Jump to content

தினசரி தூறல்கள்...


Recommended Posts

முற்றுபுள்ளி அருகே
முளைக்குமொரு புள்ளியிலே 
மெல்ல திறக்கும்
ஒரு கதவு!!

 

உண்ண உணவும் 
உடுக்க உடையும் இன்றி
ஏழைகள் ஏங்கி கிடக்க..
வாக்கு பிச்சை கேட்டு
வாசலில் நின்றவர்
தங்கமும் பணமும்
ஊரெல்லாம் பதுக்கி
உப்பி கிடக்கிறார்..
ஒதுக்கியது போதாதென்றோ 
பதவியை நீடிக்க..
அம்மா..சின்னம்மா..
ஐயா சின்னையா..
கால் விழுந்து கிடக்கிறார்.!!

 

 

Link to comment
Share on other sites

  • Replies 513
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக இருக்கு , தொடருங்கள் கவிஞரே ....!  tw_blush:

Link to comment
Share on other sites

ஊழல் வெல்ல
உண்மை மாள

தேர்தல் இன்றி 
வெற்றி கொள்ள

பணம் கொண்டு
பயம் காட்ட

பதவி கனவில்
பவ்யம் காட்ட

அம்மாவை மறந்த 
சின்னம்மா பிள்ளைகளே

காத்திருங்கள் வரும்
மக்களின் தீர்ப்பு!

Link to comment
Share on other sites

10 minutes ago, விகடகவி said:

ஊழல் வெல்ல
உண்மை மாள

தேர்தல் இன்றி 
வெற்றி கொள்ள

பணம் கொண்டு
பயம் காட்ட

பதவி கனவில்
பவ்யம் காட்ட

அம்மாவை மறந்த 
சின்னம்மா பிள்ளைகளே

காத்திருங்கள் வரும்
மக்களின் தீர்ப்பு!

பணம் தான் எல்லாம் என்றாகி  விகடகவி.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • 2 weeks later...

எப்போது தமிழா சிரிப்பாய்..

ஆதி மொழியென்றாய்
அழகான தமிழென்றாய்..

இயல் என்றாய்
இசை என்றாய்
நாடகம் என்றாய்
முத்தமிழே மூலமென்றாய்

கடாரம் வென்றவனென்றாய் -போர்
களம் பல கண்டவெனென்றாய்

செம்மொழி
தந்ததே நம்
திருக்குறளென்றாய்

ஆய கலைகளுக்கும்
ஆணி வேரென்றாய்..

ஆண்ட பரம்பரை..
அடிமையாய் 
எபபோதானாய்..

சிறப்புகளின்
சிகரமின்று
சிரிப்பிழந்து
போனதேனோ..

ஈகத்தில் ஈடில்லை
என்ற பெயர்
கேட்கத்தானா..

வந்தாரை வாழவைத்து
ஆழ வைத்து 
பார்க்கத்தானா..

முன்னே பார்த்திருந்து
முதுகில் புண்
பார்க்கத்தானா

பின்னோரை நினையாமல்
மன்னித்து
மறப்பதாலா...

வஞ்சனை அறியாமலே-வாக்குப்
புள்ளடி பொறித்ததாலா..

வாஞ்சனை என நினைத்து
பாம்புகள் வளர்த்ததாலா..

ஊரெல்லாம் நிறைந்தும்
உலகெல்லாம் தெரிந்தும்
நாடுமில்லை நாதியுமில்லை

எப்போது தமிழா சிரிப்பாய்..

உனைத்தீண்டி
சிரித்தோரை 
எரித்தால்...

உனைச் சுரண்டி
வாழ்வோரை
எரித்தால்..

உனைத் தீண்ட
நினைப்போரை
எரித்தால்..

இருப்பாய்
தமிழா
நெருப்பாய்..

சிரிப்பாய்
சுதந்திரமாய்
அந்நாள் !

Link to comment
Share on other sites

  • 1 month later...

அப்பழுக்கில்லாத ஆரம்பம்
வெள்ளைக்காகித மனது

அப்பாவின் தோளின்
சவாரி அவரின்
அவசரத்தால் முடிய..

விரிந்த புற்தரையும்
திறந்த ஆகாயமுமே
எதிரே எதிர்காலமாய்

இரவு கனவுகளையும்
பகல் பயத்தையும்
பிரசவித்துக்கொண்டிருக்கிறது

அழகான இளமை
அன்பான மாசற்ற மனது
கனவில் கடவுள் வந்தார்..

கனவில் வந்த கடவுளை
பகலில் ஏமாற்றிக்கொண்டிருக்கிறேன்..

ஆம் ஆசை என்னை
தின்றுகொண்டிருக்கிறது

வரம் தந்த கடவுளை வைத்து
வியாபாரம் செய்கிறேன்..

பணம் கொட்டிய கடவுள்..
பயம் காட்டிய மனட்சாட்சி..

கனவு வேண்டி கண்கள் மூடுகிறேன்
தூக்கம் வரவில்லை..

கடவுள் ஏமாற்றிவிட்டார்?

பழைய பழக்கத்தில்
கல்லை வைத்து வியாபாரம் செய்கிறேன்

எனக்கு மட்டும்தான் தெரியும்
தூக்கமும் கடவுளும்
காணாமல் போனது !

மீண்டும் அந்த
மாசற்ற மனதும்
விழுந்ததும் தூக்கமும்
வரவே வராதா..

வராது
திரும்பி போகமுடியாத
வாழ்க்கை..

பிராயசித்தங்களை
கல்லை விட்டோடிவிட்ட
கடவுள் ..
கனவில் வந்து
சொல்வாரென
காத்துக்கிடக்கிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணம் கொட்டிய கடவுள்..
பயம் காட்டிய மனட்சாட்சி..

 

இது மிகவும் பிடித்திருக்கு கவிஞரே....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 weeks later...

அன்னையர் தின வாழ்த்துக்கள்

எங்கேயும் என்னை 
விட்டுவிடாமல் 
கண்ணுக்குள்ளேயே 
வைத்திருந்தாள் ..அம்மா

( மூன்று மாதம் 
அக்கா வீட்டிலும் 
மூன்று மதம் 
அண்ணன் வீட்டிலும் 
மூன்று மாதம் 
என்னோடும் 
யார் பார்த்துக்கொள்வதென 
சுமையாக நினைத்தோமே..)

அன்னையர் தின வாழ்த்துக்கள்

தூசு விழுந்து 
நோகுமென்று 
அலறித்துடித்து 
பார்ப்பாளே அம்மா

( ஓரிடமாய் இருக்காமல் 
ஏன் விழுந்து தொலைகிறீர்கள் 
சலிப்புகளை அவள் 
உணர்ந்திருப்பாளே )

அன்னையர் தின வாழ்த்துக்கள்

"வெறும் வயிற்றில் 
தூங்க கூடாது ராசா" 
தூங்கி விழ விழ 
ஊட்டுவாளே அம்மா

( அப்பாவின் நினைவென்று 
பழைய வீட்டில் போய் 
வசித்தாள் ..
"சாப்பிட்டாயா அம்மா "
என்று பிள்ளை கேக்கவிலையே 
என வருந்தி இருப்பாளே அம்மா )

அன்னையர் தின வாழ்த்துக்கள்

வினாடிகள் எல்லாம் கூட 
எமக்காக கொடுத்தவளை 
நூறுமுறை சலிக்காமல் 
கொஞ்சி கதை சொன்னவளே அம்மா

( அழைக்கமாட்டாயா 
குரல் கேட்க ஆசை என்றும் 
வந்து போகாயா 
முகம் பார்க்க ஆசை என்றும் 
கெஞ்சி கேட்ட அன்னையிடம் 
நேரமில்லை என்றபோது 
ஏங்கி துடித்திருப்பாளே )

அன்னையர் தின வாழ்த்துக்கள்

வாழும்வரை சொல்லவில்லை 
வாஞ்சையுடன் இருந்ததில்லை 
விரல் பற்றி நடை கொடுத்தாய் 
விடை சொல்ல வரவில்லை

கூனிகுறுகாமல் 
யாருக்காய் சொல்லுகிறேன் 
முகப்புத்தகத்தில் இன்று 
அன்னையர் தின வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச்...சா  என்ன ஒரு அருமையான கவிதை. மிக நன்றாக இருக்கின்றது.....! tw_blush:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

மூச்சு முட்டிய
ஏக்கங்களோடு
சொந்த மண்ணில்
பிறந்த மண்ணில்
வாழ முடியாமல்
திக்கு திக்காய்
திசைக்கொன்றாய்
சிதறி வாழ்கின்ற
ஈழத்தமிழரின்
சின்ன சின்ன
இதயங்களின்
பெரிய ஏக்கம்..
விடுதலை பெற்ற
மண்ணில் ஒரு
நாளேனும் வாழ்வதுதான்..

சின்ன சின்ன
வெற்றிகளையும்
இப்படி கொண்டாடுகிறீர்களே
எனக் கேட்கிறார்கள்..

ஆம்
எம்மவரின்
சின்ன சின்ன
வெற்றிகள் கூட
எமக்கு பெரிய
சாதனைதான்
பெருமிதம்தான்..

ஒவ்வொரு சின்ன
வெற்றிக்கு பின்னாலும்
பெரிய ஒரு அர்ப்பணம் இருக்கிறது
கடினமான பயணம் இருக்கிறது
வடுக்களும் வலிகளும்
விசும்பலும் வேதனையும்
காலங்கள் தாண்டியும்
காயாத கண்ணீரும் இருக்கிறது

எழிலும் வளமும்
ஈரமும் நிறைந்த எங்கள்
ஈழத்தில்..
கந்தகம் படாத கற்கள் இல்லை
இரத்தம் சொட்டாத
மனிதன் இல்லை..

வாழ்க்கை சக்கரம்
ஓடும்போது நினைக்கிறோம்
ஓய்வெடுக்கும்போது
அழுகிறோம்..

எங்கள் சின்ன சின்ன
வெற்றிகள்தான்
எங்கள் காயங்களுக்கு களிம்பு
வேதனைக்கு மருந்து..

எங்கள் சின்ன சின்ன
வெற்றிகளை ..
இனி
நீங்களும் கொண்டாடுவீர்கள்

Link to comment
Share on other sites

மேகங்கள் கூட
ஏழைகள் பக்கம் இல்லை..
நா வரள
வானம் பார்க்கிறான்
விவசாயி -தன்
நிலம் போல்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூச்சு முட்டிய
ஏக்கங்களோடு
சொந்த மண்ணில்
பிறந்த மண்ணில்
வாழ முடியாமல்
திக்கு திக்காய்
திசைக்கொன்றாய்
சிதறி வாழ்கின்ற
ஈழத்தமிழரின்
சின்ன சின்ன
இதயங்களின்
பெரிய ஏக்கம்..
விடுதலை பெற்ற
மண்ணில் ஒரு
நாளேனும் வாழ்வதுதான்..

 

இது முழுக்க முழுக்க உண்மை விகடகவி....! 

Link to comment
Share on other sites

உனைப்போலவே..
உன்னை அறவே
மறந்ததாகவே
வாழமுயன்றபோதும்..
நினைவுகளுக்குத்தான்
தடை போட முடிந்தது..
நீ வந்து உறவாடும்
கனவுகளுக்கல்ல!!

Link to comment
Share on other sites

ஒரு பேனா பேசுகிறேன்...

எங்கேயோ பிறந்து..
எங்கேயோ வளர்ந்து..
இவன் கையில் விழுந்தேன்..

இவன் எடுத்ததும் எழுதியது
அவள் பெயரைத்தான்..

எத்தனை முறை
எழுதியிருப்பான் அவள் பெயரை

தேவதைகள் பூமியிலும்
பிறக்குமென உனைக் கண்டே
அறிந்தேன்..

நீ வரம் தருவாய்
என எண்ணி நீ
வரும் வழியில்
சுழன்றேன்..

தலை சாய்க்கும்
பக்கமோடி நிலைக்
கல்லாய் நின்றேன்

நீ பாராதே
சென்றுவிட
பரிதவித்துக்கொண்டேன்

ஈட்டிவிழி
தொட்ட இடம்
என் இதயமென்று
பாட்டெழுதும் என்
நிலைக்கு பரிகசிப்பும்
உண்டு

நீ வராத
நாளில் நான்
நிலவில்லாத வானம்
நீ நடந்த
பாதையில்தான்
என் காதல் தியானம்

இவன் அவளுக்காய்..
ஆயிரம்மாயிரமாய்
எழுதினான்..

காதலே கண்ணீர் விடும்..
கவியெழுதி காகிதத்தில்
தூங்கினான்...

பேனா.. நானே
இவனைக்
காதலிக்க ஆரம்பித்தேனே..

பெண்ணவள்
காதலிக்க மாட்டாளா?..
மாட்டாள்..
காதலை சொல்லவே
தைரியம் இல்லையே
இவனை எங்கனம்
காதலிப்பாள்

என்னாலும் முன்போல்
எழுத முடியவில்லை..

காகிதத்தை கிழிப்பான்
என்னை தரையில் எறிவான்..
இயலாமை..என்ன
செய்வான்..

அவளுக்கு தெரியாமல்
இவன் வளர்த்த காதல்
அவளறியாமலே..
இவனோடு மரித்த காதல்..

ஆம்..அதற்கும்
நானே சாட்சி
அவனே எழுதினான்..
என் சாவுக்கு
யாரும் காரணமில்லை என..

முட்டாள்..
முதல்முறை எழுதிய
கடிதத்தை கொடுத்திருந்தாலே
தப்பித்திருப்பான்..

இவனுக்குள்ளே..
இவன் ஒருதலை காதல் வளர
காரணமான ..
கன்னியே..
கற்பனையே
கவிதையே..
காகிதமே..
பேனாவே....

ஐயகோ.. இந்த
கோழையின்
சாவுக்கு நானும்
காரணமா?..

ஒரு பேனா..
நான் என்ன செய்வேன்

Link to comment
Share on other sites

புத்தகத்தில் மூடி வைத்த
மயிலிறகை
ஓடிச்சென்று பார்த்த
சிறு பையனாய் -என் 
பதிலுக்கு உன் பதிலை 
ஓடி சென்று பார்க்கிறேன் 
மயிலிறகும் குட்டி 
போட்டதில்லை
இந்த மயிலும் 
பதில் இட்டதில்லை 
யோசித்து பார்த்ததில் 
காதல் கூட மூட நம்பிக்கைதான்
இடம் மாறுவதற்கு நம்பும் 
இதயங்கள் எங்கும் மாறுவதில்லை
நீ இல்லாமல் நன் இல்லை
என்று யாரும் வீழ்வதில்லை
வார்த்தைகள் பூசி
நினைவுகள் கோலம் 
போட்டாலும் காலத்தால்
அழியாத கோலங்கள் 
எதுவும் இல்லை 
காவியங்கள் 
உண்மை இல்லை -காதல்
கல்லறையில் 
பெண்கள் இல்லை 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

வணங்கப்படாமலே
நூறு கடவுள்கள்

சொல்லப்படாமலே
ஆயிரம் மந்திரங்கள்

சென்று வராமலே
இலட்சம் கோயில்கள்
உள்ள பூவுலகில்..

அம்மாவை வணங்காத உயிரும்

அவள் அன்பை ஓதாத உளமும்

கர்ப்ப கோயில் வாழாத
யாரும் உளரோ..

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

தாண்டிச் செல்லவேண்டிய
மேடுபள்ளங்களா வாழ்க்கை?..

பறந்து செல்லவேண்டிய
பால்வெளி இல்லையா..

சுகர்ந்து செல்லவேண்டிய
சோலைகள் இல்லையா..

நனைந்து செல்லவேண்டிய
சாரல்கள் இல்லையா..

மகிழ்ந்தும் இசைந்தும்
செல்லவேண்டிய
பயணம் இல்லையா...

தாய்தந்தை..ஆசான்
ஆணைப்படி
பாதி பயணமும்...

பிள்ளையின் பயண
ஆயத்தங்களில்
மீதி பயணமும்..

எங்கோ வாழ்க்கை
வாழ மறந்து
வழக்கமாகி கிடக்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூறல்களில் நனையும் ஆசையினால் குடை எடுத்து வரவில்லை.... தூறட்டும் விடாமல் தூறல் .....!  tw_blush:

Link to comment
Share on other sites

விழிகள்
கண்டதும் 
மாண்டது
வல்லினம்..

அவளின்
கால்களில்
சிணுங்கும்ம்
இசையினம்..

வாசக்கூந்தலில்
மனசோ
பூவினம்..

பேசும் ஓவியம்
அவளோ
குயிலினம்

பேதை
அழகியல்
தோகை 
மயிலினம்

காதல்
பிறந்திட்டால்
ஆணும்
மெல்லினம்
நாணும்
சொல்லினம் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையின் கவர்ச்சியில் சாரலாய் அடிக்குது ஜொள்லினம்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

வெளிச்ச வீடுகள்
பார்த்து
இருண்டு
போகிறது மனது
ஒரே ஒரு நாள்
உயரம் தொடர்ந்தாளே
என்னோடு!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.