Jump to content

இணையச் செய்திகள்


Recommended Posts

24நெட் இணைப்பின்றி பிரவுசிங் செய்யும் வசதி

நம்மில் பலர் இணைய தளத்திலேயே நாள் முழுதும் மூழ்கிக் கிடக்கலாம். இதனால் ஏற்படும் கால விரயம், பண விரயம் பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில்லை. நாம் எப்போதாவது இதற்கு செலவாகும் பணத்தையோ, நேரத்தையோ யோசித்திருக்கிறோமா என்பதே கேள்வி.

உலாவியை (பிரவுசர்) இணையதள இணைப்பின்றியே பெற முடிந்தால்... ஆச்சரியமாக இருக்கிறதா?

ஆம்! ஆஃப் லைன் பிரவுசர் தற்போது வந்துள்ளது. இதற்கான மென்பொருள் உங்கள் பணத்தையும் நேரத்தையும் மிச்சம் செய்யும்.

இந்த மென்பொருள் நீங்கள் பிரவுஸ் செய்யும் இணைய தளம் முழுவதையுமோ, ஒரு சில பகுதிகளையோ உங்கள் ஹார்டுவேரில் சேமிக்கும் திறன் கொண்டது. இதனால் இணையதள இணைப்பைப் பயன்படுத்தாமலேயே நீங்கள் அந்த இணைய தளத்தை பிரவுஸ் செய்யலாம்.

பேஜ்நெஸ்ட் டாட் காம் ( http://pagenest.com/ ) இது ஒரு இலவச ஆஃப் லைன் பிரவுசர். இதனைப் பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த இணையதளத்தின் பக்கங்களை காப்பி செய்து ஹார்டு டிஸ்கில் ஏற்றிக் கொள்ளலாம்.

பேஜ்நெஸ்டில் இணையதள முகவரி ஒன்றை அளியுங்கள் அது அந்த இணையதளம் முழுவதையுமோ அல்லது ஒரு பகுதியையோ உங்கள் ஹார்டு டிஸ்கில் பதிவிறக்கம் செய்து விடும். அப்படியே அந்த இணையதளத்தில் ஆன்லைனில் என்ன கண்டீர்களோ அது அப்படியே டெக்ஸ்ட், இமேஜஸ், எச்.டி.எம்.எல் அனைத்தையும் அப்படியே அச்சு அசலாகக் காட்டும்.

பேஜ்நெஸ்ட் மூலம் 40 கோப்புகள் வரை டவுன்லோடு செய்ய முடியும். விரைவில் டவுன்லோடு செய்தும் முடித்து விடலாம். இதில் பல சிறப்பம்சங்களும் உள்ளன.

சமீபத்திய டவுன்லோடுகள் என்று ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதனை நீங்கள் கிளிக் செய்யலாம். ஒரே கிளிக்கில் டவுன்லோடு செய்த பல்வேறு இணையதளங்களுக்கு செல்லும் வசதியும் உள்ளது. மேலும் இதற்காக நீங்கள் எந்த செட்டிங்கையும் மாற்ற வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பேஜ்நெஸ்ட் பிரவுசர் மூலமும் நீங்கள் பிரவுஸ் செயலாம். மேலும் டவுன்லோடு செய்த இணையதளக் கோப்புகளை காப்பி செய்து நீங்கள் லேப்-டாப்பிலும் வைத்துக் கொள்ளலாம் எனவே நீங்கள் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அதனை வாசிக்கலாம். இதனை விண்டோஸ் விஸ்தா, எக்ஸ்பி-2000, எம்.இ மற்றும் 98 ஆகிய ஆபரேட்டிங் சிஸ்டங்களில் பயன்படுத்த முடியும்.

இதே போல் http://www.httrack.com/ மற்றும் http://www.spadixbd.com/backstreet/ ஆகிய இணையதளங்களும் உள்ளன. இந்த இணையதளங்களை மட்டுமே ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட மணி நேரங்கள் பயன்படுத்தி நீங்கள் வழக்கமாக பார்க்கும் இணையதளங்களை டவுன் லோடு செய்தால் இன்டர்நெட் இணைப்பு பற்றிய பிரச்சினைகளும் இல்லை, செலவும் பெருமளவு குறையும்.

மூலம்:MSN

25,ட்ரோஜன் குதிரை பற்றிய கதை தெரியுமோ?

ஹாயாக இணையத்தை ஒரு சுற்று மேய்ந்து விட்டு, சில பல தெரிந்த தெரியாத மென்பொருள்களை விளையாட்டாக இறக்கம் செய்து இயக்கிவிட்டு தூங்கிப்போனீர்கள். திடீரென விழித்து பார்த்தால் உங்கள் கணிணி ஹார்ட்டிரைவ் லைட் மின்னி மின்னி பிஸியாக இருக்கின்றது.மோடம் லைட்டுகள் பலவாறாக மின்னிக் கொண்டே இருக்கின்றன. ஏதோ மர்மம் அங்கு நடப்பது போல் காட்டுகின்றது. நீங்கள் நினைப்பது போல் இது ஒரு சாதாரண விசயமில்லை. உங்கள் கணிணியில் என்னமோ அசாதாரணம் நடப்பதையே இது காட்டுகின்றது.உசாராக வேண்டிய தருணம் இது.Trojan Horse அல்லது மால்வேர் எனப்படும் மர்மமென்பொருள்கள் உங்கள் கணிணியிலிருந்து கொண்டே உங்களை பற்றிய தகவல்களை யாருக்கோ வழங்கி உங்கள் காலை வாரிக்கொண்டிருக்கலாம். எனவே இணைய இணைப்பை உடனே துண்டித்து நீங்கள் உங்கள் கணிணியை வைரஸ் ஸ்கேன் செய்தாக வேண்டும்.

அது சரி, இது மாதிரியான நமது கணிணியின் உள்ளிருந்தே நமக்கு உலைவைக்கும் மென்பொருள்களுக்கு ட்ரோஜன் ஹார்ஸ் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா? அதற்கு சுவையான கதை ஒன்று உள்ளது.

கிரேக்க இதிகாசக் கதை ஒன்றின் படி, கிரேக்க தேசத்து அழகியான கெலனையும் அந்நாட்டின் செல்வங்களையும் ப்ரயம் மன்னனின் மகனான பாரீஸ் என்னும் இளவரசன் தன் ட்ரோஜன் நகருக்குக் கடத்திச் சென்றுவிட்டான். இதனால் கிரேக்கர்களுக்கும் ட்ரோஜனியர்களுக்கும் இடையே கடும் யுத்தம் வந்தது. 12 வருடங்கள் நீடித்த இப்போரை வெல்வதற்கு

கிரேக்கர்கள் ஓர் தந்திரத்தைக் கையாண்டனர். அடியில் சக்கரம் வைக்கப்பட்ட ஓர் பிரமாண்டமான மரக்குதிரையைச் செய்து அதன் வயிற்றுக்குள் போர்வீரர்களை நிறைத்து வைத்து அதைபோர்க்களத்துக்கு இழுத்துச் சென்றனராம். போர் நடந்து கொண்டிருந்தபோது கிரேக்கர், குதிரையைக் போர்களத்திலேயே விட்டு விட்டு தோற்றுப் போனவர்கள் போல் ஓடிவிட்டனர்.இதனைக்கண்ட ட்ரோஜன் வீரர்கள், கிரேக்கர்கள் தோற்றுப்போய்விட்டதாக நினைத்து குதிரையை தமது பாதுகாக்கப்பட்ட நகருக்குள் இழுத்துச் சென்று தமது வெற்றியை விமர்ச்சையாக கொண்டாடினர்.ஒரேயொரு குருட்டு மதகுரு மட்டும் அதன் உள்ளே ஆபத்து ஒளிந்திருக்கிறது என்று கத்தினானாம். யாரும் அவன் பேச்சைச் சட்டை பண்ணவில்லை. குடியும் கூத்துமாக இரவு முழுவதுமாக கொண்டாடிய அவர்கள் தூக்கத்தில் வீழ்கையில் கிரேக்க வீரர்கள் குதிரையின் வயிற்றை விட்டு வெளியே வந்து ட்ரோஜன் வீரர்கள் அனைவரையும் கொன்று அந்நகரைத் தீவைத்து எரித்தனராம். கெலன் மீட்கப்பட்டு அவள் கணவன் மெனலசிடம் கொண்டு செல்லப்பட்டாள் என கதை செல்கின்றது.

ஆக கரு என்னவென்றால் நம் ஆன்டிவைரஸ் மென்பொருள்கள் "உள்ளே ஆபத்து ஒளிந்திருக்கிறது" என்று எப்பவாவது கத்தினால் உடனே நாம் உசாராக வேண்டுமாக்கும்.

மூலம்:pkp.in

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

26, உங்கள் இணைய இணைப்பு பாதுகாப்பானதுதானா?

இணையத்தில் நாம் எப்போதுமே இணைந்துள்ளோம். எத்தனையோ பறிமாற்றங்களை இணையத்தின் ஊடாக நாம் தினம்தோறும் செய்து வருகிறோம். நம்மில் பலருக்கு இணையத்தின் சேவை எப்போதுமே தேவைப்படுகிறது.

மடிக்கணினி முதல் மேசைக்கணினி வரையில் இப்போது இணையம் பரந்து விரிந்து இருக்கிறது. இதில் உங்களது பாஸ்வர்ட்களைக் கொள்ளையடிக்க எத்தனையோ

இணையத்திருடர்கள் , ஸ்பைவேர்கள் கிளம்பியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து தற்காத்துக்கொள்ள என்ன வழி?

உங்களது இணைய இணைப்பின் பாதுகாப்புத்தன்மை / நம்பகத்தன்மையின் அளவுகோலை அறிய ஒரு எளிய சோதனை. இதை முயன்று பார்க்கலாமே?

இந்த வழிமுறைகளைக் கையாண்டு பார்க்கவும்.

1. விண்டோஸ் RUN உரையாடல் பெட்டியில் CMD என்று தட்டெழுதவும்

2. DOS திரையில் netstat -b 5 > suspect.txt எனத் தட்டெழுதவும்

3. இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு Ctrl + C ஐ அழுத்தவும்

4. உங்களது வழமையான Text Editor அல்லது Notepad மூலம் suspect.txt கோப்பைத் திறந்து பார்க்கவும்.

5. உங்களது கணினியின் கடைசி இரண்டு நிமிடங்களில் இணைய வழியாக நடந்த பறிமாற்றங்களை இந்த suspect.txt கோப்பு பிரதிபலிக்கும்.

6. இதில் இணைய வழிப் பறிமாற்றமானது உங்களது instant messenger , downloader, outlook ஆகிய எந்தவிதமானதாக இருந்தாலும் அதை அறியலாம்.

7. யாகூ, கூகிள் போன்ற பிரபலாமன் தள முகவரி இந்த suspect.txt கோப்பில் காட்டப்பட்டிருக்கும்.

8. மேலும் சந்தேகத்துக்கு இடமான தளமுகவரி ஏதேனும் உங்களது கணினியுடன் தொடர்பிலிருப்பின் அதுவும் இந்த suspect.txt கோப்பில் இடம்பெற்றிருக்கும். பொறுமையாகக் கவனிக்கவும்.

9. அப்படி ஏதேனும் உங்களின் பார்வையில், சந்தேகத்துக்கு இடமளிக்கும் தளமுகவரியிருப்பின் உடனடியாக Task Manager, Process Explorer மூலம் அந்தத் தளத்தின் வேரை அறிந்து அதை அகற்றும் நடவடிக்கையில் நீங்கள் இறங்கலாம்.

10. நம்பகத்தன்மையற்ற தளமானது உங்களது கணினியுடன் இணைப்பிலிருப்பின் அதன் காரணத்தை, வேரை அறிந்து அதனை நீக்கிவிடுங்கள். ஏதேனும் EXE Application இருப்பின் அதை அழித்துவிடுங்கள்.

மூலம்:http://tamizh2000.blogspot.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

27,பரிமளா போன பாதை

வெள்ளிக்கிழமை என்றாலே பக்கத்து வீட்டு பரிமளாவுக்கு ஏகத்துக்கும் குஷிதான்.ஏனென்றே எனக்கு தெரிந்ததில்லை. கார் சாவியை சுழற்றிச்சுழற்றி ஏதோ ஒரு பாடலை முணங்கிக்கொண்டே அலுவலகம் விட்டு வீட்டுக்கு வரும் அவள் அரைமணிநேரத்தில் ரெடியாகிவிடுவாள். கிளம்பி போனவள் போனவள் தான். திரும்பிவர நள்ளிரவும் தாண்டிவிடும்.இதையெல்லாம் இங்கு நான் கட்டாயம் சொல்லத்தான் வேண்டுமாவென நினைத்தேன். சொல்லிவிடுவதுதான் நல்லது.அதற்கான காரணத்தையும் அப்புறம் சொல்கின்றேன்.

எங்கு போகின்றாள் இவள்? மாலை முதல் நள்ளிரவுதாண்டியும் அப்படி எங்கே அவள்?

போன வாரம் கிளைமாக்ஸ் நடந்தது.

வெறும்(!) 230 டாலர்கள் தான். ஆன்லைனில் ஆர்டர்பண்ணியிருந்த LandAirSea GPS Tracking Key வந்துவிட்டிருந்தது. சிறுசா தீப்பட்டிமாதிரி. ஒரு USB கொக்கியும் இருந்தது. சில பேட்டரிகள் நாம் போடவேண்டும்.பரிமளாவுக்குத் தெரியாமல் அவள் டொயோட்டா கேம்ரி காரின் அடியில் அந்த டிராக்கிங் கீயை நச்சென ஒட்டவைத்தேன். அதிலிருந்த காந்தம் பரிமளாவின் காரை கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.

இனி இந்த கார் எங்கெல்லாம் போகுமோ அதெல்லாம் எனக்கு சந்து சந்தாக தெரிந்துவிடும். எவ்வளவு வேகமாக அவள் காரை ஓட்டினாள் (அவள் ஒரு பறக்கும் பாவை) எங்கெல்லாம் எவ்வளவு நேரம் அவள் நின்றாள் எல்லாம் இந்த கீ நோட் செய்து வைத்துக்கொள்ளும். அடுத்த நாள் அந்த Tracking Key-யை எடுத்து வந்து எனது கணிணியில் செருகி பார்த்தால் அத்தனையும் மேப் போட்டு துல்லிபமாய் எனக்கு காட்டிவிடும்.

இதுமாதிரி யாரை வேண்டுமானாலும் நீங்கள் கண்காணிக்கலாமாம் அதுவும் உலக அளவில். அதனால் இனிமேல் "ஒருமாதியான" இடங்களுக்கு போவதாய் இருந்தால் செல்லும்முன் காரை முழுசா சோதனை போட முடிவெடுத்திருக்கின்றேன்.

இன்றைய காலத்தில் தொழில்நுட்பத்தில் நீங்கள் ஆர்வமுள்ளவராய் இல்லாதவராயினும் நிகழ் கால தொழில்நுட்ப விசயங்களை கண்டிப்பாய் தெரிந்திருக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.எது தொழில் நுட்பத்தால் முடியும் எது முடியாது இதெல்லாம் சகலோர்க்கும் தெரிந்திருக்க வேண்டிய நிலை. ஒன்றும் தெரியாத அப்பாவியாய் இருந்தால் தெரிந்தவன் உங்களை கொள்ளை கொண்டு போய்விடுவான்.

சரி பரிமளாவின் கதையை நான் இப்போ எப்படி முடிக்கறது? ஒவ்வொரு மொழி பட இயக்குனர்களும் ஒவ்வொரு விதமாய் முடித்திருப்பார்கள். இல்லையா?

மேலும் அறிய

http://www.trackingkey.com

பக்கத்து வீட்டு பரிமளா முதல் பொன்னம்மா பாட்டி வரை அத்தனைபேரும் கற்பனை கதாபாத்திரங்களே Just In Case :huh:

மூலம்:pkp.in

28,மானிட்டர் இடம் எவ்வாறு இருந்தால் சரி?

நம்மில் பலர் தற்போது கணினிகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. ஆனால் அதனை முறையான வழியில் செய்கிறோமா என்று பார்த்தால் வெகுசிலரே தங்கள் கண்கள், கழுத்து உள்ளிட்ட உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்தைக் கவனத்தில் கொண்டு செய்கின்றனர் எனலாம்.

கணினித் திரையை (மானிட்டர்) சரியான இடத்தில் நீங்கள் வைக்கவில்லையென்றால் கழுத்து வலி, கண் உபாதைகள் தோன்றுகின்றன.

முதலில் கணினித் திரையை உங்களுக்கு நேராக வைத்திருக்க வேண்டும். அது சற்றே வலது புறமாகவோ, இடதுபுறமாக்வோ இருந்தால் உங்களுக்கு நாளடைவில் கழுத்து வலி ஏற்படும். தோள் பட்டைகளிலும் வலி ஏற்படலாம்.

முடிந்த அளவு பார்வைக்கு தெரியும் தூரத்திலாவது கணினித் திரையை அமைத்துக் கொள்ள வேண்டும். பெரிய திரை கிடைத்த பாக்கியவான்கள் இன்னமும் நன்றாக பின்னால் உட்கார்ந்து பணியாற்றலாம். குறைந்தது கைக்கெட்டும் தூரத்தை விடவும் சற்றே தள்ளி அமர்ந்து இயங்குவதுதான் கண்களுக்கு அயற்சியை உருவாக்காது.

மானிட்டரைக் காட்டிலும் நீங்கள் ஒரு 2 அல்லது 3 இன்ச் உயரத்தில் இருந்து இயங்கினால் கண்கள் பாதிப்புக்குள்ளாகாது. கணினித் திரை ரொம்பவும் தாழ்வாக இருந்தால் கழுத்தை நீட்டி நீங்கள் பார்க்க வேண்டி வரும். இதுதான் கழுத்து வலியின் ஆரம்பம். சரி அதிக உயரத்திலிருந்தால் உங்கள் கழுத்தை பின்னால் சாய்த்து பார்க்க வேன்டும், இதனால் ஏற்படுவது கழுத்து மற்றும் தோள்பட்டை வலிகள். மேலும் இதனால் தலைவலியும் அதிகமாக வரலாம்.

கணினித் திரையை சற்றே மேலே உயர்த்தவும். இதனால் அடிப்பகுதி உங்களுக்கு அருகில் இருக்கும். இதன் மூலம் கழுத்தை அசைக்காமல் முழுத் திரையும் உங்களுக்கு தெரிய வரும். கணினித் திரையை கிழாக சாய்ப்பது ஒரு போதும் கூடாது.

கணினித் திரையில் நாம் செய்யும் இந்த அட்ஜஸ்மென்ட்கள் முக்கியமானது ஏனெனில் அலுவலகத்தில் உள்ள விளக்குகளின் வெளிச்சங்களின் தன்மையாலும் திரையை தொடர்ந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதாலும் கண்களில் உள்ள நீர் வற்றி விட வாய்ப்பு உள்ளது. இதனால் குழம்பிய ஒரு பார்வை ஏற்படலாம்.

அதேபோல் உங்கள் திரைகளில் வேறு ஒரு பிம்பத்தின் பிரதிபலிப்பு தெரிவதும் கூடாது. ஏனெனில் நாம் உடனே ஒரு கண்ணால் பார்க்கத் துவங்குவோம். எனவே அறை வெளிச்சம் சரியானதாக இருக்க வேண்டும்.

சமச்சீரற்ற வெளிச்சத்தில் நாம் கணினித் திரையை பார்த்தோமானால் தலைவலியும், பார்வைக் கோளாறுகளும் ஏற்படும்.

அதேபோல் இயற்கை வெளிச்சத்தில் பணியாற்ற நேர்ந்தால் கணினித் திரையின் வெளிச்சத்தை நாள் முழுதும் மாற்றிக் கொண்டேயிருக்க வேண்டும்.

எல்லாவற்றையும் விட முக்கியமானதும் அடிப்படையானதும் கணினித் திரையை நன்றாக சுத்தம் செய்யவேண்டும். அதில் உள்ள அழுக்குகளால் நம் பார்வை பழுதடைவதுதான் மிச்சமே தவிர வேறு எந்த உபயோகமும் இல்லை.

மானிட்டர் மட்டுமல்ல கணினி குறித்த எந்த செயல்பாடாயிருந்தாலும் அதற்கான வழி முறைகளை கடைபிடித்தால் நீண்ட நாளைய பயன்பாட்டினால் ஏற்படும் வியாதிகளைத் தவிர்க்கலாம்.

அதேபோல் ஒவ்வொரு 20 நிமிட வேலைக்குப் பின்னும் ஒரு 20 அல்லது 30 வினாடிகள் கணினியைத் தவிர்த்து வெளியில் நீண்ட தொலைவுகளில் பார்வையை செலுத்தி விட்டு வருவது நல்லது.

இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிப்போம். கணினி பயன்படுத்துவதால் ஏற்படும் வியாதிகளைத் தவிர்ப்போம்.

மூலம்:MSN

Link to comment
Share on other sites

நிறையத் தகவல்கள் வழங்கி இருக்கிறீங்கள் கலைநேசன். இண்டைக்கு கொஞ்சம் வாசிச்சு பார்த்தன்.

மேல அந்த சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கைகளை கண்டுபிடிக்க சீஎம்டீ கொமாண்ட் மூலம் டொஸ் ஐ ஒப்பின் செய்யுறீங்கள் தானே. அதில கடைசியில அந்த சஸ்பெக்ட்.டெக்ஸ்ட் இக்க போய் பார்க்க அதில ஒண்டையும் காண இல்ல. அப்பிடி எண்டால் என்ன அர்த்தம்?

மற்றது, காரில ஏதோ காந்தத்த ஒட்டி ஜீ.பீ.எஸ் சிஸ்டம் மூலம் போய் வரும் பாதையை மொனிட்டர் பண்ணலாம் எண்டு சொல்லிறீங்கள். இது கொஞ்சம் ஆபத்தான விசயம்தான். ஏன் எண்டால் இப்ப யாராச்சும் கூட போறவாற இடங்களில இதப்பாவிச்சு எம்மைப் பற்றி, எமது இருப்பிடம் பற்றி எல்லாம் நிறையத் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். முக்கியமா பையங்கள் பெண்களுண்ட காரில இத ஒட்டிப்போட்டு பெண்கள் எங்க போய் வாறீனம், அவேண்ட வீடு, நண்பர்கள் எண்டு பல விசயங்கள புலனாய்வு செய்யலாம். இந்த வகையில இது ஆபத்தானது. சும்மா ஒரு சிறிய காந்தம் ஒண்டை காரிண்ட அடியில ஒட்டிவிட்டால் எப்படி அதக் கண்டுபிடிக்கிறது?

இந்த வகையில் பார்த்தால் தொழில்நுட்பமும் பல சிக்கல்களைக் கொண்டுவந்துள்ளது.

Link to comment
Share on other sites

உங்கள் கருத்துகளிற்கு நன்றி முரளி.

29,இலவச குறுஞ்செய்திகள்

அவசரமாய் அமெரிக்காவிலுள்ள ஒரு நண்பரை தொடர்புகொள்ள வேண்டுமா? நீங்கள் ஒரு மின்னஞ்சல் செய்தால் போதும். அது அமெரிக்காவிலிருக்கும் உங்கள் நண்பரின் அலைபேசியில் குறுஞ்செய்தியாக கிடைக்கும்.அதற்கான வசதி நெடுநாட்களாகவே இருந்து வருகின்றது.ஆனாலும் உங்களில் தெரியாதோருக்கு மட்டும் இத்தகவல் இங்கே.

அதாவது நீங்கள் இலவசமாய் நண்பருக்கு மின்னஞ்சல் வழியாய் குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருப்பீர்கள். அதை பெறுவோரின் பில் மட்டும் எகிறிக் கொண்டேயிருக்கும்.

இப்படி SMS செய்ய, உங்களுக்கு தெரிய வேண்டியதெல்லாம் அந்நண்பரின் 10 இலக்க கைப்பேசி எண்ணும் அவருக்கு அலைச்சேவை வழங்கும் நிறுவனத்தின் பெயரும் மட்டுமே.

மின்னஞ்லைத் தட்டியதும் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்துங்கள்.

AT&T: 10digitphonenumber@txt.att.net

Verizon: 10digitphonenumber@vtext.com

Sprint: 10digitphonenumber@messaging.sprintpcs.com

T-Mobile: 10digitphonenumber@tmomail.net

Nextel: 10digitphonenumber@messaging.nextel.com

Virgin Mobile: 10digitphonenumber@vmobl.com

Alltel: 10digitphonenumber@message.alltel.com

CellularOne: 10digitphonenumber@mobile.celloneusa.com

Omnipoint: 10digitphonenumber@omnipointpcs.com

Qwest: 10digitphonenumber@qwestmp.com

ஒருவேளை நண்பருக்கு அலைச்சேவை வழங்கும் நிறுவனத்தின் பெயர் தெரியாதிருந்தால் கீழ்கண்ட முகவரியை பயன்படுத்தலாம்.

10digitphonenumber@teleflip.com

கனடாவுக்கு இலவச குறுஞ்செய்தி அனுப்ப http://www.zemble.com

பிறபல ஐரோப்பிய நாடுகளுக்கு இலவச குறுஞ்செய்தி அனுப்ப http://mrtextmessage.com

இந்தியாவில் இலவசமாக குறுஞ்செய்தி அனுப்ப

http://indyarocks.com/sms/index.php

நன்றி.

படபடவென இருகர விரல்களாலும் கைப்பேசிவிசைகளை தட்டிக்கொண்டே சாலையில் நடக்கின்றீர்களா? அவ்வப்போது எதிரேயும் பார்த்தல் அது நம்மெல்லாருக்கும் நல்லது. :unsure:

மூலம்:pkp.in

30,ஓப்பன் ஐடி - ஒரு அக்கரையான பார்வை

ஓப்பன் ஐடி என்பது சிங்கிள் சைன் ஆன் சிஸ்டம். இதன் மூலம் உங்களின் ஒரே பயனர் கணக்கைக் கொண்டு நூற்றுக்கணக்கான இணையத்தளங்களில் உள்ளே நுழையலாம்.

ஒவ்வொரு தளத்துக்கும் தனித்தனிப் பயனர் கணக்கு தேவையில்லை. நிறையக் கடவுச் சொற்களையும் நினைவில் கொள்ளவேண்டியது கிடையாது.

ப்ளாக்கர், வேர்ட்ப்ரஸ், டிக், ஏஓஎல், டெக்னோரடி, ப்ளாக்ஸோ இந்தத்தளங்களில் எல்லாம் உங்களது ஓப்பன் ஐடி வாயிலாகவே உள்ளே நுழையலாம்.

இது சம்பந்தமான சலனப்படம் கீழே link :

இங்கே சென்று உங்களது ஓப்பன் ஐடிக்கான பயனர் கணக்கைத் துவக்கிக்கொள்ளலாம்

link : https://pip.verisignlabs.com/register.do

31, எழுத்துப்பிழைகளைக் கண்டறிய இலவசப் பயன்பாடு

க்ளோபல் ஸ்பெல் செக்கர் என்பது ஒரு இலவசப்பயன்பாடு.

உங்களது கணினியில் மைக்ரோசாப்ட் வேர்டு நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

தேவைப்படும்போது இயக்கியும், தேவைப்படாதபோது நிறுத்தியும் வைக்கலாம் இந்தப் பயன்பாட்டை.

நீங்கள் ஏதோ ஒரு பயன்பாட்டை இயக்கிக்கொண்டிருக்கும்போது, அதிலிருந்து விலகாமல் அப்படியே எழுத்துப்பிழைகளைக் கண்டறிய :

வார்த்தைகளைத் தேர்வு செய்து காப்பி செய்யவும்.

கன்ட்ரோல் + ஆல்ட் + எஸ் - மூன்றையும் ஒன்றாக இயக்கவும்.

ஸ்பெல் செக்கர் கண் முன்னால் நிற்கும். அவ்வளவுதான். எளிதான இயக்கம்.

link ; http://www.shaplus.com/exes/spellchecker/GSInstall.exe

32, தட்டெழுத்துப் பழகலாம் வாங்க. (இலவசமாக)

ஆங்கிலத்தில் தட்டெழுத்துப் பழகாமல் இன்னமும் பார்த்துப் பார்த்துத் தட்டும் தம்பிகளா / தங்கைகளா!

ஏன் இப்படி. சும்மா ஒரு நாளைக்கு 1 மணி நேரமாவது தட்டெழுத்துப் பயிற்சியை இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் இந்தப் பயன்பாட்டின் மூலம் மேற்கொள்ளலாமே?

மொத்தம் 27 பயிற்சிகளுக்கான பாடங்கள் உள்ளன.

இணையத்தில் உலவியபடியே பழகலாம் என்பதால் எந்தவிதமான இணையிறக்கமும் தேவையில்லை என்பது இதன் சிறப்பம்சம்.

ஸ்பானிஸ், French, இத்தாலியன், போர்த்துகீசு மொழிகளையும் கூட இந்தத் தளத்தில் தட்டிப்பழகலாம்

linnk: http://www.goodtyping.com/

மூலம்:http://tamizh2000.blogspot.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

33, திருட்டுத்தனமாய்..

தவிர்க்கவே இயலாதநிலமைக்கு இணையவழி வர்த்தகங்களும், இணையவழி வங்கிச்சேவைகளும் வந்துவிட்ட போதிலும் அவ்வப்போது நாம் கேள்விப்படும் சில தகவல்கள் இந்த மொத்த வலைக்கட்டுமானத்தையும் சிறிது சந்தேகக்கண்ணோடேயே எப்போதும் பார்க்கவைத்து விடுகின்றது.

எடுத்துக்காட்டாக இரவுபகலாக உழைத்து நான் எழுதிய மின்புத்தகம் ஒன்றை இணையத்தில் விற்பனைக்கு வைத்துள்ளேன் என வைத்துக்கொள்வோம் அல்லது ஏதோ ஒரு குப்பை மென்பொருளை சற்று கவர்ச்சியாக்கி பல மார்க்கெட்டிங் யுத்திகள் பயன்படுத்தி, அதாவது இதை பயன்படுத்தி கலிபோர்னியா ஜாக் மாதம் $3000 சம்பாதிக்கின்றார், ஷாங்காய் டிங்டியூங் மாதம் $5000 சம்பாதிக்கின்றார் என்றெல்லாம் ரீல் விட்டு அந்த மென்பொருளை நான் விற்க்க , அதை ஏதாவது ஒரு ஏமாளி $50 கொடுத்து வாங்க அதன் மூலம் நான் பணம் சம்பாதிக்க இதெல்லாம் சகஜம்.

50 டாலர் கொடுத்து வாங்கிய அவன் கொடுக்கப்பட்ட 200 பக்க மின்புத்தகத்தை அட்டை டூ அட்டை படித்து அதன் படி செயல்பட்டால் தான் ஆரம்பத்தில் வாரத்துக்கு 2 டாலராவது பார்க்க முடியும். அதையும் தாண்டி இன்னும் பல தொழில்நுட்ப கோளாறுகளையும் போராடி வென்று இல்லை இல்லை வெறுத்துப்போவான். அடப் போனா போகுது 50 டாலர்னு நிமிடத்தில் வாங்கிய மென்பொருளையும் மின்புத்தகத்தையும் அழித்துவிட்டு உருப்படியான வேறு வேலை பார்க்க சென்றுவிடுவான்.

காசு சம்பாதிக்க ஆலோசனை தருகின்றேன், Make money using Adsense, Wordpress, ebay, Blogger, Make money using affliates, Websites அப்படி இப்படினு சொல்லி ஈபுக் பேக்கேஜ் விற்க்கிறவன் மட்டும் நல்ல காசு பார்த்துக்கொண்டிருப்பான்.

பாருங்கள், எதையோ சொல்லவந்து எங்கேயோ வந்து விட்டேன்.

ஓகே, இதுமாதிரி ஆன்லைனில் மென்பொருளோ அல்லது மின்புத்தகமோ விற்பவர்களிடம் போய் வாங்கும் போது முதலில் நம் பெயர் விலாசம் போன்ற தகவல்களையெல்லாம் கேட்பர், அடுத்து கிரெடிட்கார்டு அல்லது பேப்பால் வழி காசு கொடுக்கவேண்டும், காசு கொடுத்து முடிந்ததும் அவர்கள் நம்மை ஒரு பாதுகாப்பான பதிவிறக்கப் பக்கத்துக்கு கொண்டு செல்வர். அங்கு அவர்கள் நமக்கு நன்றி சொல்லி விட்டு ஒரு சுட்டி கொடுப்பர் அந்த சுட்டியிலிருந்து அந்த குறிப்பிட்ட மென்பொருளை அல்லது மின்புத்தகத்தை இறக்கம் செய்து கொள்ளலாம். இதை Thankyou page அல்லது Download page என்பர்.

சரி.இருக்கட்டும்.இப்போது இந்த Thankyou Page-க்கு காசு கொடுக்காமலே நேரடியாக போவதற்கு வழி தெரிந்துவிட்டால்.உங்களுக்கு 50$ லாபம். அவர்களுக்கு 50$ நஷ்டம். இல்லையா? ஆமாம். அப்போ அந்த Thank You Page-க்கு நேரடியாக போவது எப்படி?

பொதுவாக இந்த Thank You Page-களை கூகிளில் நீங்கள் தேடினாலே மாட்டும். பெரும்பாலும் கூகிள் இப்பக்கங்களை தேடலில் காட்டமாட்டான். ஆனால் கூகுளும் காண்பிக்க நான் பாத்திருக்கின்றேன். Alexa தேடு எந்திரம் தான் ரொம்ப டேஞ்சர்.

இந்த தேடு எந்திரங்களில் போய் A charge from CLKBANK அப்படினு தேடினால் ஏகப்பட்ட Thankyou page-கள் அகப்படும்.இப்படி நேரடியாக திருட்டுத்தனமாய் "நன்றிப் பக்கம்" போய் பிறரின் டிஜிட்டல் சொத்துக்கள் திருடப்பட வழிகள் இருக்கின்றன. உங்களுக்காக ஒரு எடுத்துக்காட்டு சுட்டி கொடுத்திருப்பேன். ஆனால் யாரோடேயாவது வயிற்றில் கைவைத்தல் பாவம் இல்லையா.

இப்போது சொல்லுங்கள்.எதை நம்பி இந்த இணையத்தில் நாம் கடை விரிக்க.

34, செயல் நினைவூட்டி

ஒருமுறை மறந்து பாருங்கள்.அப்புறம் ஒருகாலமும் உங்கள் மனைவியின் பிறந்தநாளை நீங்கள் மறக்கமாட்டீர்கள். இப்படியெல்லாம் ஜோக்கடிப்பர். நினைவு வைத்துக்கொள்ள இதுமாதிரி பிறந்தநாள் ,திருமணநாள் போன்ற மைல்கல் நாட்கள் மட்டுமல்லாமல், அன்றாடம் அநேக விஷயங்கள் கூட செய்ய நினைப்போம். மறந்துவிடுவோம். முன்மாதிரியல்லாமல் சராசரி மனிதனுக்கு இப்போது ஏகப்பட்ட கடமைகள் தூங்கப்போகுமுன் மறக்காமல் செய்ய வேண்டியிருக்கின்றது.

சமயத்துக்கு கிரெடிட்கார்டு கடனுக்கு காசுகட்டணும். முன்பெல்லாம் இத்தொல்லை கிடையாது.

சமயத்துக்கு கார் கடனுக்கு காசுகட்டணும்.முன்பெல்லாம் இத்தொல்லை கிடையாது.

சமயத்துக்கு போனுக்கு காசுகட்டணும்.முன்பெல்லாம் இத்தொல்லை கிடையாது.

சமயத்துக்கு இண்டர்நெட்டுக்கு காசுகட்டணும்.முன்பெல்லாம் இத்தொல்லை கிடையாது.

சமயத்துக்கு வீட்டு கடனுக்கு காசுகட்டணும்.முன்பெல்லாம் இத்தொல்லை கிடையாது.

இப்படி அநேக புதுத் தொல்லைகள். அவ்வளவு எளிதாய் மறக்க முடியாதவை.

இது போக அலுவலகத்தில் தாறுமாறாய் அநேகப் பணிகள்.அதிமுக்கியம் முதல் சர்வசாதாரணம் வரை.

அது அதுக்கு சமயத்தை முன்கூட்டியே குறித்து வைத்துவிட்டால் அந்தந்த வேலை அந்தந்த சமயத்தில் சரியாய் நடைபெற்றுவிடும் என்று ஒரு நம்பிக்கை.என்ன அதற்கொரு ரிமைண்டர் வேண்டும்

எனக்குத் தெரிந்து மென்பொருள்களில் மூன்று வகை நினைவூட்டிகள் உள்ளன.

ஒன்று. இம்மென்பொருளை உங்கள் கணிணியில் நிறுவிவிடவேண்டும்.நீங்கள் கணிணில் நுழைந்ததும் அன்றைய தின அலுவல்களை உங்களுக்கு இது நினைவூட்டிக் கொண்டேயிருக்கும். அதற்கு உதாரணம் கீழ்கண்ட மென்பொருள்.

Rainlendar- http://www.rainlendar.net/cms/index.php

இரண்டாவது. நீங்கள் ஃபயர்பாக்ஸ் பயன்படுத்தினால் அதன் Extension-ஆக இந்த நினைவூட்டி மென்பொருளை பயன்படுத்தமுடியும். பிரச்சனை என்னவென்றால் ஃபயர்பாக்ஸ் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். அப்போது தான் இவ்வகை மென்பொருள்களால் உங்களை உஷார் படுத்தமுடியும்.

ReminderFox - http://reminderfox.mozdev.org/

மூன்றாவது வகை ஆன்லைன் நினைவூட்டிகள். ஆன்லைனில் நுழைந்து உங்கள் பணிகளை வரிசைப்படுத்திவிட்டால் சமயம் வரும் போது email வழி அல்லது instant messenger வழி அல்லது SMS வழி உங்களுக்கு reminders வந்து கொண்டேயிருக்கும். அதற்கு உதாரணம் கீழே.

http://www.rememberthemilk.com

மூன்றில் உங்களுக்கு உகந்ததை நீங்கள் தான் தெரிவு வேண்டும்

மூலம்:pkp.in

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

35. வெப்கேம் ஹேக்கிங் பகுதி 1

வெப்கேமை அவரது அனுமதியில்லாமல் மற்றொருவர் பார்க்க முடியும் அவர்கள் webcam hackers என அழைக்கப்படுவார்கள்.

இதற்கு தங்களின் பதில்.is it possible?

இதற்கு பதில் "நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை" என்பது தான்.

மூன்று வழிகளை என்னால் ஊகிக்க முடிகின்றது.

முதல் வழி நீங்கள் பயன் படுத்தும் யாகூ அல்லது MSN மெசஞ்சர் மென்பொருளிலுள்ள தவறுகளை (Bugs) ஆதாயமாக எடுத்துக் கொண்டு நம்ம பசங்க புகுந்து விளையாடுதல். இவ்வகையான தாக்குதல்கள் மிக மிக அபூர்வம் ஏனெனில் இது போன்ற Bugs இருப்பது தெரிய வந்ததுமே சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உடனடியாக உஷாராகி Bug Fix அல்லது அப்டேட் வெளியிடுவது வழக்கம்.ஆக முதல் முக்கியமான விஷயம் Keep your softwares up to date.

இரண்டாவதாக எனக்கு தோன்றுவது மெசெஞ்சரில் யாரோ ஒரு முகம் தெரியா நபர் தோன்றி கவர்ச்சியாய் பேசி ஒரு சுட்டியை சொல்லி அதை கிளிக்கச் சொன்னால் கிளிக்காதீர்கள்.அதிலும் முக்கியமாய் Active x control இறக்கவா வேண்டாவாவென உங்கள் கணிணி கேட்டால் வேண்டவே வேண்டாமென சொல்லுங்கள். இந்த ஆக்டிவெக்ஸ் கண்ட்ராவிகளுக்குள் மறைந்திருக்கும் மர்மங்கள் நமக்கு வெளியே தெரிவதில்லை.அது மிகப் பெரிய ஆபத்தாக முடிய வாய்ப்புகள் உண்டு.அது வழியும் வெப்கேம்கள் ஹேக்கிங் செய்யப்படலாம்.

மூன்றாவது முறை மிகப் பயங்கரமானது.மிக எளிதானது. இது வழியாய் தான் அநேக வெப்கேம்கள் ஹேக்கிங் செய்யப்படுகின்றன.

இந்த சனிக்கிழமை மனோஜ் தனது பெசன்ட் நகர் வீட்டில் பார்ட்டி வைத்திருந்தான்.10 மணிக்கெல்லாம் திபு திபுவென இளஞ்ஞிகளும் இளைஞர்களும் ஒரே கும்பலாய் பானங்களில் மூழ்கிகிடந்தனர். உச்சஸ்தாயில் "தீப்பிடிக்க தீப்பிடிக்க" பாட்டு வேறு.மனோஜின் கணிணி மட்டும் ஒரு மூலையில் அமைதியாய் யார் கவனிப்புமின்றி அனாதையாய் இருந்தது.

"மனோஜ்! கேன் யூ டூ மீ எ பேவர்.ஐ வான் டு செக் மை மெயில். டு யூ மைன்ட்? ப்ளீஸ்" இது கில்லாடி ரவி.

பேதை மனோஜூம் "ஓ ஸ்யூர்" என பார்ட்டி ஆத்திர அவசரத்தில் கணிணியை அவனுக்கு திறந்து விட்டான்.

RAT அதாவது Remote administration tool-களில் கொட்டை போட்ட ரவி தான் கையோடு கொண்டு வந்திருந்த பேனாடிரைவிலிருந்து அந்த சிறு RAT மென்பொருளை கண் இமைக்கும் நேரத்தில் அவன் கணிணியில் நிறுவினான். பின் நல்ல பிள்ளை போல கழன்றுவிட்டான்.

இப்போது இந்த கணிணி மனோஜ்க்கு சொந்தமானது தான் ஆனால் ரவிக்கு இது அடிமை.

ரவி எங்கிருந்து வேண்டுமானாலும் இனிமேல் இந்த கணிணியின்மேல் ஆளுகை செய்யலாம். அடுத்த முறை மனோஜ் கணிணியிலிருக்கும் போது அவனுக்கே தெரியாமல் ரவியால் அந்த வெப் கேமை இணையம் வழி ஆன் செய்ய முடியும்.அதை பார்வையிட முடியும்.இன்னும் எல்லா அநியாயங்களும் செய்ய முடியும்.

ProRAT - http://www.prorat.net

Poisonivy- http://www.poisonivy-rat.com

Turkojan- http://www.turkojan.com

போன்ற ட்ரோஜன் மென்பொருள்கள் இவற்றிற்கு பிரபலம்.பெரும்பாலும் இவை இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன.

கலியுலகில் யார் ரவி யார் அப்பாவி என கண்டுபிடிப்பது கடினமல்லவா? அப்போ இந்த மாதிரியான ஹேக்கிங்கை தடுப்பது எப்படி? உங்கள் கணிணியில் ஏற்கனவே இது மாதிரியான மென்பொருள்கள் நிறுவப்பட்டு உள்ளனவாவென எப்படி கண்டுபிடிப்பது?

இதற்கான பதிலை நமது அடுத்தப் பதிவில் பார்க்கலாம்.

ஒரு முக்கிய விஷயம்.

இங்கு சொல்லப்படும் தகவல்கள் எல்லாம் Educational purpose only.யாரையும் ரவி போல தவறான பாதையில் போக தூண்டிவிடும் நோக்கத்தில் அல்ல.

வெப்கேம் ஹேக்கிங் பகுதி 2

கடந்த பதிவில் நம்மிடையே அறிமுகமான ரவி போன்றோர்களிடமிருந்து உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி?

முதலாவது உங்கள் இல்லக் கணிணி அல்லது மடிக்கணிணியை இயக்க யாருக்கும் அனுமதி அளிக்கவேண்டாம்.அப்படியே அனுமதி அளித்தாலும் அவர்கள் பக்கத்திலேயே அமர்ந்து இருந்து அவர்கள் நடவடிக்கையை பார்த்தும் பார்க்காததும் போல் இருப்பது நல்லது.முக்கியமாய் உங்கள் கணிணியை சரி செய்ய வரும் கணிணி வல்லுனர்கள் கூட அவர்கள் அருகிலேயே அமர்ந்து அவர்கள் செய்யும் விஷயங்களை மேலோட்டமாய் பார்வையிடுதல் நல்லது. சாதாரணமாய் பேச்சு கொடுத்து அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், என்ன செய்யப்போகின்றார்கள் என கேட்டு தெரிந்து கொள்வது ஒன்றும் தவறல்ல.

இரண்டாவதாய் உங்கள் கணிணியின் அட்மின் கணக்கை ஒரு போதும் சாதாரணமாய் உங்கள் கணிணியில் நுழைவதற்காக பயன்படுத்தாதீர்கள். அட்மின் கணக்கு மற்றும் அதன் கடவுசொல் உங்களுக்கு தெரிந்திருந்தாலும் அதன் வழி உங்கள் கணிணியில் நுழைவதை நீங்கள் பழக்கமாய் வைத்திராமல் உங்களுக்கென உங்கள் பெயரில் தனி பயனர் கணக்கு வைத்திருத்தல் நல்லது. அட்மின் கடவுசொல் உங்களிடம் எப்போதும் ரகசியமாகவே இருக்கட்டும். ரவி போன்ற நண்பர்கள் உங்கள் கணிணியை இயக்க அடிக்கடி கேட்பார்களாயின் அவர்போன்றோர்களுக்கென தனியாய் ஒரு விருந்தினர் பயனர் கணக்கு உருவாக்கி வைத்திருத்தல் எப்போதுமே நல்லது.

மூன்றாவதாய் உங்கள் கணிணியின் வின்டோஸ் ஃபயர்வால் எப்போதும் இயங்குநிலையிலேயே இருக்கட்டும். Windows XP SP2 முதல் இந்த ஃபயர்வால் அடிப்படையிலேயே இயங்குநிலையிலேயே இருக்கும்.ஆதலால் கவலையில்லை.அதை விட வலிமையான ஃபயர்வால் உங்களிடம் இருக்குமானால் சூப்பர் தான் போங்கள்.

என் அப்பார்ட்மென்டிற்குள் நுழைய ஒரே ஒரு கதவு தான் உள்ளது.அது வழியாய் நானும் நண்பன் கோபாலும் வந்து போவோம்.

இரு ஜன்னல்கள் உள்ளன அது வழியாய் காற்று வந்து போகும்.

சமையலறையின் புகைபோக்கிவழியாய் புகை வெளியே போகும்.

ஆக இவைகள் தான் என் வீட்டில் ஏதாவது நுழைய வழிகள். அவற்றை சரியான சமயத்தில் சரியாய் மூடி பாதுகாக்க வேண்டியது என் கடமை.

இதையெல்லாம் தாண்டி ஏதோ ஒரு வழியாய் திருடன் என் வீட்டில் நுழைந்து விட்டான் எனில் என் வீட்டில் ஏதோ ஒரு வழி அடைபடாமல் இருக்கின்றது என்று தானே அர்த்தம்.

அது போலத்தான் கணிணியில் அப்ளிகேஷன்கள் வந்து போக வழிபோல் Port-கள் உள்ளன.Http Web, Email போன்ற நல்லவர்கள் சில போர்ட்கள் வழி உங்கள் கணிணியுள் நுழைவார்கள்.உங்களுக்கு அது நல்லது தான். ஆனால் ரவி போன்றார் உங்கள் கணிணியில் நுழைந்து சில ரகசிய சுரங்கபாதைகளை தோண்டி வைத்துவிட்டுப் போனால்...

அப்புறமாய் தேவையானபோது உங்களுக்கே தெரியாமல் வந்து போகலாமே அதற்குத் தான்.

இது போன்ற அநாவசிய வழிகளை அதாவது தேவையற்ற போர்ட்களை அடைப்பது தான் ஃபயர்வாலின் வேலை.

இன்னும் ஒரு படி மேலே போய் "இல்லை பிகேபி எனக்கு நீங்கள் சொல்வது புரிகின்றது. ஆனால் என் கணிணியில் என்னென்ன போர்ட்டுகள் திறந்துள்ளன.அதை யாரெல்லாம் பயன்படுத்துக்கிறார்கள்" என நான் தெரிந்து கொள்ளலாமாவென நீங்கள் கேட்டால் அடடா நீங்கள் கலக்கிட்டீங்க.

இங்கே ஒரு மென்பொருளுக்கான சுட்டியை கொடுத்துள்ளேன் அதன் பெயர் CurrPorts

http://www.nirsoft.net/utils/cports.html

இது உங்கள் கணிணியில் தற்போது என்னென்ன மென்பொருள்கள் என்னென்ன போர்ட்களை பயன் படுத்துகின்றனவென அழகாய் காட்டும்.சந்தேகத்துக்கிடமான ரவி நிறுவிய பயன்பாடுகளையும் அதன் போர்ட்களையும் கூட இது காட்டும்.(படம்) நீங்கள் உஷாராகி அந்த ரவியின் சுரங்கப்பாதையை ஃபயர்வால் கொண்டு அடைப்பதோடு அம்மென்பொருளையும் உங்கள் கணிணியிலிருந்து நீக்கிவிடலாம். CurrPorts automatically mark with pink color suspicious TCP/UDP ports owned by unidentified applications (Applications without version information and icons)

இறுதியாய் ஆனால் உறுதியாய் நல்ல ஆன்டிவைரஸ் எப்போதுமே தேவையான ஒன்று.

அடிக்கடி பயன்பாட்டிலுள்ள போர்ட் எண்களின் வரிசையை நீங்கள் இங்கே காணலாம்.

List of Common TCPIP port numbers - http://www.answersthatwork.com/Download_Ar...ort_numbers.pdf

அனைத்து போர்ட் எண்களின் வரிசையையும் நீங்கள் இங்கே காணலாம்.

http://www.iana.org/assignments/port-numbers

மூலம்:pkp.in

Link to comment
Share on other sites

http://www.yarl.com/forum3/index.php?showtopic=38894 இதில் உள்ளது ஒருக்கால் வாசித்து எனக்கு விளங்கப்படுத்துங்கள் எனது கனினிக்கு பல பிரச்சனை என்ன செய்வது தெரியாது உள்ளேன்
Link to comment
Share on other sites

36, பச்சக்கலரு சிங்கிசாங்

வலையுலகில் நல்ல பசங்ககளுக்கும் கெட்டப் பசங்ககளுக்கும் உள்ள தொடர் போரில் யார் வெற்றி பெறப் போகின்றார்கள் என்பது இன்னும் சஸ்பென்சாகவே உள்ளது.நல்ல பசங்க எட்டடி பாய்ந்தால், எங்கோ கணிணியே கதி என்று பேஸ்மென்டில் கிடக்கும் கெட்ட பயல்கள் பதினாறடி பாய்கின்றனர். முன்பெல்லாம் கணிணி ஹேக்கிங் என்பது ஒரு குறிப்பிட்ட சாராரின் ஆர்வமாகவும் பொழுது போக்காகவுமே இருந்து வந்தது. இப்போது அது முற்றிலும் உருமாறி வணிக ரீதியாகிக் கொண்டிருக்கின்றது. பேட்டை ரவுடிகளைப் போல் போட்டி பொறாமை உள்ள எதிரிகள் மீது கெட்ட பசங்ககளை ஏவிவிட்டுவிட்டு பின்பு அவர்களை காசுகொடுத்து சரிபண்ணுவது வரைக்கும் வந்துவிட்டது. முன்பெல்லாம் கணிணி வைரஸ்கள் உங்கள் கணிணியை தின்பதை பார்த்து, பெரு நிறுவனங்களை கலங்கடித்ததை பார்த்து அதை உருவாக்கியோர் மகிழ்ந்தனர். அதோடு விட்டு விட்டனர். இப்போது கணிணி வைரஸ் வழியாயும் ஏதாவது காசு பண்ணமுடியுமா வென்று பார்க்கின்றார்கள். விசேஷ நாட்கள் தோறும் மின்னஞ்சல் வாழ்த்து வடிவில் உலா வரும் இன்றைய புகழ்பெற்ற ஸ்டார்ம் வைரஸ் (Strom worm) உங்கள் கணிணியில் வந்து விட்டால் அவ்வளவு தான். அமைதியாய் இருந்துகொண்டு இணையம் வழி உங்களுக்கு பல விளம்பரங்களை பாப் செய்து காட்டுமாம். அது வழி அதை படைத்தோர் காசு பண்ணுகின்றார்கள்.தினமும் 2 மில்லியன் டாலர்கள்( http://gizmodo.com/354741/ibm-says-storm-w...-millions-daily ). எப்படி இருக்குது கதை.

ஒரு இணையதளம் நம்பத்தகுந்த இணையதளம் தானா அதில் காசுகொடுக்கல் வாங்கல் தைரியமாக வைச்சுக்கலாமா இதை எப்படி கண்டறிவது? நல்ல பசங்க எல்லாம் ஒன்று சேர்ந்து Extended Validation SSL certificates -ன்னு ஒன்று கொண்டு வந்திருக்கின்றார்கள். பயந்துடாதீங்க. எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டிய அத்யாவசிய விஷயம் தான் இது. அதாவது நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7 வைத்திருந்தால் அதில் போய் www.paypal.com என டைப்புங்கள். சட்டென மேலிருக்கும் அந்த விலாசச்சட்டம் பச்சை நிறத்தில் மாறும். அதாவது பேபால் இணையதளம் பாதுகாப்பான இணையதளம். நீங்கள் பாதுகாப்பான இணைய பக்கத்தில் தான் இருக்கின்றீர்கள் என அது காட்டுகின்றதாம்.

பழைய SSL certificate உள்ள தளங்களில் பூட்டு ஒன்று தோன்றும் அது வழி அது பாதுகாப்பான இணைய பக்கம் என தெரிந்து கொள்ளலாம். ஆனால் அந்த விஷயம் கணிணியில் நாலும் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.சராசரிகளுக்கு தெரியாதல்லவா அதனால் தான் இப்படி கலர் போட்டு காட்ட முடிவெடுத்திருக்கின்றார்கள

Link to comment
Share on other sites

37, ஆக்கர் கடை

வடக்கே காயலான் கடை என்பார்கள். தெற்கே ஆக்கர் கடை என்போம். "பழைய ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்" எனக் கூவி மிதிவண்டி மிதித்து உழைப்போனுக்கு புரமோசன் அது. அதில் கூடச் சிலர், வந்த பழைய சப்பிப்போன டப்பா சரக்குகளிடையே தங்கம் கிடைத்து மாட மாளிகைகள் கட்டியதாகவும் கதைகள் கேள்விபட்டிருக்கின்றேன். கூவிக் கூவி விற்போனை ஆங்கிலத்தில் Hawker என்பர். அதுதான் ஆக்கர் ஆனதாவென தெரியவில்லை. அந்த அழுக்கான ஆக்கர் கடையிலும் கொட்டிக்கிடக்கும் புத்தகங்களில் எப்போதுமே ஒரு ஏக்கம் இருந்ததுண்டு.

ஆன்லைனிலும் உள்ளது பழைய மென்பொருள்களுக்கான காயலான் கடை. ஆனால் இலவசமாய். முன்பு கன்னாபின்னாவென பயன்படுத்தப்பட்டு இப்போது சுத்தமாய் நாம் மறந்து போன பல மென்பொருள்களை இங்கே கொட்டி வைத்திருக்கின்றார்கள். சும்மா தேவைப்பட்டால் போய் இறக்கம் செய்து நிறுவி கொஞ்சம் அந்தகாலத்துக்குப் போய் வரலாம்.

http://www.vetusware.com

அது போல பழைய டாஸ் கேம்களையும் இங்கே ஒரு ரசிகர் சேர்த்துவைத்திருக்கின்றார். அக்கால விருப்புக்களை தேடி ஆடி மகிழலாம்.

http://abandonia.com

வந்த பாதையை திரும்பிப்பார்த்தல் அது ஒரு இன்டரஸ்டிங் தான். இல்லையா?. வாழ்க்கையே வெங்காயம் போன்றது. ஒவ்வொரு ஏடாய் எடுத்துக் கொண்டே வாருங்கள். சில பொழுது கண்களில் நீர் வடியும். நிற்க.

இங்கே வழக்கமான ஒரு பிரச்சனை வரும். டாஸ் பயன்பாடுகளும் டாஸ் கேம்களும் இன்றைய கணிணிகளில் ஓடாதே என்பது தான். அதற்கு தீர்வாகத்தான் வந்திருக்கின்றது dosbox . இந்த இலவச பயன்பாடு உங்கள் பழைய Dos கேம்களையும் அப்ளிகேசன்களையும் எந்த கணிணியிலும் ஆட ஓட விடுகின்றது.முயன்று பாருங்கள்.

http://www.dosbox.com

ஒரு நிமிஷம்... இறக்கம் செய்யும் மென்பொருள்களை வைரஸ் சோதனை செய்து கொள்ளல் நல்லது அல்லவா? http://virusscan.jotti.org அல்லது http://www.virustotal.com போய் இறக்கம் செய்த அந்த பழைய மென்பொருள்களை இலவசமாய் ஒரு வைரஸ் செக்கப் செய்துகொள்ளல் உங்கள் கணிணிக்கு எப்போதுமே ஆரோக்கியம்.

மூலம்:pkp.in

Link to comment
Share on other sites

38, வெப் உலக கின்னஸ் சாதனைகள்

பயர்பாக்ஸ் உலாவி மீது கொண்ட காதலால் நான் ஒன்றும் பயர்பாக்ஸ் பயன்படுத்த தொடங்கவில்லை. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மேல் வந்த வெறுப்பே அது என்னை பயர்பாக்ஸ் பயன்படுத்த வைத்தது. இப்போது அதுவே என் பிரதான பிரவுசராகியும் போனது. ஆயினும் பழைய பாசத்தால் சில சமயம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்த விழைவேன். போன வேகத்தில் மீண்டும் FF-யிடமே வந்துவிடுவேன். அப்பப்போ கிராஷ் ஆகுதல் ,அதன் ஆமை வேகம் IE மீது வெறுப்படிக்க வைத்து விட்டது. நீங்கள் இணைய உலாவரும் போது கூட அசாதாரண வேகமின்மை அல்லது எந்த error-ம் கொடுக்காமல் வெற்று பக்கத்திலேயே அரைமணி நேரமாய் நிற்றல் போன்ற அறிகுறி தெரிந்தால் ஒரு வேளை அது இணைய இணைப்பு பிரச்சனையாய் இல்லாமல் உங்கள் பிரவுசர் பிரச்சனையாய் இருக்கலாம். பயர்பாக்ஸ்க்கு தாவிவிடுங்கள். FF-யின் வேகம், வகை வகையான இலவச Add-on கள் அதன் ப்ளஸ்கள். அலுவலகத்தில் இப்போதெல்லாம் பயர்பாக்ஸ் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் போல் ஆகிவிட்டது. IE பயன்படுத்துபவர்களை பாவம் விவரம் அறியாதவர்களென்றும் FF பயன்படுத்துகிறவர்களை damn smart விவரம் அறிந்தவர்களென்றும் மூளை தானாகவே பகுத்துவிடுகின்றது.

துரதிஷ்டவசமாய் தமிழில் இன்னும் சில வலைப்பக்கங்கள் பயர்பாக்ஸில் ஒழுங்காய் தெரிவதில்லை. அவற்றை படிப்பதற்காக வேண்டியே IE-யை திறக்க வேண்டியுள்ளது. நீங்கள் சொந்தமாய் தமிழில் வலைப்பக்கம் வைத்திருந்தால் தயவுசெய்து அது Firefox browser-யிலும் சரியாய் தெரிகிறதாவென சரிபார்க்கவும். நண்பர் Kricons-ன் blogger template யோசனையையே இங்கும் வழங்குகிறேன். "Firefoxல் அனைவரது வலைபதிவும் நன்றாக தெரிய பதிவை எழுதும் போது text-align justify யை பயன் படுதாமல் இருந்தாலே போதும்."

பயர்பாக்ஸ் உலாவியில் நான் சமீபத்தில் அறியவந்த ஒரு அருமையான Add-on பெயர் Piclens( http://www.piclens.com/ ).கூகிள் படங்கள் தேடலில் நமீதாவை நீங்கள் தேடுகின்றீர்கள் என வைத்துக்கொள்வோம்.(பின் என்ன காந்தியையா தேடுவோம்) அது இணையத்தில் நமீதா படங்களாய் தேடி காட்டும். அந்த படங்களை அட்டகாசமாய் 3D தாக்கத்தில் "ஸ்லைடு ஷோ"போல இறக்கம் செய்யாமலே பார்க்க இந்த Add-on உதவுகின்றது.

நிற்க.

நாளை இந்த நம் அபிமான பயர்பாக்ஸ் ஒரு கின்னஸ் உலக சாதனை செய்யவிருக்கின்றது. 24 மணிநேரத்தில் உலகிலேயே அதிக அளவில் இறக்கம் செய்யப்பட்ட மென்பொருள் என்ற சாதனையை அது செய்ய தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இது வரை உலகெங்கும் 1,247,084 பேர் அந்த புது பயர்பாக்ஸ்3-ஐ ஜூன் 17 அன்று இறக்கம் செய்யப் போவதாக தெரிவித்திருக்கின்றார்கள். இந்தியாவிலிருந்து மட்டும் 22000 பேர் அதை இறக்கம் செய்யப் போவதாக தெரிவித்திருக்கின்றார்கள். நீங்களும் இந்த சாதனையில் பங்கு கொள்ளலாம். நாளை அதாவது ஜூன் 17 அன்று பயர்பாக்ஸின் தளம் www.mozilla.com/firefox/ சென்று புதிய FireFox version 3-யை முழுவதுமாய் இறக்கம் செய்து (no upgrade please) உங்கள் கணிணியில் நிறுவி இச்சாதனையில் பங்கு பெறலாம். மேலும் விவரங்களுக்கு.

http://www.spreadfirefox.com/en-US/worldrecord/

இது போல இன்னொரு உலக சாதனையை செய்ய http://www.internetbigbang.com தயாராகிக்கொண்டிருக்கிறது. அதாவது ஒரே நேரத்தில் அதிகமான நபர்கள் ஆன்லைனில் இருந்த தளம் என்ற பெயரை இது எடுக்கப்போகின்றது. இதுவரை 836 639 பேர் ஒரே நேரத்தில் இத்தளம் வர ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஜூன் 20-ம் தியதி இச்சாதனை நடத்தப்படவிருக்கின்றது.

இனி இதுமாதிரி நிறைய சுவையான உலக சாதனைகள் இணையத்தில் நடத்தப்படலாம். ஜாலி தான்.

மூலம்:pkp.in

Link to comment
Share on other sites

39, தமிழ் MP3 கிடங்குகள்

தமிழ் MP3 இசை கோப்புகள் இலவசமாக இறக்கத்துக்கு இன்றைக்கு பரவலாக இணையம் எங்கும் கிடைக்கின்றது. கூகிளில் intitle:"index of" "parent directory" tamil எனத் தேடினால் அவன் "நேரடி" இறக்க வசதியுள்ள தளங்களை வரிசையிட்டு காட்டுகின்றான்.

உதாரணத்துக்கு இங்கே சில சுட்டிகள்.

திரைப்படப்பாடல்கள்

http://tamilvenkai.com/Tamilthaalam%20Mp3%...r=Tamil%20Mp3s/

http://www.tamiljukebox.com/www.rose4you.d...ir=01.%20Tamil/

http://www.tamilrage.net/Mp3/database/index.php?dir=

http://isaitamil.in/Tamilmp3/index.php?dir=

http://www.tamilcowboy.com/mp3/

http://sangeethamshare.org/murthy/

தமிழ் ரிங்டோன்கள்

http://www.tamiljukebox.com/mobile/index.php?dir=Ringtones/

வீடியோ பாடல்கள்

http://www.thuvi.com/songs/videofiles/tamil/

ஸ்லோகங்கள்

http://www.prapatti.com/slokas/mp3/

கிறிஸ்தவ பாடல்கள்

http://www.tamilbiblestudy.com/thewayofsal.../index.php?dir=

இஸ்லாமிய பாடல்கள்

http://islamwap.info/

பழைய பாட்டுகள் மட்டுமல்லாது புது பாடல்களும் கிடைக்கின்றன. ஆச்சர்யமாய் சில புதுப் படங்களின் பாடல்கள் அவர்கள் வெளியிடும் முன்னறே இணையத்தில் வந்துவிடுகின்றது. இப்படியே போனால் வீடியோக்களின் கதையும் மென் புத்தகங்களின் கதையும் அப்படியே ஆகிவிடும் போலிருக்கின்றது. வேர்க்க வேர்க்க அதனை உருவாக்கிய படைப்பாளி அவனுக்கான கூலியை பெற்றுக் கொள்ளாமலேயே இங்கு போகின்றான். ஒரெ கிளிக்கில் புத்தம் புது MP3களை இலவசமாய் இறக்கம் செய்யும் போது நம் போன்ற பொது ஜனம் அறியாமையினாலோ என்னவோ குற்றமனப்பான்மை கொள்வதில்லை. அதற்கு பதிலாக அபூர்வத்தை எளிதாய் இலவசமாய் கிட்டிய மகிழ்ச்சியே கொள்கின்றார். இப்படி சில்லறை சில்லறையாக தயாரிப்பாளர்களுக்கு கோடிக் கணக்கில் இழப்பு. இது இப்படியிருக்க இந்த பைரசிகளுக்கெல்லாம் முடிவு கட்ட பெருசுகள் கூட்டம் கூடி கட்டம் கட்டி பேசி ஒரு முடிவுக்கே வந்து விட்டார்கள். அதன் பெயர் தான் Digital rights management அதாவது DRM.

ஒருவேளை 2010-ல் வெளியாகவிருக்கும் சூப்பர் ஸ்டாரின் திரைப்பட MP3 அத்தனை எளிதாய் உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். டிராக் ஒன்றை 20 ரூபாய் கொடுத்து நீங்கள் வாங்க வேண்டி வரும். நான் வாங்கிய டிராக்கை புத்திசாலித்தமாய் எனது மைடிரைவ் வழி உங்களுக்கு வழ்ங்கினால் நீங்கள் இறக்கம் செய்வீர்கள். ஆனால் அந்த பாடல் இசைக்காது. பதிலாய் அது ஆன்லைன் ஸ்டோர் போய் அங்கு லைசென்ஸ் வாங்க உங்களை நச்சரிக்கும்.அது என் கணிணியில் மட்டுமே பாடும் படி வடிவமைக்கப்பட்டதாய் இருக்கும். இது தான் டிஆர்எம்.

இந்தத் தொல்லை ஏற்கனவே மேற்கில் பிரபலம்.ஒரு டாலர் தானே போனால் போகிறதுவென இது மாதிரி பாடல் டிராக்குகளை சில்லரையாக உச்ச தர MP3 வடிவில் வாங்குகின்றார்கள். பழகியும்விட்டார்கள். இது சீக்கிரத்தில் நம்மூருக்கும் வரும். நமக்கும் பழகிவிடும்.

DRM-ஐ உடைக்க முடியாதா?

ஏன் முடியாது? அந்த அனலாக் ஹோல் இருக்கின்றதே, அது தான் இந்த படைப்பாளிகளுக்கெல்லாம் பயங்கர தலைவலியாய் இருக்கின்றது. உதாரணத்துக்கு பாருங்கள்.

DRM பாதுகாக்கபட்ட MP3 இசையை ஸ்பீக்கரில் தானே கேட்கப்போகின்றோம். அந்த ஸ்பீக்கரிலிருந்து வரும் இசையை பதிவு செய்ய நமக்கு எவ்வளவு நிமிடம் ஆகும்? பெப்பே DRM.

DRM பாதுகாக்கபட்ட வீடியோவை ஸ்கிரீனில் தானே பார்க்கப்போகின்றோம். அந்த ஸ்கிரீனில் ஓடும் படத்தை வீடியோ ரெக்கார்டிங் செய்ய நமக்கு எவ்வளவு நிமிடம் ஆகும்? பெப்பெப்பே DRM.

DRM பாதுகாக்கபட்ட Pdf மென்புத்தகத்தை கணிணி திரையில் தானே படிக்கப் போகின்றோம். அந்த திரையிலிருப்பதை பிரிண்ட் ஸ்கிரீன் செய்ய நமக்கு எவ்வளவு நிமிடம் ஆகும்? பெப்பெப்பெப்பே DRM.

இதைத் தான் Analog hole என்கின்றார்கள். இங்கு trade off ஆவது தரம். ரெக்கார்ட் செய்யப்பட்ட கோப்புகளின் குவாலிட்டி அவ்வளவு நன்றாய் இருக்காது. திருட்டு விசிடி போல கரகர சொரசொரவென்றிருக்கும்.

ஆக அப்போது கிடைக்கும் தரத்துக்காக காசு கொடுத்தாவது DRM கோப்புகளை வாங்க நாம் தயங்க மாட்டோம் என்பது என் எண்ணம்.

ஓட்டலில் குடிக்க குழாய் தண்ணீரை இலவசமாய் கொடுத்தாலும் தரத்துக்காக மினரல் வாட்டர் காசு கொடுத்து வாங்க பழகிவிட்டோமே?

மூலம்:pkp.in

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

40,வீடியோ லாகின் விவரம் வெளியிட யூ-டியூப் தளத்திற்கு உத்தரவு

யூ-டியூப் என்ற வீடியோ பகிர்வு இணையதளத்தில் யார் யார், எப்போது, எந்தெந்த வீடியோ கிளிப்பிங்குகளை பார்க்கின்றனர் என்ற விவரத்தை கூகுள் நிறுவனம், வயாகாம் நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வயாகாம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தங்கள் வீடியோ பதிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளது. அந்த வீடியோக்கள் எவ்வளவு நபர்களால் எத்தனை முறை பார்க்கப்படுகிறது என்ற விவரத்தை யூ-டியூப் நிறுவனம் அளிக்க வேண்டும் என வயாகாம் வழக்கு தொடர்ந்தது.

சுமார் ஒரு பில்லியன் டாலர் காப்புரிமை மீறல் வழக்கு விசாரணையில் அமெரிக்க நீதிபதி லூயிஸ் எல்.ஸ்டான்டன் இந்த புரட்சிகரமான தீர்ப்பை அளித்துள்ளார்.

வயாகாம் சார்பில் காப்புரிமை பாதுகாப்பு பெற்ற வீடியோக்கள், யூ-டியூப் மூலம் அதிக நபர்களால் பார்க்கப்படுவதாக வயகாம் நிறுவனம் குற்றம்சாட்டியது. இதற்கு யூ-டியூப் தளத்தில் யார், யார் எந்த வீடியோக்களை பார்க்கிறார்கள் என்ற விவரத்தை கூகுள் நிறுவனம் அளிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தது.

அதாவது, ஒவ்வொர்ரு வீடியோவும் பார்க்கப்பட்ட எண்ணிக்கை பற்றிய தரவுகளை வெளியிடவேண்டும். ஆனால் இது வீடியோ பார்த்த ஒவ்வொரு பயனாளரின் தனிப்பட்ட லாக் இன் ஐடி, ஐ.பி. முகவரி ஆகியவை தொடர்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

12 டெராபைட்கள், அதாவது 12 மில்லியன் புத்தகங்களுக்குச் சமமான தரவுகளை அளிப்பது என்பது அதிக செலவு வைக்ககூடியது என்றும், காலத்தை விழுங்கும் செயல் என்றும், பயனாளர் அந்தரங்க அடையாளங்களுக்கு அச்சுறுத்தல் என்றும் கூகுள் நிறுவன வழக்கறிஞர்கள் வாதாடினார்கள்.

மேலும் பயனாளர்களின் பயனாளரின் தனிப்பட்ட லாக் இன் ஐடி தவறுதலாக வெளிப்படுத்தப்படலாம் என கூகிள் சார்பில் நீதிமன்றத்தில் வாதாடப்பட்டது. ஆனால் கூகிள் பயனாளரின் அடையாளம் குறித்த அச்சம் தேவையற்றது என்று தெரிவித்த நீதிபதி, வழக்கு தொடர்ந்தவர்களுக்கு இந்த தகவலைப் பெறுவதற்கான நியாயம் உள்ளதாக கூறினார்.

ஆனால் வழக்கு தொடர்ந்தவர்களோ இன்னும் மேலே போய் கூகுள் தனது சோர்ஸ் குறியீட்டை வெளியிட வேண்டும் என்று கோரினர். ஆனால் கூகுள் நிறுவனம் தனது புகழ் பெற்ற தேடல் எந்திர தொழில்நுட்பங்களை வீடியோ காப்புரிமை விதிகளை மீறுவதற்காக பயன்படுத்தியது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று வயாகாம் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.

வயாகாம் வீடியோ ஷோக்களுக்கான காப்புரிமை விதிகளை மீறி அந்த வீடியோக்கள் மூலம் யூ-டியூப் ஏகப்பட்ட வருவாய் ஈட்டியுள்ளதாக வயாகாம் ஒரு பில்லியன் டாலர்கள் நஷ்டஈடு கேட்டுள்ளது.

இந்த வழக்குடன் பிரிட்டிஷ் கால்பந்து லீக், மற்றும் சில நிறுவனங்கள் கூகுளின் யூ -டியூப் மீது தொடுத்த வழக்குகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆனால் யூ-டியூபை பார்க்கப்படும் ஒரு குறிப்பிட்ட ஐ.பி. முகவரியைக் கொண்டு தனி நபரை அடையாளம் காணமுடியாது என்றும் கூறப்படுகிறது.

கோர்ட் தீர்ப்பினால் ஏமாற்றம் அடைந்துள்ள கூகுள், தரவு விவரங்களை தரும் முன் லாக்-இன் ஐ.டி.க்களை அனாமதேயமாக்கி விட்டுத்தான் தருவோம் என்று வயாகாமிடம் கூறியுள்ளதாக தெரிகிறது.

ஆனா வயாகாம் நிறுவனமோ, தங்களுக்குத் தேவை எவ்வளவு முறை தங்களது வீடியோ ஷோக்கள் பார்க்கப்பட்டுள்ள என்ற வரலாறுதான், இதில் பயனாளர் ஐ.டி. எங்கு வருகிறது என்று கேட்கிறது. எங்கள் வாதத்தின் படி காப்புரிமை பெற்ற வீடியோக்கள் அபரிமிதமாக பார்க்கப்பட்டுள்ளது என்பதே. அதற்கு மட்டுமே இந்த தரவுகளை பயன்படுத்தப்போகிறோம் என்று கூறுகின்றனர்.

விறுவிறுப்பான இவ்வழக்கிற்கு அளித்துள்ள முதற்கட்ட தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

msn-Tamil

Link to comment
Share on other sites

  • 5 months later...

41, உன் மொழி

தலைகீழாக ஆங்கில எழுத்துக்களை கவிழ்த்து வைத்து எழுதியிருக்கும் மொழி தெரியாத வலைபக்கம் ஒன்றுக்குள் அகப்பட்டுக் கொண்டாலும் ஒரு நம்பிக்கை இருப்பதுண்டு. கூகிளும் யாகூவும் எப்படியாவது கை கொடுக்கும் என்று. அதன் இலவச மொழிபெயர்ப்பு சேவைகள் நமக்கு அவற்றை மொழிபெயர்த்து தருமே.

கூகிளின் மொழிபெயர்ப்பு சேவை ஏறத்தாழ 34 மொழிகளை நமக்கு புரியவைக்கிறது.

http://translate.google.com/translate_t#

அது போலத்தான் யாகூவின் பாபேல்பிஷ் சேவையும்.

http://babelfish.yahoo.com/

நேற்று இப்படித்தான் கூகிள் கண்கட்டி என்னை ஒரு இணையதளத்துக்கு இழுத்து சென்றிருந்தான்.ஆங்கில abcd-கள் வைத்து தான் எழுதியிருந்தார்கள்.ஆனால் என்ன மொழி என கொஞ்சமும் புரியவில்லை.எங்கும் அது பற்றிய தகவல்களையும் கொடுக்கவில்லை. குறைந்தது அந்த மொழி என்ன மொழி என தெரிந்தாலாவது மேலே நான் சொன்ன மொழிபெயர்ப்பு சேவைகளை பயன்படுத்தலாம்.அது என்ன பாஷை என தெரியாமல் அந்த மொழி பெயர்ப்பு சேவையை எப்படி நாம் பயன்படுத்துவதாம்.அப்போது தேடியபோது கிட்டிய சேவை தான் language identifier அல்லது language detector.தலைகால் புரியாத அந்த உரைநடையை கொஞ்சம் காப்பி/பேஸ்ட் செய்தால் இச்சேவை அது என்ன மொழி என கண்டு பிடித்து கொடுக்கின்றது.

link - http://ruphus.com/identify/

42, ஐந்து பென்டிரைவ் பாதுகாப்பு மென்பொருள்கள்

முன்பெல்லாம் கணிணி வைரஸ்கள் ஃப்ளாப்பி தட்டுகள் வழியே பரவின. பின்பு அவை பரவ கணிணி நெட்வொர்க்கை தேர்ந்தெடுத்தன. இப்போதெல்லாம் கணிணி வைரஸ்கள் பெரும்பாலும் ஜம்ப் டிரைவுகள் அல்லது பென்டிரைவுகள் எனப்படும் USB டிரைவுகள் வழியே பரவுகின்றன.அலுவலக வளாகத்தில் இலவசமாக கீழே கண்டெடுத்த USB டிரைவை அப்படியேக் கொண்டு தைரியமாக கணிணியில் செருகக் கூடாது. அதன் Autoplay வசதி உங்கள் கணிணியில் வினையை விதைத்துவிடலாம்.

USB டிரைவுகள் வழியே பரவும் வைரஸ்களிலிருந்து தப்பித்துக்கொள்ள இங்கே சில யோசனைகள்:

1.உங்கள் கணிணியில் இலவச USB Firewall ஒன்றை நிறுவிக்கொள்ளலாம். எப்போதெல்லாம் ஒரு பென்டிரைவை உங்கள் கணிணியில் செருகுகின்றீர்களோ அப்போதெல்லாம் அது ஒரு சோதனை செய்து வைரஸ்மாதிரியான கோப்புகள் தென்பட்டால் அது உடனே உங்களை உஷார்படுத்தும்.

USB Firewall Download Link - http://www.net-studio.org/software/USB_FW.rar

2.Tweak UI எனும் மைக்ரோசாப்டின் இலவச மென்பொருளை பயன்படுத்தி இது போன்ற removable driveகள் உங்கள் கணிணியில் Autoplay ஆவதை தடுக்கலாம். அதனால் தானே ஏகப்பட்ட பிரச்சனைகள்.

Tweak UI Download Link - http://download.microsoft.com/download/f/c...9ed9-45a6-b352-

3.ClamWin எனப்படும் இலவச Portable ஆன்டிவைரஸ் மென்பொருளை உங்கள் பென்டிரைவில் வைத்துக்கொள்ளலாம். அவ்வப்போது அவசரத்துக்கு ஸ்கேன் செய்துகொள்ள உதவும்.

ClamWin Download Link - http://portableapps.com/apps/utilities/clamwin_portable

4.உங்கள் கணிணியின் USB டிரைவை அப்பப்போ enable அல்லது disable செய்துகொள்ள USB Drive Disabler எனும் இலவச மென்பொருளை பயன்படுத்தலாம்.

USB Drive Disabler Download Link - http://www.intelliadmin.com/DisableUSB_Free.exe

5.சில பிரபல ஃப்ளாஷ் டிரைவ் வைரஸ்களை,வார்ம்களை ஒழிக்க Flash Disinfector உங்களுக்கு உதவலாம்.

Flash Disinfector Download Link - http://download.bleepingcomputer.com/sUBs/...Disinfector.exe

மூலம்:pkp.in

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைநேசன் எனது தனி மடல் உங்களுக்கு கிடைத்ததா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.