Jump to content

உலகின் 2வது இளைய கிராண்ட் மாஸ்டரான குகேஷ்: இலக்கை எட்டியது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ்
குகேஷ்

உலகின் இரண்டாவது மிக இளைய கிராண்ட் மாஸ்டர் என்ற தகுதியை சென்னையைச் சேர்ந்த டி குகேஷ் பெற்றிருக்கிறார். இந்தியாவின் இளைய கிராண்ட் மாஸ்டரான குகேஷ்,

டெல்லியிலிருந்து சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியதிலிருந்து தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்தபடி இருக்கும் குகேஷிடம் களைப்பின் சுவடே இல்லை. சுறுசுறுப்பாக, அதே நேரம் அமைதியாக பதில் சொல்லிக்கொண்டேயிருக்கிறார். சற்றுத் தள்ளியிருந்தபடி இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் குகேஷின் தந்தை ரஜினிகாந்த், "களைப்பாக இருக்கிறது. அதே நேரம் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்கிறார்.

சென்னை வேலம்மாள் வித்யாலயா பள்ளிக்கூடத்தில் படிக்கும் டி குகேஷுக்கு வயது தற்போது 12 வயது 7 மாதம். உலகில் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை எட்டியவர்களில் மிகவும் இளையவர்களில் இவர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். முதலிடத்தில் இருப்பவர் உக்ரைனைச் சேர்ந்த செர்ஜி கர்ஜகின். இருந்தபோதும் இந்தியாவின் மிக இளைய கிராண்ட் மாஸ்டர் குகேஷ்தான்.

தெலுங்குப் பின்னணியைக் கொண்ட டாக்டர் ரஜினிகாந்த் ஒரு காது - மூக்கு - தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர். இவரது மனைவி பத்மா குமாரியும் ஒரு மருத்துவர்தான். இந்தத் தம்பதியின் ஒரே மகன்தான் குகேஷ்.

குகேஷ்

"நானும் என் மனைவியும் அவ்வப்போது செஸ் விளையாடிக்கொண்டிருப்போம். மூன்றரை வயதாகும்போதிலிருந்து குகேஷ் அதைக் கவனிப்பான். அதற்குப் பிறகு எங்கள் உறவினரான தினேஷுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தான். அப்படித்தான் செஸ் மீது அவனுக்கு ஆர்வம் ஏற்பட்டது" என்கிறார் ரஜினிகாந்த்.

பள்ளிக்கூடத்தில் சேர்ந்த பிறகு, குகேஷ் செஸ் விளையாடியதைப் பார்த்த அந்தப் பள்ளிக்கூடத்தின் கோச், அவனை தொடர்ந்து அதில் விளையாட அறிவுறுத்தினார். பாடம் தவிர்த்த செயல்பாடடு ஒன்றைத் தேர்வுசெய்யும்படி பள்ளிக்கூடம் சொன்னபோது, பெற்றோர் உடனடியாக செஸ்ஸையே தேர்வுசெய்தனர். இதற்குப் பிறகு மேல் நோக்கிய பயணம்தான்.

7 வயதிலேயே போட்டிகளில் ஆட ஆரம்பித்தான் குகேஷ். அப்போதே ரேட்டிங் போட்டிகளிலும் கலந்துகொள்ள ஆரம்பித்தவனுக்கு 2013 ஆகஸ்டில் 1291 புள்ளிகளுடன் தரவரிசை கிடைத்தது. இதற்குப் பிறகு 2015ல் சிங்கப்பூரில் நடந்த 9 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் விளையாடி காண்டிட் மாஸ்டர் பட்டத்தை வென்றான்.

செஸ்ஸைப் பொறுத்தவரை, காண்டிட் மாஸ்டர் பட்டத்தை வென்ற பிறகு கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை அடைவதற்கு பல கட்டங்களைக் கடந்தாக வேண்டும். அதாவது, இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டத்தை அடைய மூன்று கட்டங்களையும் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை அடைய மூன்று கட்டங்களையும் கடக்க வேண்டும். மொத்தமாக 2500 தரவரிசைப் புள்ளிகளையும் பெற வேண்டும்.

குகேஷ்

இந்தக் கடினமான பயணத்தில் படிப்படியாக, உறுதியாக முன்னேறினான் குகேஷ். 2017 அக்டோபரில் மலேசியாவில் நடந்த போட்டியில் பங்கேற்று இன்டர்நேஷனல் நார்ம் முதல் கட்டத்தைத் தாண்டினான். அதற்குப் பிறகு 2018 ஜனவரியில் மாஸ்கோவில் நடந்த போட்டியில் இரண்டாவது கட்டத்தையும் அதே ஆண்டு மார்ச்சில் ஃபிரான்சில் நடந்த போட்டியில் பங்கேற்று மூன்றாவது கட்டத்தையும் தாண்டி 2400 தகுதிப் புள்ளிகளையும் பெற்று இன்டர்நேஷனல் மாஸ்டர் என்ற தகுதியைப் பெற்றான்.

இதற்குப் பிறகு, 2018ல் பாங்காக்கில் நடந்த போட்டியில் கிராண்ட் மாஸ்ட்ர் நார்ம் முதல் கட்டத்தையும் அதே ஆண்டு டிசம்பரில் செர்பியாவில் நடந்த போட்டியில் இரண்டாவது கட்டத்தையும் கடந்த குகேஷ், உலகின் மிக இளைய கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையைப் படைத்துவிட முடியும் என்றே பலரும் நினைத்தார்கள்.

மிக இள வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை எடுத்த செர்ஜி கர்ஜகின், 12 வயது 7 மாதங்களில் இந்த சாதனையை நிகழ்த்தினார். அந்த சாதனையை குகேஷ் முறியடித்திருக்க வேண்டுமானால் கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதிக்குள் கிராண்ட் மாஸ்டர் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். டிசம்பரில் நடந்த Sunway Sitges International போட்டியில் வெற்றிபெற்றிருந்தால், இந்தச் சாதனையைப் பெற்றிருக்க முடியும். ஆனால், அந்தப் போட்டி வெற்றி - தோல்வியின்றி முடிவடைந்தது.

ஆனால் மனமுடைந்துவிடாமல் தொடர்ந்து விளையாடிய குகேஷ், தில்லி இன்டர்நேஷனல் ஓடன் ஜிஎம் போட்டியின் ஒன்பதாவது சுற்றி வெற்றிபெற்றதன் மூலம் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் நார்மின் மூன்றாவது கட்டத்தைத் தாண்டி, இந்தியாவின் மிக இளைய கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையைப் படைத்தான். இதற்கு முன்பாக கடந்த ஆண்டில் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா இந்த சாதனையைப் படைத்திருந்தான். தற்போது அதனை குகேஷ் முறியடித்திருக்கிறான்.

பிரக்ஞானந்தா 12 வயது பத்து மாதங்களில் அந்த சாதனையைச் செய்தான். தற்போது குகேஷ் 12 வயது 7 மாதங்களில் இந்த இலக்கை எட்டியிருக்கிறான்.

தொடர்ந்து விளையாடியது சோர்வளிக்கவில்லையா? "இல்லை. செஸ் எனக்குப் பிடிக்கும். சாதாரணமாகத்தான் இருக்கிறேன்" என்கிறார் குகேஷ்.

கடந்த 16 மாதங்களில் 6 நார்ம்களை, அதாவது இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டத்திற்காக மூன்று நார்ம்களையும் கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்காக மூன்று நார்ம்களையும் கடந்திருக்கும் குகேஷ், இந்த காலகட்டத்தில் 2323 புள்ளிகளிலிருந்து தற்போது 2512 புள்ளிகளை எட்டியிருக்கிறான். கடந்த ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை 243 ஆட்டங்களை ஆடியிருக்கிறான்.

இந்தியாவின் இளைய கிராண்ட் மாஸ்டரான குகேஷ்: இலக்கை எட்டியது எப்படி?

"படிப்பைப் பொறுத்தவரை பள்ளிக்கூடத்தில் மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள். 2015வரை குகேஷ்தான் பள்ளியிலேயே முதல் மாணவன். அதற்குப் பிறகு செஸ்ஸில் கவனம் செலுத்த விரும்பியதால் வகுப்புகளைக் குறைத்துக் கொண்டார்கள். தேர்வு மட்டும் எழுதி வந்தான். தற்போது தேர்வுக்கும் விலக்குக் கேட்டிருக்கிறோம்" என்கிறார் ரஜினிகாந்த்.

தன் மகனுடன் டோர்னமென்ட்களுக்காக தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும் என்பதால் முழு நேரப் பணியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டிருக்கும் ரஜினிகாந்த், தற்போது ஒரு மருத்துவமனையில் கன்சல்டன்டாக மட்டும் சென்றுவருகிறார். "மாதத்திற்கு ஐந்து நாட்கள் சென்றாலே பெரிது. அந்த அளவுக்கு பிஸியாக போட்டிகளுக்குச் செல்கிறோம்" என்கிறார் ரஜினிகாந்த்.

பணமும் ஒரு முக்கியமான பிரச்சனை. எல்லா நாடுகளுக்கும் சொந்த செலவில்தான் செல்ல வேண்டும். கடந்த ஆண்டிலிருந்து ஓஎன்ஜிசி உதவித் தொகை வழங்க ஆரம்பித்துள்ளது. மைன்ட்சென்ஸ் என்ற நிறுவனமும் சிறிய அளவில் ஸ்பான்சர் செய்கிறது. ஆனால், பெரும்பாலான தருணங்களில் இந்த உதவிகள் போதுமானதாக இருப்பதில்லை.

குகேஷின் கோச் விஷ்ணு பிரசன்னா. அவனது வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தவர்.

செஸ் என்பது மனரீதியான ஆட்டம். இந்த வயதில் இவ்வளவு கவனத்துடன் எப்படி இருக்க முடிகிறது? "அது எனக்கு சாதாரணமாகத்தான் இருக்கிறது. அவ்வளவு பெரிய விஷயமாக அதனை நான் நினைக்கவில்லை" என்கிறான் குகேஷ்.

செஸ் விளையாட்டிற்கு வெளியில் குகேஷ் ஒரு இயல்பான சிறுவன்தான். கிரிக்கெட், பேட்மிடன் ஆடுவதோடு சினிமா பார்க்கவும் பிடிக்கும். "மாலை பேட்ட படத்திற்குச் செல்கிறோம்" என்கிறார் ரஜினிகாந்த்.

தற்போது முக்கியமான உயரத்தைத் தொட்டிருக்கும் குகேஷைப் பொறுத்தவரை, அடைய வேண்டிய பல உயரங்கள் இன்னும் காத்திருக்கின்றன. "பல கிராண்ட் மாஸ்டர்களைத் தோற்கடிக்க வேண்டும். உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லவேண்டும்" என்கிறான் குகேஷ்.

https://www.bbc.com/tamil/global-46914980

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் குகேஷ் ......தொடர்ந்து முன்னேறி தோணி, ஹோலியையும் வெல்ல வாழ்த்துக்கள்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

தாய் தந்தை காட்டும் நல்ல வழிகளை பின்பற்றும் யாரும் தோல்வியடைவதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.