Jump to content

காலங்களில் அவன் வசந்தம்


Recommended Posts

காலங்களில் அவன் வசந்தம் ... சில மாதங்களுக்கு முன், அது ஒரு சனிக்கிழமை! நித்திரை அதிகாலையில் ஆறு மணிக்கு முறிந்து விட்டது. இணைய தமிழ் வானொலிகளை ஒன்றன்பின் ஒன்றாக திருக "அவுஸ்ரேலியன் தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில்"  "என் பாடல்" ஜெயம் மேனன், வசுந்துரா எனும் இரு ஒலிபரப்பாளர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி. கேட்த தொடங்கியதிலிருந்து இன்று வரை தவற விடுவதில்லை. லண்டன் நேரம் சனி அதிகாலை 6 மணி தொடக்கம் 9 மணி வரை. சனி வேலைக்கு போக வேண்டிய தேவை ஏற்படினும், காதில் கொழுவ தவறுவதில்லை. கேதும் நேரத்தில் யாராவது ஏதாவது கேட்டால் சின்னக்கோபம் வரும். தொகுப்பாளர்கள் இருவரும் தமிழ் சினிமா இசையில் மிக தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள்.  இந்நிகழ்ச்சிக்கு உலகம் முழுக்க பல அபிமானிகள். அதில் நானும் ஒருவன்.

இன்றைய "என் பாடல்" நிகழ்ச்சியில் தான் ஒலிபரப்பாளர்  ஜெயம் மேனன், இந்த "காலங்களில் அவன் வசந்தம்" எனும் கண்ணதாசனின் பாடல்களை பல தொடர்களாக அக்குவேறு ஆணி வேறாக அலசும் இந்நிகழ்ச்சியை பற்றி குறிப்பிட்டார். 

கண்ணதாசன் எனும் காலங்களால் அழிக்க முடியாத கவி வள்ளலின் இரசிகர்களுக்கு வரப்பிரசாதம். ... "யான் பெற்ற இன்பம், இவ்வையகமும் பெறுக"

https://www.youtube.com/watch?v=M0o1BSkTUBs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nellaiyan said:

காலங்களில் அவன் வசந்தம் ... சில மாதங்களுக்கு முன், அது ஒரு சனிக்கிழமை! நித்திரை அதிகாலையில் ஆறு மணிக்கு முறிந்து விட்டது. இணைய தமிழ் வானொலிகளை ஒன்றன்பின் ஒன்றாக திருக "அவுஸ்ரேலியன் தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில்"  "என் பாடல்" ஜெயம் மேனன், வசுந்துரா எனும் இரு ஒலிபரப்பாளர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி. கேட்த தொடங்கியதிலிருந்து இன்று வரை தவற விடுவதில்லை. லண்டன் நேரம் சனி அதிகாலை 6 மணி தொடக்கம் 9 மணி வரை. சனி வேலைக்கு போக வேண்டிய தேவை ஏற்படினும், காதில் கொழுவ தவறுவதில்லை. கேதும் நேரத்தில் யாராவது ஏதாவது கேட்டால் சின்னக்கோபம் வரும். தொகுப்பாளர்கள் இருவரும் தமிழ் சினிமா இசையில் மிக தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள்.  இந்நிகழ்ச்சிக்கு உலகம் முழுக்க பல அபிமானிகள். அதில் நானும் ஒருவன்.

இன்றைய "என் பாடல்" நிகழ்ச்சியில் தான் ஒலிபரப்பாளர்  ஜெயம் மேனன், இந்த "காலங்களில் அவன் வசந்தம்" எனும் கண்ணதாசனின் பாடல்களை பல தொடர்களாக அக்குவேறு ஆணி வேறாக அலசும் இந்நிகழ்ச்சியை பற்றி குறிப்பிட்டார். 

கண்ணதாசன் எனும் காலங்களால் அழிக்க முடியாத கவி வள்ளலின் இரசிகர்களுக்கு வரப்பிரசாதம். ... "யான் பெற்ற இன்பம், இவ்வையகமும் பெறுக"

https://www.youtube.com/watch?v=M0o1BSkTUBs

நானும் சிலவேளைகளில் இந்த வானொலியை...விரும்பிக் கேட்பதுண்டு!

அடிக்கடி வரும் விளம்பரங்கள்...அலுப்பூட்டும்!

இன்னுமொரு இணைய வானொலி....யாழ்ப்பாணம் என்னும் பெயரில் இயங்குகின்றது!

தொகுப்பாளர்க்கோ...விளம்பரங்களோ எதுவும் இல்லை! கேட்டுப்ப்பாருங்கள்!

கண்ணதாசன்....காலவெள்ளத்தில் ...கரைந்து போகாத ஒருவன் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை!

இணைப்புக்கு நன்றி...!

Link to comment
Share on other sites

இரு தினங்களுக்கு முன், வேலை முடிந்து வெளியே வர தொடங்கிய கடும்பனி வீழ்ச்சியினால், அரை மணி நேர பயணம், இரண்டு மணித்தியாலங்களை கடந்தது. பெரு வீதியில் காத்துக்கிடப்பிற்கு தீனி போட்டது ... தமிழருவி மணியனுடன் "காலங்களில் அவன் வசந்தம்" ..

https://youtu.be/IOpwRjiByXU

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nellaiyan said:

இரு தினங்களுக்கு முன், வேலை முடிந்து வெளியே வர தொடங்கிய கடும்பனி வீழ்ச்சியினால், அரை மணி நேர பயணம், இரண்டு மணித்தியாலங்களை கடந்தது. பெரு வீதியில் காத்துக்கிடப்பிற்கு தீனி போட்டது ... இசையருவி மணியனுடன் "காலங்களில் அவன் வசந்தம்" ..

https://youtu.be/IOpwRjiByXU

தமிழருவி மணியன் மீது... எனக்கு, முன்பு மிக மரியாதை இருந்தது.
அவர்...  ரஜனிக்கு, ஆதரவு கொடுத்த போது... 
அவரின் பெயர் எல்லாம் மங்கி, மழுங்கி போச்சு. 
என்றாலும்... அவரின், பேச்சை, ரசித்துக் கேட்கலாம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.