Jump to content

முரளிதரன் 709 விக்கேற்றைப் பெற்றுவிட்டார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு சிறிலங்காப் பிரஜைகளாக வாழும் உரிமை அல்லது தம் எண்ணப் படி பிரிந்து சென்று வாழும் உரிமை கேட்டுத் தான் ஆயுதப் போராட்டமே நடக்கின்றது. இவற்றில் ஒன்றையும் தர சிங்களவர்கள் மறுப்பது தான் போராட்டம் நீண்டு செல்லக் காரணம்.பிரிந்து செல்லும் வரை எமக்குச் சோறு, கல்வி, வேலை தரும் கடமை சிங்கள அரசுக்குரியது.கடவுச் சீட்டு, பிறப்புச் சான்றிதழ், திருமணச்சான்றிதழ் தருவதும் எம்மை அடிமைகளாக வைத்திருக்கும் சிங்கள அரசின் கடமை தான். இவையெல்லாவற்றையும் புறக்கணிப்போடு போட்டுக் குழப்பிக் கொண்டு நாங்கள் தெளிவாக இருப்பதாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். தெளிவான இப்பார்வை படிப்படியாக சிங்கள ராணுவத்தைக் கொல்வதையும் நன்றி கெட்ட செயல் என்று சொல்லுமளவுக்குப் போனாலும் ஆச்சரியமில்லை. ஏனெனில் அதுவும் பெறுதற்கரிய இந்த அடையாள ஆவணங்களையெல்லாம் தரும் அரசுக்கெதிராகச் செய்யும் துரோகமல்லவா? :lol:

Link to comment
Share on other sites

  • Replies 116
  • Created
  • Last Reply

ஜஸ்டின்

நீங்களும் குழப்பவாதியாகவே உங்கள் கருத்துக்களை பகிர்கின்றீர்கள். ஒரு அரசிற்கு அதன் குடிமக்களை கவனிக்க வேண்டிய கடமையுள்ளது தான். ஆனால் இலங்கையில் இரண்டு அரசுகள் உள்ளதாகவே உங்களைப் போன்றவர்கள் எழுதி வருகின்றீர்கள். அப்படியாயின் அந்த இரண்டாவது அரசு எந்தக் குடிமக்களின் தேவைகளை கவனித்து வருகின்றது. பொதுவாகவே சகல வழிகளிலும் தம்மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே ஒரு அரசின் கடமை. ஒரு அரசு தம்மக்களின் தேவைகளை இன்னொரு அரசு தான் கவனிக்க வேண்டுமென்றால் எப்படி அதை இன்னொரு அரசு என்று சொல்வீர்கள்.

எமது போராட்டம் நியாயமானது தான். எம் உரிமைகளை நாம் பெற்றே ஆகவேண்டும். அதற்காக எல்லாவற்றையும் குழப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்காதீங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இரண்டு நடைமுறை அரசுகள் இருப்பதாக நான் சொல்லவில்லை. ஆனால் சில உலக ஊடகங்களின் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி பற்றிய வியாக்கியானம் அதுவாக இருக்கிறது. நீங்கள் தெளிவாக ஆராய்ந்து பார்த்தால் சில தேவைகளை புலிகளின் நடைமுறை அரசு எனப்படும் வன்னி நிர்வாகம் நிறைவேற்றித் தான் வருகிறது. ஆனால் வன்னி நிர்வாகம் கடவுச் சீட்டும் வழங்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது சர்வதேச விதிமுறைகள் தெரியாமல் வாதம் செய்வதற்கு ஒப்பானது.சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப் படாத நிலையில் தமிழீழக் கடவுச் சீட்டு என்றொன்று இருக்க முடியுமா? அதே அங்கீகாரம் இல்லாத நிலையில் குடிமக்களுக்குத் தேவையான உணவு மருந்துப் பொருட்களை வர்த்தக நடவடிக்கைகளூடாகப் பெற முடியுமா? இவை உதாரணங்கள் மட்டுமே. ஆனால் இந்தக் கட்டுப்பாடுகள் எங்களை இலங்கைக்கு விசுவாசமாக இருக்கும் படி தூண்டும் ஒரு உறுதியான காரணியென நான் நினைக்கவில்லை. இலங்கைக்கு நட்டம் ஏற்படுத்தக் கூடிய புறக்கணிப்புகளை நாம் செய்யாது பின்னிற்க இவை காரணிகள் அல்ல எனக் கருதுகிறேன். இது என் பதில். உங்களிடமும் ஒரு பதிலை எதிர்பார்க்கிறேன். நான் குட்டையைக் குழப்புகிறேன் என்கிறீர்கள், அப்படியானால் நான் எந்த மாதிரியான மீனைப் பிடிக்க முயல்கிறேன் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

தொடர்ந்தும் உங்களைப் போன்றவர்களுக்கு பதில் எழுத நான் விரும்பவில்லை. காரணம் இப்பக்கத்தின் போக்கே மாறிவிடும். ஆனாலும் இறுதியாக சில. உங்களை எவரும் இலங்கை அரசுக்கு விசுவாசியாக இருக்கும்படி சொல்லவில்லை. ஒரு அரசு என்று எதனைக் குறிப்பிடலாம் அதன் கடமைகள் என்ன என்பதில் கூட உங்களுக்குக் குளப்பம். அதே நேரம் யதார்த்தம் என்னவென்பதும் சொல்லப்பட வேண்டியதே. இங்கே முரளியின் சாதனையை பாராட்டிய எவரும் எல்லோரும் வந்து பாராட்டுங்கள் என்று அழைப்புக்களோ அறைகூவலோ விடவில்லை. ஆனால் உங்களைப் போன்றோர் முரளியைப் பாராட்டுவதை சாடுவதும் மற்றையவர்கள் வாழ்த்தக்கூடாது என அறைகூவல் விட்டு ஏதொ நீங்கள் தான் தேசியத்தின் காவலர்கள் போலவும், வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அறிவில்லாதவர்கள் போலவும் அவர்களுக்கு நீங்கள் தான் வழிகாட்டிகள் போலவும் காட்ட முனைகின்றீர்கள். இதனைத்தான் நான் எல்லாவற்றையும் குழப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்காதீங்க என எழுதினேன்.

ஆனால் மக்கள் தெளிவாகவே உள்ளார்கள் என்பதை இப்பக்கத்தில் பலரெழுதிய கருத்துக்களைப் பார்த்தும் நீங்கள் தெளிவு பெறாததுதான் வேடிக்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் உங்களைப் போன்றவர்களுக்கு பதில் எழுத நான் விரும்பவில்லை. காரணம் இப்பக்கத்தின் போக்கே மாறிவிடும். ஆனாலும் இறுதியாக சில. உங்களை எவரும் இலங்கை அரசுக்கு விசுவாசியாக இருக்கும்படி சொல்லவில்லை. ஒரு அரசு என்று எதனைக் குறிப்பிடலாம் அதன் கடமைகள் என்ன என்பதில் கூட உங்களுக்குக் குளப்பம். அதே நேரம் யதார்த்தம் என்னவென்பதும் சொல்லப்பட வேண்டியதே. இங்கே முரளியின் சாதனையை பாராட்டிய எவரும் எல்லோரும் வந்து பாராட்டுங்கள் என்று அழைப்புக்களோ அறைகூவலோ விடவில்லை. ஆனால் உங்களைப் போன்றோர் முரளியைப் பாராட்டுவதை சாடுவதும் மற்றையவர்கள் வாழ்த்தக்கூடாது என அறைகூவல் விட்டு ஏதொ நீங்கள் தான் தேசியத்தின் காவலர்கள் போலவும், வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அறிவில்லாதவர்கள் போலவும் அவர்களுக்கு நீங்கள் தான் வழிகாட்டிகள் போலவும் காட்ட முனைகின்றீர்கள். இதனைத்தான் நான் எல்லாவற்றையும் குழப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்காதீங்க என எழுதினேன்.

ஆனால் மக்கள் தெளிவாகவே உள்ளார்கள் என்பதை இப்பக்கத்தில் பலரெழுதிய கருத்துக்களைப் பார்த்தும் நீங்கள் தெளிவு பெறாததுதான் வேடிக்கை.

வசம்பு புகலிடத்தில் வயிறுமுட்ட போட்டிட்டு ஏப்பம் விட யாழ் களம் வாறவையோட யதார்த்தத்தைப் பேசிப் பயனில்லை..!

பலஸ்தீனர்கள் புறக்கணிக்கினம் நாங்கள் ஏன் முடியாது என்று கேட்கிற அறிவாளிகள் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பலஸ்தீனத்துக்கான ஆதரவு அரபுலகெங்கும் இருக்கிறது. தமிழர்களுக்கான ஆதரவு தமிழர்களே..! தாயகத்தில் அநேகம் தமிழர்களின் அன்றாடச் செயற்பாடுகள் சிங்கள அரசின் தயவின் பேரில் தான் நடக்க வேண்டி இருக்கிறது. தாயகத்தில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை தடை செய்து.. முடக்கி பணத்தை உறைநிலையில் வைச்சிருக்கிறது அரசு. பொருளாதாரத் தடைகளை பாதைத் தடைகளை விதித்து மக்களை வற்புறுத்திப் பணிய வைத்திருக்கிறது.

யானை மார்க் சோடாவையும் மலிபன் பிஸ்கெட்டையும் புறக்கணிச்சு அரசின் மீது தொடுத்த அழுத்தம் என்ன..??! அதன் பயனாக தாயக மக்கள் கண்ட நன்மை என்ன..??!

சிங்கள அரசோடு விவேகமற்ற வகையிலான நகர்வுகளைச் செய்வது.. தாயக மக்களையே பாதிக்கும்..! அதை உணராத ஜென்மங்களோட எதைப் பேசி எதை விளக்கி என்ன பயன்.

அதுபோன்றதே இந்த முரளி சம்பந்தப்பட்ட நகர்வும். விவேகமற்ற ஒன்று. விளையாட்டு வீரனை வாழ்த்தினமா போனமா என்றிருக்கிறதை.. சிங்கள தேசத்தை வாழ்த்தினமாம் என்று காட்டிற நிலையில... இருக்கு தமிழர்கள் பிரச்சாரத்தின் பலவீனம்..!

இவர்களின் இந்தக் கூக்குரலை விட சிங்களவன்.. முரளி ஒரு தமிழனாக இருந்தும் தமிழர்கள் வழங்காத மதிப்பை தாம் அவருக்கு வழங்குவதாகக் காட்ட செய்யப் போகும் செயலே உலக அரங்கில் முதன்மையாக ஒலிக்கும்...! முரளி ஒரு விளையாட்டு வீரனா புறக்கணிக்க முடியாததை அரசு வழங்கி கெளரவிக்கும் போது.. தமிழர்கள் கிரிக்கெட்டின் ரசிகர்களாக இருந்தும் வாழா திருப்பின் அரசின் செயலே முதன்மை பெறும். அரசின் பிரச்சாரத்துக்கு அதுவே பலமும் ஆகும்..! :lol:

Link to comment
Share on other sites

நீங்களும் குழப்பவாதியாகவே உங்கள் கருத்துக்களை பகிர்கின்றீர்கள். ஒரு அரசிற்கு அதன் குடிமக்களை கவனிக்க வேண்டிய கடமையுள்ளது தான். ஆனால் இலங்கையில் இரண்டு அரசுகள் உள்ளதாகவே உங்களைப் போன்றவர்கள் எழுதி வருகின்றீர்கள். அப்படியாயின் அந்த இரண்டாவது அரசு எந்தக் குடிமக்களின் தேவைகளை கவனித்து வருகின்றது. பொதுவாகவே சகல வழிகளிலும் தம்மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே ஒரு அரசின் கடமை. ஒரு அரசு தம்மக்களின் தேவைகளை இன்னொரு அரசு தான் கவனிக்க வேண்டுமென்றால் எப்படி அதை இன்னொரு அரசு என்று சொல்வீர்கள்.

இரண்டாவது அரசை அரசு என்று சொல்ல முடியாது எனில் முதலாவது அரசை அரசு என்று சொல்ல முடியுமா? உங்கள் கருத்துப்படி ஒரு அரசுக்கு தனது குடிமக்களை கவனிக்க வேண்டிய கடமை உள்ளது. தமிழ்மக்களை சிங்கள அரசு கவனிக்கின்றதா? அது தனது குடிமக்கள் என்று தமிழர்களை கருதுகின்றதா? அவ்வாறு கருதினால் இவ்வாறு இன அழிப்பை ஏன் செய்ய வேண்டும்? வாழ்விடங்களை ஏன் பறிக்க வேண்டும்? அதன் கவனிப்புக்களை எழுதிக்கொண்டே போகலாம். இன்னொரு அரசு என்று எப்படி சொல்வீர்கள் என்று நீங்கள் கேட்பது போல் சிங்கள அரசை எமது அரசு என்று எப்படி சொல்ல முடியும் என்று தமிழரும் கேட்க முடியும். பிறப்பு சான்றிதழ் தாறான் கடவுச்சீட்டு தாறான் ஆகவே அவன்தான் எமக்கான அரசு என்றால் அவனின் இன அழிப்பை என்னவென்று சொல்வது? அதுவும் அரசின் கவனிப்பில் ஒன்றா?

சிங்கள அரசு தமிழருக்கு அரசாக இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று அது தமிழரை அழித்துக்கொண்டுள்ளது. அதனிடம் இருந்து விடுபட்டு தமிழருக்கென்று தனியான ஒரு அரசை அமைப்பதற்கு போராடிக்கொண்டிருக்கின்றா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு, உதாரணங்கள் மூலம் சொல்லப் படும் விடயங்களை விளங்கிக் கொள்வதில் உங்களுக்குச் சிக்கல் இருப்பது எனக்குத் தெரியும். அதனால் தான் ஒரு அரசின் கடமைகளுக்கு ஓரிரு உதாரணங்களை "இவை உதாரணங்கள்" என்று குறிப்பிட்டுச் சொல்லியிருந்தேன். நான் அரசின் கடமைகளை அவை தான் என்று எழுதியதாக நீங்கள் விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஏமாற்றம் தான். இங்கே கருத்துப் பகிர வரும் யாரும் தம் வழிக்கு மற்றவரை இழுக்கும் வழிகாட்டிகளாக வருவதில்லை. தலைவராக முனைவதுமில்லை. வெவ்வேறு நிலைப் பாடுகளின் பகிர்வு மட்டுமே இது எனப் புரிந்து கொள்ளா விட்டால் மற்றவர்கள் மண்டை குழம்பிப் போய் இருக்கிறார்கள் என்ற புரிதல் மட்டுமே இறுதியில் ஏற்படும். அதுவே உங்களுக்குள்ள புரிதல் இப்போது.

நெடுக்கர் அண்ணை: புலத்தில் தின்று கொழுத்து எழுத வருவோர்களில் நானும் ஒருவன் தான். உங்கள் "அற்புதமான" கருத்துக்கள் நீங்கள் "விரதமிருந்து" எழுதுவதால் தான் அவ்வளவு அற்புதமாக இருக்கின்றன என்று அறியத்தந்தமைக்கு நன்றி. :lol:

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவன் மற்றும் வசம்புவின் கருத்துக்கள் சொல்வதில் இருந்து எனக்கு ஒன்று விளங்குகின்றது.

முரளிதரன் பல தடைகளை கடந்து தனிமனிதனாக சாதனை படைத்திருக்கிறார்.

முரளிதரன் சிங்களம் பேசினாலும் அவர் ஒரு தமிழர் என்ற ரீதியிலும், இத்தனை தடைகளைக் கடந்து சாதனை படைத்திருக்கிறார் என்ற ரீதியிலும் அவரை தமிழர்கள் வாழ்த்த வேண்டும்

இனவாதத்துடன் இசைந்து வாழ்ந்து தன்னுடைய தனிப்பட்ட திறமைகளால், இனவாதிகளும் ஏற்கும்படி உயர்வது போற்றுதலுக்குரிய ஒரு சிறந்த வழி.

இவரைப் போன்று தேசியத் தலைவரும் சிங்களம் பேசியபடி, சிறிலங்காவின் இராணுவத் தளபதியாக உயர்ந்து, சிறிலங்கா இராணுவத்தை ஒரு பலமான இராணுவமாக மாற்றி சாதனை படைக்க வேண்டும். இனவாதிகளும் கைகுலுக்கி தேசியத் தலைவரை வாழ்த்த வேண்டும்.

நாமம் இந்த சாதனைக்காக தேசியத் தலைவருக்கு யாழ் களத்தில் வாழ்த்து எழுத வேண்டும்.

நினைக்கவே புல்லரிக்கிறது!

Link to comment
Share on other sites

பலருடைய மூளை ஆரோக்கியமாக இல்லலைப்போல இருக்கிறது..நமக்குந்தான் கொஞ்சகாலமாய்.. :lol:

விளையாட்டில் சிறந்தவரை களத்தில் பராட்டிவிட்டுப் போகிறார்கள்.. அதற்கேன் ஐயா..

வாதங்கள்..

தயவு செய்து எங்கள் போராட்டாத்தையோ.. தேசியத்தலைவரையோ.. மற்றவர்களுடன் ஒப்பிட்டு எழுதாதீர்கள்..

உங்களுக்கே தெரியும்.. ஈகையால் வீரத்தால்.. செயல்திறனால்.. பொறுமையால்.. றேர்மையார்..திட்டமிடலால்..

ஒழுக்கத்தால்... எண்ணிலிடங்கா நற்பண்புகளால்.. ஈடுஇணையற்றவர் நம் தேசியத்தலைவர்.. மேதகு வே. பிரபாகரன் அவர்கள்..

Link to comment
Share on other sites

இங்கே யாரும் யாருடன் ஒப்பிடப்படவில்லை.

சிலருடைய சிந்தனைகளின் அர்த்தத்தை விளக்கிக் கூறியுள்ளேன்.

நானும் விளையாட்டுத் திறைமையை பாராட்டுவதை ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் "தமிழன் என்பதால் ஆதரிக்கிறேன்", "இனவாதத் தடைகளை தாண்டியதைப் பாராட்டுகிறேன்" என்று சொல்வதைத்தான் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த வசனங்களுக்குள் இருக்கின்ற அரசியலை இவர்கள் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள்.

ஒரு தமிழன் இனவாதத் தடைகளை தாண்டி உயரமுடியும் என்றால், ஏன் அது மற்றவர்களாலும் முடியாது என்று கேள்வி வருகிறதல்லவா?

இதைத்தான் சிங்கள இனவாதிகளும் சொல்கிறார்கள்.

தேசியத் தலைவர் சிறிலங்கா இராணுவத் தளபதியாக இருக்கத் தகுதி வாய்ந்தவர் என்று பல இனவாத அமைச்சர்கள் சான்றிதழ் கொடுத்துள்ளார்கள்.

வன்னிக்குள் பல முரளிதரன்கள் இருப்பதாக அண்மையில் சோவமவன்ச கூறினார்.

இவைகள் அனைத்தும் ஒரு அடிப்படைக் கருத்தக்களை கொண்டவைதான்.

"சிறிலங்காவில் தமிழர்களால் நிறைய சாதனைகள் படைக்க முடியும். வீணாக யுத்தத்தில் இறங்கி, தாமும் அழிந்து மற்றவர்களையும் அழிக்கிறார்கள்."

இதை இனவாதிகள் மீண்டும் மீண்டும் சொல்லி வருகின்றார்கள். இதன் அடிப்படையில் முரளிதரனை பாராட்டுகிறார்கள்: யுத்தம் புரிந்து வீணாக சாகமல், ஒரு முரளிதரன் போன்று ஆகும்படி அழைப்பு விடுக்கின்றார்கள்.

சிறிலங்காவில் தமிழனால் சாதிக்க முடியும் என்பதற்கு இனவாதிகள் முரளிதரனை உதாரணம் காட்டுகிறார்கள்.

யாழ் களத்திலும் சிலர் சிறிலங்காவில் முரளிதரன் சாதித்துவிட்டதாக புளுகாங்கிதம் அடைகிறார்கள்.

இந்த இரண்டு சிந்தனைகளும் ஒரே புள்ளியில் சந்திப்பது உங்களுக்கு புரியவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் உங்களுக்கும் சிங்கள இனவாதிகளுக்கும் இடையே பெரிய வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.

நான் எப்பவுமே முரளி ஒரு இனத்தின் பிரதிநிதியாக சிறீலங்கா அணியில் இடம்பெறுவதாக கருத்துவதில்லை. காரணம் விகிதாசார அடிப்படையில் கூடப் பார்த்தால் கூட 7 சிங்களவர்களோடு குறைந்தது 2 இலங்கைத் தமிழ் 1 முஸ்லீம் தமிழ் 1 மலையகத் தமிழ் வீரர் என்று அணியில் இடம்பெற்றிருக்க வேண்டும். அப்படி இடம்பெற வேண்டின் குறைந்தது 10 இலங்கைத் தமிழர்கள் 5 முஸ்லீம் தமிழர்கள் 5 மலையகத்தமிழர்கள் அணிக்கு தேர்வு செய்யும் வகையில் தெரிவு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு முதல் தர விளையாட்டுகளில் விளையாட அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் முரளி அணியில் இணைந்து இத்தனை வருடங்களில் அவரைத் தவிர மலையத்தமிழர்கள் எவருமே இலங்கை ஏ அணிக்குக் கூட தெரிவாகவில்லை.

ஆக முரளி தனது தனித்திறமையூடு ஒரு கிரிக்கெட் வீரனாக அணியில் இடம்பெற்றிருக்கிறாரே தவிர இலங்கையில் உள்ள ஒரு இனத்தின் பிரதிநிதியாக அவர் அணியில் இடம்பெறவில்லை. இலங்கை அணி இன விகிதாசாரப்படி வீரர்களைத் தெரிவு செய்யும் எந்த விடயத்தையும் கொண்டிருக்கவில்லை.

முரளியை ஒரு தமிழன் என்றும் அவர் அணியில் விளையாடுவது தமிழினத் துரோகம் என்றும் பார்க்க முடியாது. அப்படிப் பார்ப்பின் இலங்கை அரசின் பரீட்சைகளில் சித்தியெய்தி அவ்வரசின் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகி அங்கு படிக்கும் அங்கு படித்துவிட்டு தென்னிலங்கையில் கொழும்பில் வேலை பார்க்கும் அனைவரும் தமிழினத் துரோகிகள் என்றே நோக்கப்பட வேண்டும்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் அரச அதிபர் செயற்படுகிறார். அரச வங்கிகள்.. அரச பாடசாலைகள்..கூட்டுறவுச் சங்கங்கள்.. தபாலகங்கள் என்று மக்கள் தமது அன்றாடக் கடமைகளை செய்ய அவசியமான அரச இயந்திரம் செயற்பட அனுமதிக்கப்பட்டே உள்ளது. அவற்றில் வேலை செய்யும் தமிழர்கள் அரசுக்கு ஊதியம் செய்வதாக தடுப்படவில்லை. மாறாக அவர்கள் அரச செலவினத்தை தமது மக்களின் நலனுக்காக வினைத்திறனுள்ள வகையில் பயன்படுத்த கேட்கப்படுகின்றனர்.

முரளியும் தனது திறமையூடு சிங்கள அணியில் இடம்பிடித்து சாதனை செய்வதென்பது அவனின் தனித் திறமைக்கு கிடைத்த வெற்றியே அன்றி வேறல்ல. அணியிலும் வெளியிலும் பல அவமானங்களை சந்தித்துத்தான் அவன் இந்தச் சாதனையைச் செய்துள்ளான். அவனின் தனித்திறமையால் தான் அவன் அணியில் தொடர்ந்து இடம்பெற்றானே தவிர தமிழன் என்பதற்காக அவன் அணியில் வைத்திருக்கப்படவில்லை. தமிழன் என்பதால் அவமானங்களை சந்தித்தவன். தமிழன் என்பதற்காகவே சிங்கள இனவாதிகளால் போற்றப்பட்டவன். அந்த வழியிலேயே தமிழர்கள் சிலரும் முரளி தமிழன் என்பதற்காக அவனை துவேசிக்கின்றனர்.

கனடிய அணியில் சிறீலங்கன் தமிழர்கள் என்ற அடைமொழியோடு விளையாடும் தமிழர்களைப் பாராட்டினம்.. ஆனால் ஒரு மலையகத் தமிழன் (மலைய மக்களுக்கு கல்வி கூடக் கனவாக இருக்கிறது கெளரவமான வேலை வாய்ப்புக்கள் கூட இல்லை.. வடக்குக் கிழக்கு தமிழர்கள் அரசின் உயர்பதவிகள் பலதை இன்றும் அலங்கரிக்கவே செய்கின்றனர்...!) தனது விளையாட்டுத் திறமையால் அபூர்வமாக சிங்கள அணியில் இடம்பிடித்து சிங்களவர்கள் சாதிக்க முடியாததை சாதித்து நிற்பதை ஏற்க முடியவில்லை அதை இனவாதத்தோடு கலந்தடிப்பதையே சபேசனின் கருத்துக்கள் இங்கு சொல்கின்றன.

ஆனால் என்னைப் பொறுத்தவரை முரளி ஒரு திறமையான வீரன். தனக்கு கிடைச்ச சந்தர்ப்பத்தை சரியாகப் பாவித்து திறமையான உலக சாதனை ஒன்றைச் செய்திருக்கின்றான். அது சிங்களவர்களுக்கு மட்டுமல்ல மேலைத் தேய வெள்ளைத் தோற்காரர்களுக்கும் பிடிக்காத அம்சம் என்ற போதிலும்.. அவனின் சாதனை உயரியது போற்றத்தக்கதே. அவனின் விளையாட்டுத் திறமைக்கு மன உறுதிக்கும் பாராட்டியே ஆக வேண்டும். அவன் விளையாட்டில் அரசியல் நடத்தாமல் விளையாட்டை விளையாட்டாக்கி அதில் வெற்றி கண்டிருப்பதும் பாராட்டத் தக்கதே..!

முரளி நான் தமிழன் சிங்கள அணியில் இடம்கிடைப்பினும் விளையாடன் என்று சொல்லி இருந்திருந்தால்.. இன்று அவனின் சாதனையை சேன் வோன் நடத்தி மேற்குலகை குசிப்படுத்திக் கொண்டிருந்திருப்பார்..! இதை வெள்ளைக்காரனிடம் அகதிப் பிச்சை வாங்கி அடிமை வாழ்வு வாழும் தமிழர்கள் சேன் வோனுக்கு கொடிபிடிச்சே வாழ்த்தி மகிழ்ந்திருப்பர்..!

முரளி சிங்களம் பேசினான்.. சிங்கள அணியில் விளையாடினான்.. சிங்கள தேசத்தில் பிறந்தான் வாழ்ந்தான்.. ஆனால் தமிழ்நாட்டில் போய் மணம் முடித்தான். விளையாட்டில் சாதனை படைத்தான். ஓய்ந்தான்..!

ஆனால் தமிழர் சேதத்தில் பிறந்த கதிர்காமர்.. மலேசியாவில் வாழ்ந்தான்.. சிங்கள தேசத்துக்கு அரசியல் சேவகம் செய்தான்.. சிங்களத்தியை மணந்தான்.. சிங்களர்வர்களின் இனவாததுக்காய் தமிழரைக் கொல்ல பிரச்சாரம் செய்தான்.. இறுதியில்.. மடிந்தான்..!

சபேசன்.. தமிழர் தேசத்தில் பிறந்தார்.. மேலைத் தேயத்தில் வாழ்கிறார்.. பேசுவது தமிழ் தேசியம்.. சேவகமோ வெள்ளைக்காரனுக்கு..!

இதில் யார் உயர்ந்தவர்.. ஒப்பீடு செய்துவிட்டு.. முரளியை அவனின் விளையாட்டுத் திறமைக்காக வாழ்த்திவிட்டு.. அவனைச் சிங்கள அருவருடியாகச் சித்தரிப்பதை நிறுத்திட்டு.. அங்கால ராமசாமிக்கு 95 அடியில சிலை வைக்கிற விசயத்தில கவனம் செலுத்தினா புதிய உருவ வழிபாட்டின் அறிவியல் உண்மையைக் கண்டறிய பகுத்தறிவு இடமளித்த சாதனையை நீங்களும் செய்யலாம்..! :lol:

Link to comment
Share on other sites

முரளிதரனை "துரோகி" என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று நான் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.

முரளிதரனிடம் கிறிக்கற் பற்றிய சிந்தனை மட்டும்தான் இருக்கிறது. அவரிடம் வேறு சிந்தனைகள் இல்லை. அவர் தன்னுடைய வாழ்க்கiயாக கிறிக்கற்றை தேர்வு செய்து, அதில் சாதனை செய்திருக்கிறார்.

அவ்வளவுதான்

இதில் தமிழர்கள் மகிழ்ச்சி அடைவதற்கு என்ன இருக்கிறது என்பதுதூன் என்னுடைய கேள்வி

"எனக்கு கிரிக்கட் என்றால் உயிர், நான் பந்துவீச்சில் ஆர்வம் கொண்டவன், முரளிதரனின் ரசிகன் நான், அவருடைய விளையாட்டை எப்பொழுதும் ரசிப்பேன், அவர் சாதனை செய்தது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது"

இப்படி யாராவது சொல்லியிருந்தீர்கள் என்றால், அதை ஏற்றுக்கொள்ளலாம்

ஆனால் இங்கே முரளிதரனுடைய சாதனைக்காக பெருமிதம் கொள்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?

அவருடைய இனம் சார்ந்தும், இனவாத தடைகளை தாண்டியது குறித்தும்தானே விளக்கம் தருகின்றார்கள்.

அதன் அடிப்படையிலேயே என்னுடைய கேள்விகளைக் கேட்கின்றேன்.

Link to comment
Share on other sites

சபேசன், உப்பிடி தெளிவாகப் பிரிச்சுப் பாக்கிற அளவிற்கு நம்மடை டம்லர்களிற்கு விளக்கம் இருந்தா இன்னமும் நம்புங்கள் நாலை டமிலீலம் கிடைக்கும் என்று கொண்டிருக்கத் தேவையில்லை.

சிறீலங்கா பிறப்புச் சான்றிதழ் திருமணச் சான்றிதழ் கடவுச்சீட்டு போன்றவற்றோடு தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, இறைமை நடைமுறை அரசு, பற்றி பேசுறதே சிரிப்பான விசயம் எண்ட றேஞ்சில நிக்கிறதுகளோட... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் தமிழர்கள் மகிழ்ச்சி அடைவதற்கு என்ன இருக்கிறது என்பதுதூன் என்னுடைய கேள்வி.

இங்கு முரளியைக் கிரிக்கெட் வீரனா முன்னிறுத்தி வாழ்த்தியவர்களே அதிகம். யாரும் தமிழன் என்பதன் கீழ் வாழ்த்தியதாகத் தெரியவில்லை. முரளி தனது சாதனையின் போது சோதனைக் கட்டங்களையும் தாண்டியே வந்தான் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அது இரண்டு வகையில் இருந்தது ஒன்று சிங்கள தேசத்தில் இருந்து வந்த இனக்குரோத நிலை இரண்டு வெள்ளையர்களின் கிரிக்கெட் மேலாண்மைக்கு சவாலாக அமைந்திருந்ததால் அவர்களின் பொறாமைக்கு இலக்கானது..!

உங்கள் போன்ற சிலர் தான் ஆட்டுக்கு மாட்டைக் கலந்ததும் பிறகு அதுக்குள்ள மாடு இது ஆடு இது என்று ஆக்களுக்குப் பிரிச்சுக் காட்டிறம் என்று இங்க சிம்பாபே - பிரித்தானியாவை அவசர அவசரமா இழுத்துக் கொண்டு ஓடி வந்ததும்..! இப்ப அதில அறிவு விளக்கம் மிஞ்சி.. தமிழ் தேசியமா வழிஞ்சோடுதாம். கோயில் தீர்த்தம் போல அள்ளித் தலையில தெளியுங்க.. தமிழீழம் கிடைச்சிடும். மலிபன் பிஸ்கட்டை கைபார் கோர்னரில போட்டுக் கொழுத்துங்க சிங்கள தேசம் தொடை நடுங்கி.. வன்னி முற்றுகையை விட்டிட்டு ஓடிடும்..! :wub::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசியம் என்ற போர்வையைப் போற்றிக்கொண்டு ஜதார்த்தங்களைப் பேசுபவர்களை ஏதோ தேசவிரோதிகள் போலவும், அரசு ஆதரவாளர்களாகவும் காட்ட முயலும் உங்களைப் போன்றவர்கள்; ஈழத்தில் போராடும் ஏழை எழிய வெளிநாடு வர வசதியற்ற போரளிகளின் போராட்டங்களை வைத்து வெளிநாடுகளில் ஏதோ ஈழ ஆதரவாளர்கள் போல் காட்டிக்கொள்ள எப்போதும் எதையாவது அரசியலாக்கி தாயகத்திலுள்ள உங்கள் சொத்துப்பத்துக்களை காப்பாற்றிக் கொள்ள முயல்பவர்களென்பதும் எல்லோருக்கும் புரியும்

எதையா ஜதார்தம் தேசிய போர்வையை போர்த்து கொண்டு நாம் பேசுவது உங்களுக்கு ஜதார்த்தமாக தெரிகிறதா பேஷ் பேஷ் உங்களை பொறுத்தவரை நீங்கள் ஓர் தேசவிரோதி இன்றைய காலகட்டத்தில் ஈழம் என்ற சொல்லே உங்களை பொறுத்தவரை ஒரு புளிப்பான சொல் ஆகவே தான் நீங்கள் தேச ஆதரவானவர்களை தேச விரோதிகள் என்று கூறுகிறீர்கள் பாராட்டதக்கது இன்று புலத்தில் வாழும் அநேகமானவர்கள் தேச ஆதரவாளர்களாக தான் இருகிறார்கள் அவர்கள் சகல வசதிகளையும் அநுபவவித்து கொண்டு தேசதிற்கு ஆதரவளிகிறார்கள் என்பது தான் உங்களினதும் நெடுக்சினதும் குற்றசாட்டு அதையே போல தான் தேசதின் எதிராக குற்றசாட்டு கூறுபவர்களும் சகல வசதிகளும் அநுபவித்து கொண்டு புலத்தில் இருந்து கொண்டு குற்றசாட்டுகளை தேசதிற்கு விரோதமான குற்றசாட்டுகளை முன் வைக்கிறார்கள் கூட்டி கழித்து பார்த்தா இருவரும் ஒரே தோணியில் இருகிறோம் இதிலென்னய்யா விவாதம் மூடி போட்டு இரண்டு பேரும் அதாவது புலத்தில் வாழும் தேசவிரோதிகளும்,தேச ஆதரவாளர்களும் ஒன்று கூடி போத்தல் அடித்து...உங்கள் ஜனநாயகத்தை பேணுவீர்களாக??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் புத்தர் பண்டைய தமிழர்களுக்கெதிராக சிங்கள மக்களுக்காதரவாகவும் பல சித்து வேலைகள் செய்து தமிழர்களை விரட்டியடித்தாக பண்டைய நூல்கள் கூறுகின்றன. அப்படிப்பட்ட புத்தரின் பெயரைப் புனைப்பெயராக வைத்துத் தமிழ்த் தேசியம் பேசும் தங்களுக்கு பேஷ் பேஷ். அதானுங்க பாராட்டுக்கள்.

புத்தரின் அதாவது பெளத்தத்தின் பெயரில் வாழ்ந்த தமிழர்களும் உண்டு இதை நீங்கள் மறந்துவிட்டீர்கள் போல் தெரிகிறது இந்த புராண கதைகளில் மணிமேகலையும் ஒன்று அதாவது ஜம்பெரும் காப்பியங்களிள் மணிமேகலையும் ஒன்று என்று நினைகிறேன் மணிமேகலை புத்த மதத்தை தழுவியதாகவே எழுதபட்டுள்ளது இன்றைய காலகட்டத்தில் வடக்கு,கிழக்கு பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் பெளத்தை மதத்தை தழுவி வாழ்ந்தவர்கள் உண்டு என்ற விவாதத்தை ஏன் உங்களாள் முன் வைக்க முடியவில்லை காரணம் உங்களின் மனதில் ஆழபதிந்துள்ளது புலிகளிற்கு விரோதமான கருத்து தான் அதற்கு முக்கிய காரணம் புலிகளாள் நீங்கள் பாதிக்கபட்டிருக்கலாம்....புலத

Link to comment
Share on other sites

ம்ம்ம் இந்த பக்கத்தை 709 பக்கம் கொண்டு போய் சாதனையை யாழ்கள மெம்பர்ஸ் செய்வீனம் போல இருக்கு பொறுத்திருந்து பார்போம்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.