Jump to content

காதலி மறுத்தமையினாலேயே அரசாங்கம் வேறொரு பெண்ணை மணக்கும் நிலை ஏற்பட்டது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காதலி மறுத்தமையினாலேயே அரசாங்கம் வேறொரு பெண்ணை மணக்கும் நிலை ஏற்பட்டது

வீரகேசரி நாளேடு

காதலியான ஜே.வி.பி. கல்யாணம் முடிக்க மறுத்தமையினாலேயே வேறொரு பெண்ணை மணம் முடி க்க வேண்டிய நிலை அரசாங்கத்து க்கு ஏற்பட்டது என்று அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே சபையில் நேற்று தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த ஜே.வி.பி. யின் பாராளுமன்ற குழுத் தலைவர் விமல்

வீரவன்ச காதலி மறுத்தமைக்காக வீதியில் அலையும் விபச்சாரிகளை அரசாங்கம் திருமணம் செய்வதா? என்று கேள்வி எழுப்பினார். காதலன், காதலி, விபச்சாரி விவகாரம் காரணமாக சபையில் நேற்று பெரும் சிரிப்பொலி ஏற்பட்டது.

பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணியளவில் சபாநாயகர் வி.ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் கூடியது. எம். பிக்களுக்கான வாய்மூல கேள்வி நேரம் இடம்பெற்றது. இதன்போது ஜே.வி.பி. எம்.பி. ரணவீர பத்திரணவின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே காதலன், காதலி கதையினை கூறினார். இதனையடுத்தே விமல் வீரவன்ச எம்.பியும் விபச்சாரியின் விடயத்தை சுட்டிக் காட்டினார்.

அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதனால்தான் வாகனங்கள் தொடர்பான செலவுகள் அதிகரித்துள்ளன என்று ஜே.வி.பி. எம்.பி. ரணவீர பத்திரன கேள்வி ஒன்றை கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே அதனை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார். அத்துடன் வாகன செலவுகள் அவ்வாறு அதிகரிப்பதற்கு ஜே.வி.பி. தான் காரணம் என்று கூறினார். ஏனெனில், அரசுடன் ஜே.வி.பி. இணைந்திருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்றும் கூறினார்.

அத்தோடு காதலன் காதலியிடம் கல்யாணம் முடிக்கவிருப்பம் கேட்கும் போது அவள் மறுப்பாளாயின் வேறொரு பெண்ணை மணம் முடிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளை கிண்டலாக கூறினார்.

அதற்கு பதிலளித்த விமல் வீரவன்ச எம்.பி. காதலி மறுத்ததற்காக வீதியில் அலைந்து திரியும் விபச்சாரிகளை (ஐ.தே.க. எம்.பிக்கள்) திருமணம் செய்வதா என கேள்வி எழுப்பினார்.

அரசாங்கத்துடன் இணைய ஜே.வி.பி. பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஐ.தே.க. வின் அதிருப்தியாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களை தம்முடன் இணைத்துக் கொண்டார்கள். அது அரசாங்கம் நடத்தைகெட்ட காதலன் என்பதன் வெளிப்பாடுதானே? அவ்வாறு நடத்தைகெட்ட அரசாங்கத்தை (காதலனை) நம்பி எவ்வாறு இணைந்து கொள்வது (திருமணம் முடிப்பது) எனவும் விமல் வீரவன்ச எம்.பி. கேள்வி தொடுத்தார்.

அத்துடன் பெண்ணெடுக்க மாப்பிள்ளை வீட்டார் சீதனம் வாங்கும் சம்பிரதாயத்தை மீறி அரசாங்கம் சீதனம் கொடுத்து பெண்ணெடுப்பது போல் ஐ.தே.க. அதிருப்தியாளர்களை இணைத்துக் கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே பெண்ணெடுக்க மாப்பிள்ளை வீட்டார் சீதனம் வாங்குவது போல சீதனம் கொடுத்து பெண்ணெடுக்கும் நடைமுறையிருப்பதாக கூறினார். அத்துடன் இந்த கல்யாணத்தின் பின்னர் இன்னமும் குழந்தைகள் பிறக்கவில்லை எனவும் அமைச்சர் கூறினார்.

அமைச்சர்களின் அதிகரித்த எண்ணிக்கைதான் கல்யாணத்தின் பின்னர் பிறந்த குழந்தைகள் என விமல் வீரவன்ச எம்.பி. கிண்டலாக பதிலளித்தார். அவ்வாறு குழந்தைகள் பிறக்கவில்லையென நீங்கள் கூறுவீர்களானால் மலட்டுத்தன்மை கொண்ட பெண்ணையே அரசாங்கம் திருமணம் செய்துள்ளதாகவும் எடுத்துக் கூறினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விபச்சாரத்திலோ, அது பற்றிய கதைகளிலோ ஜேவிஐயை எவராலும் மிஞ்ச முடியாதது என்பது திரும்பவும் நிருபிக்கப்பட்டுள்ளது. ஜேவிபியின் தலைவரின் சகோதரி பிரபல விபச்சார அமைப்பை வைத்து நடத்தியது தொடர்பாக ஜேவிபி பெற்ற பிரபல்யத்தை தொடர்ந்து விமல் தன் பங்குக்குக் காப்பாற்றுகின்றார்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.