Jump to content

பத்து ஐடியாக்கள்!


Recommended Posts

இதோ பத்து ஐடியாக்கள்!

சும்மா நலம் விசாரிப்பதற்காக போன் செய்வது என்பது கூடவே கூடாது. முக்கியமான விஷயம் என்றால் மட்டுமே போனை பயன்படுத்த வேண்டும். அதேபோல எதிர்முனையில் பேசுபவர், ‘‘அப்புறம் வேற என்ன விசேஷம்?’’ என்று ஆரம்பித்தால், வம்புப் பேச்சுக்குத் தயாராகிறார் என்பதை உணர்ந்து உஷாராகிவிடவேண்டும்.

சதாசர்வ காலமும் செல்போனிலேயே பேசாமல் வாய்ப்புக் கிடைக்கும்போது காயின் போனில் பேசுவது என்று முடிவெடுங்கள். ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஒரு ரூபாய் காயினைப் போடும் போது காசு செலவழிவதைக் கண்ணெதிரே பார்க்கமுடியும். தானாகவே பேச்சு குறையும். காலப்போக்கில் செல்போனிலும் சிக்கனமாகப் பேசும் பழக்கம் வந்துவிடும்.

எல்லா செல்போன் நிறுவனங்களுமே குறிப்பிட்ட நேரத்தில் பேசினால், சலுகைக் கட்டணங்களை வைத்திருப்பார்கள். அந்தச் சலுகை நேரத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சில செல்போன்களில் பேசுவதைவிட, எஸ்.எம்.எஸ் அனுப்ப கட்டணம் குறைவாக இருக்கும். அதைப்பயன்படுத்தி, பேசவேண்டிய நபருக்கு தகவலை மெஸேஜ் மூலமாகவே தெரியப்படுத்தலாம்.

நடக்கும் தூரத்தில் இருக்கும் நண்பர் வீடு களுக்கு நேரிலேயே போய்ப் பேசிவிடலாம். சிக்கனத்தோடு சிறந்த எக்ஸர்சைஸாகவும் இருக்கும்.

கூப்பிடவேண்டிய நபர் அலுவலகத்தில் எக்ஸ்டன்ஷன் நம்பர் இல்லையென்றால் போனை பண்ணிவிட்டு லைனில் காத்திருக்கக்கூடாது. டெலிபோன் ஆபரேட்டரிடம், ‘சம்பந்தப்பட்ட நபரை வந்து காத்திருக்கச் சொல்லுங்கள். ஐந்து நிமிடம் கழித்துப் பேசுகிறேன்’ என்று சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்து விடவேண்டும். இல்லையென்றால் லைனில் காத்திருந்தே மூன்று நான்கு கால்களுக்கான கட்டணம் வீணாகிவிடும்.

சில செல்போன் கம்பெனிகள் அவர்கள் நெட்வொர்க் போன்களுக்கு ‘அவுட்கோயிங் ஃப்ரீ’ என்ற சலுகையைக் கொடுத்திருப்பார்கள். நீங்கள் பேசவேண்டிய நபரின் செல்போன் எந்த நிறுவனமோ அதே நிறுவன போன் வைத்திருக்கும் நண்பரிடம் வாங்கிப் பேசலாம்.

எந்த போன்காலாக இருந்தாலும் ஒரு நிமிடம்தான் பேசவேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். என்ன பேசவேண்டுமோ அதை எழுதி வைத்துக்கொண்டு பேசுங்கள். அதை மற்றவர்களுக்கும் உணர்த்திவிட்டால், உங்களிடம் பேசுபவர் பாயின்ட் பாயின்டாக விஷயத்தை சட்டென்று சொல்லி முடிப்பார்.

தெரியாத நம்பர் மிஸ்ட் காலில் வந்திருந்தால் உணர்ச்சிவசப்பட்டு உடனே தொடர்பு கொள்ளாதீர்கள். யாராவது டெலிபோன் பூத்தில் இருந்து உங்களுக்குப் பேசியிருக்கலாம். அந்த பூத்காரரிடம் பேசி அழைத்தவர் யாரென்பதைத் தெரிந்துகொள்ள முடியாது. தேவைப்பட்டால் அவரே அழைப்பார்.

ராங்நம்பர் ஏதாவது வந்து விட்டால் ‘ராங்நம்பர்’ என்று சொல்லி போனை உடனே கட் செய்யுங்கள். எல்லா விஷயங் களையும் கேட்டுவிட்டு கடைசியில் ராங்நம்பர் என்று சொல்லாதீர்கள். ஏனென்றால், மறுமுனையில் இருப்பவருக்கும் தேவையில்லாத செலவு.

நன்றி தமிழ்மன்றம்

Link to comment
Share on other sites

எம்மவர்களுக்கு முக்கியமான அறிவுரை :

நீங்கள் யாருக்காவது தொலைபேசி எடுத்தால், முதலில் உங்களை யார் என்று சொல்லிவிட்டு, இன்னாரிடம் பேசவேண்டும் என்று கேழுங்கள்.

Link to comment
Share on other sites

எம்மவர்களுக்கு முக்கியமான அறிவுரை :

நீங்கள் யாருக்காவது தொலைபேசி எடுத்தால், முதலில் உங்களை யார் என்று சொல்லிவிட்டு, இன்னாரிடம் பேசவேண்டும் என்று கேழுங்கள்.

சில பேர் அவங்களா போன எடுத்துட்டு மறு முணையில பேசுறவங்க கிட்ட யார் பேசுறதுனு கேப்பாங்க *** :mellow:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

சிலர் தொலைபேசி அழைப்பு எடுத்து 'யாரென்று சொல்லுங்கோ பார்ப்பம்" என்று லூசுத்தனமாய் அறுப்பார்கள். :wacko:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் தொலைபேசி அழைப்பு எடுத்து 'யாரென்று சொல்லுங்கோ பார்ப்பம்" என்று லூசுத்தனமாய் அறுப்பார்கள். :wacko:

நீங்க எப்படி?

Link to comment
Share on other sites

டெலிபோனில் பல விடயங்கள் நடக்குது.

வசி அண்ணா சொன்னது போல..ஆக்களை குழப்புறது எனக்கு எரிச்சலை குடுக்குறது.

...........

எண்ட நண்பி ஒருவர்..தனது காதலனுக்கு டெலிபோன் எடுத்து கதைத்தாராம்.

அது அவரோட மொபைல். ஏதோ காரணமா தகப்பன் வாங்கி கொண்டு போயிருக்கார்.

இருவரின் குரலும் ஒன்று போல இருந்ததால..இவா தெரியாமல் கதைச்சுட்டா.

தகப்பன் வேற " யாரும்மா நீ " எண்டு கேட்டிருக்கார்.

இவா..காதலன் தான் லொள்ளு பண்ணுறார் எண்டு" நான் இன்னாரின் மகள்..ஏன் தெரியாதோ..வீட்ட வந்தனியள் தானே..." அப்பிடி இப்பிடி எண்டு விளையாட்டா சொல்ல.

ஒரே இடம் எண்டதால..தகப்பனுக்கு ஆக்களை தெரியும்.

அப்புறம் என்ன நான் சொல்லணுமா? :huh:

டெலிபோன் எண்டதும் இது ஞாபகத்துக்கு வந்திட்டுது. :lol:

Link to comment
Share on other sites

கவனம் சகி, வெட்டு கிட்டு வாங்காம சொல்லுங்க

என்னத்துக்கு வெட்டு வான்வில்

:rolleyes:

கவனம் சகி, வெட்டு கிட்டு வாங்காம சொல்லுங்க

என்னத்துக்கு வெட்டு வான்வில்

:unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.