Jump to content

உலக கிண்ண கிரிக்கெட்டில் மத்தியஸ்தர்கள் விதிமுறைகளை சரியாகக் கடைப்பிடிக்கவில்லை


Recommended Posts

உலக கிண்ண கிரிக்கெட்டில் மத்தியஸ்தர்கள் விதிமுறைகளை சரியாகக் கடைப்பிடிக்கவில்லை

* மத்தியஸ்தர் வெங்கட்ராகவன்

"முடிவடைந்துள்ள உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில், அனுபவம் வாய்ந்த மத்தியஸ்தர்கள் மத்தியஸ்தம் வகித்த போதிலும் இவர்கள் வழங்கிய பல தீர்ப்புகள் பெரும் சர்ச்சையையே ஏற்படுத்தியுள்ளன. இதற்கு முக்கிய காரணம், கிரிக்கெட் விதிகளை மத்தியஸ்தர்கள் அவ்வப்போது மறந்து செயற்படுவது தான் காரணம்".

இவ்வாறு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், ஓய்வுபெற்ற சர்வதேச கிரிக்கெட் மத்தியஸ்தருமான வெங்கட் ராகவன் தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;

போட்டிகளின் போது, மத்தியஸ்தர்கள், வழங்கிய LBW முறையிலான பல தவறான தீர்ப்புகளினால் துடுப்பாட்ட வீரர்கள், மனக் கசப்புடனும் முகத்தை சுழித்த வண்ணம் மைதானத்தை விட்டு வெளியேறுவதும், சில வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறும் போது மத்தியஸ்தர்களை முறைத்துப் பார்த்த வண்ணம் வெளியேறுவதையும் நாம் பார்க்கின்றோம்.

மத்தியஸ்தர்கள் வழங்கும் LBW முறையிலான தீர்ப்புகள், சரியா, பிழையா என்பதை, தொலைக்காட்சியின் மூலம் உடனடியாவே காணக்கூடியதாக இருக்கின்றது. கிரிக்கெட் ஆட்டத்தை, இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தொலைக்காட்சிகள் மூலம் பார்க்கின்றார்கள். மத்தியஸ்தர்கள் கொடுக்கும் தீர்ப்பு பிழையானது என்பதை தொலைக்காட்சிகள் மூலம் மக்கள் பார்க்கும் போது மத்தியஸ்தர்கள் மேல் இருக்கும் நம்பிக்கை குறைவதுடன், அவர்கள் மீது வெறுப்பையும் ஏற்படுத்திவிடுகின்றது.

இலங்கை, நியூஸிலாந்து அணிகளிடையே நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றபோதிலும், இலங்கை வீரர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட LBW முறையிலான தீர்ப்புகள் பிழையானது என்பதை நாம் காணக்கூடியதாகவே இருந்தது.

மத்தியஸ்தர்கள் விதிமுறைகளை மறந்து செயல்பட்டதை இலங்கை அவுஸ்திரேலிய இறுதி ஆட்டத்திலும் நாம் காணக்கூடியதாக இருந்தது.

மழை காரணமாக இறுதி ஆட்டம் 38 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்து ஆடிய பின்பு இலங்கை அணி துடுப்பெடுத்து ஆடும்போது, இறுதிக் கட்டத்தில் 2 ஓவர்களும், 5 பந்துகளும் மிகுதி இருக்கும் போது, போதிய வெளிச்சமின்மையினால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதை இலங்கையணியின் துடுப்பாட்ட வீரர்களும் ஏற்றுக்கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறினார்கள்.

இந்தக் கட்டத்தில், அவுஸ்திரேலிய அணி வீரர்கள், தாங்கள் தான் "உலக சாம்பியன்" என்ற ஆர்ப்பரிப்பில் ஒருவுரை ஒருவர் கட்டித்தழுவி கரகோஷமிட்டனர். சிறிது நேரத்தின் பின்பு, மிகுதி ஓவர்களையும் வீச வேண்டுமென அவுஸ்திரேலிய அணியின் கப்டன் ரிக்கிபொண்டிங்கிடம் மத்தியஸ்தர்கள் தெரிவித்தபோது, வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த இடத்தில்தான் மத்தியஸ்தர்கள் மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டார்கள். ஆட்டம் நிறுத்தப்பட்ட நேரத்தில் இருந்து ஆட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்த இடைவெளி நேரத்தை மத்தியஸ்தர்கள் கணித்திருக்க வேண்டும். இதுதான் கிரிக்கெட் ஆட்டவிதி.

20 நிமிடங்களின் பின்புதான் ஆட்டம் மீண்டும் ஆரம்பமானது. ஒரு ஓவர் பந்துவீச, கிட்டத்தட்ட 4 நிமிடங்கள் பிடிக்கும், மிகுதி ஓவர்கள் 3 ஐயும் வீசுவதற்கு 12 நிமிடங்கள் பிடிக்கும். இதன்படி போதிய வெளிச்சம் இல்லாமல் ஆட்டம் நிறுத்தப்படும் போது, ஆட்டம் முடிவடைந்துவிட்டது என்று தான் மத்தியஸ்தர்கள், அறிவித்திருக்க வேண்டும். இதுதான் கிரிக்கெட் ஆட்டவிதி, இதை மத்தியஸ்தர்கள் மறந்து, மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்தது. மிகப்பெரிய தவறாகும். இதை போட்டி மத்தியஸ்தரான ஜக்குரோவே ஒப்புக்கொண்டுள்ளார்.

போட்டி மத்தியஸ்தரான ஜக்குரோ இதுபற்றி கருத்துத் தெரிவிக்கையில்;

இறுதி ஆட்டத்துக்கு 5 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவே கடமையாற்றினோம். அதாவது, மைதான மத்தியஸ்தர்களான, ஸ்ரப்க்ணர், அலிங்ரர், 3 ஆவது மத்தியஸ்தரான றூடிகொட்சன், அவரின் உதவியாளரான பில்லிபோடன்,போட்டி மத்தியஸ்தரான நான் ஆகிய 5 பேர் அடங்கிய மத்தியஸ்தர் குழு தான் ஆலோசனை நடத்தி இந்த முடிவை எடுத்தோம். இந்த முடிவு, மிகப்பெரிய தவறானதுடன் இது ஒரு கேலிக்கூத்தாகும்.

இது எங்களின் தவறாகும். இதை எந்த ஒரு மத்தியஸ்தரின் தவறு என்றும் கருதக்கூடாது. இது போட்டியை கட்டுப்படுத்தி நடத்த ஒரு குழு எடுத்த முடிவாகும். இந்த முடிவு ஒரு தவறான முடிவு என்பதை நான் ஒப்புக்கொள்கின்றேன். ஒரு நெருக்கடியான நிலையில் இவ்வாறான ஒரு முடிவை எடுப்பது மிகவும் கடினமான நிலை என்று தான் நினைக்கின்றேன். எனவே, இதுபோன்ற தவறுகளில் இருந்து பாடம் கற்று, எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகளை நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றே நான் தெரிவிக்கின்றேன் என்று தெரிவித்தார்.

"டக்வோர்த் லூயிஸ் முறை" என்ன என்பதை, வெங்கட்ராகவன் விளக்கிக் கூறுகையில்;

50 ஓவர்களில் முதலில் துடுப்பெடுத்து ஆடுகிற அணி 250 ஓட்டங்களுக்கு மேல் எடுத்திருந்தால், அதை "கம்பியூட்டரில்" தெரிவித்து 21 ஆவது ஓவரில் மழை காரணமாகவோ அல்லது போதிய வெளிச்சமின்மையினால் ஆட்டம் நிறுத்தப்படும் போது, எதிரணி எவ்வளவு ஓட்டங்களை எடுத்திருக்க வேண்டும் என்பதை "கம்பியூட்டர்" மிகத் தெளிவாகத் தெரிவிக்கும். இந்த முறையில் எதிரணியினர் விக்கெட்டுகளை இழக்காமல் இருப்பது தான் மிக மிக முக்கியமானது.

எதிரணியினர் ஆட்டம் நிறுத்தப்படும் போது, 20 ஓவர்களில் 100 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தால், அதில் எந்தவிதமான நன்மையும் கிடையாது. இவ்வணி 2 விக்கெட்டுகளை இழந்து 80 ஓட்டங்களை எடுத்திருந்தால், அந்த அணி நல்ல நிலையில் இருக்கின்றது என்பது தான் கணிப்பாகும். இதன்படி எதிர்த்தாடும் அணியினர் தங்களது துடுப்பாட்ட கணிப்பை மிக துல்லியமாக கருத்தில் கொள்ள வேண்டும்.

டக்வோர்த் லூயிஸ் முறைக்கு ஒரு அணி தள்ளப்படும் போது, 20 ஆவது ஓவரில் இருந்து, 50 ஓவர் வரை ஒரு விக்கெட் இழப்புக்கு என்ன கணிப்பு, 2 ஆவது விக்கெட் இழப்புக்கு என்ன கணிப்பு என்று அந்த கம்பியூட்டர் மிகத் தெளிவாகத் தெரிவிக்கும். ஆகவே, இதில் விக்கெட்டுகளை இழக்காமல் கணிசமாகத் துடுப்பெடுத்து ஆடுவது தான் மிக மிக முக்கியமாகும் என்று வெங்கட்ராகவன் தெரிவித்தார்.

தினக்குரல்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.