Jump to content

இளையராஜாவின் இனிய கானம்


Recommended Posts

யாழ் கள இசை ரசிகர்களே.. இளையராஜாவின் இசை கேட்டு வளர்ந்த என்னைப்போன்ற உள்ளங்களுக்காக இந்த இணைப்பைத் தொடங்குகிறேன். அவரின் இசையில் வெளி வந்த பாடல்கள் பல நூறு. ஒவ்வொன்றும் தேனாறு. நேரடியாகப் பாடலை இணைக்கும் போது, பெரும்பாலும் படத்தில் கவனம் சிதறி விடுவதால் ஒரு மேடைப்பாடலை இணைக்கிறேன். பாடல்களை இணைப்பதோடு, அதிலுள்ள சிறப்பம்சங்களை அலசும் ஒரு வாய்ப்பாக இத்திரியைப் பயன்படுத்துவோம். முதலில்,

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

ஜனனி ஜனனி! ஜகம் நீ, அகம் நீ!

இளையராஜாவின் மாஸ்டர்பீஸ் என்று இதைச் சொல்லலாமா?

தாய் மூகாம்பிகை திரைப்படத்தில், கவிஞர் வாலி எழுதிய அருமையான பாடல்.

அதை இசைஞானி தன் "கரகர"ப்ரியா குரலில், உள்ளம் உருகப் பாடுகிறார். :-)

கல்யாணியைப் பற்றி கல்யாணி ராகத்தில்.

இளையராஜாவுடன், சுரேந்தர் மற்றும் தீபன் சக்ரவர்த்தி உடன் பாடுகிறார்கள்!

இந்து மதம் தழைக்க வந்த இரு பெரும் பேராசிரியர்கள் -

ஜகத் குருக்கள் - ஆச்சாரியர்கள் ஸ்ரீ ராமானுசர், ஆதி சங்கரர்

- இருவரின் அவதார நாளும் இன்று தான்! சித்திரைத் திருவாதிரை நன்னாள்! (Apr 22, 2007)

இப்படி, பிறந்த நாளே ஒன்றாகி, சைவமும் வைணவமும் ஒன்றாகத் தழைப்பது எவ்வளவு இனிய காட்சி!

ஆதிசங்கரர் எழுதிய செளந்தர்ய லஹரி தோத்திரத்தின் முதல் சுலோகத்துடன் பாடல் துவங்குகிறது!

(சிவ சக்த்யா யுக்தோ

யதி பவதி சக்த ப்ரபவிதும்

நசே தேவம் தேவோ ந கலு

குசல ஸ்பந்தி துமபி

அதஸ் த்வாம் ஆராத்யாம்

ஹரி ஹர விரிஞ்சாதி பிர் அபி

பிரணந்தும் ஸ்தோதும் வா

கதாம் அக்ருத புண்யப் ப்ரபவதீ)

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஜகத்காரணி நீ பரிபூரணி நீ

ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்

சடை வார் குழலும் விடை வாகனமும்

கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே

நின்ற நாயகியே இட பாகத்திலே

ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ

ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ

ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஜகத்காரணி நீ பரிபூரணி நீ

சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்

ஷண் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்

அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்

தொழும்பூங் கழலே மலை மாமகளே

அலைமாமகள் நீ கலைமாமகள் நீ

அலைமாமகள் நீ கலைமாமகள் நீ

அலைமாமகள் நீ கலைமாமகள் நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஜகத்காரணி நீ பரிபூரணி நீ

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த

லிங்க ரூபிணியே மூகாம்பிகையே

பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்

பணிந்தேத் துவதும் மணி நேத்திரங்கள்

சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ

சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ

சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஜகத்காரணி நீ பரிபூரணி நீ

ஒவ்வொரு கச்சேரியிலும், ராஜா

ஜனனி ஜனனி என்று பாடித் தான் துவக்குகிறார்!

இதோ, அவர் கச்சேரி ஒன்றிலிருந்து!

அப்பாவும், மகனும் சேர்ந்து பாடுகிறார்கள்.

http://ammanpaattu.blogspot.com/2007/04/blog-post_22.html

Link to comment
Share on other sites

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

லா லாலா லாலலா லா லாலா லாலலா

லாலாலலா லாலாலலா

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்

திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்

ஒரு முறையேனும் ஹா ஹா

திருமுகம் காணும் ஹெ ஹெ

வரம் தரம் வேண்டும் ஹோ ஹோ

எனக்கது போதும் ஹெ

எனைச்சேர ஆஆஆஆஆஆஆஆஆஆ

எனைச்சேர எதிர்பார்த்தேன்

முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

லலலலாலலா லலலலாலலா

லலலலலலலலலலலலலலலல லலலலா லலலலா

லால லால லால லா

மலர் போன்ற பாதம் நடக்கின்ற போதும்

நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்

இடையினிலாடும் ஹா ஹா

உடையென நானும் ஹெ ஹெ

இணை பிரியாமல் ஹோ ஹோ

துணை வர வேண்டும்.. ஹெ..

உனக்காக ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

உனக்காக பனிக் காற்றை

தினம் தூது போக வேண்டினேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

வா வென்ன்ன்ன்னிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

http://tamil-songs-hits.blogspot.com/2007/...-post_8868.html

Link to comment
Share on other sites

ஜனனி ஜனனி! ஜகம் நீ, அகம் நீ!

இளையராஜாவின் மாஸ்டர்பீஸ் என்று இதைச் சொல்லலாமா?

தாய் மூகாம்பிகை திரைப்படத்தில், கவிஞர் வாலி எழுதிய அருமையான பாடல்.

அதை இசைஞானி தன் "கரகர"ப்ரியா குரலில், உள்ளம் உருகப் பாடுகிறார். :-)

:unsure::(

மிகவும் அற்புதமான பாடல்.. எனக்கு இளையராஜாவின் பாடல்களில் வரும் இடையீட்டு இசைதான் மிகவும் பிடிக்கும்.. ஒரு ராகத்தை எடுத்து அதை விட்டு சில இடங்களில் வெளியேறி மீண்டும் அதை ராகத்தில் சேர்க்கும் அழகே அழகு.

இங்கே இன்னுமொரு மேடைப் பாடல்..

Link to comment
Share on other sites

இளைய நிலா பொழிகிறதே

இதயம் வரை நனைகிறதே

உலாப் போகும் மேகம்

கனாக் காணுமே விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே

இதயம் வரை நனைகிறதே

உலாப் போகும் மேகம்

கனாக் காணுமே விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே

இதயம் வரை நனைகிறதே

வரும் வழியில் பனி மழையில்

பருவ நிலா தினம் நனையும்

முகிலெடுத்து முகம் துடைத்து

விடியும் வரை நடை பழகும்

வரும் வழியில் பனி மழையில்

பருவ நிலா தினம் நனையும்

முகிலெடுத்து முகம் துடைத்து

விடியும் வரை நடை பழகும்

வான வீதியில் மேக ஊர்வலம்

காணும் போதிலே ஆறுதல் தரும்

பருவ மகள் விழிகளிலே கனவு வரும்

இளைய நிலா பொழிகிறதே

உலாப் போகும் மேகம் கனாக் காணுமே

விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே

முகிலினங்கள் அலைகிறதே

முகவரிகள் தொலைந்தனவோ

முகவரிகள் தவறியதால்

அழுதிடுமோ அது மழையோ

முகிலினங்கள் அலைகிறதே

முகவரிகள் தொலைந்தனவோ

முகவரிகள் தவறியதால்

அழுதிடுமோ அது மழையோ

நீல வானிலே வெள்ளி ஓடைகள்

போடுகின்றதே என்ன ஜாடைகள்

விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

இளைய நிலா பொழிகிறதே

இதயம் வரை நனைகிறதே

உலாப் போகும் மேகம்

கனாக் காணுமே

விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே

http://tamil-songs-hits.blogspot.com/2007/...-post_3206.html

Link to comment
Share on other sites

படம்:அரங்கேற்ற வேளை

பாடியவர்:K.J. ஜேசுதாஸ்

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண்: தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் பூவாரம்

சூடிக்கொண்டு தலை வாசல் வந்ததின்று

பெண்: தென்பாண்டி மன்னன் என்று தினம் மேனி வண்ணம் கண்டு

மாடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று

ஆண்: இளநேரம் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்

பெண்: கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்

ஆண்: கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட

பெண்: நடு சாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

பெண்: தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்

ஆதாதி தேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்

ஆண்: வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்

கேளாத வேணு காணம் கிளி பேச்சை கூட்டக் கூடும்

பெண்: அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன?

ஆண்: அலங்கார தேவ தேவி அவதாரம் செய்வதென்ன

பெண்: இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட

ஆண்: சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

http://tamil-songs-hits.blogspot.com/2007/...-post_1423.html

Link to comment
Share on other sites

இனி இளையராஜாவின் மெட்டுக்களில் உள்ள மெய்சிலிர்க்க வைக்கும் சுரக் கோர்ப்பு உத்திகள். பெரும்பாலான ராஜாவின் பாடல்களின் ஆரம்பம் சாதாரணமானதாகவே இருக்கும். அதாவது பல்லவி அமைப்பு. இது எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் மெட்டமைப்பிலிருந்து மாறுபட்டது. எம்.எஸ்.வி. அவர்களின் மெட்டமைப்பு பல்லவியிலேயே மனதை ஈர்க்கச் செய்யும். உதாரணமாக,

(பல்லவி)

விழியே.. கதையெழுது..

கண்ணீரில்.. எழுதாதே..

இதைக் கேட்கும்போதே மெய்சிலிர்க்கும்.

ஆனால் இளையராஜா மேற்சொன்னதுபோல சாதாரணமாகவே ஒரு பாடலை ஆரம்பிப்பார். அதாவது பல்லவி சாதாரணமாக இருக்கும். பின்னர் பல்லவி முடிந்ததும் வரும் இடயீட்டு இசையில் தனது கவனத்தைச் செலுத்தி பாடலுக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துவார். பின்பு வருவது சரணம். அதில் பலவிதமான வித்தியாசமான அதே சமயம் இனிமையான சுர வரிசைகளை இனிய சந்தத்தில் குழைத்து மெய்சில்லிடச் செய்துவிடுவார். இது போதாதென்று, இரண்டாவது இடையீட்டு இசையில் ஒரு இசைப்பிரவாகத்தையே ஏற்படுத்திவிடுவார்.

இப்போது ராஜாவின் ஒரு புகழ்பெற்ற இனிய பாடலைக் கவனிப்போம். இப்பாடலின் ஒரு சரணத்தை இங்கே தருகிறேன். அதில் பச்சை நிறத்தில் உள்ள வரிகளின் சுர வரிசை மற்றும் அதன் சந்தக்கட்டு மெய்சிலிர்க்க வைப்பவை.. அதாவது என்னுடைய பார்வையில். இப்போது பாடல்.

பாடல்: தாழம்பூவே.. வாசம் வீசு..

படம்: கை கொடுக்கும் கை

(சரணம்)

நடந்தால் காய்ஞ்ச நிலம் செழிக்கும்..

சிரிச்சால் கோயில்மணி நடிக்கும்.. கண்ட கண்ணுபடும்

பேசும் போது தாயைப் பார்த்தேன்..

தோளில் தூங்கும் பிள்ளை ஆனேன்..

நெஞ்சத்திலே... ஏ..ஏ..ஏ..ஏ..

நெஞ்சத்திலே ஊஞ்சல் கட்டி ஆரிரரோ பாடவோ..

Link to comment
Share on other sites

தனிக்காட்டு ராஜா படத்தில் ரஜினியும் ஸ்ரீதேவியும் நடித்திருக்கிறார்கள் என்பதும் அதில் (வழக்கம்போல) பாலுவும் ஜானகியும் தேன்சிந்தும் குரல்களோடு பாடியிருக்கிறார்கள் என்பதும் தமிழ்கூறும் நல்லுலகு அறிந்ததே! ஆதலால் அதிகம் அறுக்காமல் அமைதியாக அந்தப் பாடலை (எத்தனை 'அ'!) இங்கே பதிவு செய்கிறேன்.

சரணம் முடிகையில் ஒருவர் கீழிருந்து மேல் ஸ்தாயிக்கு தன்னானன்னானன்னானன்னான

என்று பாட இன்னொருவர் கூடவே மேல் ஸ்தாயியிலிருந்து கீழே அதைப் பாடுவது கேட்பதற்குச் சுகமாக இருக்கும். ராஜாவின் மெட்டு அல்லவா? வாலியின் வரிகள் இனிமை! .

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே

சந்தோஷப் பாட்டே வாவா

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே

சந்தோஷப் பாட்டே வாவா

காதோடுதான் நீ பாடும் ஓசை

நீங்காத ஆசை ஓ ஓ

நீங்காத ஆசை

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே

சந்தோஷப் பாட்டே வாவா

காதோடுதான் நீ பாடும் ஓசை

நீங்காத ஆசை ஹோய் ஹோய்

நீங்காத ஆசை

நீர் வேண்டும் பூமியில் தானனன பாயும் நதியே னனனன

நீங்காமல் தோள்களில் னனனன சாயும் ரதியே லலலல

பூலோகம் தெய்வீகம்

பூலோகம் மறைய மறைய

தெய்வீகம் தெரியத் தெரிய

வைபோகம்தான்...

தன்னானன்னானன்னானன்னான

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே

சந்தோஷப் பாட்டே வாவா

காதோடுதான் நீ பாடும் ஓசை

நீங்காத ஆசை ஓ ஓ

நீங்காத ஆசை

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே

சந்தோஷப் பாட்டே வாவா

கோபாலன் சாய்வதோ னனனன கோதை மடியில் னனனன

பூபாணம் பாய்வதோ னனனன பூவை மனதில் னனனன

பூங்காற்றும்

சூடேற்றும்

பூங்காற்றும் தவழத் தவழ

சூடேற்றும் தழுவத் தழுவ

ஏகாந்தம்தான்...

தன்னானன்னானன்னானன்னான

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே

சந்தோஷப் பாட்டே வாவா

காதோடுதான் நீ பாடும் ஓசை

நீங்காத ஆசை ஓ ஓ

நீங்காத ஆசை

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே

சந்தோஷப் பாட்டே வாவா

http://www.youtube.com/watch?v=HIkIMK3FcHU

Link to comment
Share on other sites

சரணம் முடிகையில் ஒருவர் கீழிருந்து மேல் ஸ்தாயிக்கு தன்னானன்னானன்னானன்னான

என்று பாட இன்னொருவர் கூடவே மேல் ஸ்தாயியிலிருந்து கீழே அதைப் பாடுவது கேட்பதற்குச் சுகமாக இருக்கும். ராஜாவின் மெட்டு அல்லவா? வாலியின் வரிகள் இனிமை! .

இது counterpoint அமைப்பைச் சேர்ந்தது. இரு வேறு மெட்டுக்களில் இருவர் ஒரே நேரத்தில் பாடும் இசை முறை இதுவாகும். ஒரு மெட்டை விட்டுவிட்டு மற்றதை மட்டும் பாடினால் அது வேறுமாதிரியாக இருக்கும்.

கீழே இணைக்கப்பட்டுள்ள "பூ மாலையே" என்ற இனிய பாடலின் சரணத்தில் இளையராஜாவும் எஸ்.ஜானகியும் ஒரே நேரத்தில் பாடுவார்கள். இதுவும் counterpoint வகையைச் சேர்ந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளசுவின் பாடல்கள் கேட்டு வளர்ந்தவர்களில் நானும் ஒருவன்.டிஸ்கோ ஹிந்தி பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்த எம்மவரை கிராமியப்பக்கம் திருப்பிய பெருமை இசைஞானியையே சாரும்.இவருடைய இசையை வைத்தே இன்றைய ஒருசில வானொலிகளும், தொலைக்காட்சிகளும் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கின்றன. :lol:

Link to comment
Share on other sites

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

'காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்'...ஏனோ இப்பாடல் எப்பொழுது கேட்டாலும் மனதில் ஒரு வித மகிழ்ச்சியும், தவிப்பும் ஏற்படுகிறது. உண்மையில் எனக்கு இப்பாடல் மிகவும் பிடிக்கும்...ரஜினி சார் ரொம்ப சிம்பிளாக இருப்பார்... அவரின் இயல்பான நடிப்பும் இப்பாடலில் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்பாடலை யார் கேட்டாலும் காதலிக்க வேண்டும் என தோணும்..எஸ்.பி.பி சாரும் அவ்வளவு அருமையாக பாடியிருப்பார்.ப்பா..என்ன ஒரு குரல்வளம்..இசையும் தான்...

எனக்கு பிடித்த வரிகள்:

நேற்று போல் இன்று இல்லை..இன்று போல் நாளை இல்லை.

அன்பிலே வாழும் நெஞ்சில்..ஆயிரம் பாடலே

ஒன்று தான் எண்ணம் என்றால்..உறவு தான் ராகமே..

எண்ணம் யாவும் சொல்லவா..

என்னை நான் தேடி தேடி உன்னிடம் கண்டு கொண்டேன்

பாடல்: காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்

படம்: தம்பிக்கு எந்த ஊரு

பாடியவர்: எஸ். பி. பாலசுப்புரமணியம்

காதலின் தீபம் ஒன்று...

காதலின் தீபம் ஒன்று

ஏற்றினாளே என் நெஞ்சில்

ஊடலில் வந்த சொந்தம்

கூடலில் கண்ட இன்பம்

மயக்கம் என்ன

காதல் வாழ்க!

நேற்று போல் இன்று இல்லை

இன்று போல் நாளை இல்லை

அன்பிலே வாழும் நெஞ்சில்

ஆயிரம் பாடலே

ஒன்றுதான் எண்ணம் என்றால்

உறவு தான் ராகமே

எண்ணம் யாவும் சொல்லவா!

(காதலின் தீபம் ஒன்று...)

என்னை நான் தேடி தேடி

உன்னிடம் கண்டுக் கொண்டேன்

பொன்னிலே பூவை அள்ளும்

புன்னகை மின்னுதே

கண்ணிலே காந்தம் வைத்த

கவிதையை பாடுதே

அன்பே இன்பம் சொல்ல வா!

(காதலின் தீபம் ஒன்று...)

Link to comment
Share on other sites

மெளனராகம் (1986) படம் மதுரை சுகப்ரியா தியேட்டரில் 250 நாட்கள் ஓடியது என்று நினைக்கிறேன். படம் வெளியிடப்பட்ட போது ஓரிரு வாரங்கள் கூட்டமில்லாதிருந்து பின்பு பிரபலமாகி மக்கள் புற்றீசலாய் வந்து பார்க்கத் தொடங்கி பின்பு நன்றாக ஓடி எல்லாருக்கும் லாபம் சம்பாதித்துக் கொடுத்தது.

எல்லாருக்கும் காதல் நிறைவேறிவிடுவதில்லை - உண்மையான காதலாய் இருந்தாலும். சில நேரங்களில் தவிர்க்க இயலாத சந்தர்ப்பங்களில் காதலித்தவரை மணம் செய்து கொள்ள முடியாமல் போய் விடலாம். "மனசுல ஒருத்தரை நெனச்சுட்டு படுக்கையில் இன்னொருத்தரோடு என்னால இருக்க முடியாது" என்று உணர்வுப் பூர்வமான வசனங்கள் பேசி கண்ணீரும் கம்பலையுமாய் வாழ்வை நரகமாக்கிக் கொள்பவர்கள் எத்தனையோ பேர். திருமணம் என்று ஒன்று நடைபெற்றதும் நல்ல கணவன் மனைவியாய் ஒருவருக்கொருவர் உண்மையான அன்பு செலுத்தி பழையனவற்றை மறந்து வாழ்க்கையை நல்லபடியாய் நடத்திச் செல்வது மிகவும் சிலர்.

நிம்மதியான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுதல். 'நம் துணைவரிடம் இல்லாதது எது' என்று பட்டியல் போட ஆரம்பித்தால் பிறகு நிம்மதி காணாமல் போய்விடும். One thing is always better than the other - என்பது உலக நியதி. ஆக எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்திக்கொண்டு ஏமாற்றங்களைச் சந்திக்காமல், ஏறத்தாழ்வுகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை நடத்திச் செல்லுதல் உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம். "கிட்டாதாயின் வெட்டென மற" என்று எதற்கோ சொல்லி வைத்திருப்பதை இதற்குப் பொருத்திக் கொள்கிறேன்.

மெளனராகம் இம்மாதிரியான வாழ்க்கைச் சிக்கலை அழகாக, அதிகம் சத்தம் போடாமல் மெளனமாகக் காட்டி, அந்தச் சிக்கல் எப்படி விடுபடுகிறது என்பதையும் அழகாகக் காட்டியிருக்கிறது. கார்த்திக்கின் 'மிஸ்டர் சந்திரமெளலி'யை ரசிக்காதவர்களே இருக்கமுடியாது. சிலகாட்சிகள் வந்தாலும் எல்லாரது உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பாத்திரம் கார்த்திக்கினுடையது. ரேவதி அழகாக, பாந்தமாகச் செய்திருக்கிறார். மூன்றாவது கையாக மைக்கைப் பிடித்துக்கொண்டு நிரந்தரப் புன்னகையுடன் வலம்வந்த மோகனிடமிருந்து புன்னகையையும், மைக்கையும் பிடுங்கிக்கொண்டு நடிக்க வைத்திருக்கிறார் மணிரத்னம். அமைதியான அன்பு நிறைந்த கணவன் என்பதற்கு பாந்தமான நடிப்பை அலட்டிக்கொள்ளாமல் தந்திருப்பார் மோகன். அவர் இந்தப் படத்தில் புன்னகைத்ததே அபூர்வமான காட்சிகளில் மட்டும்.

கடைசிவரை காதலைச் சொல்லாமலே பிரிந்துவிடுவார்களோ என்று விவாகரத்து பத்திரம் வரை கொண்டு சென்று நம்மை நகம் கடிக்க வைத்து பிறகு சுபமாக முடித்திருப்பார் மணிரத்னம். ஹீரோ என்பதால் சோப்ளாங்கியாக ஒரு ஆக் ஷனும் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதாலோ என்னவோ கடைசியில் மோகனை ரயிலைத் துரத்திப் பிடிக்கச் செய்திருப்பார்.

ரேவதி சோகமாக வந்தாலும் திருமணமாகி மோகனை ஏற்காமல் இருந்தாலும் நடுநடுவே சுவாரஸ்யமான காட்சிகள் உண்டு. அந்தச் சர்தார்ஜிக்கு ரேவதி தமிழ் கற்றுக்கொடுக்கும் காட்சியைச் சொல்கிறேன். "போடா டேய்" என்று அவர் வி.கே.ராமசாமியை "வாழ்த்துவது" நல்ல நகைச்சுவையான காட்சி.

"நீங்க தொட்டா மேல கம்பளிப் பூச்சி ஊர்ற மாரி இருக்கு" என்ற சுருக்கென்ற வசனங்களும் உண்டு.

இம்மாதிரி மெதுவடை.. ஸாரி.. மெதுவகைப் படங்களைப் பார்க்க ரசிகர்களை இருக்கைகளோடு அழுத்தி வைத்திருப்பது கச்சிதமான திரைக்கதையும் சுவாரஸ்யமான காட்சியமைப்புகளும். முதுகெலும்பாக இசை. இசைஞானி முதுகெலும்பைத் தந்திருக்கிறார்.

மனம் ஒத்து வாழாத வாழ்க்கை நிலையை விவரிக்கும் இந்த மெளனப் பாடல் (யாரும் வாயசைக்க மாட்டார்கள்) பாலுவின் குரலில் உன்னதமாக ஒலிக்கிறது. உச்ச ஸ்தாயியில் ஆரம்ப ஆலாபனையை பாலு துவக்கும் விதமே அலாதி.

மாஸ்ட்ரோவின் இன்னிசை நிகழ்ச்சியை சில மாதங்களுக்கு முன்பு ஜெயா டிவியில் காட்டினார்கள். அந்த ஒளிக்கோப்பை போனவாரம் பார்த்தேன். பாலு இந்தப் பாடலை அட்டகாசமாகப் பாடியிருப்பார். இளையராஜாவைப் பார்த்து "கண்ணா... என் கண்ணா.." என்று மாற்றிப் பாடி ரசிக்க வைத்தார். துல்லியமான அந்தக் குரலைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

கேட்கையிலேயே மனதில் பலவித எண்ண அலைகளை எழுப்பும் பாடல் இது.

ஆ....ஆ....ஆ.....ஆ..ஹா..

ஆ....ஆ....ஆ.....ஆ....ஆ..

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ

அன்பே என் அன்பே

தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ

கண்ணே என் கண்ணே

பூபாளமே கூடாதெனும் வானம் உண்டோ சொல்

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ

அன்பே என் அன்பே

தாமரை மேலே நீர்த்துளி போல்

தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன

நண்பர்கள் போலே வாழ்வதற்கு

மாலையும் மேளமும் தேவையென்ன

சொந்தங்களே இல்லாமல்

பந்த பாசம் கொள்ளாமல்

பூவே உன் வாழ்க்கைதான் என்ன

சொல்..சொல்

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ

அன்பே என் அன்பே

மேடையைப் போலே வாழ்க்கையல்ல

நாடகம் ஆனதும் விலகிச் செல்ல

ஓடையைப் போலே உறவுமல்ல

பாதைகள் மாறியே பயணம் செல்ல

விண்ணோடுதான் உலாவும்

வெள்ளி வண்ண நிலாவும்

என்னோடு நீ வந்தால் என்ன

வா..வா

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ

அன்பே என் அன்பே

தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ

கண்ணே என் கண்ணே

பூபாளமே கூடாதெனும் வானம் உண்டோ சொல்

மன்றம் வந்த தென்றலுக்கு மன்றம் வர நெஞ்சமில்லையோ

அன்பே என் அன்பே

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

படம் : ராஜபார்வை

இசை : இளையராஜா

வரிகள் : வைரமுத்து

குரல் : S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி

----------------------------------------------------------

ஆ:

அந்தி மழை பொழிகிறது,

ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது!

இந்திரன் தோட்டத்து முந்திரியே!

மன்மத நாட்டுக்கு மந்திரியே!

(அந்தி)

பெ:

தேனில் வண்டு மூழ்கும்போது,....

தேனில் வண்டு மூழ்கும்போது,

பாவம் என்று வந்தாள் மாது!

நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்!

தண்ணீரில் மூழ்கி கொண்டே தாகம் என்பாய்!

ஆ:

தனிமையிலே, வெறுமையிலே,

எத்தனை நாளடி இள மயிலே?

கெட்டன இரவுகள்! சுட்டன கனவுகள்!

இமைகளும் சுமையடி இளமையிலே!

(அந்தி)

ஆ:

தேகம் யாவும் தீயின் தாகம்!

தாகம் தீர நீ தான் மேகம்!

கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது?

தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது!

பெ:

நெஞ்சு பொறு, கொஞ்சம் இரு,

தாவணி விசிறிகள் வீசுகிறேன்!

மன்மத அம்புகள் தைத்த இடங்களில்

சந்தனமாய் எனை பூசுகிறேன்!

(அந்தி)

பெ:

சிப்பியில் தப்பிய நித்திலமே,

ரகசிய ராத்திரி புத்தகமே!

(அந்தி)

Link to comment
Share on other sites

இளையராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட யுனிக் பாடகர் (இன்று வரை) ஜென்சியால் பாடப்பட்ட பாடல் இது.

என் வானிலே ஒரே வெண்ணிலா

காதல் மேகங்கள் கவிதைத் தாரகை

ஊர்வலம்...

(என் வானிலே)

நீரோடை போலவே என் பெண்மை

நீராட வந்ததே என் மென்மை

சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே

வார்த்தைகள் தேவையா...ஆஆஆஆ

(என் வானிலே)

நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்

நான் பாடும் கீதங்களுன் வண்ணம்

இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே

வெல்லங்கள் ஒன்றல்லவோ

(என் வானிலெ)

Link to comment
Share on other sites

இந்தப்பாடல் இசைஞானியால் இசை அமைக்கப்பட்டு கே ஜே ஜேசுதாஸால் பாடப்பட்டது.படம் மௌனம் சம்மதம்.பாடல்கள் வாலி.

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

நீதானே வான் நிலா

என்னோடு வா நிலா

[[

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

]]

தென்பாண்டிக் கூடலா

தேவாரப் பாடலா

தீராத ஊடலா

தேன் சிந்தும் கூடலா

என் அன்புக் காதலா

என்னாளும் கூடலா

பேரின்பம் நெய்யிலா

நீ தீண்டும் கையிலா

பார்ப்போமே ஆவலாய்

வா வா நிலா

[[

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

நீதானே வான் நிலா

என்னோடு வா நிலா

]]

உன் தேகம் தேக்கிலா

தேன் உந்தன் வாக்கிலா

உன் பார்வை தூண்டிலா

நான் கைதிக் கூண்டிலா

சங்கீதம் பாட்டிலா -

நீ பேசும் பேச்சிலா.

என் ஜீவன் என்னிலா

உன் பார்வை தன்னிலா

தேனூறும் ??

உன் சொல்லிலா

[[

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

]]

தேயாத வெண்ணிலா

உன் காதல் கண்ணிலா

ஆகாயம் மண்ணிலா

[[

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே நல்ல பாடல்கள்.

வெள்ளைப்புறா ஒன்று அப்படி என்று ஒரு பாட்டு இருக்குதானே? அதை கேட்கனும் போல இருக்கு.

Link to comment
Share on other sites

வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே

வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே

முதல் எழுது தாய் மொழியில் தலை எழுது யார் மொழியில்

என் வாழ்கை வான் வெளியில்

வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே

பாத சுவடு தேடி தேடி கால்கள் ஒய்ந்து பொனதே

நாளும் அழுது தீர்ததாலே கண்கள் எழை ஆனதே

தலைவிதி என்னும் வார்தை இன்று கவலைக்கு மருந்தானதே

பேதங்கள் வாழும் வரை சோகங்கள் காதல் கதை

கார்கால மலர்கலும் என்னோடு தள்ளாட

(வெள்ளை)

நீயும் நானும் சேர்ந்த போது கோடை மார்கழி

பிரிந்த பின்பு பூவும் கூட சுடுவதென்ன காதலி

துடுப்பிழந்தும் காதல் ஓடம் திசை மாறுண்டது பைங்கிளி

போகும் வழி நூறானதே கண்ணீரினால் சாறானதே

இல்லத உறவுக்கு நான் செய்யும் அபிகேஷெகம்

(வெள்ளை)

Link to comment
Share on other sites

பாடல்: குயிலே.. கவிக்குயிலே..

படம்: கவிக்குயில்

இசை: இளையராஜா

கிராமத்து இசையென்றாலே கிராமத்து ராஜாதான் என்று எல்லோருக்குமே தெரியும். ஏன் அப்படியென்பதற்கு ஒரு சிறிய உதாரணம் இந்தப் பாடல்.

முதலில் பாடலின் ஆரம்ப இசை. கண்ணை மூடிக்கொண்டு கேட்டீர்களேயானால், ஒரு கிராமத்தில் இருக்கும் உணர்வை சிறிது சிறிதாக மனக்கண் முன் கொண்டு வருகிறார் பாருங்கள். அது ஒரு இசைப் பிரவாகம். ஒவ்வொரு இடையீட்டு இசையும் ஒவ்வொரு முத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே

வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே

முதல் எழுது தாய் மொழியில் தலை எழுது யார் மொழியில்

என் வாழ்கை வான் வெளியில்

வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே

பாத சுவடு தேடி தேடி கால்கள் ஒய்ந்து பொனதே

நாளும் அழுது தீர்ததாலே கண்கள் எழை ஆனதே

தலைவிதி என்னும் வார்தை இன்று கவலைக்கு மருந்தானதே

பேதங்கள் வாழும் வரை சோகங்கள் காதல் கதை

கார்கால மலர்கலும் என்னோடு தள்ளாட

(வெள்ளை)

நீயும் நானும் சேர்ந்த போது கோடை மார்கழி

பிரிந்த பின்பு பூவும் கூட சுடுவதென்ன காதலி

துடுப்பிழந்தும் காதல் ஓடம் திசை மாறுண்டது பைங்கிளி

போகும் வழி நூறானதே கண்ணீரினால் சாறானதே

இல்லத உறவுக்கு நான் செய்யும் அபிகேஷெகம்

(வெள்ளை)

பாடலுக்கு நன்றி

Link to comment
Share on other sites

இளையராஜாவின் பெருமையோ பெருமை. நீங்கள் கூறும்போது நன்றாகத்தான் இருக்கிறது.

வைரமுத்து இளையராஜாவின் இசையில் பாடல்களை எழுதும்போது பல அருமையான பாடல்கள் வந்தது. அவர்களுக்கடையில் முறுகல் வந்தபோது

நண்பர் குறிப்பிட்ட அந்தி மழை பாடல் இளையராஜவினால் விமர்சிக்கப் பட்டது.

குருடன் ஒருவன் பாடுவதாக அந்தப் பாடல் இடம் பெற்றது. இளையராஜா ஒரு

மேடையில் இந்தக் காலத்தில் சிலர் பாட்டெழுதுகிறார்கள்

அந்திமழை பொழிகிறது. ஒவ்வொரு துளியிலும் உன்முகம் தெரிகிறது. குருடனுக்கு எப்படி ஐயா ஒவ்வொரு துளியிலும் முகம் தெரியும் என்று . ஆமாம் எப்படி தெரியும். அதை சொன்னவன் மூடன் என்றால். அதை ஏற்றுக்கொண்டு இசையமைத்தவன்.....................

இது இளையராஜவின் பெருமைகளில் ஒன்று

Link to comment
Share on other sites

மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குதானே

நாளை எண்ணி நான் காதிருன்தஎன் மாமன் உனக்குதானே

போவோடு ஒஅஓஅஒஅ தேனாட

தன்னோடு ஒஅஓஅஒஅ நீயாடு..ஓ..ஓ..

(மாசி)

ஆசை நூறாச்சு போங்க நிலவு வந்தாச்சு வாங்க

நெருங்க நெருங்க பொறுங்க பொறுங்க ஓகொ…கோ….

ஆ ஆசை நான் கொண்டு வந்தால் அள்ளித் தேன்கொள்ள வந்தாள்

மயங்கி கிறங்கி கிறங்கி உறங்க ஓகொ…கோ…

வெப்பம் படருது படருது

வெப்பம் வளருது வளருது

கொட்டும் பனியிலா பனியிலா

ஒட்டும் உறவிலே உறவிலே

ஓ..ஓ..ஒக்..ஒக்..

(மாசி)

காமலீலா வினோதம் காதல் கவிதா விலாசம்

படித்துப் படித்து எடுக்க எடுக்க ஓகோ கோ..

ஆசை ஆகா பிரமாதம் மோகக் கவிதாப் பிரவாகம்

தொடுத்து தொடுத்து முடிக்க முடிக்க ஓகொ..கோ..

கொடிதான் தவழுது தவழுது

போப்போல் சிரிக்குது சிரிக்குது

உறவும் நெருங்குது நெருங்குது

உலகம் மயங்குது உறங்குது ஒஅஒஅஒஅ…

ஓ..ஓ..ஒக்..ஒக்..

(மாசி)

மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குதானே

நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குதானே

பூ வோடு ஒஅஓஅஒஅ தேனோட

தன்னோடு ஒஅஓஅஒஅ நேயாடு..ஓ..ஓ..

(மாசி)

ஆசை நூறாச்சு போங்க நிலவு வந்தாச்சு வாங்க

நெருங்க நெருங்க பொறுங்க பொறுங்க ஓகொ…கோ….

ஆ ஆசை நான் கொண்டு வந்தால் அள்ளித் தேன்கொள்ள வந்தாள்

மயங்கி கிறங்கி கிறங்கி உறங்க ஓகொ…கோ…

வெப்பம் படருது படருது

வெப்பம் வளருது வளருது

கொட்டும் பனியிலே பனியிலே

ஒட்டும் உறவிலே உறவிலே

ஓ..ஓ..ஒ…

மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குதானே

நாளை எண்ணி நான் காதிருந்தேன் மாமன் உனக்குதானே

பூ வோடு ஒஅஓஅஒஅ தேனாட

தன்னோடு ஒஅஓஅஒஅ நேயாடு..ஓ..ஓ..

(மாசி)

ஆசை நூறாச்சு போங்க நிலவு வந்தாச்சு வாங்க

நெருங்க நெருங்க பொறுங்கபொறுங்க ஓகோ…கோ….

ஆ ஆசை நான் கொண்டு வந்தால் அள்ளித் தேன்கொள்ள வந்தாள்

மயங்கி கிறங்கி கிறங்கி உறங்க ஓகோ…கோ…

வெப்பம் படருது படருது

வெப்பம் வளருது வளருது

கொட்டும் பனியிலே பனியிலே

ஒட்டும் உறவிலே உறவிலே

ஓ..ஓ..ஒ..ஒ.

(மாசி)

காமலீலா வினோதம் காதல் கவிதா விலாசம்

படித்துப் படித்து எடுக்க எடுக்க ஓகோ கோ..

ஆசை ஆகா பிரமாதம் மோகக் கவிதாப் பிரவாகம்

தொடுதுத் தொடுத்து முடிக்க முடிக்க ஓகொ..கோ..

கொடிதான் தவழுது தவழுது

பூப்போல் சிரிக்குது சிரிக்குது

உறவும் நெருங்குது நெருங்குது

உலகம் மயங்குது உறங்குது ஒஅஒஅஒஅ…

ஓ..ஓ..ஒக்..ஒக்..

(மாசி)

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

படம்: நான் பாடும் பாடல்

பாடல்: பாடவா உன் பாடலை

பாடியவர்: ஜானகி

இசை: இசைஞானி

Link to comment
Share on other sites

இளையராஜாவின் பெருமையோ பெருமை. நீங்கள் கூறும்போது நன்றாகத்தான் இருக்கிறது.

வைரமுத்து இளையராஜாவின் இசையில் பாடல்களை எழுதும்போது பல அருமையான பாடல்கள் வந்தது. அவர்களுக்கடையில் முறுகல் வந்தபோது

நண்பர் குறிப்பிட்ட அந்தி மழை பாடல் இளையராஜவினால் விமர்சிக்கப் பட்டது.

குருடன் ஒருவன் பாடுவதாக அந்தப் பாடல் இடம் பெற்றது. இளையராஜா ஒரு

மேடையில் இந்தக் காலத்தில் சிலர் பாட்டெழுதுகிறார்கள்

அந்திமழை பொழிகிறது. ஒவ்வொரு துளியிலும் உன்முகம் தெரிகிறது. குருடனுக்கு எப்படி ஐயா ஒவ்வொரு துளியிலும் முகம் தெரியும் என்று . ஆமாம் எப்படி தெரியும். அதை சொன்னவன் மூடன் என்றால். அதை ஏற்றுக்கொண்டு இசையமைத்தவன்.....................

இது இளையராஜவின் பெருமைகளில் ஒன்று

வன்னியன்,

இளையராஜா என்ற தனிமனிதனிடம் பல்வேறு குறைகள் நம் எல்லோரையும் போல் இருக்கலாம். அதற்காக அவர் இசையை வெறுக்கலாமோ?

கோழி குருடா இருந்தா நமக்கென்ன.. நமக்கு வேண்டியது கறிதானே..! :D

இதையும் கேட்டுப்பாருங்களேன்..! மறுபடியும் ஆரம்ப இசை அமர்க்களம்..

பாடல்: நல்லவர்க்கெல்லாம்

இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்

படம்: தியாகம்

பாடியவர்: T.M.சவுந்தரராஜன்

இசை: இளையராஜா

Link to comment
Share on other sites

இசைஞானியின் தனிப்பட்ட பல நடவடிக்கைகளுடன் எனக்கு உடன்பாடு இல்லை.

ஆனால் அவர் தமிழினத்திற்கு கிடைத்த ஒரு பெரும் சொத்து. தமிழர்களுக்கு தமிழ் இசையை கொடுத்த தாய் அவர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.