Jump to content

ராமர் பாலம் இருந்தது உண்மைதான்: இந்திய அறிவியல் ஆய்வு மையம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதிலே எதுவும் ஊகம் இல்லை.

கோபுர நிழல் கிழே விழும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மண் கும்பி போன்று செய்து கல்லை மேலே கொண்டு போனார்கள் என்பதுதான் ஒரு ஊகம். சாய்வாக உருவாக்கப்படும் உறுதியான மண்கும்பித் தோற்றம் மிகப் பலமான கோபுரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது. மண்கும்பியின் பிடிமானம் தரையிலும் இருக்கும். 80டன் கல்லை தாங்கி நிற்கும்படி மிகப் பலமான முறையில் கோபுரம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஊகம் தவறு என்று சொல்வதற்கு வேறு சில காரணங்கள் இருக்கின்றன.

அதே வேளை "இந்த ஊகம் தவறு, ஒரே கல் மேலே கொண்டு செல்லப்படவில்லை, பல சிறிய கற்கள் மேலே கொண்டு செல்லப்பட்டு, கோபுர விமானம் கட்டப்பட்டுள்ளது" என்று முனைவர் கலைக்கோவன் நிறுவியுள்ளார். இதுதான் சரியானது. இங்கே ஊகத்திற்கு இடம் இல்லை.

ஆகவே கோபுரத்தில் கல் இருப்பதில் விளங்க முடியாத அற்புதம் இதுவும் இல்லை. மனித உழைப்பின் சாதனை அது.

நிழலை பற்றி நான் ஒரு போதும் குறிப்பிடவில்லை. சிறிய கல்லென்பதும் ஊர்ஜிதப்படுத்த படவில்லை.

ஆனால் நீங்கள் காட்டிய படம் என்பது ஊகித்து கற்பனையால் வரையபட்டது.

ஆனால் இராமர் அணை படம் சட்டலைட் மூலம் தெளிவாக எடுக்கபட்டது.

எனது சில கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிக்காமல் தவிர்த்து விடுகின்றீர்கள் ஏன்???

சீதை இலங்கையிலா சிறை வைக்கபட்டாள்? அப்படியாயின் எந்த இடம்??

திருகோணமலை கடலினுள் இருக்கும் கோயில் எப்படி இராமாயணத்தினுள் வந்தது?

அங்கு இருக்கும் வெந்நீர் ஊற்றுக்கள்

Link to comment
Share on other sites

  • Replies 144
  • Created
  • Last Reply

தமிழினக்ஸ்!

உங்களுக்கு நான் தெளிவாகத்தான் எல்லாவற்றையும் சொல்லி வருகிறேன்.

சிறிய கற்கள் மேலே கொண்டு செல்லப்பட்டு கோபுர விமானம் அமைக்கப்பட்டதுதான் உண்மை. அதை ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

ஓரே கல்லை கொண்டு போய் கட்டினார்கள் என்பது ஒரு தவறான நம்பிக்கை. அப்படித்தான் பல ஆண்டுகளாக நம்பி, கல் மேலே எப்படிப் போயிருக்கம் என்பதற்கு சில ஊகங்களை வெளியிட்டு வந்தார்கள். அப்படியான ஒரு ஊகம்தான் நான் இணைந்த அந்தப் படம். ஆனால் அதை நான் ஏற்றுக் கொள்கவில்லை. ஏற்றுக்கொள்ளாத ஒன்றிற்கு நான் விளக்கம் தரவும் தேவையில்லை.

ஒரு கல் மேலே கொண்டு செல்லப்பட்டது என்ற கருத்து தவறு. ஆகவே அதில் விளங்க முடியாத அற்புதம் எதுவும் இல்லை. பல சிறிய கற்கள் மேலே கொண்டு செல்லப்பட்டு அங்கே கோபுர விமானம் அமைக்கப்பட்டது.

இராமயணம் என்பது ஒரு அரசியல்ரீதியான கற்பனைக் கதை. திராவிட ஆரியப் போரை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு கதை. அதில் குறிப்பிடப்படும் இடங்களின் பெயர்கள் இன்றைக்கும் இருப்பதனால், அந்தக் கதை உண்மையாகி விடாது.

சீதை இலங்கையில் சிறை வைக்கப்பட்டதாக இராமாயணம் சொல்கிறது. ஆனால் இன்றைய இலங்கையில் இந்த இடத்தில்தான் சீதை சிறை வைக்கப்பட்டாள் என்று உறுதியாகச் சொல்லும்படி இராமாயணம் எந்தக் குறிப்பையும் தரவில்லை.

திருகோணமலைக் கடலினுள் இருக்கும் கோயில் பற்றி இராமாயணத்தில் எங்கே வருகின்றது? அப்படி எதுவும் வரவில்லை. சிறுபிள்ளையில் உங்களை சாப்பிடச் செய்வதற்காக உங்களுடைய பாட்டி ஏதாவது கதை சொல்லியிருப்பார். அதையெல்லாம் நம்பிக் கொண்டு கேள்வி கேட்காதீர்கள்.

நான் உங்களை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன், நீங்கள் சொல்வது பற்றி இராமாயணத்தில் உள்ள குறிப்புகளை தாருங்கள் என்று.

இல்லாத ஒன்றைப் பற்றி நாம் விவாதிக்க முடியாது.

Link to comment
Share on other sites

ஆனால் இராமர் அணை படம் சட்டலைட் மூலம் தெளிவாக எடுக்கபட்டது.

நாசா எடுத்த படத்தில் பாலம் இருக்கு எண்டு நாசா சொன்னதா? இல்லையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினக்ஸ்!

.

சிறிய கற்கள் மேலே கொண்டு செல்லப்பட்டு கோபுர விமானம் அமைக்கப்பட்டதுதான் உண்மை. அதை ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

இராமயணம் என்பது ஒரு அரசியல்ரீதியான கற்பனைக் கதை. திராவிட ஆரியப் போரை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு கதை. அதில் குறிப்பிடப்படும் இடங்களின் பெயர்கள் இன்றைக்கும் இருப்பதனால், அந்தக் கதை உண்மையாகி விடாது.

சீதை இலங்கையில் சிறை வைக்கப்பட்டதாக இராமாயணம் சொல்கிறது. ஆனால் இன்றைய இலங்கையில் இந்த இடத்தில்தான் சீதை சிறை வைக்கப்பட்டாள் என்று உறுதியாகச் சொல்லும்படி இராமாயணம் எந்தக் குறிப்பையும் தரவில்லை.

திருகோணமலைக் கடலினுள் இருக்கும் கோயில் பற்றி இராமாயணத்தில் எங்கே வருகின்றது? அப்படி எதுவும் வரவில்லை. சிறுபிள்ளையில் உங்களை சாப்பிடச் செய்வதற்காக உங்களுடைய பாட்டி ஏதாவது கதை சொல்லியிருப்பார். அதையெல்லாம் நம்பிக் கொண்டு கேள்வி கேட்காதீர்கள்.

நான் உங்களை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன், நீங்கள் சொல்வது பற்றி இராமாயணத்தில் உள்ள குறிப்புகளை தாருங்கள் என்று.

இல்லாத ஒன்றைப் பற்றி நாம் விவாதிக்க முடியாது.

சிறிய கற்கள் என்பதும் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கருத்தே. ஆதாரபூர்வமாக நிருபிக்கபடவில்லை.

கற்பனை கதையாக இருக்கலாம். ஆனால் அதில் சரியாக குறிப்பிட்ட இடத்தில் அந்த பாலம் எப்படி அமைந்தது என்பதே கேள்வி இப்போ?

சீதை சிறைவைக்கபட்ட இடம் இராமாயணத்தில் குறிப்பிடபடவில்லை.

இராவணன் சீதையை இங்கே தான் வைத்திருக்கிறேன் என்று சொல்ல முட்டாளா :rolleyes:

திருக்கோணேஸ்வரம்...நீங்களே சொல்கின்றீர்கள் இராமாயணத்தில் எங்கே வருகின்றது என்று.

ஆனால் திருக்கோணேஸ்வர ஆலயம் இராவணன் வழிபட்ட தலம் என்று வரலாறு சொல்கின்றது.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் இரண்டு முக்கிய விடயங்கள் கவனிக்கபட வேண்டும்

1- சீதை சிறை வைக்கபட்ட இடம் தெரியாது

2- திருக்கோணேஸ்வர ஆலயமும் கூறிப்பிட படவில்லை.

ஆனால் அந்த ஆலயம் கடலுக்குள் உள்ளது நிருபிக்க பட்டுள்ளது. அப்போ இராவணன் இருந்தது உண்மை என்றே நினைக்க தோன்றுகிறது.

அதேபோல இராமேஸ்வரத்தில் இராமாயணத்தில் கூறிப்பிட் இடத்தில் பாலம் அமைந்துள்ளது.

இது இராமர் இருந்தது உண்மை என்றே நினைக்க தோன்றுகிறது.

சீதை இலங்கையில் இரு இடங்களுக்கு யுத்தம் தொடங்கியவுடன் இராவணனால் மாற்றப்பட்டது போல இருக்கின்றது.

1- Wellawaya (http://www.mysrilanka.com/travel/lanka/nature/water_falls.htm)

2-Thisamagrakama (யாரும் இந்த பகுதி சிங்கள மக்கள் இருந்தால் கேட்டு பாருங்கள்)

இன்றும் மக்கள் இந்த இடங்களை இராவணன் பெயரை சொல்லி தான் அழைக்கின்றார்கள்

How did the writers without super space-ranging satellites know about the existence of this bridge? In these ancient accounts, written over 5,000 years ago

Link to comment
Share on other sites

இங்கு பாலத்தை கடவுளின் அவதாரமான ஸ்ரீ ராமன் கட்டவில்லை என்று வாதிடும் சபேசன் டங்குவார் போன்றவர்களை நினைத்தால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

சபேசன் மனிதரின் சாதனை கடுமையான உழைப்புத்தான் அதைக் கட்டினது இதைக் கட்டினது என்று புருடா விடுறார். இல்லைத் தெரியாமல் தான் கேக்கிறன் எம்பெருமான் பரம்பொருள் வீற்றிருக்கும் இமைய மலையும் மனிதரோ கட்டினது?

டங்குவார் ஒப்பிட்டு காட்டும் கணக்கு அதை விட பெரிய புருடா. எல்லாம் வல்ல ஆதியும் அந்தமும் இல்லாப் பரம்பொருள் கட்டிய பாலத்தை பாவப்பட்ட ஜென்மங்களான மனிதரினால் கட்டக் கூடிய வசதிகளோடு ஒப்பிட்டு 5 நாட்களில் 34கிலோ மீற்றர் கட்ட முடியாதாம்.

விஞ்ஞானம் பகுத்தரிவு என்று மேலும் மேலும் பாவத்தை தேடாது பிராயச்சித்தங்கள் செய்து எப்படி பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடந்து அவனடி சேர்வது என்று யோசியுங்கோ. முதலில் மனிதக் கழிவுகளை அள்ளி ஆன்மீக அனுபவம் பெற்று பாவங்களைக் குறைத்து அடுத்த பிறப்பிலாவது மனிதனாக பிறக்க பாருங்கள்.

குளிக்கத் தெரியாதவர்கள் முகச்சவரம் செய்யத் தெரியதாவர்களின் அறிவுரைகளை தூக்கி வைத்துக் கொண்டு கலாச்சார சீரழிவுகளில் ஈடுபடுபவர்களிற்கு எப்படி மெஞ்ஞான வழி தெரியப்போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாசா எடுத்த படத்தில் பாலம் இருக்கு எண்டு நாசா சொன்னதா? இல்லையே

ஜயோ தொல்லை :rolleyes: இல்லை....

அதேபோல இராமேஸ்வரத்தில் இராமாயணத்தில் கூறிப்பிட் இடத்தில் தான் உங்கள் வாதத்தின் படி மணல் மேடு or what ever (பாலம்) அமைந்துள்ளது.

Link to comment
Share on other sites

முனைவர் கலைக்கோவன் சிறிய கற்கள் மூலம் கோபுர விமானம் கட்டப்பட்டதை நிறுவியிருக்கிறார். அதன் பிறகே கோயில் பற்றிய ஆவணங்கள் பலவற்றில் இருந்து "ஒரு கல் விவகாரம்" நீக்கப்பட்டது. இன்றைக்கு தஞ்சை கோயில் பற்றிய இணையத்தளங்களில் பெரும்பாலானவற்றில் "ஒரு கல்" பற்றி எதுவும் இல்லை. நீக்கப்பட்டுவிட்டன. காரணம் ஒரு கல் என்பது தவறு என்று நிறுவப்பட்டு விட்டது.

நீங்கள் இராமாயணத்தை சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்தக் கதை மக்களின் மனதில் ஒரு சிறப்பான இடம் பிடித்து விட்டது. அதன் அடிப்படையில் பல புதிய கதைகளை உருவாக்கினார்கள். அவைகள்தான் நீங்கள் சொல்கின்ற கதைகள்.

ஒரு பாறை வெட்டப்பட்டிருப்பது போன்ற தோற்றத்தைக் கண்டார்கள். உடனடியாக அதை இராவணன் வெட்டு என்று பாமர மக்கள் பெயரிட்டார்கள். ஆனால் இராவணன் பாறையை வெட்டியது பற்றி இராமாயணம் எதையும் சொல்லவில்லை. மக்களாக பின்பு உருவாக்கிய கதை அது.

இதுதான் இராவணன் வெட்டிய பாறை என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் உங்களுடைய பதில் என்ன?

இங்குதான் சீதை இருந்தாள் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் உங்களுடைய பதில் என்ன?

ஒரு கற்பனைக் கதைக்கு பிற்சேர்க்கையாக உருவாக்கப்பட்ட கற்பனைக் கதைகளை, அந்தக் கற்பனைக் கதைக்கு ஆதரமாகக் கட்டுவதில் எதாவது அர்த்தம் இருக்கிறதா?

நீங்கள் இராமாயணத்திற்கு புவியியல் ஆதாரங்களை காட்ட விரும்பினால், அதை சரியான முறையில் செய்யுங்கள்!

உதாரணத்திற்கு இராமாயணத்தால் வர்ணிக்கப்படும் ஒரு இடத்தை குறிப்பிடுங்கள். அந்த இடம் இராமாயணத்தில் எந்த விதத்தில் வர்ணிக்கப்படுகிறது என்று கூறுங்கள். அதன் பிறகு அதையும் தற்பொழுது உள்ள இடங்களையும் ஒப்பிட்டு, இராமாயணத்தில் சொல்லப்பட்ட இடம் இதுதான் என்று தர்க்கரீதியாக நிறுவங்கள்.

உதாரணமாக சீதை இருந்த இடம் பற்றி இராமாயணம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்! அதில் குறிப்பிடப்படும் இடங்களோடு ஒப்பிடக்கூடிய அம்சங்கள் திஸ்சரகமவில் உள்ளனவா என்று பாருங்கள். இரண்டையும் ஒப்பிட்டு இராமாயணம் குறிப்பிடும் இடம் இதுதான் என்று தர்க்கியுங்கள்!

ஆனால் உங்களுக்கு இராமாயணமும் தெரியவில்லை. இராமாயணத்திற்கு பின்பு உருவான கதைகள் பற்றியும் தெரியவில்லை.

பாமர மக்கள் பொழுது போகமால் நாலு கதைகளை சொல்வார்கள். கேட்பதற்கு அவைகள் சுவையாக இருக்கும். இவைகளை கர்ண பரம்பரைக் கதைகள் போன்று கொள்ள முடியுமே தவிர, ஒரு ஆதாரமாக காட்ட முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப ரொம்ப துத்துவம் பேசுராறுறுறுறுறுறுறுறுறுறு :rolleyes:

ஜஸ்டினுக்கு செய்திகள் தகவல்கள் எல்லாம் அவதார புரசர்கள் மூலம் தான் வருகின்றன :rolleyes:

விக்கிபீடியாவில் பெயர் தகுதி தெரியாதவர்களின் இணைப்புகளாகவோ அல்லது தினமுரசில் கடைசிப்பக்கத்தை நிரப்பப் போடும்

அப்போ நீங்க மட்டும் பெயர் தகுதி ஓட வந்து இங்கே எழுதிரிங்களோ :wub:

MOHAN PLEASE Justin Biodata provide பண்ணுங்கோ :o:icon_mrgreen:

"கேட்பவன் ஏமாளியாக இருந்தால் எருதும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம்" என்பதைத்தான் சந்தர்ப்பத்திற்கேற்ற மாதிரி மாற்றிச் சொல்லியிருந்தேன். நீங்கள் அதைத் தத்துவமாக விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

1.விக்கிபீடியா என்பது கட்டற்ற கலைக் களஞ்சியம். திறந்த அந்தப் புத்தகத்தில் யாரும் தமக்கு வேண்டிய மூலங்களிலிருந்து தகவல்களைத் திரட்டித் தர முடியும். அதனால் எல்லாத் தகவல்களும் விக்கிபீடியாவில் தவறாக இருக்கின்றன என்று அர்த்தமில்லை. ஆனால் ஒருவர் குரங்கின் நரம்பியல் மற்றும் நடத்தையியல் தெரியாமல் சாதாரண பத்திரிகைச் செய்திகளிலிருந்து குரங்கு ரொக்கட்டில் கீ போர்ட் விளையாடியது என்று எழுதினால் அது நிச்சயமாக நம்பகமில்லாத தகவல் தான். இதற்கு மாற்றீடு நீங்கள் கூறியது போல அவதார புருஷர்களிடம் போவதல்ல.உசாத்துணைப் பட்டியலில் என்ன போட்டிருக்கிறார்கள் எனப் பார்க்க வேண்டும். அவை சாதாரண செய்திகளா அல்லது விஞ்ஞான சஞ்சிகைகளில் வந்தவையா எனப் பார்க்க வேண்டும்.நீங்கள் சொல்வது போல அதிபுத்திசாலித்தனமான வேலைகளைக் குரங்கு செய்ததாக நான் நம்பக்கூடிய எந்த மூலத்திலும் காணவில்லை.நான் இருக்கும் பல்கலையில் எலிகளைப் பயன்படுத்தி சில ஆளிகளை இயக்கி அதன் நடத்தையியலைப் படிக்கிறார்கள். அதனால் எலி மனிதரோடு ஆய்வு கூடத்தில் வேலை செய்கிறது என்று நாம் சொல்வதில்லை.

2. தினமுரசின் பின்பக்க வண்ணமயமான பகுதியில் வரும் செய்திகள் சில சமயம் உண்மையான அறிவியல் செய்திகளை இலகு படுத்துகிறோம் பேர்வழி என்று திரித்துக் கூறப்பட்டதையே குறிப்பிட்டேன்."குதிரைக்கு எயிட்ஸ், பாம்பு முகத்துடன் பிறந்த குழந்தை" இப்படி வண்ணமயமான செய்திகளை அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது.சுண்டல் தினமணியிலிருந்து சுட்டுப் போடும் சில செய்திகள் இப்படிப்பட்டவை. இதனால் தான் இவை நம்பிக்கையான அறிவியல் மூலங்கள் அல்ல என்றேன்.

3.என் தகுதி பற்றிய உங்கள் தனிப்பட்ட எள்ளல்? விவாதம் செய்கையில் உங்கள் நாகரீகமான நடத்தையின் வெளிப்பாடு. அவ்வளவே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தஞ்சை பெரும் கோவில் கட்ட கற்களை எப்படி வெட்டி எடுத்தார்கள் என்று பார்த்தீர்களா?

காலத்துக்கு காலம் தொழில் நுட்பம் மாறலாம்.

இப்பொ கடினமான பாறைகளை துளையிட CO2 Laser Beam மூலம் முடியும் என்கிறார்கள்.

அண்மையில் சன் டிவியில் ஒரு தமிழ் நாட்டு இளைஞர் உலோகத்தாலான ஒரு கரண்டியை தனது கண்ணால் உற்று நோக்கிய படி அதை தடவும் போது கரண்டி முறிந்து விழுந்தது. இதை எப்படி எடுத்துக் கொள்வது?

அட சீ லைட்ட அடிச்சு பாறையில ஓட்டை போடுறதா சொல்லுறாங்க. என்ன மாதிரி எல்லாம் கயிறு விடுறாங்க :lol::unsure: இது தான் எமது நிலைமை

ஓரு அணுவை எம்மால் அதாவது எமது பார்வையின் சக்த்தியால் அசைக்க முடியும்

பல அணுக்களால் ஆன ஒரு பொருளை நாம் சிறிது சிறிதாக பிரித்து (பார்வையால்) சிறு சிறு அணுக்களாக்கினால் எமது பார்வையாலேயே ஒரு பொருளை அசைக்க முடியும் இது விஞ்ஞானம்

இதனை பலரும் நிருபித்திருக்கிறார்கள் அவ்வாறான ஒன்றே அந்த தமிழ்நாட்டு இளைஞனின் முயற்சியும்.

தஞ்சை பெரியார் கோவில் கோபுரம் ஓரே ஒரு கல்லில் மட்டுமே செதுக்கப்பட்டிருப்பது அதன் இன்னொரு சிற்ப்பு. அதை உந்து கோல் சக்த்தியை பல ஆயிர கணக்கான ஆட்கள் பாவித்து எற்கனவே மரக்குத்திகளால் அமைத்திருந்த சாய்வான பாதையால் உருட்டி சென்றார்கள் தஞ்சை கோவில் 1500-1600 இற்கு இடைப்பட்ட காலத்திலேயே கட்டப்பட்டது அதில் வியப்பிற்கு ஒன்றுமில்லை. ஆனாலும் அந்த மனிதர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

எகிப்த்து நாட்டில் அமைந்திருக்கும் பிரமிட்டுக்கள் எத்தனையோ தொன் எடையுள்ள கற்களால் ஆனவை

அதை ஓருவிதமான பரசூட் போன்ற ஒன்றை பாவித்தே காற்றில் பறக்க கூடிய ஒன்றின் உதவியுடனேயே மேலே துக்கினார்கள் என்று ஆய்வாளர்கள் சொல்லுகின்றார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனைவர் கலைக்கோவன் சிறிய கற்கள் மூலம் கோபுர விமானம் கட்டப்பட்டதை நிறுவியிருக்கிறார். அதன் பிறகே கோயில் பற்றிய ஆவணங்கள் பலவற்றில் இருந்து "ஒரு கல் விவகாரம்" நீக்கப்பட்டது. இன்றைக்கு தஞ்சை கோயில் பற்றிய இணையத்தளங்களில் பெரும்பாலானவற்றில் "ஒரு கல்" பற்றி எதுவும் இல்லை. நீக்கப்பட்டுவிட்டன. காரணம் ஒரு கல் என்பது தவறு என்று நிறுவப்பட்டு விட்டது.

நீங்கள் இராமாயணத்தை சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்தக் கதை மக்களின் மனதில் ஒரு சிறப்பான இடம் பிடித்து விட்டது. அதன் அடிப்படையில் பல புதிய கதைகளை உருவாக்கினார்கள். அவைகள்தான் நீங்கள் சொல்கின்ற கதைகள்.

ஒரு பாறை வெட்டப்பட்டிருப்பது போன்ற தோற்றத்தைக் கண்டார்கள். உடனடியாக அதை இராவணன் வெட்டு என்று பாமர மக்கள் பெயரிட்டார்கள். ஆனால் இராவணன் பாறையை வெட்டியது பற்றி இராமாயணம் எதையும் சொல்லவில்லை. மக்களாக பின்பு உருவாக்கிய கதை அது.

இதுதான் இராவணன் வெட்டிய பாறை என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் உங்களுடைய பதில் என்ன?

இங்குதான் சீதை இருந்தாள் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் உங்களுடைய பதில் என்ன?

ஒரு கற்பனைக் கதைக்கு பிற்சேர்க்கையாக உருவாக்கப்பட்ட கற்பனைக் கதைகளை, அந்தக் கற்பனைக் கதைக்கு ஆதரமாகக் கட்டுவதில் எதாவது அர்த்தம் இருக்கிறதா?

நீங்கள் இராமாயணத்திற்கு புவியியல் ஆதாரங்களை காட்ட விரும்பினால், அதை சரியான முறையில் செய்யுங்கள்!

உதாரணத்திற்கு இராமாயணத்தால் வர்ணிக்கப்படும் ஒரு இடத்தை குறிப்பிடுங்கள். அந்த இடம் இராமாயணத்தில் எந்த விதத்தில் வர்ணிக்கப்படுகிறது என்று கூறுங்கள். அதன் பிறகு அதையும் தற்பொழுது உள்ள இடங்களையும் ஒப்பிட்டு, இராமாயணத்தில் சொல்லப்பட்ட இடம் இதுதான் என்று தர்க்கரீதியாக நிறுவங்கள்.

உதாரணமாக சீதை இருந்த இடம் பற்றி இராமாயணம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்! அதில் குறிப்பிடப்படும் இடங்களோடு ஒப்பிடக்கூடிய அம்சங்கள் திஸ்சரகமவில் உள்ளனவா என்று பாருங்கள். இரண்டையும் ஒப்பிட்டு இராமாயணம் குறிப்பிடும் இடம் இதுதான் என்று தர்க்கியுங்கள்!

ஆனால் உங்களுக்கு இராமாயணமும் தெரியவில்லை. இராமாயணத்திற்கு பின்பு உருவான கதைகள் பற்றியும் தெரியவில்லை.

பாமர மக்கள் பொழுது போகமால் நாலு கதைகளை சொல்வார்கள். கேட்பதற்கு அவைகள் சுவையாக இருக்கும். இவைகளை கர்ண பரம்பரைக் கதைகள் போன்று கொள்ள முடியுமே தவிர, ஒரு ஆதாரமாக காட்ட முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

என்ன சபேசண்ணா இப்படி சொல்லிவிட்டீர்கள்???

நான் சீதையை இராவணன் சிறை வைத்திருந்த இடத்தை கண்டியிலே நேரிலே சென்று பார்த்திருக்கிறேன்

அதை எவ்வாறு உங்களால் மறுக்க முடியும் எல்லாமுமே ஆதாரத்துடன் அங்கே இருக்கின்றன

குறிப்பிட்டு சொல்வதென்றால் .................. சீதை விட்ட கண்ணீர் ஒரு அருவியாக ஒடியதற்கான அடையாளங்கள் அங்கே இருக்கின்றன சில காலங்களிற்கு முன்பு நீர் ஒடியது போன்று அப்படியே தெரிகின்றது. அதை ஒருவர் சொல்லி சொல்லி இடங்களையும் காட்டினார் தன்னை ஒரு ஆசிரியை என்று எனக்கு ஏற்கனவே தன்னை அறிமுக படுத்தி கொண்ட ஒருவர் உடனே இ;த அடங்களில் எல்லாம் தொட்டு கும்பிட்டார்............... என்க்கு ஒரே ஒரு கேள்வி தலையை பித்துக் கொண்டிருந்தது ஆதாவது..................... சீதைவிட்ட கண்ணீரே இப்படி ஆறாக ஒடியிருப்பின்????? ***

சிங்கள பொத்ததர்கள் திட்டமிட்டே மகாவலிகங்கையின் மகிமையை மறைத்துவிட்டார்களோ???????

இந்த இந்திய ஆய்வாளர்கள் மகாவலியை ஆராயமல் விடுவது நல்லது காரணம் பல கிராமத்து வறியமக்கள் மகாவலி நீரைத்தான் குடி நீராக பாவிக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுகஸ்... அவர் மேல கருத்து எழுதி அரை மணித்தியாலம்

தானே ஆகுது. மட்டுஸ் வந்து பார்த்து பிறகு வெட்ட வேண்டாமோ?

அதுக்குள்ள என்ன அவசரம்? :unsure:

இது ஒரு எடுத்துக்காட்டு. இதற்கு முன்னரும் பல விடயங்கள் பலராலும் எழுதப்பட்டு இங்கு விடப்பட்டுள்ளது. இவற்றுள் பல இந்துக்களை மனம் நோகடிக்கச் செய்யும் செயல். மதக் கலவரத்தை தூண்டக் கூடியது. குஸ்பு என்ற இஸ்லாமிய நடிகை.. இந்துக்கடவுளின் முன் செருப்போட இருந்து அதைச் சொன்னா அது மதக்கலவரத்தைத் தூண்டும் என்றால்.. சீதையை பற்றிய பகுத்தரிவு துப்பிகளின் விவாதம் மட்டும் மதக்கலவரத்தைத் தூண்டாதாம்.

குஸ்பு இஸ்லாமியப் பெண் என்பது உண்மை. அவர் இஸ்லாத்துக்கு எதிரானவரோ இல்லையோ அது வேறு விடயம். ஆனால் மக்கள் மதிப்பளிக்கும் ஒரு விடயத்தில் அது அறிவுபூர்வமா இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம்.. அதற்கு மதிப்புச் செய்ய வேண்டும். பள்ளிவாசலில் போய் குஸ்பு இப்படிச் செய்வாரா..??! குஸ்பு செய்யுறதை குஸ்பை வைச்சுத்தானே சொல்ல முடியும். அதுக்கு மதக்கலவரத்தை ஊட்டிறது என்று நுணுக்கம் பார்ப்பவர்களுக்கு இங்கு எத்தனையோ தலைப்புக்களில் இந்துக்களின் மதிப்புக்குரிய.. சீதை இராமர் என்ற நிலைகள் கேவலப்படுத்தப்படுகின்றன. அதையேன் மதக்கலவரத்தைத் தூண்டும் செயலாப் பார்க்காம.. சமூக விழிப்புணர்வாப் பாக்கினம்.

இஸ்லாமிய நாடுகளில் ஒரு இந்துக்கடவுளை வைத்து வணங்க முடியாது. ஆனால் குஸ்பு இந்துக்கடவுளின் முன் செருப்போட இருக்க முடியும். அந்தளவுக்கு இந்து மதத்தின் நெகிழ்வுப் போக்குத்தான் இவ்வளவுக்கும் சுதந்திரமான விமர்சனங்களை உள்வாங்க அனுமதிச்சிட்டு இருக்குது. இந்துக்களாலும் இவற்றை பெரிய விடயங்களாக்கி கலவரத்தை மூட்ட முடியும்..! ஆனால் அவங்க அந்தளவுக்கு தீவிரமான மதவெறியர்கள் அல்ல..!

எழுவானின் செயல் குஸ்புக்கு வழிபாடும் செய்யும் நிலையையே என்னில் பிரதிபலிக்கிறது. எழுவானின் செயலை வன்மையாகவே கண்டிக்கிறேன். எனிமேலும் அவர் பாரபட்சமாக நடக்கக் கூடாது. நடப்பின் அவரின் மட்டுறுத்தினர் பதவி என்பது எம்மாலும் மதிக்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாது..! :lol::o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

1.விக்கிபீடியா என்பது கட்டற்ற கலைக் களஞ்சியம். திறந்த அந்தப் புத்தகத்தில் யாரும் தமக்கு வேண்டிய மூலங்களிலிருந்து தகவல்களைத் திரட்டித் தர முடியும். அதனால் எல்லாத் தகவல்களும் விக்கிபீடியாவில் தவறாக இருக்கின்றன என்று அர்த்தமில்லை.

2. தினமுரசின் பின்பக்க வண்ணமயமான பகுதியில் வரும் செய்திகள் சில சமயம் உண்மையான அறிவியல் செய்திகளை இலகு படுத்துகிறோம் பேர்வழி என்று திரித்துக் கூறப்பட்டதையே குறிப்பிட்டேன்."குதிரைக்கு எயிட்ஸ், பாம்பு முகத்துடன் பிறந்த குழந்தை" இப்படி வண்ணமயமான செய்திகளை அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது.சுண்டல் தினமணியிலிருந்து சுட்டுப் போடும் சில செய்திகள் இப்படிப்பட்டவை. இதனால் தான் இவை நம்பிக்கையான அறிவியல் மூலங்கள் அல்ல என்றேன்.

3.என் தகுதி பற்றிய உங்கள் தனிப்பட்ட எள்ளல்? விவாதம் செய்கையில் உங்கள் நாகரீகமான நடத்தையின் வெளிப்பாடு. அவ்வளவே!

இதுவும் உங்களால் தான் எழுதப்பட்டது

விக்கிபீடியாவில் பெயர் தகுதி தெரியாதவர்களின் இணைப்புகளாகவோ அல்லது தினமுரசில் கடைசிப்பக்கத்தை நிரப்பப் போடும் துணுக்குச் செய்திகளாகவோ தான் தெரிகின்றன. இதைப் பார்த்து ஒருவர் அறிவியல் இது தான் என்று நம்பிக் கொண்டிருந்தால், மிக்க மகிழ்ச்சி,

இதிலிருந்து என்ன விளங்குகின்றது? :lol::unsure::o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முனைவர் கலைக்கோவன் சிறிய கற்கள் மூலம் கோபுர விமானம் கட்டப்பட்டதை நிறுவியிருக்கிறார். அதன் பிறகே கோயில் பற்றிய ஆவணங்கள் பலவற்றில் இருந்து "ஒரு கல் விவகாரம்" நீக்கப்பட்டது. இன்றைக்கு தஞ்சை கோயில் பற்றிய இணையத்தளங்களில் பெரும்பாலானவற்றில் "ஒரு கல்" பற்றி எதுவும் இல்லை. நீக்கப்பட்டுவிட்டன. காரணம் ஒரு கல் என்பது தவறு என்று நிறுவப்பட்டு விட்டது.

நீங்கள் இராமாயணத்தை சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்தக் கதை மக்களின் மனதில் ஒரு சிறப்பான இடம் பிடித்து விட்டது. அதன் அடிப்படையில் பல புதிய கதைகளை உருவாக்கினார்கள். அவைகள்தான் நீங்கள் சொல்கின்ற கதைகள்.

ஒரு பாறை வெட்டப்பட்டிருப்பது போன்ற தோற்றத்தைக் கண்டார்கள். உடனடியாக அதை இராவணன் வெட்டு என்று பாமர மக்கள் பெயரிட்டார்கள். ஆனால் இராவணன் பாறையை வெட்டியது பற்றி இராமாயணம் எதையும் சொல்லவில்லை. மக்களாக பின்பு உருவாக்கிய கதை அது.

இதுதான் இராவணன் வெட்டிய பாறை என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் உங்களுடைய பதில் என்ன?

இங்குதான் சீதை இருந்தாள் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் உங்களுடைய பதில் என்ன?

ஒரு கற்பனைக் கதைக்கு பிற்சேர்க்கையாக உருவாக்கப்பட்ட கற்பனைக் கதைகளை, அந்தக் கற்பனைக் கதைக்கு ஆதரமாகக் கட்டுவதில் எதாவது அர்த்தம் இருக்கிறதா?

நீங்கள் இராமாயணத்திற்கு புவியியல் ஆதாரங்களை காட்ட விரும்பினால், அதை சரியான முறையில் செய்யுங்கள்!

உதாரணத்திற்கு இராமாயணத்தால் வர்ணிக்கப்படும் ஒரு இடத்தை குறிப்பிடுங்கள். அந்த இடம் இராமாயணத்தில் எந்த விதத்தில் வர்ணிக்கப்படுகிறது என்று கூறுங்கள். அதன் பிறகு அதையும் தற்பொழுது உள்ள இடங்களையும் ஒப்பிட்டு, இராமாயணத்தில் சொல்லப்பட்ட இடம் இதுதான் என்று தர்க்கரீதியாக நிறுவங்கள்.

உதாரணமாக சீதை இருந்த இடம் பற்றி இராமாயணம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்! அதில் குறிப்பிடப்படும் இடங்களோடு ஒப்பிடக்கூடிய அம்சங்கள் திஸ்சரகமவில் உள்ளனவா என்று பாருங்கள். இரண்டையும் ஒப்பிட்டு இராமாயணம் குறிப்பிடும் இடம் இதுதான் என்று தர்க்கியுங்கள்!

ஆனால் உங்களுக்கு இராமாயணமும் தெரியவில்லை. இராமாயணத்திற்கு பின்பு உருவான கதைகள் பற்றியும் தெரியவில்லை.

பாமர மக்கள் பொழுது போகமால் நாலு கதைகளை சொல்வார்கள். கேட்பதற்கு அவைகள் சுவையாக இருக்கும். இவைகளை கர்ண பரம்பரைக் கதைகள் போன்று கொள்ள முடியுமே தவிர, ஒரு ஆதாரமாக காட்ட முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

அப்படி என்றால் இராமர் பாலம் அது இல்லை என்று வாதாட உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது? அதை நீங்களும் தர்கரீதியாக நிறுவுங்கள்

அதன் பிறகே கோயில் பற்றிய ஆவணங்கள் பலவற்றில் இருந்து "ஒரு கல் விவகாரம்" நீக்கப்பட்டது.

இது பற்றி எனக்கு தெரியாது. விசாரித்து பார்த்து விட்டு சொல்கிறேன்

இது நீங்கள் எழுதியது தான்

உதாரணமாக சீதை இருந்த இடம் பற்றி இராமாயணம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்! அதில் குறிப்பிடப்படும் இடங்களோடு ஒப்பிடக்கூடிய அம்சங்கள் திஸ்சரகமவில் உள்ளனவா என்று பாருங்கள். இரண்டையும் ஒப்பிட்டு இராமாயணம் குறிப்பிடும் இடம் இதுதான் என்று தர்க்கியுங்கள்!

இதுவும் உங்கள் பதில்தான்

சீதை இலங்கையில் சிறை வைக்கப்பட்டதாக இராமாயணம் சொல்கிறது. ஆனால் இன்றைய இலங்கையில் இந்த இடத்தில்தான் சீதை சிறை வைக்கப்பட்டாள் என்று உறுதியாகச் சொல்லும்படி இராமாயணம் எந்தக் குறிப்பையும் தரவில்லை.

:lol::unsure::o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராமன் இவர்களுக்குப் பயன்படுதோ இல்லையோ, அது பற்றிய பழமொழி ஒன்று, இவர்கள் பற்றிய உவமைக்குப் பயன்படும்.

விடிய விடிய இராமன் கதை, விடிந்த பிறகு ராமன் சீதைக்கு என்ன முறை என்று சொல்லுவார்கள்.

என்ன தான் திருப்பித் திருப்பிச் சொன்னாலும், நாளைக்கும் கோடு விழுந்த சீடி மாதிரி திரும்பவும் இதைப் பற்றித் தான் தொடக்குவினம்.

தமிழ்லினக்ஸ்... உங்களுக்குப் பொழுது போகவில்லை என்றால் தொடருங்கோ! இவர்களுக்காக மினக்கெட்டால் நேரம் தான் வீணாகப் போகும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராமன் இவர்களுக்குப் பயன்படுதோ இல்லையோ, அது பற்றிய பழமொழி ஒன்று, இவர்கள் பற்றிய உவமைக்குப் பயன்படும்.

விடிய விடிய இராமன் கதை, விடிந்த பிறகு ராமன் சீதைக்கு என்ன முறை என்று சொல்லுவார்கள்.

என்ன தான் திருப்பித் திருப்பிச் சொன்னாலும், நாளைக்கும் கோடு விழுந்த சீடி மாதிரி திரும்பவும் இதைப் பற்றித் தான் தொடக்குவினம்.

தமிழ்லினக்ஸ்... உங்களுக்குப் பொழுது போகவில்லை என்றால் தொடருங்கோ! இவர்களுக்காக மினக்கெட்டால் நேரம் தான் வீணாகப் போகும்....

:lol: ..just make fun with them. sametime we can learn lot of things. I love to learn legend.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: ..just make fun with them. sametime we can learn lot of things. I love to learn legend.

ஏன் நான் தமிழில் தானே கதைத்தேன். உடனே ஏன் ஆங்கிலத்துக்குத் தாவுகின்றீர்கள். இப்படிப் போனால் நல்லாத் தமிழ் உருப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் நான் தமிழில் தானே கதைத்தேன். உடனே ஏன் ஆங்கிலத்துக்குத் தாவுகின்றீர்கள். இப்படிப் போனால் நல்லாத் தமிழ் உருப்படும்.

மன்னிக்கவும். வேறு வேலையாய் இருந்தேன். அது தான்.

இதை பாருங்கள். எமது மூதாதையரை பற்றியது

http://www.livescience.com/technology/0505...y_robotics.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை பாருங்கள். எமது மூதாதையரை பற்றியது

http://www.dukenews.duke.edu/2005/05/monkeyrobot.html

http://www.livescience.com/technology/0505...y_robotics.html

http://newsroom.ucla.edu/portal/ucla/srp-view.aspx?id=15078

http://www.newscientist.com/article/dn1248...or-peanuts.html

http://english.pravda.ru/science/19/94/377/13706_monkey.html

எமது மூதாதையருக்கு விமானம் ஓட்டவும் நாசா பழக்கியதாக சொல்கின்றார்கள்

அப்போ நடந்த சம்பவம் இது என்று சொன்னார்கள். உண்மை தன்மை எனக்கு தெரியாது. ஆனால் இது வீடியோவில் இருப்பதாக சொல்கின்றார்கள்???

பயிற்சி கூடத்தில் நடந்தது கணனி மூலம்

இரண்டு நமது மூதாதையர்களை விமானியின் பகுதியில் இருத்தி பரிசோதனை பண்ணியிருக்கின்றார்கள்.

ஒரு கட்டத்தில் நாசா விஞ்ஞானிகள் ஓரு நமது மூதாதையருக்கு இப்படி செய்யென்று தகவல் அனுப்ப

அவர் உடனே நீ விருப்பம் என்றால் வந்து செய்யென்று பதில் அளித்தாராம்

சரி என்று அடுத்தவருக்கு அனுப்ப

அவர் உடனே பக்கத்தில் இருப்பருக்கு சொல்லுங்கள் என்று பதில் அனுப்பினாராம்.

இதை மறுதலிக்க வருக வருக என்று அழைக்கிறேன். :lol::unsure:

இது கற்பனையா நிஜமா என்று முடிவில் சொல்கிறேன் :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு எடுத்துக்காட்டு. இதற்கு முன்னரும் பல விடயங்கள் பலராலும் எழுதப்பட்டு இங்கு விடப்பட்டுள்ளது. இவற்றுள் பல இந்துக்களை மனம் நோகடிக்கச் செய்யும் செயல். மதக் கலவரத்தை தூண்டக் கூடியது. குஸ்பு என்ற இஸ்லாமிய நடிகை.. இந்துக்கடவுளின் முன் செருப்போட இருந்து அதைச் சொன்னா அது மதக்கலவரத்தைத் தூண்டும் என்றால்.. சீதையை பற்றிய பகுத்தரிவு துப்பிகளின் விவாதம் மட்டும் மதக்கலவரத்தைத் தூண்டாதாம்.

குஸ்பு இஸ்லாமியப் பெண் என்பது உண்மை. அவர் இஸ்லாத்துக்கு எதிரானவரோ இல்லையோ அது வேறு விடயம். ஆனால் மக்கள் மதிப்பளிக்கும் ஒரு விடயத்தில் அது அறிவுபூர்வமா இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம்.. அதற்கு மதிப்புச் செய்ய வேண்டும். பள்ளிவாசலில் போய் குஸ்பு இப்படிச் செய்வாரா..??! குஸ்பு செய்யுறதை குஸ்பை வைச்சுத்தானே சொல்ல முடியும். அதுக்கு மதக்கலவரத்தை ஊட்டிறது என்று நுணுக்கம் பார்ப்பவர்களுக்கு இங்கு எத்தனையோ தலைப்புக்களில் இந்துக்களின் மதிப்புக்குரிய.. சீதை இராமர் என்ற நிலைகள் கேவலப்படுத்தப்படுகின்றன. அதையேன் மதக்கலவரத்தைத் தூண்டும் செயலாப் பார்க்காம.. சமூக விழிப்புணர்வாப் பாக்கினம்.

இஸ்லாமிய நாடுகளில் ஒரு இந்துக்கடவுளை வைத்து வணங்க முடியாது. ஆனால் குஸ்பு இந்துக்கடவுளின் முன் செருப்போட இருக்க முடியும். அந்தளவுக்கு இந்து மதத்தின் நெகிழ்வுப் போக்குத்தான் இவ்வளவுக்கும் சுதந்திரமான விமர்சனங்களை உள்வாங்க அனுமதிச்சிட்டு இருக்குது. இந்துக்களாலும் இவற்றை பெரிய விடயங்களாக்கி கலவரத்தை மூட்ட முடியும்..! ஆனால் அவங்க அந்தளவுக்கு தீவிரமான மதவெறியர்கள் அல்ல..!

எழுவானின் செயல் குஸ்புக்கு வழிபாடும் செய்யும் நிலையையே என்னில் பிரதிபலிக்கிறது. எழுவானின் செயலை வன்மையாகவே கண்டிக்கிறேன். எனிமேலும் அவர் பாரபட்சமாக நடக்கக் கூடாது. நடப்பின் அவரின் மட்டுறுத்தினர் பதவி என்பது எம்மாலும் மதிக்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாது..! :wub::lol:

நெடுக்ஸ்! நீங்கள் இப்படி எல்லாம் மட்டுறுத்தின்ர்களிடம் முறையிடுவது எனக்கு சரியாகப் படவில்லை.

கம்பனால் சீதை பட்ட அசிங்கத்தின் ஒரு துளியைக்கூட யாழ்களத்தால் அசிங்கப்படபோவதில்லை சீதாபிராட்டி.

எனக்கு இன்னுமொரு சந்தேகம் அசோகவதனத்தில் சீதை சும்மா இருந்ததாகதானே கம்பன் மறைமுகமாக கூறுகின்றான். கண் அருவி அரசமிலைத் தளிர் வரைக்கும் சென்றதாகதானே கூறுகின்றான். ஆடை இருந்தால் இதன் பாதையில் றொம்ப மறிப்புக்கள் இருந்து விடுமே.

இதை எல்லாம் தானும் கண்டு சபையிலும் வெளிப்படுத்துவது கேவலமாக வேறு இல்லையா?

Link to comment
Share on other sites

திமிழ்லினக்ஸிற்கும் மீண்டும் நான் எழுதியது புரியவில்லை.

உதாரணமாக சீதை இருந்த இடம் பற்றி இராமாயணம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்! அதில் குறிப்பிடப்படும் இடங்களோடு ஒப்பிடக்கூடிய அம்சங்கள் திஸ்சரகமவில் உள்ளனவா என்று பாருங்கள். இரண்டையும் ஒப்பிட்டு இராமாயணம் குறிப்பிடும் இடம் இதுதான் என்று தர்க்கியுங்கள்!

சீதை இலங்கையில் சிறை வைக்கப்பட்டதாக இராமாயணம் சொல்கிறது. ஆனால் இன்றைய இலங்கையில் இந்த இடத்தில்தான் சீதை சிறை வைக்கப்பட்டாள் என்று உறுதியாகச் சொல்லும்படி இராமாயணம் எந்தக் குறிப்பையும் தரவில்லை.

என்று சொல்லியிருக்கிறேன்

அதாவது இராமாயணத்தில் நீங்கள் சொல்கின்ற இடங்கள் குறித்த குறிப்புக்கள் எதுவும் இல்லை என்று சொல்கிறேன்.

ஆனால் அவ்வாறான குறிப்புக்கள் இருந்தால்தான் தர்க்கரீதியாக என்றாலும், இந்த இடங்களை இராமாயணத்திற்கான ஆதரமாகக் கொள்ளலாம்.

அதனால்தான் இராமாயணம் நீங்கள் சொல்கின்ற கதைகள் பற்றிய குறிப்புக்களை என்னுடைய அறிதலின்படி தரவில்லை என்று சொல்லி, அப்படி இருந்தால் தாருங்கள் என்று உங்களைக் கேட்கிறேன்.

இராமாயணம் நடந்திருக்கும் என்று நம்பிய பாமர மக்கள் சில இடங்களை, இங்குதான் அது நடந்தது இது நடந்தது என்று சொல்லி வைத்தார்கள். இவைகளை அறிவியல் ஆதாராங்கள் என்று சொல்வது மடமை.

நெடுக்காலபோவான் குஸ்பு பற்றி சொல்லியிருக்கிறார்.

குஸ்பு இந்துக் கோயிலுக்கு சென்ற இந்துக் கடவுள்களை அவமதிக்கவில்லை. ஒரு சினிமா விழா நடக்கின்ற மேடையில், மற்ற அனைத்து நடிகர்களைப் போன்று அவரும் பாதணியோடு அமர்ந்திருந்தார். அதிலே கடவுள் சிலையை வைத்ததற்கு அவர் என்ன செய்வார்?

கடவுள் சிலை இருப்பதனால் மேடையில் அமர்ந்திருந்த அனைவரும் பாதணிகளை களற்றிவிட்டு அமர்ந்திருக்க, குஸ்பு மட்டும் பாதணியோடு அமர்ந்திருந்தால் அதை அவமதிப்பாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை.

குஸ்பு முஸ்லீம் என்பதை மட்டும் வைத்துக் கொண்டு இந்து வெறியர்கள் வழக்குப் போட்டுள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திமிழ்லினக்ஸிற்கும் மீண்டும் நான் எழுதியது புரியவில்லை.

உதாரணமாக சீதை இருந்த இடம் பற்றி இராமாயணம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்! அதில் குறிப்பிடப்படும் இடங்களோடு ஒப்பிடக்கூடிய அம்சங்கள் திஸ்சரகமவில் உள்ளனவா என்று பாருங்கள். இரண்டையும் ஒப்பிட்டு இராமாயணம் குறிப்பிடும் இடம் இதுதான் என்று தர்க்கியுங்கள்!

சீதை இலங்கையில் சிறை வைக்கப்பட்டதாக இராமாயணம் சொல்கிறது. ஆனால் இன்றைய இலங்கையில் இந்த இடத்தில்தான் சீதை சிறை வைக்கப்பட்டாள் என்று உறுதியாகச் சொல்லும்படி இராமாயணம் எந்தக் குறிப்பையும் தரவில்லை.

என்று சொல்லியிருக்கிறேன்

அதாவது இராமாயணத்தில் நீங்கள் சொல்கின்ற இடங்கள் குறித்த குறிப்புக்கள் எதுவும் இல்லை என்று சொல்கிறேன்.

ஆனால் அவ்வாறான குறிப்புக்கள் இருந்தால்தான் தர்க்கரீதியாக என்றாலும், இந்த இடங்களை இராமாயணத்திற்கான ஆதரமாகக் கொள்ளலாம்.

அதனால்தான் இராமாயணம் நீங்கள் சொல்கின்ற கதைகள் பற்றிய குறிப்புக்களை என்னுடைய அறிதலின்படி தரவில்லை என்று சொல்லி, அப்படி இருந்தால் தாருங்கள் என்று உங்களைக் கேட்கிறேன்.

இராமாயணம் நடந்திருக்கும் என்று நம்பிய பாமர மக்கள் சில இடங்களை, இங்குதான் அது நடந்தது இது நடந்தது என்று சொல்லி வைத்தார்கள். இவைகளை அறிவியல் ஆதாராங்கள் என்று சொல்வது மடமை.

இராமாயணத்தில் நீங்கள் சொல்கிறபடி கூறிப்புகள் இருப்பதாக நானும் அறியவில்லை..

இராமாயணம் நடந்திருக்கும் என்று நம்பிய ....இதை அப்படியென்று சொல்ல முடியாது. இராவணனை பற்றி செய்திகள் இலங்கையில் தான் அதிகம் இருக்கின்றது. அது இராமாயணத்தோடு தொடர்பு படுகின்றது.

திருகோணேஸ்வரத்தையே எடுத்து கொள்ளுங்கள் உதாரணமாக.

அப்போ அதுவும் கதையா? கடலுக்குள் இருப்பது கற்பனையா?

பல்லாண்டு காலமாக கதையாய் இருந்த கோவில் இப்போ கடலுக்குள் இருப்பது நிருபிக்கபட்டுள்ளது.

அதே போல தான் காரைக்காலுக்கு அண்மையில் கடலுக்கடியில் இருக்கும் நகரம் கதையாய் தான் இருந்தது இப்போ நிருபிக்கப்பட்டுள்ளது.

அப்போ இராமர் பாலம் பற்றி செய்தியும் உண்மையாக தான் இருக்க வேண்டும்.

கதைகளில் சில பகுதிகள் மிகைப்படுத்த பட்டிருக்கலாம். ஆனால் மூலம் உண்மையாக தான் இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் இது தான் நீங்கள் கூறிப்பிட்ட டாக்டர். கலைக்கோவனனின் பேட்டி

1. தஞ்சைக் கோயிலின் விமானம் ஒரே கல்லால் னது அல்ல என்பதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?

சில வருடங்களுக்கு முன், ‘வரலாறு’ பத்திரிகைக்காக, பன்னிரண்டு நபர்கள் கொண்ட எங்கள் குழு, தஞ்சை பெரிய கோயிலை ஆய்வு செய்யச் சென்றிருந்தது. தஞ்சைப் பெரிய கோயிலை பன்னிரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியை ஆய்வு செய்யக் கிளம்பினோம். அப்படிப் பிரித்ததில், தஞ்சை விமானத்தின் ஆய்வு, எங்கள் குழுவில் புதிதாகச் சேர்ந்த ஒருவருக்குச் சென்று சேர்ந்தது. விமானத்தில் அவர் பார்க்கும் கல்வெட்டுக்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு அவரது ஆய்வுக் கட்டுரையை எழுத வேண்டும் என்று நான் அவருக்குச் சொன்னேன். எனக்கு உடல் நிலை சரியில்லாததால், அவரையே விமானத்தின் மீதும் ஏறச் சொன்னேன். ஒரு பெரிய கயிற்றின் உதவியைக் கொண்டு அவரும் மேலே ஏறினார் (ASIயைச் சேர்ந்தவர்கள் அப்படித்தான் ஏறுவது வழக்கம்)- ஆனால் அவரால் அங்கிருந்த கல்வெட்டுக்களை இன்னதென்று இனங்காண முடியவில்லை. வேறு வழியில்லாததால், நானே விமானத்தின் மீது ஏறினேன். அங்கே, பிரம்மரந்திரக் கல்லின் மீது சில சிமெண்ட் பூச்சுக்களைக் கண்டேன். ASIக்காக அங்கே வேலை செய்து கொண்டிருந்த கொத்தனர் ஒருவரை அழைத்து, அந்தப் பூச்சுக்களைப் பற்றிக் கேட்டேன். ‘விமானம் ஏழெட்டுக் கற்களால் ஆனது’ என்றும், ‘அதை ‘சுதை’யால்(சுதை என்பது சுண்ணாம்பும் மணலும் கலந்த கலவை) பூசி மூடியிருந்தனர்’ என்றும் அவர் கூறினார்.

என்னால் இதை நம்ப முடியவில்லை. நீலகண்ட ஸாஸ்திரிகளும், மற்ற சரித்திர நிபுணர்களும் ‘விமானம் ஒரே கல்லால் ஆனது’ என்று கூறியிருந்தனர்.

இதற்குப் பிறகு, 1930க்களில் வெளிவந்திருந்த ASIயின் வெளியீடுகளையும், மற்ற சரித்திர சிரியர்களின் புத்தகங்களையும் படித்துப் பார்த்தேன். அவர்கள் எல்லோருமே ‘விமானமும் பிரம்மரந்திரக் கல்லும் ஒரே கல்லால் ஆனது அல்ல’ என்றே குறிப்பிட்டிருந்தனர். உண்மையில், தஞ்சைக் கோயிலின் விமானத்தின் கற்கள் ஆரஞ்சுச் சுளைகளைப் போல் அடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். விமானத்தின் மீது சுதைப் பூச்சு இருப்பதைக் காணலாம். விமானம் ஒரே கல்லால் ஆனது என்றால், வெளியிலே சுதைப் பூச்சு எதற்கு?

விமானம் ஒரே கல்லால் ஆனது இல்லை என்பதால், சாரங்களுக்கும் தேவையில்லாமல் போய்விட்ட்து. ‘சாரப்பள்ளம்’ என்ற கிராமத்திலிருந்து சாரங்களை உபயோகித்தார்கள் என்பதற்கும் எந்த தாரமும் இல்லை. சிறிய அளவிலான கற்களை, உருளைகளை( pulley system) உபயோகித்து மேலே ஏற்றினார்கள்.

இதற்கான எதிர்தரப்பு கேள்வி டாக்டர். கலைக்கோவனனிடம்

தஞ்சை கோவிலில் பல இடங்களில் வெடிப்புகள் தோன்றியுள்ளன. அதாவது கற்கள் ஒன்றிலிருந்து ஒன்றுவிலக தொடங்கியுள்ளன.

உங்கள் ஆராச்சியின் படி தஞ்சைக் கோயிலின் விமானத்தின் கற்கள் ஆரஞ்சுச் சுளைகளைப் போல் அடுக்கப்பட்டிருக்கின்றன

அப்படியென்றால் அதில் ஏதாவது வெடிப்புகள் போன்ற அறிகுறி தெரிகின்றதா?

பதில் இல்லை இதற்கு

Link to comment
Share on other sites

முனைவர் கலைக்கோவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டது யார்? எப்பொழுது இந்தக் கேள்வி கேட்கப்பட்டது?

இதை எங்கே அறிந்து கொண்டீர்கள்?

இதை முழுமையாக தர முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முனைவர் கலைக்கோவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டது யார்? எப்பொழுது இந்தக் கேள்வி கேட்கப்பட்டது?

இதை எங்கே அறிந்து கொண்டீர்கள்?

இதை முழுமையாக தர முடியுமா?

இதை எனது இணைய நண்பர் ஒருவர் தான் அனுப்பியிருந்தார். யாரோ தொல் பொருள் ஆராச்சி குழுவினருக்கு தான் இந்த பேட்டியை வழங்கி இருத்தல் வேண்டும். அதன் பின்னர் கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை என்று சொன்னார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வீடியோ விளையாட்டை விளையாடுபவர் ஏன் இராம பாலம் அமைக்க உதவியிருக்க முடியாது?

சொல்லி கொடுத்தால் செய்வார் போல தான் இருக்கு

ஆனால் விளையாடும் போது இடையில் விட்டுவிட்டு ஓடவும் பார்கிறார் போலவுமுள்ளது

அதுதான் இராமர் பாலம் இடைஇடையே முறிந்துள்ளதோ தெரியவில்லை :wub::lol::lol:

http://www.eelamtube.com

இத்தளம் இன்னும் முழுமையாக செய்து முடிக்கவில்லை. பார்க்க முடியாமல் இருந்தால் அறிய தரவும். (windows vista users)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.