Jump to content

கவிஞர் கண்ணதாசன் vs கவிஞர் வைரமுத்து


Recommended Posts

கவியரசு கண்ணதாசனின் கற்பனையில் உருவாகிய பாடல்கள் சிறந்ததா, காலத்தினால் அழிக்கமுடியாதவையா அல்லது... கவிஞர் வைரமுத்துவின் பாடல்கள் சிறந்தனவையா....

என்னைப்பொருத்து கவிப்பேரரசு என்ற பெயர் கவிஞர் கண்ணதாசன் ஒருவருக்கு மட்டுமே சேரவேண்டும். காரணம் அவரின் பாடல்கள் இன்றும் எம் நினைவுகளில் நிற்கின்றன. ஆனால் கவிஞர் வைரமுத்துவினதோ நினைவில் இல்லவே இல்லை....

உதாரணத்துக்கு

ஆடிய ஆட்டமென்ன?

பேசிய வார்த்தை என்ன?

தேடிய செல்வமென்ன?

திரண்டதோர் சுற்றமென்ன?

கூடுவிட்டு ஆவிபோனால்

கூடவே வருவதென்ன...?

வீடுவரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம்

ஆயிரத்தில் நாட்டம்

கூடிவரும் கூட்டம்

கொள்ளிவரை வருமா? (வீடு)

தொட்டிலுக்கு அன்னை

கட்டிலுக்குக் கன்னி

பட்டினிக்குத் தீனி

கெட்ட பின்பு ஞானி! (வீடு)

சென்றவனைக் கேட்டால்

வந்துவிடு என்பான்

வந்தவனைக் கேட்டால்

சென்று விடு என்பான்! (வீடு)

விட்டுவிடும் ஆவி

பட்டுவிடும் மேனி

சுட்டுவிடும் நெருப்பு

சூனியத்தில் நிலைப்பு! (வீடு)

அதேநேரம்

கவிஞர் வைரமுத்து ஒரு தமிழ் உணர்வாளர், அவரின் மனைவி தமிழ் மொழி வளர பாடுபடும் ஒரு தமிழ்ப்பெண் தமிழ்ப்பேராசிரியை, அவர் மகன் தமிழில் காதல் கொள்ளும் வகையில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளான், உலக தமிழர்கள் அவர் குடும்பத்திடம் பாடம் படிக்கவேண்டிய ஒரு பல்கலைக்கழகம். இப்படியான குடும்பங்களையே நாம் நல்லதொருகுடும்பம் பல்கலைக்கழகம் என்று கூறுவது வழக்கம். தமிழ் மொழி வளர பாடுபடுகிறது. அதே நேரம் வைரமுத்துவின் தமிழீழம் மீதான பாசம் என்னை அவர்முன் தலைகுணிந்துவணங்கவைக்கும். அப்படி ஒரு தமிழீழ உணர்வாளர்.

ஆனாலும் தமிழ் மொழிப்பாடல்கள் என்று வரும் போது, நான் தமிழ் உணர்வுகள், கற்பனைகள் என்று போகும் ஒரு கட்டத்தில், எனக்கு வைரமுத்துவின் பல பாடல்கள் அவ்வளவாக விளங்குவதில்லை, மனதில் பதியும் வகையில் எழுதப்படவில்லை. ஆனாலும் பல பாடல்கள் தனிச்சுவை கொண்டவை. இசையிற்கு ஏற்றாற்போல பாடல் எழுதும் ஒரு காலத்தின் கோலத்தில் கவிப்பேரரசு கண்ணதாசன் இன்று வாழ்ந்திருந்தாலும், இதே நிலைமைதான்.

இங்கே இந்த திரியில் நான் அலசப்போவது, தமிழில் பாடல் எழுதி, மனித மனத்தினை கொள்ளைகொண்ட பாடல்கள், கவிஞர் கண்ணதாசனுடையதா, அல்லது வாலியினுடையதா அல்லது வைரமுத்துவினுடையதா என்று தான்.

இந்திரன் தோட்டது முன்திரிக் கொட்டையெ மன்மத நாட்டின் நாட்டுக் கட்டையெ" என்பது

மேலே நான் சுட்டிக்காட்டிய ஒரு வைரமுத்துவின் பாடல்வரிகளில் என்ன உள்ளது. ஆனாலும் அதில் இரண்டுவிதமான கருத்துக்கோலம்கள் கொண்டிருக்கின்றன. ஆனால் கண்ணதாசன் பாடல்களோ, வாழ்க்கையில் துன்பம் வரும் போது ஒரு ஒத்தடம் போடும் அளவுக்கு ஒரு மருந்தாக இருக்கிறது. அப்படியான் பாடல்களை வைரமுத்து எழுதவில்லை என்பதே என் கவலை.

எங்கே இங்கே நாம் அவர் எழுதிய சில பாடல்களை பார்ப்போம். கண்ணதாசன் எழுதிய பாடல்களையும் பார்ப்போம். விமர்சிப்போம். தமிழ் மொழி மேல் பற்றுக்கொண்ட இருவருக்கும் எனது பணிவான வணக்கத்துடம் தொடங்குவோம் அலசுவோம் ஒவ்வொரு பாடல்வரிகளாக...

இந்திரன் தோட்டது முன்திரிக் கொட்டையெ மன்மத நாட்டின் நாட்டுக் கட்டையெ" என்பது

இங்கே இந்திரன் என்ற தேவலோக அரசனினிடம் இருக்கும் ஒரு முந்திரிக்கொட்டை...இது ஒரு ஆபாசமான ஒரு உவமைப்பொருள்.....

மன்மத நாடு...என்பது அழகிய ஒரு மேனிகளைக்கொண்ட ஒரு நாட்டில் ஒரு அழிகிய பெண்ணை ஒரு கட்டை என்கிறார். ஏன் அவருக்கு வேறு உவமை இங்கே வரவில்லை.

மன்மத நாட்டின் மன்மத கிளியே என்று ஏன் எழுதியிருக்கக்கூடாது....இந்தி

Link to comment
Share on other sites

இது ஒரு விவாதத்திற்குரிய விடயம். கண்ணதாசன் வாலி வைரமுத்து இவர்களனைவரையும் சினிமாப் பாடல்கள் என்ற வட்டத்திற்குள் வைத்து வாதிடுவதென்றால் அது சிரமமற்ற விடயம்.

ஒரு கவிஞனின் சூழ்நிலையை வைத்தே அவனது கவித்தன்மையும் அமையும். கண்ணதாசனின் சினிமாச் சூழ்நிலை, வைரமுத்துவின் சினிமாச் சூழ்நிலை இரண்டும் வேறுபட்டதாகவுள்ளது. சினிமா என்ற வட்டத்திற்குள் நின்றால் எல்லோருமே வியாபாரக் கவிஞர்கள்தான். ஆனாலும் கண்ணதாசனின் பாடல்வரிகள் நிலைத்துநிற்பதற்கு அன்றைய காலச் சினிமாச் சூழல்தான் காரணம். உதாரணமாக கண்ணதாசனுக்கு முந்திய காலகட்டச் சினிமாப் பாடல்களை எடுத்துக்கொண்டால் அவையும் தரமானவ. ஒருவகையில் சினிமாப் பாடல்கள் சினிமா இலக்கியம் என்ற வரையறைக்குள் இருந்த சந்தர்ப்பம் இன்றைய சினிமாச் சூழலினால் இல்லாமற் போய்விட்டது.

கண்ணதாசன் வாலி வைரமுத்து பாடல்களுடன் மீண்டும் சந்திப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கவி அரசர்களிளும் பார்க்க மதிபுகுரிய புதுவை இரத்தினதுறை மற்றும் கவி போராளி வீரா,அண்ணன் காசிஆனந்தன் போன்றோர்கள் தான் தற்போதைய காலகட்டத்தில் முக்கியமானவர்கள்,சினிமா என்று எடுக்கும் போது கவிஞர் வீராவை எடுத்து கொள்ளளாம்.

Link to comment
Share on other sites

இந்த கவி அரசர்களிளும் பார்க்க மதிபுகுரிய புதுவை இரத்தினதுறை மற்றும் கவி போராளி வீரா,அண்ணன் காசிஆனந்தன் போன்றோர்கள் தான் தற்போதைய காலகட்டத்தில் முக்கியமானவர்கள்,சினிமா என்று எடுக்கும் போது கவிஞர் வீராவை எடுத்து கொள்ளளாம்.

நீங்கள் சொல்வது நிஜம்தான். காசியானந்தன், புதுவை, வீரா இவர்களுடன் எப்படி வியாபார நோக்கங்கொண்ட சினிமாக் கவிஞர்களை ஒப்பிடுவது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.