Jump to content

செய்தி ஊடகங்களின் ஆரம்பமும் இன்றைய பிரச்சார வடிவமும்


Recommended Posts

மனித இனத்திடம் தம்மைச் சுற்றி நடப்பவை பற்றியும் அவற்றினால் ஏற்படக் கூடிய தாக்கம் பற்றியும் அறியும் ஆவல் இயற்கையாக இருந்தது. இந்த ஆர்வத்தை பூர்த்தி செய்ய நுகரப்படுவது தான் "செய்திகள்" என்று நாம் இன்று விளங்கி வைத்துள்ள பதம். ஆரம்ப காலங்களில் செய்திகளின் பரிமாற்றம் என்பது தனிநபர்களிடையேயானதாகவும் செவி வழியாக பயணம் செய்பவர்களால் பரப்பப்பட்டதாகவும் இருந்தது. எனவே பரிமாறப்படும் செய்திகளின் உள்ளடக்கம் என்பது கேட்பவர் ஆர்வப்படுபவற்றிலும் சொல்பவரின் அவதானத்திலும் தங்கியிருந்தது. உள்ளடக்கத்தின் பெறுமதியும் உண்மைத்தன்மையும் அவதானத்தை பகிர்பவரிலும் பரிமாற்றம் நடக்கும் சந்தர்ப்ப சூழ்நிலையிலும் தங்கியிருந்தது.

மனித நாகரீக வளர்ச்சியில் அதிகாரம், ஆட்சி, சட்டம், ஒழுங்கு என்பவை படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது இந்த செய்திப் பரிமாற்றம் என்பதும் வரையறைகளை சந்தித்ததுடன் புதிய வடிவங்களையும் பெற்றது. ஆட்சி அதிகார பீடங்கள் அறிவிப்புகளை செய்தல், நிகழ்வுகளை தொகுத்து வழங்குதல் போன்றவற்றின் மூலம் செய்திகள் தனிநபர் பரிமாற்ற வடிவத்தில் இருந்து கட்டுப்பாடான பரப்பல் வடிவத்தை அடைந்தது. பரப்பல் நோக்கமாக்கப்பட்ட நிலையில் அதற்கு பொருத்தமான வடிவங்களாக இசை நடனம் கதை பாடல்கள் என்பன புகுத்தப்பட்டன. ரோமர் சாம்ராச்சியத்தில் யூலியஸ் சீசர் காலப் பகுதியில் இருந்து அன்றாட நிகழ்வுகள் பற்றி தயாரித்த அறிக்கைகள் அதன் காலனித்துவ பகுதிகளில் பரப்பப்பட்டதற்கான ஆதாரங்கள் உண்டு.

அச்சு பிரதி செய்யும் முறை 1456 இல் கண்டு பிடிக்கப்பட்ட காலத்தில் இருந்து செய்திப் பரப்பல் முறை புதிய வடிவத்தைப் பெற்றது. ஆரம்பத்தில் பைபிள் போன்ற புத்தகங்கள் அச்சுப் பிரதி செய்யப்பட்டு வினியோகிக்கப்பட்டன. புத்தக பாணியில் எழுதப்பட்ட பருவவெளியீடாக முதல் பிரசுரம் 1594 இல் லத்தீன் மொழியில் யேர்மனியில் வெளிவந்தது என்று கூறப்பட்டாலும், ஆதாரபூர்வமாக முதலாவது செய்தித்தாள் அச்சு செய்யப்பட்ட ஆண்டாக 1605 உலக செய்தித்தாள் ஒருங்கமைப்பினால் (World Association of Newspapers) இன்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. வாராந்த சஞ்சிகை வடிவிலான பிரசுரங்கள் முதன் முதலில் 1665 இல் இருந்து ஆங்கில மொழியில் இங்கிலாந்தில் வெளிவரத் தொடங்கியது.

கைத்தொழில் புரட்சி தொழில்நுட்ப ரீதியில் அச்சுப் பிரதிகளை உருவாக்குவதில் பாரிய முன்னேற்றங்களை தரத்திலும் வேகத்திலும் தந்தன. காலனித்துவ காலங்களில் அரசாட்சிக்கு எதிரான பத்திரிகைகள் இயங்க முற்பட்ட பொழுது அவற்றை தடுக்கும் நோக்கில் பத்திரிகைகளை பிரசுரிப்பதற்கு முத்திரை பெறவேண்டிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அடிப்படை நோக்கம் முத்திரை மூலம் பெறப்படும் வரி மூலம் பொருளாதார சுமையை அதிகரித்து சுயாதீன பத்திரிகைகளிற்கான எண்ணிக்கையை குறைப்பதும் முத்திரையை வழங்காது விடுவதன் மூலம் குறித்த பத்திரிகைகளை தடை செய்யும் முயற்சியாகவும் இருந்தது. அச்சடித்த செய்தித்தாள்கள் வினியோகத்திற்கு வந்த பின்னரான போர்க் காலங்களில், செய்திகளை அறிவதற்குரிய ஆவல் என்பது செய்தித்தாள்கள் மீது எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்தது. இதன் காரணமாய் செய்திச் சேகரிப்பு என்ற பிரிவு தனித்துவமடைந்து உருவாக்கம் பெற்றது. இவ்வாறு படிப்படியாக மக்களின் ஆர்வங்களை பூர்த்தி செய்யும் செய்திகளை தாங்கி வந்த ஊடகமும் அதை நிறைவேற்றுவதில் ஈடுபட்ட ஊடகத்துறையும் மக்கள் மீது ஆளுமையைச் செலுத்தும் ஒரு கண்ணுக்கு புலப்படாத அதிகாரத் தரப்பாக மாற்றம் பெற்றது.

செய்தி ஊடகத்தின் வளர்ச்சியானது அதன் செய்தி சேகரிப்பு முதல் வினியோகம் வரை எதிர்கொள்ளும் பொருளாதார சுமைகளை தாங்குவதற்குரிய பின்புலங்களில் தங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியது. சுயாதீனமாக இயங்கிய செய்தி ஊடகங்கள் விளம்பரங்களை பிரசுரிக்கும் வழக்கத்தை அறிமுகப்படுத்தியதனூடாக தமது சுயாதீனத்தை மேலும் இழந்தன. இவ்வாறு வணிக மயப்படுத்தப்பட்ட ஊடகத்துறை தம்மை நோக்கி விளம்பரங்களையும் முதலீடுகளையும் கவரும் நோக்கில் தமது இயக்க விதிகளை மாற்றிக் கொண்டார்கள். இதன் அங்கமாக மரியாதைக்குரிய நடத்தை, நடுநிலையான நீதியான கொள்கைகள் என்ற பொது அபிப்பிராய ரீதியில் கவர்ச்சியான வரையறைகளை உருவாக்கியதன் மூலம் corporate media என்பதற்கு வித்திட்டார்கள். இதன் அங்கமாக ஊடகத்துறைக்குரிய கல்லூரிகள் உருவாக்கப்பட்டது. இவ்வாறு துறைசார் கல்லூரிகளில் பயிற்றப்பட்ட professional journalism என்பதன் ஒரு அங்கம் தான், உத்தியோகபூர்வ மூலங்களில் இருந்து வரும் தகவல்களையும் அபிப்பிராயங்களையும் மட்டும் தான் செய்தியாக்கும் மரபு. அதாவது அரச நிர்வாகம் முதல் ஏனைய நிலையான கட்டமைப்புகளின் நலன்களுக்கு எதிராக எதையும் பிரசுரிக்காத தன்மை.

இன்றைய உலகில் "பிபிசி" முதல் "நியுயோர்க் ரைம்ஸ்" பத்திரிகை வரை எல்லோரும் corporate media என்ற வரையறைக்குள் இயங்குபவர்கள். 2004 இல் மேற்கொள்ளப்பட்ட ஈராக் மீதான படையெடுப்பில் பிரித்தானியா பங்குபற்றுவதற்கு முன்வைத்த காரணங்களை கேள்விக்குட்படுத்திய குரல்களை பிரித்தானிய ஊடகங்கள் திட்டமிட்ட முறையில் கவனமெடுக்காது விட்டதாக கருதப்படுகிறது. வேல்ஸ் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வு ஒன்றின் படி ஆக்கிரமிப்புக்கு முன்னர் பேரழிவு ஆயுதங்கள் (Weapons of Mass Destruction) பற்றிய செய்திகளில் "பிபிசி", 90 வீதமான சந்தர்ப்பங்களில் சதாம் அவற்றை உண்மையில் கொண்டிருக்கிறார் என்ற கருத்தைத்தான் மறைமுகமாகவேனும் உணர்த்தியது. இதன் மூலம் படையெடுப்பை நியாயப்படுத்துவதில் துணைபுரிந்தது. இவற்றுக்கு உறுதுணையாக புலனாய்வுத்துறையினர் மக்களை நம்பவைக்கும் படியான "சதாமின் மாளிகைகளில் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும

Link to comment
Share on other sites

இவற்றுக்கெல்லாம் கிறீடம் வைத்தாற் போல(CNN,FOX) போன்ற செய்தி ஸ்தாபனங்கள் யூதர்களால் ஸ்தாபிக்கப்பட்டது என்பது கசப்பான உண்மை.இதிலும் அறாபிய மக்களின் விடுதலை பற்றி இந்த செய்தி ஸ்தாபதனங்கள் எப்படி உண்மையை வெளிவிடும்?.அல்லது மற்ற நாடுகளின் விடுதலை பற்றி உண்மையான கருத்தை வெளியிடும்?.இவ்வளவு பிரச்சனை நடக்கும் எமது நாட்டில் CNN பேட்டி கண்ட ஆள் பழைய EPDP யின் ஒரு உறுப்பினர் ஒருவர்.இவர்களின் நடு நிலமை அப்போதே புரிந்து விட்டது.அத்தோடு மட்டுமல்லாமல் சிங்கள விரிவுரையாளரை பேட்டி கண்டு(நிச்சயமாக இவர் சிங்கள இன வாதி) ஏதோ தமிழர்கள் தான் பயங்கரவாதிகள் என பூதாகரமான பிரச்சாரத்தை கொடுத்தவர்கள் இந்த CNN.இன்னும் பல உதாரணங்களை சொல்லலாம். இப்போதைக்கு இது போதுமென நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

Prostitution is an Institution

By: Professor Aaron Rajah, San Diego, California

Courtesy: TamilCanadian

A prostitute says to a potential client, “Hon, if you got money I got time.” The modern day media prostitutes have a new slogan, “You got money, we got writing.” Often these new slogans are attributed to the state organizations involved in a cover up or state propaganda. In the context of Sri Lankan state terrorism against the minority Tamils, this propaganda often induces foreign journalists and transforms them into prostitutes attempting to continue the state’s terrorism propaganda in the international arena. Associate press (AP) writers often make good media prostitutes in the fight against truth in Sri Lanka’s ethnic cleansing against minority Tamils.

...

http://www.tamilcanadian.com/page.php?cat=134&id=5261

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் மீதான கவனம் திரும்பிய காலப் பகுதியில் பிபிசி மற்றும் வொயிஸ் ஒவ் அமெரிக்க போன்ற ஊடகங்கள் பேர்சியன் (Persian) மொழியிலான சேவையினை விரிவாக்கியிருந்தார்கள். அதேவேளை பிபிசி பொருளாதார சிக்கல்களினால் செலவீனங்களை கட்டுப்படுத்தும் மறுசீரமைப்பு மூலம் சில நிகழ்ச்சிகளை நிறுத்துவதாகவும் பல நூறு பணியாளர்களை இடைநிறுத்துவதாகவும் அண்மையில் அறிவித்திருந்தது. இந்தப் பின்னணியில் சர்வதேச ஊடகங்களின் பல்மொழிச் சேவைகளின் நோக்கத்தை ஓரளவு புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

நீங்கள் கூறியது போல் ஈரான் மக்களிற்காக பாரசீக மொழியில் ஒரு நிகழ்ச்சி தொடங்குவார்கள் அதில் தற்போது இருக்கும் அரசிற்கேதிரான கருத்துகளை வளர்பார்கள் அந்த கருத்துகளாள் நடுதரவர்க்கத்தினர் சிலர் கவலைபடுவார்கள் பிறகு அவர்களுக்கு மேற்கத்தைய நாடுகளில் அரசியல் தஞ்சம் கொடுப்பார்கள் ஏனையோர் ஈரானில் இருந்தே செயற்படுவார்கள் போராட்டம் வெடிக்கும் தமது கொள்கைகளிற்கு அரசு அடங்கினா அரசிற்கு உதவி செய்வார்கள் தாம் வளர்த்த நடுதரவர்க்கத்தை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி ஒதுக்குவார்கள் அரசு அடங்காவிட்டால் தாங்கள் வளர்த்த நடுதர வர்க்கத்தினை மனித உரிமை,ஜனநாயக மீறல் என்று கூச்சல் போட சொல்லி அவர்களுக்கு ஆதரவளித்து அவர்களை தங்களின் கைபொம்மையாக்கி அரசு கட்டிலில் ஏற்றுவார்கள்.

Link to comment
Share on other sites

ஒரு பேப்பர் குழுமத்திற்கு ஒரு வேண்டுகோள்:

மேற்குறித்த கட்டுரையாளரின் கீழ்வரும் கருத்துக்களையும் தயவு செய்து பரிசீலிக்கவும்!

யாழ்களம் என்ன நோக்கத்திற்காக இயங்குகிறதோ அதை நிறைவேற்றுவதற்குரிய முழுக் கருத்துச் சுதந்திரம் தான் குறைந்தபட்ச்சத் தேவை. யாழ்களத்தின் இயங்கும் நோக்கத்திற்கு அப்பாற்பட்ட கருத்துச் சுதந்திரம் ஆடம்பரமானதும் தேவை கருதி கட்டுப்படுத்தப்படக் கூடியதும் வேண்டியதுமே.

யாழ்களம் என்ன நோக்கத்திற்காக இயங்குகிறது என்பதை அதன் பொறுப்பாளர்(கள்) தான் தீர்மானிக்கக் கூடியவர்கள். ஏனையவர்களிற்கு எந்தளவிற்கு உரிமை இருக்கிறது எந்தளவிற்கு கொடுக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்தவித அபிப்பிராயமும் இல்லை. இது முற்று முழுக்க பொறுப்பாளர்களின் உரிமை-முடிவு என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

யாழ் போன்ற ஒரு களம் எப்படியான நோக்கங்களிற்கு இயங்க வேண்டும் என்பதைப் பற்றி தனிப்பட்ட கருத்துக்களைச் சொல்லலாம்.

-1- இன்று தமிழ் இனம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் பற்றிய சரியாக prioritize பண்ணுப்பட்டு அவற்றில் கவனம் தேவை.

-2- அந்த சவால்கள் பற்றி ஏனை தளங்களில் இல்லாத பார்வைகளிற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

-3- வித்தியாசமான சிந்தனைகள் வரவேற்கப்பட வேண்டும் புதிய அணுகுமுறைகள் பரீட்சித்துப்பார்க்கும் ஊக்குவிக்கும் களமாக இருக்க வேண்டும்.

-4- இவற்றின் மூலம் புதிய வழிமுறைகள் அணுகுமுறைகள் அறிமுகப்படுத்தப்படலாம். அது பரந்த சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்படுவதும் விடுவது பல புறக்காரணிகளால் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ தடைப்படலாம். ஆனால் அவற்றை இனங்கண்டு அவற்றின் மீது கவனத்தை கொண்டுவர முயற்சிக்கும் கடமையைச் செய்ய வேண்டும்.

-5- எமது சமூகத்தில் உள்ள வழமையான சிந்தனைகள் பார்வைகள் கருத்துக்கள் ஏனைய தளங்கள் ஊடகங்கள் களங்களில் நிரம்பி வழியும் விவகாரங்களால் நிரம்பி வழிவதை overwhelm பண்ணப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும்.

-6- மொத்தத்தில் தமிழ்த் தேசியத்தின் சமூகத்தின் ஆரோக்கியமான எதிர்காலம் நோக்கிய ஒரு சுதந்திரமான சிந்தனை மற்றும் பரீட்சாத்த ஆய்வு களமாக இருக்க வேண்டும். தமிழ்த் தேசியத்தை பாதிக்காத நீதியான நியாயமான நேர்மையான சட்டதிட்டங்களிற்கு உட்பட்ட அனைத்திற்கும் அனுமதி இருக்க வேண்டும். இதன் அர்த்தம் விபச்சாரத்தால் எப்படி விரைவாக பணம் பண்ணலாம் என்று ஆய்வு செய்யலாம் அறிவுரை கூறலாம் என்று அர்த்தம் இல்லை!

கருத்துக்களம் என்பதற்கும் இணையத்தளம் அல்லது ஊடகம் ஒன்றிற்கும் இடையில் உள்ள வேறுபாடுபாட்டை தேவைகருதி சிதைத்து கருத்து விதைக்கப்பட்டிருக்கிறது.

மக்களின் கருத்துக்களம் என்பது மக்களின் உணர்வுகளை சுதந்திரமாக பிரதிபலிக்கும் என்பதே பொதுவான அபிப்பிராயமாக காணப்படுகின்ற போது, இதே கட்டுரையாளர் "யாழ்களத்தின் இயங்கும் நோக்கத்திற்கு அப்பாற்பட்ட கருத்துச் சுதந்திரம் ஆடம்பரமானதும் தேவை கருதி கட்டுப்படுத்தப்படக் கூடியதும் வேண்டியதுமே." என்று கூறி மக்களின் கருத்துகள் கூறுபோடப்படுவதை நியாயப்படுத்தும் இவர் "2004 இல் மேற்கொள்ளப்பட்ட ஈராக் மீதான படையெடுப்பில் பிரித்தானியா பங்குபற்றுவதற்கு முன்வைத்த காரணங்களை கேள்விக்குட்படுத்திய குரல்களை பிரித்தானிய ஊடகங்கள் திட்டமிட்ட முறையில் கவனமெடுக்காது விட்டதாக கருதப்படுகிறது " என்றும் "அமெரிக்காவின் ஊடகங்கள் ஈராக் மீதான படையெடுப்பில் அரச தரப்பு தகவல்களையும் அபிப்பிராயங்களையும் ஒருமனதாக ஒத்து ஊதி, நாட்டையும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் (ஊடகத்) துறையையும் ஏமாற்றிவிட்டதாக தற்பொழுது விவாதங்கள் நடைபெறுகின்றன." என்றும் கூறி சர்வதேச ஊடகங்களை நோக்கி விரலை நீட்டுவதன் மூலம் "The modern day media prostitutes have a new slogan, “You got money, we got writing.” என்ற வசனத்திற்கு தானும் விதிவிலக்கல்ல என்பதை உணர்த்தி நிற்கிறார்.

சுதந்திர கருத்தாளர் சங்கம் - யாழ்களம் சார்பில்,

Link to comment
Share on other sites

சாணக்கியன்

நான் எழுதிய ஆக்கத்தின் நோக்கம் செய்தி ஊடகம் என்பது தனியே நடக்கும் நிகழ்வுகளை அறிவிக்கும் நடுநிலையான நடத்தை கொண்டது அல்லது. அவர்கள் நடப்பவற்றை விபரிக்கும் முறை (perspective) அவர்களை இயக்கும் சக்த்திகளின் நிகழ்ச்சி நிரலை பொறுத்தது. சுதந்திர ஊடகமாக நடப்பவற்றை பற்றி எல்லா மூலங்களில் இருந்து வரக்கூடியவற்றை உண்மைத்தன்மையின் அடிப்படையில் வெளியிடுபவர்கள் அல்ல. சிங்கள ஊடகங்களில் வருபவற்றை மொழிபெயர்த்து பரப்புவது பற்றிய முன்னய விமர்சனங்களிலும் perspective பற்றி சொல்லியிருக்கிறன்.

சர்வதேச ஊடகங்களிற்கு நிகழ்ச்சி நிரல் இருக்கிறது அவை வியட்னாம் காலத்தில் மாத்திரமல்ல தற்பொழுது ஈராக் விவகாரத்தில் மீண்டும் அம்பலமாகியிருக்கிறது என்பதை உதாரணத்திற்காகத்தான் குறிப்பிட்டிருக்கிறன். எந்தவொரு பரிய அளவிலான நிதி ஒதுக்கீட்டிற்கு பின்னாலும் நிகழ்ச்சி நிரல்(கள்) இருக்கிறது. அவர்கள் மில்லியன் பவுண்ஸ்களே யுரோக்களோ டொலர்களே செலவளித்து ஊடகம் நடத்துவதது வேலை வாய்ப்பு வழங்கவல்ல. நிகழ்ச்சி நிரலிற்கேற்ப சேவைகளின் விரிவாக்கம் ஆரம்பம் முடிவுகள் தீர்மானிக்கப்படுகிறது.

இந்த பிரச்சாரத் தன்மையை நாங்கள் சிறீலங்கா-சிங்கள ஊடகங்களில் அனுபவத்தில் ஓரளவு உணர்ந்திருக்கிறம். ஆனால் சர்வதேச ஊடகங்களில் இன்னமும் ஒருவகை எதிர்பார்ப்பு நம்பிக்கை இருக்கிறது. சர்வதேச ஊடகங்கள் எமது விடையங்களை எமது நிலைப்பாட்டில் இருந்து சொல்ல வைக்க வேண்டும் என்பது தான் குறிக்கோள் அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதே நேரம் அவர்கள் தனியே சிங்கள சிறீலங்காவின் பிரச்சார தந்திரங்களால் (சர்வதேச ஊடகங்கள் பயன்படுத்தும்; உத்தியோகபூர்வ மூலத்தால்) ஏமாற்றப்படுகிறார்கள் என்றதற்கு அப்பால் அவர்களிற்கும் ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்கிறது என்பதை உணர வேண்டும். அதாவது சர்வதேச ஊடகங்களில் நிர்வாக நிலையில் உள்ள நிகழ்ச்சி நிரல் பற்றியது.

தமிழ்கனேடியன் இல் இருந்து இணைப்புக் கொடுத்த கட்டுரை என்பது ஊடகவியலாளர்கள் செய்தியாளர்கள் நிலையில் உள்ள தனிநபர் நிகழ்ச்சி நிரல்; அது எவ்வாறு நிர்வாக மட்ட நிகழ்ச்சி நிரலிற்கு உதவுகிறது என்றதை விளக்குவதால் பூரணப்படுத்தும் நோக்கில் இணைத்திருந்தன்.

சர்வதேசமோ இந்தியாவோ சீனாவோ சிறீலங்காவோ தனது நிகழ்ச்சி நிரலிற்கு ஏற்ப நேரத்தை நிதியை மனித வளத்தை பயன்படுத்துகிறது. தமிழரின் வளங்கள் அவர்களது சுய நிகழ்ச்சி நிரலிற்கு பயன்படுத்தப்படுவதை விட ஏனையவர்களின் நிகழ்ச்சி நிரலில் (இதன் வடிவங்கள் ஜனநாயகம், கருத்துச்சுதந்திரம், மதம், மனிதஉரிமை, சினிமா, குடிவரவு என்று பல கோணங்களில் விரிகிறது) காதல் கொள்வதும் முடிந்தால் விபச்சாரம் செய்து சிற்றின்பம் காண்பதிலும் தான் விரயமாகிறது.

ஏனையவர்களின் நடத்தையின் ஆழத்தில் ஒழிந்திருக்கும் நிகழ்ச்சி நிரலை சுட்டிக்காட்டுவது அதை உணர்ந்து எமது எதிர்பார்ப்புகளை மாற்றியமைத்து அவ்வாறு நாமும் இயங்க முயற்சித்தால் தான் எமக்கு என்று ஏதாவது இறுதியில் தேறும் என்பதற்காகவே. இது யாழ் தரிசனம் புதினம் தமிழ்நாதம் ஒருபேப்பர் என்று எல்லாருக்கும் பொருந்தும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.