Jump to content

துபாய் நாளிதழ் ராகுல் காந்தியை அவமதித்ததா? - உண்மை என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
துபாய் நாளிதழ்படத்தின் காப்புரிமை Gopal saini/bbc Image caption வலது சாரி சமூக வலைதள பக்கங்கள் பரப்பும் புகைப்படம்

துபாயைச் சேர்ந்த நாளிதழொன்று ராகுல்காந்தியை அவமதித்து செய்தி வெளியிட்டதாக தெரிவிக்கும் வலது சாரி சமூக வலைதள பக்கங்கள் இவ்விவகாரத்தை வைரலாக்கின.

ராகுல் காந்தியின் சமீபத்திய துபாய் பயணத்தில், இந்தியாவுக்கு அவர் இழுக்கு ஏற்படுத்தியதாக வலது சாரி சமூக வலைதள பக்கங்கள் கூறின.

இதற்கு ஆதாரமாக கல்ஃப் நியூஸ் நாளிதழின் முதல் பக்கத்தையும் வெளியிட்டன. அவர்கள் வெளியிட்ட புகைப்படத்தில், கல்ஃப் நியூஸ் நாளிதழின் முதல் பக்கத்தில் ராகுல் காந்தியை 'பப்பு லேபிள்' என குறிப்பிட்டு கேலிச் சித்திரம் தீட்டப்பட்டிருந்தது.

அந்த புகைப்படத்தில் உள்ள அந்த செய்தித் தாளின் முதல் பக்கம் சாதுர்யமாக மடிக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள சில வலது சாரி சமூக வலைதள பக்கங்கள் '' பாருங்கள், அயல்நாட்டுக்குச் சென்று நமது நாட்டை இழிவுபடுத்துபவர்களுக்கு இது போன்ற மரியாதைதான் கிடைக்கும். அபுதாபி நாளிதழ் போலவே கல்ஃப் நாளிதழும் தனது கட்டுரையில் ராகுல் காந்தியை ‘பப்பு‘ என குறிப்பிட்டுள்ளது.

நாட்டை 65 ஆண்டுகள் ஆண்ட ஓர் அரசியல் கட்சியின் தலைவர் அயல்நாட்டுக்கு சென்று இந்தியாவில் ஊழலும், வறுமையும் ஆழமாக வேரூன்றியுள்ளது எனக்கூறினால், 65 ஆண்டுகளாக தமது கட்சி என்ன செய்தது என சிந்திக்க வேண்டும்.

பல பாஜக தலைவர்கள் கடந்த காலங்களில் ராகுல்காந்தியை தாக்குவதற்காக “பப்பு” என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளனர்.

சரி, உண்மையில் அந்த நாளிதழ் ராகுல் காந்தியை இழிவுபடுத்தியதா?

துபாய் நாளிதழ்படத்தின் காப்புரிமை Amit patel/facebook

உண்மை நிலவரம் அவர்கள் கூறுவதற்கு மாறாக உள்ளது.

நாளிதழ் வைத்துள்ள முழுமையான தலைப்பு '' பப்பு என்ற பட்டம் ராகுலை எப்படி மாற்றியது?'' என்பதே.

அந்த தலைப்பும் கேலி சித்திரமும் ராகுல் காந்தியின் ஒப்புதல் பெற்றே வெளியிடப்பட்டது என அந்நாளிதழ் தெரிவித்துள்ளது.

சரி. தலைப்பில் ஏன் 'பப்பு' என குறிப்பிட்டிருந்தார்கள்?

“பப்பு” என அவருக்கு பட்டப்பெயர் சூட்டி அழைப்பதற்கு அவர் என்ன பதிலளித்தார் என்பதை குறிப்பிடும் பொருட்டு அவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்கள்.

துபாய் நாளிதழ்படத்தின் காப்புரிமை Sharad ghelani/facebook Image caption முழுமையான தலைப்பு என்ன?

நாளிதழின் கேள்விக்கு ராகுல் காந்தி அளித்த பதில் என்ன?

'' 2014-ம் ஆண்டில்தான் எனக்கு சிறந்த பரிசு கிடைத்தது. வேறு எங்கும் என்னால் கற்றிருக்க முடியாததை அப்பரிசின் மூலமாக கற்றுக்கொண்டேன். எனது எதிராளிகள் என் வாழ்க்கையை எவ்வளவுக்கெவ்வளோ கடினமாக்குக்கிறார்களோ, அது எனக்கு கடினமானதாகவும் நல்லதாகவும் இருக்கிறது. “பப்பு” என அவர்கள் சொல்வது குறித்து நான் கவலையடையவில்லை. எனது எதிராளிகளின் தாக்குதல்களை பாராட்டுகிறேன். அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொள்கிறேன்'' என பதிலளித்திருக்கிறார்.

ஆகவே, ராகுல் காந்தியை இழிவுபடுத்துவதற்காக “பப்பு” என்ற பதத்தை அந்நாளிதழ் பயன்படுத்தவில்லை என்பது தெளிவு.

வலது சாரி சமூக வலைதள பக்கங்கள் இவ்வாறு புகைப்படம் போட்டு அவர்களது கருத்துக்களை கூறி வைரலாக்கிக்கொண்டிருந்த நிலையில், ராகுல் காந்தியை தங்களது நாளிதழ் இழிவுபடுத்தியதாக கூறுவது போலிச் செய்தி என கல்ஃப் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் ஒரு ஸ்டேடியத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களை துபாயில் சந்தித்து பேசினார் ராகுல் காந்தி.

இந்நிகழ்வு பிரதமர் மோதி அயல் நாடுகளுக்குச் சென்று அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுவதை ஒத்திருந்தது.

https://www.bbc.com/tamil/india-46921164

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.