Jump to content

பிரித்தானிய தகவல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐகோர்ட் உத்தரவு எதிரொலி

பிரிட்டனில் இந்திய

டாக்டர்களுக்கு சிக்கல்

லண்டன், பிப்.11:

குடியேற்ற விதிமுறைகளில் மாற்றம் செய்ய லண்டன் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டதால், பிரிட்டனில் தொழில் செய்யும் ஆயிரக்கணக்கான இந்திய டாக்டர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

1970ம் ஆண்டுகளிலும், 1980ம் ஆண்டுகளிலும் பிரிட்டனில் டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கான இந்திய டாக்டர்கள் அந்த நாட்டில் குடியேறி தொழில் செய்ய தொடங்கினார்கள்.

இவர்களை தொடர்ந்து, பெர்மிட் தேவையற்ற பயிற்சி பிரிவின் கீழ் பல டாக்டர்கள் பிரிட்டனில் குடியேறினர். ஆனால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த பிரிவு ரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க அந்த நாட்டின் உயர்நீதிமன்றம், ரத்து செய்தது சரிதான் என்று தீர்ப்பளித்தது.

இதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இந்திய டாக்டர்கள் பிரிட்டனில் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்கள் மூட்டைமுடிச்சுகளுடன் அந்த நாட்டைவிட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர்.

பிரிட்டிஷ் அரசின் முடிவுக்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது. வெளிநாடுகளிலிருந்து வந்து தொழில் செய்யும் டாக்டர்களை பிரிட்டிஷ் அரசு நடத்தும் விதம் ஏமாற்றமளிக்கிறது என்று பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்தின் சர்வதேச குழுவின் தலைவர் டாக்டர் எட்வின் பார்மன் கூறியுள்ளார். இதனிடையே, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய பிரிட்டனில் வாழும் இந்திய வம்சாவளி டாக்டர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

http://www.maalaisudar.com

Link to comment
Share on other sites

  • Replies 232
  • Created
  • Last Reply

இவர்களின் சேவையை எதிர்பார்த்து இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிற படியால் அவர்கள் அங்கு போவதுதான் சரி. சொந்த மக்கள் சேவைதான் மகேசன் சேவை எண்டுறது சும்மா பேச்சில இருக்கக்கூடாதுங்கோ. :rolleyes::D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களின் சேவையை எதிர்பார்த்து இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிற படியால் அவர்கள் அங்கு போவதுதான் சரி.

அதே போல புலம் பெயர் ஈழத்தமிழரின் ஆளணி விடுதலைப் போருக்கு பாரிய பங்களிப்புச் செய்யும் என்பதால் அவர்களனைவரும் ஈழம் போவது தான் சரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த அசைலம் அடிக்கிறதுகள் அதுகளின்ர வாரிசுகள் தொடர்சி என்று எல்லாத்தையும் தடுத்து நிறுத்தி அமெரிக்கா கிறீன் காட் போல கொண்டு வந்தால் தான் பிரித்தானியாவும் உருப்படும் ஈழமும் உருப்படும்..! :P :rolleyes:

இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட தகவல்களின் படி இவ்வாண்டின் முதல் மாதத்தில் மட்டும் 5990 கருக்கலைப்புக்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது 5990 சிசுக் கொலைகள் செய்யப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

இவர்களின் சேவையை எதிர்பார்த்து இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிற படியால் அவர்கள் அங்கு போவதுதான் சரி.

அதே போல புலம் பெயர் ஈழத்தமிழரின் ஆளணி விடுதலைப் போருக்கு பாரிய பங்களிப்புச் செய்யும் என்பதால் அவர்களனைவரும் ஈழம் போவது தான் சரி

சோக்கான விசயம் களத்தில களை பிடுங்கிறவைக்கு ஒருக்கா எட்டி சொன்னால் இன்னும் நல்லம்,,,,,

நான் ரெடி,.........நீர் ரெடியா.......?........ காவடி :D:D:unsure:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

லண்டன்: சீக்கிய மாணவருக்கு அடிடர்பன் கிழிப்பு

பிப்ரவரி 23, 2007

லண்டன்: லண்டனில், தலைப்பாகையில் வெடிகுண்டு மறைத்து வைத்திருப்பதாக சந்தேகப்பட்டு சீக்கிய மாணவரை சிலர் அடித்து உதைத்த சம்பவம் அங்குள்ள சீக்கியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காட்லாந்தில், லகிஸ்வர் சிங் என்ற சீக்கிய மாணவர் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார். இவர் தனது கல்விச் செலவுக்காக, லண்டனில் உள்ள சூப்பர் மார்கெட் ஒன்றில் பகுதி நேரமாக வேலை பார்த்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு, வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சிலர் அவரிடம் தகராறு செய்தனர். உன் தலைப்பாகையில் (டர்பன்) வெடிகுண்டு மறைத்து வைத்திருக்கிறாயா என கேட்டு தகராறு செய்தனர். பின்னர் தலைப் பாகையை பறித்து கிழித்து எறிந்தனர், லகீஸ்வர் சிங்கையும் அடித்து உதைத்தனர்.

அந்த சமயத்தில், அங்கு போலீஸார் வரவே, சீக்கிய மாணவரைத் தாக்கிய கும்பல் தப்பி ஓடி விட்டது. தன் மீதான தாக்குதல் குறித்து லகீஸ்வர் சிங் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தாக்குதல் நடத்திய கும்பலைத் தேடி வருகின்றனர்.

ஸ்காட்லாந்தில் வெளிநாட்டவருக்கு பாதுகாப்பு இல்லை. எனவே மும்பை திரும்ப லகீஸ்வர் சிங் முடிவு செய்துள்ளாராம்.

http://thatstamil.oneindia.in/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டன்: சீக்கிய மாணவருக்கு அடிடர்பன் கிழிப்பு

பிப்ரவரி 23, 2007

ஸ்காட்லாந்தில், லகிஸ்வர் சிங் என்ற சீக்கிய மாணவர் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார். இவர் தனது கல்விச் செலவுக்காக, லண்டனில் உள்ள சூப்பர் மார்கெட் ஒன்றில் பகுதி நேரமாக வேலை பார்த்து வருகிறார்.

http://thatstamil.oneindia.in/

என்ன லண்டனில வேலை செய்து கொன்டு, ஸ்கொட்லண்டில படித்தவரோ அப்ப தினம் தினம் வேலைக்கும் யூனிக்கும் கெலிகொப்டரிலதான் போரவர் போல.

Link to comment
Share on other sites

என்ன லண்டனில வேலை செய்து கொன்டு, ஸ்கொட்லண்டில படித்தவரோ அப்ப தினம் தினம் வேலைக்கும் யூனிக்கும் கெலிகொப்டரிலதான் போரவர் போல.

இது என்ன பெரிய பிரைச்சனையா?, அவர் ஸ்கொட்லண்டில படித்துக்கொண்டிருப்பார். அவரது தேசிய காப்புறுதி இலக்கத்தில்(அதாவது National Insurance Number) லண்டனில் இன்னொருவர் வேலை செய்துகொண்டிருப்பார். இங்கிலாந்தில் இதெல்லாம் சகசமப்பா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.