Jump to content

ராமர் பாலம் இருந்தது உண்மைதான்: இந்திய அறிவியல் ஆய்வு மையம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியில் என்னுடைய தலைமையில் இயங்குகின்ற "அறிவியல் ஆய்வு மையம்" ராமர் பாலம் இல்லை என்று கண்டறிந்தள்ளது.

ஆனால் கடலில் இருக்கின்ற ஒரு மணற் திட்டைக் காட்டி இதை குரங்குகளும், கரடிகளும் கட்டிய பாலம் என்று சொல்வது எவ்வளவு மடமை?

அப்படியானால் நாயை கொண்டு துப்பறிவது, டொல்பினை கொண்டு போர் கப்பல்களை துறைமுகங்கள் போன்றவற்றை துப்பரிய அல்லது அழிக்க பயன்படுத்துவது, அமெரிக்க சில விஞ்ஞான கூடங்களில் குரங்குகளை கொண்டு வேலை செய்விப்பது

இவையெல்லாம் மடமைத்தனமா??

அந்தகாலத்தில் வந்தால் மடமைதனம். இப்போ என்றால் அறிவியலா? எம்மை விட பண்டைய காலம் மிகவும் முன்னேறியதாக இருக்கலாம். அந்த காலத்துக்கேற்ப சொற்பதங்கள் வேறுபடலாம்

Link to comment
Share on other sites

  • Replies 144
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்லினக்ஸ்!

இங்கு திஸ்சமகாரகமவில் உள்ள பாறை பற்றி சொன்னீர்கள். அது பற்றிய குறிப்பு ராமாயணத்தில் எங்கு வருகின்றது? அந்தக் குறிப்பைத் தயவுசெய்து தருவீர்களா?

அந்த இடத்தின் மறுபெயர் இராமாயணத்தில் உள்ளது. தற்போது திஸ்சமகாரகம என்று அழைக்கபடுகிறது.

இலங்கையின் தென்பகுதியில் தான் இராவணன் சீதையை சிறைவைத்ததாக சொல்லபடுகின்றது. அந்த இடம் தான் திஸ்சமகாரகம இடத்திலுள்ள இராவணன் கோட்டை.

குறிப்பாக சொல்ல போனால் அந்த இடத்தின் பெயர் கிறிந்த. அங்கே தான் இப்போ Light House இருக்கின்றது.

குடா இராவணன் இடா இராவணன் என்று இரண்டு பாறைகள் உள்ளன.

யாரோ ஊர்காவற்றுரை தமிழ் பரம்பரையில் வந்த தமிழ் மக்கள் தான் நீண்ட காலமாக அந்த இடத்தில் விளகேற்றி வந்ததாகவும் சொல்லபடுகின்றது முன்னர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விடயம் அறிவியல் ரீதியான அணுகப்படும் போது எட்டப்படும் முடிவுகளை எல்லோரும் ஏற்றுத்தான் ஆக வேண்டும். அறிவியல் உலகம் மதவாதிகளின் மனங்களையும் பல படிநிலைகளில் வென்றுதான் தனது நீண்ட வரலாற்றுப் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு மேற்குலகம் மட்டுமன்றி இந்தியாவும் ஏன் தமிழகத்தில் உள்ள பகுத்தரிவு கூட்டமும் விதிவிலக்கல்ல..! :rolleyes::lol:

நெடுக்ஸ்! இந்திய அரசின் நீதி, நிர்வாக பிரிவு பிராமண வெறியின் சட்டைப் பையில் தான் உள்ளது என்பதற்க்கு

குழந்தைபிள்ளையின் அறிவுக்கே வெளிச்சமாகிற உண்மையாக; தொழில் உரிமைக்கு சாதிரீதியான பாகுபாட்டுச் சட்டம் கொண்டுவந்தமையே, போதுமான ஆதாரம்.

இந்த சட்டம் உலக அளவில் இந்தியஅரசின் மனித உரிமை எவ்வளவு தாழ்ந்தது என்பதற்கு அமைக்கப் பட்ட கல்வெட்டு! இப்படி ஒரு கல்வெட்டை உலகில் எந்த நாட்டிலாவது காட்டுவீர்களா?

அடுத்து தலையைக் கொண்டுவா என்று அதுவும் மததலைவர்களால் அதுவும் படு வெளிப்படையாக ஆணையிட்டதன் உள்ளார்ந்த கனம் எந்துணை பாதகமானது. கடவுளை இல்லை என்று சொல்பவனை அடித்து கொல்லு என்று பகிரங்கமாக சொல்வதற்க்கு சமமானது அல்லவா?

இங்கே உள்ள சட்டதின் நீதி உயிருக்கு பிச்சை அல்லவா எடுக்க வேண்டும்.

இவர்கள் தமக்கு இஸ்டம் இல்லாதவர்களை தூக்கி எறிந்த வரலாற்றுக்கு ஆதாரங்கள் மிக அண்மையிலேயே பல நிகழ்ந்துள்ளன அல்லவா?

Link to comment
Share on other sites

அட ராமா! :rolleyes:

நாய்க்குள்ள மோப்ப சக்தியைக் கொண்டு அதை துப்பறியப் பயன்படுத்துகிறார்கள். இதைப் போய் குரங்கு பாலம் கட்டிய விடயத்தோடு ஒப்பிடுகிறீர்களே!

குரங்குகள் தாம் வாழ்வதற்கே ஒரு வீடு கட்டத் தெரியாமல் மரக் கிளைகளில் வாழ்கின்றன. அவைகள் பாலம் கட்டுமா?

ஒவ்வொரு மிருகங்களுக்கும் ஒவ்வொரு இயல்பு இருக்கின்றன. குரங்குகளால் குட்டிக்கரணம் அடித்து வித்தைதான் காட்ட முடியும். பாலம் கட்ட முடியாது. இதை புரிந்து கொள்ள பெரிய அறிவு எதுவும் தேவையில்லை.

ஆனால் ஒரு மனிதனை "குரங்குகள் பாலம் கட்டின" என்று நம்ப வைப்பதற்கு ஒரு மதத்தால் முடிகிறதே! இதை விட மதம் வேறு என்ன தீங்கை செய்து விட முடியும்?

திஸ்சகரகமவில் உள்ள பாறை பற்றிய ராமாயணக் குறிப்பைத் தாருங்கள் என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஏதோ, மாறி மாறி சொல்கிறீர்களே தவிர எதையும் தருகிறீர்கள் இல்லை.

வான்மீகி இராமாயணத்தில் இருந்தோ, கம்பராமாயணத்தில் இருந்தோ இந்தப் பாறை பற்றி வருகின்ற பாடல்களை தர முடியுமா?

உங்களால் முடியாது. காரணம் இந்தப் பாறை பற்றி இராமாயணம் எதுவும் சொல்லவில்லை. பிற்காலத்து மனிதர்கள் தாமாக ஒவ்வொன்றைக் காட்டி அதை இராமாயணத்தோடு தொடர்பு படுத்தி ஒவ்வொரு பெயரை வைத்து விட்டுப் போயுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் ஒரு மலையை அனுமானுடைய வால் என்று சொல்வர்கள். கச்சதீவு பற்றியும் ஒருவர் இங்கு சொல்லியிருந்தார். இப்படி சிலர் தாமாக வைத்த பெயர்களை இராமாயணத்திற்கு ஆதாரமாக கொள்ள முடியாது. இவைகள் புவியியல் ஆதாரங்கள் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்லினக்ஸ்!

ராமர் பாலம் என்று சொல்லப்படுவது உண்மையிலேயே ஒரு பாலம்தானா?

அது பாலம் என்றால், அதை யார் கட்டியது என்று ஆராய்வதுதான் அறிவுள்ள செயலே தவிர, அதை ராமனும் குரங்குகளும் கட்டின என்று சொல்வது அறிவுள்ள செயல் அல்ல.

நீங்கள் அதை பாலம் என்று நம்பினால், அதை யார் கட்டியிருப்பதாக நம்புகிறீர்கள்?

வானத்திலே சந்திரன் இருப்பது உண்மை. சந்திர கிரகணத்தின் போது, அது கண்ணுக்குத் தெரியாமல் போவதும் உண்மை. அதற்காக சந்திரனை பாம்பு விழுங்குகிறது என்று நம்புகிறீர்களா?

பாலம் இருப்பது உண்மை என்று நிரூபிக்கப்படுகிறது என்றே வைத்துக் கொள்வோம். அதற்காக அதை குரங்குகள் கட்டியதாக நம்புவீர்களா?

மணல்திட்டு அல்ல, அது பாலம்தான் என்று நிரூபிக்கப்பட்டால், நான் எவ்வித தயக்கமும் இன்றி அதை பாலம் என்று ஒத்துக்கொள்வேன். ஆனால் அதை இராமாயணத்தில் வருவது போன்று குரங்குகளாலும் இராமனாலும் கட்டப்பட்ட பாலம் என்பதை நம்புகின்ற அளவிற்கு நான் முட்டாள் அல்ல.

வானத்தில் சந்திரன் .....அதற்கான பதிலை என் சொந்த அனுபவத்தில் சொல்லியுள்ளேன்.

காலத்தில் திரிபு நிலையாகவும் இருக்கலாம். அல்லது அதன் உண்மையான கருத்து வேறொன்ராக இருக்கலாம்

குரங்கு விஞ்ஞான கூடங்களிலேயே இப்போ வேலை செய்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட ராமா! :rolleyes:

வான்மீகி இராமாயணத்தில் இருந்தோ, கம்பராமாயணத்தில் இருந்தோ இந்தப் பாறை பற்றி வருகின்ற பாடல்களை தர முடியுமா?

உங்களால் முடியாது. காரணம் இந்தப் பாறை பற்றி இராமாயணம் எதுவும் சொல்லவில்லை. பிற்காலத்து மனிதர்கள் தாமாக ஒவ்வொன்றைக் காட்டி அதை இராமாயணத்தோடு தொடர்பு படுத்தி ஒவ்வொரு பெயரை வைத்து விட்டுப் போயுள்ளார்கள்.

சீதையை இராவணன் சிறை வைத்த இடம் என்பது புரியவில்லையா????

முதலில் இராமாயணத்தை சரியாக படியுங்கள். சீதையை இராவணன் சிறைவைத்த இடம் எங்கே என்று சொல்லப்பட்டிருக்கிறது?

ஜயோ இது என்ன குரங்குகள் விஞ்ஞான கூடங்களில் வேலை செய்யும் போது சும்மா சும்மா மண்ணை அள்ளி போடுறது பெரிய வேலையா அதுகளுக்கு.

விண்வெளிக்கே குரங்குகள் சென்று வருகின்றன எந்த குழப்படியும் செய்யாமல் :lol::lol: . அந்தளவுக்கு எமக்கு பகுத்தறிவு இல்லையா என்ற சந்தேகம் தான் வருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட ராமா! :rolleyes:

நாய்க்குள்ள மோப்ப சக்தியைக் கொண்டு அதை துப்பறியப் பயன்படுத்துகிறார்கள். இதைப் போய் குரங்கு பாலம் கட்டிய விடயத்தோடு ஒப்பிடுகிறீர்களே!

குரங்குகள் தாம் வாழ்வதற்கே ஒரு வீடு கட்டத் தெரியாமல் மரக் கிளைகளில் வாழ்கின்றன. அவைகள் பாலம் கட்டுமா?

ஒவ்வொரு மிருகங்களுக்கும் ஒவ்வொரு இயல்பு இருக்கின்றன. குரங்குகளால் குட்டிக்கரணம் அடித்து வித்தைதான் காட்ட முடியும். பாலம் கட்ட முடியாது. இதை புரிந்து கொள்ள பெரிய அறிவு எதுவும் தேவையில்லை.

ஆனால் ஒரு மனிதனை "குரங்குகள் பாலம் கட்டின" என்று நம்ப வைப்பதற்கு ஒரு மதத்தால் முடிகிறதே! இதை விட மதம் வேறு என்ன தீங்கை செய்து விட முடியும்?

நாய் மொப்ப சக்தி இருப்பது உண்மைதான். ஆனால் அது தானாக செய்கின்றதா? அல்லது யாரும் பயிற்றுவித்த பின்னர் செய்கின்றதா?

குரங்கு அதேபோல தான் குரங்கும்

Link to comment
Share on other sites

இராமாயணத்தில் சீதை சிறைவைத்த இடத்திற்கும் நீங்கள் சொல்கின்ற இடத்திற்கும் உள்ள ஒற்றுமைகள் எவை?

இராமாயணத்தில் வர்ணிக்கப்பட்ட இடம் நீங்கள் குறிப்பிட்ட இடம்தான் என்பதை எதை வைத்து சொல்கிறீர்கள்?

இவைகளை இராமாயணத்தில் உள்ள குறிப்புகளையும் தந்த, அந்தக் குறிப்புகள் நீங்கள் சொல்கின்ற இடத்தோடு எந்த வகையில் ஒத்துப் போகின்றன என்று விளக்க முடியுமா?

நான் இராமாயணத்தை படித்து விட்டே உங்களிடம் கேட்கிறேன். என்னால் இந்தப் பாறை பற்றிய குறிப்பை இராமாயணத்தில் கண்டுபிடிக்க முடியாததாலேயே உங்களிடம் கேட்கிறேன்.

உங்களால் அவைகளை தர முடியாது என்று எனக்குத் தெரியும். காரணம் அப்படியான குறிப்புகள் இராமாயணத்தில் இல்லை. இருந்தால் தாருங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராமாயணத்தில் சீதை சிறைவைத்த இடத்திற்கும் நீங்கள் சொல்கின்ற இடத்திற்கும் உள்ள ஒற்றுமைகள் எவை?

இராமாயணத்தில் வர்ணிக்கப்பட்ட இடம் நீங்கள் குறிப்பிட்ட இடம்தான் என்பதை எதை வைத்து சொல்கிறீர்கள்?

இவைகளை இராமாயணத்தில் உள்ள குறிப்புகளையும் தந்த, அந்தக் குறிப்புகள் நீங்கள் சொல்கின்ற இடத்தோடு எந்த வகையில் ஒத்துப் போகின்றன என்று விளக்க முடியுமா?

நான் இராமாயணத்தை படித்து விட்டே உங்களிடம் கேட்கிறேன். என்னால் இந்தப் பாறை பற்றிய குறிப்பை இராமாயணத்தில் கண்டுபிடிக்க முடியாததாலேயே உங்களிடம் கேட்கிறேன்.

உங்களால் அவைகளை தர முடியாது என்று எனக்குத் தெரியும். காரணம் அப்படியான குறிப்புகள் இராமாயணத்தில் இல்லை. இருந்தால் தாருங்கள்!

இராமாயணத்தில் வர்ணிக்கப்பட்ட இடம் நான் சொல்லும் இடம் இல்லை என்று நீங்கள் எப்படி சொல்கின்றீர்கள???. இந்த இடம் பல்லாண்டு காலமாக சொல்லப்பட்டு வரும் இடம். நானும் சிறுவயதில் அங்கே சென்றுள்ளேன் பார்க்க.

இராமாயணத்தில் சீதையை இலங்கையில் தானே சிறை வைத்ததாக சொல்லப்படுகின்றது? அதில் ஏதும் சந்தேகம் இருக்கா?

இராமாயணத்தை நீங்கள் படித்தால் இலங்கையில் எந்த இடம் என்று சொல்லுங்கள் குறிப்பிட்ட பார்கலாம்.

அதை உங்களால் சொல்ல முடியாது. இது கூட தெரியாமல் எப்படி ஆராச்சி செய்கின்றீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராமாயணத்தில் குரங்குக் கூட்டம் என்று சொல்லாமல் வானரக் கூட்டம் என்று தான் குறிப்பிட்டுள்ளனர். தென்னிந்தியப் பகுதியில் வாழ்ந்த ஆதிவாசிகளை அப்படிக் குறிப்பிட்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால் எதற்கும் அறிவியற்பூர்வமான அணுகுமுறையுடன் கூடிய சான்றுகள் தேவை. அதற்கு அடிப்படையாகவே இராமர் அணை தொடர்பான அறிவியல் ஆய்வுகளைத் தொடங்க உத்தரவு கேட்கப்படுகிறது. அது கிடைக்கும் போது பல விடயங்கள் வெளிச்சத்துக்கு வரலாம். பல வரலாறுகள் மாற்றமடையலாம்.

மாறி மாறி வாயால் வெட்டி... எதையும் எவரும் சாதிக்கப் போவதில்லை. அறிவியல் தான் இந்த முடிச்சை அவிழ்க்க வேண்டும்.

இந்த விடயத்துக்கு அப்பால்..

குரங்குகளைப் பழக்கினா அவை வேலைகளையும் செய்யும் திறனைப் பெறவல்லனவே. குரங்குகள் வழமையாகவே மனிதர்களைப் போல அவையும் கருவிகளைப் பயன்படுத்தும் ஆற்றல் கொண்டவை. ஆனால் அவற்றின் தேவை என்பது எல்லாச் சந்தர்ப்பங்களும் மனிதர்களைப் போன்று மதிநுட்பத்துடன் அமைவது இல்லை. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன்

இன்னும் சில இடங்கள் இராமாயணத்துடன் தொடர்பு படுத்தி சொல்லப்படுகின்றன.

இவை பற்றி முழுமையாய் எனக்கு தெரியாது.

நிலாவேரி என்னும் கேணி . இந்த கேணி இராமர் தண்ணி அருந்த வில்லால் துளையிட்ட இடம் என்று சொல்லப்படுகின்றது.

காரைநகரிலும் இது தொடர்பான ஒரு இடம் இருக்கு என்று சொல்கின்றார்கள்

அம்பாறைக்கு அண்மையிலிருக்கும் உகண என்ற பகுதியில் முன்பு இராவணன் கும்பிட்ட ஒரு கோயில் இருந்ததாக சொல்லப்படுகின்றது.

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்பவைகள் அனைத்தும் இராமாயணத்தை அடிப்படையாக கொண்டும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட கதைகள்.

இவைகள் பற்றி ராமாயணத்தில் எதுவும் இல்லை. இராமன் வில்லால் துளைத்து தண்ணீர் குடித்த கதையும் இல்லை, அனுமனின் கச்சை அவிழ்ந்து விழுந்த கதையும் இல்லை, திஸ்கரகம பாறை பற்றிய கதையும் இல்லை.

இராமாயணத்தை படித்து விட்டு மனிதர்கள், இது அதுவாக இருக்கும், அது இதுவாக இருக்கும் என்று பெயர்களை வைத்திருக்கிறார்கள்.

இவைகள் இராமாயணத்திற்கான ஆதரங்கள் இல்லை.

குரங்கு பாலம் கட்டியது என்று நம்புகின்ற நீங்கள், குரங்கு இந்தியாவில் இருந்து தாவி இலங்கைக்கு வந்தது பற்றியும், மலையை தூக்கி வந்தது பற்றியும் ஏதாவது விளக்கம் வைத்திருக்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரங்கு விஞ்ஞான கூடங்களிலேயே இப்போ வேலை செய்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்லினக்ஸ்!

தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியதும் மனிதர்கள்தான். சீனப் பெருஞ்சுவரைக் கட்டியதும் மனிதர்கள்தான். தாஜ்மகாலைக் கட்டியதும் மனிதர்கள்தான். மனித சக்திதான் இவைகளை சாதித்தது.

எமக்கும் தெரியும் நீங்கள் எதை மறைக்க முற்படுகின்றீர்கள் என்று.

உலகில் பல இப்படிப்பட்ட இடங்கள் இருக்கின்றன. அவை எப்படி கட்டப்பட்டன என்று சொல்வது இலகு.

அவற்றின் கட்டிட கலை சாதாரண மனிதரால் என்றும் உருவாக்கலாம்

ஆனால் தஞ்சாவூர் கோயிலை எப்படி அந்த காலத்தில் கட்டினார்கள் என்று சரியான விளக்கம் சொல்ல முடியாமல் இருக்கின்றது.

மனிதனால் கட்டப்பட்டது என்றால் ஏன் மனிதனாலே பதில் சரிவர சொல்ல முடியவில்லை?

இந்த கோவில் இப்பவும் இருக்கின்றது அதனால் தான் மறுக்கவும் முடியலை பதில் சொல்லவும் முடியலை.

இப்போ கோயில் இல்லாவிட்டால் சொல்லி இருப்பாங்க அத்த பெரிய கல்லுகளை யானை அல்லது வேறு ஏதாவது துக்கியதா பொய் சொல்லுகின்றார்கள் என்று.

ஆனால் இராமாயணம் கதைவடிவில் இருக்கின்றது அதனால் மறுத்து அறிக்கைவிடலாம்.

அதில் வரும் திருக்கோணேஸவர திருத்தலம் இப்பவும் கடலுக்கடியில் இருக்கின்றது. இராமர் பாலம் என்பதும் அதில் குறிப்பிட்ட இடத்திலேயே இருக்கின்றது. So So......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பிலிருந்து விலகிச் செல்வதற்கு மன்னிக்க வேண்டும் தமிழ் லினக்ஸ். குரங்குகள் எந்த ஆய்வு கூடத்தில் வேலை செய்கின்றன? அறியும் ஆவலில் மட்டுமே கேட்கிறேன்.

பயிற்சி அளிப்பதன் மூலம் குரங்குகளைக் கொண்டு பல வேலைகளைச் செய்ய முடியும். ஆதிகாலத்தில் விலங்குகளுக்கு பயிற்சி அளித்து வேலை வாங்கினர். யானைகள் கூட பயன்படுத்தப்பட்டுள்ளன..!

http://helpinghandsmonkeys.org/pages/helpers.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொல்பவைகள் அனைத்தும் இராமாயணத்தை அடிப்படையாக கொண்டும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட கதைகள்.

இவைகள் பற்றி ராமாயணத்தில் எதுவும் இல்லை. இராமன் வில்லால் துளைத்து தண்ணீர் குடித்த கதையும் இல்லை, அனுமனின் கச்சை அவிழ்ந்து விழுந்த கதையும் இல்லை, திஸ்கரகம பாறை பற்றிய கதையும் இல்லை.

இராமாயணத்தை படித்து விட்டு மனிதர்கள், இது அதுவாக இருக்கும், அது இதுவாக இருக்கும் என்று பெயர்களை வைத்திருக்கிறார்கள்.

இவைகள் இராமாயணத்திற்கான ஆதரங்கள் இல்லை.

குரங்கு பாலம் கட்டியது என்று நம்புகின்ற நீங்கள், குரங்கு இந்தியாவில் இருந்து தாவி இலங்கைக்கு வந்தது பற்றியும், மலையை தூக்கி வந்தது பற்றியும் ஏதாவது விளக்கம் வைத்திருக்கிறீர்களா?

ஓ...அப்போ திருக்கோணேஸவரர் கோயில் பற்றி ஏதும் இருக்கா?

சீதையை எங்கே சிறை வைக்கப்பட்டது என்று குறிபிட்டு சொல்லி இருக்கா? முக்கியமாக இலங்கை என்று சொல்லி இருக்கா :rolleyes:

பாலம் போட்டால் தாவி வருவது பெரிய வேலையா :lol::lol: குரங்கு தாவி தாவி தான் போகும் :D

மலை

இருக்கே ...உங்கள் வாதத்தின் படி

மனிதனால் இந்த பெரிய கல்லை தஞ்சாவூர் கோவிலில் துக்கி வைக்க முடியும் என்றால்.

ஏன் குரங்கால் முடியாது மலையை துக்க :D:lol:

மன்னிக்கவும் இந்த Key Board ல் சில தமிழ் எழுத்துக்கள் எழுத முடியவில்லை. (துக்க)

குரங்கு விஞ்ஞான கூடங்களிலேயே இப்போ வேலை செய்கின்றன.

தலைப்பிலிருந்து விலகிச் செல்வதற்கு மன்னிக்க வேண்டும் தமிழ் லினக்ஸ். குரங்குகள் எந்த ஆய்வு கூடத்தில் வேலை செய்கின்றன? அறியும் ஆவலில் மட்டுமே கேட்கிறேன்.

விண்வெளி ஆராச்சி கூடங்களில்

Link to comment
Share on other sites

இந்தியாவின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு பற்றி சிலஅவதானங்கள் குறிப்புகள்

http://www.sangam.org/2007/11/Indo_LTTE_Wa...gy.php?uid=2643

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விண்வெளி ஆராச்சி கூடங்களில்

தமிழ் லினக்ஸ், விண்வெளி ஆய்வு கூடத்தில் குரங்கு வேலை செய்யவில்லை. அது உடற்றொழிலியல் மாற்றங்களை ஆராய்வதற்கான ஆராய்ச்சிப் பொருளாக மட்டுமே பயன் பட்டது. நாயும் அப்படிப் பயன் பட்டிருக்கிறது. இவை பரிசோதனைப் பொருட்கள் மட்டுமே, ஆய்வாளர்கள் அல்ல. ஒரு உயிரியலாளராக இருப்பதால் தவறான கருத்துக்களைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க இயலவில்லை. மன்னிக்கவும். புண்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை. மேலும், நெடுக்கர் தந்த இணைப்பு உடல் ஊனமுற்றோருக்கு குரங்கு நாய் போன்ற செல்லப் பிராணிகள் உதவுவது பற்றியது. அது இப்போது சாதாரணமாக நடக்கும் ஒன்று. குரங்கின் இந்த ஆற்றல்கள் பயிற்சியால் வளர்க்கப் படக் கூடியவை. இராமர் பாலத்தை பயிற்சி பெற்ற குரங்குப் படை கட்டியதா எனத் தெரியவில்லை. முதலில் பாலம் கட்டப் பட்டதா என்பது மட்டுமே முக்கியமான விடை தேடும் கேள்வி.

ஜந்தறிவு ஜீவன்கள் மனிதனால் பயிற்றுவிக்க பட்ட பின்னர் தான் அவற்றை கொண்டு வேலை செய்விக்கலாம்.இது போதுவான விடயம்.

1959ல் தான் முதன்முதலாக நாசா இந்த முயற்சியில் இறங்கியது என நினைக்கிறேன்.

உதாரணமாக விண்வெளி கூடங்களில் Monkeys joystick போன்றவற்றை இயக்கவில்லையா. இப்படி பல இருக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரங்கு அதற்குரிய கவசம் அணிவிக்கப் பட்டு அனுப்பப் பட்டதே தவிர அது எதையும் இயக்கியதாகத் தகவல்கள் இல்லை. அதன் உடலில் உடற்றொழில் மாற்றங்களை அளவிடும் சென்சர்கள் பொருத்தப் பட்டன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குரங்கு அதற்குரிய கவசம் அணிவிக்கப் பட்டு அனுப்பப் பட்டதே தவிர அது எதையும் இயக்கியதாகத் தகவல்கள் இல்லை. அதன் உடலில் உடற்றொழில் மாற்றங்களை அளவிடும் சென்சர்கள் பொருத்தப் பட்டன.

உங்கள் கூற்றுப்படி குரங்கு ஒரே இடத்தில் ஒன்றும் செய்யாமல் அப்படியே இருந்தது?

இது தானே உங்கள் பதில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கூற்றுப்படி குரங்கு ஒரே இடத்தில் ஒன்றும் செய்யாமல் அப்படியே இருந்தது?

இது தானே உங்கள் பதில்

வார்த்தைகள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்து விட்டன. விவாதத் தலைப்பு எங்கேயோ நிற்கிறது. எனது கடைசிப் பதிவு இப்பகுதியில். இராமர் காலக் குரங்கு பாலம் கட்டியிருக்கும் என்று நம்ப வைக்கக் கூடிய எந்த அறிவு அல்லது பயிற்சி சார் வேலையும் நாசாக் குரங்கோ அல்லது எந்தக் குரங்கோ செய்யவில்லை. நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வார்த்தைகள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்து விட்டன. விவாதத் தலைப்பு எங்கேயோ நிற்கிறது. எனது கடைசிப் பதிவு இப்பகுதியில். இராமர் காலக் குரங்கு பாலம் கட்டியிருக்கும் என்று நம்ப வைக்கக் கூடிய எந்த அறிவு அல்லது பயிற்சி சார் வேலையும் நாசாக் குரங்கோ அல்லது எந்தக் குரங்கோ செய்யவில்லை. நன்றி வணக்கம்.

நாசாவின் பயிற்சியின் போது மற்ற பிராணிகளை விட குரங்கு தன் தேவைகளை சில ஆளிகளை இயக்கி தானே பூர்த்தி செய்தது. அதுமட்டமல்ல அதற்கு key bord மூலம் சில அவசர தகவல்களை அனுப்பும் முறையும் பயிற்றுவித்தார்கள்...இவை எல்லாம் சாதாரண தகவல்கள் ...இது கூட ............................ :huh::unsure::unsure:

Link to comment
Share on other sites

தஞ்சை பெரிய கோயில் விமானம் பற்றி தமிழினக்ஸ் கேள்விகளை எழுப்பியிருந்தார்.

தஞ்சை பெரிய கோயில் தமிழர்களின் சாதனை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் விடை காண முடியாத அற்புதமும் இல்லை.

தஞ்சை பெரிய கோயிலில் உள்ள 80 டன் எடை உள்ள விமானம் ஒரே கல்லால் கட்டப்பட்டது என்று பலர் சொல்கிறார்கள். ஆனால் இது உறுதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று அல்ல.

தஞ்சை கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழாது என்றும் சொல்வார்கள். ஆனால் அது தவறு என்று பலர் நிறுவியுள்ளார்கள்.

கோபுர விமானத்தில் 12 விதமான கற்களின் கலவைகள் காணப்படுவதாக சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். சிறிய கற்களே மேலே கொண்டு செல்லப்பட்டு கட்டப்பட்டதாக அவர்கள் சொல்கிறார்கள்.

அதே வேளை ஒரே கல்லால்தான் கட்டப்பட்டது என்று கூறுபவர்களும், அந்தக் கல் மேலே எப்படிக் கொண்டு செல்லப்பட்டது என்பதற்கு ஒரு விளக்கம் தருகிறார்கள்.

கோபுரம் கட்டப்பட்டதன் பின்பு அது மண்ணைக் கொண்டு "மண்கும்பி" போன்று மூடப்பட்டது. மலை போன்ற தோற்றம் பெற்ற அதில் பல யானைகளின் உதவியோடு அந்தக் கல் மேலே கொண்டு செல்லப்பட்டது. பின்பு மண் மீண்டும் அகற்றப்பட்டது.

இது அவர்களுடைய விளக்கம்.

எப்படித்தான் பார்த்தாலும், இதில் மனிதனுடைய உழைப்புத்தான் தெரிகிறதே தவிர, எந்த விளங்கமுடியாத அற்புதமும் தென்படவில்லை.

தஞ்சைக் கோயில் கட்டுவதற்கு பல ஆயிரக் கணக்கான சிற்பிகள் பயன்படுத்தப்பட்டார்கள். கட்டி முடிய 6 வருடங்கள் சென்றன.

தமிழர்களின் பெரும் சாதனையாக கருதப்படுகின்ற தஞ்சை பெரிய கோயிலை ஒரு மணல்திட்டோடு ஒப்பிடுவதற்கு சிலருடைய மதவெறியும் மூடநம்பிக்கையும் காரணமாக இருப்பது வேதனையான விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாசாவின் பயிற்சியின் போது மற்ற பிராணிகளை விட குரங்கு தன் தேவைகளை சில ஆளிகளை இயக்கி தானே பூர்த்தி செய்தது. அதுமட்டமல்ல அதற்கு key bord மூலம் சில அவசர தகவல்களை அனுப்பும் முறையும் பயிற்றுவித்தார்கள்...இவை எல்லாம் சாதாரண தகவல்கள் ...இது கூட ............................ :huh::unsure::unsure:

ஐயா ஆக மனிதனை அனுப்பாது குரங்கை அனுப்பியதன் நோக்கம் மனிதனை மிஞ்சிய சக்தி இருப்பதால்தான் என்பதே உங்கள் கருத்தா?

மனித உயிருக்கு இருக்கும் மதிப்பே காரணம் மனித உயிரை பாதிக்கும் ஆராச்சிகளை சட்டம் அனுமதிக்காது.

என்பதாலேயே மனிதனை அனுப்பவில்லை.

விண்வெளியில் உள்ள சூழ்நிலை மனித உயிருக்கு எப்படி பொருத்தமானது என்றா ஆராச்சியும் அடங்கியதே அந்தப் பயணம்.

அமுக்க சமநிலை பேணப்பட விலை என்றால் உயிர் வாழ்தல் முடியாத காரியம்.

ஊதா கடந்தகதிர்களின் செறிவு அதிகம் என்றால் உடனே கைலாயம் பார்க்கவேண்டியதுதான்.

ஈர்பு விசை பலமடங்கு அதிகம் என்றால் தன்கால்களுக்கே தன் சுமையை சுமக்க முடியாது என்புகள் நொருங்கிவிடும். இவைகள் இங்கிருந்தே எம்மால் சிந்திக்க தக்கன ஆனால் இதற்க்கும் அப்பால் பல பிரச்சினைகள் எதிர்பார்க்கப் படலாம். எனவே அவை என்ன வென்று தெரியாத போது முன்னேற்பாடுகள் எவையும் அவற்றுக்கு எடுக்க முடியாது.

அதனால் தான் இப்படி குரங்கையும், நாயயும் வைத்து அனுப்புவதன் நோக்கம்.

இம் மிருகங்களில் வெளிப்படும் பாதிப்புக்களில் இருந்து அந்த காரணிகளின் தன்மையை கண்டு அறிவதே அதன் நோக்கம்.

இதை விட்டு கடவுள் குணம் குரங்கில் கொஞ்சம் இருப்பதால் தான் அனுப்பபட்டது என்று கூற வராதீர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.