Jump to content

வூல்மர் கொலை செய்யப்பட்டுள்ளார் அவரது மரணம் இயற்கையானதல்ல


Recommended Posts

* மனைவி கூறுகிறார்

பொப் வூல்மரின் மரணம் இயற்கையானதல்ல, அவர் கொலை தான் செய்யப்பட்டிருக்கிறார் என்று அவரது மனைவி உறுதி கூறியுள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக பாகிஸ்தான் அணியுடன் மேற்கிந்தியா சென்றிருந்த பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொப் வூல்மர் கடந்த மாதம் 18-ஆம் திகதி ஜமேக்காவில் உள்ள ஒரு ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக, ஜமேக்கா பொலிஸார் கூறினர்.

ஆனால் இது குறித்து விசாரணை நடத்திய ஸ்கொட்லாந்து யார்ட் துப்பறியும் நிபுணர்கள் தங்களது அறிக்கையில், வூல்மர் இயற்கையான முறையில் இறந்துள்ளார். அவர் மாரடைப்பால் மரணமடைந்து இருக்கலாம் என்று தெரிவித்திருப்பதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது.

இதனை வூல்மரின் மனைவி கில் மறுத்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது;

"எனது கணவர் இயற்கையான முறையில் இறக்கவில்லை. அவர் கொலை தான் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் யாரால் கொலை செய்யப்பட்டார் என்ற ஆதாரம் தான் கிடைக்கவில்லை. அவர் பெரிய பருமனான நபர். தன்னைத்தானே காத்துக் கொள்ளும் வலிமை படைத்தவர்.

எனவே அவரை நிலைகுலைய வைத்துகொன்றிருக்கிறார்கள். இதனை செய்தது யார் என்பது தெரியவில்லை. அதே சமயம் இதனை ஒரு சராசரியான நபர் செய்திருக்க முடியாது" என்றும் தெரிவித்துள்ளார்.

-thinakkural.com--

Link to comment
Share on other sites

இந்த கேசை நாங்க தான் எடுத்க்டு இருக்கிறோம் கண்டுபிடித்துவிடுவோம்

:P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.