Jump to content

உதடுகளுக்கு என்ன தேவை?


Recommended Posts

பார்ப்பவர்களை சட்டென்று கவரும் உதடுகளுக்குத் தேவை லிப்ஸ்டிக். உங்கள் மூடு, உடை, விருப்பம் ஆகியவற்றிற்கு ஏற்ப நிறத்தை பயன்படுத்த சிறந்த இடம் உதடுகள்தான்! இளஞ்சிவப்பு முதல் பிரவுன் வரை, வைலெட் முதல் கறுப்பு வரை எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்!

லிப்ஸ்டிக் வெவ்வேறு வகைகளில் கிடைக்கும்.

· கிளாஸ்:- இது பளபளப்பானது, அதே நேரத்தில் மிகக் குறைந்த அளவில் நிறத்தை தரக் கூடியது. லேசான நிறம் பெற சிறந்தது. ஆனால் அதிக நேரம் நீடிக்காது.

குறிப்பு:- லிப் பென்ஸிலால் உதடுகளில் நிறத்தை பூசிவிட்டு லிப் கிளாஸ் தடவினால், நீண்ட நேரம் நீடிக்கும்.

· மெட்டாலிக் (ஷிம்மர்):- இதைப் பார்த்தால் அதிக நிறம் கொண்டது என்று தோன்றலாம் ஆனால் இதைத் தடவினால் லேசான நிறத்தைத் தரும். வெளிச்சத்தில் மின்னும் தன்மை கொண்டது.

குறிப்பு:- அதிக அளவில் நிறத்தை விரும்பினால், மேட் லிப்ஸ்டிக்கை உதடுகளில் பூசிய பின்னர் இதைத் தடவலாம்.

· க்ரீம்:- இதில் அதிக அளவில் கன்டிஷனரும், மாய்ஸ்சுரைஸரும் உள்ளன. உதடுகளுக்கு மென்மையான தோற்றத்தைத் தரக் கூடியது, அதே நேரத்தில் அதிக அளவில் நிறமும் பெறலாம்.

குறிப்பு:- உதடுகளின் வெளிப்புறத்தை லிப் பென்ஸிலால் வரைந்துவிட்டு க்ரீம் லிப்ஸ்டிக்கைத் தடவினால் உதட்டைவிட்டு வெளியே வராது.

· மேட்:- ஆழமான மற்றும் அதிக அளவில் நிறத்தைப் பெற சிறந்தது மேட் லிப்ஸ்டிக். இதில் பளபளப்பு இருக்காது, அதே நேரத்தில் உதடுகளை உலர வைக்கும் தன்மை கொண்டது.

குறிப்பு:- உதடுகள் உலாராமல் இருக்க முதலில் மாய்ஸ்சுரைஸரைத் பூசி அதன் பிறகு மேட் லிப்ஸ்டிக் தடவ வேண்டும்.

· லாங் லாஸ்ட்டிங்:- அதன் பெயரைப் போலவே, இது 5 முதல் 8 மணி நேரம் நீடிக்கும். ஆழமான நிறத்தைத் தரும், எளிதில் அழிந்துவிடாது. ஆனால் உதடுகளை உலர வைக்கும்.

குறிப்பு:- உதடுகள் உலர்ந்துவிட்டதைப் போல் தோன்றினால் கன்டிஷனர் தடவலாம்.

· லிக்விட்:- திரவ வடிவில் இருக்கும் இந்த லிப்ஸ்டிக்குடன் அதைத் தடவ சிறிய பிரஷ் இருக்கும். நீண்ட நேரத்திற்கு அழியாமல் இருக்கும். பளபளப்பு தேவையென்றால் இதன் மேல் லிப் கிளாஸ் தடவலாம்.

குறிப்பு:- இது விரைவில் உலர்ந்துவிடுவதால் இதைப் பயன்படுத்தும் போது கவனம் தேவை.

லிப் பென்ஸில் :- இது உதடுகளை மேலும் அழகாக்குகிறது.

· லிப்ஸ்டிக்கின் நிறத்தை அதிகமாக்க, லிப்ஸ்டிக் தடவுவதற்கு முன் லிப் பென்ஸில் தடவலாம்.

· லிப் பென்ஸில் தடவுவதால் லிப்ஸ்டிக் உதடுகளைவிட்டு வெளியே பரவாமல் இருக்கும்.

· உதடுகளைப் பெரிதாக்க உதட்டுக்கு சற்றே வெளியே லிப் பென்ஸிலால் வரைந்து, அதன் பிறகு லிப்ஸ்டிக் தடவலாம்.

· உதடுகளைச் சிறியதாக்க, உதடுகளில் ஃபவுன்டேஷன் தடவி, உதட்டுக்கு உட்புறம் லிப் பென்ஸிலால் உதட்டின் வடிவத்தை வரைய வேண்டும். அதற்குள் லிப்ஸ்டிக் தடவலாம்.

லிப்ஸ்டிக் பற்றி சில முக்கிய குறிப்புகள்:-

· உங்கள் சருமத்தின் நிறத்திற்கு ஏற்ற நிறத்தில் உள்ள லிப்ஸ்டிக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கறுப்பாக இருப்பவர்கள் வெளீர் நிறங்கள் தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

· நீங்கள் விரும்பியதைவிட வெளீர் நிறத்தில் உங்கள் லிப்ஸ்டிக் அமைந்துவிட்டால், சற்று கருமையான நிறத்தில் உள்ள லிப் பென்ஸிலால் உதடுகளில் நிறத்தைப் பூசி விட்டு அதன் பிறகு லிப்ஸ்டிக் தடவலாம். உதாரணத்திற்கு சிகப்பு நிற லிப்ஸ்டிக்குடன் பிரவுன் நிற லிப் பென்ஸில் பயன்படுத்தலாம்.

· தடவ முடியாத அளவுக்கு லிப்ஸ்டிக் குறைந்துவிட்டால் அதை எரியாமல் மீதமுள்ள லிப்ஸ்டிக்கை எடுத்து ஒரு சிறிய டப்பாவில் வைத்து பயன்படுத்தலாம். ஒன்றுக்கு அதிகமான லிப்ஸ்டிக்கை இப்படி சேர்த்துவைத்தால் அவற்றை கலந்து புதிய நிறத்தை உருவாக்கலாம்.

· நீங்கள் எப்போது லிப்ஸ்டிக் பயன்படுத்தினாலும் உதட்டைவிட்டு அது வெளியே வருகிறது என்றால் கிளாஸ் மற்றும் க்ரீம் லிப்ஸ்டிக்களைப் பயன்படுத்த வேண்டாம்.

· லிப்ஸ்டிக் மற்றும் பர்ஃப்யூமை ஃபிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

· கடைகளில் உள்ள டெஸ்ட்டர் லிப்ஸ்டிக்குகளை உதட்டில் பயன்படுத்தாதீர்கள். அது சுகாதாரமானதல்ல. விரல் நுனிகளில் தடவி சரி பாருங்கள், இது உதட்டில் பயன்படுத்துவதற்கு ஈடானது.

· தேவைப்பட்டால் கன்னங்களுக்கு ப்ளஷாக லிப்ஸ்டிகை பயன்படுத்தலாம்.

http://tamil.webdunia.com/miscellaneous/wo...070607018_1.htm

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply

ஹாஹா தகவலுக்கு நன்றி ஜமுனா.

உதுகளை விட குளிர்பானம் நெக்டோ குடிச்சாலும் சிவப்பாகும் . "அண்ணா" பற்பொடியாலை பல்லு தீட்டினாலும் சிவப்பாகும். :lol::D:D:D:o

Link to comment
Share on other sites

ஹாஹா தகவலுக்கு நன்றி ஜமுனா.

உதுகளை விட குளிர்பானம் நெக்டோ குடிச்சாலும் சிவப்பாகும் . "அண்ணா" பற்பொடியாலை பல்லு தீட்டினாலும் சிவப்பாகும். :lol::D:D:D:o

நிலா அக்கா இதுகாண்டி எப்பவும் நெக்டோ குடிக்க ஏலுமா.........அது சரி ஏன் அண்ணாவின்ட பற்பொடியை எடுகிறீங்க உங்களிற்கு பற்பொடி இல்லையா............. :P

Link to comment
Share on other sites

நிலா அக்கா இதுகாண்டி எப்பவும் நெக்டோ குடிக்க ஏலுமா.........அது சரி ஏன் அண்ணாவின்ட பற்பொடியை எடுகிறீங்க உங்களிற்கு பற்பொடி இல்லையா............. :P

ஆனால் பாருங்க உந்த நெக்டோ குடிச்சு சிவப்பாகுற கதை வெள்ளைத்தோல் உடையவருக்கு மட்டும் தான். ஹீஹீ

அண்ணா பற்பொடி தெரியாதா?

ம்ம்ம் உதட்டுச்சாயம் பூசிட்டு வெளில போகும்போது எவ்வளவோ தூசுகள் படிந்திருக்கும். ஆனாலும் அவ்வுதட்டுச்சாயம் நம்மை அறியாமலே அழிஞ்சிடும். ஆனால் அவை வயித்துக்குள் என்பது தெரியாது. :P

Link to comment
Share on other sites

ஆனால் பாருங்க உந்த நெக்டோ குடிச்சு சிவப்பாகுற கதை வெள்ளைத்தோல் உடையவருக்கு மட்டும் தான். ஹீஹீ

அண்ணா பற்பொடி தெரியாதா?

ம்ம்ம் உதட்டுச்சாயம் பூசிட்டு வெளில போகும்போது எவ்வளவோ தூசுகள் படிந்திருக்கும். ஆனாலும் அவ்வுதட்டுச்சாயம் நம்மை அறியாமலே அழிஞ்சிடும். ஆனால் அவை வயித்துக்குள் என்பது தெரியாது. :P

ஓ வெள்ளை தோல் இருகிறவைக்கு மட்டும் தானா அப்ப பேபிக்கு எப்படியாக்கும் நிலா அக்கா??? :lol:

அண்ணா பற்பொடி தெரியாது ஆனா கோபால் பற்பொடி தெரியும் சுண்டல் அண்ணா பாவிகிறவர்.............. :P

அப்ப உதட்டு சாயம் எல்லாம் வயித்துகுள்ள போகுதா அப்ப அக்காவின்ட வயித்தில........... ;) .

Link to comment
Share on other sites

ஓ வெள்ளை தோல் இருகிறவைக்கு மட்டும் தானா அப்ப பேபிக்கு எப்படியாக்கும் நிலா அக்கா??? :lol:

அண்ணா பற்பொடி தெரியாது ஆனா கோபால் பற்பொடி தெரியும் சுண்டல் அண்ணா பாவிகிறவர்.............. :P

அப்ப உதட்டு சாயம் எல்லாம் வயித்துகுள்ள போகுதா அப்ப அக்காவின்ட வயித்தில........... ;) .

அக்காண்ட வயித்தில் நெக்டோ. உது எப்படி இருக்கு?

அதுக்காக கேட்க கூடாது உதட்டுச்சாயம் வாங்க முடியாமல் நெக்டோ குடிச்சு உதட்டுக்கு சாயம் அடிக்கிறியோ னு.

Link to comment
Share on other sites

அக்காண்ட வயித்தில் நெக்டோ. உது எப்படி இருக்கு?

அதுக்காக கேட்க கூடாது உதட்டுச்சாயம் வாங்க முடியாமல் நெக்டோ குடிச்சு உதட்டுக்கு சாயம் அடிக்கிறியோ னு.

அக்காவின வயித்தில நெக்டொவும் இருக்கும்............பிறகு ஜலதோசமும் இருக்கும் எப்படி வாறது என்று எனக்கு தானே தெரியும்............... :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் இதை பாவிக்கலமா ஜம்மு பேபி :P

Link to comment
Share on other sites

நாங்களும் இதை பாவிக்கலமா ஜம்மு பேபி :P

இல்லை நீங்க கரி தான் பாவிக்கலாம் மாமோய்................ :P

எவன்யா இந்த தலைப்பை தொடங்கினவன்.

இப்படி ஒரு தலைப்பை தொடக்க யாருக்கு துணிச்சல் இருக்கும் மாஸ்டர் உங்கள் மாணவனுக்கு மட்டும் தானே நான் தான் திறந்தனான்............. :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ஏன் அதை இதை பாவிப்பான்.

நல்ல சாயம் பூசிய ஒருவரை லபக்கென்று முத்தமிட்டுவிட்டால் சரி.

உங்கள் உதடுகளிலும் ஒட்டிக் கொள்ளும்.

பி.குறிப்பு-விளைகளுக்கு நான் பொறுப்பல்ல

Link to comment
Share on other sites

நல்ல திட்டம்தான்

எதை பின்விளைவுகள் என்கின்றீர்கள்

சாயம் பூசியதால் வரும் விளைவுகளையா ?

சாயம் பூச முயன்றதால் வரும் விளைவுகளையா ?

சாயம் பூசும்போதும் வரும் விளைவுகளையா ?

Link to comment
Share on other sites

ஹாஹா தகவலுக்கு நன்றி ஜமுனா.உதுகளை விட குளிர்பானம் நெக்டோ குடிச்சாலும் சிவப்பாகும் . "அண்ணா" பற்பொடியாலை பல்லு தீட்டினாலும் சிவப்பாகும். :lol::o:lol::lol::lol:
வாவ் அருமையான தகவல் (பதில்) கீப் இட் அப் :angry: :angry:எல்லாம் இருக்கட்டும் உதுவள் இருக்கிற இடத்துக்கு பக்க்தில வாய் எண்டு ஒண்டு இருக்குத்தானே பெண்களுக்கு அதை எப்படியப்பா அடக்கிறது (இத நான் கேக்கேல்லை நம்மட சாத்து தான் கேட்டவர் ) :lol: :P :D
நல்ல திட்டம்தான்எதை பின்விளைவுகள் என்கின்றீர்கள் சாயம் பூசியதால் வரும் விளைவுகளையா ?சாயம் பூச முயன்றதால் வரும் விளைவுகளையா ?சாயம் பூசும்போதும் வரும் விளைவுகளையா ?
தம்பீ பரணீ பின் விளவு ஒண்டு தானப்பு சொண்டுக்கு சாயம் பூசினா பிறது அழகுராணி எண்ட நினைப்பு வரும் பிறகு மூக்கு மேல வரும் ஆக்களை பிடிக்க ஏலாது சரி தானே தம்பீ யமுனா நான் சொல்லுறது
Link to comment
Share on other sites

சும்மா ஏன் அதை இதை பாவிப்பான்.நல்ல சாயம் பூசிய ஒருவரை லபக்கென்று முத்தமிட்டுவிட்டால் சரி.உங்கள் உதடுகளிலும் ஒட்டிக் கொள்ளும்.பி.குறிப்பு-விளைகளுக்கு நான் பொறுப்பல்ல

அட நல்ல ஜடியாவா இருக்கு...............யாரை முத்தமிடலாம் என்று சொன்னா நான் வடிவா முத்தமிடுவனல...................பின்விளை???களிற்கு நீங்க பொறுபல்ல அப்ப முன் விளைவுகளிற்கு நீங்க பொறுப்பா.......பெரியப்பா................ :P :P

நல்ல திட்டம்தான்

எதை பின்விளைவுகள் என்கின்றீர்கள்

சாயம் பூசியதால் வரும் விளைவுகளையா ?

சாயம் பூச முயன்றதால் வரும் விளைவுகளையா ?

சாயம் பூசும்போதும் வரும் விளைவுகளையா ?

மாஸ்டர் முத்தம் இட்ட பிறகு வாற விளைவுகளை........... :P :P

Link to comment
Share on other sites

உதடுகளிற்கு

உணர்வு தேவை

உராய்வு தேவை

உறக்கம் தேவை

உல்லாசம் தேவை

மொத்த்தில்

உறவு தேவை

Link to comment
Share on other sites

வாவ் அருமையான தகவல் (பதில்) கீப் இட் அப் :angry: :angry:எல்லாம் இருக்கட்டும் உதுவள் இருக்கிற இடத்துக்கு பக்க்தில வாய் எண்டு ஒண்டு இருக்குத்தானே பெண்களுக்கு அதை எப்படியப்பா அடக்கிறது (இத நான் கேக்கேல்லை நம்மட சாத்து தான் கேட்டவர் ) :lol: :P :lol:தம்பீ பரணீ பின் விளவு ஒண்டு தானப்பு சொண்டுக்கு சாயம் பூசினா பிறது அழகுராணி எண்ட நினைப்பு வரும் பிறகு மூக்கு மேல வரும் ஆக்களை பிடிக்க ஏலாது சரி தானே தம்பீ யமுனா நான் சொல்லுறது

சின்னா அது மிகவும் இலகு.....................எப்படி வாயை அடகிறது என்றா நீங்க சரியான வடிவு என்று ஒருக்கா சொல்லுங்கோ கொஞ்ச நேரம் அப்படி இப்படி என்று வாயே திறக்கமாட்டீனம் பிறகு எனக்கு சொல்லுறதில்லை சொல்லிட்டன் தாத்தா.............. B) :P

ஆமாம் சாயம் பூசின பிறகு பிடிக்கவே ஏலாது................நம்மளுக்கே கலர்ஸ் காட்டூவன்ம் கண்டு கொண்டா காணாத மாதிரி விட்டா மறுபடி நம்மட்ட வருவீனம்................பிறகு உது எப்படி தெரியும் என்று கேட்ககூடாது...எல்லாம் யாழால வந்த ஞானம் தான் நான் இன்னும் பேபி என்று சின்னாவிற்கு தெரியும் தானே தாத்தா............ :P :o :P

Link to comment
Share on other sites

உதடுகளிற்கு

உணர்வு தேவை

உராய்வு தேவை

உறக்கம் தேவை

உல்லாசம் தேவை

மொத்த்தில்

உறவு தேவை

உறவிற்கு எங்கே போறது மாஸ்டர்................ :P :P

Link to comment
Share on other sites

உதடுகளிற்கு

உணர்வு தேவை

உராய்வு தேவை

உறக்கம் தேவை

உல்லாசம் தேவை

மொத்த்தில்

உறவு தேவை

மாஸ்டர் நல்லாக சொல்லி இருக்கிறீங்க.

Link to comment
Share on other sites

மாஸ்டர் நல்லாக சொல்லி இருக்கிறீங்க.

நிலா அக்கா நானும் போய் டிரை பண்ணி பார்க்கவோ.......... :P

Link to comment
Share on other sites

நிலா அக்கா நானும் போய் டிரை பண்ணி பார்க்கவோ.......... :P

புத்து மாமாவின் பிறந்த நாளுக்கு நான் வந்ததையும் பொருட்படுத்தாமல் யாரையோ பார்த்துட்டு இருந்ததாக சொன்னியளே.

இதுக்கு மட்டும் ஏன் அனுமதி. அதுவும் என்னிடம்?

போய் முயற்சிக்க வேண்டியதுதானே :angry:

Link to comment
Share on other sites

புத்து மாமாவின் பிறந்த நாளுக்கு நான் வந்ததையும் பொருட்படுத்தாமல் யாரையோ பார்த்துட்டு இருந்ததாக சொன்னியளே.

இதுக்கு மட்டும் ஏன் அனுமதி. அதுவும் என்னிடம்?

போய் முயற்சிக்க வேண்டியதுதானே :angry:

ஓ அக்காவும் பார்த்து விட்டீங்களா..............இல்லை நான் நிலா அக்காவை பார்தேன் அப்படியே அங்கே வந்திருந்தவாவை பார்தேன்................நிலவின் பிரகாசத்தில் அவா பிரகாசிக்கவில்லை என்று சொல்ல வந்தனான் நிலா அக்கா......... :P

Link to comment
Share on other sites

இவ்வளவும் நிலா அக்கா பாவிக்கிறவாவா.............. :P :P

Link to comment
Share on other sites

இவ்வளவும் நிலா அக்கா பாவிக்கிறவாவா.............. :P :P

இவ்வளவும் ஜம்மு பேபிக்கு கொடுக்கலாம் னு திட்டம் போட்டிருக்கிறன் :angry:

Link to comment
Share on other sites

இவ்வளவும் ஜம்மு பேபிக்கு கொடுக்கலாம் னு திட்டம் போட்டிருக்கிறன் :angry:

இவ்வளத்தையும் வைத்து நான் என்ன செய்யிறது நிலா அக்கா............. :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.