Jump to content

மாணவனின் வீட்டுக்கு தீ வைத்த மாணவி


Recommended Posts

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் கதிரியை சேர்ந்தவர் ரேகா (பெயர் மாற்றம்) அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவன் பார்ப்பதற்கு அழகாக இருப்பாள்.

அதே பகுதியை சேர்ந்தவன் ராஜா. இவன் அனந்தபுரத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறான்.

ராஜா மாணவி ரேகாவை ஒருதலையாக காதலித்து வந்தான். ஆனால் அவள் அவனது காதலை ஏற்க மறுத்தாள். இதனால் ரேகா எங்கு சென்றாலும் ராஜா பின் தொடர்ந்து சென்று ஈவ்டீசிங் செய்து வந்தான்.

தொடக்கத்தில் அவன் என்ன சொன்னாலும் ரேகாதலை குனிந்தபடி அந்த இடத்தை விட்டு சென்று விடு வாள்.

அவளது மவுனத்தை பார்த்து அவர் தன்னைத்தான் விரும்புகிறாள் என்று தினமும் பின் தொடர்ந்து சென்று காதல் கடிதம் கொடுப்பது, சைகை காட்டுவது... என்று தொல்லை கொடுக்கத் தொடங்கினான். கடந்த சில நாட்களாக அவனது ஈவ் டீசிங் எல்லை மீறி யது. ரேகா தனியாகச் செல்லும் போது ஆபாசமாகப் பேசத் தொடங் கினான்.

நேற்று மாலை அவள் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண் டிருந்தாள்.

அப்போது ராஜா ஆபாச இரட்டை அர்த்த பாடல் பாடி ஈவ்டீசிங் செய்தான். இது அவளுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

நேராக வீட்டுக்கு சென்ற அவள் ராஜாவின் ஈவ்டீசிங் தொல்லை பற்றி தனது தாயிடம் கூறினாள்.

உடனே ரேகாவும், அவளது தாயும் உறவினர்களைத் திரட்டிக்கொண்டு ராஜாவின் வீட்டுக்கு சென்றனர். அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த ராஜாவை அடித்து உதைத்தனர். அவன் அலறினான். ஆனாலும் ரேகாவுக்கு ஆத்திரம் தீர வில்லை.

திடீரென ஆவேசம் அடைந்த ரேகா ராஜாவின் வீட்டு கூரைக்கு தீ வைத்தாள். இதில் வீடு முழுவதும் தீப் பிடித்து எரிந்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

ராஜாவின் உறவினர்கள் அங்குள்ள போலீஸ் நிலையத் திற்கு திரண்டு சென்று வீட்டுக்கு தீவைத்த ரேகா மற்றும் உறவினர்களை கைது செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படாமல் தடுக்க போலீஸ் படை குவிக்கப்பட்டது.

Thanks to Malaiamalar..

சைட் அடிக்கிறனிங்கள் எல்லாம் இனி கவனமா இருங்கப்பா..

Link to comment
Share on other sites

தலைப்பை பார்த்தவுடனேயே விளங்கிவிட்டது இது இந்தியாவில்தான் நடந்து இருக்கும் என்று.. :rolleyes: இதைவைத்து ஒரு தமிழ்ப்படம் எடுப்போமா?

Link to comment
Share on other sites

அடுத்தபோச்சு..பட் எடுக்கிற எங்கட வீட்ட எரிக்கமா விட்டா சரிப்பா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்பை பார்த்தவுடனேயே விளங்கிவிட்டது இது இந்தியாவில்தான் நடந்து இருக்கும் என்று.. :rolleyes: இதைவைத்து ஒரு தமிழ்ப்படம் எடுப்போமா?"""

எனக்கும் தான் தலைப்பைப் பார்த்தவுடனேயே விளங்கிவிட்டது.! இந்தியா புண்ணிய பூமிதான் ஆனால் அங்கு சனம் செய்யிற கொடுமைகள் எல்லாம் பாவச் செயல்கள்!

'மகாத்மா" சொன்ன சுதந்திரம் அங்கு இன்னமும் கிடைக்கவில்லை.!.

Link to comment
Share on other sites

அதுவா தமிழ் தங்கை இன்னா மட்டார்னா பாரதி கண்ட புதுமை பெண்கள் அப்பிடி பன்னிறாங்க...இனி அந்த ஏரியா பசங்களே பொண்ணுங்க கிட்ட வம்பு பண்ண பயப்பிடுவாங்க..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனித உணர்வுகளை மதிக்கத் தெரியாத மிருகங்களுடன் காதலென்ன அன்பென்ன பாசமென்ன..! எல்லாம் அர்த்தமற்றவை..! :unsure::unsure:

Link to comment
Share on other sites

தலைப்பை பார்த்தவுடனேயே விளங்கிவிட்டது இது இந்தியாவில்தான் நடந்து இருக்கும் என்று.. :lol: இதைவைத்து ஒரு தமிழ்ப்படம் எடுப்போமா?

முதல்ல புல அகதித்தமிழன் செய்யிறதுகளை பாருங்க, அப்புறம் மற்றவனிண்ட பீத்தல்களை கவனிக்கலாம், இங்கிலண்டில இந்த 'காம' லவ் வினால் கோஸ்ரி மோதல்கள் நடாந்துக்கொண்டு இருக்கின்றது, இதைவிட கேவலம் கனடா, சுவிஸ்.

இங்கிலாந்தில் ஒரு அழகான இளம் தமிழ் அகதி பெண்ணுக்கு பின்னால் ஒரு கும்பல் இருக்கும், (அந்த அகதி பெண்ணின் பாய்பிரண்டின் நண்பர்கள் இந்த கும்பலில் இருப்பார்கள்), எவனாச்சும் தன் காதலியை கிண்டல் செய்தால் இந்த கும்பல் அந்த இளைஞனை உண்டு இல்லை எண்டு ஆக்கிவிடுவார்கள், ஆனால் இந்த நா*** மற்றைய பெண்களை கிண்டல் செய்யலாம். இதில பரிதாபம் என்னவெண்டால், சிட்டிசன் ஒவ் இங்கிலந்த், எண்ட பட்டம் கிடைத்ததும், வெள்ளையள்ட குணத்துக்கு மாறுகிறார்கள் இந்த ஊத்தவாளிகள், அகதி வெளி நாட்டவனாக இங்கிலாந்தில் இருப்பவன், வேலை உண்டு தான் உண்டு எண்டு இருக்கிறான்.

சிட்டிசன் ஒவ் இங்கிலாந்த் தமிழ் அகதி குரங்குகளை வன்னிக்கு அனுப்பி பாடம் கற்றுக்கொள்ள செய்யவேண்டும். அப்பொழுதாவது திருந்துகின்றார்களா எண்டு பார்ப்பம்/ :angry:

பி.கு: இங்கிலாந்து எண்டு குறிப்பிடப்பட்டவற்றை சோமாலியாவாக நினைக்கவும். :unsure::unsure:

Link to comment
Share on other sites

முதலில் நம்ம டங்கை வன்னிக்கு அனுப்பி எடுக்க வேண்டும்

:unsure::(

Link to comment
Share on other sites

டண் இங்கிலாந்து எண்டாலும் பரவாயில்லை போணதுகள் ஏதோ வெள்ளைக்காரன் செய்யிறதைப்பாத்துப் போட்டு இருப்புக் கொள்ளாமல் இருக்குதுகள் எண்டா .........இஞ்சை யாழ்ப்பாணத்திலை இருந்நு கொழும்புக்குப் போணதுகளே இப்பிடித்தானே திரியப் பாக்குதுகள் ........ இப்பிடிப் பாத்தா வன்னியிலை மாத்திரம் தான் .....................................

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.