாப்பிடுங்கள்

பிறகுதான் பேசுவேன்

என்றாள் காதலி..

ஒரு சின்ன மாற்றம்..

அந்தக் காதலிதான் இப்படி

மாறிவிட்ட என் மனைவி..

Link to comment
Share on other sites

விகடகவி மாம்ஸ் சிறு தூறள்கள் தற்போதுமழையாக அல்லவா பொழிகிறது :D மிகவும் நன்றாக இருக்கிறது மழையில் நனைய!! :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

உனக்கு வேண்டுமானால்

நீ போய் போட்டு சாப்பிடு

என்றாள் மனைவி....

முதலில் சாப்பிடுங்கள்

பிறகுதான் பேசுவேன்

என்றாள் காதலி..

ஒரு சின்ன மாற்றம்..

அந்தக் காதலிதான் இப்படி

மாறிவிட்ட என் மனைவி..

எல்லா தூறல்களும் ஒரு வித இதமான தாலாட்டு.. அதிலும் இது சூப்பர் விகடகவி. தொடரட்டும் உங்கள் தூறல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தினசரி தூறல்கள்

தினம் தினம்

பெருந்துளியாய்

நெஞ்சினை நிறைக்கின்றது

வரிவரியாய்

வடிக்கும் கவிதைஅழகு

தூரலில் நனைய

தொடர்ந்திடட்டும்

Link to comment
Share on other sites

தூறல் நாள் -17

என் கனவுத்தோட்டத்து தேவதேயே..

நான் காலார நடக்கையில்..

உன்னை உள்ளுர நினைக்கிறேன்..

தொட்ட இடம் இன்பம் சுரக்க -விரல்

பட்ட இடம்மின்சாரம் தெறிக்க..

கட்டழகைக் கட்டியணைக்க -காளை

முட்ட வரக் கன்னி சிரிக்க..

இதே தோட்டம்தான்..அடிப்பெண்ணே

இதே மரநிழல்தான்..அன்று

என்னிளமைக்காட்டாறில் - இன்ப

மீன்பிடித்த கைகாரியே..பூவே

பொய்க்கோபம் உனக்கேனடி..வா

ஊர் உறங்குகிறது..

ஓசையே இல்லை..

தூக்கம் வராமல்

புரளும் எனக்கே..

என்னிதயத்துடிப்பு கேட்க..

உற்றுக்கேள்..

உனக்கு கேட்காது

சுவற்றுப் பல்லியே..

எனக்கு கேட்கிறது..

நாளைக்குப் பரீட்சை முடிவு..

நான் சித்தியா இல்லை

மீண்டும் அடுத்த சித்திரையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தினசரி தூரல்

தினம் தினம்

தூரல் விழாமல்

இருப்பதும் ஏனோ விகடகவி.

Link to comment
Share on other sites

மனதில் இப்போது..

கடும் கோடை..

வரண்டு போனது

கற்பனையல்ல..என்

இதயக் கார்மேகங்கள்..

தூரல்..இனி மெல்ல மெல்ல

வந்து விழும் க..பி

Link to comment
Share on other sites

தூறல் நாள் -18

குழந்தை குற்றமென்று

தெரியாமல்.. முகத்தில் கீறும்

வலித்தாலும் இனிக்கும்..

நீயும் குழந்தை போல்தானே..

அன்பே இதயத்தில் கீறினாய்

வலியில் உயிர் போகிறது..

வானவில்லின்

வளைவு அழகா..

வளைந்து கிடக்கும்..

வண்ணமழகா..

வண்ணவொளி

வந்து விழுவதழகா..

வளைவதழகா..என்றெல்லாம் என்னை

வாயோயாது கேட்கும் என்

வருங்காலத் துணையே..

வாடாதவுந்தன்

வதனமேயழகு..

வருத்தம் தந்திடாத

வளமான இதயமழகு..

வற்றிடாத சிரிப்பழகு..

வசீகர விழியழகு

வாய் மொழிவேன் நீயேயழகு!!!

என் பாதங்கள்

நடந்து தேய்ந்தவை..

என் விழிகள்..

எதிர்பார்த்திருந்து ஓய்ந்தவை

என் முதுகு

உன் காலடி தேடியே கூன்கண்டது

என் கைகள் கைத்தடி

தாங்கித் தான் வலுக்கொண்டது..

இந்த வெண்நரை கூட

உன்னிடம் சமாதானம்தான் பேச வந்தது..

என் கன்னக்குழி

உன்னிடம் அழகாக

சிரித்துக்காட்டசொன்னது..

முப்பதில் சொன்னாய்

காத்திருக்கச் சொல்லி..

அறுபதாகியும்

காதலியே பார்த்திருக்கிறேன்..

ஆள் வரவில்லை...

எனக்குத் தெரியும்

நீ வருவாய்

என் சமாதியில் பூப்போட..

நான் இளைத்துப்போய்விட்டதாக

அம்மா கவலைப்படுகிறார்கள்..

என் பிள்ளை

படித்துக் களைத்து இளைத்ததாக..

பெருமை வேறு பேசிக்கொள்கிறார்கள்..

உண்மையில்..நான்..

உன் காதலுக்கு ஏங்கி..துயில் நீங்கி

உடல் மெலிந்தததை...

பாவம் அவர்கள் தவறாக புரிந்து

வைத்திருக்கிறார்கள்..வழமை போல..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இளைத்துப்போய்விட்டதாக

அம்மா கவலைப்படுகிறார்கள்..

என் பிள்ளை

படித்துக் களைத்து இளைத்ததாக..

பெருமை வேறு பேசிக்கொள்கிறார்கள்..

உண்மையில்..நான்..

உன் காதலுக்கு ஏங்கி..துயில் நீங்கி

உடல் மெலிந்தததை...

பாவம் அவர்கள் தவறாக புரிந்து

வைத்திருக்கிறார்கள்..வழமை போல..

நாங்கள் உங்களைச் சரியாகப் புரிந்து கொண்டோம் கவிஞரே!!! :lol::wub:

Link to comment
Share on other sites

வரும்வழியில் அமிழ்ந்து

போனாலும்..நுரைகள்..

அலையாய்.. என்றோ

ஓர் நாள் கரை சேரும்..

இந்தக் காதலும்..

ஓர் நதள் கரை சேரும்..

அம்மாகிட்ட சொல்லமாட்டீங்க..

ம்கூம் மாட்டீங்க அம்மாவைத்தான் உங்களுக்கு தெரியாதே.. :lol:

Link to comment
Share on other sites

தூறல் நாள் -19

கொலைவாள் விழி கொண்டு

அலைபாயும் மனதை அறுத்தாள்..

வலை வீசிப்பிடித்தாள்..என்

நிலையின்று அவள் நிழல் போல

உலகில் வென்ற காதல்நிலையிதுதானோ..

அருகில் இருந்தபோது

உணராத ஆத்ம நெருக்கத்தை

பிரிந்து விலகி தூரமாகிய அந்த

ஆத்ம தேடலில் உணர்ந்தேன்..

அவள் அவனை நினைத்துக்கொண்டிருந்தாள்

அவன் அவளை விதைத்துக்கொண்டிருந்தான்

ஆனால் இருவர் விற்பனைக்கும் பெற்றோர்கள்

ஊர்ஊராய் பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

தூங்கமுன் புதுமலராய் இருந்தவள்..

தூக்கம் கலைந்த போது..இதழ்

கலைந்த ரோஜாவானாள்.. கேளாமல்

ஜன்னலின் வழி வந்த விடியலின்

வெளிச்சம் காட்டியது.. இந்த

இதழ் கலைந்த ரோஜா அழகோ அழகென்று..

தொலைக்காட்சி விளம்பரமொன்று

தமிழைக்கொன்றுகொண்டிருந்தது..

.

விளம்பரத்தில் வேற்று தேச அழகி-இளம்

தமிழனைக் கொன்றுகொண்டிருந்தாள்.

Link to comment
Share on other sites

தினசரி தூறல்கள் மாம்ஸ் தினசரி என் நெஞ்சை தளுவி சென்றதால் எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது :( அவ்வளதிற்கு நன்றாக இருந்தது மாம்ஸ் :( ....எல்லாம் சரி ஜம்முபேபி காதலிக்கும் போது நீங்க தான் கவிதை எழுதி தரவேண்டும் நான் வந்து என்ட பெயரை போட்டு கொடுப்பேன் என்ன மாமோய்!! :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

தூறல் நாள் -20

என் கண்களில்

விழுந்த ஒரு தூசு..

கண்களைக் கலங்க வைத்தது...

என் இதயத்தில் விழுந்த ஒரு தூசு

வாழ்வைக் கலங்க வைத்தது..

பெண்ணே மன்னித்துக்கொள்..

உன்னை தூசு என்றதற்காக...

விழும்போது தட்டி விட்டிருந்தால்

நீ தூசுதானே...நான்..

விருட்சமாக வளரவிட்டபின்

வேதனைப்படுகின்றேன்.

முத்தம்

பத்துவயதில் ச்சீ என்றாய்..

பதினாறில் வெட்கப்பட்டாய்..

பதினெட்டில் ஓடிஒளிந்தாய்..

பத்தினியாகி பரவசப்பட்டாய்..

உற்றவளாய் ஒட்டிக்கொண்டாய்..

பெற்றவளாய் விலகிக்கொண்டாய்..

முத்தம் மொத்தத்தில் என்தேவியே..

தந்ததெல்லாம் தங்கமாய்..

பெற்றதெல்லாம்பொன்னாய்..

தெருவுக்குத்தெரியாத தேவதை வரமாய்..

நினைவுகளில் இனிய சுகமாய்..

நன்றிகள் கோடி என் நாயகியே..

தூதுகள் செல்ல

நூறு கிளிகள்..

ஆயிரம் வழிகள்..

வாசலைக் காதலி

நீயே அடைத்துவைத்திருந்தால்

அடி காதல் எங்ஙனம் வாழும்?..

சிலநேரங்களில் உனக்கு காதல்

பொங்கினால்.. பார்வைச் சாரலிலும்

முத்தத்தேன் மழையிலும் நனைத்துவிடுகிறாய்..

ஆனால் பானையில் பொங்கும்போது

அகப்பையால் துலாவி அடக்கிவிடுவது போல்

எனக்கு காதல் பொங்கும்போது மட்டும்...

சப்பென்று அடக்கிவிடுகிறாயே.. ஏனன்பே..

எல்லாப் பெண்களுமா இப்படி?..

மழையில்லாமலே குடைபிடித்தேன்..

குடைக்குள் இருந்து கொண்டே

நனைந்தும்போனேன்..எல்லாம்..

உன்னை நினைத்துக்கோண்டே..

நடந்ததால்தான்!!!..

Link to comment
Share on other sites

தூறல் நாள் -21

வெள்ளை வல்லூறுகள்

பெற்ற "சொனிக்" கழுகுகள்..

தீமுட்டை போட்டு -ஈழத்தின்

அழகுப்பூங்காக்களைக்

கருக்கிப்போகிறது..

பூங்காவில் வாசத்தோடிருந்த...

வனப்போடிருந்த...

வாலிபத்தோடிருந்த..

கனவோடிருந்த..

கண்குளிரவிருந்த..

எவ்வளவு பூக்கள்.

மண்ணோடு மண்ணாக

சருகாகி..எரியுண்டு போயின..

பராசக்தியே..வல்லூறுகளைக்

கொல்ல வல்லமை கேளேன்

இனி உன்னிடம்..

கேட்டுக் கேட்டுத்தான்

நீ தந்தாயா என்ன?..

என்னால் முடிந்ததைச் செய்கிறேன்..

மூத்தவர் முடிவெடுக்கட்டும்..

திசைகள் அதிர ஒரு

தமிழ்பேரிகை..முழங்கட்டும்.

எனக்குள் அழுகிறேன்

ஈழம் எரிகின்றது..

எனக்குள் அழுகிறேன்

சர்வ தேசம் சிரிக்கின்றது..

எனக்குள் அழுகிறேன்

உறவுகள் மறைகின்றது..

எனக்குள் அழுகிறேன்

சந்தோசம் மறக்கினறது..

எனக்குள் அழுகிறேன்

துயரங்கள் உறைகின்றது..

அழுகை வற்றிப்போன

கண்கள் சிவக்க..

சிரித்தவனை வெறித்தேன்..

மௌனமாக இருக்கிறான்..

எரித்தவனை முறைத்தேன்..

போருக்கு வருகிறான்..

நொந்து சாவதிலும் - மானத்துடன்..

வென்றிடச் சாவதே மேலென

போருக்குச்சித்தமானேன்..

போர்..போர்..போர்..போர்..

எழுத்துகளாளேனும் இதம் தரத்தான்

நான் ஏதோ ஏதோ எழுதுகிறேன்..

என் தேசத்து இரத்த வாடையும் அழுகுரலையும்..

நான் மறக்கவில்லை..உள் விழுங்கிக்கொண்டிருக்கிறேன்..

தினமும் குமைந்துகொண்டிருக்கிறேன்..

வீரமாய்ச் சொல்லலாம் நான் பாரதியில்லையே..

அழுகையைச் சொல்லலாம் இணியழக் கண்ணீர் இல்லயே..

பிறந்த மண்ணையும்.. பெற்ற தாயையும்

எந்நிலை மாறினம் எக்கணமும் மறவேன்..

என்னையும் என் தட்டச்சையும் கோபித்துக்கொள்ளாதீர்கள்!..

Link to comment
Share on other sites

தூறல் நாள் -22

என் இதயப்பலகை

சுத்தமாக இருக்கின்றது..

யாராவது எழுத நினைத்தால்..

உங்கள்அப்பா..அம்மா..அக்கா..

தம்பி..தங்கை..மாமா..சித்தப்பன்..

எல்லா உறவுகளிடமும்..

அனுமதி பெற்றுவிட்டு வந்து

எழுதுங்கள்..மேலும்

எழுதும்போது தயவுடன்.

கூர்மைமிக்க ஆணிகொண்டு

எழுதாதீர்கள்..வாசம் மிக்க

மென்மலர்களால் எழுதுங்கள்..

வலிகளும் தழும்புகளும்..

இந்த இதயத்திற்கு புதிதல்ல

எழுதியவர்கள் எதற்காக..

எதற்காகவோ எல்லாம்

போய்விடுவார்கள்..

விட்டுச்சென்ற வாசத்தோடாவது

இந்த இதயம் வாழட்டுமே..

நீ பேசினால்

ரணங்கள் குணமாகும்..

நீயெதிர் தோன்றினால்

மரணங்கள் சுகமாகும்..

நீ என்னோடு இணைந்தால்..

ஏய் அழகியே..

நான்தான் கடவுள்!!!

விழிகளின் அருகே

நீ இருந்தென்ன..

விரல்தொடும்

உரிமை தந்தென்ன

நீர் ஊறா நிலமாய்..

நெஞ்செல்லாம் கல்லாய்..

வாசம் தராப் பூவாய்..

வண்ணமில்லா காத்தாடியாய்..

வளையாத வில்லாய்..

யோசித்துப் பார்

நீ ஏன்தான் எனக்கு?

உன்னை யாரும் குற்றம் சொல்வதில்

எனக்கு சம்மதமே இல்லை

என் தேவதை நீ..

நானேதான் குற்றவாளி..

எனக்கு உன் சந்தோசம்தான்

கடைசி ஆசை..

என் புது நண்பி..

பல நிமிடங்களாய்..

என் கவிதைகளை நோட்டமிட்டாள்..

ரசித்தாள்..

அப்பாடா..இவளாவது

எனக்கு ரசிகையாகிவிட்டாளே..

என்று எண்ணிக்கொண்டிருக்க..

கேட்டாள்"இந்த எழுத்துகள்

அழகாக இருக்கின்றதே..இதுதான்

நம் தமிழ் எழுத்தா" என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் கண்களில்

விழுந்த ஒரு தூசு..

கண்களைக் கலங்க வைத்தது...

என் இதயத்தில் விழுந்த ஒரு தூசு

வாழ்வைக் கலங்க வைத்தது..

பெண்ணே மன்னித்துக்கொள்..

உன்னை தூசு என்றதற்காக...

விழும்போது தட்டி விட்டிருந்தால்

நீ தூசுதானே...நான்..

விருட்சமாக வளரவிட்டபின்

வேதனைப்படுகின்றேன்.

உங்க கவிதை அழகு

பெண்ணை தூசாக உவமித்து அழகாக வந்திருக்கிறது

Link to comment
Share on other sites

நன்றி ஜம்மு..(பேபியோட பேச்சே ஆயிரம் கவிதை..பிறகேன்.. பேபிக்கு கவிதை..)

நன்றி கபி..(நான் எல்லா பெண்ணையும் தூசா சொல்லலை..அவளை மட்டும்தான்)

Link to comment
Share on other sites

தூறல் நாள் -23

அம்மா...

அரவணைப்பிற்கும்..

அன்பிற்கும் மட்டுமல்ல

என் வாழ்க்கை முழுவதற்குமே..

ஆதாரம் நீதான் தாயே..

தடுமாறும் என்னை

தடம் மாறச் செய்யுமோ..

உன் பிரிவு என்று

கவலைப்படுகிறாயாமே..

கண்ணைப் பிடுங்கியபின்

என் தூக்கத்தைப் பற்றி

கவலையேனடி? ..

இருட்டுக்குள்

இருந்துகொண்டே

நிலவை ரசித்தேன்..

நிலவுக்கு ஆசைப்பட்டு

நிம்மதியைத்தொலைத்தேன்..

நிம்மதியைத் தேடி

நெடுந்தூரம் நடந்தேன்..

நெடுந்தூரம் தாண்டியபின்

நான் மறக்க நினைத்தவளை

நினைக்க மறக்கவில்லலை

என்ற மெய்நிலையறிந்தேன்!

அன்பே..

உன்னுடைய

ஒவ்வொரு முத்தமும்

சேமிப்புக் கணக்கில் சேரும்..

அதிக பட்ச வட்டியாய்..

கூட்டு வட்டி தருகிறேன்..

என் கணக்கை

நடைமுறைக்கணக்காய் வைத்துவிடு

அடிக்கடி வைப்பு செய்வதும்..

எடுத்துக்கொள்வதும்..

மொத்த வியாபாரி எனக்கு அவசியம்!

சில உண்மைகளை

அறிந்துகொள்ள-மனிதனே..

ஊமையாயிரு..

உன் ஊமைவேடம்

கலைந்துவிட்டால்

உண்மையாயிரு..

முயற்சிக்கு..தூக்கம்

முட்டுக்கட்டை..

களைப்புக்குத் தூக்கம்

பஞ்சுமூட்டை

காதலுக்குத் தூக்கம்

வருவதேயில்லை

கணவனான மனிதனுக்கு

தூக்கமேயில்லை

நிஜத்தில் நடிப்பவர்களை

வெறுக்கிறேன்..

வாழ்க்கை என்ன

நாடகமா?..

நிஜம் மறைப்வர்களைக் கண்டு

பயப்படுகிறேன்..

எதை நம்புது?..

மெய்யான என் முகம்

பிடிக்கவில்லை பலருக்கு

பிடித்த ஒரு சிலருக்காகவாவது

உண்மையிருக்கிறேனே..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.