Jump to content

அமெரிக்காவின் கள்ளப்பிள்ளை


Recommended Posts

அமெரிக்காவின் கள்ளப்பிள்ளை

Pathivu Toolbar ©2005thamizmanam.com

உலக நாடுகளில் நடைபெறும் தீவிரவாதத்தை நிர்ணயிக்கும் ஏகபோக உரிமையை யாரும் கொடுக்காமலேயே அமெரிக்கா அடாவடியாக எடுத்துக் கொண்டுள்ளது. சர்வ வல்லமை கொண்ட ஒருநாடு தீவிரவாதத்திற்கு எதிராக தலை தாங்கினால் என்ன தவறு? என அப்பாவியாகக் கேட்பவர்கள் கவனிக்க:

அமெரிக்கா, பிரிட்டனிடமிருந்து விடுதலையடைந்த 1945 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கிட்டத்தட்ட 216 தடவை வெளிநாட்டு விவகாரங்களில் இராணுவ ரீதியாகத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 1945 முதல் தன்னுடைய சுயநலத்திற்காக இருபதுக்கும் நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைத்துள்ளது. கடந்த நூற்றாண்டில் உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் பிரச்னைகளில் 100க்கு மேல் தலையிட்டு, தன்னுடைய அதிகாரத் திணிப்பை அங்கு நடத்தியுள்ளது.

செப்டம்பர் 2000ல் இஸ்ரேலிய இராணுவம் மிகப் பெரிய தாக்குதல் ஒன்றை பாலஸ்தீனர்கள் மீது நடத்தியது. இதில் 600 பேர் கொல்லப்பட்டனர். 15000 பேர் பெண்கள், குழந்தைகள் என காயம்பட்டனர். இதில் 1000 பேர் கடுமையான காயமடைந்ததுடன், மிக நீண்ட கால சிகிச்சை பெற வேண்டிய அளவு ஊணமாக்கப்பட்டனர்.

பாலஸ்தீனர்களின் கிராமங்களைச் சுற்றி வளைத்து, இஸ்ரேல் இராணுவம் இந்த அக்கிரமத்தைப் புரிந்தது. சிகிச்சை பெறுதவற்குக் கூட யாரையும் அது வெளியே விட அனுமதிக்கவில்லை.

இவையெல்லாம் பாலஸ்தீனத்தில் அகதிகளாக வந்தேரியக் கூட்டம், மண்ணின் மைந்தர்கள் மீது நடத்தியவை. இது போன்ற எண்ணற்ற அடக்குமுறைகளை இஸ்ரேல் அமெரிக்காவின் உதவியுடன் செய்துள்ளது. உலக நாடுகளால் இஸ்ரேலுக்கு எதிராக் கொண்டு வரப்பட்ட ஐ.நா.தீர்மானங்களில் பலவற்றை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா தடுத்துள்ளதோடு இஸ்ரேலிய அராஜகங்களை ஆதரித்தும் உள்ளது என்றால் அமெரிக்காவின் செல்லப்/கள்ளப்பிள்ளைதான் இஸ்ரேல் என்றால் மிகையில்லை.

பாலஸ்தீன மக்கள் தயாகமொன்று இன்றி தவித்தவர்கள் அல்லர். அடுத்தவரின் சொத்தை அபகரித்து தன் சொர்க்கபுரியை அமைத்துக் கொள்ள போராடியவர்களும் அல்லர். அவர்களுக்குத் தொன்மை மிக்க வரலாறொன்று இருக்கின்றது. அந்த வரலாறு பலருக்கு தெரியாததால் யூத சியோனிஸவாதிகள் பலஸ்தீனை தனதாக்கிக் கொள்ள பின்கதவு ஊடாக பிரவேசித்து அக்கிரமம் புரிந்து வருகின்றனர்.

பாலஸ்தீன மண்ணில் அமைந்துள்ள பைத்துல் முகத்தஸின் பெருமைகள் மற்றும் அதன் புனிதத் தன்மை பற்றி திருமறைக் குர்ஆனிலும், இன்னும் ஏராளமான நபிமொழிகளிலும் சிலாகித்துக் கூறப்பட்டுள்ளன. அறிஞர் பெருமக்களான இப்னு கதீர், அல் குர்தூபி, இப்னு ஜவ்ஸிய்யா மற்றும் பலர் "சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்" என்ற வசனத்திற்கு விளக்கமளிக்கும் பொழுது, ஷாம் என்றழைக்கப்படக் கூடிய இன்றைய சிரியாவும் பாலஸ்தீனப் பூமியுடன் உள்ளடங்கும் என்றும், அதுவும் அருள் செய்யப்பட்ட பூமி என்றும் விளக்கமளிக்கின்றார்கள்.

இந்த பூமியானது ஆன்மீகம், உலகாதாயம் மற்றும் அருட்கொடைகள் என்று அனைத்து வித அருட்கொடைகளையும் கொண்ட தளமாக, இறைவனால் அருட்செய்யப்பட்ட பூமியாகத் திகழ்கின்றது. இந்த அருட்கொடைகளானது பாலஸ்தீனர்களுக்கு மட்டும் உரித்தானதன்று, மாறாக பாலஸ்தீனர்கள், அரபுக்கள், முஸ்லிம்கள் என்று இந்த முழு உலக மனித வர்க்கத்திற்குமே அது அருட்கொடையாக விளங்குகின்றது என்பதை திருமறைக் குர்ஆன் இவ்வாறு சுட்டிக் காட்டுகின்றது.

மேற்கு ஆசியாவிற்கும், ஆப்ரிக்காவிற்கும் இடைப்பட்ட மேற்கு வாசலாக இருப்பதோடு, இன்னும் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கும் இது வாசலாக அமைவதோடு, நைல் நதிப் பரப்பிலிருந்து யூப்ரடிஸ் நதி வரைக்கும் இது பரவி இருப்பதன் மூலம், இயற்கை வளங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதோடு, உலகின் பல பாகங்களில் வாழும் மக்கள் இந்த வளமான பூமியில் வந்து தங்கி வாழ விரும்புவதன் காரணமாக, உலகின் பன்முகச் சமுதாயத்தை இந்தப் பூமி தன்னுள் தோற்றுவித்துள்ளதன் காரணமாக, இந்தப் பூமிக்கு "Fertile Crescent" என்றழைக்கப்படுவதும் உண்டு. இதுவே உலகில் தோன்றிய ஏராளமான இறைத்தூதர்கள் இங்கு தோன்றியிருப்பதும், அவர்கள் இறைவனது தூதுச் செய்தியை இங்கிருந்து பரப்பியதற்குமான சில குறிப்பிட்ட காரணங்களாகச் சொல்ல முடியும்.

பாலஸ்தீன மக்களின் மூதாதையர்கள் யபூஸியர் என அழைக்கப்படுகின்றனர். கி.மு. 4000 ஆண்டளவில் வாழ்ந்த அவர்கள் குத்ஸ் நகரை நிர்மாணித்தவர்களாவர். பலஸ்தீனின் பூர்வீக சொந்தக்காரர்களான அவர்கள் பலஸ்தீனின் பூர்வீக சொந்தக்காரர்களான அவர்கள் உருவாக்கிப் பின்பற்றிய பரம்பரை ஒழுங்கு அவர்களின், பின் சந்ததியினரான பலஸ்தீன் அரபுக்களால் கூட மிகச் சிறப்பாகப் பின்பற்றியதற்கு ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

அந்த ஒழுங்கை சிதைந்து சின்னாபின்னமாக்கும் வகையில் கி.மு.1300 அளவில் யூதர்கள் (மூஸா நபியின் சமூகம்) முதன் முதலாக பலஸ்தீனுள் பிரவேசிக்கின்றார்கள். சுமார் 200 வருட காலம் பல சர்ச்சைகளில் ஈடுபட்ட அவர்கள் இறுதியில் அங்கு வாழ்வதற்கான வழியை அமைத்துக் கொள்கிறார்கள்.

எனினும் அவர்களது அந்த வாழ்வு வெகுகாலம் நீடிக்கவில்லை. கி.மு.8 ஆம் நூற்றாண்டில் அங்கு பிரவேசித்த அஸீரியப் படைகளும், கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் அங்கு வந்த பாபிலோனிய மன்னான நஸ்ஸரின் படைகளும் முறையே யூதர்களை விரட்டியடித்து விட்டு அரபு மக்களை மீளக் குடியேறச் செய்கின்றன. நஸ்ஸரின் படைகள் ஒரு படி முன்னே சென்று பைத்துல் முகத்தஸை உடைத்து விட்டு. சுலைமான் (அலை) அவர்கள் நிர்மாணித்த ஹைக்கல் சுலைமானி எனும் கோயிலையும் தரைமட்டமாக்கினர்.

பின்னர் ஈரானிய ஆட்சி வியாபித்த போது யூதர்கள் மீண்டும் பலஸ்தீனில் வந்து குடியேறினர். அத்துடன் ஹைக்கல் சுலைமானி எனும் கோயிலையும் நிர்மாணித்தனர்.

ஆனால் அவர்களது துரதிஷ்டம் அந்தப் புதுவாழ்வு சுமார் 300 அல்லது 400 வருடங்களுக்கு மேல் நிலைக்கவில்லை. அதற்குக் காரணமானோர் அவர்களே. அதாவது பலஸ்தீனில் வந்து குடியமர்ந்த யூதர்கள் கி.பி.70 ல் ரோம சாம்ராஜ்யத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தனர். இதன் விளைவாக பைத்துல் முகத்திஸும், சுலைமான் கோயிலும் அழிக்கப்பட்டன. யூதர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். மீண்டும் அங்கு வாழ்ந்த அரபியர் மீளமர்த்தப்பட்டனர்.

பின்னர் பலஸ்தீனை ரோமர்களிடமிருந்து கலீபா உமர் (ரலி) அவர்கள் காலத்தில் மீட்டெடுக்கப்பட்ட போது ரோம பைஸாந்திய படையினர் ஜெரூஸலத்தின் திறவுகோளை உமர் (ரலி) அவர்களிடம் கையளித்த முறை வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியாகத் தொகுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் இடையிடையே கிறிஸ்தவ ஊடுருவல்கள் இடம் பெற்றன. சிலுவை யுத்தங்களும் நிகழ்ந்தன. முடிவில் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்கள் பலஸ்தீனை முழமையாக விடுவித்துக் கொண்டார்கள்.

இடைக்காலத்தில் பலரது இடையூறுகளுக்கு மத்தியில் இஸ்லாமிய வட்டத்தை தாண்டாத பலஸ்தீன், துருக்கிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக கடைசி கலீபா சுல்தான் அப்துல் ஹமீத் கான் அவர்களின் ஆட்சியினுள் அமையப் பெற்றிருந்தது.

இதே சம காலத்தில் யூதர்கள் தமக்கென ஒரு நாடு, தலைவன், சமூக அமைப்பு எதுவும் இல்லாமல் உலகெங்கும் சிதறி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். இந்த நிலையில் கூட அவர்களால் அமைதியாக வாழ முடிந்தது முஸ்லிம்களின் ஆட்சிப் பகுதியில் மாத்திரமே. குறிப்பாக ஸ்பெயினில் இஸ்லாமிய ஆட்சி இருந்த 800 வருட காலமம் அவர்கள் நிம்மதியாக வாழ்ந்தனர்.

யூதர்கள் மிகவும் புனிதமான சின்னமாக கருதும் அழும் சுவர் (The Wailing Wall) கூட முஸ்லிம்களது நல்லெண்ணம் காரணமாகவே மீண்டும் கிடைத்தது.அழும் சுவர் ஆரம்பத்தில் பாரிய குப்பை கூழங்களால் சிக்குண்டிருந்தது. எவருக்கும் அது பற்றிய அடையாளம் கூட தெரிந்திருக்கவில்லை. கி.பி.16 ம் நூற்றாண்டில் சுல்தான் ஸலீம் உஸ்மான் அவர்களுக்கு தற்செயலாக இச்சுவர் பற்றிய எண்ணம் ஏற்பட்டது. எனவே அவ்விடத்தை சுத்தம் செய்து யூதர்களுக்கு அதனைத் தரிசிப்பதற்கு அனுமதியும் வழங்கினர்.

இப்படி முஸ்லிம்களின் ஆட்சியில் அமைதியாக இருந்த பாலஸ்தீனம் எப்படி இன்றைய வல்லரசுகளின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி அமைதியற்ற தேசமானது? சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் பாலஸ்தீனர்கள் தீவிரவாதிகளா? என்றும் பார்ப்போம்

http://athusari.blogspot.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.