Jump to content

தமிழ் பேசும் மக்களின் பேச்சுவழக்கில் கலந்துள்ள சிங்கள மொழிச் சொற்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பேசும் மக்களின் பேச்சுவழக்கில் கலந்துள்ள சிங்கள மொழிச் சொற்கள்!

[27 - April - 2007]

* மாத்தளை மாவட்டத்தில் கலேவெல பிரதேசத்தில் செய்யப்பட்ட ஆய்வு

பல்லின மக்கள் வாழும் பிரதேசங்களில் மொழிக்கலப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். தமிழ் மொழியும இதற்கு விதிவிலக்கானதல்ல. எமது இலங்கை நாடானது சிங்கள மொழிக்குரிய நாடாக இருந்தாலும், முஸ்லிம் இன மக்களின் தாய்மொழியானது தமிழாகும்.

வடக்கு, கிழக்கு தவிர்ந்த தமிழை தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம் கிராமங்களின் அமைவிடங்களை நோக்கும் போது, சிங்களக் கிராமங்களை அயற்கிராமங்களாகவும், சிங்களக் கிராமங்களால் சூழப்பட்டதாகவுமே அநேகமான முஸ்லிம் கிராமங்கள் அமைந்துள்ளன.

இவ்வாறான அமைவிடச் சூழலில் முஸ்லிம்கள் தாய்மொழியாக தமிழ் மொழியைக் கொண்டிருந்த போதிலும் பேச்சுவழக்கில் சிங்கள மொழிச் சொற்களின் கலப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

எழுத்து வழக்கில் தமிழ் மொழியுடன் சிங்கள மொழிச் சொற்களின் கலப்பு தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், பேச்சு வழக்கில் சிங்களச் சொற்களின் கலப்பை நாம் அவதானிக்க முடிகின்றது.

தனித்தமிழ் மொழிப் பிரதேசங்களில் இவ்வாறானதொரு பேச்சு வழக்கை நாம் காண முடியாது. ஆனால், சிங்கள மக்களுடன் இணைந்து முஸ்லிம் மக்களிடம் குறிப்பிட்டுக் காட்டக்கூடிய அளவிற்கு சிங்கள மொழிச் சொற்கள் கலந்துவிட்டது அதிசயமானதொன்றல்ல.

மாத்தளை மாவட்ட கலேவெலப் பிர தேசத்தில் தமிழ் மொழிப் பேச்சு வழக்கில் கலந்துள்ள சிங்கள சொற்களையே இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்கின்றேன்.

சில சிங்களச் சொற்கள் எவ்வித மாற்றமும் இன்றி முழு வடிவமாகவே பேச்சு வழக்கில் வந்து கலந்துள்ளன.

`மாட்டு வண்டி' என்ற சொல்லை நாம் எடுத்துக் கொண்டால் வண்டி என்ற சொல்லுக்குப் பதிலாக `கரத்த' என்ற சிங்களச் சொல்லே பயன்பாட்டில் உள்ளது. மாட்டு வண்டி, தள்ளு வண்டி என்ற சொற்களை `மாட்டுக் கரத்த', `தள்ளுக் கரத்த' என்றே எமது பிரதேச மக்கள் பேசுகின்றனர்.

எழுத்து வழக்கில் தமிழ்ச் சொற்கள் உயிர்வாழ்ந்தாலும் பேச்சு வழக்கில் அவை மறைந்து நிற்பதையே நாம் காண முடிகின்றது. `கரத்த' என்ற சொல்லுக்குப் பதிலாக மீண்டும் `வண்டி' என்ற சொல்லை நடைமுறையில் கொண்டு வருவது என்பது சிரமமான ஒன்றாகும். `கரத்த' என்ற சொல்லே பேச்சு வழக்கில் ஆழ வேரூன்றியுள்ளது.

வண்டியுடன் தொடர்புடைய இன்னொரு சிங்களச் சொல்லை எடுத்துக் காட்டலாம். சில்லு அல்லது சக்கரம் என்ற சொல்லுக்குப் பதிலாக `ரோத' என்ற சொல்லே பயன்பாட்டில் உள்ளது. `கரத்த ரோத', `சைக்கிள் ரோத' என்று இப்பிரதேச வாசிகளால் பேசப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

`கொய்யாப்பழம்' என்ற சொல்லை யாருடைய வாயிலிருந்தும் நாம் கேட்கவே முடியாது. அச்சொல் எழுத்து வழக்கில் புத்தகத்துக்கு மட்டுமே சொந்தமானது என்றே கூறவேண்டியுள்ளது. `பேர' என்ற சிங்களச் சொல்லுடன் காய் சேர்ந்து `பேரக்காய்' என்றே பேசப்படுகின்றது.

`பேரக்காய்' என்ற சொற்பிரயோகத்தில் இன்னுமொரு வேடிக்கையும் நாம் இனங்காண முடிகின்றது. `பழம்' என்பதைக் குறிக்க சிங்கள மொழியில் தனியான சொல் பயன்படுத்தப்படுவதில்லை. காய் என்ற கருத்தில் `கெடி' என்றே பழமும் அழைக்கப்படுகின்றது. `பேரகெடி' என்றே கொய்யாப்பழத்துக்குரிய சிங்கள சொற்பிரயோகம் பயன்படுத்தப்படுகின்றது. எனவே, இந்த சிங்கள மொழிச் சொல்லின் தாக்கமானது கொய்யாப்பழம், கொய்யாக்காய் என்ற வேறுபாட்டை காட்டாத நிலையில் `பேரக்காய்' என்றே தமிழ் மொழிப் பேச்சு வழக்கிலும் இடம் பெற்றுள்ளது.

`பேரப்பழம்' என மாற்றம் பெறாது, `பேரக்காய்' என அழைக்கப்படுவதால் இச் சொல்லில் `பழம்' என்ற சொல் மறைந்து போய்விட்டது. மாம்பழம் - `அம்பகெடி' என்றும், அன்னாசிப்பழம் - `அன்னாசிகெடி' என்றும், கொய்யாப்பழம் - `பேரகெடி' என்றும் சிங்கள மொழிப் பேச்சு வழக்கில் இடம் பெறுவதால் - அதன் தாக்கமே `பழம்' என்ற சொல் `பேரப்பழம்' என்பதில் வராமல் `பேரக்காய்' என்று இடம்பெற்றுள்ளது எனத் துணியலாம். இங்கு `பழம்' என்ற சொல்லின் மறக்கடிப்பானது ஏனைய பழங்களுக்குப் பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உணவுப் பொருட்களில் `அப்பம்' என்ற சொல் அனேகமாகப் பயன்படுத்தப்படுவதில்லை. பதிலாக `ஆப்ப' என்ற சிங்களச் சொல்லே பயன்படுத்தப்படுகின்றது. மேலும் `மதில்' என்பது `தாப்ப' என்ற சொல்லாலும் அழைக்கப்படுகின்றது.

`வெண்டிக்காய்' என்ற சொல்லானது புத்தகங்களில் மட்டும் என்றாகி விட்டது. பேச்சுவழக்கில் இச் சொல்லின் பயன்பாடானது மிகமிக அரிது. பண்டக்காய் என்றே மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

"கடிகாரம்" என்ற சொல் பழக்கப்பட்ட சொல்லாக இருந்த போதிலும், `உருலோசு' என்ற சிங்களச் சொல்லே பேச்சில் செல்வாக்குப் பெற்றுள்ளது.

சில சிங்களச் சொற்கள் சிறுசிறு மாற்றங்களுக்கு உட்பட்டு தமிழ்ச் சொல்லாகி பேச்சு வழக்கில் பயன் படுத்தப்படுகின்றது.

பாடசாலைகளில் கூட சரியான தமிழ்ச் சொற்பிரயோகத்தை பேச்சில் கொண்டுவர முடியாத அளவுக்கு சில சிங்கள சொற்கள் தமிழ்மொழிப் பேச்சு வழக்கில் இடம் பிடித்துள்ளதை சுட்டிக் காட்டத்தான் வேண்டும்.

`கதிரை' என்ற சொல்லுக்குப் பதிலாக `புட்டுவ' என்ற சிங்களச் சொல்லானது "அம்" விகுதி பெற்று `புடுவம்' என்ற சிறுமாற்றத்துடன் பேசப்படுகின்றது. படித்தவர், படிக்காதவர் என்ற வித்தியாசமின்றி சகலரும் `புடுவம்' என்ற இச்சொல்லையே பயன்படுத்துவதை காணலாம்.

`இலவமரம்', `இலவம்பஞ்சு' என்ற சொற் பிரயோகம் இப்பிரதேசங்களில் இல்லை. இதற்குப் பதிலாக `கொட்டா மரம்', `கொட்டாப் பஞ்சு' என்ற சொற்களே வழக்கத்தில் உள்ளது.

தலையணையைக் குறிக்கும் சிங்களச் சொல் `கொட்ட' என்பதாகும். இச் சொல் நேரடியாக தலையணையைக் குறிக்கப் பயன்படுத்தப்படவில்லை. தலையணை மரம் - `கொட்டாமரம்' (இலவமரம்) என்ற வடிவிலும், தலையணைப்பஞ்சு - `கொட்டாப் பஞ்சு' (இலவம் பஞ்சு) என்ற வடிவிலும் காரணப்பெயர் என்ற இலக்கண அமைப்பில் `கொட்டாப் பஞ்சு', `கொட்டா மரம்' என்ற சொற்கள் பேச்சு வழக்கில் இடம் பெற்றுள்ளன.

வீட்டில் வாசல், ஜன்னல் என்பவற்குக்கான `நிலை'யைக் குறிக்கும் சிங்களச் சொல் `உலுவகு' என்பதாகும். இச் சொல் சிறுமாற்றத்துடன் தமிழ்மொழி பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுகின்றது. `உலுவகு' என்ற சொல்லுடன் `வாசல்' என்ற சொல்லும் சேர்ந்து `உலுவாச' என்ற சொற்பிரயோகமே பயன்படுகின்றது. `ஜன்னல் உலுவாச', `வாசல் உலுவாச' என வாயல்நிலை, ஜன்னல் நிலை என்பதற்குப் பதிலாக பேசப்படுகின்றது.

`அரிவாள்' என்ற சொல்லுக்குப் பதிலாக `தேகெத்த' என்ற சிங்களச் சொல் `தேகத்தி' என விகாரப்பட்ட நிலையில் பயன்படுத்தப்படுகின்றது.

உயரம் குறைந்த பொருளைக் குறிக்க நாம் தமிழில் குட்டை, கட்டை என்ற சொற்களை பயன்படுத்ததுகின்றோம். அதேபோல் உயரம் குறைந்தவரைக் குள்ளன், கட்டையன் என அழைக்கின்றோம். மேற்சொன்ன பொருள் குறிக்கும் சிங்களச் சொல் `கொட' - கட்டை, `கொடயா' - குள்ளன் என்பதாகும். இங்கு `கொடயா' என்ற சிங்களச் சொல்லானது `அன்' விகுதி பெற்று `கொடயன்' என பேச்சு வழக்கில் இடம் பெற்றுள்ளது.

அதேபோன்று, மரக்குற்றியைக் குறிக்கவும் `கொட' என்ற சிங்களச் சொல் பயன்படுத்தப்படுகின்றது. குற்றி என்ற தமிழ்சொல் பேச்சு வழக்கில் மிகமிக அரிதாகவே உள்ளது.

`கொட' என்ற சிங்களச் சொல் தமிழ் மொழிக்குரிய சொல் என்ற நிலையிலேயே பயன்படுகின்றது. `பந்தயம்' என்ற சொல்லை எடுத்துக் கொண்டால் இச் சொல் பேசப்படுவதேயில்லை என்று கூறலாம். `ஒட்டு' என்ற சிங்களச் சொல்லே தமிழ்ச் சொல் போன்று பயன்படுகின்றது.

மேலும், அசிங்கம் - `ஜராவ' என்ற சிங்களச் சொல்லாலும், அபராதம் - `தட' என்ற சிங்களச் சொல்லாலும், நத்தை - `கொழுபல்லா' என்ற சிங்களச் சொல்லாலும், ஆந்தை - `பகமூனா' என்ற சிங்களச் சொல்லாலும் பேச்சு வழக்கில் மறக்கடிக்கப்பட்ட நிலையே காணப்படுகின்றது.

இன்னும் சில சிங்களச் சொற்களின் பட்டியல் வருமாறு:

சிங்களச் சொற்களில் சில தமிழ்ச் சொற்களின் பயன்பாட்பை மறக்கடிக்காத நிலையில் சிலசமயம் சிங்களச் சொல்லும் சில சமயம் தமிழ்ச் சொல்லும் வரிசை - போலிம, பரிசு - தேகி போன்ற சொற்களை உதாரணமாகக் காட்டலாம்.

இவ்வாறு பேச்சு வழக்கில் கலந்துள்ள சிங்களச் சொற்களானது, மண்வாசனை கொண்ட இலக்கியம் எனும் போது எழுத்து வழக்கிலும் இடம் பிடித்து விடலாம் என்றே எண்ணத் தோன்றுகின்றது. சிங்களமொழிப் பேச்சு வழக்கிலும், ஓரிரு தமிழ்ச்சொற்கள் கலந்து விட்டுள்ளதையும் நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். `பைத்தியம் ', `நாடகம்', `பத்தினி' , `அந்திம' போன்ற சொற்களை இங்கு குறிப்பிடலாம். (இவை பொதுவானவையாகும். எமது பிர தேசத்துக்கு மட்டும் உரியவையல்ல).

இம்மொழிக்கலப்பானது பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுபட்டு அமையலாம், இங்கு நான் கலேவெல பிரதேசத்தில் செய்த இவ் ஆய்வானது - எமது மாத்தளை மாவட்ட ரீதியில் ஓரளவு மற்ற பிரதேசங்களுக்கும் பொருத்தமுடையதாக அமையலாம். பேச்சு வழக்கிலான இம் மொழிக்கலப்பு மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதொன்றாகும்.

கட்டுரையாளர்: எம்.ஆர்.எம். நசீர்தீன் (பீ.ஏ.) மமா/க/தேவஹூவ மு.ம.வி. தேவஹூவ.

தினக்குரல்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற வாழ்த்துக்ள் அண்ணா........................
    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.   இன்னும் 25 மணித்தியாலங்களே உள்ளன. இதுவரை ஆறு பேர்தான் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். இன்னும் குறைந்தது நான்கு பேராவது விரைவில் கலந்துகொண்டால்தான் யாழ்களப் போட்டி நடக்கும்! 😉
    • Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀    
    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.