Jump to content

திருமண வாழ்த்து!


Recommended Posts

ug0d0688pomz9.gif

அன்புடன் அனிதா

இணையத்தில் யாழ்மீட்டி

ரீங்காரம் செய்து - உங்கள்

இதயத்தை பகிர்ந்துகொண்ட

எம்வீட்டு குருவிகளே!

எப்போது ஒன்று சேர்வோம்?

எப்படி ஒன்று சேர்வோம்?

இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள்

இனிமேல் உமக்கு இல்லை!

உணர்வுகளால் நேற்றுவரை

உரையாடிய காதல்ஜோடி

இன்றிலிருந்து என்றென்றும்

உடலாலும் இணைகிறது!

உள்ளத்தில் நீர் சுமந்த

உண்மையான அன்பிற்காய்

திருவிழா செய்கின்றோம்!

திருமணமாம் உமக்கின்று!

இதயத்தின் உரசல்களில்

உருவான ஒளித் தீப்பிழம்பு

விண்வெளியில் பயணித்து

கண்மணிகள் கதைசொல்லும்!

இணையத்தில் சுழியோடி

முத்தான காதல் செய்த

மணி ரசிகை ஓருயிராய்

வாழ்க பல்லாண்டு!

அன்புடன் கலைஞன்

முகமூடிக் கருத்தாடல்..

அகம் தொட்ட நிகழ்வு!

இணைபிரியாப் பிணைவு!

இது கருத்தொத்த இணைவு!

கால்ரனில்(?) பொறியியல்!

மனதெல்லாம் தமிழ் இயல்!

படைப்பாளி 'மணி' காண

மனதிற்குள் ஒரு மின்னல்!

உடலிற்கு லண்டனில் முகவரி!

ஆன்மா யாழ் கள விவாதி!

அம்மணி அலைவரிசை அறிவிக்க

இம்மணி மனதிற்குள் குளிர்காற்று!

பரீட்சையின் முடிவிற்கு மாதங்கள் செல்லும்!

கல்யாணத் தேதி அதன்பின்தான் கூடும்!

பல்லாயிரம் மைல்கள் உடல்களைப் பிரிக்க

யாழ் களம் மனங்களை வருடியே கொடுக்கும்!

வீட்டார் அறிந்தாரா இல்லை யாழ் களம் தான் முந்தியதா?

காதல் துளிர்த்ததனை முதலிலே யாரறிந்தார்?

பெண்வீட்டார் ஒருபக்கம்! ஆண்வீட்டார் மறுபக்கம்!

மணவறையின் நடைமுறையில் யாழ் வீட்டார் புதுப் பழக்கம்!

வாழ்த்துக்கள் உறவுகளே!

வாழ்த்துக்கள் உங்களிற்கு!

வாழ்த்துக்கள் உறவுகளே!

வாழ்த்துக்கள் எங்களது!

அன்புடன் இன்னுமொருவன்

கண்டதும் காதல்!

காவியக் காதல்!

ஒரு தலைக் காதல்!

ஓ.. இந்த வரிசையில்

புதிதாக கருத்தினில்

காதல்கொண்டு இணைந்திட்ட

மாணிக்கவாசகன் இரசிகை...

இந்த முகங்களுள் மறைந்துள்ள

இதயங்கள் இன்றுபோல்

என்றென்றும் இணைந்து

வளமுடன் வாழ்ந்திட

வாழ்த்துகின்றோம் நாங்கள்!

அன்புடன் சாணக்கியன் மற்றும் குடும்பத்தினர்

உள்ளம் இணைந்த இல்லம்

என்றும் இனிக்கும் வெல்லம்!

காதல் கரங்கள் சேர்ந்தால் - வாழ்வே

வசந்தம் வீசும் தென்றல்!

வானும் நிலவும் போல!

இணைந்து வாழ வேண்டும்!

காலச்சுழற்சி கொள்ளும் நிலவு

வானுள் கரைந்தும் வளரும்!

இன்பம் மட்டும் கூட்டி!

இதய இராகம் மீட்டி! எந்த

நிலையின் போதும் மாறா

அன்பை மட்டும் ஊட்டி!

வாழ வேண்டும் நீங்கள்

வாழ்த்துகின்றோம் நாங்கள்!

தமிழும் சுவையும் போல!

கவியும் இசையும் போல!

யாழ்மீட்டும் இசையின் ஊடே

வாழ்த்துகின்றேன் வாழ்க!

சொர்க்கம் மண்ணில் கொண்டு

சொந்தங்களே நீவீர் வாழ்க!

பெற்றோர் உற்றோர் சுற்றம்

போற்றும் வண்ணம் வாழ்க!

இங்கிருந்து கொண்டே தங்கை

வாழ்த்துகின்றேன் வாழ்க!

இரசனை கொண்ட இரசிகை!

கைப்பிடித்த மணியும் என்றும்..

இணைந்தே வாழ்க! இல்லறத்தை

இ(ணைந்)னிதே வெல்க!!!

அன்புடன் தமிழ்தங்கை

மணிவாசகன் ரசிக்க ரசிகையோ?

மணி வாசிக்க ரசிக்க ரசிகையோ?

ரசிகமணியிணைந்தே மானுடம் ரசிக்க

மணி மணியான எழுத்தில்

ரசிகையும் ரசிக்க கவிதை எழுத

ரகசியம் பேசி கூடி கூழாவி

கூற்றுதைத்த கொற்றவன் ஆசியுடன்

குழந்தை செல்வத்துடன்

குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!

அன்புடன் சிவராசா

எத்தனை இன்பம் இந்த நிமிடத்திலே!

கொட்டும் மழையும் பூவாய் பொழிய

அத்தனை தேவர்களும் ஒருங்கே வாழ்த்த

உங்கள் திருமண வாழ்க்கை

மகிழ்வாய் அமைய வாழ்த்துகிறோம்!

அன்புடன் கர்ணன் மற்றும் கள உறவுகள்

ஆன்றோர் வாழ்த்துரைக்க

ஆயிரமாய் பூச்சொரிய

மங்கை திருமகளாய்

மணவறையில் காத்திருக்க

நாதசுர மேளங்கள்

நல்லதொரு வாழ்த்திசைக்க

நங்கை திருக்கழுத்தில்

நம்பி அவன் நாண்பூட்ட

கட்டியவன் கட்டழகை

கடைக்கண்கள் அளவெடுக்க

மெட்டியவன் பூட்டிவிட

மெல்லியலாள் முகம் சிவக்க

இவள் பாதியிவன் பாதி

என்றிணைந்திட்ட மணவாழ்வில்

இல்லறத்தின் இலக்கணமாய்

இரு மனமும் வாழியவே!

திருமணத்தின் இன்பங்கள்

திகட்டாது தொடர்ந்து வர

ஓருயிராய் ஆருயிராய்

மணமக்கள் வாழியவே!

அன்புடன் வெற்றிவேல்

வாழ்த்துக்கள் சொல்ல

வார்த்தைகள் தேடி

வாசல்வரை வந்துநின்றேன்!

நீங்கள்

காதல் பேசி

கவிகள் பேசி

வார்த்தைகள் யாவற்றையும்

வசமாக்கி விட்டீரோ?

வார்த்தைப்

பஞ்சத்திலே நான்!

நீவீரோ மஞ்சத்திலே!

வாழ்த்துக்கள் உங்களுக்கு!

வாழ்க பல்லாண்டு!

நிலாவின் கைப்பற்றி

நிறைவிழா காணும்

மணிவாசகனிற்கு வாழ்த்துக்கள்!

தமிழன்னை மடியில்

தவழ்ந்த மைந்தனை

தன்மடி தாங்கும்

ரசிகைக்கும் வாழ்த்துக்கள்!

வாழ்க்கை என்பது

வளைவுகள் நிரம்பிய

கரடுமுரடான வசந்தப்பாதை!

இன்பமும் துன்பமும்

இனிதே நிறைந்தது!

பாசிப்பாறைமேல்

வழுக்கியோடும் நீர்த்துளிபோல்

இன்பத்திலேயும்

துன்பத்திலேயும்

இணைந்தே வாழ்க!

தென்றலின் சாமரவீச்சில்

திங்களின் ஒளி ஒத்தடத்தில்

மங்கள நாண் பூண்டு

மகிழ்வுடன் வாழ்க!

ஊடலோடு உறவாடிடுக!

உணர்வினை மதித்து

உரிமைக்கு இடமளித்து

ஜயந்தெளிந்து

அன்போடு வாழ்க!

அகிலம் போற்ற

இதயம் கவர்ந்து

இனிதாய் வாழ்ந்திடுக!

மனம்போல மாங்கல்யம்

மன்றத்தில்(யாழ்) வாழ்த்துக்கள்!

மழைபோல் பொழிய

மலர்மாலை சூடி

மகிழ்வோடு வாழ்க!

ஓடிவரும் நதியும்

ஓய்ந்துவிடக்கூடும்!

அன்பென்னும் பந்தம்

அழியாதது நிலையானது!

மாங்கல்ய பந்தம்

மாலையிட்ட உறவு

மகத்தானது - அது

மகிழ்வோடு துணையானது!

அழகான வாழ்க்கை!

அன்பான உலகம்!

அறிவோடும் அன்போடும்

ஆண்டாண்டு வாழ்ந்திடுக!

என்றும் அன்புடன் வாழ்த்தும்

இணையத்தால் இணைந்த

பரணீதரன் - ரஜனி தம்பதிகள்

Link to comment
Share on other sites

கவிதைகள் நன்றாக இருக்கிறது. தம்பதிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இன்று திருமண பந்தத்தில் இணையும் என் அக்காவுக்கும் அத்தானுக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று திருமணப்பந்தத்தில் இணையும் மணி ரசிகை தமபதிகளுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் மனம் கனிந்த

இனிய வாழத்துக்கள்.இன்று போல் என்றும் வாழ்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் இணைந்து

இதயத்தால் இணையும்

மணவாளன் மணிக்கும்

மணவாட்டி ரசிகைக்கும்

புத்தனின் நல்வாழ்த்துகள்

புனிதமான திருமண பந்தத்தால்

புது படைப்புகள் பல

புதுமையுடனே தந்துடுவீர்........

நல்வாழ்த்துகள் மணிவாசகன் மற்றும் ரசிகை அவர்களுக்கு........

Link to comment
Share on other sites

வாழ்த்துகள் இருவருக்கும் யார் யார் திருமனத்துக்கு சென்றீர்கள் என்பதையும் இங்கு பதியுங்கள்

Link to comment
Share on other sites

களத்தில் கருத்துக்கள் சமைத்து காதலெனும் தீ மூட்டி இன்று திருமணமாய் பரிமாறும் என் அருமைத்தங்கை இரசிகைக்கும் அன்பு மைத்துணர் மணிக்கும் என் குடும்பசார்பான மனமார்ந்த வாழ்த்துக்கள்.

"இன்றுபோல் நீங்களிருவரும் கருத்தொருமித்து என்றும் நல்வாழ்வு வாழுங்கள்"

Link to comment
Share on other sites

77242173yi7.jpg

எல்லோருக்கும் திரு மணச்சாப்பாடுள்ளது... சண்டை செய்யாது சாப்பிடவும்... <_<

புரியாணிbiryaniry2.jpg

பலகாரம்

300pxbonda2hq6.jpg

சாப்பிட்டு முடிந்ததும் மறக்காமல் மொய் எழுதவேணும் : :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்குக் கவிதை எழுத வராது பிள்ளைகள். இருந்தாலும் என்ர வாழ்த்துக்களை மீண்டும் மணிவாசகன் ரசிகைக்கு யாழ் குடும்பத்தின் சார்பா வாழ்த்துறதில் பெருமகிழ்வடைகிறேன்.

Link to comment
Share on other sites

இது மணிவாசகன்-ரசிகைக்கு (நியப்பெயர் இதுதானா)

நீங்கள் எதிர்பார்த்த பொன்நாளும் இதுதானா<_<

இணையத்தில் இணைந்து

இனிக்க இனிக்க

கவிதை பேசி

அரட்டை அடித்து

காதலில் வெடித்து

இதயத்தில் பூத்து

இருமனமும் ஒருமனமாகி

திருமணத்தில்

இணையும் நாளில்

இல்வாழ்க்கை தொடர

வாயைடி வாழையாக

வாழ்ந்து

வையமும் முழுதும்

உலாத்தி

மீண்டும் இணையத்தில்

உலாவரத்தான்...

உள்மனம் கனிந்து

வாழ்த்துகின்றேன்.

வாழ்க வளமுடன்

அன்புடன்

தமிழ்வானம்

பி.குறிப்பு: மோகன் அண்ணா புறோக்கர் காசு வாங்கியாச்சோ...?

இப்ப விட்டால் இவையளைப் பிடிக்கேலாது பாருங்கோ....:lol:

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள

Link to comment
Share on other sites

எல்லோருக்கும் திரு மணச்சாப்பாடுள்ளது... சண்டை செய்யாது சாப்பிடவும்... <_<

புரியாணிbiryaniry2.jpg

பலகாரம்

300pxbonda2hq6.jpg

சாப்பிட்டு முடிந்ததும் மறக்காமல் மொய் எழுதவேணும் : :P

கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்

இந்த கௌரவ பிரசாதம் இதுவே எனக்கு போதும்.

இந்த பாட்டையே மொய்யாக வைத்துக்கொள்ளுங்கள்

:D:D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

11.07.2007 இன்று யாழ் களம் கண்ட புதிய இணைவு நாள்- நந்நாள்!

இல்லறத்தின் அடிப்படையான

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது. ( 5:5)

எனும் அறவொழுக்கத்துடன் வாழும் நற்குடும்பமாகத் தடம் பதித்திட

இனிய நல் வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

என்ன நண்பா !

பிரியாணி எல்லாம் போடுறீங்கள். நாங்கள் அது போடுறேல்லை தெரியுமில்லை.

இந்துக்களின் திருமணத்தன்று வாழையிலையில் மரக்கறிகளுடன் அறுசுவை உணவு வழங்கப்படும். ம் போயிருந்தால் ஓரு வெட்டு வெட்டியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

மணி மற்றும் இரசிகைக்கு எனது திருமண வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

இல்லறத்தில் இணையும் இதயங்களை

இன்சொல்கொண்டு போற்றுமே இணையம்

வள்ளுவன் வாசுகி இல்லறம்போல் - நம்

வானவில் ஜம்மு ஐக்கியம் போல்

தூயவன் வாசகன் சாடல் போல் அல்லால்

ரசிகை மணிவாசகன் இல்லறம் இனித்திட

வாழ்த்துகிறேன் நான் டங்குவார்.. :P

திருமண நல்வாழ்த்துக்கள்...!

Link to comment
Share on other sites

மணி அத்தானுக்கும் ரசி அக்காவுக்கும் திருமண வாழ்த்துக்கள்!!!!!1

Link to comment
Share on other sites

மணிக்கும் இரசிகைக்கும் எனது திருமண வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் வாசகன் சாடல் போல் அல்லால்

ஏனப்பு!

நம்மளைப் போட்டுத் தாக்க வேற இடம் கிடைக்கவில்லையா? :angry: <_< வாசகன் நமக்கிடையே உள்ளது முற்பிறப்பில ஏற்பட்ட சின்னப் பிரச்சனை. அது இப்போ தீர்ந்து போச்சு.

:3d_039:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லற வாழ்வில் இணையும் அன்பு அக்கா ரசிகை, மற்றும் மணி அண்ணா ஃஅத்தான் ஆகியோருக்கும் அன்புத்தம்பியின் இதயத்திலிருந்து இனிய வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றேன்..!

இல்லறம் எனும் நல்லறத்தில் இணைந்திருக்கும் உங்களை வாழ்த்துகின்றேன் வணங்குகின்றேன்

எதிர்பார்ப்புககள்

காத்திருப்புக்கள்

தவிப்புக்கள்

எல்லாவற்றுக்கும் -ஆம்

எல்லாவற்றுக்கும் விடுதலை...

பெற்றவர்கள் மகிழ்ந்திருக்க

சுற்றத்தார் சூழ்ந்திருக்க

மற்றவர்கள் மனதுக்குள் வாழ்தி நிற்க

நீங்கள் வாழ்ந்திடுங்கள்..!

இன்பம் இணைந்திருக்க

இனிமை செழித்திருக்க

இல்லறம் அமைத்து

நீங்கள் வாழ்ந்திடுங்கள்

சொந்தங்கள் கூடி வாழ்த்தட்டும்

பந்தங்கள் வாழ்த்தி நிற்கட்டும்

சிறியோன் தான் பரவாயில்லை...

நானும் வாழ்த்துகின்றேன்..

நீங்கள் வாழ்திடுங்கள்

யாழ் சேர்த்த உறவோ இல்லை

யாழ் அமைந்த கூட்டோ

எதுவாக இருந்தால் என்ன

நீங்கள் வாழ்ந்திடுங்கள்

வார்த்தைகளுக்கு தட்டுப்பாடு

உங்களை வாழ்த்த மட்டும்

உள்ள வார்த்தைகள் கொண்டு

உறவுகள் கவி படைத்ததால்

உணர்வாலே இணைந்து வாழ்த்தி

உறவுகளே நன்றி...

உரிமையோடு வாழ்த்தும்

அன்புத் தம்பி...

நிதர்சன்

Link to comment
Share on other sites

ஏனப்பு!

நம்மளைப் போட்டுத் தாக்க வேற இடம் கிடைக்கவில்லையா? :angry: <_< வாசகன் நமக்கிடையே உள்ளது முற்பிறப்பில ஏற்பட்ட சின்னப் பிரச்சனை. அது இப்போ தீர்ந்து போச்சு.

:3d_039:

தூயவன்.., சும்மா ஒரு வம்புக்கு எழுதியது.. :D சமாதானம்..!!

பிரச்சினை தீர்ந்து போச்சா? அப்ப மெத்த சந்தோசம்.. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தொருமித்து காதல் செய்து!

நன் மக்கட் செல்வமும் பெற்று!

இனிதான இல்லறத்தில் இனைந்து!

இனிதே வாழ எம் நல்வாழ்த்துக்கள். <_<:D

Link to comment
Share on other sites

இன்று புதிய படியில் கால் பதிக்கும் தம்பதியினருக்கு எனது இதயங்கனிந்த திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.