Jump to content

ஆரோக்கியமான கூந்தலுக்கு ...


Recommended Posts

ஆரோக்கியமான கூந்தலுக்கு ...

தலை முடி ஆரோக்கியம்

மாதம் ஒரு முறை மருதாணி இலைகளை அரைத்து தலைக்குத் தேய்த்தால் நல்ல குளிர்ச்சி கிடைத்து, தலை முடி ஆரோக்கியமாக இருக்கும்.

வாரத்தில் 2 முறைகள் ஆலிவ் ஆயிலை மயிர்க் கால்களில் படும்படி தேய்த்து, பின்பு சிகைக்காய் தூள் பயன்படுத்திக் குளித்தால் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.

தலை முடி வளர்ச்சி

தினமும் சிறிகளவு வேப்பங் கொழுந்தை எடுத்து வாயில் மென்று சாப்பிட்டால் தலைமுடி நிறைய வளரும்.

ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்திப் பூவை அரைத்து நல்லெண்ணெயில் காய்ச்சி, வடிகட்டியபின் தலைக்குத் தேய்த்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும்.

வாரத்திற்கு 2 முறைகள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து வந்தால், முடி உதிராது. செம்பருத்தி இலைகளைஅரைத்து žயக்காயுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் ஷாம்பு மாதிரி இருக்கும். நல்ல குளிர்ச்சி கிடைத்து, முடி வளரும்.

தலை முடி உதிர்தல்

செம்பருத்திப் பூவை அப்படியே சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து, முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயத்தைப் பாலில் அல்லது தண்­ரில் ஊற வைத்து, அரைத்துத் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலை முடி உதிராது.

முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து தலைக்குத் தடவி 15 நிமிடம் ஊறிய பின் தலைக்கு சிகைக்காய் தேய்த்துக் குளித்தால் தலைமுடி மிகவும் மிருதுவாக இருக்கும், முடி உதிர்தலும் நிற்கும்.

செம்பட்டை நிற முடி

செம்பட்டை நிற முடிஉடையவர்கள் மருதாணி இலைகளை அரைத்துக் கலந்து காய்ச்சிய எண்ணெய்யை தேய்க்க வேண்டும்.

நரைமுடி

கருவேப்பிலையை அரைத்துச் சாறு எடுத்து, அந்த சாறு அளவு தேங்காய் எண்ணெய்யை இத்துடன் கலந்து, காய்ச்சி (வெண்ணெய் உருக்குவது போல) வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்குத் தேய்த்து வந்தால் நரை மறையும்.

நெல்லிக்காய் சாற்றில் மருதாணியை அரைத்து தலைக்கு தேய்த்து வந்தால் நரை மறையும்.

:P :P

Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply

தகவலுக்கு நன்றி ஜம்மு

ஜம்மு தினமும் சாம்பூ வைச்சு குளித்தால் என்னாகும்?

ஜம்மு இதில் கூறப்பட்ட வகைகளில் நீங்கள் எந்த ரகம்?

Link to comment
Share on other sites

சாம்பு வைத்து தானே பேபியும் குளிகிறது நிலா அக்கா என்ன வைத்து குளிகிறீனீங்க...........இதில் பேபி வந்து ஒரு ரகமும் இல்லை ஏன் என்றா பேபிக்கு இப்ப தான் தலைமயிர் வளருகிறது அது தான் குழந்தை ஆச்சே..........

ஆனால் இப்ப பேபியின்ட தலை எல்லாம் வேற கலரா போச்சு...........வீட்டை ஏச்சு விழுது நிலா அக்கா...... :mellow:

Link to comment
Share on other sites

நாம சன் சில்க் தான் பாவிக்கிறனாங்க. வாரத்துக்கு மூன்றுதடவைகள் :Pஎன்ன கலர் பெயிண்ட் அடிச்சிருக்கிறியள் பேபி?

Link to comment
Share on other sites

நல்ல தகவல் யமுனா

ஆனால் இது முடி உள்ளவர்களுக்கு மட்டும் தானே.

தலையில் முடியே இல்லாத ஆக்களுக்கு என்ன செய்யலாம்

என்று சொல்லவேயில்லை.

( கீக்கீக்கீக்கீ எனக்கு தலையில் முடி இருக்கு.)

:):):):):):mellow:

Link to comment
Share on other sites

நாம சன் சில்க் தான் பாவிக்கிறனாங்க. வாரத்துக்கு மூன்றுதடவைகள் :Pஎன்ன கலர் பெயிண்ட் அடிச்சிருக்கிறியள் பேபி?

ஓ சன்சில்கா............நல்லது அதையே பாருங்கோ நாம வாரத்தில ஏழு நாளும் தலை தான் பாருங்கோ............இப்ப மஞ்சள் கலர் தான் அடித்து ஏச்சு வாங்கி கொண்டு இருகிறேன்.................... :mellow:

Link to comment
Share on other sites

நல்ல தகவல் யமுனா

ஆனால் இது முடி உள்ளவர்களுக்கு மட்டும் தானே.

தலையில் முடியே இல்லாத ஆக்களுக்கு என்ன செய்யலாம்

என்று சொல்லவேயில்லை.

( கீக்கீக்கீக்கீ எனக்கு தலையில் முடி இருக்கு.)

:):):):):):mellow:

முடி இல்லாதவங்களுக்கு எதுவுமே பண்ண முடியாதுங்க. ஆனால் இப்போ ஏதோ அக்குபஞ்சர் முறை ல முடி வளர்க்கலாம் னு படித்த ஞாபகம்

ஆனாலும் முடி இல்லாதவங்க முடி உள்ளவங்களுக்கு இம்முறையை விளம்பரப்படுத்தலாமுங்கோ

Link to comment
Share on other sites

முடி இல்லாதவங்களுக்கு எதுவுமே பண்ண முடியாதுங்க. ஆனால் இப்போ ஏதோ அக்குபஞ்சர் முறை ல முடி வளர்க்கலாம் னு படித்த ஞாபகம்

ஆனாலும் முடி இல்லாதவங்க முடி உள்ளவங்களுக்கு இம்முறையை விளம்பரப்படுத்தலாமுங்கோ

இது எல்லாவற்றையும் விட ஈசியான வழியை நான் சொல்லுறேன்..............அது தான் டோப் போட்டா சரி தானே......... :P

Link to comment
Share on other sites

ஆனாலும் முடி இல்லாதவங்க முடி உள்ளவங்களுக்கு இம்முறையை விளம்பரப்படுத்தலாமுங்கோ

நிலாக்கா

நீங்க சொன்னபடி விளம்பரம் செய்யலாம்.

ஆனால் சின்ன சந்தேகமுங்கோ

அதையும் நீங்களே சொல்லுங்கோ அக்கா

தலையிலே முளைத்தால் தலைமுடி

காலிலே முளைத்தால் கால்முடி

கையிலே முளைத்தால் கைமுடி

முகத்திலே முளைத்தால் முகமுடி என்றுதானே

சொல்லவேண்டும்.அதை விட்டு தாடி,மீசை என்று

ஏன் சொல்லுகிறார்கள்?

:mellow::):)

Link to comment
Share on other sites

நிலாக்கா

நீங்க சொன்னபடி விளம்பரம் செய்யலாம்.

ஆனால் சின்ன சந்தேகமுங்கோ

அதையும் நீங்களே சொல்லுங்கோ அக்கா

தலையிலே முளைத்தால் தலைமுடி

காலிலே முளைத்தால் கால்முடி

கையிலே முளைத்தால் கைமுடி

முகத்திலே முளைத்தால் முகமுடி என்றுதானே

சொல்லவேண்டும்.அதை விட்டு தாடி,மீசை என்று

ஏன் சொல்லுகிறார்கள்?

:D:D:D

சா என்ன ஒரு டவுட்டு ஆனா இதை எங்கையோ கேட்டு இருகிறேனே............. :D :P

Link to comment
Share on other sites

சா என்ன ஒரு டவுட்டு ஆனா இதை எங்கையோ கேட்டு இருகிறேனே............. :D :P

செந்தில் & கவுண்டமணி கிட்ட தான் போய் கேட்கணும் மருமகனே. இல்லையா ஜம்மு தம்பி

Link to comment
Share on other sites

செந்தில் & கவுண்டமணி கிட்ட தான் போய் கேட்கணும் மருமகனே. இல்லையா ஜம்மு தம்பி

ஆமாம் நிலா அக்கா செந்தில் & கவுண்டமணி உங்க பிரண்சா நிலா அக்கா............... :P

Link to comment
Share on other sites

ஆமாம் நிலா அக்கா செந்தில் & கவுண்டமணி உங்க பிரண்சா நிலா அக்கா............... :P

இல்லை ஜம்மு. தெரிந்தவர்கள். தெரிந்தவர்களை எல்லாம் நட்பென சொல்லிக்க விரும்புறதில்லை. :P

Link to comment
Share on other sites

இல்லை ஜம்மு. தெரிந்தவர்கள். தெரிந்தவர்களை எல்லாம் நட்பென சொல்லிக்க விரும்புறதில்லை. :P

ஓ அப்படியா நிலா அக்கா.............நமக்கும் தான் ஜோர்ஷ் புஷ்யை தெரியும் ஆனால் அவருக்கு என்னை தெரியாதே.............நானும் நட்பென சொல்லி கொள்ளதில்லை என்றா பாருங்கோ............. :P

Link to comment
Share on other sites

ஓ அப்படியா நிலா அக்கா.............நமக்கும் தான் ஜோர்ஷ் புஷ்யை தெரியும் ஆனால் அவருக்கு என்னை தெரியாதே.............நானும் நட்பென சொல்லி கொள்ளதில்லை என்றா பாருங்கோ............. :P

இதோடா. சிரிப்பு தாங்கிக்கவே முடியல்லை ஜம்மு :D:D :P

Link to comment
Share on other sites

இதோடா. சிரிப்பு தாங்கிக்கவே முடியல்லை ஜம்மு :D:D :P

சிரிப்பு தாங்கமுடியவில்லை என்றா பக்கத்தில இருப்பவர்களிற்கு கடனா கொடுகிறது தானே............ :P

Link to comment
Share on other sites

சிரிப்பு தாங்கமுடியவில்லை என்றா பக்கத்தில இருப்பவர்களிற்கு கடனா கொடுகிறது தானே............ :P

கடனாவா? ஹீஹீ நமக்கு பக்கத்தில் யாருமே இல்லையே. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஜொம்மு! :rolleyes:

Link to comment
Share on other sites

நன்றி ஜொம்மு! :rolleyes:

எவள் அக்கா வாங்கோ...........வாங்கோ.........நீங்க என்ன சம்பு பாவிக்கிறனீங்கள் ஏன் என்றா உங்க கூந்தல் நல்லா இருக்கு அது தான்............... :P :P

Link to comment
Share on other sites

ஜொம்மு இல்லை சம்பூ சீச்சீ ஜம்மு :rolleyes:

நிலா அக்கா.....எவள் அக்கா எனக்கு செல்லமா வைத்த பெயர் அவா மட்டும் தான் பேபியை கூப்பிடுவா அப்படி............. :P :P

Link to comment
Share on other sites

சிலருக்கு கூந்தல் வேற நிறத்தில எல்லாம் வருது ஜம்முகுட்டியை சொல்லவில்லை இயற்கையான கூந்தல் நல்லதா அல்லது செயற்கையா வாரது நல்லதா உந்த கேள்விக்கு தங்களின் பதில் என்ன? ;)

Link to comment
Share on other sites

தலை முடி உதிர்தல்

செம்பருத்திப் பூவை அப்படியே சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து, முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயத்தைப் பாலில் அல்லது தண்­ரில் ஊற வைத்து, அரைத்துத் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலை முடி உதிராது.

முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து தலைக்குத் தடவி 15 நிமிடம் ஊறிய பின் தலைக்கு சிகைக்காய் தேய்த்துக் குளித்தால் தலைமுடி மிகவும் மிருதுவாக இருக்கும், முடி உதிர்தலும் நிற்கும்.

ஹும் யம்மு..... இந்த இலை தலைக்கு எங்க போறது நாம...... <_<

தலை முடி உதிராமல் இருக்க தலை அழுக்கில்லாமல் , சொடுகு தொல்லை இல்லாமல் , உடல் சூடு இல்லாமல் (கிழமைக்கு 2 , 3 தரம் ....தலை குளிச்சு) இருந்தாலும் முடி உதிராது எண்டு நினைக்கிறன்.....! :huh:

Link to comment
Share on other sites

சிலருக்கு கூந்தல் வேற நிறத்தில எல்லாம் வருது ஜம்முகுட்டியை சொல்லவில்லை இயற்கையான கூந்தல் நல்லதா அல்லது செயற்கையா வாரது நல்லதா உந்த கேள்விக்கு தங்களின் பதில் என்ன? ;)

உதற்கு பதில் பேபியால எல்லாம் சொல்ல முடியாது..............அது சரி பேபியின்ட தலை ஒழுங்கா தானே இருக்கு............பிற்கு என்ன நக்கல்..........நல்லா இல்லை சொல்லி போட்டேன்..........அணு பாட்டி.............. :angry: :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

ஹும் யம்மு..... இந்த இலை தலைக்கு எங்க போறது நாம...... <_<

தலை முடி உதிராமல் இருக்க தலை அழுக்கில்லாமல் , சொடுகு தொல்லை இல்லாமல் , உடல் சூடு இல்லாமல் (கிழமைக்கு 2 , 3 தரம் ....தலை குளிச்சு) இருந்தாலும் முடி உதிராது எண்டு நினைக்கிறன்.....! :huh:

ஹும் ஜம்மு இல்லை அனி பாட்டி பேபி ஜம்மு சரியோ :P ............இலை..........தலைக்கு எல்லாம் காட்டுக்கு போகலாம் ஆனா நான் வரமாட்டேன் சொல்லிட்டன்...........எனக்கு காடு என்றா பயம் வேண்டும் என்றா நிலா அக்கா வருவா............... :P

கிழமைக்கு 2,3 தரம் குளித்தா சரியா இருக்கும் ஆனா குளிக்காத ஆட்கள் அதாவது 1 வேளை குளிக்கவே பஞ்சிபடுவீனம் நீங்க வேற 3 வேளை என்று சொல்லி போட்டீங்க அவைக்கு தான் இந்த மெதட் எல்லாம்..........என்னை மாதிரி உங்களை மாதிரி ஆட்களிற்கு இல்லை பாட்டி........ ;)

அப்ப நான் வரட்டா........... :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ராம‌ன், ர‌ஹ்மான் சர்ச்சை: எவ‌ரையேனும் புண்ப‌டுத்தியிருந்தால் ம‌ன்னியுங்கள்! - உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் அப்துல் ம‌ஜீத்.- ”சில‌ வ‌ருட‌ங்களுக்கு முன் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் என்ற‌ வ‌கையில் தன்னால்  கூற‌ப்ப‌ட்ட‌ ராம‌ன், ர‌ஹ்மான் க‌ருத்துக்க‌ள் எவரையேனும் புண்படுத்தியிருந்தால்  அதற்காக  தான் ப‌கிர‌ங்க‌ ம‌ன்னிப்பு கேட்பதாக” முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இஸ்லாமிய‌ ம‌த‌த்தை பொறுத்த‌ வ‌ரை முத‌ல் ம‌னித‌ன் ஆத‌ம் ஒரு முஸ்லிமாக‌வே வாழ்ந்தார் என்ப‌தால் உல‌கில் உள்ள‌ அனைத்து ம‌த‌ங்க‌ளைச்  சேர்ந்தோரும் ச‌கோத‌ர‌ர்க‌ளே ஆவர். இத‌னால் ஆதிகால‌ முஸ்லிம்க‌ளின் சிறிய‌ க‌தைக‌ள் பின்னாளில் பெரும் க‌ற்ப‌னை காவிய‌ங்க‌ளாக‌ மாறியுள்ள‌ன‌ என்ப‌தே என‌து ந‌ம்பிக்கை. இந்த‌ வ‌கையில்தான் நான் மேற்ப‌டி க‌ருத்துக்க‌ளை சொல்லியிருந்தேன். ஆனால் அர்ர‌ஹ்மான் என்ப‌து இறைவ‌னின் திருப்பெய‌ர்க‌ளில் ஒன்று என்ப‌தால் அத‌னோடு ஒருவ‌ரை இணைப்ப‌து இறைவ‌னை அவமதிக்கும் செயல்  என‌ நான்  ம‌திக்கும், ஒருவ‌ர் என‌க்கு வ‌ருத்த‌த்துட‌ன் கூறிய‌தால்  நான் தெரிவித்த கருத்து அவ‌ர‌து ம‌ன‌தை மிக‌வும் காய‌ப்ப‌டுத்தியுள்ள‌து என்ப‌தைப் புரிந்துகொண்டேன். ம‌க்களை எமாற்றும், இன‌வாத‌, ல‌ஞ்ச‌ம் வாங்கும், மோச‌மான‌ ம‌னித‌ர்க‌ளின் உள்ள‌ங்க‌ளை விட‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள் ம‌ன‌து புண்படும் என்றால் அத‌னை த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌து. அந்த‌ வ‌கையில் ர‌ஹ்மானோடு ராம‌னை இணைத்து க‌ருத்து சொன்ன‌மைக்காக‌ நான்  ம‌ன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378686
    • தப்பியோடியதற்காக கொடுக்கப்பட்டமேலதிக தண்டனையா? முட்டாள் பயலுக, எங்கே ஓடித்தப்ப நினைத்திருப்பார்கள்?
    • கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை! ”முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய அதிசொகுசு வாகனமான ரேஞ்ச் ரோவரை மொடல் அழகியான பியூமி ஹன்சமாலி பயன்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து உடனடியாக விசாரணையை முன்னெடுக்குமாறு” சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் இன்று (17) முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. Mage Rata அமைப்பின் தலைவரான சஞ்சய மஹவத்தவினாலேயே குறித்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் “தேர்தல் நெருங்கிவிட்டது என்பது தெளிவாகிறது, அரசியல்வாதிகள் தாம் சேமித்த கறுப்புப் பணத்தை வரவிருக்கும் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்த  முனைகின்றார்கள். அதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய  அதிசொகுசு வாகனமான ரேஞ்ச் ரோவரை பியூமி ஹன்சமாலி எவ்வாறு பெற முடிந்தது என்பதில் எங்களுக்கு சில சந்தேகங்கள் உள்ளன. குறிப்பாக “ரேஞ்ச் ரோவர் வாகனம் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டதா அல்லது கோட்டாபயவால் பியூமிக்கு வழங்கப்பட்டதா என்ற கேள்வி எழுகின்றது. அரசியல்வாதிகளின் பணமோசடி நடவடிக்கைகளுக்கு பியூமி ஹன்சமாலி பயன்படுத்தப்படுகின்றாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது” என சஞ்சய மஹவத்த குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1378630
    • கோட்டாபய ராஜபக்ஷவினால் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன்-பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்! கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் நான் ஒருமுறை ஏமாற்றப்பட்டதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தேரர் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் இதனைத் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்த பின்னர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என கோட்டாபய ராஜபக்ஷ தனக்கும் பேராயர் சபைக்கும் வாய்மொழியாக வாக்குறுதியளித்ததாக கர்தினால் தேரர் இங்கு தெரிவித்தார். எவ்வாறாயினும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர், அது தொடர்பான அனைத்து விசாரணைகளும் கைவிடப்பட்டதாக அவர் தெரிவித்தார். அத்துடன் இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் நேர்மையான நோக்கத்துடன் செயற்படுவதில்லை எனவும் எந்தவொரு அரசியல் தலைவரும் ஆட்சிக்கு வந்ததும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2024/1378652
    • சுமந்திரனின் கருத்து அற்பத்தனமானது! தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயம்; சுமந்திரனின் கருத்து அற்பத்தனமானது! கூறுகின்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஆதவன்) தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது சிங்களத் தரப்பைக் கோபப்படுத்தி, இனவாதத்தைத் தூண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்து அற்பத்தனமானது என்று ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- இலங்கை ஒரு ஜனநாயக நாடு. தமிழர்கள் தரப்பில் யாரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று யாரும் வரையறை விதிக்கமுடியாது. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எடுத்துக்காட்டாகக் கூறும் குமார் பென்னம்பலம் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகிய இருவரும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வேட்பாளர்களாக நிறுத்தப்படவில்லை தற்போதைய பொதுவேட்பாளர் விடயம்  அவ்வாறானது அல்ல. நாங்கள் பல தடவைகள் பலருக்கு வாக்களித்துள்ளோம். ஆனால், தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை. சகல அரச தலைவர்களாலும் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். பொதுவேட்பாளர் என்பது இனப்பாகுபாடான விடயமல்ல. எமது சுயமரியாதையை, உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாங்கள் தெரிந்தெடுத்துள்ள ஒரு வழிமுறையாகும் - என்றார். (ஏ)    https://newuthayan.com/article/சுமந்திரனின்_கருத்து_அற்பத்தனமானது!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.