Jump to content

புலிகளின் அனைத்துப் பிரதேசங்களையும் கைப்பற்றுவோம்: மகிந்த ராஜபக்ச.


Recommended Posts

புலிகளின் அனைத்துப் பிரதேசங்களையும் கைப்பற்றுவோம்: மகிந்த ராஜபக்ச.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துப் பிரதேசங்களையும் கைப்பற்றுவோம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்ச இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தமது பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் தனியரசு இலக்கை அடைய உள்ளதாக பரப்புரை மேற்கொள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மற்றொரு காட்டுமிராண்டித்தனமான செயற்பாடு இது. தங்களது பயங்கரவாதத்தாலும் வன்முறைகளாலும் தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் ஒடுக்கி வருகின்றனர். கிழக்குப் பிரதேசத்தில் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உருவாக்கியதோடு மட்டுமல்லாது ஒட்டுமொத்த இலங்கையிலும் நாம் அதனை மேற்கொள்வோம்" என்றும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டை தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர்.

"நாங்கள் அந்தப் படுகொலையை நடத்தவில்லை. படுகொலையின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்து எமக்குத் தெரியவில்லை. அனேகமாக அரசியல் இலாபங்களுக்கான படுகொலையாக இது இருக்கலாம்" என்று கிளிநொச்சியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தொலைபேசியூடாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே திருகோணமலையின் வடகிழக்கில் நேற்று கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சுட்டுக் கொல்லப்பட்டது மூலம் கிழக்கை கைப்பற்றிவிட்டதாக சிறிலங்கா இராணுவம் கைப்பற்றினாலும் கூட தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் கிழக்கில் நிலைகொண்டிருப்பதையே வெளிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர் என்று ரொய்ட்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிழக்கு பிரதம செயலாளருக்கும் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவுக்கும் இடையே முறுகல் நிலை இருந்ததாகவும் கருணா குழுவினரால் அவருக்கு கொலை அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டிருந்ததும் என்றும் கூறப்படுகிறது.

-Puthinam-

Link to comment
Share on other sites

"தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துப் பிரதேசங்களையும் கைப்பற்றுவோம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்."

இதை தான் தமிழ் மக்களும் சொல்கிறார்கள்.அதாவது தமிழ் மக்கள் மிக விரைவில் அரச கூலிப்படைகளை ஓட ஓட விரட்டுவோம் என்று.வி.புலிகளும்,தமிழ் மக்களுமாக சேர்ந்து இந்த கொலை வெறியர்களை விரைவில் வெளியேற்றுவார்கள்.We will kick your a** sooner than you think Mr mahinda.

Link to comment
Share on other sites

"தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துப் பிரதேசங்களையும் கைப்பற்றுவோம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்."

நீ யாரென்று எமது மக்களுக்கு தெரியாது ஆதலால் நீ ஒரு சின்னப்பிள்ளையென நினைத்து இருந்துவிட்டனர் ஆனால் நான் உனக்கு சொல்வது என்ன வென்றால் நீ மங்கிகளின் தலைவன் அதனால் தான் உனது தாய் தந்தையர்கள் மங்கி என்று வைத்தை பெயரை நீ மகிந்த அதாவது மகியங்கனையின் குரங்கு (மங்கி) என்று மாற்றிக்கொண்டாய் இருப்பினும் உன்னால் முடிந்தாள் நீ தலைமை தாங்கி உனது கோலைப்படைகளையும் கூட்டி உனது எமது தமிழினத்தின் துரோகக் கும்பலையும் கூட்டி எமது மண்ணில் கால் மிதித்துப்பார் அப்போது தெரியும் எமது பொறுமையும் எமது போராட்டமும் போராட்ட வடிவங்களும் அந்த பொன்னான நேரத்தை நாம் தினமும் வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தவுக்கும் அவரது குழுவுக்கும் வேற வேலை இல்லை சிங்களமக்களை ஏமாற்றுவதற்காக இப்படி ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்க வேணும்!! விட்டுத் தள்ளுங்கோ.

Link to comment
Share on other sites

போர் நிறுத்தத்தில் போர் செய்து எல்லை மீறும் பேடி.....

உலகத்தின் கண்களுக்கு நாடகமாடி.........

நீ கொண்டு வந்தாய் ஆயுதம் தேடி....

நந்தவனத்தில் ஒர் ஆண்டி பிச்சை எடுத்து கொண்டுவந்தான் கோடி.....

விரைவில் பார் ஒரு படை இது எங்கள் மண் என்று துரத்தும் பாடி......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் பிரதேசங்கள் இருக்கின்றன என்று ஒப்புக்கொண்டால் எப்படி அவை சிறிலங்காவின் நாட்டுக்குள் இருக்கமுடியும்? மகிந்தவைப் பொறுத்தவரையில் இலங்கைத் தீவில் எல்லாப் பிரதேசங்களும் அவருடைய கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கின்றது. என்ன அவர்தான் சுதந்திரமாக எங்கும் செல்லமுடியாமல் இருக்கின்றார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.