Jump to content

எச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:

January 18, 2019

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

92393771_40f2c043-afdf-4fb1-b3d1-fd0cbed

மன்னார் ‘சதொச’ வளாகத்திலுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்களை அமெரிக்காவிற்கு ஆய்விற்காக எடுத்துச்செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவரை இணைத்துக்கொள்ள நீதிமன்றம் இன்று (18)அனுமதி வழங்கியுள்ளது.

மன்னார் நீதவான் நீதிமன்றத்தினூடாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

மன்னார் நகர் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனிதப் புதை குழியில் அகழ்வு செய்யப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகளை அமெரிக்காவிலுள்ள புளோரிடாவிற்கு ‘கார்பன்’ பரிசோதனைக்காக எடுத்துச்செல்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 24 ஆம் திகதி அதிகாலை குறித்த குழு அமெரிக்கா நோக்கி பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/2019/110365/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.