Jump to content

கொலையா? தற்கொலையா?


Recommended Posts

கொலையா? தற்கொலையா?

பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளரான தென்னாபிரிக்கா நாட்டைச் சேர்ந்த பொப் வூல்மர் சில வாரங்களுக்கு முன் இறந்ததைப் பலர் அறிவர்.

அயர்லாந்து அணியுடன் மோதி தோற்ற பாகிஸ்தான் அணியினரின் கைகள் இந்த இறப்பில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று உலகம் பூராவும் சந்தேகக் கண்கள்.

தோற்ற அடுத்த நாளே வூல்மர் இறந்ததால், அது இயற்கையான மரணமல்ல என்று புலனாகிறது. ஆகவே, ஒன்று கொலையாக இருக்கலாம் அல்லது தற்கொலையாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வரவேண்டி இருக்கிறது.

பொப் வூல்மரின் இறப்புக்கு அகோனைட் என்ற விஷம்தான் காரணமென்று ஜமேக்கா பொலிஸார் தகவல் வெளியிட இந்தச் சம்பவம் குறித்து இந்திய அரசின் FORENSIC துறையின் முன்னாள் இயக்குநரான பி. சந்திரசேகரன் கூறும்போது,

வூல்மர் ஆறு அடி ஒரு அங்குல உயரமுடையவர். 100 கிலோ கிராம் நிறை உடையவர். 50 வயது மதிக்கத்தக்க மனிதர்.

இப்படிப்பட்ட ஆஜானுபாகுவான மனிதரை ஒருவர் கழுத்தை நெரித்துக் கொல்வது கடினம். கழுத்து எலும்பு முறிந்திருப்பதாக ஊடகங்கள் முதலில் கதைவிட்டன. கழுத்தை நெரித்துக் கொன்றால் கழுத்தில் காயங்கள் இருக்கும். ஆனால், கழுத்தில் ஏதும் காயங்கள் இல்லை என்று இந்தியாவிலிருந்து ஜமேக்காவில் பணி புரியும் சேஷையா எனும் மருத்துவர் கூறியிருக்கிறார். இவர் வூல்மரின் பிரேதப் பரிசோதனையின் பின் இதைக் கூறியிருக்கிறார்.

கழுத்து எலும்புகள் முறிந்தாலும் கூட அது தற்கொலையால் மட்டுமே வந்தது என்றும் கூற முடியாது.

அகோனைட் என்ற விஷத்தை அருந்தியதால்தான் இந்த மரணம் நடந்திருக்கலாம் என்று ஊர்ஜிதமாக ஜமேக்கா பொலிஸார் நம்புவதால் புலனாய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அகோனைட் என்பது ஒருவகை மூலிகைச்செடியிலிருந்து கிடைக்கும் ஒரு வேதியல் பொருளாகும். இந்த மூலிகைச் செடி பாகிஸ்தானில் பரவலாக வளர்கிறது.

பாகிஸ்தானின் மிக முக்கிய நபர்கள் பலர். இதற்கு முன்பு இந்த விஷத்தை கொடுத்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும் பாகிஸ்தானிய மற்றும் உலக ஊடகங்கள் சொல்லியிருக்கின்றன. ஆனால், இந்தக் கொலைகளைச் செய்த கொலையாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. காரணம் இந்த விஷத்தின் குணம் அப்படி.

இந்த அகோனைட் செடி வகையானது 250 இற்கும் மேற்பட்ட வகைகளில் வளர்கிறது. இது பூண்டு வகையான ஒரு செடியாகும். மண்ணில் மின்குமிழ் போன்ற ஒரு காயும், பிறகு அதிலிருந்து வேர், செடி, பூ என்று இந்தச் செடி இருக்கும். இந்தச் செடிக்கு மாங்உட் (MONKHOOD) அதாவது துறவிகளின் முக்காடு என்று செல்லப்பெயரும் உண்டு. இந்தச் செடியின் வேதிப் பொருளை அம்பில் தடவி ஓநாய்களைக் கொல்வதற்கு பயன்படுத்துவதால் இந்தச் செடியை வுல்ஃப்பேன் (WOLFBANE) என்றும் அழைப்பர்.

கிண்ண வடிவமான பூக்களை இந்தச் செடிகள் கொண்டிருப்பதால் இச்செடியை பட்டர் கப் (BUTTER CUP) குடும்ப வகை செடியைச் சேர்ந்தது என்றும் சொல்வர்.

நரம்புவலி, தலைவலிக்கு இந்தச் செடியின் சாறுகளைக் கொண்டு இன்னும் சீனா, செவ்விந்தியர்கள் போன்றே வைத்தியம் பார்க்கின்றனர்.

அதோடு இந்தச் சாறுகளைக் கொண்டு மூட்டுவீக்கம் (ARTHRITIS), கீழ்வாதம் (RHUEMATISM) போன்ற நோய்களுக்கும் இதை சிகிச்சையாக உலகம் பூராவும் பயன்படுத்தி வருகின்றனர்.

சிகிச்சைக்காக வழங்கப்படும் ஒரு பொருளானது விஷமாக மாறுவதன் காரணமென்ன? அகோனைட் செடியின் வேர், இலை காம்புகளிலிருந்துதான் சிகிச்சைக்குத் தேவையான சாறுகள் எடுக்கப்படுவதுண்டு. இந்தச் சாற்றில் ஐந்தில் ஒரு கிராம் அளவை 60 சதவீத அற்கஹோலுடன் கலந்து சிகிச்சைக்கான மருந்தைத் தயாரிப்பர். இந்த அளவை மீறும்போது அந்தச் சாறு விஷமாகிறது.

அளவு மீறிய சாறான விஷத்தை அருந்தும்போது மூச்சுத் திணறலும் நாடி நிறுத்தமும் ஏற்படும். ஆனால், இந்த மூச்சுத் திணறல் விஷத்தால்தான் வந்ததா அல்லது வேறு காரணங்களால் வந்ததா என்று கண்டுபிடிக்க முடியாது. அதோடு சயனைட் மற்றும் மொர்குரி போன்ற விஷங்களைச் சாப்பிட்டு இறப்பவர்களை பிரேதப் பரிசோதனை செய்யும்போது அந்த விஷங்களை உடலிலிருந்து கண்டுபிடித்துவிடலாம். ஆனால், அகோனைட் விஷம் பிரேதப் பரிசோதனையில் தெரியாது. இதுவே மருத்துவர்களுக்கு சவாலாக உள்ளது. விஷமருந்து அறிஞர்களே வூல்மரின் மரணம் தொடர்பான விசாரணைகளை கை கழுவி விட்டனர்.

அகோனைட் விஷத்தைக் குடிப்பவர் சயனைட் குடித்த நபரைப்போல் உடனடியாக சாவதில்லை. ஆனால், அகோனைட் விஷத்தை குடித்தவர் ஒரு மணிநேரம் வரை சாதாரண மனிதர்கள் போலவே நடந்து கொள்வர். கடைசி நேரத்தில் மட்டுமே இந்த விஷம் நரம்புகளை இறுக்கி உடலுக்கு ஒட்சிசன் வருவதைத் தடை செய்யும்.

வூல்மர் கொலை முயற்சிக்கு உள்ளானால் ஃபோன் செய்யவோ, பக்கத்து ஆட்களைக் கூப்பிடவோ முயற்சிக்காதது இதனால்தான். கடைசி நிமிடத்தில் மாத்திரம் வாந்தி வரும். பிறகு மரணம்தான். கடைசி நிமிடத்தில் நெஞ்சு விரிவடைந்து இருதயத் துடிப்பு சடாரென நின்றுவிடுவதால்தான் இந்த மரணம் நிகழ்கிறது.

அகோனை சாற்றில் மூன்று விதமான வேதியல் பொருட்கள் உள்ளன.

1. அககோனிபைன் (ACONIPINE)

2. பென்சகோனைன் (BENZACONINE)

3. அகோனின் (ACONINE)

இந்த அகோனைட் விஷத்தைச் சாப்பிட்டவர்களுக்கு விஷ முறிவுக்கான மருந்துகளும் உண்டு. அவையாவன:

அட்ரோபைன் (ATROPINE)

டிஜிடலைன் (DIGITALINE)

அத்தோடு விஷ முறிவாக அற்கஹோலும் கொடுக்கலாம்.

வூல்மர் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை பிரேதப் பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியாத, மருத்துவ கையாலாகாத தனத்தைக் கண்டு மருத்துவ உலகினரே ஆச்சரியப்பட்டுக் கிடக்கின்றனர்.

அகோனைட் விஷத்தை யாராவது வூல்மருக்குக் கொடுத்தனரா அல்லது வூல்மரே அளவுக்கு மிஞ்சிய அல்கனைட் விஷத்தை அருந்தினாரா என்பதே இப்போது கேள்வியாக உள்ளது.

வூல்மர் தங்கியிருந்த ஹோட்டலில் 24 மணிநேரமும் ஓடக்கூடிய கமரா ஒன்று இருந்தது. இந்த கமராவும் ஹோட்டல் விறாந்தைகளில் யார் போகிறார்கள், வருகிறார்கள் என்பதை மட்டுமே பதிவு செய்யும். ஹோட்டல் அறைகளில் யார் வந்தார்கள் யார் சென்றார்கள் என்பதை இந்த கமரா பதிவு செய்யாது.

வூல்மரின் மரணத்துக்கான கடைசித் துருப்பாக இந்த வீடியோ கமரா மட்டுமே ஜமேக்கா பொலிஸாரிடம் உள்ளது.

மருத்துவ உலகம் கைவிட்டதை கமரா வெளிச்சம்போட்டுக் காட்டுமா என்பதையே வூல்மரின் ஆவி நம்பியுள்ளது.

தினக்குரல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னய்யா கதை விடுறீங்கள்? ஏற்கனவே இந்த கொலைவழக்கில ஒரு முக்கிய கிரிக்கெட் பெரும்புள்ளி சம்மந்தப்பட்டுள்ளார் என்று பொலிசே சொல்லி இருக்கு. இப்ப என்னடா என்டா இப்படி ஒரு கதை வருகுது.

Link to comment
Share on other sites

என்னய்யா கதை விடுறீங்கள்? ஏற்கனவே இந்த கொலைவழக்கில ஒரு முக்கிய கிரிக்கெட் பெரும்புள்ளி சம்மந்தப்பட்டுள்ளார் என்று பொலிசே சொல்லி இருக்கு. இப்ப என்னடா என்டா இப்படி ஒரு கதை வருகுது.

இந்தை கேசை எடுத்தது நாம தான் தலை

:unsure:

Link to comment
Share on other sites

அதுதான் இந்த இழு இழுக்குது

எப்படியாவது கண்டுபிடித்துவிடுவோம்

:unsure:

Link to comment
Share on other sites

இந்தை கேசை எடுத்தது நாம தான் தலை

:unsure:

யார் சார்பா கேஷ் எடுதிருகிங்க கொலைகாரன் சார்பாவா இல்லை கொலை செய்யப்பட்டவர் சார்பாவா சொல்லவே இல்லை, கொலை செய்யப்பட்டவர் சார்பானா கண்டிப்பா கொலைகாரன் தப்பிசுடுவான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியாவது கண்டுபிடித்துவிடுவோம்

:unsure:

அது ரெம்ப சுலபம் ஜமுனா!! முதல்ல எப்படியாவது மாட்டை பிடித்துக் கட்டுங்கோ. கண்டு காலடியில வந்து நிக்கும். :):lol:

Link to comment
Share on other sites

யார் சார்பா கேஷ் எடுதிருகிங்க கொலைகாரன் சார்பாவா இல்லை கொலை செய்யப்பட்டவர் சார்பாவா சொல்லவே இல்லை, கொலை செய்யப்பட்டவர் சார்பானா கண்டிப்பா கொலைகாரன் தப்பிசுடுவான் .

கொலை செயப்படவன் சாரிபில் அதுவும் எங்கள் அண்ணன் 007 எடுத்துள்ளார் பிறகு என்ன

:unsure:

அது ரெம்ப சுலபம் ஜமுனா!! முதல்ல எப்படியாவது மாட்டை பிடித்துக் கட்டுங்கோ. கண்டு காலடியில வந்து நிக்கும். :lol::lol:

மாட்டுக்கு இந்த கேசுக்கும் என்ன சம்மந்தம் பெரியப்பா

:)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.