Jump to content

தினசரி தூறல்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விகடகவி said:

வெளிச்ச வீடுகள்
பார்த்து
இருண்டு
போகிறது மனது
ஒரே ஒரு நாள்
உயரம் தொடர்ந்தாளே
என்னோடு!

 

வாவ் சூப்பர்....! tw_blush:

உண்மையாகவே உடலை உரசி மனசை வருடிச் செல்கின்றது வாசனை. அபாரம்....!

Link to comment
Share on other sites

  • Replies 513
  • Created
  • Last Reply

வந்தும் வராததுமாக
இரவு கூட
தூங்க.. என்
இதயம் மட்டும்
ஏனோ தூங்காமல்
கிடைக்காது என்று
தெரிந்தும்
இருட்டுக்குள்
கண்ணை விட்டு
தேடிக்கொண்டிருக்கிறது
உன்னை..

நீ ..விடியல்
கொண்டு வந்து
இரவு மூடி வைத்துபோன
வெளிச்சம் போல

எனக்குள் உட்கார்ந்து
பிரகாசிக்கிறாய்
உன்னால்தான்
உண்ணவோ
உறங்கவோ
முடியாமல்..சுத்தி
சுழல்கிறேன்..
ஊரே பரிகாசித்தும்
உன்னன்பை 
யாசிக்கிறேன்..
..
வாசித்து அறிவாயென
கண்ணிமைகள் திறந்து வைத்தும்
நேசிக்க மறுத்துவிட்டு
நெடுந்தூரம் போனாயே
வழி அறிந்தாலும் வரமாட்டாய்
வலி அறிந்தாலும் வரமாட்டாய்..

வழமை போல
காதல் கவியாகி 
குப்பை செல்லும்
கண்கள் வலியாகி
தூங்கச்செல்லும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழமை போல
காதல் கவியாகி 
குப்பை செல்லும்
கண்கள் வலியாகி
தூங்கச்செல்லும்

வலியுள்ள கண்களால் தூங்க முடியாது கவிஞரே......!

கண்கள் வலியாகி கண்ணீர் சொரியும் .... சரியாய் வரும் என நினைக்கின்றேன்....!  tw_blush:

 

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் நான் கடன் வாங்கமாட்டேன்tw_blush:tw_blush: lol

நன்றி சுவி 
கருத்து பிழையை திருத்தியமைக்கு 

 

வழமை போல
காதல் கவியாகி 
குப்பை செல்லும்

கண்கள் வலியாகி
தூக்கம் கொல்லும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபாரம் கவிஞரே .... நான் சொல்லியதை விட உங்கள் வரி மிக வலிமையாய் உள்ளது.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

காற்றே நீ
டாவின்சி
கை தவழ்ந்த
தூரிகையையா..
நீல வானம் மேல்
வெண்முகிலை கலைந்து-இப்படி
வரைந்திருக்கிறாயே
அழகோவியம்!!!

Link to comment
Share on other sites

  • 1 month later...

மழை பெய்ய 
வீட்டுக்குள் ஒழுக்கு..

பாத்திரங்கள் 
போதாமல்

அம்மா கவிழ்த்துவிட்டார்
தலையில் ஆளுக்கு
ஒன்றாய்..

ஏழைகள் கண்ணீரும்
காயும்போது..
வானமும் கூடியழும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்....நல்லது, ஒழுக்குகள் அதிகமாகும் போது குடையாக பாத்திரங்கள்.அருமை.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மதமும் ஜாதியும்
சித்தம் சேர்ந்து
பிரம்மை ஆனதடா

இரத்தம் பார்த்து
இரத்தம் பார்த்து
மரத்துப்போனதடா

இதயம் இல்லா
மனிதர்கூட்டம்
அதிகம் உள்ளதடா

மதவெறுப்புக்காகவா
இந்த உலகமும்
மௌனம் கொள்ளுதடா

மனிதநேய உரிமைகள்
பேசும் மேசைகள்
மௌனிகளானதடா

பூவும் பிஞ்சும்
குறுதியில் எரிந்திட
என்னுயிர் நோகுதடா

இவ்வலிகளை அன்று
ஈழத்தில் தந்த 
வடுக்கள் உள்ளதடா

எந்த இனம் அழுதாழும்
தானும் அழுவதே-நம்
தமிழர் இதயமடா

Link to comment
Share on other sites

  • 1 month later...

வண்ணப்பூக்கள் கலந்து வார்த்த என் வாசதேவதை..-நீ 
வாரந்தோறும் வாசல் வந்தால் வாழ்வே தேன்மழை..
உன் வட்டவிழிகள் சுட்டு நெஞ்சு காயமானதே..
என் கிட்ட வந்து முத்தமிட்டால்
காயமாறுமே..
பூவைப் போல பூவை -
நீ யாரோ செய்த பாவை..
பாவை பார்த்த பார்வை
இதயம் பள்ளமானதே..
மலரில் நடக்கும் மலரே..
உன்பாதம் கமலச்சுவடே..
அதை ஏந்த ஏங்கி..
ஏங்கி ஏங்கி சாகிறேனே...
தென்றல் உரசும் தென்றல் -
நீதேவலோக மின்னல் என்னைத் தீண்டிச்சென்றதாலே 
நானும் ஆனேன் வள்ளல் 
வார்த்தை வள்ளல்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரதோஷம் போல் மாதத்தில் சிலமுறை வந்தாலும் 

மனசு நிறைய மணம் வீசும் கவிதைகள் சந்தோசம்.....!

வாழ்த்துக்கள் கவிஞரே....! tw_blush:

Link to comment
Share on other sites

  • 1 month later...

என் கடவுள் வீட்டு
மண்ணிஎன் கடவுள் வீட்டு
மண்ணில் ஒரு கைப்பிடி
எதிரி எடுத்துப்போனான்
அவல் ஒரு கைப்பிடி

எதிரி எடுஎன் கடவுள் வீட்டு
மண்ணில் ஒரு கைப்பிடி
எதிரி எடுஎன் கடவுள் வீட்டு
மண்ணில் ஒரு கைப்பிடி
எதிரி எடுத்துப்போனான்
அவனுக்கு தெரிகிறது-கரிகாலன் மண் பெருஎன் கடவுள் வீட்டு
மண்ணில் ஒரு கைப்பிடி
எதிரி எடுத்துப்போனான்
அவனுக்கு தெரிகிறது-கரிகாலன் மண் மைத்துப்போனான்

அவனுஎன் கடவுள் வீட்டு
மண்ணில் ஒரு கைப்பிடி
எதிரி எடுத்துப்போனான்
அவனுக்கும் தெரிகிறது
கரிகாலன் மண் பெருமை க்கு தெரிஎன் கடவுள் வீட்டு
மண்ணில் ஒரு கைப்பிடி
எதிரி எடுத்துப்போனான்
அவனுக்கு தெரிகிறது-கரிகாலன் மண் பெருமைகிறது-கரிகாலன் மண் பெத்துப்போனான்

அவனுக்கு தெரிகிறது-கரிகாலன் மண் பெருமை

என் கடவுள் வீட்டு
மண்ணில் ஒரு கைப்பிடி
எதிரி எடுத்துப்போனான்
அவனுக்கும் தெரிகிறது
கரிகாலன் மண் பெருமை 

Link to comment
Share on other sites

  • 1 month later...

நீ நடந்து போகின்ற
சாலையோரத்தில் 
மரங்கள் இருக்கின்றன
உனை ரசித்து
பூக்கள் சொரிகின்றன
நீ கடந்து போகிறாய்

நீ கடந்து போகின்ற
பாதையில்
பட்டாம்பூச்சிகள் உன்
அழகைப் பார்த்து
படபடக்கின்றன
நீ கடந்து போகிறாய்

உனைப் பார்த்து
குயில்கள் கூவி
மகிழ்கின்றன
நீ கடந்து போகிறாய்

அழகியே..
அங்கே ஓர் இளைஞன்
தினசரி
மரமாய்ப் பூச்சொரிந்தும்
குயிலாகி குதூகலித்தும்
பட்டாம்பூச்சியாய்
படபடத்தும்
உனக்காய் காத்திருக்கிறான்
பார்த்தாயா..
நீ கவனித்தும் கூட
இருக்கலாம்..ஆனால்
பாவம் அவன்தான்
புரிந்துகொள்ளவில்லை
அந்த பட்டாம்பூச்சிகள் போல்
அந்தக்குயில்கள் போல்
அந்த மரங்கள் போல்
அவனும் கடந்து போகின்ற
ஒன்றுதான் என்று!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.