Jump to content

அதிசயக்குதிரை


Recommended Posts

ஒரு அமெரிக்க கணவன் மனைவி ஒரு ஞாயிற்று கிழமை வீட்டில் குளிப்பதற்கு தயாராகின்றார்கள். மனைவி முதலில் குளித்து முடியவும் கணவன் குளிக்க தயாராகும் போது வீட்டு மணியடிக்கவும் சரியாக இருந்தது.கணவன் மனைவியிடம் யார் என்று பார்க்க சொல்லி விட்டு குளிக்க தயாராகின்றார்.மனைவி அவசர அவசரமாக துவாயை சுற்றி கட்டியபடி மேல் வீட்டிலிருந்து படி வழியாக கீழிறங்கி வாசல் கதவை திறந்த போது பக்கத்து வீட்டு பொப் நின்று கொண்டிருந்தார்.மனைவி வாய் திறக்க முதல் பொப் சொல்கிறார் "உந்த துவாயை ஒரு கணம் களற்றி விடுங்கள் $800 தருகின்றேன் என்று".மனைவியும் ஒரு கணம் யோசித்து விட்டு துவாயை களற்றி பிறந்த மேனியாக நிற்க ,பொப்

$800 கொடுத்து விட்டு நன்றி கூறிவிட்டு சென்று விடுகிறார்.மனைவியும் மனதுக்குள் ஒரு வித சந்தோசத்துடன் மேலெ கணவர் குளிக்கும் அறைக்கு செல்ல கணவர் வந்தது யாரென வினவ மனைவி அது பக்கத்து வீட்டு பொப் என கூறினார்.

உடனே கணவர் "பொப் என்னிடம் வாங்கிய $800 பற்றி ஏதாவது கூறினாரா " என்று கேட்டார்.

Link to comment
Share on other sites

அப்பா: (அந்தப் பெண்ணிடம்) உனக்கு ரோஜாப்பூ வாசனை பிடிக்குமா? அல்லது மல்லிகைப்பூ வாசனை பிடிக்குமா?

அந்தப் பெண்: எனக்கு பக்கத்து வீட்டு சீனிவாசனைப் பிடிக்கும்.

***

டாக்டர்: இந்தாங்க, டானிக், தினம் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க.

அவன்: ஸ்பூன் ரொம்ப நீளமா இருக்குமே டாக்டர், எப்படி முழுங்கறது?

***

எனக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்திருக்கு, ஸார்!

எங்கேயிருந்து?

பழனிலேர்ந்து!

***

இனிமே கட்சிக்கு நாய்போல உழைப்பவன் நான் தான் என்று அடிக்கடி சொல்லாதீங்க

ஏன்?

தலைவர் 'வாள்'க 'வாள்'க என்று தொண்டர்கள் கத்தறாங்க!

***

ஏன் கால்குலேட்டருடன் அந்தப் பெண் பின்னாலே சுத்தறே?

கணக்கு பண்ணிக்கிட்டு இருக்கேன்

***

எனக்கு பொழுதே போகமாட்டேங்குது ஸார்

ஏன், ஏதாவது சினிமாவுக்குப் போகிறதுதானே?

எங்க ஆபீஸ்லே அதுக்கெல்லாம் பெர்மிஷன் கொடுக்க மாட்டாங்களே!

***

என் அப்பா ஒரு சங்கீத வித்வான்,அம்மாவும் பாடுவாள், அண்ணனுக்கு மிருதங்கம் வாசிக்கத்தெரியும், அண்ணி வீணை வாசிப்பா---

சரி, நீ என்ன பண்றே

வேறென்ன பண்றது, தனிக்குடித்தனம் பண்றேன்!

Link to comment
Share on other sites

டாக்டர்: இந்தாங்க, டானிக், தினம் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க.

அவன்: ஸ்பூன் ரொம்ப நீளமா இருக்குமே டாக்டர், எப்படி முழுங்கறது?

:wub::rolleyes: அறிவாளிகள்

Link to comment
Share on other sites

முட்டாள்கள் எல்லாம் எந்திரிச்சி நில்லுங

ஆசிரியர் : முட்டாள்கள் எல்லாம் எந்திரிச்சி நில்லுங்க.

(ஒரு மாணவன் மட்டும் எழுந்து நிற்கிறான்)

ஆசிரியர் : என்ன நீ மட்டும் நிற்கிறாய்?

மாணவன் : உங்களுக்குத் துணையாகத்தான், சார்

--------------------------------------------------------------------------------

ஆசிரியர்

ஆசிரியர் : எந்த ஒருவனுக்கு ஒரு விஷயத்தை மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடியவில்லையோ, அவன் ஒரு முட்டாள். புரிகிறதா?

மாணவர்கள் (கோரஸாக) : புரியவில்லை சார்...

------------------------------------------------------------------------------------------------------

பணக்கார மாமியார்

என்னோட மாமியார் அவங்க பணக்காரப் புத்தியைக் காட்டிட்டாங்க.

அப்படியா... என்ன பண்ணினாங்க?

எனக்கும் அவங்களுக்கும் நடந்த சண்டையை உள்ளூர் கேபிள்ல ஒளிபரப்ப ஏற்பாடு பண்ணிட்டாங்களாம்

------------------------------------------------------------------------------------------------------

டார்ச்லைட் வச்சுக்குங்க...

நோயாளி : டாக்டர்..அடிக்கடி ஒரு இருட்டான காட்டுக்குள்ளே போகிறமாதிரி கனவு வருது. என்ன செய்யலாம்?

டாக்டர் : படுக்கும்போது பக்கத்துல டார்ச்லைட் வச்சுக்குங்க...

Link to comment
Share on other sites

நிலா அக்கா கூல்டவுன் என்ன குடிக்க போறீங்க நிலா அக்கா!! :rolleyes:

:lol::D

Link to comment
Share on other sites

தொண்டர் 1:எலெக்ஷன்ல ஜெயிக்கலைன்னா ஒரு பக்க மீசையை எடுத்துக்கறேன்னு தலைவர் சொல்றாரே.. ஜெயிச்சுட்டார்னா ?

தொண்டர் 2:ஜனங்களை மொட்டை அடிச்சுடுவார்

---------------------------------------------------------------------------------------------------------

ஒருவர் :மழைக்கு போடற ஷு இருக்கா...

மற்றவர்:இல்லைங்க... மனுஷங்களுக்குப் போடற ஷுதான் இருக்கு

------------------------------------------------------------------------------------------------------------

ஒருவர் :அவர் ரொம்ப சிக்கன பேர்வழினு எப்படிச் சொல்ற ?

மற்றவர்:உட்காரக்கூட நாற்காலிக்குப் பதில் முக்காலிதான் யூஸ் பண்ணுவார் ?

--------------------------------------------------------------------------------------------------

தொண்டர் 1:தலைவர் கோபமா இருக்காரே, என்னாச்சு ?

தொண்டர் 2:தன்மானத்தோடு வாழ்வதே எங்கள் குறிக்கோள்-னு தலைவர் சொன்னதை, சன்மானத்தோடு வாழ்வதே எங்கள் குறிக்கோள்-னு பிரசுரம் செய்துட்டாங்களாம்

-------------------------------------------------------------------------------------------------------

ஒருவர் :என்ன இப்பெல்லாம் மானேஜர் உன்னைப் பார்த்து இளிக்கறதில்லை...?

மற்றவர்:நீங்க சிரிக்கும்போது எங்க தாத்தா மாதிரி இருக்கீங்கன்னு சொன்னேன்

---------------------------------------------------------------------------------------------------------

ஒருவர் :நேத்து ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகும்போது பக்கத்து வீட்டுக்குப் போயிட்டேன்

மற்றவர்:அப்புறம் ?

ஒருவர் :களைப்பா வந்திருப்பீங்க... காபியோட வரேன்-னு குரல் கேட்டது. சரி, நம்ம வீடு இல்லைன்னு புரிஞ்சுகிட்டேன்

Link to comment
Share on other sites

:lol::lol:

ஈழதிருமுருகன் மாமா எப்படு சுகம் எங்கே உங்களை காணவே கிடைக்குதில்லை!! :o இல்லாட்டி சங்ககடைக்கு போயிட்டீங்களோ மறுபடி என்று நினைத்துவிட்டேன் மாமா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஒருவர் :இப்பவெல்லாம் ஆபீசுல தூங்கமாட்டேங்கறீங்களே... ஏன் ?

மற்றவர்:நீங்க தூங்கறதாலதான் ஆபீசுல உங்களுக்கு லஞ்சம் கிடைக்க மாட்டேங்குதுன்னு பொண்டாட்டி சரமாரியா திட்டுறா

--------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒருவர் :திருடன், நேத்து ராத்திரி உங்க வீட்ல திருடும்போது நீங்க முழிச்சிக்கிட்டு இருந்ததா சொல்றீங்க... அப்படின்னா ஏன் சத்தம் போடல ?

மற்றவர்:சத்தம் போட்டா நாம மாட்டிக்குவோம்னு வேலைக்காரி என் வாயப் பொத்திட்டாய்யா

---------------------------------------------------------------------------------------------------------------------------

திருடன் 1: நீ ஏன் பட்டப்பகல்ல திருடினே ?

திருடன் 2: எனக்கு மாலைக்கண் வியாதி, நைட்டுல வெளியில போகக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு..

-----------------------------------------------------------------------------------------------------------------------------

ஒருவர் :வீட்டுல உள் வேலையெல்லாம் என் மனைவி பார்த்துப்பா... வெளி வேலையெல்லாம் நான் பார்த்துப்பேன்.. .

மற்றவர்:அதுக்குன்னு தினமும் நீங்க வீட்டு வாசல்ல கோலம் போடறது நல்லாயில்லை

-------------------------------------------------------------------------------------------------------------

ஒருவர் :மாப்பிள்ளை அரசியல்ல இருக்கலாம் அதுக்காக இப்படியா ?

மற்றவர்:என்னவாம் ?

ஒருவர் :பெண் பார்க்க வந்த இடத்துல பெண் வாயால வாழ்க கோஷம் போடச் சொல்றார்

Link to comment
Share on other sites

நகைசுவை துணுக்கு எல்லாம் நல்லா இருக்கு நுணாவிலன் அண்ணா!! :lol:

Link to comment
Share on other sites

சாவி

அவர்: உங்க வீட்டுக் குழந்தை, வாசற் கதவு சாவியை முழுங்கிடுச்சா? அப்புறம் என்ன செஞ்சீங்க?

இவர்: (வருத்தத்துடன்)

ஜன்னல் வழியா ஏறிக் குதிச்சுத்தான் உள்ளே போனேன்

-------------------------------------------------------------------------

புகையிலை போடுற பழக்கம் உண்டா ?

சில நோயாளிங்க டாக்டர் என்ன சொல்றக்ருங்கிறதை சரியாப் புரிஞ்சிக்கிறது இல்லை. ஒரு நோயாளியைப் பரிசோதனை செய்துக்கிட்டிருந்த டாக்டர், உங்களுக்கு புகையிலை போடுற பழக்கம் உண்டா ?ன்னு கேட்டார். உண்டுங்க என்னோட நாலு ஏக்கர் நிலத்துலேயும் புகையிலைதான் போட்டிருக்கேன்-னாரு நோயாளி. இப்போ டாக்டருக்குத் தலை சுத்திருச்சி

-------------------------------------------------------------------------------

எடை மிஷின்

ரொம்பக் குண்டா இருக்கிற ஒரு அம்மா எடை மிஷின்லே ஏறி நின்னுது. அட்டை வந்தது. தயவு செய்து கூட்டம், கூட்டமாக ஏறி நிற்காதீர்கள். சே இந்த மிஷின் ரொம்ப மோசம்னு அந்தம்மா சலிச்சிக் கிட்டாங்க.

Link to comment
Share on other sites

ஒருவர் :பெண் பார்க்க வாசல் வரை வந்துட்டு திடீர்னு திரும்பிப் போறீங்களே... ஏன் ?

மற்றவர்:உள்ளே டிபன் வாசமே வரலியே

--------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒருவர் :கதாசிரியரை உயில் எழுதச் சொன்னது தப்பாயிடுச்சா ?

மற்றவர்:மேற்கண்ட பெயர்கள் யாவும் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல-னு கடைசியிலே எழுதி முடிச்சிட்டாரு

---------------------------------------------------------------------------------------------------------------------------------

மனைவி:என்னங்க.. . ஆபீஸ் லேர்ந்து தினமும் கலகலப்பா வர்ற நீங்க இன்னைக்கு ரொம்ப வாட்டமா வர்றீங்களே, சம்திங் நிறைய வரலையா...?

கணவன்:சம்திங் வாங்கி மாட்டிக்கிட்டேன் சரசு.. .

---------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒருவர் :உங்க அப்பாவோட நிதி வர்ற அன்னைக்கெல்லாம் உங்க அம்மா ஏன் கேவிக்கேவி அழறாங்க ?

மற்றவர்:அவுங்களுக்கு பயந்து நடந்து, மரியாதை கொடுத்திட்டிருந்த ஒரே ஆசாமி போயிட்டாரேங்கிற வருத்தம்தான்

----------------------------------------------------------------------------------------------------------------------

தயாரிப்பாளர்:உங்களை வச்சு படம் எடுத்ததுலே என்னோட சொத்துல பாதி அழிஞ்சு போச்சு சார்...

நடிகர்:கவலைப் படாதீங்க. உங்களுக்கு இன்னொரு படத்தக்கு நான் கால்ஷீட் தர்றேன்

Link to comment
Share on other sites

ஒருவர் :பஸ்லே பெரியவங்க நிக்கிறதைப் பார்த்தா என்னாலே தாங்க முடியாது.

மற்றவர்:உடனே எழுந்து இடம் கொடுத்துடுவியா ?

ஒருவர் :கண்ண இறுக மூடிக்கிட்டு தூங்குற மாதிரி பாவனை பண்ணிடுவேன்.

----------------------------------------------------------------------------------------------------------------------------

டாக்டர்:தூக்கத்துல நடக்கிற வியாதிக்கு மருந்து, கொடுத்தேன். இப்ப தேவலையா...?

நோயாளி:தேவலை டாக்டர் முன்பெல்லாம் வேகவேகமா நடந்து கிட்டிருந்த நான் இப்ப மெள்ளமா நடக்கிறேன்..

-----------------------------------------------------------------------------------------------------------------------

ஒருவர் :ஏம்ப்பா இப்படி பிக்பாக்கெட் தொழில் பண்ணறே ? ஏதாவது ஒரு லட்சியத்தை வெச்சுக்கிட்டு உழைக்க வேண்டியதுதானே ?

மற்றவர்:என்னங்கையா இப்படிக் கேட்கறீங்க ? ஒரு நாளைக்குக் குறைஞ்சது அஞ்சு பர்சையாவது அடிக்கணும்ங்கறதுதானே என்னோட லட்சியமே

--------------------------------------------------------------------------------------------------------------------------

ஒருவர் :அந்த பஸ் ஓனர் மறைவுக்குப் பின்னால் அவரது சொத்திலே என்ன தகராறு ?

மற்றவர்:மினி பஸ்ஸெல்லாம் அவரது சின்ன வீட்டுக்கு எழுதி வைச்சுட்டாராம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

ஒருவர் :உங்க அப்பா ரொம்பவும் பணக்காரராக இருக்கலாம்... அதுக்காக கடிதம் கூட இப்படியா எழுதறது ?

மற்றவர்:அப்படி என்ன எழுதியிருக்கிறார் ?

ஒருவர் :பணம்... பணமறிய ஆவல்-னு எழுதியிருக்கிறார்

Link to comment
Share on other sites

நையாண்டி : பாட்டுக்கு பாட்டு (பின் பாட்டு)

- கோவி.கண்ணன் [geekay@singnet.com.sg]

தேர்தல், தேர்தல் ! சோர்ந்து போய், நம் அரசியல்வாதிகள் எல்லாம் ஒரே இடத்தில் தற்செயலாக சந்தித்துக் கொள்கிறார்கள். ஆவலுடன் பார்த்த திருவாளர் பொதுஜெனங்கள் எல்லோரும், கூட்டாக சேர்ந்து, அவர்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறார்கள். அதாவது,

திருவாளர் பொதுஜெனம்: அன்பார்ந்த அரசியல்வியாதி, மண்ணிக்கவும் அரசியல்வாதி தலைவர்களே, உங்களையும் உங்கள் கூத்தணியையும், மறுபடியும் மண்ணிக்கவும் கூட்டணியையும் நாங்கள் பார்த்து கொண்டிருக்கிறேம், வரும் தேர்தலுக்கும் பின் உங்களில் யார் சிரிப்பீர்கள், யார் அழுவீர்கள் என்பது உங்களுக்கு தெரியாது, அதனால் இன்று நீங்களும் மகிழ்ந்து, எங்களையும் மகிழ்விக்க வேண்டுமென்பது எங்களின் விருப்பம். அதற்கு ஒரு யேசனையை முன்வைக்கிறோம் என்று நிறுத்துகிறார்கள்.

தமிழக முதல்வர் ஜெ: என் ரத்திதின் ரத்தமான, என் அன்பு செல்வங்களே, உங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மாவிடம் உங்களுக்கு தயக்கம் வேண்டாம், அதைப்பார்த்து தாங்காது இந்த தாய் மனசு, உடனடியாக சொல்லுங்கள்.

கலைஞர்: கடந்த ஆட்சியின் வேதனையை மறந்து சிரிப்பதற்கு ஒரு வாய்பு கேட்கிறீர்கள். எங்களுக்கு புரிகிறது, சொல்லுங்கள் தமிழ்தாயின் செல்வங்களே, நானும், கழகத்தாரும் காத்திருகிறோம்.

புரட்சிகலைஞர்: காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை ஒவ்வொரு இந்தியனும் தலை நிமிரனும், அதற்கு இந்த கேப்டனின் தலை குனிந்தாலும் அது தாழ்வில்லை, உங்கள் யோசனையை சொல்லுங்கள் எதுவானாலும் தயங்காமல் சொல்லுங்கள்

திருவாளர் பொதுஜெனம்: நன்றி அன்புத்தலைவர்களே, இங்கு இப்பொழுது அனைத்துக்கட்சி பாட்டுக்கு பாட்டு போட்டி நடைபெறும், உங்களில் ஒவ்வொருவராக பாட்டை தொடங்கவேண்டும், முதல்வர் என்ற முறையில், முதலில் முதல்வர் ஜெ. அவர்கள் தொடங்கட்டம்.

எல்லோரும் கைதட்டுகிறார்கள்

உடனே முதல்வர் ஜெ, வைகோவை பார்த்தபடி, பாட ஆரம்பிக்கிறார்.

ஜெ: அடிக்கிற கைதான் அணைக்கும் ... கசக்குற வாழ்வே இனிக்கும், அடிக்கிற கைதான் அ...

'அ' என நிறுத்த, வைகோ தொடர்கிறார்

வைகோ: அண்ணன் காட்டிய வழியம்மா, இது அன்பால் விளைந்த பழியம்மா ... இது அன்பால் விளைந்த ப....

கலைஞர்: பாலுட்டி வளர்த்த கிளி பழங்கொடுத்து பார்த்த கிளி, நான் வளர்த்த பச்சை கிளி நாளை வரும் கச்சேரிக்.. என நிறுத்த

விஜயகாந்தை பார்த்தபடி,

மருத்துவர் ராமதாஸ்: கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும், உன்னை ஏமாற்றும் நீ கானும் தோற்றம் ... க...பதிலுக்கு,

புரட்சிகலைஞர்: கலக்க போவது யாரு .. நான் தான்... ஜெயிக்க போவது யாரு நான் தான் ... டாக்டர் ஒழிக ... ராஜா வசூல் ராஜா..

திருமாவளவன்: ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை, நான் தாண்ட என் மனசுக்கு ராஜா வாங்குகடா வெள்ளியில் கூஜா, ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எ..

இல.கனேசன்: எங்கே செல்லும் எங்கள் பாதை யாரோ யார் அறிவார்கள்... காலம் காலம் செல்ல வேண்டும் யாரோ யார் அறிவார்கள், எங்கே செல்லும் எங்கள் பாதை யாரோ யார் அ..

வாசன்: அன்னையை போல் ஒரு தெய்வமில்லை அவர் அடி தொழ மறுப்பவர் மனிதரில்லை, மன்னில் மனிதரில்லை, அன்னையை போல் ஒரு தெய்வமில்லை. அவர் அடி தொழ மறுப்ப..

தன்னையே நினைத்தபடி,

கார்த்திக்: பாடி திறிந்த கிளி பாதை மறந்ததடி பூமானே, ஆத்தாடி உன்னால கூத்தடி நின்னே, கேட்காத மெட்டெடுத்து பாடு பாடு, பஞ்சு வெடிச்சா அது காயம் காயம், நெஞ்சு வெடிச்சா அது தா...

திண்டிவனம் ராமமூர்த்தி : தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா, இன்று நீ தந்த பிச்சையிலே வளர்வேனம்மா, தாய் த...

இல.கனேசனைப் பார்த்து..

தமிழக முதல்வர் ஜெ : தண்ணீரிலே தாமரைப்பூ தள்ளாடுதே தனிமையிலே...

இல.கனேசன் : லேசா லேசா நீ இல்லாமல வாழ்வது லேசா, நீண்ட கால உறவிது லேசா, லேசா லேசா நீ இல்லாமல வா..

வைகோ : வானத்தை பார்தேன் பூமியை பார்தேன் மனுசன இன்னும் பார்க்கலெயே, நான் 'பல நாள் இருந்தேன் உள்ளே', அந்த நிம்மதி இங்கில்ல, உள்ள போன அனைவருமே குற்றவாளி இல்லேங்க, வெளிய உள்ள அ...

வைகோவை பார்த்து நொந்து போய்,

கலைஞர் : அண்ணன் என்னடா, தம்பி என்னடா அவசரமான உலகத்திலே, ஆசைகொள்வதில் அர்த்தமென்னடா காசில்லாதவன் கட்சியிலே.. அண்ணன் என்னடா, தம்பி என்னடா ...

திருவாளர் பொதுஜெனம் : போதும் போதும் நிறுத்துங்க, ஏதோ சந்தோசமா பாடுவிங்கன்னு பார்த்தால், லாவனி பாடிடிங்களே.

நொந்து கொண்டு கலைந்து செல்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

பெரிய முட்டாள்

ஒரு முறை விஜயநகர பேரரசர் தன் அமைச்சரவையில் கூடி இருக்கும் போது, அரேபிய வியாபாரி வந்தார், தன்னிடம் விலை உயர்ந்த குதிரை இருப்பதாகவும், அதை அரசருக்கு பரிசாக கொடுக்க இருப்பதாகவும் சொன்னார்.

அரசரும் அதை ஏற்றுக் கொண்டு, குதிரையை பார்வையிட்டு, அதன் மீது ஏறி சவாரி செய்தார், மிகவும் பிடித்து விட்டது, அத்தனை கம்பீரமான வெள்ளைக்குதிரை.

அரசரும் வியாபாரிக்கு தன் பரிசுகளை கொடுத்து, வியாபாரம் செய்ய அனுமதி கொடுத்தார். அமைச்சர் ஒருவர் அரசரிடம் "அரசே! குதிரை நன்றாக இருக்கிறது, இதன் விலை 1000 தங்க நாணயங்கள் தான், இது மாதிரி 100 குதிரைகள் வாங்க, நாம் இப்போவே பணத்தை கொடுத்தால், அடுத்த முறை கொண்டு வந்துவிடுவார்" என்று கூற, அரசரும் உங்கள் விருப்பம் போல் செய்யுங்க என்று சொல்லிவிட்டார்.

சில நாட்களுக்குப் பின்பு அரசர் தெனாலிராமனை அழைத்து, நம் நாட்டிலேயே பெரிய முட்டாள் யார் என்று கண்டுபிடித்து, நாளைக்குள் சொல் என்றார்.

அடுத்த நாள் தெனாலி ராமன் அரசனிடம் போய் தன்னுடைய கண்டுபிடிப்பை சொல்ல, அரசனுக்கு சரியான கோபம். எப்படி நீ அமைச்சரை பெரிய முட்டாள் என்று சொல்கிறாய் என்று கேட்டார்.

தெனாலிராமன்: அரசே! அரேபிய வியாபாரிக்கு குதிரைகள் வாங்கும் முன்பே 1 இலட்சம் பொன் கொடுத்தாரே அமைச்சர், அந்த வியாபாரி குதிரையோடு வருவானா, கண்டிப்பாக வர மாட்டான்" என்றார்.

அரசர் : ஒருவேளை அந்த வியாபார் குதிரைகளை கொண்டு வந்து கொடுத்தால்..

தெனாலி: அரசே! ஒரு சின்ன மாற்றம் தான் செய்ய வேண்டும், மிகப் பெரிய முட்டாள் அந்த வியாபாரி என்று மாற்ற வேண்டியது தான் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

_________________

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியில்லாத அண்டார்டிகா பகுதியில் தன்னந்தனியாக உலாவிக் கொண்டு ஒரு பெரிய ஜஸ் கட்டியை ஆராய்ந்து கொண்டு இருந்தார் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி. அவரை நமது அண்டார்ட்டிக் பகுதி அதி சிறப்பு நிருபரான பண்டாரம் மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று பேட்டி எடுத்தார். அப்பேட்டியில் சுப்பிரமணிய சுவாமி பல திடுக்கிடும் தகவல்களை அள்ளி விசினார். இதோ அவரது பேத்தலின் ஸாரி பேட்டியின் முழு விபரம். (இது ஒரு கற்பனைன்னு தனியா உங்களுக்கு சொல்லனுமா ?)

பண்டாரம்: என்ன சார் ரொம்ப நாளாக தமிழ் நாட்டுல நீங்க இல்லை. மக்கள் நகைச்சுவை கருத்துக்கள் இல்லாம தவிக்கிறாங்களாமே?

சுப்பிரமணியசுவாமி: எந்த மடையன் தமிழ்நாட்டுல இருப்பான். எங்க போனாலும் வெயில் கொளுத்துது. யாரைக் கேட்டாலும் தண்ணியில்லனு சொல்லுறானுங்க. ஒரு பக்கம் வை.கோ. விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிக்க தேவையில்லாமல் நடைபயணம் போறாரு. மற்றொரு பக்கம் கருணாநிதி ஏ.சி. அறையில உட்கார்ந்துக்கிட்டு தனது மகன், பேரன் சோடப்பூட்டி தயாநிதி நடத்துற சைக்கிள் பயணத்தை டி.வியில பார்த்துண்டு சேலத்துல மண்டல மாநாடு போடறாரு. இந்தக் கொடுமைய எதிர்த்து மாட்டு வண்டி பயணம் போகும் படி ஜெயலலிதாவுக்கு லெட்டர் போட்டேன். ஈமெயில் அனுப்பினேன். யாரும் கேட்கல, உருப்படாத ஆளுங்களா இருக்காங்க என்னத்த சொல்ல. அது தான் கோபத்துல இந்தப்பக்கம் நடந்தே வந்துட்டேன். ஆனா இங்க வந்தப்புறம் தான் தெரியுது. இத்தாலிக்கு சோனியா காந்தி இங்கு இருந்தும் பனிக்கட்டி கடத்தி இருக்காங்கன்னு ஒரு குரங்கு சொன்னது. எனக்கு எப்படி எல்லாம் ஆதாரம் சிக்குதுனு பாருங்க. இந்தியா போன உடனே கேஸ் போட்டு கலக்கப் போகிறேன் பாருங்கள்.

பண்டாரம்: பாராளுமன்றத்துல பாரதீய ஜனதா கட்சி இப்படி அமளி பண்ணிக்கிட்டு இருக்காங்களே இதுக்கு எல்லாம் என்ன காரணம். நீங்க இல்லாத காரணமா சார்........?

சுப்பிரமணியசுவாமி: பாராளுமன்றத்துல அமளி நடக்குறதுக்குக் காரணமே பாரதீய ஜனதாவுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையில ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டு இருக்குது. பாரதீய ஜனதா கட்சி கம்யூனிஸ்ட் காரங்களுக்கு ஏகப்பட்ட பணம் லஞ்சமா கொடுத்து இருக்காங்கனு எனக்கு செக் குடியரசு நாட்டில் இருந்து ஒரு தகவல் வந்து இருக்குது. இது ஒரு கூட்டு சதி. இந்த விஷயத்தை சொல்லலாமுனு சோனியா காந்திக்கு போன் செய்தேன். ஆனால் அவருக்குப் பதில அவரோட பேரன் போனை எடுத்து என்னிடம் பேசுகிறார். இந்த கூத்த யாரிடம் சொல்ல. அது தவிர நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும் பொழுது வாஜ்பாய் எப்படி எல்லாம் மறைமுக சைகை செய்யுறாருனு கூர்ந்து பார்த்தாலே தெரியும். இத எல்லாம் யாரு பார்க்குற. எல்லாம் செம்பறியாட்டுக் கூட்டம் மாதிரி கேண்டினில் ஓசியில பிரியாணி சாப்பிட்டுட்டு வர்றாங்க. இதுக்காகவே பெரிய போராட்டம் நடத்தலாமுனு யோசிக்கிறேன். கூட்டம் சேருமா என்பது தான் என்னோட கவலை. இது தவிர பாராளுமன்றத்துல நான் இல்லாத காரணத்தினாலும் அதிகமா சத்தம் போடுறாங்க என்ற உண்மைய சொன்ன உங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பண்டாரம்: தமிழ் சினிமா பற்றி என்ன நினைக்கிறீங்க? ஆபாசமாக அதிக படம் வருதே இது எல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியலையா?

சுப்பிரமணியசுவாமி: நான் சின்னப்பையனாக இருக்கும் பொழுதே தமிழ் சினிமாவை ஒழிக்க வேண்டும் என குரல் கொடுத்துக் கிட்டு இருக்கேன். ஆனால் அதை யாரு கேட்குறா சொல்லுங்கள். கருணாநிதியை கேட்டால் நான் வசனம் எழுதுறதால தான் ஆட்சியைப் பிடிக்க முடியுதுனு சொல்றாரு. ஜெயலலிதாவைக் கேட்டால் சசிகலாவை விட்டு துளைத்து விடுவேன் என்று என்னோட பி.ஏ சந்திரலேகவுக்கு மிரட்டல் விடுறாங்க. ஆனால் தரமணியில எம்.ஜி.ஆர் திரைப்பட நகரம் மாற்றப்பட்டதற்கு நான் தான் காரணம். அதே மாதிரி ரஜினி தன்னோட ஜக்குபாய் படத்தை நிறுத்தி வைத்து இருப்பதற்கும் நான் தான் காரணம். படத்தை எடுத்தா முத்திரைத் தாள் மோசடியில் ரஜினியைப் பற்றி உலக நாடுகள் விசாரிக்க வேண்டும் என்று ஜா.நா சபையில மனு கொடுக்கப் போறாத ஒரு கடிதம் போட்டேன். அதனால தான் ரஜினி பயந்து போய் ஜக்குபாயை எடுக்காம போட்டு இருக்காரு. இப்படி என்னால முடிந்த சமூக சேவைகளை யாருக்கும் தெரியாம செய்து கொண்டு தான் இருக்கிறேன். கேப்டன் விஜயகாந்த ஏதோ அரசியலுக்கு வரப் போறதா சொன்னாரு என்ன ஆச்சுனு தெரியல. அவரு அரசியலுக்கு வந்து புது கட்சி ஆரம்பிக்குறதுக்குப் பதில என்னோட ஜனதா கட்சிக்கு தலைவராக வரலாம். ஏன் என்றால் என் கட்சிக்கு செலவு செய்ய காசு இல்லை.

பண்டாரம்: இந்தியாவுக்கு ஒலிம்பிக்குல முதல் வெள்ளி பதக்கம் கிடைச்சு இருக்குதே அதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?

சுப்பிரமணியசுவாமி: துப்பாக்கி சுடுவதில் இந்தியா பதக்கம் வாங்கி இருக்குறது எல்லாம் என்னைய மாதிரி ஆளுங்க இருக்குறதுனால தான். ஆனால் மத்த போட்டியில பாருங்க எல்லாம் மண்ணக்கவ்வுறானுங்க. சின்ன நாடான கியூபா கூட பதக்கத்தை அள்ளுது. ஆனால் நம்ம ஆளுங்க நல்லா சாம்பார் வடையை சாப்பிட்டுட்டு பதக்கம் வாங்காம சோகமாக இருக்காங்க. இதுக்கு இரண்டு பேர் காரணம். ஒன்று மத்திய அரசு நிலையில்லாதது. மற்றொன்னறு என்னிடம் ஆலோசனை கேட்காதது. என்னிடம் ஆலோசனை கேட்டு இருந்தால் பின்லேடனிடம் சொல்லி நான்கு பதக்கம் வாங்கிக் கொடுத்து இருப்பேன்.

பண்டாரம்: தமிழ்நாட்டுல அ.தி.மு.க அரசைக் கவிழ்க்க சதி நடக்குதாமே உண்மையா? உங்களுக்கு தெரியாம இருக்காதே?

சுப்பிரமணியசுவாமி: கவிழ்க்க அது என்ன கப்பலா? கருணாநிதி தன்னையே அதி புத்திசாலியா நினைக்குறாரு. பிகாருல ஆட்சிய கவிழ்க்கப் போன முந்தைய அரசுகளை குறை சொல்லிக்கிட்டு இருந்தாரு. இப்போ தமிழ்நாட்டுல ஆட்சியக் கவிழ்க்கனுமுனு எல்லா ஏற்பாடும் செய்து கொண்டு இருக்காரு. ஆட்சிய கவிழ்க்க அவரு எல்லாரிடமும் யோசனை கேட்டுக்கிட்டு இருக்காரு. என்னிடம் சொன்னால் ஒரு டீ பார்ட்டி வைத்து ஒரு நிமிடத்தில் கவிழ்த்தி விடுவேன். ஆனால் என்னிடம் யோசனை கேட்டு அடுத்து வருகின்ற தேர்தலில் எனக்கு 3 தொகுதி ஒதுக்கச் சொல்லுங்க, தமிழக அரசை கவிழ்த்தி விடலாம். இல்லாவிட்டால் சர்பத் பார்ட்டி வைத்து மத்திய அரசை கவிழ்க்க வேண்டிய சூழ்நிலை வந்துவிடும். என்னை யாரும் குறை சொல்லக் கூடாது.

பண்டாரம்: ஒட்டு மொத்த இந்திய தேசத்தின் நலனுக்காக போராட்டம் எதாவது நடத்துற எண்ணம் இருக்கிறதா?

சுப்பிரமணியசுவாமி: ஒட்டு மொத்த தேசத்துக்கும் போராட்டம் நடத்த நான் என்ன காந்தியடிகள் இல்லை. ஆனால் என்னால் சிங்கப்பூராக மாற்றப்பட்ட மதுரை தொகுதியில் இட்லிக் கடை வைக்கக் கூடாதுன்னு அடாவடி பண்ணுதாங்கனு இப்ப கூட புறாவிடம் தூது அனுப்பியுள்ளனர். மதுரைக்குப் போன உடனே பெரிய அளவில இட்லிக் கடைகளை திறந்து போராட்டம் நடத்தப் போகிறேன். முடிந்தால் நியூஸ் கலெக்ஷனுக்கு வந்து சப்போர்ட் பண்ணுங்க. சாப்பிட இட்லி தர்றேன்.

சரி சார் உங்களின் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

செய்தியை அனுப்பிட்டு உங்களை வந்து சந்திக்கிறேன் என்று சொல்லி விட்டு எஸ்கேப் ஆனார் பண்டாரம்.

Link to comment
Share on other sites

நாய் வாடகைக்கு கிடைக்குமா?

ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது, இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப் பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல, அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர் பின் ஒருவராக செல்லக் கண்டார். இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாய் வைத்திருந்தவரை அணுகி,

“இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?”

“முதலில் செல்வது எனது மனைவி.”

“என்ன ஆயிற்று அவருக்கு?”

“எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது”

“இரண்டாவது பிணம்?”

“அது என் மாமியாருடையது. என் மனைவியைக் காப்பாற்றச் சென்ற அவரையும் கொன்றுவிட்டது”

உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார், “இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?”

அதற்கு அவர் சொன்னார், “வரிசையில் போய் நில்லுங்கள்”

---------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜெருசலேத்தில் மனைவி

ஒரு கணவனும், மனைவியும் ஜெருசலேத்திற்கு சுற்றுலா சென்றனர். அங்கு அவர்கள் இருந்தபோது, மனைவி இறந்துவிட்டாள். அங்கிருந்த ஒருவர், ‘உனது மனைவியை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால், 5,000 டாலர் செலவாகும். இங்கேயே அடக்கம் செய்துவிட்டால் 150 டாலர் மட்டும்தான் செலவாகும்” என்றார்.

ஆனால் கணவன் சொந்த ஊருக்கே கொண்டு செல்லப்போவதாகக் கூறினான்.

“மனைவி மீது அவ்வளவு பாசமா?”

“இல்லே, ரொம்ப நாளைக்கு முன்பு இங்க ஒருத்தரை (யேசு) புதைச்சாங்க. அவர் 3 நாள் கழிச்சி உயிரோடு வந்துட்டாரு. அந்த ரிஸ்க்கை எடுக்க நான் விரும்பலை”

Link to comment
Share on other sites

மீண்டுமொரு தென்னாலிராமன் கதை!!!

கூன் வண்ணான்

ஒரு போலிச்சாமியார் ஒருவன் விஜயநகரத்துக்கு வந்து சேர்ந்தான். அவன் மக்களுக்கு போதை மருந்தை விற்று பணத்தை ஏராளமாக சம்பாதித்துக் கொண்டிருந்தான். போதை மருந்தை உட்கொண்ட மக்கள் பலர் பைத்தியம் ஆனார்கள். பலர் மாண்டார்கள்.

இச்செய்தி தெனாலிராமனுக்கு எட்டியது. ஆகையால் போலிச் சாமியாரைத் தொலைத்துக் கட்ட முடிவு செய்தான். அதன்படியே சாமியாரை சந்தித்து அவனுடன் நட்புக் கொண்டான். தகுந்த சமயம் பார்த்து சாமியாரைக் கொன்று விட்டான்.

இச்செய்தி மன்னனுக்கு எட்டியது. தெனாலிராமனுக்கு ஆள் அனுப்பி அழைத்துவரச் செய்தார். ஏன் சாமியாரைக் கொன்றாய் என்று கேட்டார். அதற்குப் போதை மருந்தால் பலர் பைத்தியம் பிடித்து மாண்டனர். ஆகையால் தான் கொன்றேன் என்றான்.

போலிச்சாமியார் தவறு செய்து இருந்தாலும் அவனைக் கொல்ல உனக்கு ஏது அதிகாரம்? அதை என்னிடமல்லவா தெரிவித்திருக்க வேண்டும். அப்படி தெரிவித்திருந்தால் நானே அந்தப் போலிச் சாமியாருக்குத் தக்க தண்டனை கொடுத்திருப்பேன்.

இவ்விஷயத்தில் நீ தன்னிச்சையாக செயல் பட்டதற்கு உனக்கு மரணதண்டனை விதிக்கிறேன் என மன்னர் தீர்ப்புக் கூறினார்.

உடனே தன் ஆட்களை அழைத்து ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு குழியை வெட்டி அதில் தெனாலிராமனை கழுத்தளவு புதைத்து யானையை விட்டு தலையை இடறுமாறு பணித்தார்.

அவ்வாறே தெனாலிராமனும் குழியில் கழுத்தளவு புதைக்கப்பட்டான். பின் யானையைக் கொண்டு வர பணியாளர்கள் சென்று விட்டனர்.

அப்போது சிலகழுதைகளை ஓட்டிக்கொண்டு ஒரு கூன் வண்ணான் வந்து கொண்டிந்தான்.

ஒரு மனிதன் பூமிக்குள் கழுத்தளவு புதையுண்டு இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். பின் தெனாலிராமனிடம் வந்து ஐயா, தாங்கள் ஏன் இவ்வாறு புதையுண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டான்.

அதற்கு தெனாலிராமன் எனக்கு மிக நீண்ட நாட்களாகவே முதுகு கூன் விழுந்து விட்டது. அதனால் மிகவும் சிரமப்பட்டு நடந்து வந்தேன். நேற்று ஒரு வைத்தியரை ஆலோசனை கேட்டேன். அவர்தான் ஒருநாள் முழுவதும் இவ்வாறு இருந்தால் கூன் நிமிரிந்து விடும் என்று சொன்னார். நான் குழியில் புதையுண்டு ஒருநாள் ஆகப் போகிறது. ஆகையால் மண்ணைத் தோண்டி என்னை மேலே எடு என்றான்.

அதன்படியே கூன் வண்ணானும் மண்ணைத் தோண்டி தெனாலிராமனை மேலே தூக்கி விட்டான். இப்போது தெனாலிராமனைப் பார்த்தான். அவன் முதுகு கூன் இல்லாமல் நேராக நிமிர்ந்து நின்றான். இதை உண்மை என்று நம்பிய கூன் வண்ணான் அதே குழியில் அவனைக் கழுத்தளவு புதைக்கச் சொன்னான். தெனாலிராமனும் கூன் வண்ணானை அவ்வாறே செய்தான்.

உடனே தெனாலிராமன் அவ்விடத்தைவிட்டு ஒரே ஓட்டமாக ஓடி விட்டான். சிறிது நேரத்தில் பணியாட்கள் யானையுடன் அங்கு வந்தனர். யானையை விட்டு குழியில் புதையுண்ட மனிதனின் தலையை இடறச் செய்தனர். கூன் வண்ணான் தலை சின்னா பின்னமாகியது.

அச்சமயத்தில் தன் அரண்மனை அதிகாரிகளும் போலிச் சாமியாரைக் கொன்றது நியாம்தான் அதனால் தெனாலிராமனைக் கொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.

அந்நேரத்தில் பணியாட்களும் அங்கு வந்து "தெனாலிராமனின் தலையை யானையை விட்டு இடறிவிட்டோம்" என்று தெரிவித்தனர்.

தெனாலிராமனின் மரணத்துக்கு மன்னர் வருந்திக் கொண்டிருக்கையில் மன¢னர் முன் தெனாலிராமன் தோன்றினான். தெனாலிராமனைக் கண்ட மன்னர் மகிழ்ந்தார். நீ யானையால் இறந்ததாகப் பணியாட்கள் தெரிவித்தார்களே........ பின் எப்படி உயிரோடு வந்தாய் என்று வினவினார்.

அதற்குத் தெனாலிராமன் நடந்தவற்றை விவரமாகக் கூறினான். மன்னரும் அவனுடைய சாமர்த்தியத்துக்கு மனமாரப் பாராட்டி பரிசு வழங்கினார்.

Link to comment
Share on other sites

பாடல்களும் அதன் நையாண்டி பதில்களும்

நான் யாரு எனக்கேதும் தெரியலையே!

முதல்ல ஆடியன்ஸுக்கே தெரியலை. முன்னாலே வா..

ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்

அய்யோ பாவம்! திக்கு வாய் போலிருக்குது!

காலங்களில் அவள் வசந்தம்

அப்போ கோலங்களிலே யாரு தேவயானியா?

தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா

உங்கப்பா என்ன கேஸ் கம்பேனிலியா வேலை செய்றாரு?

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்டேன்

மத்தவங்களுக்கெல்லாம் என்ன மூக்கிலுயா கேக்கும்?

மரத்தை வச்சவன் தண்ணீ ஊத்துறான்

மத்தவங்களேல்லாம் என்ன மண்ணெண்ணையா ஊத்துறாங்க?

ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ?

அவரை இப்ப யாசர்பாடிக்கு ட்ரான்ஸ்வர் பண்ணிட்டாங்க

தூது வருமா தூது வருமா

முன்னாடியிருந்து ரெண்டு தொடப்பம் வருமா? வேற பாட்டு பாடு

நேத்து ராத்திரி யம்மா

இன்னைக்கு ராத்திரு உங்கப்பாவா??

தகடுன்னா தமிழ்நாட்டுக்கு தெரியும்

அப்போ அலுமினியம் ஆந்த்ரா வரைக்கும் தெரியுமா?

மே மாசம் தொண்ணுதெட்டில் மேஜர் ஆனேனே!

அப்போ எப்போ சுந்தர்ராஜன் ஆனீங்க?

ஒளியிலே தெரிவது தேவதையா?

டேய் நல்லா பாரு அது குண்டு பல்ப்பு

என்ன சத்தம் இந்த நேரம்?

அது ஒன்னும் இல்லை. வயிறு கொஞ்சம் சரியில்லை

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாண்டு : ஜோ, நீ வெறும் வயித்துல எத்தனை சப்பாத்தி சாப்பிடுவே?

ஜோ : ம்ம்ம்….ஏழு சாப்பிடுவேன்.

பாண்டு : அட மக்கு, முதல் சப்பாத்தி சாப்பிட்டப் பிறகு, அத வெறும் வயிறுன்னு சொல்ல முடியாதே!! அப்புறம் எப்படி ஏழுன்னு சொல்லுவ!!!

ஜோ : அதானே!!!!

(வீட்டுக்குச் சென்றவுடன், மனைவியிடம்…)

ஜோ : நீ வெறும் வயித்துல எத்தனை சப்பாத்தி சாப்பிடுவே?

மனைவி : அதுக்கென்ன….அஞ்சு சாப்பிடுவேன்.

ஜோ : ஓ!!! நீ மட்டும் ஏழுன்னு சொல்லிருந்தா உனக்கு ஒரு சூப்பர் பதில் சொல்லிருப்பேன். சே!

***

நேர்காணல் அதிகாரி : நீங்கள் எங்கே பிறந்தீர்கள்?

ஜோ : செக்கோஸ்லேவேகியா சார்.

அதிகாரி : அதற்கு ஆங்கிலத்தில் கரெக்ட் ஸ்பெல்லிங் சொல்லுங்கள்.

ஜோ : ஓ..சாரி சார்….மறந்துட்டேன். நான் கோவாவில பிறந்தேன்.

***

அலெக்ஸாண்டர் : என்னோட அகராதியில "முடியாது" என்ற வார்த்தையே இல்லை.

ஜோ : அகராதியை வாங்கும்போதே பார்த்து வாங்க வேணாமா? இப்போ சொல்லி என்ன பண்றது!

***

நிருபர் : ஜாலியன் வாலாபாக் பத்தி என்ன நினைக்கிறீங்க?

அரசியல்வாதி ஜோன்ஸ் : ரோஜா பாக்கு, நிஜாம் பாக்கு, கொட்டப் பாக்கு போட்டிருக்கேன். இந்த ஜாலியன் வாலாபாக்கைப் போட்டதே இல்லியே!

***

டிரைவர் : சாரி சார்…பெட்ரோல் உறைஞ்சு போச்சு. இனிமேல் வண்டி முன்னாடி ஒரு அடிகூட நகராது.

ஜோ : அப்படியா.. பரவால்ல.. ரிவர்ஸ் எடு.. வீட்டுக்காவது போய்ச் சேரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிதியடிச் சடங்கு.

ஒருமுறை அரசர் கி. தே. ராயர்( கிருஷ்ணதேவராயர் என எழுத அலுப்பாக இருக்கு. அதனால் இனி கிருஷ்ணதேவராயரின் முழுப் பெயரையும் கிருஷ்ணதேவராயர் என்று எழுதாமல் கி. தே. ராயர் என்றே குறிப்பிடுகிறேன். நீங்கள் அலுப்புப் படாமல் கிருஷணதேவராயர் என்றே வாசிக்கவும்.) தெனாலிராமனை வெகு அலட்சியமாகப் பேசிவிட்டார். ராமனும் மிக மனம் வருந்தினான்.

அரசர்: என்ன நீ பெரிசாக உன் புத்திசாலித் தனத்தைக் காட்டுகிறாய்? என்னைச் சிரிக்க வைக்க அந்த நேரத்தில ஏதோ சேட்டைகள் செய்கிறாய். நாங்களும் சிரித்து வைக்கிறோம்.

தெ.ராமன்: அரசே நீங்கள் சொல்வது எனக்கு வேதனையாக இருக்கிறது. சரி! இனி நீங்களே அசந்து போகிற அளவுக்கு என்னால செய்ய முடியும்! அதற்கு தாங்கள் சம்மதித்தால் இதை ஒரு சவாலாகவே செய்கிறேன். ஆனால் இவ் விடயம் நம் இருவருக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றான்.

அரசர்: என்ன செய்வாய் முன்பு என்னையும் ராஜகுருவையும் ஒன்றாக அடைத்து வைக்க ஏதோ செய்தாயே அப்படியா?

தெ.ராமன்: இல்லையில்லை! நான் ஒருமுறை செய்வது போல் மறுமுறை செய்வதில்லை.

அரசர்: அப்படியாயின் சரி! எங்கே உன் திறமையைக் காட்டலாம்.

தெ.ராமன்: சரி! வெகு சீக்கிரமே செய்து காட்டுகிறேன்.

அரசர்: என்ன செய்யப் போகிறாய்? நீ பெரிய யுக்திக்கரெனாச்சே! முடிந்தால் முன்கூட்டியே என்னிடம் சொல்லிவிட்டுத்தான் செய்யேன் பார்க்கலாம்? ம்...ம் அதுதான் உன்னால் முடியாதே! என நகைத்தார்.

தெ. ராமன்: ஏன் முடியாது. இம்முறை சொல்லிவிட்டே செய்கிறேன். என்ன செய்வது என யோசிக்கக்கூட தாங்கள் அவகாசம் தரவில்லை! இருந்தாலும் பரவாயில்லை. திடீரென ஒரு யோசனை இப்போதுதான் வந்தது. அதைச் சொல்லிவிட்டே செய்கிறேன்.

அரசர்: சொல்...சொல்..'ஆர்வமுடன்"

தெ.ராமன்: மகாமன்னரே! தங்களது விருப்பத்துக்குரிய யாராதது ஒருவர், உங்களைத் தன் மிதியடியால்(செருப்பால். கொஞ்சம் மரியாதையாக மிதியடி) மூன்றுமுறை அடிக்கும்படி செய்கிறேன். தவறினால் எனக்குச் சரியான தன்டனை தாங்கள் தரலாம்.

அரசர்: என்ன! நீ சொல்வதைப் பார்த்தால் எனக்கு வேண்டியவரைக் கொன்டே என்னைச் செருப்பால் அடிப்பிக்கப் போவதாகச் சொல்கிறாய்! அப்படித்தானே?

தெ. ராமன்: தாங்கள் அடியேனை மன்னிக்க வேண்டும். நான் அப்படித்தான் சொன்னேன். அது என்னால் முடியும் என்றே நினைக்கின்றேன். என்றான் பணிவாக... .

அரசர்: என்னது? முடியுமா உன்னால்? முடிப்பாயா? ... எங்கே செய் பார்ப்போம். அப்படிச் செய்யாவிட்டால் உன்னைத் தொலைத்துவிடுவேன் தொலைத்து...

தெ.ராமன்: அரசே! இது நமக்குள் இருக்கட்டும். ஒரு மூன்றுமாதகால அவகாசம் கொடுங்கள். சில சமயம் நான் தோற்று என்னைத் தன்டிக்கும் நிலைவந்தால்கூட இது வெளியே வர வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போய் விட்டான்.

அச் சமயத்தில் அரசருக்கும் மலைநாட்டரசன் மகளுக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது. ராமன் அந்த அரசனிடம் சென்றான்.

தெ.ராமன்: மலைநாட்டுமன்னா! எங்கள் அரசர் கி.தே. ராயர் சாத்திர சம்பிரதாயப்படி எல்லாம் நடக்க வேண்டுமென்பதில்பெருவிருப்ப

Link to comment
Share on other sites

  • 1 month later...

செவிடா, இல்லையா?

ஒரு மனிதருக்கு கொஞ்ச நாளாகவே ஒரு சந்தேகம்.. தன் மனைவிக்கு சரியாக காது கேட்கவில்லையோ என்று. அதை நேரடியாக அவளிடம் கேட்பதற்கும் அவருக்கு தர்ம சங்கடமாக இருந்தது. குறைபாடு இருக்கிறதா, இல்லையா என்று தெரிந்தால்தானே அதற்கு ஏற்ற வைத்தியம் பார்க்க முடியும் என்றும் அவருக்கு குழப்பமாக இருந்தது.

ஒன்றும் புரியாமல் தனது குடும்ப டாக்டரிடம் ஆலோசனை கேட்டு போனார் அந்த மனிதர். டாக்டர் ஒரு எளிய பரிசோதனை செய்து பார்க்கும்படி அவரிடம் சொன்னார். “உங்க மனைவியிடமிருந்து சுமார் 50 அடி தூரத்தில் நின்று சாதாரண குரலில் அவரிடம் ஏதாவது பேசுங்கள். அதை அவர் காதில் வாங்கிக் கொண்டு பதில் சொல்கிறாரா என்று பாருங்கள். இல்லையென்றால், 10 அடி நெருங்கி 40 அடி தூரத்தில் நின்று பேசுங்கள். அதற்கும் பதில் இல்லை என்றால், இன்னும் 10 அடி நெருங்கி சென்று பேசுங்கள். இப்படியாக தூரத்தை குறைத்துக் கொண்டே சென்று, எவ்வளவு தூரத்தில் இருக்கும்போது அவர் பதில் சொல்கிறார் என்பதை கவனித்து, என்னிடம் சொல்லுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.

அன்று மாலை அந்த மனிதர் வீட்டிற்கு சென்றபோது அவரது மனைவி சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தாள். ‘இதுதான் சரியான சந்தர்ப்பம்’ என்று நினைத்த அவர், 50 அடி தூரத்தில் நின்று, சாதாரணமாக பேசும் குரலில், “இன்னைக்கு ராத்திரி வீட்டில என்னம்மா சாப்பாடு?” என்றார். பதில் வரவில்லை.

40 அடி தூரத்திற்கு நெருங்கி சென்று, மீண்டும், “இன்னைக்கு ராத்திரி வீட்டில என்னம்மா சாப்பாடு?” என்றார். பதில் வரவில்லை.

30 அடி தூரத்திலும் அதே கேள்விக்கு பதிலில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிச் சென்று, அவர் மனைவியின் முதுகிற்கு பின் நின்று கொண்டு “இன்னைக்கு ராத்திரி வீட்டில என்னம்மா சாப்பாடு?” என்றார்.

கோபத்துடன் திரும்பிய அவரது மனைவி சொன்னாள், “இதோட அஞ்சு தடவை சொல்லிட்டேன், கோழிக்கறி சாப்பாடு என்று. என்னாச்சு உங்களுக்கு?”

இதனால் அறியப்படும் நீதி யாதெனில், மத்தவங்க கிட்ட குறை கண்டுபிடிக்க போகுமுன்னாலே நம்ம கிட்டே அதே குறை இருக்கா என்று பார்த்துக் கொள்வது நல்லது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பல் மருத்துவர்

.

பல் மருத்துவர் அறையில் பெண்மணி ஒருவர் சிகிச்சைக்காக காத்திருந்தார். அவருடை முறை வந்ததும், மருத்துவரை பார்க்கச் சென்றார்.

.

மருத்துவர் அவரை பரிசோதனை செய்துவிட்டு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தனது கைக் கடிகாரத்தை பார்த்த டாக்டர், அந்த பெண்மணியிடம் வழக்கமாக பல்லை நான் பிடுங்கும் போது, பலமாக கத்துவீர்களே அதுபோல கத்துவீர்களா எனக் கேட்டார்.

உடனே அந்த பெண்மணி, இந்த சிகிச்சை எனக்கு பழகிவிட்டது. இப்போது பல்வலி அதிகம் இல்லை எனவே கத்தமாட்டேன் என்றார்.

அதைக் கேட்ட டாக்டர் இல்லை இல்லை இந்த முறை நீங்கள் தயவு செய்து அதுபோல் கத்துங்கள் என்றார்.

அந்த பெண்மணி புரியாமல் ஏன் என்று கேட்க, டாக்டர் எனக்கு அவசரமாக வேலை இருக்கிறது. வெளியே நிறைய நோயாளிகள் காத்திருக்கின்றனர். உங்கள் சத்தத்தை கேட்டு பாதிபேர் ஓடி விடுவார்கள் என்று பதில் அளித்தார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ஞாபக மறதி .

.

நடுத்தர வயது மனிதர் ஒருவர் ஞாபக மறதி நோயால் அவதிப் பட்டு வந்தார். இந்த பிரச்சனைக் காரணமாக பல சிக்கல்கள் ஏற்பட்டன. .

.

இதனையடுத்து அவரது மனைவி டாக்டரைச் சென்று பார்க்குமாறு அவரிடம் கூறினார். அவரும் அதுபோல, டாக்டரை பார்க்க சென்றிருந்தார்.

நீண்ட நேரம் காத்திருந்த பிறகு அவர் டாக்டரை பார்க்கச் சென்றார். அங்கே இருந்தவர் அவரைப் பார்த்து வியப்படைந்து, என்ன பிரச்சனை என்னை தேடி வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு அவர், எனக்கு கொஞ்ச நாட்களாக ஞாபக மறதி பிரச்சனை இருக்கிறது அதனால்தான் வந்தேன் என்று கூறினார்.

உடனே, அந்த நபர் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நான் டாக்டர் இல்லை உங்கள் வழக்கறிஞர் என்று பதில் அளித்தார்

Link to comment
Share on other sites

கை நடுக்கம்

.

நடுத்தர வயது மனிதர் ஒருவர் மருத்துவரை பார்க்க சென்றிருந்தார். நீண்ட நேரம் காத்திருந்த பிறகு அவர் மருத்துவ அறைக்கு சென்றார். மருத்துவர் அவரை பற்றி பொதுவான தகவல்களை விசாரித்து விட்டு உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டார்.

.

அதற்கு நடுத்தர வயது மனிதர், எந்த வேலையையும் தன்னால் சரியாக செய்ய முடிவதில்லை என்று கூறினார். ருத்துவர் உடனே, ஏன் அப்படி என்று கேட்டார்.

அதற்கு அவர், எனது கை எப்போதும் நடுங்கிக் கொண்டிருப்பதால்தான் பிரச்சனை என்று கூறினார்.

மருத்துவர், உங்களுக்கு குடிபழக்கம் உண்டா? நீங்கள் நிறைய குடிக்கிறீர்களா? என்று கேட்டார். தற்கு அவர், நானே நினைத்தாலும் நிறைய குடிக்க முடிவதில்லை. கிளாசில் இருக்கும் மது கை நடுக்கத்தால் கொட்டி விடுகிறது என்றார். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

குற்றவாளி : யுவர் ஆனர் .. .. 1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனா ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாதுன்னு சட்டம் சொல்லுது .. ..

நீதிபதி : ஆமா .. ..

குற்றவாளி : அப்படித் தப்பிக்கற 1000 பேர்ல நானும் ஒருத்தனா இருந்துட்டுப் போறேன் .. ..

------------------------------------------------------

தபால்காரர்: உங்க பார்சலை கொண்டுவர நான் ஏழு கிலோ மீட்டர் நடந்து வருகிறேன்.

சர்தார்: ஏன் இவ்வளவு தூரம் நடக்கறீங்க. பேசாம தபால்ல அனுப்பி இருக்கலாமே?

------------------------------------------------------

சர்தார்: (பணியாளிடம்) போயி செடிக்கு தண்ணீர் ஊத்து.

பணியாள்: நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது முதலாளி ஜி.

சர்தார்: அதனாலென்ன? குடையை எடுத்துக் கொண்டு போ.

------------------------------------------------------

சர்தார்: நேற்று ரயிலில் சரியாத்தூங்க முடியவில்லை.

நண்பர்: ஏன்?

சர்தார்: மேல் பர்த் (Upper Berth) தான் கிடைத்தது

நண்பர்: கீழுள்ளவருடன் பேசி மாற்றிக் கொண்டிருக்கலாமே?

சர்தார்: செஞ்சிருக்கலாம். ஆனா கீழே யாரும் இல்லே.

------------------------------------------------------

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.