Jump to content

கவிஞர் கண்ணதாசன் vs கவிஞர் வைரமுத்து


Recommended Posts

கவியரசு கண்ணதாசனின் கற்பனையில் உருவாகிய பாடல்கள் சிறந்ததா, காலத்தினால் அழிக்கமுடியாதவையா அல்லது... கவிஞர் வைரமுத்துவின் பாடல்கள் சிறந்தனவையா....

என்னைப்பொருத்து கவிப்பேரரசு என்ற பெயர் கவிஞர் கண்ணதாசன் ஒருவருக்கு மட்டுமே சேரவேண்டும். காரணம் அவரின் பாடல்கள் இன்றும் எம் நினைவுகளில் நிற்கின்றன. ஆனால் கவிஞர் வைரமுத்துவினதோ நினைவில் இல்லவே இல்லை....

உதாரணத்துக்கு

ஆடிய ஆட்டமென்ன?

பேசிய வார்த்தை என்ன?

தேடிய செல்வமென்ன?

திரண்டதோர் சுற்றமென்ன?

கூடுவிட்டு ஆவிபோனால்

கூடவே வருவதென்ன...?

வீடுவரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம்

ஆயிரத்தில் நாட்டம்

கூடிவரும் கூட்டம்

கொள்ளிவரை வருமா? (வீடு)

தொட்டிலுக்கு அன்னை

கட்டிலுக்குக் கன்னி

பட்டினிக்குத் தீனி

கெட்ட பின்பு ஞானி! (வீடு)

சென்றவனைக் கேட்டால்

வந்துவிடு என்பான்

வந்தவனைக் கேட்டால்

சென்று விடு என்பான்! (வீடு)

விட்டுவிடும் ஆவி

பட்டுவிடும் மேனி

சுட்டுவிடும் நெருப்பு

சூனியத்தில் நிலைப்பு! (வீடு)

அதேநேரம்

கவிஞர் வைரமுத்து ஒரு தமிழ் உணர்வாளர், அவரின் மனைவி தமிழ் மொழி வளர பாடுபடும் ஒரு தமிழ்ப்பெண் தமிழ்ப்பேராசிரியை, அவர் மகன் தமிழில் காதல் கொள்ளும் வகையில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளான், உலக தமிழர்கள் அவர் குடும்பத்திடம் பாடம் படிக்கவேண்டிய ஒரு பல்கலைக்கழகம். இப்படியான குடும்பங்களையே நாம் நல்லதொருகுடும்பம் பல்கலைக்கழகம் என்று கூறுவது வழக்கம். தமிழ் மொழி வளர பாடுபடுகிறது. அதே நேரம் வைரமுத்துவின் தமிழீழம் மீதான பாசம் என்னை அவர்முன் தலைகுணிந்துவணங்கவைக்கும். அப்படி ஒரு தமிழீழ உணர்வாளர்.

ஆனாலும் தமிழ் மொழிப்பாடல்கள் என்று வரும் போது, நான் தமிழ் உணர்வுகள், கற்பனைகள் என்று போகும் ஒரு கட்டத்தில், எனக்கு வைரமுத்துவின் பல பாடல்கள் அவ்வளவாக விளங்குவதில்லை, மனதில் பதியும் வகையில் எழுதப்படவில்லை. ஆனாலும் பல பாடல்கள் தனிச்சுவை கொண்டவை. இசையிற்கு ஏற்றாற்போல பாடல் எழுதும் ஒரு காலத்தின் கோலத்தில் கவிப்பேரரசு கண்ணதாசன் இன்று வாழ்ந்திருந்தாலும், இதே நிலைமைதான்.

இங்கே இந்த திரியில் நான் அலசப்போவது, தமிழில் பாடல் எழுதி, மனித மனத்தினை கொள்ளைகொண்ட பாடல்கள், கவிஞர் கண்ணதாசனுடையதா, அல்லது வாலியினுடையதா அல்லது வைரமுத்துவினுடையதா என்று தான்.

இந்திரன் தோட்டது முன்திரிக் கொட்டையெ மன்மத நாட்டின் நாட்டுக் கட்டையெ" என்பது

மேலே நான் சுட்டிக்காட்டிய ஒரு வைரமுத்துவின் பாடல்வரிகளில் என்ன உள்ளது. ஆனாலும் அதில் இரண்டுவிதமான கருத்துக்கோலம்கள் கொண்டிருக்கின்றன. ஆனால் கண்ணதாசன் பாடல்களோ, வாழ்க்கையில் துன்பம் வரும் போது ஒரு ஒத்தடம் போடும் அளவுக்கு ஒரு மருந்தாக இருக்கிறது. அப்படியான் பாடல்களை வைரமுத்து எழுதவில்லை என்பதே என் கவலை.

எங்கே இங்கே நாம் அவர் எழுதிய சில பாடல்களை பார்ப்போம். கண்ணதாசன் எழுதிய பாடல்களையும் பார்ப்போம். விமர்சிப்போம். தமிழ் மொழி மேல் பற்றுக்கொண்ட இருவருக்கும் எனது பணிவான வணக்கத்துடம் தொடங்குவோம் அலசுவோம் ஒவ்வொரு பாடல்வரிகளாக...

இந்திரன் தோட்டது முன்திரிக் கொட்டையெ மன்மத நாட்டின் நாட்டுக் கட்டையெ" என்பது

இங்கே இந்திரன் என்ற தேவலோக அரசனினிடம் இருக்கும் ஒரு முந்திரிக்கொட்டை...இது ஒரு ஆபாசமான ஒரு உவமைப்பொருள்.....

மன்மத நாடு...என்பது அழகிய ஒரு மேனிகளைக்கொண்ட ஒரு நாட்டில் ஒரு அழிகிய பெண்ணை ஒரு கட்டை என்கிறார். ஏன் அவருக்கு வேறு உவமை இங்கே வரவில்லை.

மன்மத நாட்டின் மன்மத கிளியே என்று ஏன் எழுதியிருக்கக்கூடாது....இந்தி

Link to comment
Share on other sites

இது ஒரு விவாதத்திற்குரிய விடயம். கண்ணதாசன் வாலி வைரமுத்து இவர்களனைவரையும் சினிமாப் பாடல்கள் என்ற வட்டத்திற்குள் வைத்து வாதிடுவதென்றால் அது சிரமமற்ற விடயம்.

ஒரு கவிஞனின் சூழ்நிலையை வைத்தே அவனது கவித்தன்மையும் அமையும். கண்ணதாசனின் சினிமாச் சூழ்நிலை, வைரமுத்துவின் சினிமாச் சூழ்நிலை இரண்டும் வேறுபட்டதாகவுள்ளது. சினிமா என்ற வட்டத்திற்குள் நின்றால் எல்லோருமே வியாபாரக் கவிஞர்கள்தான். ஆனாலும் கண்ணதாசனின் பாடல்வரிகள் நிலைத்துநிற்பதற்கு அன்றைய காலச் சினிமாச் சூழல்தான் காரணம். உதாரணமாக கண்ணதாசனுக்கு முந்திய காலகட்டச் சினிமாப் பாடல்களை எடுத்துக்கொண்டால் அவையும் தரமானவ. ஒருவகையில் சினிமாப் பாடல்கள் சினிமா இலக்கியம் என்ற வரையறைக்குள் இருந்த சந்தர்ப்பம் இன்றைய சினிமாச் சூழலினால் இல்லாமற் போய்விட்டது.

கண்ணதாசன் வாலி வைரமுத்து பாடல்களுடன் மீண்டும் சந்திப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கவி அரசர்களிளும் பார்க்க மதிபுகுரிய புதுவை இரத்தினதுறை மற்றும் கவி போராளி வீரா,அண்ணன் காசிஆனந்தன் போன்றோர்கள் தான் தற்போதைய காலகட்டத்தில் முக்கியமானவர்கள்,சினிமா என்று எடுக்கும் போது கவிஞர் வீராவை எடுத்து கொள்ளளாம்.

Link to comment
Share on other sites

இந்த கவி அரசர்களிளும் பார்க்க மதிபுகுரிய புதுவை இரத்தினதுறை மற்றும் கவி போராளி வீரா,அண்ணன் காசிஆனந்தன் போன்றோர்கள் தான் தற்போதைய காலகட்டத்தில் முக்கியமானவர்கள்,சினிமா என்று எடுக்கும் போது கவிஞர் வீராவை எடுத்து கொள்ளளாம்.

நீங்கள் சொல்வது நிஜம்தான். காசியானந்தன், புதுவை, வீரா இவர்களுடன் எப்படி வியாபார நோக்கங்கொண்ட சினிமாக் கவிஞர்களை ஒப்பிடுவது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.