Jump to content

தினசரி தூறல்கள்...


Recommended Posts

தினசரி தூறல்கள்...

பட்டப்பகலில் ஒரு

நிலா..பிரகாசமாக..

அது நீதான்...

ஒரு குயில்க்கூட்டம்..

கவலையாக மௌனவிரதம் இருக்கிறது..

நீ பாடியதை அவை கேட்டனவாம்..

நிலைக்கண்ணாடியின்

தலைக்கணம் தவறேயில்லை..

தினமும் உன்னைத் தரிசிக்கின்றதே..

உன்னைச் சுற்றியிருப்பவர்கள்

எல்லாம்..கவிஞரானார்கள்..

உன் பேரைச் சொல்லியே..

எனது வாழ்க்கை..

முழுமை பெறாத நூலாகியது..

உன் முதல் பாதியை நான் படிக்கவேயில்லை..

எங்கள் முதலிரவில் மட்டும்

நான் தூக்கத்தில் விழிக்கவில்லை..

அன்றுதான் நாம் தூங்கவேயில்லையே..

ஒரு ஏழையாயிருந்தும்.

இருபது வயதின் பின்..நான்

பசிக்கொடுமையை உணவில்லாத

போதும் உணர்ந்ததில்லை..

அப்போதிலிருந்து நீ

என்னைக் காதலிக்கிறாய்..

Link to comment
Share on other sites

  • Replies 513
  • Created
  • Last Reply

மாமாவின் தினசரி தூறல் நன்றாக இருகிறது இன்னும் நனைவதிற்கு காத்திருகிறேன் :) தூறலில் நனைந்தா பேபிக்கு காய்ச்சல் வராது தானே மாமா :unsure: ...........சிதரட்டும் மாமாவின் தூறல்கள் இரசித்திட நான் தயார்..........மாமாவின் தூறலில் நான் மிகவும் இரசித்த தூறல்........ <_<

பட்டப்பகலில் ஒரு

நிலா..பிரகாசமாக..

அது நீதான்...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

தினசரி நனைய நான் தயார். இடைவிடாது தூறிக் கொள்ளுங்கள்.

நான் அதிகம் நனைந்த தூறல்

ஒரு குயில்க்கூட்டம்..

கவலையாக மௌனவிரதம் இருக்கிறது..

நீ பாடியதை அவை கேட்டனவாம்..

Link to comment
Share on other sites

தூறல் நாள் -2

ஏய் மரமே..

நீயோ மாரியில் உதிர்ந்து

கோடையில் துளிர்க்கிறாய்...

உன் போல்..சுழற்சிமுறை

ஏன் மற்றவர்களிடம் இல்லை...

மெல்லினங்களுக்கும்..

வல்லினங்களுக்கும்..

எப்போதும் (கட்டில்)சண்டை

ஆச்சரியம்..

ஜெயிப்பதென்னமோ..

எப்போதும்.. மெல்லினங்கள்தான்..

ஏய் சலங்கையே..

அவள் கால்களிலிருந்து

சல்.. சல்லென்று சிணுங்கும்போது

இரசிக்கவைக்கிறாய்..

கட்டில்மேல்.. என்னைக்

கள்வனாக்கி..

காட்டிக்கொடுத்து

வெறுக்கவைக்கிறாய்..

ஏனிப்படி..எசமான்

விசுவாசமில்லாமல்..

நீ.. இட்ட

இதழ் முத்திரை கோடி பணம்தானாம்..

ஆனால்..அன்பே..

உன் விண்ணப்பக்கடிதத்திற்கு..

இன்னும் நிறைய முத்திரைகள்

தேவைபோல இருக்கிறதே..

"முன் சக்கரத்தை பின்சக்கரம்

துரத்துவது போல்.. அன்பே..

உன்னை துரத்திக்கொண்டிருக்கிறேன்"என்றேன்..

நீ சொன்னாய்..

"புரிந்துகொண்டாயா

நீ எப்போதும்

என்னை தொடமுடியாது"என்று

Link to comment
Share on other sites

"முன் சக்கரத்தை பின்சக்கரம்

துரத்துவது போல்.. அன்பே..

உன்னை துரத்திக்கொண்டிருக்கிறேன்"என்றேன்..

நீ சொன்னாய்..

"புரிந்துகொண்டாயா

நீ எப்போதும்

என்னை தொடமுடியாது"என்று

தினமும் தூறும் தூறல் தொடர்ந்து தூறட்டும் வாழ்த்துக்கள் விகடகவி.

ரொம்ப நல்லா இருக்கு.

Link to comment
Share on other sites

தூறல் நாள் -3

போகிறபோக்கில்..

ஆண்கள் பக்கம்..

கல்லெறிந்துவிட்டுப்

போகும் பெண்களே...

அவர்கள் இதயம்

சுக்குநூறாய் உடைந்து

போவதனை அறிவீர்களா..

என் எண்ணமும்

வாழ்வும்..

தெளிந்த நீரோட்டமாகத்தான்

இருந்தது..பெண்ணே..

நீ வந்து

காதல்க்குப்பைகளைக்

கொட்டாதவரை!

பெண்களையும்..

ரோஜாக்களையும்..

ஒருபோதும் ஒப்பிட்டுப்

பேசாதீர்கள்..

இதழ் திறந்த ரோஜா..

எப்போதும் மீள

மூடிக்கொள்ளாது..

இதயம் திறந்த பெண்

எப்போது வேண்டுமானாலும்

மூடிக்கொள்வாள்.

"என் பாதங்களைக்

காக்க.. பாதி..

தேய்ந்த செருப்பே..உனக்கு

நான் கடமைப்பட்டிருக்கிறேன்.."

என்று மேடையில்..முழங்கும்..

புலத்துக் கவிஞனே..

ஊன் கரைத்து..

உனை வரைந்த தாய்..

ஊரில் உயிர்

கரைந்துகொண்டிருக்கிறாளாம்..

தெரியுமா..

Link to comment
Share on other sites

ஊன் கரைத்து..

உனை வரைந்த தாய்..

ஊரில் உயிர்

கரைந்துகொண்டிருக்கிறாளாம்..

தெரியுமா..

இன்றைய தூறல் நல்லா இருக்கு. அதிலும் இவ்வரிகள் நெஞ்சை தொட்டுச் செல்கின்றன.

Link to comment
Share on other sites

தூறல் நாள் -4

என் ஆங்கில ஆசிரியரை

எனக்கு மிகவும் பிடிக்கும்..

ஆச்சரியமாக இருக்கிறதா...

உண்மை...

அவர் மட்டும்தான்.

"பிடிக்காதவர்கள் வெளியே போகலாம்"

என்பார்.

அப்பா..

உன் விரல் பிடித்து

நடந்த என்

சுவடுகள் மறையமுன்..

விட்டுச்சென்றாயே...

காலன் கொடியவன்தான்..

தந்தையில்லாத

இளமைக்காலங்கள்..

அதனிலும் கொடிது

என்பதனை அறியாயோ..

பிறன்மனை தீண்டாமல்..

வயதெல்லை தாண்டாமல்..

உறவுமுறை மீறாமல்..

மனம் கவர்ந்த பெண்ணை

சுதந்திரமாக காதல் செய்..

அவளை நான் அணைப்பதிலும்..

இன்பம்..

அவள் என்னை அணைப்பது..

அன்போடு அணைக்கும்போதுதான்..

அங்கே ஆத்மசுகம்..

நெஞ்சக்கூட்டில்..

தென்றலாய் வீசும்.

ஏழையின் கொஞ்ச உழைப்பையும்..

இலஞ்சமாய்க் கறத்தலா..

இன்றைய ஜனநாயகம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி உங்களுடைய தினசரி தூறல் நன்றாக உள்ளது. தூறல் துளியாகி, வெள்ளமாகி கரைபுரண்டு ஓட வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

தூறல் நாள் -5

உடல் உருகி..

உடல் உருகி..

ஒளி தரும்..மீள

உருப்பெறும்..எச்ச

மெழுகுதிரி.

உள்ள அழுக்கு

உடனே விலக்கு

நேசம் காட்டு

நல்லன கடைப்பிடி

வருந்தி உழை

வறியோரை வாழவை

புத்தாண்டு கண்டேனும்

புதியவனாய் மாறு..

நான் சொல்ல நினைத்ததை

அவன் சொல்லிவிட்டான்..

நான் ஆள நினைத்தவளை

அவன் ஆளுகின்றான்..

சொல்லவேண்டியதை அன்று

சொல்லாத நான் கோழை..

இருந்தாலும்..சின்ன ஆனந்தம்..

சொன்னவனாகிவிட்டான் ஏழை..

கல்லூரி போர்க்களத்தில்

கன்னியர் வீசிய

விழி அம்புகள் கிழித்தும்.

அஞ்சாமல்.. காளைகள்..

காத்துக்கிடக்கின்றனர்..

கலாட்டாக்கற்களை

மட்டும் வைத்துக்கொண்டு..

ஆயிரம் பூக்கள்..

ஒன்றாய்ப்பூக்கம்..

மத்தாப்பூ..அதில்

விரியும் உயிர்ப்பூ

மன ஈர்ப்பூ..

வேறென்ன அதுவன்றோ..

மழலைச் சிரிப்பூ

Link to comment
Share on other sites

தூறல் நாள் -6

அமாவாசைக்கு

அந்தப்பக்கம்..

பௌர்ணமி இருக்கிறது

என்ற நிஜம்

மறக்கடிக்கப்பட்தைப்போல்

மனிதனுக்குள் வாழும்..

தெய்வம்..நிகழ்நாளில்

புதைக்கப்பட்டிருக்கிறான்..

உன்னையும் என்னையும்..

சேர்த்துவைப்பது..இரவு..

பெண்ணே..

தப்பர்த்தம் பண்ணிக்கொள்ளாதே..

நீ இப்போது..

என்னைக் காண வருவது..

கனவில் மட்டும் தானே..

என்னிடம்

"ஏழுஸ்வரம்"

உறங்குகிறது..

அதை எப்போதாவது எடுத்துவிட

நினைக்கையில்..

உங்கள் கேலியால்.

புரிந்துகொள்வேன்..

வெளியே வருவதென்னவோ

"அபஸ்வரம்" என்பதனை

கடவுளே..

பல அரச அதிகாரிகள்..

முன்னிலையிலேயே..

நான் பலரை

சாகடித்திருக்கிறேன்..

மனிதனைக்கொல்வது..

எனக்கு சரியாகப் படவில்லை..

உயிரை எடுக்கும் உரிமை

நமக்கேது..

இருந்தாலும்.. இதை

தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்..

எனக்கு விமோசனம் கிடைக்குமா..

இப்படிக்கு

தூக்குகயிறு

மத்திய சிறைச்சாலை

இந்தக்குடையின் கீழ்தான்..

நானும் அவளும்...

நெருங்கி..உரசி..

நடந்து வந்தோம்..

இதை அன்றுதான்.

வாங்கியிருந்தேன்..

இன்றும் பத்திரமாக..

இந்தக்குடை..என்னிடமே..

இப்போதென்ன கொஞ்சம்

துருப்பிடித்துவிட்டது..ஆம்..

அதற்கும்..இருபத்தைந்து வருடங்கள்..

வயதாகிவிட்டதல்லவா..

ம்..அவளுக்கும் எனக்கும்

காதலாகி..திருமணமாகி..

இரண்டு பிள்ளைகள்.

சிறியவன் அவளோடு..

பெரியவனும்..குடையும்.. என்னோடு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூறல்கள் மீன்டும் மீன்டும் துளிர்க்கட்டும் கவிஞரே! நன்றி. :lol::)

Link to comment
Share on other sites

தூறல் நாள் -7

நான்..

என்னால்..

என்னிடம்...

என்னை..

என்ற மாயைக்குள் விழுந்து..

நிலையில்லா வாழ்வில்..

தற்பெருமை கொள்ளும்..

ஆனந்தமா.. அகந்தை..

ஏய்.. அழகியே..

இந்த சாலை மரங்களையெல்லாம்..

இப்போதுதான்.. திட்டிக்கொண்டிருந்தேன்..

"பெற்ற மழலையைக் குப்பையில் எறிவது போல்

அழகான பூக்களைத் தரையில் கொட்டுகின்றாயே.."என்று

மரங்களில் தவறேயில்லை..

வானாளாவ உயர்ந்த மரங்கள்..

நீ.. நடந்து வருவதனைக் கண்டுதான்..

உன் மென்பாதங்களுக்காகத்தான்..

பூக்கம்பளம் விரித்திருக்கின்றன!!!

அன்புள்ள தம்பி..

நலமாக இருக்கிறாயா..

நாங்கள் நலம்.. உன்

நலத்தைப் பார்த்துககொள்..

...இப்படி அண்ணாவின் கடிதம்..

பல பக்கங்கள் நீண்டிருந்தாலும்..

என்னை வாழ வைத்த.

தெய்வம்.. தன்.

துக்கங்களைப் பற்றி மட்டும்..

துளியும் எழுதவில்லை

தன் வறுமையைப் பற்றி

வரியும் சொல்லவில்லை..

அண்ணா உன் இதய சுத்தமும்..

சுய கௌரவமும்..

என்னிடம் இல்லை..

உன் ஏழ்மை அறிந்தும்..

உதவ இயாலாமல்..ச்சே..

பொறுத்துக்கொள் அண்ணா..

என்னுடைய மனைவியிடம்..

கொஞ்ச பணம் அனுப்பலாமா..என

கேட்டிருக்கின்றேன்..

நல்ல பதில்

கிடைக்கும் என நம்புகிறேன்..

இப்படிக்கு..

உன் அன்புத் தம்பி

என் காதலி மௌனவிரதம்

இருப்பாள்.. அப்போதெல்லாம்..

நான் கேட்பேன்..

"எதற்காக மௌனவிரதம்

இருக்கிறாய்.. நீ விரதம்.

இருந்திடாத போது மட்டும்..என்ன

எதாவது பேசிவிடப்போகின்றாயா"என்று

..இப்போது அவள் என் மனைவி..

"நான் வீட்டில் இருக்கும்போது

நீ மௌனவிரதம் இருக்கமாட்டாயா."

என்று மனது அவளிடம்

கேட்டுக்கொண்டே இருக்கிறது..

Link to comment
Share on other sites

தூறல் நாள் -8

மைவிழிகண்டேன் பெண்ணே..

உந்தன் மையலில் விழுந்தேன்

அன்பே என்றேன்..அடி

நீதானா..நீதானா...

நினைவை நிரப்பியது...

என் வைப்பகம் நிரம்பி வழிகிறது..

இனி எங்கே ஓரிதயம் தேடுவது....

உன் நடையும்.. மெல்லிடையும்..

என் இளமையைக் குடையும்..

உன் கூந்தல் உன் பார்வை

என் முகவரியை மூடியது..

உந்தன் வண்ணத்தில் கொஞ்சம் தொட்டு..

செந்தாமரை மிளிர்கிறது...

உந்தன் புன்னகை வெளிச்சம்

பெற்று வெண்ணிலா ஒளிர்கிறது..

உன் கன்னக்குழியில் என்

வன்மை வழுக்கிடுமோ..

உன் காதுநுனியில் என்

பற்களின் அணிநடையோ..

நீ வீணை போல ராகம் தந்திட

விரல்கள் மீட்டாதா..

என் விரலுக்கு அசையும் வீணை

என்ன தாளம் கேட்கிறதா..

விழிகள் மூடும் இமையூடே

என்னைப் பார்த்தாயோ..

ஒளியில்லாத இரவுக்குள்..

எனைக்கண்டு மலர்ந்தாயோ..

அன்பை மட்டும் சொல்லில் சொல்ல

அன்பே முடியாது.. என்

அன்பை எல்லாம்

வாரித்தருவேன்..ஜென்மம் போதாது

வாழ்விலும் தாழ்விலும்..ஒன்றே..

ஈருடல் ஓருயிர் என்றே...

என் இன்பத்தாலுன் துனபம் துடைப்பேன்..

ஏகபத்தினி விரதனாய் வாழ்ந்து இறப்பேன்.

Link to comment
Share on other sites

தூறல் நாள் -9

முத்தும் மணியும் மரகதமும்..

கொட்டி குவித்த திரவியமும்..

பொன்னும் பொருளும் பெரும் புகழும்..

பூமியை ஆழும் அரியணையும்..

யாவும் பெற்றும் மனிதனுக்கு-பெற்ற

தாய் அன்பு இன்றேல் வாழ்வெதற்கு..

ஒரு வெள்ளை ரோஜா

குலுங்கி சிரிக்கிறது..

ஒரு பூங்காவனம்

வீதியுலா போகிறது..

ஒரு வெண்ணிலா

கட்டிலில் உறங்குகிறது..

ஒரு தேவதை என்

திருமதியானது..

என்னுடைய எல்லாப்

கற்பனைப் புகழுரைக்கும்

அவள் ஒப்பானவள்.. ஆனால்..

அந்த பாவத்திற்காக..தினசரி..

நான் கொடுக்கவேண்டியிருக்கிறது..

வரன்தட்சணை

முதல் காதல்..

முதல் முத்தம்..

முதல் வார்த்தை..

முதல் அணைப்பு.

எல்லாம் நினைவில்

நீங்கா இனிமை..

அவற்றிற்குரியவள்..

முதல் விவாகரத்து

கேட்காதவரை

அவள்மௌனம் கூட

ஆயிரம் கதை பேசும்..

அவள் புன்னகை கூட

நூறு அர்த்தங்கள்

சொல்லும்..

அவள் வழிகள் பல

விதிகள் செய்யும்..

அவள் விரல்களால்

புதுப்புது ஆணை போடுவாள்..

அவள் இறுதியில்..

"அண்ணா" என்ற சொல்லால்...

ஆளையே கொல்வாள்..

Link to comment
Share on other sites

என் காதலி மௌனவிரதம்

இருப்பாள்.. அப்போதெல்லாம்..

நான் கேட்பேன்..

"எதற்காக மௌனவிரதம்

இருக்கிறாய்.. நீ விரதம்.

இருந்திடாத போது மட்டும்..என்ன

எதாவது பேசிவிடப்போகின்றாயா"என்று

..இப்போது அவள் என் மனைவி..

"நான் வீட்டில் இருக்கும்போது

நீ மௌனவிரதம் இருக்கமாட்டாயா."

என்று மனது அவளிடம்

கேட்டுக்கொண்டே இருக்கிறது..

தாங்க முடியலைப்பா.

நல்லாக இருக்கு அனைத்து தூறல்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரே! அவர்கள் மௌனவிரதம் இருந்ததே உங்கள் மௌனத்தைக் கலைக்கத்தான். தொடருங்கள். வாழ்த்துக்கள். :lol::D

Link to comment
Share on other sites

தூறல் நாள் -10

நாம் இருவரும்..

செதுக்கிய உயிர் சிலை..

உன் சாயலா...

என் சாயலா..

என்று சர்ச்சை

எழுந்ததையிட்டு..

சந்தோசம்..

இருவர் சாயலும் இருப்பதால்தான்..

உச்ச நிம்மதி

தேவதைப் பெண்ணே..

உன்னிடம்.. தவறு

செய்தபின்..

குமுறி அழ..

தாய்மடி வேண்டாம்..

உன்மடிதான் வேண்டும்.

இதய பரப்புக்குள் நுழைந்தாய்

சரி..

இரண்டே நாளில்..

என்னை எப்படி ஆயுள்க் கைதியாய்..

செய்தாய்?..

உன் மௌமும்..

என் மௌனமும்..

நம் முத்த உச்சத்தில்

ஏறி.. தேக வெப்பத்தில்

தற்கொலை செய்து

கொள்ளும் சத்தம் ஊருக்கு

கேட்குமோ என்று

பயமாக இருக்கிறது.

பார்க்கவும்..

பேசவும்..

வழிதேடித்தவிக்கும்..

இரு உள்ளங்களை தடுத்து

வைத்திருக்கும்..

தூரம் காதலில்

கொடுந் துயரம்.

உன் முனகல் கூட

கவிதைதான்..

அதில் சம்மதத்தையும்..

மறுப்பையும்.. அமுதம்

கலந்து தருவதால்..

அதை நினைத்து

நினைத்து ரசிக்கிறேன்.

Link to comment
Share on other sites

தூறல் நாள் -11

உன்னருகில்..

உன்னணைப்பில்...

கண்மயங்கி...

மெய்யிறுக்கி..

காதில் இதழ்கள் உரசி..

காற்றுக்கலந்த கொஞ்சல் மொழி பேசி..

காற்றுக்கும் ஆடைக்கும்..

இடமின்றி ஒட்டிக்கிடந்து..

உயிரை உயிரில் உள்வாங்கி...

ஜென்மசுகம் கண்டு..

மெல்லிய நிலவொளியில்

உன்முகம் பார்த்தேன்..

மயங்கிக்கிடந்ததென்ன..

தேவதையேதானா...

என்ன அழகடி நீ..

மறந்தும் பிரியாமல்..

மண்ணில் வாழ வா..

இணைந்தேயிறந்து..

விண்ணிலும் வாழ்வோமா..

என்னை ஜீவசுத்தம் செய்தவளே...

என்னைப் பிரதி செய்தவளே...

என்னைத்துதி செய்பவளே..

என்னைக் கேலி செய்பவளே..

என்னை சிற்பமாய்ச் செய்பவளே..

என்னைக் குழந்தையாயும்..

என்னைக் கோவாயும் செய்தவளே..

என் பிறப்பர்த்தமே..உயிரே..

உன்னைச் சரணடைந்தேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் விகடகவியாரே

உங்கள் தினசரி தூறல்கள் மிகவும் நன்றாகஉள்ளது.

அன்புடன்

எரிமலை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.