Jump to content

கிழக்கு தேர்தல்கள் தொடர்பாக நாளை விவாதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு தேர்தல்கள் தொடர்பாக நாளை விவாதம்

கிழக்கில் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நாளை வியாழக்கிழமை விவாதம் நடத்தப்பட உள்ளது.

உள்ளுராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகளுக்கான அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இது தொடர்பிலான சட்ட முன்வடிவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பின்னர் பிற்பகலில் அரை நாள் விவாதம் நடைபெற உள்ளது.

வழமையாக நாடாளுமன்றம் காலை 9.30 மணிக்கு கூடும். ஆனால் "கிழக்கின் உதயம்" நிகழ்வுகளையொட்டி நாளை பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள சட்ட முன்வடிவின் மூலமாக கிழக்கு மாகாணத்தின் உள்ளுராட்சி சபைகளின் தற்போதைய அனைத்து நியமனங்களும் இரத்துச் செய்யபடும். புதிய வேட்புமனுக்கள் அனைத்து பிரதேசங்களுக்கும் கோரப்படும் என்று ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்கு முன்னதாக கிழக்கில் உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்த அரசாங்கம் தீவிரமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

-புதினம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.