Jump to content

தினசரி தூறல்கள்...


Recommended Posts

முற்றுபுள்ளி அருகே
முளைக்குமொரு புள்ளியிலே 
மெல்ல திறக்கும்
ஒரு கதவு!!

 

உண்ண உணவும் 
உடுக்க உடையும் இன்றி
ஏழைகள் ஏங்கி கிடக்க..
வாக்கு பிச்சை கேட்டு
வாசலில் நின்றவர்
தங்கமும் பணமும்
ஊரெல்லாம் பதுக்கி
உப்பி கிடக்கிறார்..
ஒதுக்கியது போதாதென்றோ 
பதவியை நீடிக்க..
அம்மா..சின்னம்மா..
ஐயா சின்னையா..
கால் விழுந்து கிடக்கிறார்.!!

 

 

Link to comment
Share on other sites

  • Replies 513
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக இருக்கு , தொடருங்கள் கவிஞரே ....!  tw_blush:

Link to comment
Share on other sites

ஊழல் வெல்ல
உண்மை மாள

தேர்தல் இன்றி 
வெற்றி கொள்ள

பணம் கொண்டு
பயம் காட்ட

பதவி கனவில்
பவ்யம் காட்ட

அம்மாவை மறந்த 
சின்னம்மா பிள்ளைகளே

காத்திருங்கள் வரும்
மக்களின் தீர்ப்பு!

Link to comment
Share on other sites

10 minutes ago, விகடகவி said:

ஊழல் வெல்ல
உண்மை மாள

தேர்தல் இன்றி 
வெற்றி கொள்ள

பணம் கொண்டு
பயம் காட்ட

பதவி கனவில்
பவ்யம் காட்ட

அம்மாவை மறந்த 
சின்னம்மா பிள்ளைகளே

காத்திருங்கள் வரும்
மக்களின் தீர்ப்பு!

பணம் தான் எல்லாம் என்றாகி  விகடகவி.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • 2 weeks later...

எப்போது தமிழா சிரிப்பாய்..

ஆதி மொழியென்றாய்
அழகான தமிழென்றாய்..

இயல் என்றாய்
இசை என்றாய்
நாடகம் என்றாய்
முத்தமிழே மூலமென்றாய்

கடாரம் வென்றவனென்றாய் -போர்
களம் பல கண்டவெனென்றாய்

செம்மொழி
தந்ததே நம்
திருக்குறளென்றாய்

ஆய கலைகளுக்கும்
ஆணி வேரென்றாய்..

ஆண்ட பரம்பரை..
அடிமையாய் 
எபபோதானாய்..

சிறப்புகளின்
சிகரமின்று
சிரிப்பிழந்து
போனதேனோ..

ஈகத்தில் ஈடில்லை
என்ற பெயர்
கேட்கத்தானா..

வந்தாரை வாழவைத்து
ஆழ வைத்து 
பார்க்கத்தானா..

முன்னே பார்த்திருந்து
முதுகில் புண்
பார்க்கத்தானா

பின்னோரை நினையாமல்
மன்னித்து
மறப்பதாலா...

வஞ்சனை அறியாமலே-வாக்குப்
புள்ளடி பொறித்ததாலா..

வாஞ்சனை என நினைத்து
பாம்புகள் வளர்த்ததாலா..

ஊரெல்லாம் நிறைந்தும்
உலகெல்லாம் தெரிந்தும்
நாடுமில்லை நாதியுமில்லை

எப்போது தமிழா சிரிப்பாய்..

உனைத்தீண்டி
சிரித்தோரை 
எரித்தால்...

உனைச் சுரண்டி
வாழ்வோரை
எரித்தால்..

உனைத் தீண்ட
நினைப்போரை
எரித்தால்..

இருப்பாய்
தமிழா
நெருப்பாய்..

சிரிப்பாய்
சுதந்திரமாய்
அந்நாள் !

Link to comment
Share on other sites

  • 1 month later...

அப்பழுக்கில்லாத ஆரம்பம்
வெள்ளைக்காகித மனது

அப்பாவின் தோளின்
சவாரி அவரின்
அவசரத்தால் முடிய..

விரிந்த புற்தரையும்
திறந்த ஆகாயமுமே
எதிரே எதிர்காலமாய்

இரவு கனவுகளையும்
பகல் பயத்தையும்
பிரசவித்துக்கொண்டிருக்கிறது

அழகான இளமை
அன்பான மாசற்ற மனது
கனவில் கடவுள் வந்தார்..

கனவில் வந்த கடவுளை
பகலில் ஏமாற்றிக்கொண்டிருக்கிறேன்..

ஆம் ஆசை என்னை
தின்றுகொண்டிருக்கிறது

வரம் தந்த கடவுளை வைத்து
வியாபாரம் செய்கிறேன்..

பணம் கொட்டிய கடவுள்..
பயம் காட்டிய மனட்சாட்சி..

கனவு வேண்டி கண்கள் மூடுகிறேன்
தூக்கம் வரவில்லை..

கடவுள் ஏமாற்றிவிட்டார்?

பழைய பழக்கத்தில்
கல்லை வைத்து வியாபாரம் செய்கிறேன்

எனக்கு மட்டும்தான் தெரியும்
தூக்கமும் கடவுளும்
காணாமல் போனது !

மீண்டும் அந்த
மாசற்ற மனதும்
விழுந்ததும் தூக்கமும்
வரவே வராதா..

வராது
திரும்பி போகமுடியாத
வாழ்க்கை..

பிராயசித்தங்களை
கல்லை விட்டோடிவிட்ட
கடவுள் ..
கனவில் வந்து
சொல்வாரென
காத்துக்கிடக்கிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணம் கொட்டிய கடவுள்..
பயம் காட்டிய மனட்சாட்சி..

 

இது மிகவும் பிடித்திருக்கு கவிஞரே....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 weeks later...

அன்னையர் தின வாழ்த்துக்கள்

எங்கேயும் என்னை 
விட்டுவிடாமல் 
கண்ணுக்குள்ளேயே 
வைத்திருந்தாள் ..அம்மா

( மூன்று மாதம் 
அக்கா வீட்டிலும் 
மூன்று மதம் 
அண்ணன் வீட்டிலும் 
மூன்று மாதம் 
என்னோடும் 
யார் பார்த்துக்கொள்வதென 
சுமையாக நினைத்தோமே..)

அன்னையர் தின வாழ்த்துக்கள்

தூசு விழுந்து 
நோகுமென்று 
அலறித்துடித்து 
பார்ப்பாளே அம்மா

( ஓரிடமாய் இருக்காமல் 
ஏன் விழுந்து தொலைகிறீர்கள் 
சலிப்புகளை அவள் 
உணர்ந்திருப்பாளே )

அன்னையர் தின வாழ்த்துக்கள்

"வெறும் வயிற்றில் 
தூங்க கூடாது ராசா" 
தூங்கி விழ விழ 
ஊட்டுவாளே அம்மா

( அப்பாவின் நினைவென்று 
பழைய வீட்டில் போய் 
வசித்தாள் ..
"சாப்பிட்டாயா அம்மா "
என்று பிள்ளை கேக்கவிலையே 
என வருந்தி இருப்பாளே அம்மா )

அன்னையர் தின வாழ்த்துக்கள்

வினாடிகள் எல்லாம் கூட 
எமக்காக கொடுத்தவளை 
நூறுமுறை சலிக்காமல் 
கொஞ்சி கதை சொன்னவளே அம்மா

( அழைக்கமாட்டாயா 
குரல் கேட்க ஆசை என்றும் 
வந்து போகாயா 
முகம் பார்க்க ஆசை என்றும் 
கெஞ்சி கேட்ட அன்னையிடம் 
நேரமில்லை என்றபோது 
ஏங்கி துடித்திருப்பாளே )

அன்னையர் தின வாழ்த்துக்கள்

வாழும்வரை சொல்லவில்லை 
வாஞ்சையுடன் இருந்ததில்லை 
விரல் பற்றி நடை கொடுத்தாய் 
விடை சொல்ல வரவில்லை

கூனிகுறுகாமல் 
யாருக்காய் சொல்லுகிறேன் 
முகப்புத்தகத்தில் இன்று 
அன்னையர் தின வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச்...சா  என்ன ஒரு அருமையான கவிதை. மிக நன்றாக இருக்கின்றது.....! tw_blush:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

மூச்சு முட்டிய
ஏக்கங்களோடு
சொந்த மண்ணில்
பிறந்த மண்ணில்
வாழ முடியாமல்
திக்கு திக்காய்
திசைக்கொன்றாய்
சிதறி வாழ்கின்ற
ஈழத்தமிழரின்
சின்ன சின்ன
இதயங்களின்
பெரிய ஏக்கம்..
விடுதலை பெற்ற
மண்ணில் ஒரு
நாளேனும் வாழ்வதுதான்..

சின்ன சின்ன
வெற்றிகளையும்
இப்படி கொண்டாடுகிறீர்களே
எனக் கேட்கிறார்கள்..

ஆம்
எம்மவரின்
சின்ன சின்ன
வெற்றிகள் கூட
எமக்கு பெரிய
சாதனைதான்
பெருமிதம்தான்..

ஒவ்வொரு சின்ன
வெற்றிக்கு பின்னாலும்
பெரிய ஒரு அர்ப்பணம் இருக்கிறது
கடினமான பயணம் இருக்கிறது
வடுக்களும் வலிகளும்
விசும்பலும் வேதனையும்
காலங்கள் தாண்டியும்
காயாத கண்ணீரும் இருக்கிறது

எழிலும் வளமும்
ஈரமும் நிறைந்த எங்கள்
ஈழத்தில்..
கந்தகம் படாத கற்கள் இல்லை
இரத்தம் சொட்டாத
மனிதன் இல்லை..

வாழ்க்கை சக்கரம்
ஓடும்போது நினைக்கிறோம்
ஓய்வெடுக்கும்போது
அழுகிறோம்..

எங்கள் சின்ன சின்ன
வெற்றிகள்தான்
எங்கள் காயங்களுக்கு களிம்பு
வேதனைக்கு மருந்து..

எங்கள் சின்ன சின்ன
வெற்றிகளை ..
இனி
நீங்களும் கொண்டாடுவீர்கள்

Link to comment
Share on other sites

மேகங்கள் கூட
ஏழைகள் பக்கம் இல்லை..
நா வரள
வானம் பார்க்கிறான்
விவசாயி -தன்
நிலம் போல்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூச்சு முட்டிய
ஏக்கங்களோடு
சொந்த மண்ணில்
பிறந்த மண்ணில்
வாழ முடியாமல்
திக்கு திக்காய்
திசைக்கொன்றாய்
சிதறி வாழ்கின்ற
ஈழத்தமிழரின்
சின்ன சின்ன
இதயங்களின்
பெரிய ஏக்கம்..
விடுதலை பெற்ற
மண்ணில் ஒரு
நாளேனும் வாழ்வதுதான்..

 

இது முழுக்க முழுக்க உண்மை விகடகவி....! 

Link to comment
Share on other sites

உனைப்போலவே..
உன்னை அறவே
மறந்ததாகவே
வாழமுயன்றபோதும்..
நினைவுகளுக்குத்தான்
தடை போட முடிந்தது..
நீ வந்து உறவாடும்
கனவுகளுக்கல்ல!!

Link to comment
Share on other sites

ஒரு பேனா பேசுகிறேன்...

எங்கேயோ பிறந்து..
எங்கேயோ வளர்ந்து..
இவன் கையில் விழுந்தேன்..

இவன் எடுத்ததும் எழுதியது
அவள் பெயரைத்தான்..

எத்தனை முறை
எழுதியிருப்பான் அவள் பெயரை

தேவதைகள் பூமியிலும்
பிறக்குமென உனைக் கண்டே
அறிந்தேன்..

நீ வரம் தருவாய்
என எண்ணி நீ
வரும் வழியில்
சுழன்றேன்..

தலை சாய்க்கும்
பக்கமோடி நிலைக்
கல்லாய் நின்றேன்

நீ பாராதே
சென்றுவிட
பரிதவித்துக்கொண்டேன்

ஈட்டிவிழி
தொட்ட இடம்
என் இதயமென்று
பாட்டெழுதும் என்
நிலைக்கு பரிகசிப்பும்
உண்டு

நீ வராத
நாளில் நான்
நிலவில்லாத வானம்
நீ நடந்த
பாதையில்தான்
என் காதல் தியானம்

இவன் அவளுக்காய்..
ஆயிரம்மாயிரமாய்
எழுதினான்..

காதலே கண்ணீர் விடும்..
கவியெழுதி காகிதத்தில்
தூங்கினான்...

பேனா.. நானே
இவனைக்
காதலிக்க ஆரம்பித்தேனே..

பெண்ணவள்
காதலிக்க மாட்டாளா?..
மாட்டாள்..
காதலை சொல்லவே
தைரியம் இல்லையே
இவனை எங்கனம்
காதலிப்பாள்

என்னாலும் முன்போல்
எழுத முடியவில்லை..

காகிதத்தை கிழிப்பான்
என்னை தரையில் எறிவான்..
இயலாமை..என்ன
செய்வான்..

அவளுக்கு தெரியாமல்
இவன் வளர்த்த காதல்
அவளறியாமலே..
இவனோடு மரித்த காதல்..

ஆம்..அதற்கும்
நானே சாட்சி
அவனே எழுதினான்..
என் சாவுக்கு
யாரும் காரணமில்லை என..

முட்டாள்..
முதல்முறை எழுதிய
கடிதத்தை கொடுத்திருந்தாலே
தப்பித்திருப்பான்..

இவனுக்குள்ளே..
இவன் ஒருதலை காதல் வளர
காரணமான ..
கன்னியே..
கற்பனையே
கவிதையே..
காகிதமே..
பேனாவே....

ஐயகோ.. இந்த
கோழையின்
சாவுக்கு நானும்
காரணமா?..

ஒரு பேனா..
நான் என்ன செய்வேன்

Link to comment
Share on other sites

புத்தகத்தில் மூடி வைத்த
மயிலிறகை
ஓடிச்சென்று பார்த்த
சிறு பையனாய் -என் 
பதிலுக்கு உன் பதிலை 
ஓடி சென்று பார்க்கிறேன் 
மயிலிறகும் குட்டி 
போட்டதில்லை
இந்த மயிலும் 
பதில் இட்டதில்லை 
யோசித்து பார்த்ததில் 
காதல் கூட மூட நம்பிக்கைதான்
இடம் மாறுவதற்கு நம்பும் 
இதயங்கள் எங்கும் மாறுவதில்லை
நீ இல்லாமல் நன் இல்லை
என்று யாரும் வீழ்வதில்லை
வார்த்தைகள் பூசி
நினைவுகள் கோலம் 
போட்டாலும் காலத்தால்
அழியாத கோலங்கள் 
எதுவும் இல்லை 
காவியங்கள் 
உண்மை இல்லை -காதல்
கல்லறையில் 
பெண்கள் இல்லை 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

வணங்கப்படாமலே
நூறு கடவுள்கள்

சொல்லப்படாமலே
ஆயிரம் மந்திரங்கள்

சென்று வராமலே
இலட்சம் கோயில்கள்
உள்ள பூவுலகில்..

அம்மாவை வணங்காத உயிரும்

அவள் அன்பை ஓதாத உளமும்

கர்ப்ப கோயில் வாழாத
யாரும் உளரோ..

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

தாண்டிச் செல்லவேண்டிய
மேடுபள்ளங்களா வாழ்க்கை?..

பறந்து செல்லவேண்டிய
பால்வெளி இல்லையா..

சுகர்ந்து செல்லவேண்டிய
சோலைகள் இல்லையா..

நனைந்து செல்லவேண்டிய
சாரல்கள் இல்லையா..

மகிழ்ந்தும் இசைந்தும்
செல்லவேண்டிய
பயணம் இல்லையா...

தாய்தந்தை..ஆசான்
ஆணைப்படி
பாதி பயணமும்...

பிள்ளையின் பயண
ஆயத்தங்களில்
மீதி பயணமும்..

எங்கோ வாழ்க்கை
வாழ மறந்து
வழக்கமாகி கிடக்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூறல்களில் நனையும் ஆசையினால் குடை எடுத்து வரவில்லை.... தூறட்டும் விடாமல் தூறல் .....!  tw_blush:

Link to comment
Share on other sites

விழிகள்
கண்டதும் 
மாண்டது
வல்லினம்..

அவளின்
கால்களில்
சிணுங்கும்ம்
இசையினம்..

வாசக்கூந்தலில்
மனசோ
பூவினம்..

பேசும் ஓவியம்
அவளோ
குயிலினம்

பேதை
அழகியல்
தோகை 
மயிலினம்

காதல்
பிறந்திட்டால்
ஆணும்
மெல்லினம்
நாணும்
சொல்லினம் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையின் கவர்ச்சியில் சாரலாய் அடிக்குது ஜொள்லினம்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

வெளிச்ச வீடுகள்
பார்த்து
இருண்டு
போகிறது மனது
ஒரே ஒரு நாள்
உயரம் தொடர்ந்தாளே
என்னோடு!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.