Jump to content

வீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு


Recommended Posts

வீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு

 

kilinochi-flood-2018-6-300x169.jpgஇரணைமடு குளத்தில் இருந்து வீணாக கடலில் கலக்கும் நீரை, யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிநீர்த் தேவைக்குப் பயன்படுத்துவதற்கான செயற்திட்டத்துக்கான முன்மொழிவு ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு, வடக்கு மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் உத்தரவிட்டுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுனராக அண்மையில் நியமிக்கப்பட்ட சுரேன் ராகவன் நேற்று இரணைமடுவுக்கு கண்காணிப்புப் பயணம் ஒன்றை மேற்கொண்டார்.

ஆளுனராகப் பதவியேற்ற பின்னர் இரணைமடுவுக்கு அவர் மேற்கொண்ட இரண்டாவது பயணம் இதுவாகும்.

முதல் பயணத்தின் போது, கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயவே நேற்று அவர் அங்கு சென்றிருந்தார்.

இதன்போது, இரணைமடுவில் தேக்கப்படும் நீரில், 40 வீதம் மாத்திரமே விவசாயத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும், ஏனைய 60 வீதமான நீர் வீணாக கடலில் சேர்வதாகவும், வட மாகாண நீர்ப்பாசனத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர். சுதாகரன் எடுத்துக் கூறினார்.

இதையடுத்தே, வீணாக கடலில் சேரும் நீரை யாழ்ப்பாணத்தின் குடிநீர்த் தேவைக்குப் பயன்படுத்துவது தொடர்பான திட்ட முன்மொழிவு ஒன்றை சமர்ப்பிக்குமாறும், அதனை சிறிலங்கா அதிபரிடம் சமர்ப்பித்து உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், ஆளுனர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/01/19/news/35904

Link to comment
Share on other sites

வரவேற்கப்பட வேண்டிய விடயம். கிடப்பில் போய்விடக்கூடாது.

சிங்களத்தின் ஆளுனர் ஆனாலும் ஓடாத மணிக்கூடு ஒரு நாளில் இரண்டுமுறை சரியான நேரம் காட்டும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.😅

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  விடயம்

எமது  பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து  ஒற்றுமையாக

மாகாணசபை செய்திருக்க வேண்டியது

இப்போ  ஆளுநர் செய்து  வரலாற்றில்  இடம்  பிடிக்கப்போகின்றார்

யார்  குற்றியும்  அரிசியானால்  சரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழ் பிரதேசங்களுக்கு நன்மை தரக்கூடிய நல்ல திட்டந்தான் ஆனால் அரசியல் இலாபங்களுக்காக ஜனாதிபதி உட்பட தென்னிலங்கை அரசியல்வாதிகளால் சுயலாபநோக்குடன் செயற்படுத்தப்படுவதாக இருத்தல் கூடாது.  இதுபோன்ற பெரிய திட்டங்கள் தொடங்கி நடைமுறைப்படுத்தப்பட்டு அதனால் தமிழ் மக்கள் பயனடைவதற்கு பல வருடங்கள் எடுக்கும். திட்டம் தொடங்கிய சில மாதங்களில் அரசதலைவர் தெரிவு அல்லது நாடாளுமன்ற தேர்தல் வரும். திட்டத்தை முன்னெடுத்தவர்கள் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருந்தால்தான் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தலாம் என்றும் சொல்லப்படும். ஆகவே தமிழ் இனம் திட்டத்தை தொடங்கிய ஜனாதிபதியையே மீண்டும் தெரிவு செய்யவேண்டிய நிலைமை ஏற்படும். 

ஆளுனர் திட்டத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவேண்டும் என்று வேறு சொல்கின்றார். இதுபோன்ற திட்டங்களுக்கும் ஜனாதிபதிக்கும் என்ன தொடர்பு அவர் இதில் நேரடியாக சம்பந்தப்படவேண்டிய தேவை உண்டா என்பதையும் நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். ஏன் இதற்கு முன்னர் நீர்வினியோகம் வடிகால் அமைச்சு இதுபற்றி அக்கறை கொள்ளவில்லை?

ஆளுநர்களின் கடமையென்ன அவர்கள் தமது பிரதேசங்களில் செய்யவேண்டிய வேலை என்ன என்பதின் ஒட்டுமொத்த விபரம் அரசால் வரையறுக்கப்பட்டுள்ளதா? அல்லது அவரவர் நினைத்ததை செய்தால் போதுமா? முந்திய ஆளுனர் செய்யதவறிய ஒன்றை பின்வந்த ஆளுநர் இப்போது செய்கின்றாரா? அப்படி அவர் தன் வேலையை  செய்யாமல் சென்றதற்கு என்ன காரணம் அல்லது அதற்கு யார் பொறுப்பு?  இவருக்கு அடுத்து வரும் இன்னுமொரு ஆளுனர் முன்னவர் தொடங்கிய வேலையை இடையில் நிறுத்திவிட மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? முதலில் இதற்கெல்லாம் விடைதேடவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, vanangaamudi said:

இது தமிழ் பிரதேசங்களுக்கு நன்மை தரக்கூடிய நல்ல திட்டந்தான் ஆனால் அரசியல் இலாபங்களுக்காக ஜனாதிபதி உட்பட தென்னிலங்கை அரசியல்வாதிகளால் சுயலாபநோக்குடன் செயற்படுத்தப்படுவதாக இருத்தல் கூடாது.  இதுபோன்ற பெரிய திட்டங்கள் தொடங்கி நடைமுறைப்படுத்தப்பட்டு அதனால் தமிழ் மக்கள் பயனடைவதற்கு பல வருடங்கள் எடுக்கும். திட்டம் தொடங்கிய சில மாதங்களில் அரசதலைவர் தெரிவு அல்லது நாடாளுமன்ற தேர்தல் வரும். திட்டத்தை முன்னெடுத்தவர்கள் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருந்தால்தான் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தலாம் என்றும் சொல்லப்படும். ஆகவே தமிழ் இனம் திட்டத்தை தொடங்கிய ஜனாதிபதியையே மீண்டும் தெரிவு செய்யவேண்டிய நிலைமை ஏற்படும். 

ஆளுனர் திட்டத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவேண்டும் என்று வேறு சொல்கின்றார். இதுபோன்ற திட்டங்களுக்கும் ஜனாதிபதிக்கும் என்ன தொடர்பு அவர் இதில் நேரடியாக சம்பந்தப்படவேண்டிய தேவை உண்டா என்பதையும் நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். ஏன் இதற்கு முன்னர் நீர்வினியோகம் வடிகால் அமைச்சு இதுபற்றி அக்கறை கொள்ளவில்லை?

ஆளுநர்களின் கடமையென்ன அவர்கள் தமது பிரதேசங்களில் செய்யவேண்டிய வேலை என்ன என்பதின் ஒட்டுமொத்த விபரம் அரசால் வரையறுக்கப்பட்டுள்ளதா? அல்லது அவரவர் நினைத்ததை செய்தால் போதுமா? முந்திய ஆளுனர் செய்யதவறிய ஒன்றை பின்வந்த ஆளுநர் இப்போது செய்கின்றாரா? அப்படி அவர் தன் வேலையை  செய்யாமல் சென்றதற்கு என்ன காரணம் அல்லது அதற்கு யார் பொறுப்பு?  இவருக்கு அடுத்து வரும் இன்னுமொரு ஆளுனர் முன்னவர் தொடங்கிய வேலையை இடையில் நிறுத்திவிட மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? முதலில் இதற்கெல்லாம் விடைதேடவேண்டும்.

இதில்  அதிகாரமுள்ள ஒருவர் தனது  அதிகாரத்தை  பயன்படுத்தினால்  மட்டுமே திட்டம் நகரும்

அல்லது வன்னியா யாழ்ப்பாணமா?  என்று  அடிபடவேண்டியது தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

இதில்  அதிகாரமுள்ள ஒருவர் தனது  அதிகாரத்தை  பயன்படுத்தினால்  மட்டுமே திட்டம் நகரும்

அல்லது வன்னியா யாழ்ப்பாணமா?  என்று  அடிபடவேண்டியது தான்

 விசுகர்! நல்லது செய்ய அதிகாரமும் சட்டமும் அவசியம் தேவை. 
அந்த அதிகாரமும் சட்டமும் எங்கடை ஒரு சிலதுகளுக்கு துண்டற பிடிக்காத விசயமெண்டது உங்களுக்கு தெரியாமலிருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலிருந்த ஆளுநருக்கும் இப்போதிருக்கும் ஆளுநருக்கும் இடையே உள்ள ஒரேவித்தியாசம், அவர் சிங்களவர், பின்னையவர் தமிழர். ஒருவருக்கு இருப்பது மற்றாந்தாய் மனப்பன்மை, மற்றையவருக்கு இருப்பது தனது இனம் என்கிற உணர்வு, ஏதாவது செய்யவேண்டும் என்கிற அவா.

நல்ல விடயம், இந்தத் தொடக்கம் நன்றாக முடியவேண்டும்.

Link to comment
Share on other sites

நல்ல திட்டம் , கடலுக்கு வீணாகும் நீரை மக்களின் தேவைக்கு பயன்படுத்த வேண்டும் . 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.