Jump to content

அதிசயக்குதிரை


Recommended Posts

அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும் ஓர் ஆசனத்தில் அமர்ந்தான்.

மன்னர் கிருஷ்ண்தேவராயர் வந்தவுடன் சபை கூடியது. வேற்றூரிலிருந்து வந்த தத்துவஞானியை விழாவைத் தொடங்கி வைத்து விவாத மன்றத்தை ஆரம்பிக்கச் சொன்னர்.

தத்துவ ஞானியும் ஏதேதோ சொன்னார். ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. அவர் பேச்சின் இறுதியில் மாய தத்துவம் பற்றி நீண்ட நேரம் பேசினார். அதாவது நாம் கண்ணால் காண்பதும் மாயை, உண்பதும் மாயை என்று சொன்னர்.

இதைக்கேட்ட அறிஞர்கள் முதல் அரசர்வரை எவருமே வாய் திறக்கவில்லை. ராஜகுரு மௌனமாகி விட்டார்.

சுற்றும் முற்றும் பார்த்த தென்னாலிராமன் எழுந்து நின்றான்.

தத்துவஞானியைப் பார்த்து, "ஐயா தத்துவ ஞானியாரே ஏன் பிதற்றுகிறீர் நாம் உண்பதற்கும் உண்பதாக நினைப்பதற்கும் வித்தியாசமே இல்லையா?" எனக் கேட்டான்.

அதற்கு தத்துவஞானி வித்தியாசம் இல்லை என்றான்.

அதை சோரிக்க தெனாலிராமன் அரசரிடம் ஒருவிருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். விருந்து ஏற்பாடு ஆயிற்று.

அனைவரும் பந்தியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார். தத்துவஞானிக்கு உணவு பரிமாறியும் சாப்பிடக்கூடாது எனக் கட்டடை இட்டுவிட்டனர். அதனால் தத்துவஞானி தன் தவறை உணர்ந்தான். இதைப்பார்த்த அரசர் தெனாலிராமனின் திறமையைப் பாராட்டி பொன் பரிசளித்தது மட்டுமில்லாமல் அன்று முதல் அவரது அரசவை விகடகவியாக்கினார்.

Link to comment
Share on other sites

கிடைத்ததில் சம பங்கு

ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்வதால் தெனாலிராமன் இருந்தால் ஏதாவது கோமாளித்தனம் செய்து நிகழ்ச்சியை நடைபெறா வண்ணம் தடுத்துவிடுவான் என எண்ணி தெனாலிராமனை மட்டும் நாடக அரங்கினுள் விட வேண்டாமென்று வாயிற்காப்போனிடம் கண்டிப்புடன் சொல்லி விட்டார் மன்னர்.

இதை அறிந்தான் தெனாலிராமன் எப்படியாவது அரங்கத்தினுள் சென்று விடுவது என தீர்மானித்துக் கொண்டான்.

நாடகம் நடைபெறும், அரங்கின் வாயிலை நெருங்கினான் தெனாலிராமன். உள்ளே செல்ல முற்பட்டான்.

வாயில் காப்பானோ அவனை உள்ளே விட மறுத்து விட்டான். மீண்டும் மீண்டும் கெஞ்சினான். வாயிற்காப்போன்

மசியவில்லை.

இந்நிலையில் தெனாலிராமன் ஒரு தந்திரம் செய்தான். "ஐயா, வாயிற்காப்போரே என்னை உள்ளே விட்டால் என்னுடைய திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத் தருகிறேன்" என்றான். இதைக் கேட்ட வாயிற் காப்போன் முதலில் சம்மதிக்காவிட்டாலும் பின்னர் கிடைப்பதில் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டான்.

அரங்கத்தினுள் செல்ல வேண்டுமானால் மீண்டும் இன்னொரு வாயிற் காப்போனை சமாளிக்க வேண்டியிருந்தது. அவனும் தெனாலிராமனை உள்ளே விட மறுத்தான். முதற் வாயிற் காப்போனிடம் சொல்லியதையே இவனிடமும் சொன்னான். இவனும் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டுவிட்டான்.

ஒருவருக்கும் தெரியாமல் தெனாலிராமன் ஓர் மூலையில் போய் உட்கார்ந்து கொண்டான்.

அப்போது கிருஷ்ணன் ஆக நடித்தவன் வெண்ணை திருடி கோபிதைகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. உடனே மூலையில் இருந்த தெனாலிராமன் பெண் வேடம் அணிந்து மேடையில் தோன்றி கிருஷ்ணன் வேட்ம் போட்டு நடித்தவனை கழியால் நையப் புடைத்து விட்டான். கிருஷ்ண வேடதாரி வலி பொறுக்கமாட்டாமல் அலறினான்.

இதைப்பார்த்த மன்னர் கடுங்கோபமுற்று மேடையில் பெண் வேடமிட்டுள்ள தெனாலிராமனை அழைத்து வரச்செய்தார் பின் "ஏன் இவ்வாறு செய்தாய்" என வினவினார். அதற்குத் தெனாலிராமன் "கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான் இப்படியா இவன் போல் அவன் அலறினான்" இதைக் கேட்ட மன்னருக்கு அடங்காக் கோபம் ஏற்பட்டது. தெனாலிராமனுக்கு 30 கசையடி கொடுக்குமாறு தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இதைக் கேட்ட தெனாலிராமன் "அரசே இப்பரிசை எனக்கு கொடுக்க வேண்டாம். ஏனென்றால் எனக்குக் கிடைக்கும் பரிசை ஆளுக்குப் பாதி பாதி தருவதாக நம் இரண்டு பாயிற்காப்போன்களிடம் உறுதியளித்து விட்டேன்.

ஆகையால் இப்பரிசினை, அவர்கள் இருவருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுங்கள் " என்று கேட்டுக் கொண்டான்.

உடனே மன்னர் அவ்விரு வாயிற்காப்போன்களையும் அழைத்து வரச்செய்து இது குறித்து விசாரித்தார்.

அவ்விருவரும் உண்மையை ஒத்துக் கொண்டார்கள்.

அவ்விருவருக்கும் தலா 15 கசையடி கொடுக்குமாறு மன்னர் பணித்தார். மேலும் தெனாலிராமனின் தந்திரத்தைப் பாராட்டி அவனுக்குப் பரிசு வழங்கனார்.

தென்னாலிராமன் கதைகள்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

நாசா முதலாவதாக விண்வெளிக்கு முதன்முதலாக விண்வெளி வீரர்களை அனுப்பும் போது ஒரு பிரச்சனையை எதிர்நோக்கினார்கள்.அதாவது சைபர் புவியீர்ப்பில் போல் பொயின்ட் பேனாவால் எழுத முடியாதென்று.ஆகவே நாசா விஞ்ஞானிகள் மிக நீண்ட காலத்தை செலவு செய்து,12 பில்லியனை செலவு செய்து ஒர் பேனாவினை கண்டு பிடித்தார்கள்.அதனால் 0 புவியீர்ப்பில் எழுதலாம்,தலைகீழாக எழுதலாம்,தண்ணீருக்குள் எழுதலாம், கண்ணாடி உட்பட எந்த மேற்பரப்பிலும் எழுதலாம்.அத்தோடு 0க்கும் 300 பாகை செல்சியசிலும் எழுதக்கூடியதாக இருந்தது.

ஆனால் ரஸ்யர்கள் விண்வெளிக்கு செல்லும் போது பென்சிலை பாவித்தார்கள்.

Link to comment
Share on other sites

கதை எல்லாம் நல்லா இருக்கு நுணாவிலன் அண்ணா!! :)

Link to comment
Share on other sites

12 பில்லியன் செலவு செய்து பேனாவை கண்டுபிடிச்சும் பென்சிலை பாவித்தார்களா?

நல்ல விஞ்ஞானிகள்.

Link to comment
Share on other sites

சரியா வாசியுங்கோ நிலா.12 பில்லியன் செல்வளித்தது அமெரிக்கன்.பென்சில் பாவித்தது ரஸ்யன்.தத்துவம் 1. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?2. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.3. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது4. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.5. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.6. அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை.7. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.8. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?9. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.10. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.11. செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.12. ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.13. என்னதான் கராத்தேயிலே பிளாக் பெல்ட் வாங்கினாலும், சொறி நாய் தொரத்தினா ஓடித்தான் ஆகணும்.

Link to comment
Share on other sites

ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால்

1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது

நல்லாக இருக்கு.

Link to comment
Share on other sites

கௌண்டமணி செந்தில் ஒரு கலந்துரையாடல்

டேய் பச்சை மிளகாய் தலையா எங்கடா போயிட்டு வர்றே.

ஓட்டு போட்டுட்டு வந்தண்ணே.

ஏன்டா அந்த கருமத்தை போட்டே.

ஒரு சந்தேகம் அண்ணே.

எதை வேண்ணாலும் கேளு ஆனா கொழந்த எங்கேர்ந்து வந்துதன்னு மட்டும் கேக்காதே.

இல்லை அண்ணே எலெக்ஷன்னா என்ன அண்ணே.

அப்படி வாடி. இந்த ஆல்-இன்-ஆல் அழகுராஜாவோட அறிவைப்பத்தி தெரிஞ்ச ஒரே ஆள் நீதான்டா.

சொல்லுங்கண்ணே.

அது எலெக்ஷன் இல்லை கலெக்ஷன். காசு பண்ற வேலைடா லக்ஷ்மி வெடி வாயா.

அப்ப ஏன்ணே கையில கறுப்பு புள்ளி வெக்கறாங்க.

அப்படி கேளுடா. டேய் எத்தனை பேரை முட்டாள் பண்ணோம்னு ஒரு கணக்கு வேண்டாமா அதுக்கு தான்.

அப்ப 5 வருஷதுக்கு ஒரு தடவை ஆட்சி ஏன்ணே மாறுது.

டேய் நம்ம தமிழ் மக்களுக்கு அறிவே இல்லைடா. ஒரு கட்சியையே 20 வருஷம் ஆட்சி செய்யவுட்டா அவன் சொத்தை சுருட்டி சோர்ந்து போய் ஒரு வேளை நாட்டுக்கு நல்லது பண்ணுவான்டா. ஆனா நம்ம தமிழ் மக்கள் என்ன பண்றாங்க – 5 வருஷதுக்கு ஆட்சி மாத்தி விடறாங்க. அவன் 5 வருஷம் சம்பாதிச்ச காசை 5 வருஷம் செலவு பண்ணிட்டு மறுபடியும் வந்துடறான் கொள்ளை அடிக்க.

அதுக்கு என்ன பண்றது அண்ணே.

அதுக்கு நான் மதுரை வீரனுக்கு கெடா வெட்டி கூழு ஊத்தப் போறேன்.

கெடா வாங்கிட்டீங்களா.

டேய் நாட்டுக்காக சொந்த காசு போட்டு கெடா வாங்கறதுக்கு நான் என்ன உன்னை மாதிரி பேறிக்கா மண்டையனா.

அப்புறம்.

நான் கெடான்னு சொன்னது உன்னைத் தான்டா ஜார்ஜ் புஷ் வாயா.

--------------------

Link to comment
Share on other sites

தத்துவம் இவ்வளவுதாங்க

1. நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது.

2. ஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... காலேஜ் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... ஆனால் ப்ளட் டெஸ்ட்லே பிட் அடிக்க முடியாது.

3. என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது

4. ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு

5. என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும்.

6. நீ என்னதான் வீரனா இருந்தாலும் குளிர் அடிச்சா திரும்ப அடிக்க முடியாது.

7. காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!

8. பல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம். ஆனா கண்ணு வலின்னா கண்ணைப் புடுங்க முடியுமா?

9. இட்லி பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்கை சாப்பிட முடியாது.

10. பாண்ட் போட்டு முட்டிப்போட முடியும். ஆனா முட்டிப் போட்டு பாண்ட் போட முடியுமா?

Link to comment
Share on other sites

12 பில்லியன் செலவு செய்து பேனாவை கண்டுபிடிச்சும் பென்சிலை பாவித்தார்களா?

நல்ல விஞ்ஞானிகள்.

வெண்ணிலா என்னாச்சு உங்களுக்கு. எதையும் மேலோட்டமாக பார்க்காமல் முழுவதுமாக படிப்பதில்லையா??? இங்கு நாசா எனக் குறிப்பிடப்படுவது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம். பென்சிலை பாவித்தது ரஸ்யர்கள்.

நாசா முதலாவதாக விண்வெளிக்கு முதன்முதலாக விண்வெளி வீரர்களை அனுப்பும் போது ஒரு பிரச்சனையை எதிர்நோக்கினார்கள்.அதாவது சைபர் புவியீர்ப்பில் போல் பொயின்ட் பேனாவால் எழுத முடியாதென்று.ஆகவே நாசா விஞ்ஞானிகள் மிக நீண்ட காலத்தை செலவு செய்து,12 பில்லியனை செலவு செய்து ஒர் பேனாவினை கண்டு பிடித்தார்கள்.அதனால் 0 புவியீர்ப்பில் எழுதலாம்,தலைகீழாக எழுதலாம்,தண்ணீருக்குள் எழுதலாம், கண்ணாடி உட்பட எந்த மேற்பரப்பிலும் எழுதலாம்.அத்தோடு 0க்கும் 300 பாகை செல்சியசிலும் எழுதக்கூடியதாக இருந்தது.

ஆனால் ரஸ்யர்கள் விண்வெளிக்கு செல்லும் போது பென்சிலை பாவித்தார்கள்.

Link to comment
Share on other sites

வெண்ணிலா என்னாச்சு உங்களுக்கு. எதையும் மேலோட்டமாக பார்க்காமல் முழுவதுமாக படிப்பதில்லையா??? இங்கு நாசா எனக் குறிப்பிடப்படுவது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம். பென்சிலை பாவித்தது ரஸ்யர்கள்.

இப்ப என்ன சொல்ல வாறியள் வெண்ணிலா நுனிப்புல் மேயுறா னு சொல்ல வாறியளா? :lol::lol:

நான் சொன்னது நாசா விஞ்ஞானிகள் உவ்வளவு செலவு செய்து கண்டுபிடித்த பேனா போல் ரஸ்யர்கள் கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லையெனிலும் பென்சிலைப் பாவித்தார்கள் ரஸ்ய விஞ்ஞானிகள். சோ நாசா விஞ்ஞானிகளை விட ரஸ்யர்கள் மேலானவர்கள் புத்திசாலிகள். நாசா விஞ்ஞானிகள் உவ்வளாவு செலவு செய்தும் அவர்கள் பாவம் என சொன்னேன். நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததைக் கூட பொருட்படுத்தாமல் ரஸ்யர் பென்சிலைப் பாவித்தனர் என சொன்னேன்.

இப்ப என்ன உங்களுக்கு புரியலை. நிலா மீது ஏதாவது தனிப்பட்ட பிரச்சினையா? எனக்கு எதுவுமே ஆகல்லை. நல்லாக தான் இருக்கிறேன் :lol:

Link to comment
Share on other sites

நிலா அக்கா கூல்டவுன் என்ன குடிக்க போறீங்க நிலா அக்கா!! :lol:

Link to comment
Share on other sites

ஸ்ரோபரி அல்லது வனிலா ஐஸ்கிறீம் கூலாக்குமென நினக்கிறேன்.so strawberry or vanala ice cream for Nila please.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச்சே. அமெரிக்கர்கள் அவசரப்பட்டு, வெட்கம் மானத்தை இழந்து, தன்மானத்தை விட்டு ரசியர்களிடம் கேட்டு விட்டார்கள். ரசியர்களும் இதுதான் சந்தர்பமென்று அமெரிக்கர்களைப் பழிவாங்குவதற்காக 'தயாரிப்புச் செலவு கூடிய " பென்சிலை அவர்களுக்குக் குடுத்திருக்கிறார்கள்.

அவர்கள் மடடும் நம்மிடம் கேட்டிருந்தால், கிணத்தடிக்குப் பக்கத்திலிருக்கிற சுடுதண்ணி அடுப்பை தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டு நல்ல வீர விறகுக் கரிக்கட்டி நாலைப் பொறுக்கி அவர்களிடம் கொடுத்திருக்கலாம். 'தயாரிப்புச் செலவும் மிக மிக கம்மி". அவர்களும் வேண்டியமட்டும் ரொக்கட்டின் மேல்சுவர், பக்கச்சுவர் என்று எல்லா இடத்திலும் கிறுக்கித் தள்ளி கொண்டு போய்க்கொண்டே இருக்கலாம்.

பி.கு: நம்ம அறிவு உலகஅளவுல பிரபலமாவதற்கு ஏதோவொன்டு தடையாகக் கிடக்கு. :lol::lol:

Link to comment
Share on other sites

ச்சே. அமெரிக்கர்கள் அவசரப்பட்டு, வெட்கம் மானத்தை இழந்து, தன்மானத்தை விட்டு ரசியர்களிடம் கேட்டு விட்டார்கள். ரசியர்களும் இதுதான் சந்தர்பமென்று அமெரிக்கர்களைப் பழிவாங்குவதற்காக 'தயாரிப்புச் செலவு கூடிய " பென்சிலை அவர்களுக்குக் குடுத்திருக்கிறார்கள்.

அவர்கள் மடடும் நம்மிடம் கேட்டிருந்தால், கிணத்தடிக்குப் பக்கத்திலிருக்கிற சுடுதண்ணி அடுப்பை தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டு நல்ல வீர விறகுக் கரிக்கட்டி நாலைப் பொறுக்கி அவர்களிடம் கொடுத்திருக்கலாம். 'தயாரிப்புச் செலவும் மிக மிக கம்மி". அவர்களும் வேண்டியமட்டும் ரொக்கட்டின் மேல்சுவர், பக்கச்சுவர் என்று எல்லா இடத்திலும் கிறுக்கித் தள்ளி கொண்டு போய்க்கொண்டே இருக்கலாம்.

பி.கு: நம்ம அறிவு உலகஅளவுல பிரபலமாவதற்கு ஏதோவொன்டு தடையாகக் கிடக்கு. :):lol:

பேசாமல் நீங்கள் வெண்ணிலாவிடம் ஐடியா கேளுங்கள். அப்புறம் பாருங்கள் நீங்கள் எங்கேயோ போயிடுவீங்க. :lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

பேசாமல் நீங்கள் வெண்ணிலாவிடம் ஐடியா கேளுங்கள். அப்புறம் பாருங்கள் நீங்கள் எங்கேயோ போயிடுவீங்க. :lol::lol::lol::lol:

:):lol::) என்னமோ என்னை நக்கலடிக்கிற போல இருக்குது. நான் என்ன ஐடியா சொல்லிட்டா இருக்கிறேன் எல்லோருக்கும்? :)

Link to comment
Share on other sites

ஸ்ரோபரி அல்லது வனிலா ஐஸ்கிறீம் கூலாக்குமென நினக்கிறேன்.so strawberry or vanala ice cream for Nila please.

இல்லை பரவாயில்லை. No Thanks Nunaa :lol:

Link to comment
Share on other sites

:(:wub::wub: என்னமோ என்னை நக்கலடிக்கிற போல இருக்குது. நான் என்ன ஐடியா சொல்லிட்டா இருக்கிறேன் எல்லோருக்கும்? :lol:

நிலா அக்கா இதற்கு போய் அழுறிங்க அது தான் பேபி வந்துட்டுது தானே ஓ அதற்கு அழவில்லையா :icon_mrgreen: !!அப்ப என்னதிற்கு அழுறீங்க.......!! :(

Link to comment
Share on other sites

நல்லாக கதைச்ச வசம்பண்ணாவுக்கு என்னமோ என் மேலை கோவம் வந்து என்னமோ போல கதைக்கிறார் அதுதான் அழுறேன் ஜம்மு

Link to comment
Share on other sites

நல்லாக கதைச்ச வசம்பண்ணாவுக்கு என்னமோ என் மேலை கோவம் வந்து என்னமோ போல கதைக்கிறார் அதுதான் அழுறேன் ஜம்மு

அட வசபண்ணா சொன்னதிற்காக அழுறீங்க அட நம்ம வசபண்ணா இப்ப பேபியை பற்றியும் என்னவோ எல்லாம் சொல்லுவார் ஆனா ரொம்ப நல்லவர் :) எவ்வளவு தான் என்ன சொன்னாலும் கோவிக்கவே மாட்டார் என்ன வசபண்னா நான் சொல்லுறது சரி தானே :( !!இதுக்கு ஜம்முவின் அக்கா அழுறதா சா எதிர்கட்சி என்ன நினைப்பீனம் அழாம வாங்கோ பேபி ஜஸ்கீரிம் வாங்கி தாரேன் அக்காவிற்கு!! :lol:

Link to comment
Share on other sites

அட வசபண்ணா சொன்னதிற்காக அழுறீங்க அட நம்ம வசபண்ணா இப்ப பேபியை பற்றியும் என்னவோ எல்லாம் சொல்லுவார் ஆனா ரொம்ப நல்லவர் :) எவ்வளவு தான் என்ன சொன்னாலும் கோவிக்கவே மாட்டார் என்ன வசபண்னா நான் சொல்லுறது சரி தானே :( !!இதுக்கு ஜம்முவின் அக்கா அழுறதா சா எதிர்கட்சி என்ன நினைப்பீனம் அழாம வாங்கோ பேபி ஜஸ்கீரிம் வாங்கி தாரேன் அக்காவிற்கு!! :lol:

வசம்பண்ணாக்கு என்னமோ ஆச்சு போல அதை நினைச்சு தான் அழுகிறேன் ஜம்மு

Link to comment
Share on other sites

சா வசபண்ணா ரொம்ப நல்லவர் அக்கா...... :(

Edited by Jamuna
Link to comment
Share on other sites

பேசாமல் நீங்கள் வெண்ணிலாவிடம் ஐடியா கேளுங்கள். அப்புறம் பாருங்கள் நீங்கள் எங்கேயோ போயிடுவீங்க. :lol::unsure::):unsure:

எங்கே போவேன் வசபண்ணா!! :(

Edited by Jamuna
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.