Jump to content

தினசரி தூறல்கள்...


Recommended Posts

முற்றுபுள்ளி அருகே
முளைக்குமொரு புள்ளியிலே 
மெல்ல திறக்கும்
ஒரு கதவு!!

 

உண்ண உணவும் 
உடுக்க உடையும் இன்றி
ஏழைகள் ஏங்கி கிடக்க..
வாக்கு பிச்சை கேட்டு
வாசலில் நின்றவர்
தங்கமும் பணமும்
ஊரெல்லாம் பதுக்கி
உப்பி கிடக்கிறார்..
ஒதுக்கியது போதாதென்றோ 
பதவியை நீடிக்க..
அம்மா..சின்னம்மா..
ஐயா சின்னையா..
கால் விழுந்து கிடக்கிறார்.!!

 

 

Link to comment
Share on other sites

  • Replies 513
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக இருக்கு , தொடருங்கள் கவிஞரே ....!  tw_blush:

Link to comment
Share on other sites

ஊழல் வெல்ல
உண்மை மாள

தேர்தல் இன்றி 
வெற்றி கொள்ள

பணம் கொண்டு
பயம் காட்ட

பதவி கனவில்
பவ்யம் காட்ட

அம்மாவை மறந்த 
சின்னம்மா பிள்ளைகளே

காத்திருங்கள் வரும்
மக்களின் தீர்ப்பு!

Link to comment
Share on other sites

10 minutes ago, விகடகவி said:

ஊழல் வெல்ல
உண்மை மாள

தேர்தல் இன்றி 
வெற்றி கொள்ள

பணம் கொண்டு
பயம் காட்ட

பதவி கனவில்
பவ்யம் காட்ட

அம்மாவை மறந்த 
சின்னம்மா பிள்ளைகளே

காத்திருங்கள் வரும்
மக்களின் தீர்ப்பு!

பணம் தான் எல்லாம் என்றாகி  விகடகவி.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • 2 weeks later...

எப்போது தமிழா சிரிப்பாய்..

ஆதி மொழியென்றாய்
அழகான தமிழென்றாய்..

இயல் என்றாய்
இசை என்றாய்
நாடகம் என்றாய்
முத்தமிழே மூலமென்றாய்

கடாரம் வென்றவனென்றாய் -போர்
களம் பல கண்டவெனென்றாய்

செம்மொழி
தந்ததே நம்
திருக்குறளென்றாய்

ஆய கலைகளுக்கும்
ஆணி வேரென்றாய்..

ஆண்ட பரம்பரை..
அடிமையாய் 
எபபோதானாய்..

சிறப்புகளின்
சிகரமின்று
சிரிப்பிழந்து
போனதேனோ..

ஈகத்தில் ஈடில்லை
என்ற பெயர்
கேட்கத்தானா..

வந்தாரை வாழவைத்து
ஆழ வைத்து 
பார்க்கத்தானா..

முன்னே பார்த்திருந்து
முதுகில் புண்
பார்க்கத்தானா

பின்னோரை நினையாமல்
மன்னித்து
மறப்பதாலா...

வஞ்சனை அறியாமலே-வாக்குப்
புள்ளடி பொறித்ததாலா..

வாஞ்சனை என நினைத்து
பாம்புகள் வளர்த்ததாலா..

ஊரெல்லாம் நிறைந்தும்
உலகெல்லாம் தெரிந்தும்
நாடுமில்லை நாதியுமில்லை

எப்போது தமிழா சிரிப்பாய்..

உனைத்தீண்டி
சிரித்தோரை 
எரித்தால்...

உனைச் சுரண்டி
வாழ்வோரை
எரித்தால்..

உனைத் தீண்ட
நினைப்போரை
எரித்தால்..

இருப்பாய்
தமிழா
நெருப்பாய்..

சிரிப்பாய்
சுதந்திரமாய்
அந்நாள் !

Link to comment
Share on other sites

  • 1 month later...

அப்பழுக்கில்லாத ஆரம்பம்
வெள்ளைக்காகித மனது

அப்பாவின் தோளின்
சவாரி அவரின்
அவசரத்தால் முடிய..

விரிந்த புற்தரையும்
திறந்த ஆகாயமுமே
எதிரே எதிர்காலமாய்

இரவு கனவுகளையும்
பகல் பயத்தையும்
பிரசவித்துக்கொண்டிருக்கிறது

அழகான இளமை
அன்பான மாசற்ற மனது
கனவில் கடவுள் வந்தார்..

கனவில் வந்த கடவுளை
பகலில் ஏமாற்றிக்கொண்டிருக்கிறேன்..

ஆம் ஆசை என்னை
தின்றுகொண்டிருக்கிறது

வரம் தந்த கடவுளை வைத்து
வியாபாரம் செய்கிறேன்..

பணம் கொட்டிய கடவுள்..
பயம் காட்டிய மனட்சாட்சி..

கனவு வேண்டி கண்கள் மூடுகிறேன்
தூக்கம் வரவில்லை..

கடவுள் ஏமாற்றிவிட்டார்?

பழைய பழக்கத்தில்
கல்லை வைத்து வியாபாரம் செய்கிறேன்

எனக்கு மட்டும்தான் தெரியும்
தூக்கமும் கடவுளும்
காணாமல் போனது !

மீண்டும் அந்த
மாசற்ற மனதும்
விழுந்ததும் தூக்கமும்
வரவே வராதா..

வராது
திரும்பி போகமுடியாத
வாழ்க்கை..

பிராயசித்தங்களை
கல்லை விட்டோடிவிட்ட
கடவுள் ..
கனவில் வந்து
சொல்வாரென
காத்துக்கிடக்கிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணம் கொட்டிய கடவுள்..
பயம் காட்டிய மனட்சாட்சி..

 

இது மிகவும் பிடித்திருக்கு கவிஞரே....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 weeks later...

அன்னையர் தின வாழ்த்துக்கள்

எங்கேயும் என்னை 
விட்டுவிடாமல் 
கண்ணுக்குள்ளேயே 
வைத்திருந்தாள் ..அம்மா

( மூன்று மாதம் 
அக்கா வீட்டிலும் 
மூன்று மதம் 
அண்ணன் வீட்டிலும் 
மூன்று மாதம் 
என்னோடும் 
யார் பார்த்துக்கொள்வதென 
சுமையாக நினைத்தோமே..)

அன்னையர் தின வாழ்த்துக்கள்

தூசு விழுந்து 
நோகுமென்று 
அலறித்துடித்து 
பார்ப்பாளே அம்மா

( ஓரிடமாய் இருக்காமல் 
ஏன் விழுந்து தொலைகிறீர்கள் 
சலிப்புகளை அவள் 
உணர்ந்திருப்பாளே )

அன்னையர் தின வாழ்த்துக்கள்

"வெறும் வயிற்றில் 
தூங்க கூடாது ராசா" 
தூங்கி விழ விழ 
ஊட்டுவாளே அம்மா

( அப்பாவின் நினைவென்று 
பழைய வீட்டில் போய் 
வசித்தாள் ..
"சாப்பிட்டாயா அம்மா "
என்று பிள்ளை கேக்கவிலையே 
என வருந்தி இருப்பாளே அம்மா )

அன்னையர் தின வாழ்த்துக்கள்

வினாடிகள் எல்லாம் கூட 
எமக்காக கொடுத்தவளை 
நூறுமுறை சலிக்காமல் 
கொஞ்சி கதை சொன்னவளே அம்மா

( அழைக்கமாட்டாயா 
குரல் கேட்க ஆசை என்றும் 
வந்து போகாயா 
முகம் பார்க்க ஆசை என்றும் 
கெஞ்சி கேட்ட அன்னையிடம் 
நேரமில்லை என்றபோது 
ஏங்கி துடித்திருப்பாளே )

அன்னையர் தின வாழ்த்துக்கள்

வாழும்வரை சொல்லவில்லை 
வாஞ்சையுடன் இருந்ததில்லை 
விரல் பற்றி நடை கொடுத்தாய் 
விடை சொல்ல வரவில்லை

கூனிகுறுகாமல் 
யாருக்காய் சொல்லுகிறேன் 
முகப்புத்தகத்தில் இன்று 
அன்னையர் தின வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச்...சா  என்ன ஒரு அருமையான கவிதை. மிக நன்றாக இருக்கின்றது.....! tw_blush:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

மூச்சு முட்டிய
ஏக்கங்களோடு
சொந்த மண்ணில்
பிறந்த மண்ணில்
வாழ முடியாமல்
திக்கு திக்காய்
திசைக்கொன்றாய்
சிதறி வாழ்கின்ற
ஈழத்தமிழரின்
சின்ன சின்ன
இதயங்களின்
பெரிய ஏக்கம்..
விடுதலை பெற்ற
மண்ணில் ஒரு
நாளேனும் வாழ்வதுதான்..

சின்ன சின்ன
வெற்றிகளையும்
இப்படி கொண்டாடுகிறீர்களே
எனக் கேட்கிறார்கள்..

ஆம்
எம்மவரின்
சின்ன சின்ன
வெற்றிகள் கூட
எமக்கு பெரிய
சாதனைதான்
பெருமிதம்தான்..

ஒவ்வொரு சின்ன
வெற்றிக்கு பின்னாலும்
பெரிய ஒரு அர்ப்பணம் இருக்கிறது
கடினமான பயணம் இருக்கிறது
வடுக்களும் வலிகளும்
விசும்பலும் வேதனையும்
காலங்கள் தாண்டியும்
காயாத கண்ணீரும் இருக்கிறது

எழிலும் வளமும்
ஈரமும் நிறைந்த எங்கள்
ஈழத்தில்..
கந்தகம் படாத கற்கள் இல்லை
இரத்தம் சொட்டாத
மனிதன் இல்லை..

வாழ்க்கை சக்கரம்
ஓடும்போது நினைக்கிறோம்
ஓய்வெடுக்கும்போது
அழுகிறோம்..

எங்கள் சின்ன சின்ன
வெற்றிகள்தான்
எங்கள் காயங்களுக்கு களிம்பு
வேதனைக்கு மருந்து..

எங்கள் சின்ன சின்ன
வெற்றிகளை ..
இனி
நீங்களும் கொண்டாடுவீர்கள்

Link to comment
Share on other sites

மேகங்கள் கூட
ஏழைகள் பக்கம் இல்லை..
நா வரள
வானம் பார்க்கிறான்
விவசாயி -தன்
நிலம் போல்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூச்சு முட்டிய
ஏக்கங்களோடு
சொந்த மண்ணில்
பிறந்த மண்ணில்
வாழ முடியாமல்
திக்கு திக்காய்
திசைக்கொன்றாய்
சிதறி வாழ்கின்ற
ஈழத்தமிழரின்
சின்ன சின்ன
இதயங்களின்
பெரிய ஏக்கம்..
விடுதலை பெற்ற
மண்ணில் ஒரு
நாளேனும் வாழ்வதுதான்..

 

இது முழுக்க முழுக்க உண்மை விகடகவி....! 

Link to comment
Share on other sites

உனைப்போலவே..
உன்னை அறவே
மறந்ததாகவே
வாழமுயன்றபோதும்..
நினைவுகளுக்குத்தான்
தடை போட முடிந்தது..
நீ வந்து உறவாடும்
கனவுகளுக்கல்ல!!

Link to comment
Share on other sites

ஒரு பேனா பேசுகிறேன்...

எங்கேயோ பிறந்து..
எங்கேயோ வளர்ந்து..
இவன் கையில் விழுந்தேன்..

இவன் எடுத்ததும் எழுதியது
அவள் பெயரைத்தான்..

எத்தனை முறை
எழுதியிருப்பான் அவள் பெயரை

தேவதைகள் பூமியிலும்
பிறக்குமென உனைக் கண்டே
அறிந்தேன்..

நீ வரம் தருவாய்
என எண்ணி நீ
வரும் வழியில்
சுழன்றேன்..

தலை சாய்க்கும்
பக்கமோடி நிலைக்
கல்லாய் நின்றேன்

நீ பாராதே
சென்றுவிட
பரிதவித்துக்கொண்டேன்

ஈட்டிவிழி
தொட்ட இடம்
என் இதயமென்று
பாட்டெழுதும் என்
நிலைக்கு பரிகசிப்பும்
உண்டு

நீ வராத
நாளில் நான்
நிலவில்லாத வானம்
நீ நடந்த
பாதையில்தான்
என் காதல் தியானம்

இவன் அவளுக்காய்..
ஆயிரம்மாயிரமாய்
எழுதினான்..

காதலே கண்ணீர் விடும்..
கவியெழுதி காகிதத்தில்
தூங்கினான்...

பேனா.. நானே
இவனைக்
காதலிக்க ஆரம்பித்தேனே..

பெண்ணவள்
காதலிக்க மாட்டாளா?..
மாட்டாள்..
காதலை சொல்லவே
தைரியம் இல்லையே
இவனை எங்கனம்
காதலிப்பாள்

என்னாலும் முன்போல்
எழுத முடியவில்லை..

காகிதத்தை கிழிப்பான்
என்னை தரையில் எறிவான்..
இயலாமை..என்ன
செய்வான்..

அவளுக்கு தெரியாமல்
இவன் வளர்த்த காதல்
அவளறியாமலே..
இவனோடு மரித்த காதல்..

ஆம்..அதற்கும்
நானே சாட்சி
அவனே எழுதினான்..
என் சாவுக்கு
யாரும் காரணமில்லை என..

முட்டாள்..
முதல்முறை எழுதிய
கடிதத்தை கொடுத்திருந்தாலே
தப்பித்திருப்பான்..

இவனுக்குள்ளே..
இவன் ஒருதலை காதல் வளர
காரணமான ..
கன்னியே..
கற்பனையே
கவிதையே..
காகிதமே..
பேனாவே....

ஐயகோ.. இந்த
கோழையின்
சாவுக்கு நானும்
காரணமா?..

ஒரு பேனா..
நான் என்ன செய்வேன்

Link to comment
Share on other sites

புத்தகத்தில் மூடி வைத்த
மயிலிறகை
ஓடிச்சென்று பார்த்த
சிறு பையனாய் -என் 
பதிலுக்கு உன் பதிலை 
ஓடி சென்று பார்க்கிறேன் 
மயிலிறகும் குட்டி 
போட்டதில்லை
இந்த மயிலும் 
பதில் இட்டதில்லை 
யோசித்து பார்த்ததில் 
காதல் கூட மூட நம்பிக்கைதான்
இடம் மாறுவதற்கு நம்பும் 
இதயங்கள் எங்கும் மாறுவதில்லை
நீ இல்லாமல் நன் இல்லை
என்று யாரும் வீழ்வதில்லை
வார்த்தைகள் பூசி
நினைவுகள் கோலம் 
போட்டாலும் காலத்தால்
அழியாத கோலங்கள் 
எதுவும் இல்லை 
காவியங்கள் 
உண்மை இல்லை -காதல்
கல்லறையில் 
பெண்கள் இல்லை 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

வணங்கப்படாமலே
நூறு கடவுள்கள்

சொல்லப்படாமலே
ஆயிரம் மந்திரங்கள்

சென்று வராமலே
இலட்சம் கோயில்கள்
உள்ள பூவுலகில்..

அம்மாவை வணங்காத உயிரும்

அவள் அன்பை ஓதாத உளமும்

கர்ப்ப கோயில் வாழாத
யாரும் உளரோ..

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

தாண்டிச் செல்லவேண்டிய
மேடுபள்ளங்களா வாழ்க்கை?..

பறந்து செல்லவேண்டிய
பால்வெளி இல்லையா..

சுகர்ந்து செல்லவேண்டிய
சோலைகள் இல்லையா..

நனைந்து செல்லவேண்டிய
சாரல்கள் இல்லையா..

மகிழ்ந்தும் இசைந்தும்
செல்லவேண்டிய
பயணம் இல்லையா...

தாய்தந்தை..ஆசான்
ஆணைப்படி
பாதி பயணமும்...

பிள்ளையின் பயண
ஆயத்தங்களில்
மீதி பயணமும்..

எங்கோ வாழ்க்கை
வாழ மறந்து
வழக்கமாகி கிடக்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூறல்களில் நனையும் ஆசையினால் குடை எடுத்து வரவில்லை.... தூறட்டும் விடாமல் தூறல் .....!  tw_blush:

Link to comment
Share on other sites

விழிகள்
கண்டதும் 
மாண்டது
வல்லினம்..

அவளின்
கால்களில்
சிணுங்கும்ம்
இசையினம்..

வாசக்கூந்தலில்
மனசோ
பூவினம்..

பேசும் ஓவியம்
அவளோ
குயிலினம்

பேதை
அழகியல்
தோகை 
மயிலினம்

காதல்
பிறந்திட்டால்
ஆணும்
மெல்லினம்
நாணும்
சொல்லினம் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையின் கவர்ச்சியில் சாரலாய் அடிக்குது ஜொள்லினம்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

வெளிச்ச வீடுகள்
பார்த்து
இருண்டு
போகிறது மனது
ஒரே ஒரு நாள்
உயரம் தொடர்ந்தாளே
என்னோடு!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது பார்வையில் - ஈரான் தாக்கும் என்பது கிட்டதட்ட ஈபி காரைநகர் அடித்தது போல் - நடக்க முதலே எல்லாரும் ஊகித்த விடயம். ஆகவே தாக்குதலுக்கு சரியாக ஒரு நாள் முதல் விலை கூடி local peak ஐ அடைந்தது. அதவாது தாக்குதல் நடக்கும் போது ஏலவே price factored-in நிலை. தாக்குதல் முடிந்ததும் profit taking ஆல் விலை கொஞ்சம் இறங்கியது. ஆனால் இஸ்ரேல் தாக்கலாம், சண்டை பெரிதாகலாம் என வாய்ப்பு இருந்த படியால் 84 இல் தரித்து நின்றது. அதற்கு உடனடி வாய்ப்பு இல்லை என்றதும் 82க்கு வந்து விட்டது. ஆனால், இஸ்ரேல் ஈரானிய அதிகாரிகளை தாக்கு முன் இருந்த நிலைக்கு வீழவில்லை. ஆகவே இன்னும் ஒரு சிறிய பதட்டநிலைக்காவது வாய்ப்புள்ளது என சந்தை கருதுவதாகப்படுகிறது எனக்கு. இது ஒரு டைமன்சன் பார்வை மட்டுமே. இன்னொரு வளமாக - அமெரிக்காவின் எண்ணைகுதங்கள் எல்லாம் நிரம்பு நிலைக்கு வந்துவிட்டதால் - கேள்வி குறைவதாகவும் தெரிகிறது. இதை விட வேறு ஒன்று அல்லது பல காரணிகள் எமக்கு தெரியாமல் விலையை தீர்மானிக்க கூடும்.
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) RIYAN PARAG 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • நீங்க‌ள் சொல்லுவ‌து புரியுது அண்ணா இந்த‌ திரியில் நேற்றே நான் எழுதி விட்டேன் பிஜேப்பி த‌மிழ் நாட்டில் வ‌ள‌ந்தால் அது ஒட்டு மொத்த‌ த‌மிழ் நாட்டுக்கே ஆப‌த்து என்று த‌மிழ் நாட்டின் விச‌ச் செடி பிஜேப்பி..................இவ‌ர்க‌ள் ஊழ‌ல காட்டி மிர‌ட்டி தான் பாம‌காவை கூட்ட‌ணியில் சேர்த்த‌வை...............ம‌ருத்துவ‌ர் ஜ‌யா ராம‌தாஸ் போன‌ வ‌ருட‌ம் சொன்னார் த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு   பூச்சிய‌த்துக்கு கீழ‌ என்று  அதாவ‌து த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இல்லை என்று........... ப‌ல‌ வ‌ருட‌மாய் நோட்டாவுக்கு கீழ‌ நின்று கொண்டு இருந்த‌ பிஜேப்பி த‌மிழ் நாட்டில் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளை உடைச்சு முன்னுக்கு வ‌ருவ‌து த‌மிழ் நாட்டுக்கு ஆப‌த்து கோவையில் வ‌ட‌ நாட்டானின் ஆதிக்க‌ம்  அதிக‌ம் த‌மிழ‌ன் மாத‌ம் 18ஆயிர‌ம் ரூபாய்க்கு வேலை செய்த‌ இட‌த்தில் வ‌ட‌க்க‌னின் வ‌ருகைக்கு பிற‌க்கு த‌மிழ‌ர்க‌ளுக்கு வேலை இல்லை வ‌ட‌க்க‌ன் மாத‌ம் 9ஆயிர‌த்துக்கு  வேலை செய்வான்  த‌மிழ‌னே த‌மிழ‌னை நீக்கி விட்டு வ‌ட‌க்க‌னை வேலைக்கு அம‌த்தின‌ம் கார‌ண‌ம் வ‌ட‌க்க‌ன் குறைந்த‌ ச‌ம்ப‌ல‌த்துக்கு வேலை செய்வான்............................வ‌ட‌ நாட்டில் வேலை இல்லாம‌ தான் ஹிந்தி கார‌ங்க‌ள் அதிக‌ம் த‌மிழ் நாட்டுக்கு ப‌டை எடுத்து வ‌ருகின‌ம்😮 ஆனால் ஹிந்தி ப‌டிச்சா வேலை கிடைக்கும் என்று பிஜேப்பி கூட்ட‌ம் பொய் ப‌ர‌ப்புரைய‌ த‌மிழ் நாட்டில் அவுட்டு விட்ட‌வை 5வ‌ருட‌த்துக்கு முத‌ல்.........................த‌மிழ‌ர் அல்லாத‌வ‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் ஒரு கோடி பேர் வாழுகின‌ம் அதில் அதிக‌ம் வ‌ட‌க்க‌ன் இதுவும் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆவ‌த்தில் போய் முடியும்..................... சீமானுக்கு அர‌சிய‌லில் எதிர் கால‌ம் இருக்கு ப‌ய‌ணிக்க‌ நீண்ட‌ தூர‌ம் இருக்கு அண்ணா சீமான் கூட்ட‌னி வைச்சா க‌ட‌சியில் விஜ‌ய‌காந்துக்கு ந‌ட‌ந்த‌து தான் ந‌ட‌க்கும்.......................ச‌ம‌ர‌ச‌ம் செய்யாம‌ எவ‌ள‌வு கால‌ம் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறாரோ அவ‌ள‌வ‌த்துக்கு சீமானுக்கும் க‌ட்சிக்கும் ந‌ல்ல‌ம்........................சீமான் போட்ட‌ விதையை அவ‌ரின் த‌ம்பிக‌ள் ச‌ரி செய்வார்க‌ள் ..................... என‌து க‌ணிப்பு நாம் த‌மிழ‌ர் க‌ட்சி இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 7/9 ச‌த‌வீத‌ம்  பெற‌ அதிக‌ வாய்ப்பு..................... ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் ஒரு ஆளுக்கு 2000ரூபாய் ஆளும் அர‌சு கொடுக்குது அப்ப‌டி வீஜேப்பி ஆதிமுக்கா என்று இந்த‌ மூன்று க‌ட்சியும் ஓட்டுக்கு காசு கொடுக்கின‌ம் காசு கொடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கும் ஒரே க‌ட்சி நாம் த‌மிழ‌ர் க‌ட்சிம‌ட்டும் தான் 🙏🥰......................................................
    • அதுக்கு நன்றி கடனாக சின்னத்தை முடக்கி மாற்றாக கேட்ட சின்னங்களையும் தேர்தலில் போட்டியிடாத சுயேட்சைகளுக்கு ஒதுக்கி தனது புலனாய்வுப்பிரிவை வீட்டுக்கு அனுப்பி  வாக்கு எந்திரத்தில் சின்னத்தை மங்கலாக்கி மைக் சின்னத்துக்கு மேலையே விவசாயி சின்னத்தை வைத்து தாம் கொஞ்சம் மெருகேற்றி வரைந்து கேட்ட விவசாயி சின்னத்தை போனவாட்டி சமதிக்காமல் இந்த வாட்டி போட்டியிடாத சுயேட்சைக்கு அதே வரைந்த சின்னத்தை அப்படியே கொடுத்து நன்றிக்கடனை சீமானுக்கு பிஜேபி செய்துள்ளது.... அடேங்கப்பா எவ்வளா ஒரு அன்பு பிஜேபிக்கு...
    • தங்களது கவி வரிகளில் வாழ்கிறது எமதுபோராட்டமும் வாழ்வும் வலியும். அதற்கேற்ற படங்களும்... பாராட்டுகள் உரித்தாகுக. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.