Jump to content

"தாயிடமிருந்து குழந்தைக்கு எச்ஐவி பரவுவதைத் தடுப்பது சாத்தியமே"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
முரளிதரன் காசிவிஸ்வநாதன்
பிபிசி தமிழ்
  • எச்ஐவி
 

விருதுநகரில் எச்.ஐ.வி. தொற்று இருந்த ரத்தம் ஏற்றப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு எச்.ஐ.வி பரவும் வாய்ப்பு மிகக் குறைவு என்கிறார்கள் மருத்துவர்கள். தாய்க்கு எச்ஐவி இருந்தால், குழந்தைக்குப் பரவாமல் தடுக்க முடியுமா?

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரத்தசோகை இருந்ததால் சில நாட்களுக்கு முன்பாக ரத்தம் ஏற்றப்பட்டது. ஆனால், அடுத்த சில நாட்களில் அந்த ரத்தத்தை தானமளித்த இளைஞர், தனக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதாகக் கூறினார். இதையடுத்து தானம் பெற்ற பெண்ணை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அந்தப் பெண்ணுக்கும் எச்ஐவி தொற்று ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர்.

இதற்குப் பிறகு அந்தப் பெண் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டார். உடனடியாக அவருக்கு எச்.ஐ.வி எதிர்ப்பு மருந்துகள் அளிக்கப்பட்டன. குழந்தை பிறக்கும்போது, அந்தக் குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் இருப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்படுமென்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

இந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு வியாழக்கிழமை இரவில் பெண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் குழந்தை ஒரு கிலோ 700 கிராம் எடை இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். "தற்போது தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர்," என பிபிசியிடம் தெரிவித்தார் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் டீன் டாக்டர் சண்முகசுந்தரம்.

இப்போது பிறந்துள்ள குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுக்க என்ன முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன? "குழந்தை பிறந்த உடனேயே எச்.ஐ.வி எதிர்ப்பு மருந்தான நேவிரபைன் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆறாவது மாதத்திலும் 12 மாதத்திலும் எதிர்ப்பு மருந்து கொடுக்கப்படும். இப்படிச் செய்வதன் மூலம் குழந்தைக்கு எச்.ஐ.வி. பரவும் வாய்ப்பு ஒரு சதவீதத்திற்கும் குறைவு" என்று கூறினார் சண்முகசுந்தரம்.

எச்ஐவிபடத்தின் காப்புரிமை DESHAKALYAN CHOWDHURY

தற்போது தாயையும் குழந்தையையும் 9 மருத்துவர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"இந்த விவகாரத்தில் எச்.ஐ.வியைவிட மிகப் பெரிய பிரச்சனை, ஹெபடிடிஸ்-பி. அதை குழந்தைக்குக் கட்டுப்படுத்துவதுதான் மிகப் பெரிய சவாலாக இருக்கும். தவிர, இம்மாதிரி எச்.ஐ.வி. பாதித்த தாய்களுக்கு இயல்பான பிரசவத்தைவிட, சிசேரியன் மூலம்தான் குழந்தை பிறப்பது பாதுகாப்பானது. காரணம், இயல்பான பிரசவத்தில் குழந்தை பிறக்கும் நேரத்தில் தாய் குழந்தையை வெளியேற்ற முயற்சிக்கும்போது தொப்புள்கொடி மூலம் கூடுதலான ரத்தம் குழந்தைக்குப் பாயும்" என்கிறார் ரத்தநாள அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர் அமலோற்பவநாதன்.

ஆனால், இந்த விவகாரத்தில் குழந்தை இயல்பான பிரசவத்திலேயே நிகழ்ந்துள்ளது. இது குறித்து கேட்டபோது, "குழந்தையின் எடை மிகக் குறைவாக இருந்தது. எடை முடிந்த அளவு அதிகரிக்கட்டும் என காத்திருந்தோம். ஆனால், அதற்குள் தாய்க்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்துவிட்டது" என்கிறார் டாக்டர் சண்முகசுந்தரம்.

ஹெபடிடிஸ்-பி நோயைப் பொறுத்தவரை, "நோயெதிர்ப்பு சக்திக்கான மருத்து அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. சரியான இடைவெளியில் மேலும் சில தடுப்பூசிகள் போடப்படும். ஆகவே ஹெபடிடிஸ்-பி ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு" என்கிறார்கள் அரசு மருத்துவர்கள்.

எச்ஐவிபடத்தின் காப்புரிமை CHINA PHOTOS

ஆயிரத்திற்கும் மேற்பட்ட எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பிரசவம் செய்திருக்கும் மருத்துவரான டாக்டர் அமுதா, மிகச் சரியான விதத்தில் கவனித்துக்கொண்டால் குழந்தைக்கு எச்.ஐ.வி பரவுவதைத் தடுத்துவிடலாம் என்கிறார்.

"குழந்தை பிறப்பதற்கு முன்பும் பிறந்த பிறகும் எச்.ஐ.வி எதிர்ப்பு மருந்து அளிக்கப்படும். குழந்தை பிறந்த பிறகு குழந்தைக்கும் ஏ.ஆர்.டி என்ற அந்த கூட்டு மருந்து அளிக்கப்படும். பொதுவாகப் பார்த்தால், எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமே அளிக்காமல் இருந்தால் பிறக்கும் குழந்தைக்கும் எச்.ஐ.வி இருக்கும் வாய்ப்பு 30-40%. மருத்துவம் அளித்தால், எச்.ஐ.வி பரவும் வாய்ப்பு 2 சதவீதத்திற்கும் குறைவு. நான் பார்த்த 1000க்கும் மேற்பட்ட பிரசவங்களில் ஒரு குழந்தைக்குக்கூட தாயிடமிருந்து எச்.ஐ.வி பரவவில்லை" என்கிறார் அமுதா.

குழந்தை பிறந்து நாற்பத்தைந்து நாட்களுக்குப் பிறகுதான், தாயிடமிருந்து எச்.ஐ.வியும் ஹெபடிடிஸ்-பியும் குழந்தைக்கு பரவியிருக்கிறதா என்பதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதற்குப் பிறகு இதனை மீண்டும் உறுதிசெய்துகொள்ள, 18வது மாதத்தில் ஒரு பரிசோதனை செய்யப்படும்.

குழந்தைக்கு தற்போதைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், குழந்தை ஆரோக்கியமாக இருக்க தேவையான உணவுகள் கொடுக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனையின் டீன் சண்முகசுந்தரம் தெரிவித்திருக்கிறார்.

https://www.bbc.com/tamil/india-46931405

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.