Jump to content

முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஆண்டுக்கு 1,000 ஓவர் பந்து வீச வேண்டும்


Recommended Posts

சுமை அதிகமாவதால் வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைய வாய்ப்பில்லை. முதல் தர போட்டிகளில் ஆண்டுக்கு ஆயிரம் ஓவர் பந்து வீச வேண்டும் என்கிறார் ஷ்ரீநாத்.

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷ்ரீநாத். ஓய்வுக்குப் பின் ஐ.சி.சி. போட்டி நடுவராகப் பணியாற்றி வருகிறார். விளம்பர நிகழ்ச்சிக்காக டில்லி வந்த இவர் அதிகளவில் பந்து வீசுவதால் காயமடைய நேரிடும் என்ற கருத்தை மறுத்தார்.

இது பற்றி ஷ்ரீநாத் கூறுகையில்;

அதிகளவில் பந்து வீசும் போது தசைகள் வலுவடையும். இதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைய வாய்ப்பில்லை. உதாரணமாக பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.

குறைவான போட்டிகளில் பந்து வீசுவதால் தான் 60 சதவீதம் பேர் காயமடைகின்றனர். ஒரு போட்டியில் குறைந்தது 35 ஓவர்கள் வீசும் அளவுக்கு உடலை தயார் செய்ய வேண்டும். முதல் தர போட்டிகளில் ஆண்டுக்கு ஆயிரம் ஓவர் வரை வீச வேண்டும். இதற்காக கடின பயிற்சிகள் மேற்கொள்வது மிகவும் அவசியம்.

அணிகளின் பலத்தை உணர்ந்து வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பளிக்கலாம். இதன் மூலம் வீரர்கள் அடிக்கடி காயமடைவதைத் தவிர்க்கலாமென்றார்.

-thinakkural.com-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.