Jump to content

பிரச்சினைக்கு நியாயவழித் தீர்வு காண மேற்கு நாடுகள் அழுத்தம் கொடுக்கும் கூட்டமைப்புத் தூதுக் குழுவிடம் தெரிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சினைக்கு நியாயவழித் தீர்வு காண மேற்கு நாடுகள் அழுத்தம் கொடுக்கும் கூட்டமைப்புத் தூதுக் குழுவிடம் தெரிவிப்பு

இலங்கை இனப்பிரச்சினையை நியாயமான வழியில் தீர்த்து வைக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கு ஐரோப்பிய நாடுகள் விருப்பம் கொண்டுள்ளன.

எதிர்வரும் காலங்களில் தமிழர் பிரச்சினைக்கு முதலிடம் கொடுத்து அதனைத் தீர்த்துவைப்பதில் அக்கறை காட்டுமாறு அரசிடம் எடுத்துரைக்கவும் அந்த நாடுகள் தயாராக உள்ளன.

இதுவரை எட்டு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களையும் உயர் ராஜ தந் திரிகளையும் சந்தித்துப் பேசிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தூதுக் குழு வட்டாரங்களில் இருந்து இது அறியவந்தது.

யுத்தத்தைத் தவிர்த்து அமைதிப் பேச்சு மூலம் இலங்கைப் பிரச்சினைக்கும் தீர்வு காணப்படுவதையே அந்த நாடுகள் விரும்பு கின்றன என்றும் சந்திப்புக்களில் கலந்து கொண்ட அந்நாடுகளின் தலைவர்களும் இராஜதந்திரிகளும் கூட்டமைப்பின ருக்குத் தெரிவித்திருக்கின்றனர்.

இதுவரை இடம்பெற்ற அத்தனை சந் திப்புக்களும் வெற்றிகரமாகவும் திருப்தி கரமாகவும் முடிவடைந்துள்ளன என்றும் கூட்டமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

வடக்கு கிழக்குத் தமிழர்கள் அனுப வித்துவரும் துன்ப, துயர நிலைமை, அவர் கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டுவரும் கொடூர யுத்தம் போன்றவை உள்ளிட்ட தமிழர்களின் பலதரப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு விளக்குவதற்காக அந்த நாடுகளுக்கு விஜ யம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அந்நாட்டு இராஜதந் திரிகளைச் சந்தித்து வெற்றிகரமாகப் பேச் சுகளை நடத்தி வருகின்றனர் என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

வடக்குகிழக்கு தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டு வரும் தொடர் அடக்கு முறை, கிழக்கில் தமிழர்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டமை, கொலை, ஆள் கடத்தல், காணாமல் போதல் ஆகியவை தீவிரமடைந்துள்ளமை, அமைதித் தீர்வுக் கான வழிவகைகளைத் தவிர்த்து இரா ணுவ நடவடிக்கை மூலம் தேசியப் பிரச்சினைத் தீர்வுக்கான அரசு முனைப்புக் காட்டுகின்றமை உள்ளிட்ட பல தரப்பட்ட விடயங்களை வெளிநாட்டுத் தலைவர்களுக்கு தாங்கள் விளக்கினார்கள் எனக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

அத்தோடு அண்மையில் கொழும்பு லொட்ஜுகளில் தங்கியிருந்த தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை மற்றும் சம்பூர் , மூதூர் பகுதிகள் அதிஉயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடணப்படுத் தப்பட்டமை போன்றவை குறித்தும் அவர் கள் எடுத்துக் கூறி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுவரை தாங்கள் சந்தித்த நாடுகளின் தலைவர்கள் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை மிக அக்கறையோடு உள் வாங்கிக் கொண்டனர் என்றும் கூட்டமைப் பின் தூதுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இம்மாத ஆரம்பத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தைத் தொடங்கிய கூட்டமைப்பினர் இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்று அந் நாடுகளின் தலைவர்கள் மற்றும் இராஜ தந்திரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள் ளனர்.

கூட்டமைப்பினரின் இந்தச் சந்திப்புக்கள் இம்மாத இறுதிவரைத் தொடர் கின்றன. அடுத்த மாதம் முதல் வாரத்தில் அவர்கள் நாடு திரும்புகின்றனர் என்றும் கூறப்படுகின்றது.

-உதயன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.