Jump to content

முரளிதரன் 709 விக்கேற்றைப் பெற்றுவிட்டார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முரளிதரன் 709வது விக்கேற்றைப் பெற்றுவிட்டார். சிங்களவர்கள் மகிழ்ச்சியில் துள்ளல். சிங்களதேசத்தில் சிங்களவர்கள் வெடிகள் கொளுத்தி மகிழ்கிறார்கள். மகிந்தா விரைவில் வாழ்த்துச் செய்தியை சொல்ல இருக்கிறார். என்னால் முரளிதரன் தமிழராக இருந்தாலும் அவருக்கு வாழ்த்துச் சொல்ல மனம் விரும்பவில்லை. எமது மண்ணில் தினமும் கொல்லப்படும் சகோதர சகோதரிகளை நினைக்கவே மனம் செல்கிறது.

Link to comment
Share on other sites

  • Replies 116
  • Created
  • Last Reply

எனது ஆழ்ந்த அநுதாபங்களை இத்தருணத்தில் சொல்லி கொள்ள விரும்புகிறேன்!! :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

_44274781_muraliafp203.jpg

710 விக்கெட்டுக்கள் எடுத்து முரளி அவுஸ்திரேலிய சேன் வோனின் சாதனையை முறியடித்தார். உலகில் சர்வதேச ரெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெற்றுக்கள் எடுத்த வீரன் என்ற பெருமையை தட்டிக் கொண்டார் முரளி.

வாழ்த்துக்கள் முரளி. எங்கிருப்பினும் திறமையால் வென்றவன் முரளி. சரியான கெளரவப்படுத்தல் கூட இன்றி தனது தனித்திறமையால் சாதித்த வீரர்களில் முரளியும் ஒருவன்.

சிங்களம் மகிழ்வதிலும் மனதுள் வேதனைப்படுவதையே அதிகம் காணலாம்..! முரளியும் அதை அறிவான். அதற்காக அவன் வாழா திருந்திருந்தால் இன்றைய சாதனைக்கு இடமே இருந்திருக்காது.

முரளிதரனின் சாதனைப் பட்டியல்

டெஸ்ட் போட்டிகள் - 116

மொத்த விக்கெட்டுகள் - 710

10 விக்கெட்டுகள் வீழ்த்தியது - 20

5 விக்கெட்டுகள் வீழ்த்தியது - 10

http://news.bbc.co.uk/sport1/hi/cricket/ot...nka/7123499.stm

Link to comment
Share on other sites

710 விக்கெட்டுகளை பெற்று முரளி உலக சாதனை!

_43998661_650_getty220.jpg

உலகின் சிறந்த பந்து வீச்சாளர் எனும் தகுதியை

முரளிதரன் 709வது விக்கேற்றைப் பெற்று

சேன் வோன் பெற்றிருந்த 708 விக்கெட் சாதனையை

இன்று (03.12.2007) தனது பிறப்பிடமான கண்டியில் உள்ள அஸ்கிரிய

விளையாட்டுத் திடலில் வைத்தே முறியடித்திருக்கிறார்.

இங்கிலாந்து துடுப்பாட்டக் காரரான போல் கொலிங்வூட்டின்

விக்கெட்டை உடைத்ததே முன்னைய சாதனையை முரளி முறியடித்தார்.

அதற்கு சிறிது நேரத்துக்கு பின்னர்

மற்றுமொரு விக்கெட்டை பெற்று 710 விக்கெட்டுகளை

உடைத்திருக்கிறார்.

1972 ஏப்ரல் 27ம் தேதி

கண்டி நகரில் பிறந்தார் முரளீதரன்

வாழ்த்துகள் முரளி

சோதனைகளும் வேதனைகளும் வெற்றிகளும்

மனிதனுக்கு மாறி மாறி வரும்.

காலா காலமாக

முரளியின் கனவுகள் நனவாகுவதை

அரசியல் காரணத்துக்காக

அவரை வாழ்த்தாமல் இருப்பது முறையல்ல என்றே கருதுகிறேன்.

அரசியல்வாதிகளின் வேலை

ஒரு விளையாட்டு வீரனுக்கு தேவையற்றது.

தாயகத்தில் மக்கள் இன்னல் படுகிறார்கள் என்று

நாம் விழாக்களை நிறுத்தியா வைத்திருக்கிறோம்?

அப்படி யாராவது செய்கிறோமா என்றால்??????

முரளிக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலக விளையாட்டு பதிவேட்டில் முத்தையா முரளீதரன் தன் தனித்திறனால் சாதனையாளனாக இடம்பெற்றிருக்கிறார். இது இவரது தனியாளுமையாலும், எதிர்ப்புகள் சவால்கள் மீறியதாக எடுத்தகாரியத்தில் கருமமே கண்ணாகி செயற்பட்டதாலும் அடையப்பெற்றிருக்கிறது. இவரது துறைசார் இச்சாதனைக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்!

இன்று உலக ஊடகங்களில் தமிழன் ஒருவரது பெயர் சாதனையாளராகப் பதியப்படுவதில் நானும் மகிழ்வுறுகிறேன்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் முரளி.பிறந்த மண்ணில் சாதனையை முறியடித்திருப்பது குறிப்பிடதக்கது.

திறமைக்கு முன்னால் எதுவும் நிற்க முடியாது என்பதற்கு முரளி ஒரு சான்று.

Link to comment
Share on other sites

நேற்று மதிய இடைவேளைக்கு முன் சேன் வார்ணேயின் சாதனையை முரளி சமன் செய்தார். பின்பு முறியடித்தும் விட்டார். இதில் மிகவும் பாராட்ட வேண்டிய விடயம் சேன் வார்ணே 145 டெஸ்ட் போட்டிகளில் செய்த சாதனையை முரளி 116வது டெஸ்ட்டிலேயே செய்திருப்பது.

:wub: மனமார்ந்த பராட்டுக்கள் முரளி. :wub:

ஒரு தமிழனாகப் பிறந்து இந்த சாதனையை அவர் செய்ய எவ்வளவு வேதனைகள் சோதனைகளைத் தாண்டியிருப்பார். அவரது சாதனையை எமது இனப்போராட்டத்துடன் போட்டுக் குளப்பாமல் மனதாரப் பாராட்டுவதே சிறப்பானது

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்.

திறமைக்கு முன்னால் எதுவும் நிற்க முடியாது என்பதற்கு முரளி ஒரு சான்று.

முரளி மேலும் மேலும் சாதனைகள் செய்து பெருமை பெறவேண்டும்.

Link to comment
Share on other sites

முரளி ஒரு தமிழனாக இந்த சாதனையை செய்ததில் மகிழ்ச்சி தான். ஆனால் அவருடைய சாதனை கூட தமிழர்களுக்கு எதிரான பிரசாரத்திற்கு உபயோகிக்கப்படுத்தப்படுவது வருத்ததிற்குரிய விடயம். அரசியலும் விளையாட்டையும் கலக்க கூடாது என்பது உண்மை, ஆனால் இன்றைய உலகில் அசியல் நலன்களை தான் முதன்மைபடுத்தப்படுகின்றது. அதனால் துரதிஷ்டவசமாக நாமும் அதையே செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.

முரளியின் சாதனை எப்படி அரசியல் படுத்தப்படுகின்றது என்பதை இந்த செய்தியில் பாருங்கள் (நன்றி டெய்லி மிரர்)

wxl1rc552utoafqkwljqy045_Somawansa.jpg

The biggest wicket taker in test cricket Muttiah Muralitharan congratulated by JVP leader Somawansa Amarasinghe at the special stamp issuing ceremony held today to mark his world record. Posts and Telecommunication Minister Rauff Hakeem is also in the picture.Pic by Dinuka Liyanawatte

Thousands of Muralitharan’s under LTTE detention - Wimal

There are thousands of talented young “Muralitharans” being held at LTTE detention centres in the Wanni, JVP Parliament group leader Wimal Weerawansa told the media today. “Tamil political parties who protest the detention of Tamil youth in Colombo should also raise similar opposition to arrests by the LTTE” he said.

Link to comment
Share on other sites

மதன்

நாம் பாராட்டினால் என்ன பாராட்டாமல் விட்டால் என்ன சிங்கள அரசியல்வாதிகள் இவ்விடயத்தை தமக்குச் சாதகமாகவே பயன்படுத்தப் பார்ப்பார்கள். அதற்காக ஒரு சிறந்த தமிழ்வீரனின் தனிப்பட்ட திறைமையை தமிழர்களாகிய நாமும் அரசியல் காரணங்களுக்காக பாராட்டாமல் விட்டால் சிங்கள அரசியல்வாதிகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3000 பேர் கைது செய்யப்பட்டு அதில் பலர் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் உவருக்கு பாராட்டு தெரிவிப்பது ரொம்ப அவசியம் தான் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முரளிதரனுக்கு இருக்கும் பிரச்சினைகள் முற்றிலும் வட கிழக்குத் தமிழர்களினதை விட வேறானவை என்று தானே அவர் சமூகம் சார்ந்த தலைவர்கள் சொல்லுகினம் (ஒரு நூறு மலையகத் தமிழர்களை அள்ளிக் கொண்டு போன பிறகும்)? எனவே முரளி எங்கள் துன்பங்களால் பாதிக்கப் பட வேண்டும் என நினைப்பதெல்லாம் மூடத் தனம் தான். மேலும் தமிழ் சிங்கள ஒற்றுமை, சிறிலங்காவில் தமிழர்களுக்குள்ள சம வாய்ப்புகள் இவையெல்லாவற்றுக்கும் சிறிலங்கா தூக்கிப் பிடிக்கும் உதாரணமாக த் தான் முரளி இருக்கிறார். எனவே அரசியல் தலைவர் இல்லாவிட்டாலும், வேறு வழிகளில் கதிர்காமர், டக்ளஸ் போன்றோரோடு ஒரே வரிசையிலிருப்பவர் தான் முரளிதரன். எங்கட ஆட்கள் மட்டும் தான் விளையாட்டு வேற இனப் பிரச்சினை வேற எண்டு அநியாயத்துக்கு நல்லவையா இருக்கினம். சிங்களவனுக்குப் பிறந்த குழந்தையிலிருந்து இறந்த பிணம் வரைக்கும் இன வெறி தான் முன்னுக்கு நிற்கிறது.

Link to comment
Share on other sites

முரளிதரன் நிகழ்த்தியிருக்கும் சாதனை சாதாரண சாதனையில்லை. அவரை எம்மவர் சிலர் பாராட்டாமல் விடுவதால் அவரது சாதனையொன்றும் குறைந்து போய்விடப்போவதில்லை.

தற்போது கொழும்பில் கைது செய்யப்பட்ட தமிழர்களுக்காக போராட்டம் நடாத்துவதிலும் மலையக பாராளுமன்ற உறுப்பினர்களே முன்னின்று உழைக்கின்றார்கள். தமிழர்கள் கைதாவதால் இங்குள்ளவர்கள் ஏதோ 1, 2 வேளை உணவை ஒதுக்கியோ அல்லது விழாக்களைப் புறக்கணித்தோ வாழவில்லை. வெறும் வாய்ப்பேச்சிற்கு மட்டும் குறைவில்லை. சும்மா போங்கப்பா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு, உழைக்கிறவர்கள் தான் அவசரகாலச் சட்டத்திற்கும் கையுயர்த்துகிறார்கள் அல்லது கழிப்பறையில் ஒளிந்து கொள்கிறார்கள். இப்போது உழைப்பதும் ஒரு குறிப்பிட்ட பிரிவுத் தமிழ் மக்களுக்காகவே என்று பிந்திய செய்தி (வீர கேசரி-கறுப்பி இணைத்தது) சுட்டிக் காட்டுகிறது. நீங்கள் அநியாயத்துக்கு நல்லவராகவும் அதே வேளை ஒன்றும் தெரியாத அப்பாவியாகவுமெல்லோ இருக்கிறியள்? :)

Link to comment
Share on other sites

மலையக தமிழர்கள்

அடிமைகளாக வாழ்ந்த போது

நம்மவர்கள் கொடி கட்டிப் பறந்தார்கள்.

அவர்களது வாக்குகள் பறிக்கப்பட நம்மவரே காரணமாக இருந்தார்கள்.

இன்றும்

மலையக தமிழர் படும் இன்னல்கள் சொல்லால் வடிக்க முடியாத துன்பம்.

அது பலருக்கு தெரியாது.

இன்றும் அவர்களால்

தம் லயன் வீடுகளை விட்டு

வேறு வீடுகளில் வசிப்பதற்கு இடமில்லை.

தலைவர்கள் சொல்படி நடக்கும் கங்காணிகள்

கங்காணிகள் சொல்படி நடக்கும் தோட்டத் தொழிலாளர்கள்

இதுவே மலையக மக்கள் வாழ்வு.

இவர்கள் சொல்லும் தலைவருக்கு வாக்களிக்காவிடில்

வீட்டில் அடுப்பு எரியாது.

இதைவிட முக்கியமானதும் கொடுமையானதும் இன்னொன்று...........

இவர்களில் பலருக்கு அடையாள அட்டைகள் இல்லை.

தங்களது இருப்பிடங்களை விட்டு

கொழும்பு போன்ற இடங்களுக்கு வேலைக்கு சென்றால்

கிராம சேவகர் வந்து பார்க்கும் போது

அவர் வீட்டில் இல்லை என்று தெரிந்ததும்

அரச கணக்கெடுப்பு லிஸ்டில் இருந்து

அந்த நபர் பெயரை வெட்டி விடுவார்களாம்.

அதைக் கூட புதுப்பிக்கத் தெரியாத மக்கள்.

இவை அரச அதிபர் காரியால விளம்பர பலகைகளில்

சில காலம் இரு பிரிவுகளாக ஒட்டப்பட்டு இருக்குமாம்.

ஒன்று இருப்போர் பெயர்.

அடுத்து இருந்தும் வீட்டில் இல்லாதோர் பெயர்.

குறிப்பிட்ட காலத்துக்குள்

தாங்கள் திரும்பி வநது விட்டதாக அறியத் தராவிட்டால்

அவ்வளவுதான்.........

அவர் பெயர் அகற்றப்படும்.

அதன் பின்

அந்த நபர் கொழும்பில் அல்லது வேறொரு இடத்தில் கைதாகி

அவர் வசிக்கும் இடத்தை கூறினால்

அதை ஆராயும் போலீசாருக்கு வரும் தகவல்

அப்படியான ஒருவர் அங்கு இல்லை என்பதே.

காரணம் அவர் பெயர்

லிஸ்டில் இருக்காது.

அவர் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டு

விபரமே தெரியாமல் போவது அநேகம்.

இதை அங்கே இருந்து வந்த ஒரு அரச அதிகாரி சொன்ன போது

மிக வேதனையாக இருந்தது.

அரசியல்வாதிகள் கூட இந்தியாவின் கொத்தடிமைகள் போலத்தான்

அந்த மலையக இந்திய வம்சா வழியினரை நடத்துகின்றனர்.

படிப்பறிவே இல்லாத மக்கள் அதிகம்.

இவர்களது குழந்தைகள் படித்தால்

வேலைக்கு ஆள் இல்லாமல் போய்விடும்.

இவர்களது கல்விக்கு உறுதுணையாக இருந்த பலர்

யாழ்பாணத்தையும் மட்டக்களப்பையும் சேர்ந்த

மனித நேயம் கொண்ட ஆசிரியர்கள்தான் என்ற தகவலை

அவர் மேலதிகமாக சொன்னார்.

மலையக அரசிய்வாதிகளை விட

இவர்களே பல மாணவர்களை உருவாக்க காரணம்

என்ற தகவல் அப்போதுதான் தெரிந்தது.

பள்ளியில் ஓரளவுக்கு மேல் படிப்பதைக் கூட

லயன் பராமரிப்பாளர்கள் விடுவதில்லை

என்ற கொடுமையை சொன்ன போது கலக்கமாக இருந்தது.

உடல் நலம் குன்றி வேலைக்கு போகாமல் விட்டாலோ

ஒரு அரை மணி நேரம் தாமதித்து வேலைக்கு போனாலோ

சம்பளத்தை வெட்டி விடுவார்கள்!

அன்று வீட்டில் அடுப்பு எரியாது.

இப்படி அநேக கொடுமைகள்.

இப்படியான ஒரு நிலையில் இருந்து

வந்த ஒருவர்தான் முரளிதரன்.

இன்று அவரது திறமை கண்டு எரிச்சல் அடைகிறோம்.

அல்லது

புரியாமல் பேசுகிறோம்.

இதுவே உண்மை.

நாமெல்லாம்

இங்கு எவ்வளவு சுக போகமாக வாழ்கிறோம்.

வாய் கிழிய பேசுகிறோம்.

எமது ஒரு நாள் அநியாய செலவை குறைத்து

அதை ஒரு ஏழை குடும்பத்தின் ஒரு குழந்தையை பராமரிக்க

அல்லது

ஒரு வறிய குடும்பத்துக்கு கொடுப்போமா என்றால்?

நம்மால் பேச முடியாது.

நீங்கள் இருக்கும் அறையை சற்று உற்றுப் பாருங்கள்.

அங்கே ஒரு முறை சென்று பாருங்கள்

நிமிர்ந்து நடக்க முடியாத குடிசை லயன் வீடு.

ஒரு திருத்தம் கூட செய்ய நிர்வாகம் அனுமதிக்காது.

அவர்கள் தன் நிலையை விட்டு எழக் கூடாது எனும் கரிசனை!

இப்படி அநேகம்.................

ஒருவன் நன்றாக இருந்தால் எல்லோரும் வரத்தான் செய்வார்கள்.

இல்லாவிட்டால் யாரும் உறவு என்று கூட சொல்ல மாட்டார்கள்.

ஒவ்வொரு மனிதனின்

வெற்றிக்கு எத்தனையோ மன உழைச்சல்களுக்கு ஆளாகி இருப்பான்.

அத்தனையையும் வென்றே பலர் ஜெயித்தும்

உலக சாதனை படைத்தும் இருக்கிறார்கள்.

அங்கே சாகும் மனிதர்கள் பற்றி பேசிக் கொண்டே

பிறந்த தின விழாக்கள்

திருமணம்

தேவையற்ற விழா செலவுகள்

கூட்டம் கூட்டுவது என விரயமாக்குகிறோமே?

இவை தேவையா என யாராவது நினைக்கிறோமா?

அங்கே நடக்கும் கைதுகளை நிறுத்துங்கள் என்று

நம்மில் எவராவது

இங்கு போராட்டம் நடத்தலாமே?

ஏன் செய்யவில்லை?

தலைவிதி!

மேலதிகமாக சில தகவல்கள்

http://puthiyaboomi.com/Boomi/boomi_105/boom105_sl.hills.htm

Link to comment
Share on other sites

மலையக தமிழர்கள்

அடிமைகளாக வாழ்ந்த போது

நம்மவர்கள் கொடி கட்டிப் பறந்தார்கள்.

அவர்களது வாக்குகள் பறிக்கப்பட நம்மவரே காரணமாக இருந்தார்கள்.

நன்றி அஜீவன்.நாங்கள் எந்த முகத்தோடு மலைநாட்டு மக்களை எமது போராட்டத்துடன் இணைவார்கள்.இல்லை அதற்கான வேலைத்திட்டமாவது யாராலும் எடுக்க பட்டதா என்றால் இல்லை.ஆக எமக்கு தேவையான போது மட்டும் மலையகமக்கள் உதவவேண்டும் என்பது சுயநலவாதிகளாக தான் எம்மை நாம் காட்டி நிற்கிறோம்.

Link to comment
Share on other sites

அவர்களின் நிலை

விளங்க வேண்டியவர்களுக்கு தெரியும்.

பல விடயங்களை இங்கே எழுதுவது சரியல்ல.

எனவே விட்டு விடுகிறேன்.

அவர்கள் வாழும் சூழலில்

அவர்களால் எதுவும் செய்ய முடியாது.

முரளி ஒரு விளையாட்டு வீரன்.

அவர் அரசியல்வாதியல்ல.

அவரும் அரசியலில் இறங்கினால்

ஏதாவது ஒரு கட்சிக்கு வால் பிடிக்க வேண்டி வரும்.

அதை விட இதுவே மேல்.

அரசியல்வாதிகள் வாக்குகளை பெறுகிறார்கள்.

பாராளுமன்றம் போகிறார்கள்.

அவர்கள் என்ன செய்கிறார்கள்.

தமிழர் மட்டும் கைது செய்யப்படவில்லை.

தமிழ் - சிங்கள - முஸ்லீம்கள் என கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள்

இதற்காக குரல் எழுப்பலாம்?

யாரும் ஒன்றும் செய்யவில்லை.

மனோ கணேசன் மலையக தமிழர்தான்.

அவர் குரல் கொடுக்கிறார்.

அவரை புலிகளின் பினாமி என்று எழுதுகிறார்கள்.

மனோ கணேசனுக்கு இருக்கும் தில்

அங்கே பலருக்கு இல்லை.

"எல்லா தமிழரையும் அடைத்த பிறகும்

குண்டு வெடித்தால் அரசு என்ன செய்யும்?"

பாராளுமன்றத்தில் கேட்டவர் மனோ கணேசன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் முரளீதரனினன் சாதனையைப் பாராட்டுவோம். பின்பு அலசலை மேற்கொள்ளலாம்.

1. முரளீதரன் உலக அளவில் சாதனை புரிந்த நிலையில் சிறிலங்கா கிரிக்கட் குழுவுக்குத் தலைமை வகிக்க அழைக்கப்படாததேன்?

2. இந்தியாவில் திருமணம் செய்து கொண்டதால் மட்டும் இந்தியக் கிரிகட் பாரம்பரியம் இவரையும் இவரது திறமையையும் கொஞ்சமாவது பேசுகிறது. இவரது பந்துவீச்சு பற்றி இந்திய முன்னாள் வவிளையாட்டுவீரர்கள் சொன்ன கருத்துகள் இனிப்பானவை அல்ல.

3. வெள்ளையர்களின் (ஆங்ககிலேயர்களின்) திமிர் பிடித்த ஆட்டமாகக் கருதப்படும் கிரிக்கட் விளையாட்டில் அடிமையாகிய நாடுகளின் திறமையாளர்கள் வெளிக்கிளம்பும் போது வெள்ளை இனவாதம் அப்படியே கொப்பளிக்கும். இது அவுஸ்திரேலியாவில் நிறையவே நடந்திருக்கிறது.

ஆக முரளீதரன் உள்ளுர் இனவாதம் முதல் பிராந்திய இளக்காரம், உலகளாவிய கறுப்பு-வெள்ளை இனவாத ஒடுக்கு முறைகளுக்கெல்லாம் முகம் கொடுத்து சகல தடைகளையும் தகர்த்தவாறே இச்சாதனையைப் புரிந்திருக்கிறார்.

ஆனால் அதிகமாக அலட்டிக் கொள்ளாது தனது சாதனையில் குறியாக இருப்பதை நாம் பாராட்டுவதில் என்ன தவறு இருக்கிறது?

இவருக்குக் கடும் போட்டியாக இருந்த வார்ண் கூட வாழ்த்திவிட்டாரே!

:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளிக்கு போஜே நிறுவனம் கண்டியில் வைத்து நேற்று வழங்கவிருந்த போஜே காரை கொழும்புக்குத் திருப்பி அழைத்து தான் வழங்கியதாக பிரச்சாரம் செய்யப்போகின்றார் மஹிந்தா. வழித் தேங்காயை எடுத்து தெருப்பிள்ளையாருக்கு அடிக்கிறார் மஹிந்தா.

தமிழ் பேசத் தெரியாத முரளிக்கு இக்களத்தில் மரியாதை கொடுப்பவர்களை நினைத்தால் சிரிப்பாகத் தான் வருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் மலையகத் தமிழரின் துன்பம் பற்றி நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை. இவற்றை நானே நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால் முரளி அப்படிப் பட்ட பின்னணியில் வளர்ந்தவர் அல்ல. அவரது தந்தையார் முத்தையாவின் சொந்த நிறுவனம் தான் லக்கி இன்டஸ்ட்றீஸ் எனும் பிஸ்கட் நிறுவனம். கண்டி குண்டசாலையில் இருக்கிறது.மேலும், மூவினத்தவரும் தான் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள் என்று நீங்கள் சொல்லியிருப்பது நாம் கேள்விப்பட்டதற்கும் செய்திகளில் வந்ததற்கும் மாறான செய்தியாக உள்ளது. இன வாத நோக்கமே இல்லாத தேசிய பாதுகாப்பு நடவடிக்கை இது என்று நீங்களும் நினைக்கிறீர்களா? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மத்திய கல்லூரியைச் சேர்ந்தவர் எதிர் வீரசிங்கம். அவர் ஆசிய ஒட்டப்போட்டியில் தங்கப்பதக்கம் கிடைத்ததற்கு சிங்களப்பத்திரிகைகளில் அச்சமயத்தில் எதிர்வீரசிங்க என்று செய்திகள் வெளியிட்டு வந்தன. எதிர்வீரசிங்கம் அவர்கள் விளையாட்டுத்துறை அமைச்சில் வேலை கேட்டு சென்ற போது தமிழர் என்ற காரணத்தினால் வேலை நிராகரிக்கப்பட்டது. அதாவது அவர் விளையாடும் போது இலங்கை அரசு இலங்கையராகவும், விளையாடி முடிந்ததும் அவர் தமிழர், தமிழர்கள் இரண்டாம் பிரஜை என்றே ஒதுக்கப்பட்டார்.

அவுஸ்திரெலியா அணி இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி கண்டியில் 80களில் விளையாடியது. அக்காலத்தில் சிறந்த வீரரான வினோதன் ஜோன் அவர்கள் தமிழர் என்பதினால் புனித கண்டியில் விளையாடக்கூடாது என்று பெளத்தபீடதிபதி ஒருவர் சொன்னதினால் அப்போட்டியில் விளையாட அனுமதி வழங்கப்படவில்லை.

டில்சன் என்ற மூஸ்லீம் மதத்தைச் சேர்ந்த துவான் முகம்மது டில்சன் மூஸ்லீமாக இருப்பதினால் இலங்கை அணியில் இடம் கிடைக்க அனுமதிகிடைக்காமையினால் திலகரத்தினே டில்சன் என்று பெளத்த மதத்துக்கு மதம் மாறி அணியில் இடம் பெற்றார்.

வந்தியத்தேவன் சொல்வது போல முரளிதரன் தமிழ் தெரியாதவரல்ல. எனென்றால் நான் முரளியின் பேட்டியினை சக்தி தொலைக்காட்சியில் வந்த மின்னல் என்ற நிகழ்ச்சியில் தமிழில் பேசியதினைக் கேட்டிருக்கிறேன். என்றாலும் இலங்கை அணியில் தமிழர்கள், வேறு மதத்தினர் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டாலும் ஆகத்திறமை இருந்தால் மட்டுமே தமிழர்கள், முஸ்லீம்களை அணியில் சேர்க்கிறார்கள் அல்லது அரசியல் செல்வாக்கு இருந்தால் சேர்க்கப்படுகிறது. முரளிதரன் முதல் முதலாக 92ல் அவுஸ்திரெலியா அணிக்கு எதிராக விளையாடினார். அவர் திறமையாக விளையாடியும் அதற்கு பிறகு வந்த தொடர்களின் ஒன்றான இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் முதலாவது டெஸ்டில் சேர்க்கப்படவில்லை. அப்போட்டியில் ஒதுக்கப்பட்டார். அதில் இந்தியா வென்றது. ஆனால் அப்போட்டியில் தோற்றதற்கு ஒரு காரணம் முரளிதரன் சேர்க்கப்படவில்லை என்பதை கொழும்பு ஊடகங்களில் சில வெளியிட்டன. வேறு வழியில்லாமல் அடுத்த போட்டியில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு முரளி இலங்கை அணியில் ஒரு முக்கிய பாத்திரமாக இருக்கிறார்.

முரளியை தமிழர் என்று பாராட்ட நினைத்தாலும், அவர் விளையாடும் அணி வாளை ஏந்தும் சிங்கத்தினைக் கொண்ட அணி. தமிழர்களைக் கொல்வதற்காக வாளை ஏந்தும் சிங்களவனின் அணி. அதனால் என்னால் பாராட்ட முடியாமல் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முரளியைப் பாராட்டாமல் விடுவது அவர் மேலுள்ள எரிச்சலால் என்றும் அவர் சார்ந்த சமூகத்தினர் மீதான பார்வையினால் என்றும் சிலர் நினைப்பது போல் தெரிகிறது. கந்தப்பு சொன்னது போல முரளி சிறிலங்காவுக்குத் தான் வெற்றி தேடிக் கொடுத்தார். அவர் சிறிலங்கா அல்லாத இன்னொரு தேசத்திற்கு வெற்றி தேடிக் கொடுத்திருந்தால் தமிழன் என்று கொண்டாடலாம். மேலும், கிரிக்கட் என்பது பல சமயங்களில் இலங்கையின் உண்மை நிலையை வெளியுலகிடமிருந்து மறைக்க உதவும் மாயத்திரையாக இருந்திருக்கிறது. இப்படிப் பட்ட சூழலில் நாமும் கைதட்டி கிரிக்கட் எம்மை ஒன்று சேர்த்தது என்று வெளிநாட்டு ஊடகங்கள் எழுதும் படி வைக்கக் கூடாது என்று தான் நாம் கவலை கொள்கிறோம். பிந்திய தகவல்களின் படி மலையகத் தமிழர்கள் நூற்றுக் கணக்கானோர் விடுதலை செய்யப் பட்டுக் கொண்டிருப்பதாக அறிகிறோம். இனி ஆறுமுகன் சந்திரசேகரன் போன்ற *** நாளைக்கு மகிந்தவுக்கு அருகில் பல்லிளித்தவாறு நின்று முரளிக்குப் பாராட்டுத் தெரிவிக்க எஞ்சிய தமிழரின் அவலச் செய்தி பத்திரிகைகளின் மூன்றாம் பக்கத்திற்குப் போகும்.பாருங்கள், மீண்டும் ஒரு முறை கிரிக்கட் நம் பிரச்சினைக்குப் போர்வையிட்டு விட்டது.

*** பண்பற்ற சொற்கள் நீக்கபப்ட்டுள்லன. - இணையவன்

Link to comment
Share on other sites

வந்தியத்தேவனின் அறியாமைக்காக முரளிக்கு தமிழ் தெரியாதென்று ஆகிவிடுமா?? ஏதோ எழுத வேண்டுமென்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதுவதா??

கந்தப்பு நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பது உங்களுக்கே தெளிவில்லை. தமிழனாக பிறந்ததினால் சிங்களஇனம் பலரை ஒதுக்கியது போல் முரளியையும் ஒதுக்கியதாக நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் முரளியின் தனிப்பட்ட திறைமை தான் அவரை அணியில் மீளச் சேர்க்க வைத்ததையும் ஒத்துக் கொளன்கின்றீர்கள். அப்டியிருக்க முரளியை தமிழர்களாகிய நாமும் ஒதுக்க நினைப்பதற்கு உங்கள் வலுவான காரணம் ஒன்றுமில்லை.

இங்கே நாம் பாராட்டுவது முரளியென்ற தமிழனின் தனிப்பெரும் சாதனையைத் தான். அவர் யாருக்காக விளையாடுகின்றார் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்.

இப்படியே எங்களுக்குள்ளேயே பாகுபாடுகளை வளர்த்து பிரிந்தபட்டு வாழ்வதனால்த்தான், உலகமும் எம்மை ஒதுக்கும் உண்மைகளை என்று உணரப் போகின்றீர்களோ??

Link to comment
Share on other sites

முரளி சிங்கள அணிக்கு விளையாடினாலும்.. அவர் எவ்வளவு சிரமங்கள்.. சோதனைகள் தாண்டி சாதனை செய்திருக்கிறார்..

அதை பராட்ட நாம் பின் நிற்க கூடாது..

அவர் அணியில் இருந்தால்தான் சாதனை செய்யமுடியும்..

முரளியை நம்பித்தான்..இலங்கை அணி இருக்கிறது என்று கிரிக்கெட் விமர்சகர்களே.. சொல்லுகிறபோது.. பெருமை கொள்ளுங்கள்.... முரளி தமிழருக்காக முகம் காட்டாமல் விட்டாலும்.. அவர் தன் தமிழப்பெயரை மாற்றாமல் அணியில் தரித்து வென்றுகொண்டிருப்பதற்யாகவே பராட்டலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.